Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:31 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8763
#KOTW8763
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 21, 2012
மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி 15ஆவது வார்டு பொதுமக்கள் நகர்மன்றத் தலைவரிடம் மனு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4644 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை, பலர் சட்டத்திற்குப் புறம்பாக மோட்டார் போட்டு உறிஞ்சி எடுப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காயல்பட்டினம் 15ஆவது வார்டுக்குட்பட்ட சீதக்காதி நகர் பொதுமக்கள், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) நண்பகல் 12.00 மணியளவில் மனு அளித்தனர்.



இதுகுறித்து நகர்மன்றத் தலைவரிடம் பேசிய அவர்கள், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், அது ஒரு தவறான செயல் என்பதே முழுமையாக மறக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



குடிநீர் வினியோக அலுவலர்களிடம் இதுகுறித்து முறையிட்டபோது, “உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இக்குற்றச்சாட்டு குறித்து நகர்மன்றத் தலைவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரிக்கையில், தாங்கள் அந்தப் பொருளில் அதைத் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட காரணத்தால், நேர்மையாக அடிபம்பு அடித்து தண்ணீர் எடுப்போருக்கு தற்காலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற இயலவில்லை என்றும், பெறப்படாத தண்ணீருக்கு அவர்கள் மாதந்தோறும் கட்டணம் கட்டி வருவதாகவும் சீதக்காதி நகர் பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.

மின் வினியோகம் இல்லாத நேரங்களில் தமது அடி பம்புகளில் தானாகவே தண்ணீர் வருவதாகவும், மின்சாரம் இருக்கும்போது வினியோகிக்கப்படும் தண்ணீரை அடித்து எடுக்க முனைந்தாலும் முடியவில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் ஆவன செய்யப்படும் என, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சீதக்காதி நகர் பொதுமக்களிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.



காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், நகராட்சி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மோட்டார் மூலம் குடிநீர் உ...
posted by SHAJAHAN (DAMMAM) [21 July 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20086

இந்த பிரச்சனைக்கு ஒரே முடிவு தண்ணீர் வரும் அன்று அரை மணி நேரமாவது மின்சாரம் கட் பண்ணனும் .பொது மக்களே மின்சாரம் இல்லை என்றால் தண்ணீர் வருகிறது என்று சொல்கிறார்கள். {குறிப்பு}தண்ணீர் வரும் நாளை தவிர்த்து மற்ற நாள்லில் காலை நேரத்தில் மின்சாரம் கட் ஆகுது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. திருடனாய் பார்த்து திருந்தவேண்டும்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Riyadh) [22 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20103

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது முன்னோர்களின் முத்தான பழமொழி.

மோட்டார் போடுபவர்களா பார்த்து திருந்தவேண்டும்,இல்லை என்றால் இந்த திருட்டுத்தனமாக,இரத்ததை உரிவதுபோல் அடுத்தவரின் தண்ணீரை உரியும் இந்த தரங்கெட்ட மனித மிருகங்களை திருத்தவே முடியாது.

ஒரு வழி மட்டும் தான் சாத்தியமாகும்,அந்த நேரத்தில் அந்த ஏரியாவில் மின்சாரத்தை நிறுத்தினால் மட்டுமே, இப்பிரச்சனைக்கு முடிவும் விடிவும் கிடைக்கும். நகராட்சி தலைவி அவர்கள் உடனடியாக இந்த நடவடிக்கையை மின்சார வாரியத்தின் மூலம் முயற்சித்து முடிவுகான்கிடவேண்டுகிறேன்! அல்லாஹ் அனைத்து ம் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மோட்டார் மூலம் குடிநீர் உ...
posted by Mohamed Ali (Kuwait) [22 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20108

என்ன கொடுமை

இதனை தடுக்க குடி நீர் விநீயோகம் செய்யும் போது மோட்டார் போடா முடியாமல் கரண்ட் கட் செய்வது தானே நமது நகராட்சியின் வழக்கம். அதை முழு மூச்சாக செயல் படுத்த வேண்டியது தான்.

அது போல மோட்டார் போட்டு நீர் எடுபவர்கள் தண்ணீர் லைன் கட் பண்ண படும் என்று தண்டோரா போட்டது போல லைன் கட் பண்ணுங்க அப்பதான் இதற்கு முடிவு கிடைக்கும்.

நகராட்சி இதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய பயப்படும் ஏன் யன்றால் இதை எல்லாம் செய்வது வசதி படைத்தவர்கள் தானே. அவர்களுக்கு எதிர எப்படி செய்ய முடியும்.

அல்லாஹ் காப்பாற்றுவானாக.

அலி குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மோட்டார் மூலம் குடிநீர் உ...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20116

ஒன்றை மற்றும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள், வழமையாக தினமும் காலை மூன்று அல்லது கூடுதல் நேரம் பவர் கட் இருக்கும். ஆனால், என்று தண்ணீர் திறந்து விடுகிறார்களோ அன்று பவர் கட் இருக்காது. ஆக புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு தவறை அனைவர்களும் ஒன்றாக செய்யும் போது அது தவறாக படவில்லை பார்த்தீர்களா..? இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்.

ஆமாம், எங்க வீட்டில் குடிநீர் மோட்டார் இருக்குதா என்று கேட்கின்றீர்களா?. இல்லைங்க..

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மோட்டார் மூலம் குடிநீர் உ...
posted by M.S.Kaja Mahlari (Singapore.) [22 July 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 20123

தண்ணீர் விநியோகம் செய்யும் நேரத்தில் மின்சாரம், துன்னிக்கப்பட்டால் ஒருவேளை இதற்கு ஒரு முடிவு ஏற்படலாம் என்பது இங்கு கருத்து சொல்பவர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. அதனை ஒருமுறை செயல் படுத்தி பார்த்தால் என்ன? பிறகு அதன் சாதக ,பாதக நிலைமையை விளங்கிக் கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Not a permenant solution
posted by Riyath (HongKong) [23 July 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 20127

Electricity power cut during water distribution is just a temporary solution. The permenant solution is no power cut, no more manual pumping for drinking water. We are in 20th century and still pumping drinking water. No improvement since 19th century. Atleast stop deteriorate.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மோட்டார் மூலம் குடிநீர் உ...
posted by buhari (chennai) [23 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20129

Moderator: இத்தளத்தில் புதிதாக கருத்துக்களை அனுப்புவோர், தம்மைப் பற்றிய (பெயர், வயது, உள்ளூர் முகவரி, தற்போதைய முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட) முழு சுய விபரத்தை admin@kayalpatnam.com என்ற முகவரிக்கனுப்பி, தங்கள் கருத்தை இத்தளத்தில் வெளியிட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நீங்கள் என்ன செய்தீர்கள்?...
posted by OMER ANAS (DOHA QATAR.) [23 July 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20135

கே.ஜமால் பாய் இந்த பெண்கள் எல்லாம் சொல்வது உண்மையா?
அப்படி என்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் பாய்?
ஒருவேளை இதற்க்கு மக்களிடம் வாக்கு கொடுக்கலையா நீங்கள்?

நான் கேள்விபட்டது உண்மையானால், நகராச்சியில் பதவி வகிக்கும் முக்கிய புள்ளிக்கு சொந்தக் காரங்க வீட்டிலேயே இருக்காம். அவுகளே இப்ப அதை தடுக்க முடியாம கையை பிசைகிராங்கலாம்.

அட ஒங்க வீட்டில் இல்லையா என்று கேட்க்காதீர்கள். அவனவனுக்கு லஞ்சம் கொடுத்து பத்தாயிரம் செலவு பண்ணி ,அதற்க்குப் பிறகும் வராத தண்ணிக்கு நாம ஏன் பில் கட்டணும்? அதனால பையிப் லைனே வாணாம் என்று எங்க ஊட்டம்மா சொல்லீட்டாங்கோ! அதனாலே அதே பத்தாயிரம் போட்டு ஃ பில்டர் வாட்டர் மூலம் உப்பு தண்ணிய நல்ல தண்ணியா உருஞ்சுகிறோம். மோட்டார் போட்டு. இதுவும் குற்றங்களா........?

இதனால பைப் உடைஞ்சு காண் தண்ணி உள்ள வரும் அடுத்த ஊட்டோட சண்டை வரும். அந்த மாதிரி ஒரு பிரச்சினையும் இன்றி நாங்க நிம்மதியா இருக்கோம்.

ஒரு வேண்டுகோள் மக்களுக்கு!

அடுத்தமுறை யாராவது நாங்கள் வெற்றிபெற்றால்,ஃ பில்டர் வாட்டர் வைத்துத் தருவோம் என்றால் கண்டிப்பா அவங்களுக்கே ஓட்டு போடுங்கள். இதனால உங்களுக்கும் நிம்மதி அவங்களுக்கும் நிம்மதி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved