Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:58:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 27
#KOTWEM27
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 5, 2012
ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!!

இந்த பக்கம் 3222 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சில தினங்களாக எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல் தொடக்க விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிதான். கிரிக்கெட் மற்றும் சினிமா மீதுள்ள நமது அளவு கடந்த மோகத்தை (Craziness) மூலதனமாக்கி… இசை நிகழ்ச்சி, நடிகைகளின் நடனங்கள் என்று சினித் துறைக்கே உரித்தான கவர்ச்சி மசாலாக்காளுடன் ஆபாசத்தின் (?) உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரித்த பெருமையுடன் சினிமாவும் கிரிக்கெட்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதனை சொல்லாமல் சொல்லி... இவைகளனைத்தும் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை இடியாப்ப சிக்கலில் இருக்கும் ஐ.பி.எல் - லை மேலும் கமர்ஷியலாக ஆக்குவதற்கான தில்லாலங்காடி வேலைகள்.

அமெரிக்காவின் National Basketball Association (NBA) க்கு அடுத்து அதிக சம்பளத்தை வாரி வழங்குவது ஐபிஎல் லீக் தான். ‘லலித் மோடி (?)’ யின் வியாபார உத்தியில் புதிய பரிணாமம் பெற்று, ஏற்கனவே குடி கொண்டிருக்கும் தேசிய மற்றும் மத வெறி போதாதென்று இப்பொழுது பிராந்திய வெறியையும் இணைத்து IPL என்ற பெயரில் மே27 ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்களை பைத்தியமாக்கி தொழுகை, சோறு தண்ணியில்லாமல் டிவி முன்னே மண்டையை பிய்த்துக் கொள்ள வைக்க போகிறார்கள்.

அணி ஏலங்கள் குறைந்தது 1500 கோடிகள், வீரர்களுக்கான ஒப்பந்தம் பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை. கிங் ஃபிஷர் மல்லையாவிற்கு, தன் விமான கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழி இருக்கிறதோ இல்லையோ ஆனால் பெங்களுரு அணிக்கு மட்டும் கோடி கோடியா கொட்ட முடிகின்றது. இவைகளனைத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (விளம்பரங்கள்) அப்பாவி மக்களை உறிஞ்சி அதன் மூலம் ஐபிஎல் நிர்வாகமமும், பணக்கார முதலைகளும், வியாபார சந்தையில் ஏலத்திற்க்கு எடுக்கப்பட்ட நம்முடைய அபிமான வீரர்களும் சம்பாதிக்க நடத்தப்படுவதுதான் இந்த சீசன் கிரிக்கெட். வர்த்தக மதிபில் 25,000 கோடிகளை (?) கொண்ட தனியார் ஐ.பி.எல் - னால் அரசுக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ எந்த விதத்திலும் பலன் இல்லை.

ஒட்டுமொத்த தமிழகமே பலமணி நேரங்கள் இருளில் இருந்தாலும் சென்னையில் நடக்கும் பகல்/இரவு போட்டிகளுக்கு மட்டும் மின்சாரம் தட்டுப்பாடில்லாமல் வாரி வழங்கப்படும். இவர்களைப் பகைத்துக் கொண்டால் உடனே வேறு இடத்திற்கு / நாட்டிக்கு (தென் ஆப்ரிகாவிற்க்கு?) போகின்றோம் என்று மிரட்டுவார்கள். பத்தாம் வகுப்பு பரிட்ச்சை தொடங்கிய அன்றுதான் இந்த ஐபிஎல் - லும் தொடங்கியுள்ளது. படிப்பில் பெண்களை விட பின்தங்கியிருக்கும் நம்ம பசங்களின் கவனம் / படிப்பு இதனால் சிதறி விடாமல் மாணவர்களும் பெற்றவர்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

12 ஆண்டுகள் படித்து ப்ளஸ் 2 தேர்வும் எழுதி முடித்து, இதோ தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை (கல்லூரி படிப்பை)ப் பற்றி கவலைப்பட வேண்டிய நம் மாணவ சமுதாயத்தில் பெரும்பாலானவர்களின் இன்றைய மிக முக்கிய கவலையும் ஐபிஎல் பற்றியதுதாகவே உள்ளது. மாடர்ன் காலத்து மகளீர் கூட இன்று கிரிகெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள்.

மார்க்கப் பிரச்சார அல்லது ஏதாவது பொது நல நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் அத்தினத்தன்று ஏதாவது முக்கியமான கிரிக்கெட் மேட்ச் உள்ளதா என்று பார்க்க வேண்டிய அவல நிலை உள்ளது... ஏனென்றால் நமது மகா ஜனம் சும்மாவே இது போன்ற நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள். அதுவும் கிரிக்கெட் நடக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை. ஜும்மா பயான் மற்றும் ஊரில் நடக்கும் மார்க்க / பொது நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் நமக்கு நேரம் கிடைக்காது. அப்படியே வந்தாலும் காலில் வெண்ணித் தண்ணியை ஊற்றிக் கொண்டு எப்படா முடியாதென்று அவசரப் படுவோம். ஏனென்றால் நாமெல்லாம் பிஸி... ஆனால் குறைந்தது ஐந்து மணிநேரம் முதல் ஐந்து நாட்கள் வரை நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கண் கொட்டாமல் கண்டு ரசிக்க சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நேரம் இருக்கிறது.

16 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் தோன்றிய கிரிக்கெட்டால் அங்குள்ளவர்கள் பைத்தியமாக இல்லை ஆனால் ஹாக்கியை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாமும்/ பாகிஸ்தானும் (அது போல கபடியை வங்கதேசமும் கைப்பந்தை இலங்கையும்) ஏதோ கிரிக்கெட்டில் தான் தமது தேசபக்தி / மதப்பற்று அடங்கியுள்ளது போல எண்ணி, சிறப்புத் தொழுகை / வணக்க வழிபாடுகளை நடத்தி, விடிய விடிய 'டிவி' யில் மேட்ச் பார்த்து, உழைப்பை வீணடித்த படி அலுவலக நேரத்தில் கணினியிலும், வேலைக்கு / பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு... மது போதையை விட மோசமான இக்கிரிக்கெட்டுக்கு அடிமை/ வெறியர்களாகி, பொன்னான நேரத்தை /வாழ்க்கையை இழந்தவர்கள், மார்க்க வணக்க வழிபாடுகளை (இறைவணக்கத்தை) தொலைத்தவர்கள் அல்லது தொலைத்துக் கொடிருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்???

”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வேடிக்கை / வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச்சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது…” என கூறுவீராக! (அல் குர்ஆன் 62:11)

ஒரு காலத்தில் 'அசார் மாமா’ (மேட்ச் பிக்சிங் வரை) என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி யாவர்களும் உண்டு . நமதூரை சார்ந்த என்னுடைய நண்பன் இன்று வரை பாகிஸ்தான் அணி மீது அப்படி ஒரு வெறி. காரணம் முஸ்லீம்கள்… முஸ்லிம் நாடு என்பான். இஸ்லாத்திற்க்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா... அல்லது குறைந்தபட்சம் ஒரு முஸ்லிமுக்கான குணாதிசயங்கள் / ஒழுக்கங்களில் எத்தனை அம்சங்கள் அந்த ‘so called’ முஸ்லிம் வீரர்களிடம் உள்ளது. இது போன்ற பாசத்தை ஒரு கைப்பிடி சோறு கூட கிடைக்காமல் அனுதினமும் செத்து மடிந்து கொண்டிருக்கும் சோமாலிய மக்கள் மீது காண்பியுங்கள். கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பாருங்கள்!!

முந்தைய காலங்களில் விளையாட்டு என்பது சமூகம் வீரம் தழுவியதாக, அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்தந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன. ஆனால் கிரிக்கெட் இன்று ‘வெறும் வியாபாரப் பொருளாக' மாறி பல வழிகளில் பணம் புகுந்து, அரசியல் வாதிகள், பெரும் பணமுதலைகள், பன்னாட்டு விளம்பர கம்பெனிகளின் கைகளில் சிக்கி… முழுக்க முழுக்க பணத்துக்காகவும், விளம்பரங்களுக்காகவும், இதுவும் மற்ற விளையாட்டுகளைப் போல ஒரு விளையாட்டாக மக்களைக் கருத விடாமல் அவர்களின் விளையாட்டு 'உணர்ச்சியை' மற்றும் வீரர்கள் மேல் உள்ள 'கண்மூடித்தனமான பாசத்தை' காசாக்குவதே இவர்களின் ஒரே குறிக்கோள்!!

தங்களது சுய முன்னேற்றம் மற்றும் வருமானத்திற்காக எந்த விளம்பரமாக (மதுபானம் மற்றும் பன்னாட்டு பெப்சி கோக்) இருந்தாலும் நமது கிரிக்கெட்வீரர்கள் தான். இதன் மூலம் பல கோடிகளில் புரண்டாலும் ஓசியில் பரிசாக பெரும் வெளிநாட்டு கார்க்கு இறக்குமதி வரியைக் கூட அரசுக்கு செலுத்தாமல் அதற்க்கு வரிவிலக்கு கேட்பவர்கள். கிரிக்கெட்டில் மார்கெட் போய்விட்டால் நடுவராக, வர்ணனையாளராக, கோச், போர்டு மெம்பெர் அல்லது அரசியல்வாதியாக பல பரிணாமங்கள் எடுத்து எல்லா வகையிலும் ஆதாயம் தேடும் இவர்களுக்கு... சமூக சேவை செய்தவர்களுக்காக தரப்படும் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிப்பதில் நாம் அலாதி இன்பம் அடைகின்றோம்.

தனக்கு மிகப் பெரிய விளம்பரமோ / வருமானமோ இல்லாவிட்டாலும் கூட, ஒலிம்பிக்கில் அல்லது ஏதாவது சர்வதேச போட்டியில் நமது நாட்டிக்கு ஒரு தங்கம் / வெள்ளிப் பதக்கத்தை வென்று வருவதற்க்காக உயிரை கையில் பிடித்து கொண்டு போராடுகின்றானே அவனை விட தன்னுடைய சுய முன்னேற்றம், பெயருக்கும், புகழுக்கும், பணத்திற்குமாக விளையாடும் பெரும்பாலான நமது கிரிக்கட் வீரர்கள் எந்த அளவில் உயர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் நாம் கொடுக்கும் ஊக்கம் - உற்சாகத்திலும், அது போல நமது அரசு கொடுக்கும் சலுகைகளிலும், உதவிகளிளும் மிகக் குறைந்தபட்சம் ஒரு பத்து சதவீதமாவது மற்ற விளையாட்டுத் துறைகளுக்கு / வீரர்களுக்கும் கொடுத்திருந்தால்… கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற மாயை நீங்கி மற்ற விளையாட்டுகளும் நமது நாட்டில் தழைத்து ஓங்கிருக்கும்.

"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடிவிளையாடு பாப்பா" என்றான் பாரதி. விளையாட்டு என்பது நமது உடல் திறன்களை திடமாக்கிக் கொள்ளவும், வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை அதிகரிக்கவும் ஒவ்வொருவர் வாழ்விலும் எப்பருவத்திலும் இன்றியமையாத ஒன்று என்பதிலோ அல்லது அதை 'அளவாக' பார்த்து மகிழ்வு அடைவதில்லோ எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அது நம்முடைய படிப்பையும், பிழைப்பையும், மார்க்க வழிபாட்டையும், வல்ல இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் பொன்னான நேரத்தையும் கேள்விக் குறியாக்கி விடாமல்... கிரிக்கெட்டை (மற்ற விளையாட்டுகளைப் போன்று) வெறும் விளையாட்டாக அதை விளையாடுபவர்களை வெறும் விளையாட்டு வீரர்களாக மட்டும் எண்ணுவோமேயானால் இது போன்ற கிரிக்கெட் மாயை ஒழிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் சுரண்டல்கள் ஒரு முடிவுக்கு வரும்!!

மனதை மாற்றிக்கொள்ள வேண்டியது நாம்தானே...???

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 07 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20704

மாஷா அல்லாஹ். நான் இந்த (மதத்திற்கு இணையாக கருதப்படும்) விளையாட்டைப்பற்றி என்னென்ன கருத்துக்களை மற்றவர்களிடம் கூறுவேனோ, அது அத்தனையும் ஒரு வரி விடாமல் எழுத்தில் வடித்திருக்கிறார் சகோதரர் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள்.

இவ்விளையாட்டின் பிரியர்களாக தங்களை கருதுபவர்கள், இந்த வீணான விளையாட்டின் மூலம் நம் நேரங்களை வீணாக்கி பணம் சம்பாதிப்பவர்களை கடவுள்களாக குறிப்பிடவும் தவறுவதில்லை.

IPL match களுக்காக டிவி யில் வரும் விளம்பரங்களை பாருங்கள். அதில்தான் எத்தனை முட்டாள்தனங்களையும் கலாச்சார சீரழிவுகளையும் விதைக்கிறார்கள். காணாதகுறைக்கு சமீபத்தில் சதத்தில் சதம் அடித்தவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வேறு. என்னத்தை அப்படி அவர் இந்த மனித இனம் முன்னேற அல்லது குறைந்த பட்சம் இந்த நாடு முன்னேரவாவது செய்துவிட்டார். அவர் செய்ததெல்லாம் மக்களின் நேரங்களை வீணாக்கி, இந்தியாவை முன்னேற்ற பாதையிலிருந்து இன்னும் சறுக்கிப்போக செய்ததுதான். இப்படி கோரிக்கை வைப்பவர்களை உள்ளே தள்ளவேண்டும்.

முதல் வேலையாக, நான் இந்த பதிவை காப்பி செய்து என்னுடைய email address book இல் இருக்கும் அத்துனை கிரிக்கட் வெறியர்களுக்கும் அனுப்பப்போகிறேன். நன்றி சகோதரரே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நீங்களும் டக் அவுட்தான்!!...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 07 April 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20705

நெத்தியடி என்றால் இதுதானோ!ஆனாலும் ரொம்ப தூரம் அகலப்பந்து (இவர்களுக்கு)போட்டுள்ளீர்கள்! புரியாத புது எழுத்தாளன் என்று இவர்கள் உங்களை விமர்சிப்பார்கள்! இல்லையென்றால் இவரெல்லாம் ஒரு ஜுஜிபி என்று கண்டுக்காமல் போய் விடுவார்கள்.ஆனாலும் இவர்கள் முன்பு நீங்களும் ஒரு டக் அவுட்தான்!

நீங்கள் சொல்லும் புத்திமதி இவர்களுக்கு நோ பால்!
நீங்கள் சொல்லும் பாரதி இவர்களுக்கு எட்டப்பன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: izzadeen (CHENNAI) on 07 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20706

சம்பாத்தியத்தை மட்டும் நம்புவர்களுக்கு இது வீசம்.ENJOY IPL AND KPL.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 07 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20707

சாராயம் குடித்தவன் கூட இப்படி நினைவு கிறங்கி தடுமாற மாட்டான். நமதூர் கிரிகெட் ரசிகர்கள் 'கிரிகெட் போதையில்'அப்படி கிறங்கி தன்னிலை மறந்து கிடக்கிறார்கள். இவர்களுக்கு சோறு தண்ணீர் மனைவி மக்கள் எதுவும் வேண்டாம். கிரிகட்டின் வெறும் புள்ளி விவரங்கள் மட்டும் போதும் .

சினிமா நடிகர்கள் அரை குறை ஆடை அணிந்த நடிகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மங்கயர்கள் என ஒரு ஆபாச திருவிழாவே அங்கு நடந்தது. எங்கோ கிராமங்களில் ரிகார்ட் டான்ஸ் என்ற பெயரில் நடக்கும் கேவலங்களை அள்ளிக்கொண்டு போகும் நமது காவல் துறை அன்று என்ன செய்தது ?வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சென்னையின் மேட்டுக்குடி மக்களில் இருந்து அன்றாடங்காய்ச்சி வரை அன்று அங்கு திரண்டிருந்தனர்.

தமிழகமே மின் தட்டுப்பாட்டால் திண்டாடி திணறிக்கொண்டிருக்கும் போது இந்த ஐ. பி.எல் போட்டிக்கு மட்டும் இவ்வளவு மின்சாரம் வீணாவது தேசத்துரோகமாகும். அல்லது இங்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மிக அதிக பட்ச கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதென்ன "கிரிகெட் வீரர்கள்" ?இவர்கள் எந்த யுத்தத்தில் துப்பாக்கி தூக்கி போர் முனைக்கு சென்றார்கள் ?போர் முனைக்கு செல்பவர்கள் வீரர்கள் !பணத்துக்கும் புகழுக்கும் விளையாடுபவர்கள் எப்படி வீரர்களாக முடியும் ? கிரிகெட் ஒரு போதை. அந்த போதையி விழுந்து கிடப்பவர்கள் பேதைகள். வேறு என்ன சொல்ல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: Shahul Hameed (Abudhabi) on 07 April 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20709

அன்பு நண்பர் உடைய கட்டுரை அற்புதம்

நானும் நீங்களும் ஒன்றாக ஸ்கூல் படித்தோம் ,1996 வேர்ல்ட் கப் கிரிக்கெட் நடந்தது ,அனால் நமக்கு physics public exam ,தாங்கள் நன்றாக படித்ததின் விளைவு இன்று Engineer, அனால் அன்று நான் கிரிக்கெட் பார்த்ததின் விளைவு உங்க அளவுக்கு என்னால் படிக்க முடியவில்லை .என்றால்லும் alhamdhulillah allah நம்மை நல்ல வைத்து இருக்கான்
இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?


[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: SEYED ALI (ABUDHABI) on 07 April 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20710

அருமையான கட்டுரை.நெற்றியில் அடித்தார்ப்போல் அவ்வளவு சூடான கருத்துகள்.சரியான நேரத்தில் பொட்டில் அறைந்த மாதிரி இருக்கிறது.ஆனால் உறைக்க வேண்டியவர்களுக்கு இது உறைக்க வேண்டுமே.

காலை எழுந்தவுடன் தொழுகை,பின்பு பள்ளி பாடம்,பின் மாலையில் ஆரோக்கியம் தரும் விளையாட்டு,என்பார்கள்.ஆனால் காலை நேரத்தில் வெள்ளை உடையை போட்டுக்கொண்டால் மட்டும் போதும்.ஆரோக்கியம் விளையாட்டில் வந்துவிடுமா?

இங்கே வளைகுடாவில் கூட எத்தனையோ நாட்டவர்களுக்கு மத்தியில் பின்தங்கிய நிலையிலிருக்கும் நாட்டவர்களான இந்தியர்களும்,பாகிஸ்தானிகளும் பந்கலதேஷிகளும் தான் இதில் பைத்தியமாக அலைகிறார்கள்.தேசப்பற்றாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அது சினிமாவினால் சீரழிந்தது போக இப்போ மிச்சம் மீதியையும் கிரிக்கெட்டில் காவு கொடுக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. முட்டா பசங்க...இதை நான் சொல்ல வில்லை! அறிஞர் பெர்னாட்ஷா சொன்னதுங்க...!!!
posted by: முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ் மைந்தன். (????????????.) on 07 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20712

நெஞ்சு பொறுக்குதில்லையே? இந் நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே! விளையாட்டை விளையாட்டா நெனச்சா அது வெறும் விளையாட்டுதாங்க...! இவங்க விளையாட்டை விளையாட்டா நினைக்கிறதில்லீங்க அதான் விளையாட்டு “விலை”யாட்டா மாறிடுது. அதுவே வினையாட்டமாப் போயிடுதுங்க...!!!

அதுலெயும் கொடுமை இந்த நாசமாப் போன கிரிக்கெட்டை தேசப்பற்றுக்கு ஓர் அளவுகோலா வேறெ வெச்சுட்டானுங்க. இந்த பாழாப் போன விளையாட்டு பசங்களுக்குப் பாரம்பரியமான பல விளையாட்டையும் முடக்கி மூலையிலெ போட்டிருச்சு! பட்டி தொட்டி மூலை முடுக்கெல்லாம் மட்டைய வெச்சுக்கிட்டு வெயிலு மழைன்னு பார்க்காமெ அப்படி என்ன எழவுதான் இதிலெ இருக்கோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் ....
posted by: SAHUL (CHENNAI) on 07 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20713

அன்பு நிறைந்த எழுத்து மேடை ஆசிரியர் நண்பர் முஹிதீன் அவர்களுக்கு..... எங்களை போன்ற கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் .... தாங்கள் நமதூர் வளர்சிக்காக பல நல்ல காரியங்களை நீங்கள் செய்வது என்னை போன்ற சமுதாய சிந்தனை உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் .... நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகளுக்கு வாழ்த்துக்கள்...

எழுத்து மேடை என்ற பகுதியல் நீங்கள் கிரிக்கெட் பற்றி உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதிவிட்டிர்கள் ...

உங்களுக்கு கிரிக்கெட் ரசிக்க தெரியவில்லை ... ஏன் என்றல் உங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்று எண்ணுகின்றேன்.

நான், எனது நண்பர்கள் SSLC , +2 மற்றும் காலேஜ் நேரங்களில் காலை , மதியம் , மாலை என்று எல்லா நேரங்கள் கிரிக்கெட் விளையாட்டு, இரவு நேரங்களில் கிரிக்கெட் பற்றிய பேச்சக்கள் ... என்று இருந்த நாங்கள் இன்று எங்கள் நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலைகளில் இருகின்றார்கள் ... எங்களுக்கு இன்று வரை கிரிக்கெட் விளையாடுவதால் எந்த பாதிப்பும் இல்லை....

மேலும் நமதூரில் நடைபெறும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்களால் நமது மக்கள் மத்தியல் நல்ல நட்புகள் வளர்கின்றது.... கடந்த கால பகைகளை மறந்து இன்று நமதூரில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து KAYAL PERIMIER LEAGUE போட்டிகள் நடைபெறுவதன் மூலம் நட்பு வட்டாரங்கள் பெறுகின்றது , இரண்டு மாதமும் ஜாலி என்ற நிலை ஏற்படுகின்றது.

நமதூர் மக்கள் இதற்காக கடல் கடந்த நாடுகளில் மற்றும் நமது நாட்டின் பல இடங்களில் இருந்து வருகைதருகின்றர்கள்...

நமது என்ன ஓட்டங்களில் அடிப்படையில் எதையும் நாம் எடுத்துக்கொண்டால் வியாபாரம் என்றாலும் , மார்க்க கல்வி என்றாலும் , உலக கல்வி என்றாலும் நாம் வெற்றி பெறலாம் என்பதை நீங்கள் அடுத்து வரும் எழுத்து மேடை பகுதில் மன வலிமை பற்றி எழுதல்லாம்....

இஸ்லாமியர்களை கொன்று குவிக்கும் அமெரிக்காவை என்னை போன்ற பலருக்கு புடிக்காது...... அதற்காக நீங்கள் அமெரிக்காவை விட்டு வர சொல்லுவது சாத்தியம் ஆகாது.

வியாபாரத்தை எடுத்து கொண்டால்...... அமெரிக்கர்கள் தயார் செய்யும் உணவு வகைகளை நாம் அதிகமா பயன் படுத்துகின்றோம்... இதை நிறுத்துவதற்கு நீங்கள் எழுத்து மேடை பகுதியில் எழுதுங்கள் உங்களை வாழ்த்த எங்களை போன்றவர்கள் தயாராக உள்ளோம்.

ஆகவே........ நமதூர் மக்களின் அன்றாட வாழ்வில் கலந்த KAYALPATNAM . COM போன்ற வெப்சைட் - இது போன்ற தேவை இல்லாத நிகழ்வுகள பதிவு செய்வதை நிறுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: Sithan Niyaz - Pfizer Inc (Riyadh) on 08 April 2012
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 20714

சகோதரர் உடைய கட்டுரை அருமை! கிரிக்கெட் என்ற பைத்தியக்கார விளையாட்டில் இன்று இளைநர்கள் முழ்கி கிடக்கிறார்கள்! இந்த சாபக்கேடான விளையாட்டை ஒழித்தால் தான் நம் நாடு உருப்படும்.கிரிக்கெட் பைத்தியங்களுக்கு சரியான சாட்டை அடி கொடுத்தீர்கள்!

11 FOOLS ARE PLAYING 11 THOUSAND FOOLS ARE WATCHING!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: Sithan Niyaz - Pfizer Inc (Riyadh) on 08 April 2012
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 20715

கிரிக்கெட்டில் சதம் அடித்தவனுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமாம்! அவன் என்ன நாட்டுக்காக கார்கில் போரில் போர் செய்தானா, கூலிக்கு மாரடிக்கிறான்.

கிரிக்கெட் ஒரு போதை தான் இப்ப உள்ள நிலைமையில் !அந்த போதையில் இருந்து இளைநர்கள் மீள வேண்டும் !

சகோதரர் அவர்களே! போற்றுவோர் போற்றட்டும் தூத்துவோர் தூத்தட்டும் உங்கள் பேச்சு அம்புகளை எய்து கொன்று இருங்கள்.

HATES OFF DEAR BROTHER MOHAMED MOHIDEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!...
posted by: SEYED ALI (ABUDHABI) on 08 April 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20716

"நான் கிரிக்கெட் ரசிகன் கிரிக்கெட் எனது உயிர்.ஆனாலும் நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.அமெரிக்காவில் எனக்கு கை நிறைய சம்பளத்தில் வேலை.கிரிக்கெட் மோகத்தினால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.எனவே தேவை இல்லாமல் கிரிக்கெட்டை குறைகூறாதீர்கள்" என்பது சிலரது ஆதங்கம்.

மஞ்சள் கண்ணாடியை போட்டுக்கொண்டால் உலகமே மஞ்சளாகி விடுமா என்ன.பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாட்டவர்கள் வெள்ளையர்கள்.அவர்களுக்காக அவர்கள் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பணக்கார அந்தஸ்தில் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்காட்டில் அவர்கள் கூட இப்படி பைத்தியங்களாக அலைய வில்லையே.

கிரிக்கட் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்ப்படுத்தவில்லை என்றால் உங்கள் செல்வ சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் அப்படி.உங்களை போன்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆனால் கிரிக்கட் பார்க்க டிக்கட்டுக்காக வீட்டு செலவுக்காக வைத்திருந்த சம்பளத்தை காவு கொடுப்பவர்களும்,வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கிரிக்கெட் பார்க்க போய் வேலையை இழந்த நடுத்தர வர்க்கத்தினரும்,கிரிக்கெட் பைத்தியத்தில் வேலை வெட்டிக்கு போகாமல் டீக்கடை முன் உட்க்கார்ந்து டிவியில் காமென்ட் பார்த்து உள்ளதையும் இழக்கும் எளியவர்களும் ஏராளம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved