Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:17:58 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: மீடியா வருகை, வீடியோ பதிவு ஆகியவற்றை எதிர்த்து காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [24 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20162

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற கூட்டம் நடந்ததே! அதிலே என்ன தீர்மானம் எடுத்தார்கள்?

நம்ம பகுதியிலே தண்ணீர் ..... தட்டுப்பாடு இல்லாமல் வருமா .............. ?,

தெரு லைட் இரண்டு நாளைக்கு ஒருமுறை எரியாமல் போகுதே..... அதை பற்றி நம்ம வார்டு உறுப்பினர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா ...........?

குப்பைகளை தினமும் அல்லாமல் தேங்கி கிடக்குதே.... அதற்கு என்ன தீர்வாச்சு .........?

என்று அவரவர் பகுதியில் உள்ள குறைகளுக்கு நகர்மன்ற நடவடிக்கைகள் என்ன என்பதை ஒவ்வொரு மக்களும் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர்.....

ஊர் மக்கள் அவர்களை ஏதோ, காமடி பண்ண தேர்ந்தெடுத்து நகர் மன்றத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக எண்ணி காமடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநடப்பு செய்வது என்பது நமது உரிமை - சட்டம் நமக்கு கொடுத்திற்கும் சுதந்திரம்.

அந்த சுதந்திரத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு அதை அந்த வரைமுறைக்குள் வைத்துக்கொண்டால்தான் அது உண்மையான சுதந்திரமாகும்.

இதை உணர்ந்து நடப்பவர்கள் பண்பாளர்கள்! - உணராதவர்கள் பண்பற்றவர்களே !!

-------------------------------------------

உங்கள் மீது சாபமிடுவார்கள் :

சென்ற மாதம் 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் காரணமாக கூட்டம் நடைபெறாமல் போயிற்று.

இந்த மாதம் கூட்டம் ஆரம்பித்து விவாதங்கள் தொடங்கியும் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் காரணமாக எந்த பயனுமின்றி கூட்டம் முழுமைப்பெறாமல் போயிற்று.

ஒவ்வொரு மாதமும் இப்படி வெளிநடப்பு செய்வதால் ஆகப்போகிறது ஒன்றுமில்லை.

வீம்பு செய்து காலத்தை வீணாக்காமல் - விவேகத்தோடு விவாதம் செய்தால் எத்தனையோ விசயங்களை சாதிக்கலாம்.

இந்த மாத கூட்ட ஆரம்பத்தில் விவாதங்கள் நன்றாகவே நடந்துள்ளது தலைவரின் மீது குறைகளை சொல்ல அவர் மறுமொழிக் கொடுக்க இப்படியாக கூட்டங்களை நடத்தி கூட்டத்தை முழுமை பெறச்செய்தால் , எல்லா விசயங்களுக்கும் தீர்வு காண முடியும்.

அதல்லாமல் வெளிநடப்பு என்ற பெயரில் எல்லோரும் வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தால் எந்த தீர்வும் கிடைக்காது - இன்று ஊர் மக்களும் , நாளை நீங்கள் பெற்றெடுத்த உங்களுடைய மக்களும் உங்கள் மீது சாபமிடுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

--------------------------------------------

உத்தமர்களாக இருப்பீர்களானால் :

நகர்மன்றக் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்தல், அக்கூட்டங்களில் மீடியாவை அனுமதித்தல் போன்றவைகளை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

இது எந்த வகையில் நியாயமாகும்? காரணம் 30.12. 2011 அன்று நடந்த கூட்டத்தில் (கூட்டம் எண் 4 பொருள் எண் 24 தீர்மானம் 141 ) கூட்ட நடப்புகளை வீடியோ பதிவு செய்து அந்த குறுந்தகடுகளை உள்ளூர் தொலைக் காட்சிகளுக்கும், இணையத் தளங்களுக்கும், இதர ஊடகங்களுக்கும் தர தீர்மானம் நிறை வேற்றபட்டப்போது, இந்த உறுப்பினர்கள் ஏன் அதை எதிர்க்காமல் வாய் மூடி இருந்தார்கள் ?

மேலும் இன்று நகர்மன்ற கூட்டங்களுக்கு வீடியோ பதிவும் , மீடியாவை அனுமதிப்பதும் கூடாது என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - அதுவும் நமது நகர்மன்றம் இன்று செயல்படுகிற விதத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக மீடியாவை அனுமதித்தே ஆக வேண்டும்.

மீடியா ஒருதலை பட்சமாக செய்தியை வெளியிடுகிறார்கள் என்று காரணம் காட்டி மீடியாவே வேண்டாம் என்பது கேலிக்கூத்தாகும் .

நம் ஊரில் ஒரு மீடியா மட்டும்தான் இருக்கிறதா ? தலைவருக்கு அல்லது சில உறுப்பினர்களுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கு!?.

தலைவரோ, உறுப்பினர்களோ உத்தமர்களாக இருப்பீர்களானால் நிச்சயமாக மீடியா நகராட்சி கூட்டத்திற்கு வருவதை தடுக்க மாட்டீர்கள்.

-----------------------------------------------

தடுக்க வேண்டாம் :

ஒரு விசயம் மட்டும் நன்றாக விளங்குகிறது - அதாவது இந்த மீடியா நகர்மன்ற கூட்டத்திற்கு தடை இல்லாமல் நேரிடையாக வந்து செய்தியை சேகரிப்பதால்தான் முழுச்செய்தியையும் வெளியிடாமல் சிலவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி வெளியிடுகிறார்கள்.

அதற்கு காரணம் பல இருக்கலாம் ஊரின் கலாச்சாரம், தலைவர் , உறுப்பினர் பாசம் , அதிகாரி, அலுவலர் நேசம் என்று பலதும் அடங்கும் எனென்றால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்கு வரவேண்டுமே.

அதே நேரத்தில் மீடியாவிற்கு அனுமதி மறுக்கபட்டால் பாசம் நேசமெல்லாம் காற்றோடு பறந்துவிடும் - காரணம் நீங்கள் யாரோ , எவரோ என்று ஆகிவிடும்.

மீடியா கூட்டத்திற்கு வந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதால்தான் இன்டர்நெட் மூலமும், செய்திதாள்கள் மூலமும் நகரமன்ற செய்திகளை மக்கள் அறிய முடிகிறது - செய்திகள் வெளியே போகும் என்பதை உணர்வதாலயே உறுப்பினர்கள் அடக்கத்துடன் உரையாட முடிகிறது -மீடியாக்கள் கூட்டத்திற்கு வரவில்லையெனில் அந்த கூட்டம் எப்படி இருக்கும் என்பதை உறுப்பினர்களே சிந்தியுங்கள்.

மீடியாக்கள் தலையீடு இருப்பதாலேயே நகராட்சியின் செயல்பாடுகள் அதன் குறைபாடுகள் மற்றும் ஊழல்கள் வெளியே தெரிகிறது.

ஆகவே எக்காரணம் கொண்டும் மீடியாக்கள் நகர்மன்ற கூட்டத்திற்கு வருவதை யாரும் தடுக்க வேண்டாம்.

-------------------------------------------

இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக :

காயல்பட்டணத்திற்கு என்று தனி கலாச்சாரம் உண்டு அதனால் வீடியோ எடுப்பது நல்லது இல்லை என்று திரு.சுகு உண்மையாகவே நினைப்பாரானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் 141 ஆவது தீர்மானத்தை கொண்டுவரவிடாமல் தடுத்திருக்க வேண்டும்.

அந்த தீர்மானம் கொண்டு வரும்போது வீடியோ எடுப்பது என்பது காயல்பட்டண கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே? ஏன் அதை அவர் செய்யவில்லை, அன்று அந்த கூட்டத்தில் திரு. சுகு கலந்து கொள்ள வில்லையா?

எது எப்படியோ இந்த வீடியோ பதிவு விவாதத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்க , திரு.சுகு காயல்பட்டண கலாச்சாரத்தையும் , முஸ்லிம்களின் கோஷா முறையையும் அவைசியமில்லாமல் , வேண்டும் என்றே இழுத்திருப்பாரானால் நிச்சயமாக இறைவனின் கோபம் அவர்மீது உண்டாகட்டுமாக - அவருக்கு மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக இருக்கும் அனைவர்மீதும் இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக - அதை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்களாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved