Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:48:26 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் அறிக்கைக்கு ஐக்கியப் பேரவை மறுப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஐக்கிய ஜமாத்திற்கு ஆக்க பூர்வமான சில் கேள்விகள்
posted by FATHIMA s. (chennai) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11076

ஐக்கிய ஜமாத்திற்கு ஆக்க பூர்வமான சில் கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும்..அன்புள்ள ஐக்கிய பேரவை நிர்வாகிகளே , இறைவனுக்கு பயந்து, கீழே கூறப்படும் விசயங்களில் நீங்கள் எடுத்த நிலை சரியா என்று யோசியுங்கள் .. சரி என்றால் ..அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்..என் கருத்து தவறு என்று நான் ஏற்கிறேன் ..

தவறு என்றால். அல்லாஹ்விற்காக, எந்த ஈகோ பார்க்காமல் சரி செய்யும் வழி யை இன்றே ஆராய்ந்து நேர் வழி பெறுவோம்.. வல்ல அல்லாஹ் நமக்கு நேர் வழியை மட்டும் காட்டுவானாக ஆமீன்

.. கடந்த சில நாட்களுக்கு முன், ஐ பே வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்த போது , அந்த கூட்ட நெறியாளர் பேச்சில் சாரம்சத்தில்..ஐக்கிய பேரவையை எதிர்ப்பவர்கள் , வெப்சைட் கமெண்ட் அடிக்கிறார்கள்.. ஆக்கபூர்வவமாக ஏதும் செய்ய விடுவதில்லை என்று, முதியோர் சொல் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்றும், தாய் மகள் போட்டி பற்றி ஒரு தகவலும் கொடுத்துள்ளார்.. அவரின் பேச்சில் ஆனால் அதை விமர்சித்து வெப்சைட்டில் பக்கம் பக்கமாக எழுதினார்கள் என காயல் வெப்சைட் இல் கமெண்ட் அடித்தவர்கள் பற்றி இவர் கமெண்ட் அடித்தார்

கடந்த ஆண்டு சில சகோதரர்கள், ஐக்கிய பேரவையை பொறுப்பாளர்களை மாற்றி அமைத்து, RESTRUCTURE பண்ண வேண்டும் என்று நல்ல நோக்கத்துடன் , இந்த கூட்ட நெறியாளர் மூலம் முயற்சி செய்தார்கள். அதற்க்கு சில சங்கங்களும் ஆதரவு அளித்தன..

ஆனால் நிர்வாகிகளை மாற்ற சொன்ன ஒரே காரணத்திற்க்காக ,அந்த சகோதர்களில், ஒருவரை கேவலபடுத்தி , ஐக்கிய பேரவை கூட்டத்தில் TORTURE பண்ணியது ஏன்..?

அந்த இளைஞரை மன்னிப்பு கேட்க வலயுரித்தியது ஏன்..?

அவர் மன்னிப்பு கேட்காமலே மன்னிப்பு கேட்டதாக செய்தி பரப்பியது ஏன்...?

அவர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லையா ...?

ஆக ஐக்கிய பேரவையின் செயல் பாட்டை நேர சொல்ல முடியவில்லை.. அதை பற்றி கமெண்ட் அடிப்பது தவறா.. நேராகவும் சொல்ல முடியாது .. வெளியேவும் கமெண்ட் பண்ண கூடாது.. அப்படி கமெண்ட் பண்ணினால் அவர்களை ,கூட்டத்தில் நீங்கள் கிண்டல் கமெண்ட் அடித்தது நியாயமா..இந்த நிகழ்வு கூட இந்த ஐக்கிய பேரவை கூட்ட நெறியாளருக்கு நன்றாகவே தெரியும்.

KAYALPATNAM.COMதான் முதன் முதலில், உங்களை அமைப்பை மாற்ற சொன்னது என்ற ஒரே காரணத்திற்காகவா, வேட்பாளர் தேர்வில் வாக்களிக்கும் பொது நல அமைப்பாக அவர்களின் அமைப்பான KAYAL தி FIRST அழைக்க படவில்லை..?

கிட்டத்தட்ட பத்து ஆண்டுக்கு மேலாக ஊருக்காக பொது சேவை செய்து வருகிறார்கள்.. அண்மையில் ஆரம்பிக்க பட்ட லெட்டர் பேட் அமைப்பை அழைத்து, வாக்குரிமை அழித்த நீங்கள்,பொது நல அமைப்புக்கே ஒரு ஒரு இலக்கணமாக அமைந்த அவர்களை நிராகரித்தது ஏன் .....ஆக உங்களை யாரவது, எதிர்த்தால், அவர்களை ஒதுக்கும் எண்ணம் எந்த வகையில் நியாயம் ...

அதே கூட்டதிற்கு, காயல்பட்டினத்தில் பல பொது சேவைகளை செய்து வரும்,இக்ரா அமைப்பை அழைக்காதது ஏன்...பொது நல அமைப்பிற்கு ஒரு CRITERIA வைத்தால் அதற்க்கு முதல் தகுதி இக்ரா வுக்கு தான் உண்டு..

ஊரில் உள்ள எல்லா ஜமாஅதிர்க்கும் REPRESENTATION கொடுத்து விட்டு, அதற்க்கு ஓட்டாக, பொது நல அமைப்ப்பயுர்க்கு REPRESENTATION குடத்ததன் மூலம், சில ஜாமத்கள் அதிக பிரதிநித்துவம் கிடைத்தது..(ஒரே ஜமாஅத்தில் ஜமாஅத் பிரதி நிதிகளும், நல அமைப்பு பிரதிநிதிகளும் வந்ததன் மூலம் )ஆனால் நெசவு தெரு போன்ற ஜமாத்திற்கு UNDER REPRESENTAATION கிடைத்தது..காரணம் அவர்களிடம் பொது நல என்ற அமைப்பை வைத்து இருக்க வில்லை... சரி பொது நல அமைப்புக்கு ஏதாவது வரையறைகள் வைத்தீர்களா...தடி எடுதவன் எல்லாம் வேட்டை காரன் என்பது போல், லெட்டர் பேட் அமைப்பு இதில் வரும் வாய்ப்பு இல்லையா

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பின்பு இனிக்கும்... என்பது முதுமொழி.

இது அந்த கூட்டத்தில் முழங்கிய பொன்மொழி.. வேட்பாளர் தேர்வில் வாக்களிக்கும் பொது நல அமைப்பாக காயல் வெப் சைட் அமைப்பான KAYAL தி FIRST அழைக்க படவில்லை,, சரி தங்களை நிராகரித்தும் கூட, வயதில் சிரியவர்களால் நடத்தபடும் காயல்பத்னம் வெப்சைட் , ஐக்கிய பேரவை நிகழ்ச்சி மற்றும் செய்திகளை தங்களது வளைய தளத்தில் நடு நிலையுடன் வெளி இடுகிறார்கள் ..

அனால் தங்களை சற்று எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்தால், சமயம் பார்த்து அவர்களை நிராகரித்ததுடன், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டத்தில் அடிக்கடி வெப்சைட் கமெண்ட் என்று இழுத்து பேசியது மூலாம், இங்கு மூதோர் குணம் மேல் ஓங்கி உள்ளதா அல்லது வயதில் சிறியவர் குணம் மேல் ஓங்கி உள்ளதா.

சரி நீங்கள் சொல்வது தான் முறை என்றால், அணைத்து அரசு மற்றும் தனியார் துறையில் 56 முதல் 64 வயதுக்குள் , பணியோய்வு பெற வேண்டும் என்று உலகளாவிய நீதி ஏன்.. வயது அதிகமாக அதிகமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் குறையும் என்ற மனோதத்துவ அடிப்படையில் இந்த முடிவு ஒரு நியதியாக இருக்கும் போது, பேரவையின் பொறுப்பில் எத்தனை பேர் 55 வயதிற்கு கீழ் உள்ளனர்...

அடுத்து அந்த கூட்டத்தில் பேசியது..

கடந்த காலங்களில் எப்படி நமதூர் பெரியவர்கள் செயல்பட்டார்களோ அந்த அடிப்படையில்தான் இந்த 25 நகரப் பிரமுகர்களும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஓட்டே இல்லை... பின்பு ஏன் உள்ளே வரனும்? என்று பிறகு கேட்டார்கள். நாம் இதற்கு என்ன சொல்வது?

இதோ இப்போது துணை மின் நிலையத்திற்காக வசூலிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாயில் பெரும்பாலான தொகைகளைத் தந்து உதவிய அந்தப் பெரியவர்களை மேடையில் இதுபோன்று வைத்து அழகு பார்ப்பது கூடவா தப்பு ...என்று அந்த கூட்ட நெறியாளர் வினவி உள்ளார் ..

இஸ்லாம் தான் செய்யும் தான தர்ம கொடைகளை , ரகசியாமாக செய்ய வேண்டும் என்று வலிறுத்தி,. எவன் ஒருவன் மற்றவர்களுக்கு காட்ட தானம் செய்கிறாரோ, அவர் அதன் பலனை மறுமையில் அடைய மாட்டார் என்று கூறுகிறது. இப்படி இருக்க, பணம் தந்து உதவியர்களை மேடையில் வைத்து அழகு பார்ப்பது, அவர்களின் தர்ம காரியங்களுக்கு மறுமையில், பலன் கிடைக்காமல் போக செய்யும் வழி அல்லவா.அந்த கொடையாளிகளை இறைவனுடன், பிரதிபலன் கிடைக்காமல் தடுக்கும் செயல் அல்லவா.

இந்த துணை மின் நிலையம் அமைக்க, நாம் பணம் குடுக்காமல், அரசே, GUIDELINE VALUE அல்லது மார்க்கெட் மதிப்பு இதில் எது குறையோ அதில் 150 சதவிகிதம் அரசே தரும் என்று, பேரவை நிர்வ்வகிகளிடம், அரசு குறிப்பு (தகவல் அறியும் சட்டம் மூலம்) பேரவை அலுவலகத்தில் நேரில் எடுத்து கூறியும் அதை நிராகரித்து, இத்தனை லட்சம் வீண் செய்தது ஏன்..தனவந்தர்களின் பணத்தை வீணாக செலவழித்து உள்ளீர்கள்.. இது உங்களின் நிர்வாக திறமை இன்மையை கட்டவில்லையா ..அந்த இளைஞர்கள், ஆதாரபூர்வமாக எதுத்து கூறியும் ,ஏற்காமல் , இப்படி ஏமாந்தது ஏன்......?

அதுத்து தாய் மகள் போட்டி பற்றி நெறியாளர் கூட்டத்தில் பேசிய போது

“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் என்று கூட்ட நெறியாளர் திருவாய் மலர்ந்து உள்ளார்

தாயை போட்டி வேட்பாளராக மனுசெயா காரணம், அப்போதுதான் வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. அந்த போட்டி வேட்பாளர் வாபஸ் வாங்கினால், அதிக முகவர் வைக்கும் வாய்ப்பு எங்கிருந்து வரும்.. (அடுத்து குரிப்பிட்டுலதில், இரண்டாவது வேட்பாளரை மனு செய்யாதற்கு காரணம் , அவர் வாபஸ் பேரா விட்டால்...என்று )இதிலிருந்து போட்டி வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்றும், அப்படி வாபஸ் பெற்ற வேட்பாளர் வாக்கு சாவடியில் முகவர் ஐக்க முடியாது என்பது ஊர் அறிந்த உண்மை..

ஒரு பேச்சுக்கு, அதிக முகவர் வைக்கவே என்றால், கள்ள வோட்டுக்கு சாதகமாகவ அதிக முகவர்கலை ஐக்கிய பேரவை முயற்சித்து என்ற சந்தேகம் எழுகிறது

அனால், இரண்டாவது வாக்கு பெற்ற வஹிதாவை ஏன் போட்டி வேட்பாளர் ஆக்கவில்லை என்ற கேள்விக்கு , ஒரு சமயம் அவர் வாபஸ் வாங்க விட்டால், வாக்குகள் சிதரிவ்டும் என்று அடுத்தட பேச்சிலே பல்டி அடித்து உள்ளதில் இருந்து, இதில் யாதோ உள்நோக்கம் உள்ளது என்று தெரிகிறது.. அதிக முகவர் வைக்க இந்த வேட்பாளர் என்று கூறி விட்டு, வேறு வேட்பாளரை போட்டால், அவர் வாபஸ் பெறாவிட்டால் ஒட்டு சிதறி விடும் என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக இல்லையா ..

தாயாரை போட்டியிட வைத்தது, அதிக முகவர் வைக்க, இரண்டாவது வேட்பாளரை போட்டுவிட வைக்காதது ,அவர் வாபஸ் பெற மறுத்து விடுவார் என பயந்து.. இது என்ன முன்னுக்கு முன் முரணான பேச்சு..

இவை எல்லாத்தையும் ஐக்கிய பேரவை தெளிவு படுத்துமா. அல்லது அது அவரின் சொந்த கருத்து என்று ஒதுக்குமா... எல்லா காயலர்களும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்

ஐக்கிய பேரவை என்பது ஊரில் உள்ள எல்லோர்க்கும், தெரு கொள்கை உட்பட எந்த வேறு பாடும் இன்றி , உள்ள பொது அமைப்பு. ஐக்கிய பேரவையில் பொறுப்பில் உள்ளவர்கள், ஊரில் ஒரு பிரச்சினை என்றால் நாடு நிலை வகிப்பது தான் நியாயம்.. அப்போது தான் ஐக்கிய பேரவை பொது நல அமைப்பு என்ற வாதம் சரிப்படும் ..

அது போல் ஊரில் யார்க்கு பிரச்சினை என்றாலும், எந்த வித்தியாசம் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டும்..

அப்படியானால், ஐக்கிய பேரவை இல் பதவிவில் உள்ள சிலர், ஏன் , ஜாமிஉல் AZHHAR ஜூம்மா மஸ்ஜித், அதை தர்போதுள்ளவர்களிடன் இருந்து, எடுக்க நடந்த வாகப் வாரிய தேர்தலில், பகிரங்கமாக ,தற்போது உள்ள ஜாமிஉல் AZHHAR நிர்வாகத்தை எதிர்த்து நடுநிலை தவருநீர்கள் ..எதிர்க்க உங்களுக்கு தனிப்பட்ட உரிமை உண்டு என்றால், ஐக்கிய பேரவை பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு எதிர்த்து இருந்தால் பரவா இல்லை.. இதன் மூலம் நாடு நிலை தவறி விட்டீர்கள்..

சில மாதங்களுக்கு முன், நமதூர் தாவா சென்டர் இல், புதிதாக இஸ்லாத்தில் இணைந்த ஒரு பெண்ணை, காவல்துறை அத்து மீறி , அனைத்து விதிமுறைகளையும் மீறி, இழுத்து சென்ற போது, தவா சென்டர் நல விரும்பிகள் போராடிய போது , நீங்கள் மட்டும் அதில் தலையிட்டு தீர்க்காமல், ஒதுங்கியது ஏன்..நீங்கள் அழைக்கும் மற்ற போராட்டத்திற்கு அந்த அமைப்புகள் உங்களுக்கு , ஆதரவு தந்தது தானே..அப்போது ஏன் இந்த நடு நிலை யற்ற நிலை...

சட்ட்று யோசயுங்கள்..நீதியின் பக்கன் நில்லுங்கள்.. நியாயத்தை நிலை நாட்டுங்கள்.. நிச்சயமாக, பொறுப்பாளிகள் அனைவரும் தங்கள் பொறுப்பு பற்றி மறுமையில் விசாரிக்க படுவார்கள்..இறைவனுக்கு பயந்து, மேல் கூறிய விசயங்களில் நீங்கள் எடுத்த நிலை சரியாய் என்று யோசயுங்கள்..சரி என்றால்..

அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.. தவறு என்றால். அல்லாஹ்விற்காக, எந்த ஈகோ பார்க்காமல் சரி செய்யும் வழி யை இன்றே ஆராய்ந்து நேர் வலி பெறுவோம்.. வல்ல அல்லாஹ் நமக்கு நேர் வழியை மட்டும் காட்டுவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved