Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:21 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 28
#KOTWEM28
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 10, 2012
ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-2)

இந்த பக்கம் 2364 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு படித்து, பார்த்து - எந்த கொள்கையையும், பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.


ஒலி பெருக்கியின் பெருக்கத்தால் அதன் உச்சநிலை சத்தத்தால் " ஒலி மாசு " அடைந்து இருக்கிறது - அதனால் மக்கள் பெரும்பாலும் துன்புறுகின்றனர். ஒலிபெருக்கியின் அதிகமான சத்தத்தால் வயோதிகர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் , அவதியுறுகின்றனர். பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும், பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருப்பவர்களும் இதன் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். பரீட்சைக்காக படிக்கும் மாணவர்களுக்கும் இது இடையூறே.

அதிக சத்தத்தினால் கிட்னி பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது - அதுமட்டுமல்ல தாயின் வயிற்றில் உள்ள கருவையும் அது பாதிக்கிறதாம். அமைதியில்லாமல் அதிக சத்தம் , இரைச்சல் உள்ள பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு மற்றும் குறைப் பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அதிக ஒலிகளை நம் காதுகள் கேட்டு, கேட்டு செவிப்பறை ( EAR DRUM ) கேட்கும் திறனை இழந்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர் இயற்கையான கேட்கும் திறனை இழந்து வருகின்றனர். முன்பெல்லாம் காது சரியாக கேட்காதவர்கள், காதில் ஒலி கேட்கும் ( EAR PHONE ) கருவியை பொருத்தி இருப்பார்கள் - அவர்கள் காதில் பொருத்தி இருக்கும் கருவியிலிருந்து பாக்கெட்டில் வைத்திருக்கும் பேட்டரி பாக்ஸ் வரை ஒரு மெல்லிய வயர் போகும் - காதிலிருந்து போகும் வயரை பார்த்தாலே மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் இவருக்கு காது கேட்கும் தன்மை குறைவு என்று. அன்று நம்ம ஊரில் இந்த மாதிரி கருவிகள் பொருத்திக் கொண்டவர்கள் மிகச்சிலரே, விரல் விட்டு எண்ணிவிட முடியும்.

ஆனால் இன்று நம் ஊரில் காதில் கருவி பொருத்தி இருப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கிறது - ஆனால் இது யாருக்கும் வெளிப்படையாக தெரிவதில்லை காரணம் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிக்கு வயர் இல்லை, ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் லேட்டஸ்ட் டெக்னாலஜியாக காதின் உட்புறமே மிகச் சிறிய கருவியை பொருத்தி இருப்பதுதான். ஆகையால் இன்று காது கேளாதவர்களை உடனே அடையாளம் காண முடிவதில்லையே தவிர, காது கேளாதவர்களின் எண்ணிக்கை மிகுதமாக கூடி இருக்கிறது என்பது உண்மை.

இதற்கு மிகுதியான காரணம் அதிக ஒலியுடன் கூடிய ஒலிபெருக்கியின் தாக்கமே. புகை வண்டி நிலையத்திலும், அதிகமாக பஸ்கள் வந்து, செல்லக்கூடிய பெரிய, பெரிய பஸ் ஸ்டாண்டுகளிலும் வேலை செய்பவர்களுக்கு வாகன ஒலிப்பான்களின் மிகுந்த சத்தத்தின் காரணமாகவும் மற்றும் வாகனங்களின் இரைச்சலின் காரணமாகவும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் அவைகள் விட்டு, விட்டு சில நொடிகளே ஒலிக்கக்கூடியவையாக உள்ளன. மேலும் அந்த பாதிப்பு நம்ம ஊரைச்சார்ந்த மக்களுக்கு அதிகமாக இல்லை எனலாம். எனவே ஒலிபெருக்கியின், அளவுக்கு அதிகமான ஒலி தொடர்ந்து பல மணி நேரங்கள் ஒழிப்பதே இந்த பாதிப்புக்கு காரணமாக அமைகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

இந்த கட்டுரை ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு எதிர்ப்பு அல்ல, ஆனால் வரைமுறையுடன் முறையாக வைத்திட வேண்டும். இன்றைய மாசு படிந்த சுற்றுச்சூழலில் ஒலிபெருக்கி இல்லாமல் எந்த பேச்சும் எடுபடாது 15 , 20 நபர்கள் கூடியிருந்து விசாலமான ஓர் அறையில் கலந்துரையாடுவது என்றால் கூட அங்கே ஒரு ஸ்பீக்கரும், மைக்கும் தேவைப்படுகிறது - அந்தளவுக்கு ஒலி ' மாசு ' ஏற்பட்டிருக்கிறது.

ஆகையால் எந்த ஒரு விழாவுக்கும் அதிலும் குறிப்பாக மார்க்க உபநியாசம் நடைபெறுவதற்கு நிச்சயமாக ஒலிபெருக்கி அவசியம் தேவை, அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஊர், உலகத்து மக்கள் மார்க்கத்தை விட்டு தூரமாகி கொண்டிருக்கிற இந்த காலத்தில் மார்க்க உபநியாசங்கள் என்றென்றும் அவசியம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் அபோதுதான் மக்கள் ஓரளவு மார்க்க தொடர்புடனே இருப்பார்கள் - அதற்கு ஒலிபெருக்கியின் அவசியம் தவிர்க்க முடியாதது.

ஆரம்பத்தில் 4 ஸ்பீக்கரில் தொடங்கியது இன்று 40 ஸ்பீக்கர்களுக்கு குறைவில்லாமல் 4 திசைகளையும் நோக்கி பொருத்தி வைத்து அதிகமான சத்தத்துடன் இயக்குகிறார்கள் அப்படியிருந்தும் பெரும்பாலான இடங்களில் தெளிவாக கேட்பது இல்லை. விழா நடத்துபவர்களும், உபநியாசம் செய்யும் அறிஞர்களும் " மக்கள் நல்ல விசயங்களை கேட்டு தெளிவு பெறவேண்டும் " என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் மக்களுக்கு தெளிவு கிடைப்பதற்கு பதிலாக இடையூறே ஏற்படுகிறது ஒலி " மாசு " அடைவதின் காரணமாக.

எனவே 10 ஒலிபெருக்கிகளை வைக்கும் தூரத்திற்கு 20 , 25 ஒலிபெருக்கிகளை வைத்து சத்தமும் குறைவாக வைத்தால் எல்லோருக்கும் தெளிவாக விளங்கும், யாருக்கும் உடல் ரீதியாகவோ, உள்ளம் ரீதியாகவோ பாதிப்பு ஏற்படாது. இப்படி வைப்பதினால் ஒலிபெருக்கியின் எண்ணிக்கைக் கூடும் ஒலியின் அளவு குறையும். ஒலி மாசு இல்லாமல் மக்கள் மனசு ஆறுதலடையும்.

ஒலிபெருக்கிகளை யாரும் மக்களுக்கு தொல்லைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வைப்பதில்லை. நம்ம ஊரை பொறுத்தவரை அரசியல் கூட்டங்களில் வேண்டுமானால் மிக அதிக சத்தத்தில் வைப்பார்கள் - இதில் கட்சி வேறுபாடு கிடையாது எல்லோரும் ஒரே ரகம்தான்.

ஆனால் மார்க்க சம்பந்தமான எந்த ஒரு விழாவுக்கும், நிகழ்ச்சிக்கும் யாரும், எவரும் அவர்கள் எந்த கொள்கையை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஒலியின் அளவை கூட்டிவைக்க விரும்புவதில்லை - அப்படி ஒலியை கூட்டி வைத்தால் நிச்சயமாக அந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் பிரயோசமாக போய் சேராது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்த போதிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையே அறியாமல் சில கவன குறைவுகளால் ஒலிபெருக்கியின் சத்தம் கூடுதலாகி அந்த நிகழ்ச்சியின் மூலம், பயன்பெறுவதற்கு பதிலாக மக்கள் பல தொல்லைகளை அடைகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஓர் இடத்திலே ஹதீது சொல்லிக்கொண்டிருக்கும்போது அதே நேரத்தில் இன்னோர் இடத்திலும் ஹதீது சொல்கிறார்கள் - இரண்டு இடங்களும் அக்கம்பக்கமாக இருக்கிறது , சில வேளை தூரமாகவும் இருக்கிறது - எப்படி இருந்தாலும் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் அடுத்தடுத்து இருப்பதால் எந்த ஒரு ஹதீதையும் தெளிவாக கேட்க முடிவதில்லை.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் ஒலியின் அளவை சரி செய்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடுகின்றனர். சவுண்ட் சர்வீஸ் - இரண்டு பக்கமும் ஒரே சவுண்ட் சர்வீஸாக இருந்தால் ஓரளவு சரி செய்வார்கள் - அதே நேரம் வேறு, வேறு சவுண்ட் சர்வீஸ் ஆட்களாக இருந்தால் குழாய்களை திருப்பமாட்டார்கள் அட்ஜஸ்ட் செய்யவும் மாட்டார்கள் அதனால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த மாதிரி இரண்டு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் வைப்பதை தவிர்த்து வேறு , வேறு நேரங்களில் வைப்பது சிறந்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , நிகழ்ச்சி நடக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பார்த்து, உண்மை நிலையை அறிந்து , நிகழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்து அந்த ஹதீதுகள் , உபநியாசங்கள் மக்களுக்கு பிரயோசனமான வழியில் போய் சேர ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் ஒலிமாசு ஏற்படாது , மக்களுக்கு எந்த பாதிப்பும் நிகழாமல், நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேறும்.

மேலும் நமது பள்ளிவாசல்களில் மார்க்க விழாக்கள் , நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதிகமான ஒலிபெருக்கிகளை கட்டாமல் பாங்கு சொல்வதற்காக பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கிகளை மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள் என்றாலும்கூட சத்தத்தின் அளவு கூடுகிறது. சத்தத்தை அவர்கள் கூட்டவில்லை என்பது உண்மையே - ஆனால் பாங்கின் ஒலியும் நிகழ்ச்சிகளின் ஒலியும் சமமாகாதே. எனவே பாங்கு'க்கு அல்லாமல் வேறு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கியை உபயோகப்படுத்தும்போது சத்தத்தின் அளவை குறைத்து உபயோகித்தால் ஒலிமாசு ஏற்படாது.

அடுத்து பல பள்ளிவாசல்களில் மாலைப் பொழுதில் ஒரே நேரத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் / விழாக்கள் நடத்தும்போது ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தாமல் இருப்பதே பல வகையிலும் சிறந்தது. உதாரணமாக மஃரிபு தொழுகைக்கு பின் ஆரம்பிக்ககூடிய நிகழ்ச்சிகள் இரவு ஒன்பது மணி வரை நடக்கின்றது - இடையில் இஷா பாங்கு சொல்லும்போது எல்லா பள்ளிவாசல்களிலும் நிகழ்ச்சியை நிறுத்துவார்கள்.

பாங்குக்கு பின் நிகழ்ச்சிகள் தொடருகிறது அப்படி தொடரும்போது விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறாத அருகில் இருக்கும் சில பள்ளிவாசல்களில் இஷா தொழுகை நடை பெற்றுக்கொண்டிருக்கும் - அந்த தொழுகைக்கு இந்த ஒலிபெருக்கியின் சத்தம் இடையூறை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வேளை, இஷா பாங்குக்கு பின் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டுத்தான் நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெறுகிறது என்று கூறினாலும் கூட சில சமயம் பக்தியின் காரணமாக மறந்துவிட வாய்ப்பு இருக்கிறது - அதன் மூலம் தொழுகைக்கு இடையூறு ஏற்படக்கூடாது அல்லவா.

மேலும் அடுத்தடுத்து உள்ள பள்ளிவாசல்களில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அதில் ஒலி மாசு கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது, அதுமட்டுமல்லாமல் மற்றபள்ளிவாசலில் அதே விசேஷ நிகழ்ச்சி ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது இந்த சத்தம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

அதனால் பள்ளிவாசல்களில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கியை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இல்லை, இல்லை இன்றைய கால சூழலில் மக்களுக்கு பள்ளிவாசல்களில் நடக்கும் இந்த விசேஷ நிகழ்ச்சியை ஒலிபெருக்கியின் மூலம்தான் எத்தி வைக்க முடியும் என்று எண்ணுவீர்களானால் தயவு செய்து மிக, மிக குறைவான சத்தத்தில் ஒலிபெருக்கிகளை உபயோகபடுத்தவும். அதன் மூலம் ஒலிமாசு ஏற்படாது, தொழுகைக்கும் மற்றப் பள்ளிவாசல்களில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிக்கும் இடையூறு இல்லை, அதனால் எந்த மக்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.

மிகவும் முக்கியமாக பேணப்பட வேண்டிய நேரம் இரவு நேரங்கள் , இரவிலிருந்து காலை 7 மணிவரை அமைதி சூழ்ந்திருக்கும். இந்த நேரத்தில் மக்களுக்கு ஒலியின் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இரவு நேர ஒலிபெருக்கியின் சத்தம் மிக, மிக குறைவாக இருந்தால் அது மக்களுக்கோ அல்லது பறவை இனங்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது , மேலும் ஒலிமாசும் ஒழிந்து போகும்.

இன்ஷா அல்லாஹ்! தொடரும் ................

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 10 April 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20717

மச்ச்சான்ஜி பாகம் ஒன்றை விட பாகம் இரண்டில் ஒரு தெளிவு இருக்கின்றது!மார்க்க விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்!

இங்கு நான் பணிபுரியும் இடத்தில் கேட்க்கும் ஆகாய விமான ஒலியும்,போர் விமானங்களின் ஒத்திகை ஒலிகளும்,வரும் காலங்களில் எங்களை எவ்வளவு பாதிக்குமோ? அல்லாஹ்தான் அறிவான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இது ஓர் கொள்கைத் தாக்குதல் அல்ல! நிதர்சனம்...! உண்மை..!!!
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (????????????.) on 11 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20718

பொதுவாக நம்தூரில் பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், குர்ஆன் வகுப்புக்கள் எனப் பல்வேறு இடங்களில் வைபவங்கள் நடக்காத நாட்களே இல்லை எனலாம். யார் கொடுத்த யோசனையோ? தென் கோடியில் ஓர் பள்ளியில் விழா என்றால் அதன் உபநியாசம் சம்பந்தமே இல்லாத வட கோடிவரைக் கேட்கும் வண்ணம் தெருவுக்குத் தெரு குழாய்களை நிரந்தரமாகவே வைத்துள்ளனர்.

வாரந்தோறும்,மாதந்தோறும் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபெருக்கி மூலம் ஊர் முழுக்கக் கேட்கும் விதம் வீட்டு ஜன்னலுக்கருகில் மின் கம்பத்தில் நிரந்தரக் குழாய்களைக் கட்டி வைத்து காது ஜவ்வு அறுந்து போகும் அளவிற்கு ஒலிபரப்பப் படுவது எவ்விதத்தில் நியாயம்?

இணையதளங்களில் இது செய்தியாக கட்டுரையாக வந்த பின் குழாய்கள் அவிழ்க்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குப் பரீட்சை நடக்கும் நேரம் என்பதற்காவா? அல்லது உண்மையிலேயே அவர்களுக்கு உதிப்பு ஏற்பட்டு விட்டதாலா? எப்படியோ? தற்போது வீடுகளும்,வீதிகளும் அமைதியாக உள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லப் புகழும்.

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) on 14 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20723

ஹதீஸ் 7490 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

“(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம் மிகவும தாழ்த்தவும் வேண்டாம்”. எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் எதிரிகளின் தொல்லைகள் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஓ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.

எனவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ். நீங்கள் உங்கள் தொழுகையிலும் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள். அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். எனவே, இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்’. எனக் கட்டளையிட்டான்.

ஸஹிஹுல் புஹாரி பாகம் 7 அத்தியாயம் 96 இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்
Daya Islamic Media . Periyakulam Contact:dginnah@yahoo.co.in


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved