Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:00:57 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8758
#KOTW8758
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 20, 2012
மீடியா வருகை, வீடியோ பதிவு ஆகியவற்றை எதிர்த்து காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7793 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 11)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர கூட்டம், 19.07.2012 அன்று மதியம் 03.40 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், 01ஆவது வார்டு (ஏ.லுக்மான்) மற்றும் 02ஆவது வார்டு (வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா) உறுப்பினர்கள் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



கூட்டப் பொருள்:
ஜூன் 28 அன்று நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் - விவாதிக்கப்படாத 17 பொருட்களுடன், மீன் மார்கெட் விஷயம், நகர்மன்ற கூட்டத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர் பாலப்பா ஜலாலி - மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய மனு குறித்து, நகராட்சி மண்டல அலுவலரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் உட்பட 9 புது பொருட்களும், இம்மாத கூட்ட பொருட்களில் (அஜெண்டாவில்) இடம்பெற்றிருந்தது:















09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அறிக்கை:
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தான் எழுதி எடுத்து வந்த அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் நகர்மன்ற நடப்புகளை பற்றியும், ஒற்றுமையாக செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்ட அவர், தலைவர் - உறுப்பினர்கள் உறவு பற்றியும் பேசினார். தெரு விளக்கு பொருத்தும் விசயத்தில் 14ஆவது வார்டு உறுப்பினரிடம் - தலைவர் கோபப்பட்டதாக ஏ.ஹைரிய்யா அப்போது கூறினார்.

அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், தெரு விளக்குகளை சரி செய்ய, தொடர்ச்சியாக வேலை ஆட்கள் கிடைக்காத காரணத்தால், கால அட்டவணைப்படி (Schedule) தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இது இவ்வாறிருக்க - வேறு பகுதியில் தெரு விளக்குகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ள சூழலில் அதனைக் கருத்திற்கொள்ளாமல், துணைத்தலைவர் - அன்றைய திட்டத்தில் இல்லாத பகுதிக்கு பணியாட்களை அனுப்பியதால் தான் அதனை கண்டித்ததாகவும் கூறினார்.

கடந்த கூட்ட வெளிநடப்பு காரணங்கள் பதிவு:
பின்னர், கூட்டப் பொருளை (அஜென்டா) வாசிக்க ஆயத்தமானபோது, கடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்த காரணங்களை நகராட்சி மினிட் புத்தகத்தில் ஏற்றுவதற்காக தெரிவிக்குமாறு ஆணையர் அஷோக் குமார் கேட்டுக்கொள்ள, கடந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் வரிசையாக தாம் வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களைக் கூறினர். அவற்றை ஆணையர் மினிட் புத்தகத்தில் பதிவு செய்துகொண்டார்.

விவாதங்கள் :
அடுத்து, நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள 44 சென்ட் காலி நிலத்தை நகராட்சிக்கு அரசே வழங்கும் என்று அறிவித்திருக்க, தலைவி தான் முயற்சித்து பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி இருப்பதாக 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.

அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், 44 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு திருப்பித் தர அரசு அக்டோபர் 2011இல் கூறிய பிறகும், முன்னாள் ஆணையர் - அரசுக்கு பிப்ரவரி மாதம் எழுதிய கடிதத்தில், 29 சென்ட்தான் உள்ளது என தன்னிச்சையாக தெரிவித்திருந்ததால், அதனைத் தொடர்ந்து, நகராட்சிக்கு பல திட்டங்களை அமல்செய்ய நகராட்சிக்கு 44 சென்ட் நிலம் தேவை என தான் கடிதம் எழுதியதையே குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.

கடந்த கூட்டத்தில் கூட்டப் பொருள் (அஜெண்டா) வாசிக்கப்படாத நிலையிலேயே இன்டர்நெட்டில் அவை வெளியிடப்பட்டதை உறுப்பினர் சுகு கண்டித்து பேசினார்.

05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகர்மன்றத் தலைவி அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளை உறுப்பினர்கள் பலருடன் சேர்ந்து சென்று சென்னையில் பார்த்துவிட்டு வந்ததையெல்லாம் “நான் செய்தேன்” என்று கூறுவதாக குற்றஞ்சாட்டினார்.

பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தான் கூட்டத்தில் பேசாததை பேசியதாக ஒரு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பதையும், தீர்மானங்கள் சரியாக மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுவதையும் சுட்டிக்காட்டி, இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடராமல் இருக்க வீடியோ பதிவு அவசியம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, காயல்பட்டினத்திற்கென தனி கலாச்சாரம் உள்ளதாகவும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீடியோ எடுக்கத்தான் வேண்டும் என்று தலைவர் சொன்னால், ஒரு பேச்சுக்கு சினிமா தியேட்டர் கட்ட வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தால் அது சரியாகுமா என்றும், சென்னையில் முஸ்லிம் பெண்கள் பலர் கோஷா முறையைப் பயன்படுத்தாமல் வெளியில் செல்வதை போல், காயல்பட்டினத்திலும் அவ்வாறு கொண்டுவருவீர்களா என்றும் வினவினார்.



பின்னர் பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, இக்கூட்டத்தின் கூட்டப் பொருளில் 23ஆவது அம்சமாக இடம்பெற்றிருக்கும் - “பத்திரிக்கையாளர்களை அனுமதித்தல்” குறித்த விவாதத்தின் இறுதியில், மீடியாவை கூட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று மெஜாரிட்டி முடிவானால் அவர்களை இந்தக் கூட்டத்திலேயே வெளியனுப்ப தயாரா என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், மீடியா ஒருதலைப்பட்சமாக எழுதுவதாகவும், தலைவி தவறே செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தார்.

மீடியாவை வரவே வேண்டாம் என தான் சொல்லவில்லை என்றும், அவர்களை கூட்டரங்கிற்கு வெளியில் அமர்த்தி செய்தியை சேகரிக்கச் செய்யுமாறும் மட்டுமே தான் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர் - நகருக்கு என பல ஊடகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, ஒரு மீடியா வெளியிடாத செய்தியை மற்றொரு மீடியா வெளியிட வாய்ப்புகள் உண்டு என்றும், தன்னைக் கடுமையான வார்த்தைகளால் சாடியும் ஓர் இணையதளத்தில் பதிவுகள் வெளிவருவதையும் குறிப்பிட்டு, அதனை தான் பெரிதுபடுத்துவதில்லை என்றும், மீடியா பதிவுகளை பொருத்த வரை நாம் அதிகம் வாதிடத் தேவை இல்லை என்றும், பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள பழகித்தான் ஆக வேண்டும் என்றும் கூறினார்.

வெளிநடப்பு:
இறுதியில், நகர்மன்றக் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்தல், அக்கூட்டங்களில் மீடியாவை அனுமதித்தல் குறித்த தலைவரின் பதில்களை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்
ஆகிய ஐவரைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்து கூட்டரங்கை விட்டும் வெளியேறிச் சென்றனர்.

கூட்டம் நிறைவுற்ற பின்னர், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் தானும் வெளிநடப்பு செய்வதாகக் கூறி கூட்டரங்கை விட்டும் வெளியேறினார்.



கூட்டத்துளிகள்:
:: நகர்மன்றக் கூட்ட நடப்புகளை - பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க - நாற்காலிகளை ஒவ்வொரு கூட்டத்திற்கும் நகர்மன்றத் தலைவர் ஏற்பாடு செய்வது வழக்கம். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்காலிகள் பார்வையாளர்கள் பகுதியில் போடப்படாமல் இருந்ததை நகர்மன்றத் தலைவர் கண்டித்ததையடுத்து, பார்வையாளர்களுக்கான நாற்காலிகள் உடனடியாக போடப்பட்டது

:: இக்கூட்டத்தில், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட சிலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்

:: சில தீர்மானங்கள் - கூட்டத்தில் தீர்மானித்தபடி, மினிட் புத்தகத்தில் எழுதப்படவில்லை என உறுப்பினர்கள் பலர் கூறிவருவதை அடுத்து, கூட்ட துவக்கத்தில், அன்றைய கூட்ட பொருட்கள் குறித்த ஒவ்வொரு உறுப்பினரின் ஆதரவு - எதிர்ப்பு நிலையையும் பதியும் முகமாக நகர்மன்றத் தலைவர் - படிவம் ஒன்றை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்



:: நகர்மன்ற உறுப்பினர்கள் தொலைபேசியில் அழைக்கும்போது தான் பதிலளிக்கவில்லை என்ற குறையைத் தவிர்ப்பதற்காக, உறுப்பினர்கள் மட்டும் தொடர்புகொள்ள - தான் பெற்றுள்ள புது தொலைப்பேசி எண்ணை உறுப்பினர்களிடம் நகர்மன்றத் தலைவர் வழங்கினார்

:: கூட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில், மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை ரூபாய் 600 வழங்கப்பட்டு, அவர்களிடம் கைச்சான்று பெறப்பட்டது

:: வழமையாக கூட்ட நடப்புகள் புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால் இன்றைய கூட்டத்தில் புகைப்படங்கள் எடுப்பதை சில உறுப்பினர்கள் தடுத்தனர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by P.S.ABDUL KADER (jeddah) [21 July 2012]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 20080

உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு அவ்வப்போது உடனுக்குடன் அறிவிப்பதுதான் மீடியா.

நமதூர் நகரமன்றத்தில் முந்தைய ஆட்சியாளர்கள்,வார்டு உறுப்பினர்கள் நகரமன்ற தலைவருக்கு தெரியாமலேயே பல மோசடியில் ஈடுபட்டு வந்தது காலம்கடந்து வந்த தகவல்கள். முந்தைய தி மு க ஆட்சியும் தவறு,குற்றம் செய்த,துணையாக உதவிபுரிந்த அலுவுலர்களையும்,வார்டு உறுபினர்கலையும் கண்டுகொள்ளவில்லை. அன்றைய நேரம் மீடியாக்கள் நமதூரில் இல்லை. அன்று மீடியா இருந்து இருந்தால் மோசடி தவறுகள் நடந்தேறி இருக்காது.

ஒரு உறுப்பினர் தனது தொழில் வளர்ச்சிக்கு இடையூர் என்று மறைமுகமாக மீடியாவை சாடுகிறார்.

மீடியாவை நகரமன்ற உறுப்பினர்கள் வெருப்பதைவிட, வெளிநடப்பு செய்யாமல் தாமாக முன்வந்து வாக்களித்த பகுதி மக்களுக்கு மனசாட்சி படி திருப்திபடுத்த வெறுக்கும் வார்டு உறுப்பினர்கள் அவரவர் பதவியை ராஜனாமா செய்துவிட்டு ஒதுங்குமாறு வலியுர்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இது வாடிக்கை ஆனால்...அது வேடிக்கையாகப் போய்விடும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [21 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20081

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு என்பவரின் உவமை விஷம் தோய்ந்த வார்த்தைகளாகவே உள்ளது.வேறு பல உதாரணங்கள் இருக்கும் போது ஊர் காலாசாரத்தையும், கோஷா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது வஞ்சக எண்ணம் வார்த்தை வடிவில் சீண்டியுள்ளது.

5-ஆம் வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் அவர்களின் குற்றசாட்டு ஏற்புடையதல்ல. மீடியாக்கள் தலைவியை அதிகமாகப் புகழுகின்றதாம். அப்படி எனில் வேறு ஒரு ஊடகம் தலைவியை சாடாமல் சாடிக்கொண்டிருக்கின்றதே? இப்படியே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தால் அப்புறம் அதுக்கொரு மரியாதையே இல்லமல் போய்விடும்.

வீடியோ எடுத்தால் இவர்களின் வக்கனை வார்த்தை விளைட்டுக்கள் மக்கள் மத்தியில் நாறடிக்கப்படும் எனும் ஓர் காரணத்தை விட வேறு என்ன இருக்கக்கூடும்?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by M.N.Sulaiman (Bangalore) [21 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20083

ஆக... ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள்.

12 ஆம் வார்டு உறுப்பினர் அவர்களின் பேச்சு மிகவும் கண்டனத்திற்குறியது. மீடியா வேண்டாம் என்றால் நேரடியாக கூற வேண்டியதுதானே..... அது என்ன கலாசார சாயல் பூசுவது? "ஆடு நனைகிறதே என்று .........அழுத கதையாக உள்ளது?"

5 ஆம் வார்டு உறுப்பினர் அவர்களின் குற்றச்சாற்று வியப்பாக உள்ளது. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பதை தங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

18 ஆம் வார்டு உறுப்பினர் அவர்களே, இந்த மாதிரி ஒற்றுமையை நகரின் வளர்ச்சி பாதையில் காட்டலாமே.

தாங்கள் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தவிர்த்து விட்டு மீடியாக்களை எதிர்த்து வெளிநடப்பு என்று மாற்றுபாதையில் செல்வது எந்த வகையில் நியாயம்?

அப்படி என்னதான் மீடியாவின் மீது வெறுப்பு உங்களுக்கு? உள்ளதை உள்ளபடி வெளியிடுவதாலா? "மடியில் கனமில்லை எனில் வழியில் பயமில்லை" என்று வீரநடை போட வேண்டியதுதானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Mohamed Ali (Kuwait) [21 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20084

-கூட்டத்தை வீடியோ எடுக்க ஊடகங்கள் வருவது பற்றி வாக்குவாதம் வெளிநடப்பு.

-தலைவிக்கு நகராட்சி செலவில் கார் வாங்குவதற்கு வாக்குவாதம் வெளிநடப்பு.

-உங்களுக்குள் லஞ்சம் வாங்குவது பற்றி வாக்குவாதம் வெளிநடப்பு.

-ஒருவரை ஒருவர் குறை கூறுவது பற்றி வாக்குவாதம் வெளிநடப்பு.

இப்படியே உங்க குறைகளை போக்கவே இப்படி வாக்குவாதம் வெளிநடப்பு செய்து கொண்டு இருந்தால் மக்கள் குறையை யார் தீர்த்து வைப்பார்கள்.

அலி குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Kader K.M (Dubai) [21 July 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20087

12 வது வார்டு உறுப்பினர் சுகுவை வன்மையாக கண்டிக்கின்றோம்! இது பேச்சிக்கு வந்த வார்த்தை அல்ல! உங்கள் அடிமனதில் உள்ள விசத்தை கக்கி இருக்கின்றீர்!

இவ்வாறு பேசும்போது தலைவியோ, மற்ற உறுப்பினர்களோ மவுனம் காத்தது ஏன்?

சகோதரா! உன் மீது துரும்பு விழும்போது துடித்து எழவில்லை என்றால் தூனே விழுந்தாலும் மறக்கட்டையாகத்தான் இருப்பாய்!

ஒருவர் நம் வாழ் உரிமையில் கைவைத்துள்ளார் அதை கண்டிக்காமல் விட்டு விட்டு அவனோடு கை கோர்த்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே வெட்கமாக இல்லை?

என்னா? பயமா?..... அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்காக இருக்க வேண்டுமே தவிர அர்ப்பர்களுக்கு அல்ல!

12 வது வார்டு உறுப்பினரும், இவ்வாறு பேசும்போது மவுனம் காத்த மற்ற உறுப்பினர்களும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!

அவ்வாறு இல்லாத பட்சத்தில் சகோதர அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்!

ஒன்றுபடுவோம்! அல்லாஹ்வின் திரு பொருத்தத்தை அடைவோம்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Sithan Niyaz - Pfizer Inc (Riyadh) [21 July 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 20088

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு காலாசாரத்தையும், கோஷா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் என்ன. வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh, KSA) [21 July 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20090

12வது வார்டு உறுப்பினரின் இத்தகைய பேச்சினை வன்மையாக கண்டிக்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. விஷம் கக்காதே
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [21 July 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20091

12 ம் வார்டு உறுப்பினருடைய "முஸ்லிம் பெண்கள்", " கோசா" உதாரணம் முட்டாள் தனமானது. கண்டிக்க தகுந்தது.

ஒரு முஸ்லிம் பெண் கோசா அணிவது அல்லது அணியாதிருப்பது அவருடைய சொந்த விருப்பம். அதைப்பற்றி பேச நகராட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏன் நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கே இந்த விசயத்தில் தலையிட எந்த உரிமையும் கிடையாது.

கலாச்சாரம், கத்திரிக்காய் என்ற பெயரில் நகராட்சியில் விஷம் கக்குவதை உடனே 12 ம் வார்டு உறுப்பினர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இவருடைய இந்த பேச்சை கண்டிக்க ஒரு உறுபபினருக்குக் கூட தைரியம் இல்லையா? வெட்கக்கேடு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Bad example said by 12th ward councilor
posted by Riyath (HongKong) [21 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 20093

The 12th ward councilor worried about our muslim women in wrong place for wrong situation. Is he encouraging to build Theater in kayal or muslim women not necessary to wear 'kosha'?. I disagree with him for his worst example. :-(

If concentrate on good things then why bothering about camera. People could appreciate for good work if they see Video from home.

I remind old slogan "Ooru rendu patta koothadikku kondattam". We should unite for support for solving our people problems instead creating new problems which are not giving any profit to people.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Sugu
posted by Ahamed Mustafa (Dubai) [21 July 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20095

It comes as a shock for a Non-muslim councillor to throw arrows against our religious principles & the other members did not even erupt against him. The Chairman even should have opposed this in the First place. Time now to shed our internal hatreds & to see that Sugu apologizes for this act. If not this has to be taken out to the streets. It is too sad & shame that someone can say anything against us just because he sees there is no unity amongst us. Or does he have any backing??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [21 July 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20101

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆகா .... என்ன ..அருமையான நம் நகர் மன்ற கூட்டம்... எப்படி சார் புகழ்வது என்றே தெரிவது இல்லை.

NO. 1.... மரியாதைகுரிய 9 வது.வார்டு உறுப்பினர் A .ஹைரியா அவர்களின் அறிக்கையில்.நம் நகர் மன்ற ஒற்றுமையாக செயல் பட வேண்டியதன் அவசியத்தையும் & தலைவி + உறுப்பினர் உறவு பற்றியும் குறிபிட்டது .பாராட்டு குரியது தான். இவர் குறிப்பிட்டு பேசியும் கூடவா ? நம் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை இல்லாமல் வெளிநடப்பு செய்தார்கள்? நம் ஊர் நகர் மன்றம் இனிமேல் நல்ல முன்னேற்ற பாதையில் செல்வது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ஒற்றுமைக்கா நாம் இந்த சிறப்பான ரமலான் மாததில் ( நம் ஊரின் நலனுக்கா ) மனம் உருகி துவா கேட்போமாக.

NO.2... 12 வது வார்டு உறுப்பினர் MR சுகு நம் ஊர் இஸ்லாமிய பெண்களின் கோஷா பற்றி பேச இவருக்கு என்ன அருகதை உள்ளது.நம் மற்ற உறுப்பினர்கள் ஏன் ஒன்றும் மறுப்பு சொல்லாமல் அமைதி காத்தார்கள்? தலைவியை பற்றி குறை கூறினால் மற்றும் இவர்கள் உடனே ஓன்று சேர்ந்து வெளி நடப்பு செய்து விடுவார்கள். அந்த ஒற்றுமை ஏன் இந்த நம் பெண்களின் கோஷா விசியதில் இவர்களிடம் இல்லாமல் போனது ????வர்த்ததுக்குரியது தான் .

NO.3.... நகர் மன்ற தலைவி அவர்கள் சொன்னது போன்று மன்றம் நடக்கும் சமயம் வீடியோ பதிவு கண்டிப்பாக தேவை தான்.

NO 4 ...நகர் மன்ற தலைவி சொல்லாததை எல்லாம் சொன்னதாக நம் நகர் மன்ற உறுப்பினர்களே மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தது தவறுதானே ....இப்படி பட்ட நம் உறுப்பினர்கள் இருக்கும் வரை எப்படி நம் ஊர் முன்னுக்கு செல்லும் & நம் தலைவியால் எப்படி தான் நகர் மன்றத்தை வழி நடத்தி செல்ல முடியும் ( செல்வார்கள் ...) நம் ஊருக்கு நல்லது செய்ய இவர்கள் வழி விட மாட்டார்கள் போல்தான் தெரிகிறது. சரி ஹைர் என்னதான் நடக்கிறது என்று பொருத்து இருந்து நாம் பார்போம்.....

NO.5....மீடியாவை கண்டிப்பாக நம் நகர் மன்றம் நடக்கூடிய சமயதில் உள்ளே அனுமதித்தே ஆகனும்.நம் இந்திய பாராளு மன்றத்திலேயும் & நம் தமிழக சட்ட சபையிலேயும் கூடத்தான் சபை நடக்கும் போது எல்லாம் மீடியாவை உள்ளே அனுமதித்து .... நேரடி ஒலிபரப்பு செய்து நம் இந்திய குடி மக்களுக்கு தெரிய படுத்துகிறார்கள். அப்படி இருக்கும் போது ...இவர்களுக்கு மட்டும் என்னவாம் ?? மீடியா உள்ளே வந்தால் ஒரு சிலரின் உள் நோக்கம் பொது மக்களாகிய நமக்கு இந்த மீடியா மூலமாக வெட்ட வெளிச்சம்மாகி விடும் என்கிற பயமோ .... என்னவோ ....

NO.6... ஆமா நம் உறுபினர்களில் ஒரு சிலர் ஏன்? மீடியா மீது கடும் கோபமாக உள்ளார்கள்.தலைவி சொன்னது போல் நகர் மன்றதில் மீடியாவை பற்றி அதிகமாக வாதிட தேவை இல்லை தான். அந்த நேரதில் நம் ஊர் மக்களுக்கு தேவையான விசியத்தை பேசி நல்ல திட்டத்தை.இந்த கூட்டதில் நிறைவேற்றலாம்.அல்லவா .

NO.7... நம் மரியாதைகுரிய உறுப்பினர் ஜனாப் .M .ஜகாகிர் அவர்கள் எந்த ஒரு மீடியாவையும் ஒரு தலை பட்சமாக பேசுவது கொஞ்சமும் சரி இல்லை தான். அருமை சகோதரர் அவர்களும் ஒரு மீடியாவை நடத்தி வருபவர் தானே.

மேடம் சொன்னது போல் .பொது வாழ்வு என்றால் சகிப்பு தன்மை தேவை தான் .

எங்களின் பழைய நண்பர் .பாலப்பா.ஜலாலி அவர்களின் மனுவின் கோரிக்கை சரி தானோ . என்னவோ ....

சரி ஹையர்.... எது எப்படியோ ....உங்களை முழுமையாக நம்பி உள்ள நம் ஊர் பொது மக்களுக்கு தயவு செய்து நல்லது செய்ய வேண்டியது..... செய்வீர்கள் என்றே நாங்கள் முழு நம்பிக்கையுடன் காத்து உள்ளோம்.

வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [22 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20105

நகராட்சியில் வீடியோ வரகூடாது என்று வாதிடுவது உங்கள் உரிமை,அந்த வாதத்தில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மார்க்கத்தின் கலாசார கோட்பாட்டை குத்திகாட்டுவதுபோல் கோடிட்டு காட்டிய அந்த உறுப்பினரின் உள் நோக்கத்தின் சாயல் சிறிது வெளுக்க ஆரம்பிக்கிறது,

அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
அபூபக்கர் கலவா தலைமையுள்ள சௌதி யான்போ நகரத்திலுள்ள காயல் ஹௌசில் வாழும் அணைத்து காயல் சகோதரர்கள்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by salai s nawas (singapore) [22 July 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 20107

வீடியோ பதிவு அவசியமோ இல்லையோ என்று தெரியாது, ஆனால் மீடியா வருகை மிக முக்கியம். எப்படி உங்களுக்கு 600 ரூபாய் வாங்கிகொண்டு வெளிநடப்பு செய்ய சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதை விட பலபடி சுதந்திரம் மீடியாகளுக்கு இருக்கிறது.

அப்போ மீடியாவை கையில் வைத்துகொண்டிருக்கும் உறுப்பினர் கூட்டத்திற்கு வரலாமா வேண்டாமா?

உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யுங்கள். தயவு செய்து ஊர் நன்மைக்கு பெரும் இடைஞ்சலாக இருக்காதீர்கள்.

-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [22 July 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 20109

தேவை அற்ற இடத்தில் தேவை அற்ற பேச்சு அதுவும் உங்க கவுன்சிலர்களுக்கு மீடியா வேணாம்நு சொல்ல.

கோஷா குறித்த கருத்தைத் தெரிவித்த உறுப்பினர் மன்னிப்பு கேக்கணும் ...இல்லைனா ஊர் நல அமைப்புகள் சேர்ந்து கேக்க வைக்கணும்..

உங்கள நம்பி ஒட்டு போட்டு உக்கார வச்ச மக்களுக்கு நீங்க செய்ற நல்ல முயற்சிகள் நல்ல செயல்கள் வெளிய தெரிய கூடாதுனு நேனைக்றீங்க எவ்ளோ தன்னடக்கம்..

இப்படி வீடியோ எடுக்காத போட்டோ எடுக்கதனு சண்டை போட்டு ஸ்கூல் பசங்க classku கட் அடிச்சிட்டு போன மாதிரி ஓடி ஓடி போனா உங்களுக்கெல்லாம் எப்ப ஊரை பத்தி நியாபகம் வரும்!

நீங்கள் மக்களுக்காக தான் இந்த பதவியில் வந்தீர்களேன்றால். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் நீங்கள் மக்களுக்கு தேவை இல்லை. ராஜினாமா செய்யுங்கள். இல்லை வேற நோக்கதிற்காக வந்தோம் என்றால் தொடருங்கள்.

மக்கள் தீர்ப்பு வெகு விரைவில் கிடைக்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஆடு நனைகிறதே என்று ....
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 July 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20110

நகராட்சி கூட்டத்திற்கு மீடியா வரலாமா இல்லையா என்ற விவாதத்தில் பேசும் போது, அதை பற்றி மட்டும் பேசாமல் காயல் கலாசாரத்தை பற்றி பேச உறுப்பினர் சுகு விற்கு என்ன தகுதி இருக்கிறது? ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிட்டது போல் இருக்கிறது.

இதையும் விட சென்னையில் முஸ்லீம் பெண்கள் கோஷா இல்லாமல் போகிறார்கள் அதை போல் இங்கேயும் போவார்களா என்று தேவையில்லாமல் முழங்காலுக்கும் முட்டிக்கும் முடிச்சு போடுகிறார். இவருடைய இந்த கருத்துக்கள் எல்லாம் இவரின் உள் மனதில் பதிந்திருந்த விஷத்தின் வெளிப்பாடுகள் தானே ஒழிய, அவர் இதற்க்கு என்ன சால்ஜாப்பு சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

இதையும் பார்த்துகொண்டு நம் சகோதர சகோதரிகளும் தங்களைத்தான் சாடுகிறார் இவர் என்று ஊர்ஜிதம் செய்யும் அளவிற்கு திராணி அற்று அவரோடு கை கோர்த்து வெளி நடப்பு செய்கிறீர்கள். உருப்படும் ஊர்.

கவுன்சில்லர்களே, நீங்கள் நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு அறவே போய் விட்டாலும், தயவுசெய்து வருங்கால சந்ததியினர் உங்களை காரி துப்பும் படி நகராட்சி யின் கூட்ட பதிவேட்டில் இது மாதிரி விஷயங்களை பதிவு செய்யாதீர்கள்.

இப்படி பேசியதற்காக உறுப்பினர் சுகு மன்றத்தில் பொது மன்னிப்பு கோர வேண்டும்.

தலைவி அவர்களே, உங்களுக்கு இதை நாங்கள் பொது மக்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Sithan Niyaz - Pfizer Inc (Riyadh) [22 July 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 20111

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கோஷா அணியும் காயல் பெண்களையும், நம் காலாசாரத்தையும், விமர்சித்த அவர் பகீரங்கமாக மன்னிப்பு கேட்க பட வைக்க வேண்டும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்த கேட்டு கொண்டு இருந்த தலைவர் உள்ளபட மற்ற உருப்பினர்களும் மன்னிப்பு கேட்டகப்பட வேண்டியவர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ரெங்கநாதன் என்ற சுகு - கண்டிக்கிறோம்
posted by Magdoom (Jeddah) [22 July 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20120

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு காலாசாரத்தையும், கோஷா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் என்ன. வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [22 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20121

அரசியல் விழிப்புணர்வு பெருகிவிட்ட இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் "மீடியாவை உள்ளே விடாதே.."என்கிற கோஷம் நமது காதுகளில் நாராசமாய் ஒலிக்கிறது. இது ஏற்புடையது அல்ல. தலைவி அவர்கள் கூட மீடியாக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்தான். சட்டமன்றம், பாராளுமன்றம்.முதற்கொண்டு ஐ ,நா. அவை முதல் மீடியா அனுமதிக்கப்படுகிறது. இங்கு மட்டும் ஏன் தடை?

உறுப்பினர் சுகுவின் பேச்சு அடாவடியானது. எந்த அவையில் இருந்து எதை பேசுகிறோம் எனபது கூட அவருக்கு தெரியவில்லை.

வெளிநடப்பு எனபது ஜனநாயகம் தரும் அனுமதிதான், மறுக்கவில்லை. ஆனால் எல்லா கூட்டங்களிலும் அதை முறைகேடாக பயன்படுத்துவது தவறு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.. —
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [22 July 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20124

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.. —

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உவமை, விஷம் தோய்ந்த வார்த்தைகளாகவே உள்ளது. வேறு பல உதாரணங்கள் இருக்கும் போது ஊர் காலாசாரத்தையும், கோஷா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

12 வார்டு உறுப்பினர் பேச்சு மிகவும் கண்டனத்திற்குறியது. மீடியா வேண்டாம் என்றால் நேரடியாக கூற வேண்டியது தானே..... அது என்ன கலாசார சாயல் பூசுவது? "ஆடு நனைகிறதே என்று .........அழுத கதையாக உள்ளது?"

12 வது வார்டு உறுப்பினர் சுகு, இது பேச்சிக்கு வந்த வார்த்தை அல்ல! உமது அடிமனதில் உள்ள விசத்தை கக்கி இருக்கின்றீர்! இவ்வாறு பேசும்போது தலைவியோ, மற்ற உறுப்பினர்களோ மவுனம் காத்தது ஏன்? ஒருவன் நம் வாழ் உரிமையில் கைவைத்துள்ளார் அதை கண்டிக்காமல் விட்டு விட்டு அவரோடு கை கோர்த்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே வெட்கமாக இல்லை?வெட்கமாக இல்லை? வெட்கமாக இல்லை?

கலாச்சாரம், கத்திரிக்காய் என்ற பெயரில் நகராட்சியில் விஷம் கக்குவதை உடனே 12 ம் வார்டு உறுப்பினர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

என்னா? பயமா?..... அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்காக இருக்க வேண்டுமே தவிர அர்ப்பர்களுக்கு அல்ல!

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி, கேரளா.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by cader (JAIPUR) [22 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20125

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கோஷா அணியும் காயல் பெண்களையும், நம் காலாசாரத்தையும், விமர்சித்த அவர் பகீரங்கமாக மன்னிப்பு கேட்க பட வைக்க வேண்டும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்த கேட்டு கொண்டு இருந்த தலைவர் உள்ளபட மற்ற உருப்பினர்களும் மன்னிப்பு கேட்டகப்பட வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re: மீடியா வருகை, வீடியோ பதிவு ஆகியவற்றை எதிர்த்து...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 July 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20132

அஸ்ஸலாமு அழைக்கும்.

இஸ்லாமியர்களின் அடிப்படை மதவிசியத்தை மக்கள் மன்றத்தில் மானக்கேடாக பேசி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் கேடுவிளைவித்து காயலின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தூண்டும் வகையில் பேசிய சுகுவை மிக மிக வன்மையாக கண்டிப்பதுடன் காயலின் அனைத்து பொதுநல மன்றங்களும் இவருடைய உள்நோக்கத்துடன் கூடிய சட்ட ஒழுங்கை சீர்கொளைக்ககூடிய செயலை இந்திய அரசிய சட்ட அமைப்புப்படி மாவட்ட மாநில நிர்வாகத்திற்கு மேற்கோள் காட்டி உடனே பதவி நீக்கம் செய்ய பாலப்ப ஜலாலி போன்ற சமுக ஆர்வலர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தன்னுடன் கூடிய நமது இஸ்லாமிய சகோதரிகளையும் காயல் கலாச்சாரத்தையும் பேசி சீன்டிபார்க்கும் செயலை சிறிது கூட கண்டிக்காமல் பொறுமை என்பது எந்த விசியத்தில் அவசியம் தேவையில்லை என்பது கூட உணராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலுதுபோர்க்கும் தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களும் வன்மையாக கண்டனத்திற்குரியவர்கள்!

நீங்கள் ஊருக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாஇல்லை ஆனால் உபத்தரமாக மானக்கேடான செயல்களுக்கு துணைநின்று நமது முன்னோர் கட்டிகாத்த பாரம்பரியத்தை காற்றில் பரக்கவிடாதீர்கள்.

R.T.I. யின் NOTICEக்கு மட்டும் அறிவுபூர்வமாக தனது நிர்வாக அலுவலரை பாதுகாக்க சட்டங்களை மேற்கோள் காட்டி காப்பாற்றும் இந்த கமிசனர் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மனம் புண்படும் முகமாக இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை அரசிய சட்டத்திற்கு எதிராக காயலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தூண்டும் முகமாக பேசும் சுகு என்ற உறுப்பினரை அதே நகரமன்ற கூட்டத்திலேயே சட்டத்தை மேற்கோள் காட்டி பதவி நீக்கம் செய்ய மற்றும் அதன் நடவடிக்கை மினிட் புக்கில் பதிந்து மாவட்ட ஆட்சியருக்கு இவரை பதவி நீக்கம் செய்ய ஏன் பரிந்துரைக்கவில்லை இந்த கமிசனர்.

நீதி நேர்மையானவர்கள் சிறிதும் மீடியாவிற்கும் கேமேராவிர்க்கும் பயப்படமாட்டான்! மீடியா வேண்டாம் என்றால் தாங்கள் பதவி பிரமாணம் மற்றும் வாக்குறுதிகளின் படி பிறகு அது எப்படி வெளிபடியான நிர்வாகம் மற்றும் ஆட்சியாகும்.

மீடியாவை நடத்தும் அல்லது பணிபுரியும் ஜகாங்கீர் அவர்களே வெளியே நின்று கேளுங்கள் உள்ளே வரவேண்டாம் என்றால் அவரும் வெளியே நின்று தான் கேட்கவேண்டும். மக்கள் மன்றத்தின் உறுப்பினர் என்ற அந்தஸ்த்தை இழக்கவேண்டும். அவரின் பதிலும் வெளிநடப்பும் மிகவும் வியப்புக்குரியது.

இவன்
காயல் கலாச்சார நல விரும்பி,
முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. நீ கேக்கவேண்டியதை அவர் கேட்டு இருக்கிறார்.......
posted by s.s.md meerasahib. (riyadh) [23 July 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20136

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே...... நாம் கேக்கவேண்டியதை அவர் கேட்டு இருக்கிறார்....... வெக்கம் இல்லாமல் மாற்றுமத சகோதரரை ஊரை பிரித்தாளும் சக்தி பிரித்தாளுகிறது.....

பக்குவமா பறித்த பழம் தானாக பழுக்கும் ஆனால்...... பாதியில் விழுந்த பழத்தை கல்லு (கெமிக்கல்) வைத்துதானே...... பழுக்க வைக்கமுடியும்.? அதான் நம்முடைய மாற்றுமத சகோதரர் சுட்டிக்காட்டுகிறார். தலைவி காயலில் மாற்றத்தை உண்டுபண்ணுவதில் ஒத்தக்காலில் நிற்ப்பதை...... கலாச்சாரத்திலுமா மாற்றம் காணவிரும்புகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டிய மாற்றுமத சகோதரருக்கு இவர்கள் வைத்த பெயர் விஷம் கக்கி..... (விஷமி)

ஏன்....... முஸ்லிம் அல்லாதவர் உங்களை ஒன்றும் சொல்லக்கூடாது....... யார் சொல்கிறார் என்பதை பார்க்காதே........... என்ன சொல்கிறார் என்பதை பார். அவரின் உள்ளத்தை அளவிட உனக்கு அதிகாரம் இல்லை அது படைத்த அந்த ஒருவனுக்கே.... சொந்தம்.

மாற்றுமத சகோதரர்களின் புறநகர் ஓட்டு உங்களுக்கு தேவைப்பட்டது. கையையும், காலையும் பிடித்தீர்கள். ஆனால் உங்களை ஒன்னும் கேட்டுவிட்டால் அவர் விஷமி. "ஜனநாயகம் பேசக் கூடியவர்களும், நீதிமான்களும் இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:மீடியா வருகை, வீடியோ பதிவ...
posted by Fuad (Singapore) [23 July 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 20138

அஸ்ஸலாமு அலைக்கும். நமது காயல்பட்டினம் நகர் மன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தப் படக்கூடிய நிலையில் உள்ளது. உறுப்பினர் சுகு கோஷா பற்றி பேசும்போது மற்ற உறுப்பினர்கள் எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது துரதிஷ்டம். இப்படியே போனால் வருங்காலங்களில் எதுவும் பேசலாம் என்ற தைரியம் வந்துவிடும். உறுப்பினர் சுகுவிற்கு இந்த அளவுக்கு பேச தைரியம் கொடுத்தது யார்?

கண்ணியமிக்க நகர் மன்ற உறுப்பினர்களே, அடுத்த கூட்டத்தில் சுகு பேசியது தவறு என்பதை உணர்த்துங்கள்.

மீடியா நகர் மன்றத்திற்குள் வந்ததால்தானே இந்த செய்தி மக்களுக்கு தெரிய வந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. பர்தாவை காயலின் தனி கலாச்சாரம் என பேசும்..........
posted by SK Shameemul Islam (Chennai) [23 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20141

மீடியா என்பது நம் நாட்டின் அரசியல் சாசன அஸ்திவாரத்தின் 4 தூண்களில் ஒன்று. காற்று, நீர் புகாத இடங்களில் கூட மீடியா ஊடுருவிச் செல்லும். முழு அரசியல் பாதுகாப்பும் அங்கீகாரமும் மீடியாக்களுக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இருக்கும் மதிப்பு அளவு மீடியாவுக்கும் மதிப்புண்டு.

அரசியல் சாசனம் தெரியாதவர்கள் அரசியல் செய்வது ஒரு ஜனநாயக கேலிக்கூத்து.

பாவம், கொஞ்சம் நஞ்சம் அறிவுள்ளதாக எண்ணியிருந்த மக்களின் உள்ளத்தில் ஏமாற்றத்தை விதைத்து நம் பெருவாரியான கவுன்சிலர்கள் மீடியாவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளார்கள். இதில் இன்னொரு கேலிக்கூத்து திருவாளர் சுகு அவர்கள் சொன்னது.

பர்தாவை காயலின் தனி கலாச்சாரம் என பேசும் அளவு அதைக்காத்து வருபவரா நீங்கள். முஸ்லிம் பெண்களின் மேல் திடீரென இவ்வளவு அக்கறைகொள்ள காரணம் என்ன.

சென்னையில் கோடானு கோடிப் பெண்கள் வசித்துக்கொண்டிருக்க பர்தா அணியாத காயல் முஸ்லிம்களைப் பார்க்க தேடி அழைந்தார் போலும். எங்கள் குடும்பங்களும் சென்னையில் தான் வசிக்கிறது ஐய்யா. நீங்கள் சொல்வது போல அப்படி ஒன்றும் பர்தா அணியாமல் இங்கு யாரும் வெளியில் செல்வது இல்லை.

அது சரி ஒரு நல்ல கலாச்சாரமாக இதை நீர் ஏற்றுக்கொண்டால் முஸ்லிம் அல்லாத பிற பெண்களிடமும் அதைக்கொண்டு வர முயற்சி செய்யுங்களேன். நீங்கள் ஓநாய் அல்ல என்பதை மக்கள் அதன்மூலம் விளங்கிக்கொள்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. யா அல்லாஹ் எங்கள் ஊரை காப்பாற்றுவாயாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [23 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20142

தலைவி அவர்கள் நகராட்சியில் ஒன்று சொல்கிறார்,வெளியில் ஒன்று சொல்கிறார் முன்னுக்குப்பின் முரணான தகவல் தந்து, தான்குற்றமற்றவர் போல் நடிக்கிறார் என்பது போன்ற குற்றசாட்டு, ஒரு இணயதளத்தில் சுகுவின் உரை சுகமாக இருக்கிறது,மற்றுமொரு இணயதளத்தில் சுகுவின் பேச்சு,நம்மையெல்லாம் புடவை உடுத்தி கொள்ளச்செய்யும் பேடிகளை பார்த்து பேசும் பேச்சுபோல் பதிவாகியுள்ளது.

எது உண்மை? வீடியோ கிளிப்பை வெட்டையில்தூக்கி போட்டால் வாய் திறக்க வழியில்லாமல் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

இந்த வெளிச்சத்தை கண்டு ஏன் வெரண்டு ஓடுகிறார்கள், மடியில் கனமற்றோர் முன்னுக்கு வரவேண்டியதுதானே,ஏன் வீண் முரண்டு பிடிக்க வேண்டும்.முழுசாயமும் கரைந்து முச்சந்திக்கு வந்து விடுவோமோ என்ற வெடவெடப்போ ?

சரி,சிலரின் வாதப்படி வீடியோ கிளிப்பை அனுமதிக்காவிட்டால் இப்போதுள்ள மொபைலில் (அலைபேசியில்) பலமணி நேரம் ஓடும் வீடியோ வசதி உண்டல்லவோ,அதை எந்த ஒரு உறுப்பினரோ கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? சரி,மொபைல் அனைத்தையும் தடை செய்து விடலாம்,பேனாவில் கூட வீடியோ வருகிறதே, சரி பேனாவையும் தடை செய்யலாம்,சட்டை பட்டனில் கூட வீடியோ வசதி வந்து விட்டதே,சரி சட்டையையும் கழற்ற சொல்லலாம், பெல்டில் கூட வீடியோ வசதி வந்து விட்ட செயதியையும் நம்மில் பலரும் அறிந்ததே,சரி பெல்டையும் கழற்ற சொல்லலாம்,....அய்யோ, ஐயையோ அது முடியாது பெல்டில்லாமல் என் வேஷ்டி நிற்காது,சரி வேஷ்டியையும்...........என்ன அன்பு வாசகர்களே அடுத்து வரிகளுக்காக வாய் பிளந்து நிற்கிறீர்களா?வெட்ககேடுங்க?

ஒரு நீதியான ,நேர்மையான,நன்மைதரக்கூடியநகராட்சி வேண்டும் என்று தேர்தல் காலத்தில் களைப்பையும், கண்ணுரக்கதையும் பாராமல் களப்பணியாற்றியத்தின் பலன் இதுதானா? நகராட்சியை நரக ஆட்சியாக ஆக்க துடிப்பவர்களின் துள்ளலகளைஎல்லாம் தனியோனாம் இறையோன் பார்த்து கொண்டுதான் இருக்கிறான். யா அல்லாஹ் இந்த எமகாத பாதகர்களிடமிருந்து எங்கள் ஊரை காப்பாற்றுவாயாக! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு வை வன்மையாக கண்டிக்கிறேன்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [23 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20146

நகராட்சி கூட்டத்தில் மீடியாவின் மேல் உள்ள அதிர்ப்தியை இசுலாமிய பெண்களின் பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு பர்தா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது வஞ்சக எண்ணம் வார்த்தை வடிவில் சீண்டியுள்ளது. பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு வை வன்மையாக கண்டிக்கிறேன்...

மீடியா ஒழிந்தால் தான் நகராட்சி கூட்டத்துக்கு வருவேன் என்று கடந்த கூட்டத்தில் சொல்லி வெளிநடப்பு செய்த நீர் திரும்ப நகராட்சி கூட்டத்தில் மீடியா இருந்த போது ஏன் திரும்ப கூட்டத்திற்கு வந்தீர்...? மீடியாவை கண்டு நீர் ஒளிந்து போகலாம் ஆனால் மீடியா ஒழியாது... உங்களால் அல்ல வேறு எவனாலும் மீடியாவை ஒழிக்கவும் முடியாது...

அடுத்து வரும் கூட்டத்திலும் நகரட்சிகுள்ளே நடக்கும் நடப்புகளை உலக காயல் மக்களுக்கு செய்தியாக அறிவிக்க மீடியா உள்ளே இருக்கும் நீர் போகாதீர்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. சாமி-யின் சவால் மண்ணை கவ்வுமா ???
posted by Salai.Mohamed Mohideen (USA) [24 July 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20161

“நான் செய்தேன்” என்ற குற்றச்சாட்டில் உண்மையிருப்பின்... ஊடகத்தில் / மக்களிடத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய credibility போய் விட்டதே என்ற நியாயமான மனக்குமுறலை நகர்மன்றத்தலைவர் நிச்சயம் கவனத்தில் கொண்டு அவர்களையும் சேர்த்தே குறிப்பிடவேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைமைக்கு அழகு!!

12ஆவது வார்டு உறுப்பினரின் பேச்சு, பலருக்கு கடந்த கால ஊர் கலவரத்தை ஞாபகபடுத்தி விட்டது என்பது ஒருபுறமிருந்தாலும் அவர் நமதூர் மக்களின் - கலாச்சாரத்தின் மேல் உள்ள அக்கறையை எண்ணும் போது, இங்கே அடிக்கும் 104 பாரன்ஹீட் வெப்பத்திலும் 16 மணிநேர நோன்பு களைப்பிலும் கூட மெய்சிலிர்க்கத்தான் செய்கின்றது. வாழ்த்துக்கள் !!

நம்மிடையே ஒற்றுமையில்லை & பிறர் தரும் மன-தையிரத்தில், எவ்வித சலனமுமின்றி ஓடும் நீரோடையில் இது போன்று கல்லை எறிந்து பார்ப்பது ஒரு சிலரின் வழக்கம். இதில் பிறரை குறை கூறுவதை விட, நம்மை & நம்முடைய ஒற்றுமையை முதலில் சரி செய்ய வேண்டும்.

விடியோ - ஊர் / மத கலாச்சாரத்தை கூறி முந்தைய மீட்டிங்கை வெளிநடப்பு செய்து கொந்தளித்தவர்களுக்கு, இந்த 'கோசா' உதாரணம் மட்டும் காதில் 'தேனாக' பாய்ந்ததோ என்னவோ?

அவர் அப்படி பேசவில்லை & இவ்விணையதளம் தான் திரித்து கூறிவிட்டது என்ற புரளியை (?) மீடியா உறுப்பினர்களே கிளப்புவதை விட, அதனை ஆதாரத்துடன் வெளிக்கொனருங்கள். மீடியாவை - வீடியோ நேரடி ஒளிபரப்புக்கு உள்ளே அனுமதித்தால் 'மக்கள்'முடிவு செய்து விடுவார்கள். எவரும் background இல் 'ஸ்கிரிப்ட்' எழுத தேவையே இல்லை. parallel நகராட்சி (?) கூட்டணி ஒற்றுமைக்காக இவரை பாதுகாக்கும் சகாக்கள் இருக்கும் வரை, இது வெறும் சாம்பிள் தான்!!

எல்லா ஊடகத்தினரும் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்திருந்தால், குறிப்பிட்ட ஊடகங்கள் மேல் உள்ள காண்டில் (அதாவது அவர்கள் நகர்மன்ற செயல்பாட்டை நோண்டி நொங்கு எடுப்பதினால்) ஒட்டு மொத்த ஊடகத்தினரையும் உள்ளே வரக்கூடாது என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். ஒரு வேளை, முதல் கமன்ட்டில் குறிப்பிட்டுள்ள 'தொழில் வளர்ச்சிக்கு இடையூர் என்று மறைமுகமாக மீடியாவை சாடுகிறார்' என்பது உண்மையாக இருக்குமானால், ஆரோக்கியமான போட்டிக்கு தயாராவது அல்லது கடையை இழுத்து சாத்துவது. இதில் ஒன்று தான் தீர்வு!!

ஒவ்வொரு கூட்ட இறுதியிலும், தானும் வெளிநடப்பு செய்வதாகக் செய்தி போட சொல்லும் காமடி சீன்கள் நகர்மன்ற செய்தியை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு இலவச என்டர்டைன்மென்ட்.

"ஒருதலைப்பட்சமாக எழுதுவதாகவும், தலைவி...." என்று கூறும் அதே நேரத்தில், தலைவியை ஒரு தலை பட்சமாக ஒரேயடியாக குறைகூறுவதும், கருவறுப்பதும் கூட ஊடகத்தின் ஒரு தலைபட்சம் அல்லவா?

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. கண்கொத்தி பாம்பாக இருக்கும் மீடியாவை கண்டு இவர்கள் மிரண்டு ஓட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் எத்தனை காலம் இவர்கள் இப்படி ஓடப்போகிறார்கள் அல்லது நகர்மன்றத்தை விட்டு ஒட்டி-விடப்படுகின்றார்கள் என்பதற்க்கு காலமே பதில் சொல்லும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [24 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20162

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற கூட்டம் நடந்ததே! அதிலே என்ன தீர்மானம் எடுத்தார்கள்?

நம்ம பகுதியிலே தண்ணீர் ..... தட்டுப்பாடு இல்லாமல் வருமா .............. ?,

தெரு லைட் இரண்டு நாளைக்கு ஒருமுறை எரியாமல் போகுதே..... அதை பற்றி நம்ம வார்டு உறுப்பினர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா ...........?

குப்பைகளை தினமும் அல்லாமல் தேங்கி கிடக்குதே.... அதற்கு என்ன தீர்வாச்சு .........?

என்று அவரவர் பகுதியில் உள்ள குறைகளுக்கு நகர்மன்ற நடவடிக்கைகள் என்ன என்பதை ஒவ்வொரு மக்களும் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர்.....

ஊர் மக்கள் அவர்களை ஏதோ, காமடி பண்ண தேர்ந்தெடுத்து நகர் மன்றத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக எண்ணி காமடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநடப்பு செய்வது என்பது நமது உரிமை - சட்டம் நமக்கு கொடுத்திற்கும் சுதந்திரம்.

அந்த சுதந்திரத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு அதை அந்த வரைமுறைக்குள் வைத்துக்கொண்டால்தான் அது உண்மையான சுதந்திரமாகும்.

இதை உணர்ந்து நடப்பவர்கள் பண்பாளர்கள்! - உணராதவர்கள் பண்பற்றவர்களே !!

-------------------------------------------

உங்கள் மீது சாபமிடுவார்கள் :

சென்ற மாதம் 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் காரணமாக கூட்டம் நடைபெறாமல் போயிற்று.

இந்த மாதம் கூட்டம் ஆரம்பித்து விவாதங்கள் தொடங்கியும் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் காரணமாக எந்த பயனுமின்றி கூட்டம் முழுமைப்பெறாமல் போயிற்று.

ஒவ்வொரு மாதமும் இப்படி வெளிநடப்பு செய்வதால் ஆகப்போகிறது ஒன்றுமில்லை.

வீம்பு செய்து காலத்தை வீணாக்காமல் - விவேகத்தோடு விவாதம் செய்தால் எத்தனையோ விசயங்களை சாதிக்கலாம்.

இந்த மாத கூட்ட ஆரம்பத்தில் விவாதங்கள் நன்றாகவே நடந்துள்ளது தலைவரின் மீது குறைகளை சொல்ல அவர் மறுமொழிக் கொடுக்க இப்படியாக கூட்டங்களை நடத்தி கூட்டத்தை முழுமை பெறச்செய்தால் , எல்லா விசயங்களுக்கும் தீர்வு காண முடியும்.

அதல்லாமல் வெளிநடப்பு என்ற பெயரில் எல்லோரும் வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தால் எந்த தீர்வும் கிடைக்காது - இன்று ஊர் மக்களும் , நாளை நீங்கள் பெற்றெடுத்த உங்களுடைய மக்களும் உங்கள் மீது சாபமிடுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

--------------------------------------------

உத்தமர்களாக இருப்பீர்களானால் :

நகர்மன்றக் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்தல், அக்கூட்டங்களில் மீடியாவை அனுமதித்தல் போன்றவைகளை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

இது எந்த வகையில் நியாயமாகும்? காரணம் 30.12. 2011 அன்று நடந்த கூட்டத்தில் (கூட்டம் எண் 4 பொருள் எண் 24 தீர்மானம் 141 ) கூட்ட நடப்புகளை வீடியோ பதிவு செய்து அந்த குறுந்தகடுகளை உள்ளூர் தொலைக் காட்சிகளுக்கும், இணையத் தளங்களுக்கும், இதர ஊடகங்களுக்கும் தர தீர்மானம் நிறை வேற்றபட்டப்போது, இந்த உறுப்பினர்கள் ஏன் அதை எதிர்க்காமல் வாய் மூடி இருந்தார்கள் ?

மேலும் இன்று நகர்மன்ற கூட்டங்களுக்கு வீடியோ பதிவும் , மீடியாவை அனுமதிப்பதும் கூடாது என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - அதுவும் நமது நகர்மன்றம் இன்று செயல்படுகிற விதத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக மீடியாவை அனுமதித்தே ஆக வேண்டும்.

மீடியா ஒருதலை பட்சமாக செய்தியை வெளியிடுகிறார்கள் என்று காரணம் காட்டி மீடியாவே வேண்டாம் என்பது கேலிக்கூத்தாகும் .

நம் ஊரில் ஒரு மீடியா மட்டும்தான் இருக்கிறதா ? தலைவருக்கு அல்லது சில உறுப்பினர்களுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கு!?.

தலைவரோ, உறுப்பினர்களோ உத்தமர்களாக இருப்பீர்களானால் நிச்சயமாக மீடியா நகராட்சி கூட்டத்திற்கு வருவதை தடுக்க மாட்டீர்கள்.

-----------------------------------------------

தடுக்க வேண்டாம் :

ஒரு விசயம் மட்டும் நன்றாக விளங்குகிறது - அதாவது இந்த மீடியா நகர்மன்ற கூட்டத்திற்கு தடை இல்லாமல் நேரிடையாக வந்து செய்தியை சேகரிப்பதால்தான் முழுச்செய்தியையும் வெளியிடாமல் சிலவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி வெளியிடுகிறார்கள்.

அதற்கு காரணம் பல இருக்கலாம் ஊரின் கலாச்சாரம், தலைவர் , உறுப்பினர் பாசம் , அதிகாரி, அலுவலர் நேசம் என்று பலதும் அடங்கும் எனென்றால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்கு வரவேண்டுமே.

அதே நேரத்தில் மீடியாவிற்கு அனுமதி மறுக்கபட்டால் பாசம் நேசமெல்லாம் காற்றோடு பறந்துவிடும் - காரணம் நீங்கள் யாரோ , எவரோ என்று ஆகிவிடும்.

மீடியா கூட்டத்திற்கு வந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதால்தான் இன்டர்நெட் மூலமும், செய்திதாள்கள் மூலமும் நகரமன்ற செய்திகளை மக்கள் அறிய முடிகிறது - செய்திகள் வெளியே போகும் என்பதை உணர்வதாலயே உறுப்பினர்கள் அடக்கத்துடன் உரையாட முடிகிறது -மீடியாக்கள் கூட்டத்திற்கு வரவில்லையெனில் அந்த கூட்டம் எப்படி இருக்கும் என்பதை உறுப்பினர்களே சிந்தியுங்கள்.

மீடியாக்கள் தலையீடு இருப்பதாலேயே நகராட்சியின் செயல்பாடுகள் அதன் குறைபாடுகள் மற்றும் ஊழல்கள் வெளியே தெரிகிறது.

ஆகவே எக்காரணம் கொண்டும் மீடியாக்கள் நகர்மன்ற கூட்டத்திற்கு வருவதை யாரும் தடுக்க வேண்டாம்.

-------------------------------------------

இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக :

காயல்பட்டணத்திற்கு என்று தனி கலாச்சாரம் உண்டு அதனால் வீடியோ எடுப்பது நல்லது இல்லை என்று திரு.சுகு உண்மையாகவே நினைப்பாரானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் 141 ஆவது தீர்மானத்தை கொண்டுவரவிடாமல் தடுத்திருக்க வேண்டும்.

அந்த தீர்மானம் கொண்டு வரும்போது வீடியோ எடுப்பது என்பது காயல்பட்டண கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே? ஏன் அதை அவர் செய்யவில்லை, அன்று அந்த கூட்டத்தில் திரு. சுகு கலந்து கொள்ள வில்லையா?

எது எப்படியோ இந்த வீடியோ பதிவு விவாதத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்க , திரு.சுகு காயல்பட்டண கலாச்சாரத்தையும் , முஸ்லிம்களின் கோஷா முறையையும் அவைசியமில்லாமல் , வேண்டும் என்றே இழுத்திருப்பாரானால் நிச்சயமாக இறைவனின் கோபம் அவர்மீது உண்டாகட்டுமாக - அவருக்கு மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக இருக்கும் அனைவர்மீதும் இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக - அதை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்களாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. கவனம் அல்லாஹ் மன்னிக்கப்போவதில்லை
posted by உமர் ரிழ்வான் ஜமாலி (சிங்கப்பூர்) [25 July 2012]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 20178

பலகீனமான மனிதர்கள் பார்க்கப் பயன்படும் ஊடகங்களை வேண்டுமானால் உள் வராமல் தடுக்க வெளிநடப்பு செய்யலாம். அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விற்கு இந்த ஊடகங்களெல்லாம் தேவை இல்லை. அவன் அனைத்தையும் செயல்படுத்தும் முன்பே அறிந்தவன் என்பதை உண்மை விசுவாசிகளாக இருந்தால் தெரியும். நாளை மறுமையையும், இறை சந்திப்பையும் விரும்பினால் கொஞ்சம் ஜாக்கிரதையா நடங்க.

தவறு செய்பவர்களுக்கு!

இன்று யாருடைய கண்களுக்கு உங்கள் தவறுகள் தெரியக்கூடாது என்று நினைக்கிறீர்களோ! அதே நீங்கள், இந்த மக்களுக்கு துரோகம் செய்திருந்தால், நாளை மறுமையில் இந்த மக்கள் மன்னிக்காதவரை மன்னவன் அல்லாஹ் மன்னிக்கப்போவதில்லை என்பதை நினைவுபடுத்திப்பர்த்து செயல்படுங்கள்.

இணையற்ற இஸ்லாமிய கோட்பாடிற்கும், அதன் தூய கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்ய துடிப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம். அது துரிதமான தண்டனையை பெற்றுத்தரும். அது உங்கள் சந்ததிகளையும் வாட்டி வதைத்துவிடும். கவனம்.

அல்லாஹ் நம் யாவரையும் துரோகத்திலிருந்தும், துரோகிகளிடமிருந்தும் காப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved