Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:03:48 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8769
#KOTW8769
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 23, 2012
ஜூலை 19 நகர்மன்றக் கூட்டத்தில் 09ஆவது வார்டு உறுப்பினர் வாசித்த அறிக்கை விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் குறித்த செய்தியில், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அறிக்கை ஒன்றை வாசித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையை இணையதளத்தில் வெளியிடக் கோரி - 21.07.2012 அன்று இரவு அனுப்பித் தந்துள்ளார். அறிக்கை வாசகம் பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் 19.07.2012 வியாழன் மாலை 3:35 மணிக்கு ஆரம்பிக்க ஆயத்தமானது. நான் எனது கருத்தை நன்மையின் நிமித்தம் முற்கூட்டியே அவைக்கு எடுத்துரைத்தேன்.

நம்மனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

எனதன்பின் நகர்மன்றத் தலைவி, ஆணையர் மற்றும் சக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகேள்!

நாம் அனைவரும் பொறுப்பாளிகள், பொறுப்புக்களை பற்றி கேட்கப்படுவோம் என்பது இறைவனது வசனம் நம்முடையதல்ல ஆகவே தயைகூர்ந்து எக்காரணத்தை கொண்டும் பொறுப்பை தட்டிக்கழித்தல் கூடாது. வெளிநடப்புச் செய்வதால் நாம் எதிரானவர்கள் அல்ல, உள்ளிருப்புச் செய்வதால் நாம் ஆதரவானவர்களும் அல்ல. கருத்துகளை கூற, தவறினை தட்டிக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. நாமெல்லாம் இங்கு ஒன்று கூடி பணியாற்றவே மக்களால் பணிக்கப்பட்டுள்ளோம். எனவே தயைகூர்ந்து பணிவுடனே நாமனைவரும் ஒன்று கூடி மக்களின் பிரச்சனைகள் தீர வழியை பார்ப்பதே சிறந்தது. அவ்வாறின்றி 'நான்' என்ற நிலையால் 'நாம்' காணப்போவது எதுவும் இல்லை. வெளிநடப்பு செய்வதால் மட்டுமல்ல பணிபாதிப்பு, பிடிவாதமாக இருப்பதாலும் பிறரின் ஏன் நம்சக உறுப்பினர்களின் கருத்துக்களை செவி சாய்க்காமல் இருப்பதாலும் பணிகள் பாதிக்கப்படும் என்பதே என் கருத்து.

ஐந்தாவது உறுப்பினர் அவர்கள் கூறிய போல் ஏற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை உடனே சரி செய்வது நம் கடமை என்பதை மறந்து விடக்கூடாது. மினிட் புக்கில் என்ன உள்ளது என்பதை கவனிக்காத என்னை நான் பொறுப்பற்றவளாக கருதுகிறேன். ஆகவே உடன் மினிட்புக்கை நான் பார்வையிட விரும்புகிறேன்.

உறுப்பினர் ஜமால் அவர்கள் கூறியதுபோல் குடிநீர் இணைப்பு கொடுக்கும்போதும், பழுது பார்க்கும் பொழுதும் அந்த வார்டு உறுப்பினர்களுக்கு தெரிந்தால், தவறு நடப்பது தடுக்கப்படும் ஆதலால் ஆதரிக்கின்றேன்.

இதுவரை என்மூலம் ஒன்பதாவது வார்டு பகுதிக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி வளாக துப்புரவு கூட நடக்கவில்லை. எனது பகுதி மக்களின் ஒத்துழைப்பால் இன்று அவ்வேலையை நாங்கள் செய்கிறோம். எனது அப்பாபள்ளித் தெரு சாலை எப்போது போடப்படுமோ? என்ற வேதனை நிலை.

மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து வரும் சிக்கலாம் 14 வது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா அவர்களிடம் நேற்று ஏற்பட்ட மோதலை எண்ணி வருந்துகிறேன். Vice Chairman மூலம் உதவி பெற்றதால், அவரிடமே அனைத்து உதவிகளை அந்த வார்டுக்கு பெற்றுக் கொள்ளட்டும் என்று கூறுங்கள் என்று தலைவி சொன்னது பொறுப்பற்ற செயலே! என்று கண்டிக்கிறேன்.

ஏனென்றால் புறநகர் மக்களும் காயல்வாசிகளே! அவர்களும்தான் உங்களுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்துள்ளார்கள். அப்பகுதியின் ஒட்டு மொத்த மக்களுக்கும் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே உங்கள் பொறுப்பு எனும்போது ஏதோ V.C-யிடம் அவசரத் தேவைக்கு உதவி கேட்டதால், மற்ற உதவிகளை மறுப்பதுபோல் பேசுவது முறையல்ல.

தயைகூர்ந்து ஆணையர் அவர்களே! உங்களுடைய பணியில் யாறும் குறுக்கிடாது பார்த்துக் கொள்ளுங்கள். நகராட்சியின் உள்ளே வரும் மனுக்களுக்கும், பொருட்களுக்கும், வெளியே செல்லும் மனுக்களுக்கும், பொருட்களுக்கும், நீங்களே பொறுப்பு என்பதால், முறைப்படி உங்கள் உத்திரவின்றி எதுவும் நிகழாது பார்த்து கொள்ளுங்கள்.

மேலும் தலைவி அவர்களே! தயைகூர்ந்து விட்டுக் கொடுப்பார் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை, என்பதை மனதில் வைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களாகிய நகர்மன்ற உறுப்பினர்களையும், அலுவலக பணியாட்களையும் ஒன்றாகக் கூட்டி நல்ல தீர்மானங்களும் நல்ல செயல்பாடுகளும் நடக்க உடனே நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு உங்களுடையது. அதற்கு ஒத்துழைக்கும் கடமை எங்களுடையது என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்.

வீடியோ, ஆடியோ செய்வதில் எனக்கு உடனபாடு இல்லை, ஏனெனில் அவர்கள் எடிட் செய்கிறேன் என்ற பெயரில் சாதக - பாதக நிலைமை யோசிக்காது செய்கிறார்கள். ஒருவருக்கு ஆதரவாக போடும்போது மற்றவர்களுக்கு அது பாதகமாகிறது. எனவே தயைகூர்ந்து உள்நின்று வீடியோ செய்யாமல் தீர்மானத்தில் ஏற்றப்பட்டதை, செயல்பாடானதை, அவை தலைவர், உறுப்பினர்கள் மூலம் தெரிந்து கொண்டு நியாயமானதை வெளிப்படுத்துங்கள். வீண் விமர்சனத்திற்கு என்மை ஆளாக்காதீர்கள்.

இன்று பலமுறை கேட்டுக்கொண்டும் எனது 9வது வார்டு மரைக்கார் பள்ளி தெருவிற்கு லைட் மாட்ட ஆள் ஏற்பாடு செய்யவில்லை. எனவே உடனே அப்பகுதிகளுக்கான விளக்குகளும், மாட்டுவதற்குரிய வயர்மேனும் என்னுடன் அனுப்பி வைக்கும் வரை நான் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்.

அலுவலர்களின் பொடுபோக்கால் பணி முடங்குவதை தவிர்க்கும் படி தலைவி, ஆணையர் அவர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 19.07.2012 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் பேசினார்.

மேற்கண்டவாறு தான் பேசி அமர்ந்த பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் நகர்மன்றத் தலைவர் தக்க காரணங்கள் எதுவுமின்றி அனைத்து மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் மதிக்காது - உதாசீனப்படுத்தி நிராகரித்துப் பேசியதால், மன்றத்தை விட்டும் வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இன்டர்நெட்டில் பார்க்கும் - கேட்கும் எந்தச் செய்தியையும் அலசி ஆராயாமல் விமர்சனம் செய்யாதிருக்குமாறும் அவர் தெரிவித்து்ளளார்.

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவரின் வாக்கும், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய். என்பதை உணர்ந்தும் செயல்படுமாறு அன்போடும், பணிவோடும் கேட்டுக்கொள்வதாக 09ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Useless
posted by Ahamed Mustafa (dubai) [23 July 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20139

What is the use of giving such a long lecture and walk away.

We as a public belonging to the reigns of Ms.Hairiyaa are ashamed of having sent someone who can not do any thing to the public who have trusted her.

What is the point of a long speech and doing nothing. Instead the councillor should have sat there and address the grievances.

We never expect such a drama from her. she is busy collecting money from the Public and to build projects. Shame on those who elected her...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஜூலை 19 நகர்மன்றக் கூட்டத...
posted by salai s nawas (singapore) [24 July 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 20151

மினிட் புக்கில் என்ன உள்ளது என்பதை கவனிக்காத என்னை நான் பொறுப்பற்றவளாக கருதுகிறேன். ஆகவே உடன் மினிட்புக்கை நான் பார்வையிட விரும்புகிறேன் - இது உங்கள் தவறுகளை திருத்தும் மனபக்குவம் தெரிகிறது.

மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து வரும் சிக்கலாம் 14 வது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா அவர்களிடம் நேற்று ஏற்பட்ட மோதலை எண்ணி வருந்துகிறேன் - இது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது

வீடியோ, ஆடியோ செய்வதில் எனக்கு உடனபாடு இல்லை, ஏனெனில் அவர்கள் எடிட் செய்கிறேன் என்ற பெயரில் சாதக - பாதக நிலைமை யோசிக்காது செய்கிறார்கள் - இது உங்கள் உரிமையை காட்டுகிறது.

எனவே உடனே அப்பகுதிகளுக்கான விளக்குகளும், மாட்டுவதற்குரிய வயர்மேனும் என்னுடன் அனுப்பி வைக்கும் வரை நான் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன். - இது உங்கள் போராட்ட குணத்தை காட்டுகிறது.

ஆனால் வெளிநடப்பு? - உங்கள் பொறுப்பற்ற தன்மையை அல்லவா காட்டுகிறது . வெளிநடப்பு என்பது நகராட்சியையும் உங்களை வெற்றி பெற செய்த மக்களையும் உதாசினப்படுத்தி செல்வது. எந்த முகத்தை வைத்துகொண்டு மறுபடி உள்ளே செல்லுவீர்கள்?

- அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஜூலை 19 நகர்மன்றக் கூட்டத...
posted by Mohamed Ali (Kuwait) [24 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20154

காயல் நகர் மன்றத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே.

தலைவி சர்வதிகாரம் பண்ணுகிறார் என்று உறுப்பினர்கள் சொல்கிறார்கள். ஆனால் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்க என் வேலையை சரியாக செய்ய விடுவதில்லை என்று தலைவி சொல்கிறார்.

இதற்கிடையில் தலைவியை பற்றி நீண்டதொரு புகார் கொடுத்தார் ஒரு உறுப்பினர். அதற்கு மறுப்பு கொடுத்தார் தலைவி. அடுத்து கலெக்டர் இடம் இரண்டு புகார் மனுக்கள் தலைவியை பற்றியும் நகராட்சியை பற்றியும் கொடுக்கபட்டது.

இரண்டு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது பற்றி பேசிய ஒலி நெட்டில் ஒரிபரப பட்டு நாறியது.

அந்த மனுக்கள் மீது கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று இதுவரை தெரிய வில்லை. கலெக்டர்யே கவுத்தி விட்டார்களா ? அல்லது கலெக்டர் காயல் பட்டினத்தின் நிலையை பார்த்து தலையை பீய்த்து கொண்டாரா என்று கூட தெரிய வில்லை.

அதற்கிடையில் 3,4 முறைகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு வேறு. சுகு பேசிய கோசா பிரச்சனையை வேறு. இப்போது மற்றும் ஒரு உறுப்பினர் வாக்குமுலம்

தலைவியை ஆதரிக்கும் காயல் இணையதளம் என்று குற்ற சாட்டு வேற. மீடியா வேண்டுமா இல்லையா என்பது தனி பிரச்சனையை உள்ளது.

தலைவியை ஆதரித்தும் பாராட்டியும் போட்டோகள், மற்றும் கருத்துகள் இணைய தலத்தில். அதற்கு எதிரான கருத்துகள் வேறு.

என்னையா நடக்கிறது நகர் மன்றத்தில். இடியாப்ப சிக்கலை விட மோசமாக உள்ளதே.

முந்தைய உறுபினர்களே மேல் போல் உள்ளதே. அவர்களாவது லஞ்சம் வாங்கி கொண்டு வேலையை பார்த்துகொண்டு இருந்தார்கள். இந்த மாதிரி நகர் மன்றம் நாரா வில்லை.

நாம் எல்லாம் சேர்ந்து பழைய ஆட்சி மோசமாக உள்ளது என்று புதிய உறுபினர்களை தேர்ந்து எடுத்ததற்கு. நன்றாக பாடம் கற்பித்து விட்டார்கள்.

காயல் மக்கள் எல்லாம் சேர்ந்து நகர் மன்றத்தின் இப்போதிய நிலை என்ற தலைப்பில் ஒரு சர்வே செய்ய ஒரு agent வைத்து report வாங்கி. நடவடிக்கை எடுக்க வேண்டும் போல் உள்ளது. அவர்களும் இவர்கள் கெடுத்து விடுவார்களே.

அல்லா தான் காப்பற்ற வேண்டும் நம் நகர் மன்றத்தை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Think before Act !!
posted by Salai. Mohamed Mohideen (USA) [24 July 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20158

இவ்வறிக்கையின் டயலாக் எல்லாம் அழகாக கோர்வையாக படிப்பதற்க்கு இனிமையாகத்தான் உள்ளது. ஆனால் இதனை முந்தைய மீட்டிங்கை ஒரு சப்பை காரணத்தை கூறி வெளியேருவதற்கு முன்னரே தானும் யோசித்து மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தால், இவ்வறிக்கைக்கு அது வலு சேர்த்திருக்கும்... மக்களையும் சென்றடைந்திருக்கும். இது என்னமோ முந்தைய வெளிநடப்பு காரணத்தில் அதிருப்தியடைந்து .... கேள்விக்கனைகளால் வறுத்தெடுத்த வார்டு / வாசக மக்களை சால்ஜாப் பண்ணுவது போன்ற உணர்வை தருகின்றது. எது எப்படியோ உங்களை போன்று இவ்வறிக்கையை படித்து மற்றவர்களும் தங்களுடைய தவறை உணர்ந்தால் சரி.

வார்ட் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து அதில் மட்டும் கவனத்தை - செயலாற்றலை காண்பித்தாலே போதும். அதுதான் உண்மையிலேயே மக்களுக்கும் தேவை... அதுவே உறுப்பினர்களின் செயலாற்றல்களுக்கு ஒரு மணி மகுடமும் கூட. அந்நிலையை ஏற்படுத்தி விட்டால், இது போன்ற (தன்னிலை) அறிக்கை விளக்கங்கள் தேவையே இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved