Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:36:56 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 29
#KOTWEM29
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 13, 2012
கவனக் குறைவால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும்!

இந்த பக்கம் 2525 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைவனின் திருப்பெயரால் துவங்குகின்றேன். அன்புக்குரிய உலகளாவிய இணையதள அன்பு வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

கவனக் குறைவு எப்போது ஏற்படும்? பெரும்பாலும் நிதானம் இழக்கும்போது என்கிறார்கள் அறிஞர்கள். நமதூரில் ஒரு வித்தியாசமான புதுமொழி சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன். அதாவது, “தானங்களில் சிறந்தது நிதானம்; ஆனங்களில் சிறந்தது புளியானம்”. பொதுவாக திங்கும் சொல் எதில் இருக்கிறதோ அதன் தொடர் ஞாபகம் வரும் என்றும் கூறுவார்கள்.

நிதானம் எப்போது வரும் என்றால், முற்காலத்தில் நாற்பதில் வரும் என்பார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அறுபதிலும் நிதானம் வரவில்லையே என்று மனம் நொந்து போகின்றவர்கள் உண்டு. இது காலத்தின் கோலமா அல்லது பரந்த ஞானமில்லாத போக்கா? புரியவில்லை.

கவனக்குறைவு ஏற்படுமானால் யாராக இருந்தாலும், அதில் வரும் கஷ்ட நஷ்டங்களைப் பெருக்கிப் பார்த்து அதை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு வயதும், அறிவும், நிதானமும் தேவை.

காயல் நகரில் இன்றைய நிலை

ஒவ்வொரு கவனக் குறைவுக்கும் பண நஷ்டம், நேர நஷ்டம் ஏற்படும். தேவையில்லாது எதையும் வீணடித்தால் அல்லாஹ்விடம் நாளைக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் ஏற்பட வேண்டும். உனது புது சட்டை - அதன் அழகு பிடிக்கவில்லையானால் கடைக்காரரிடம் திரும்பக் கொடுத்துவிடலாம்.

போன மாதம் அவசரத்தில் ஊர் புறப்படும்போது துபாயில் அல்லது அபுதாபியில் வாங்கியது இப்போது ஊர் வந்து பார்க்கும்போது அந்த கலர், கோடு எதுவும் என் மனைவிக்கு பிடிக்கலை என்று வைத்துக்கொள்வோம்... போடாத புது சட்டையை - நீ வசதிக்காரன்! உன் சொந்தத்தில் உள்ள ஏழைக்கு ரகசியமாக கொடுத்து விடலாம்.

அதற்கு மனமில்லை... இந்த சர்ட் 1450 ரூபாய் கொடுத்து வாங்கியது... அதனால் நான் கிழ்ப்பேன் என்றோ, என்னுடைய உழைப்பில் வந்தது... என்னை யார் கேட்பார்? என்றோ நான் நினைத்துவிடக்கூடாது. அங்குதான் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அதை ஒரு ஏழைக்கு - திருமணம் அல்லது ஏதேனும் விழா சமயங்களில் போட கொடுக்கலாம்... (இது ஓர் உதாரணமே! யாரும் இவ்வாறு செய்யவில்லை... செய்ததாக தகவலுமில்லை... நம் இணையதள வாசகர்களும் இதை செய்திட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை பயந்தவர்கள். புது சட்டை கிழிந்தால் தைத்துப் போடலாம். ஆனால் இன்று யாரும் தைத்துப் போடுகிற மாதிரி நிலையில் இல்லை. எல்லோருக்கும் அல்லாஹ் வசதியைத் தந்துள்ளான். அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோம், அல்ஹம்துலில்லாஹ்!

நமதூரில் பொருட்களை, மின்சாரத்தை விரயப்படுத்தும் முறைகளை எனது பேனா அழுதுகொண்டே எழுதுகிறது. (பேனா அழுதால் - அதன் மை வார்த்தையாக வெளியாகும் என்பது கவிஞரின் கூற்று.) உண்மையாக அழுகிறதை படியுங்கள் புரியும்.

தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான்! அதிகாலையில் சுபுஹு தொழுதுவிட்டு, பள்ளியில் அமர்ந்து திக்ர் - ஸலவாத் ஓதிவிட்டு வெளியாகும்போது, நாம்மைத் தாண்டிச் செல்லும் வாகனம் வீதியில் ஓடிய நதியா, ஆறா? அது நமது கவனக்குறைவினால் ஆட்டோக்காரன் சட்டைகளை மணலும், சகதியும் கலந்து ஒரு மாடர்ன் ஆர்ட்ஸ்ஸாக ஆக்கிட யார் காரணம் சொல்லவா? எல்லா தெருக்களிலும் அதிகாலை ஆற்றின் நீர் தங்குதடையின்றி முடுக்கு வழியாக வீதியில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் வீட்டுக்காரனின் மின் கட்டண பில் உயரும். நிலத்தடி நீா குறையும். வாட்டர் மோட்டார் விரைவில் வயோதிகனாகி தேய்வு ஏற்படும். அதன் காயில் எரிந்து ரிப்பேர் ஆகும். இது கவனக்குறைவால் ஏற்பட்டது இல்லையா? இதனால் வீட்டுக்காரர்களுக்கு பண நஷ்டமும், ரோட்டில் போவோருக்கு மனக்கஷ்டமும் ஏற்படுகிறது. சில நேரம் சண்டையும் வெடிக்கும்.

சுபுஹில் எழுந்து டேங் நிறையட்டும் என்று (மின் துண்டிப்பு திடீர் திடீர் என வருகிறது என்ற பயத்தில் போட்ட) வாட்டர் மோட்டரை, வாட்டர் டேங்க் எவ்வளவு நேரத்தில் நிறையும் என்று கணக்கு வைத்து அணைத்து விட தெரியாதா? அனைத்துத் தெருக்களிலும் குடும்பத் தலைவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

இதற்குக் காரணம் என்ன? இரவில் பிள்ளைகள் படுத்த பின்பும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்து, நள்ளிரவு வரை - தூக்கம் வரலே என்று கூறி எதையாவது பார்ப்பதும் ஒரு காரணம். (எனது வீட்டில் இன்று வரை தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.) குறை கூறும் நினைப்பில் இதை நான் குறிப்பிடவில்லை. போட்ட மோட்டரை off செய்ய மறந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கே.எம்.டி. நகர் முதல் கோமான் தெரு வரை அதிகாலை முதல் சுற்றி வந்து தரும் தகவல் இது. தினமும் எல்லா தெருக்களிலும் வாட்டர் டேங்க் நிறைந்து, தண்ணீர் வீணாக வழிந்தோடுவதை துள்ளியமாக என்னால் தகவல் தர முடியும். இதனால், பல தெருக்களில் போகும்போது - எவ்வளவுதான் கவனமாகப் போனாலும், மூன்று சக்கர வாகனக்காரர்கள் சில நேரங்களில் எனது ஆடையை மாடர்ன் ஆர்ட்ஸ் வரைந்து போயிருக்கிறார்கள். மரியாதைக்கு ஒரு “ஸாரி” கூட சொல்ல மாட்டார்.

அவரது வண்டி நம்பரைக் குறித்து வைத்துக்கொண்டு, வேறு தெரு வழியாக போகும்போது நிதானமாக, “தம்பி, நீ நேற்று காலை 7 மணியில் இந்த தெரு வழியாக ஆள் நடமாட்டமில்லாதபோதும் வேகமாக வண்டியை ஓட்டிச் சென்று, ரோட்டில் ஓடிய தண்ணீரை என் மீது வாரி இறைத்துவிட்டுப் போய்விட்டாயேப்பா....? இதெல்லாம் என்ன நியாயம்? என்று கேட்டபோதுதான், சில ஆட்டோக்காரர்கள், “ஸாரி, நான் கவனிக்கலே...” என்பார்கள்.

இது இப்படி என்றால், சில பொல்லாத ஆட்டோக்காரர்கள் சொல்வதைக் கேளுங்க... “இரண்டு பக்கமும் வீடு கட்ட ஜல்லி - மணல் போட்டுக் கொள்ளுங்க! செங்கல் வேற அடுக்கி இருக்கு!! நான் எப்படித்தான் போறது? இந்த வீட்டுக்காரன் அதிகாலையில் போட்ட மோட்டரை இதுவரை ஆஃப் செய்யவில்லை காக்கா... அந்த முடுக்குல பாருங்க! தண்ணீர் வரும் வீட்டில் கதவைத் தட்டிச் சொல்லுங்களேன்... என்னை ஏன் குற்றம் சொல்றீங்க?” என்று தன்னை நியாயப்படுத்திக் கேட்ட ஆட்டோக்காரர்களும் உண்டு. (அவன் சொல்வதுவும் உண்மைதான் என்பதால் அவன் மீது கோபம் வருவதில்லை. ஊரின் நிலை அப்படித்தானே உள்ளது?)

ஆட்டோ என்பது பொதுமக்கள் சேவைக்கு ஓடுகிறது. அதில் சில ஆட்டோக்காரர்கள் தன்மையானவர்களாக தெரிந்துகொள்கிறேன். பல ஆட்டோக்காரர்கள் நமது மக்களை மதிப்பதாகவே தெரியவில்லை. காரணம் என்ன? (விளக்கம் தர இணையதளம் சரியான இடமில்லை.)

வீதியில் எவ்வளவு ஓரமாகப் போனாலும் மேலே உரசிக்கொண்டு போகிறான்... கேட்டால் முறைக்கிறான்... யார் இவன்? (நமக்குள்ள பொது வேலைப்பளுவால் இவர்கள் செயல் குறித்து ஆய்வு செய்ய நேரமில்லை.) பொதுநல சங்கங்கள், சேவை அமைப்புகள் இதுபோன்றவற்றை மனதில் போட்டு அவர்களுக்கு புத்தி சொல்லலாம். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். நான் பொதுத் தொண்டன்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த மாதிரி நபர்களுக்கு நல்ல ஹிதாயத்தை கொடுக்க வேண்டும்..
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????) on 13 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20720

A L S மாமா அவர்களின் கட்டுரை இக்கால மக்களின் நிதானமற்ற செயலை படம்பிடித்து காட்டுகிறது உண்மையே...!

A L S மாமாவின் கட்டுரையில் குறிப்பாக வீட்டின் தண்ணீர் தொட்டி நிறைந்து நிலத்தடி நீர் வீணாக விரையும் ஆகவதும் அதனால் மின்சாரமும் வீணாகிறது.. தண்ணீரை வீண் செய்யும் இவர்கள் இதை பெரிய விசியமாகவே எடுத்து கொள்ளாதது மிக பெரிய வேதனை நமக்கெல்லாம் ஏற்படுகிறது...!

நம்மை படைத்த இறைவன் தான் இந்த மாதிரி நபர்களுக்கு நல்ல ஹிதாயத்தை கொடுக்க வேண்டும்.. நாம் இவர்களுக்காக துவா செய்வோமாக....

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கவனக் குறைவால் ஏற்படும் க...
posted by: k.s.m.shaikna lebbai (jiangmen,Guangdong province,china) on 14 April 2012
IP: 59.*.*.* China | Comment Reference Number: 20721

Excellent article in a simple native slang and it is not only for kayalites but for everyone in the world.I have shown this to my collegues they have highly appriciated thses kind of efforts taken by a senior citizen in kayalpatnam.

I request the author to continue to highlight these issues on wastages of natural resources like water and electricity.

wassalaam.
k.s.m.shaikna


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கவனக் குறைவால் ஏற்படும் க...
posted by: Mohamed Adam Sultan (kayalpatnam) on 14 April 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20722

ALS காக்கா அவர்களே, வீதிக்கு சென்று வீணாகும் நீரைபற்றி நெஞ்சு பொறுக்காமல் எழுதி இருக்கிறீர்கள். இதைவிட கொடுமை,கிட்டத்தட்ட பெரும்பாலும் ஜிம்மா பிரசங்கத்தில் பிரதானமாக சொல்லிகொண்டிருந்தாலும்,ஒரு ஹராமான காரியம் அநேக வீடுகளில் அரங்கேறிகொண்டிருக்கிறது.அது என்ன தெரியுமா?

வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ வரும் குடிக்கும் நல்லதண்ணீரை மோட்டரின் மூலமாக உறிஞ்சி எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் அடிபைப்பின் மூலம் முதுகெலும்பு முறிய அடித்தாலும் அந்தி நேர தென்றல் காற்றையும் மிஞ்சும் அளவிற்கு அருமையான காற்றுதான் வரும். தண்ணீர் ஊகும்.............???

இதை நான்வேண்டும் என்றோ இட்டுகட்டியோ எழுதவில்லை. என்னால் நிரூபிக்க முடியும். மின்தடை ஏற்ப்படும் நாளில் அடிபைப்பில் அழகாகவரும் நீர், மின்சாரமுள்ள நாளில் மாயமாக மறைவதின் மர்மம் என்ன?

இதயம் உள்ளவர்களே இதுக்கு நீங்கள் தான் வழி சொல்லுங்கள்?.அவ்வழி நல்ல வழி என்றால் அதை அமுல் படுத்துவதில் ஏற்படும் எந்த எதிர்ப்பையும் இறைவன் துணையோடு எதிர் கொள்ள இந்த ஆதம் சுல்தான் முதல்ஆளாக முன்வருவேன் என்பதை ஆணித்தரமாக இவ் இணயதளத்தின் மூலம் உறுதியளிக்கிறேன்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!. . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நகர் நலம் நாடும் ALS மாமா
posted by: S.A.Muhammad Ali Velli (Dubai) on 15 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20724

தினமும் நகர் வலம் போகும் உங்களுக்கு நம் K.T.M. தெருவில் தாயும் பள்ளி எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஒரு பயணிகள் நிழற்குடை இல்லாது மக்கள் வெயிலில் வாடுவது தெரியவில்லையா? தாயிம்பள்ளி ஜமாத்தில் முறையிட்டு நமது சங்க வளாகத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கி தருமாறு கேட்டு கொள்கிறேன். இல்லையென்றால் ஓடக்கரை அல்லது போஸ்ட் ஆபீஸ் சென்று தான் நம் பகுதி மக்கள் திருச்செந்தூர் செல்லும் நிலை ஏற்படும். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வெள்ளி முஹம்மது அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆட்டோ டிரைவருக்கு நன்றி
posted by: S.A.Muhammad Ali Velli (Dubai) on 15 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20725

ALS மாமாவின் சட்டையில் மேப் போட்ட ஆட்டோ டிரைவருக்கு மிக்க நன்றி. இல்லையென்றால் இது போன்ற ஒரு தரமான கட்டுரை எங்களுக்கு கிடைத்து இருக்காது.

(குசும்பு)
எந்த வீட்டு முடுக்கில் இருந்து தண்ணீர் ஓடுகிறதோ அங்கெல்லாம் பசுமை காயல் அமைப்பிடம் சொல்லி மரங்களை நட சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved