Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:15:44 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8756
#KOTW8756
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 20, 2012
ரமழான் 1433: இன்று தலைப்பிறை காணப்பட்டதால், நாளை ரமழான் துவக்கம்! மஹ்ழராவில் நடைபெற்ற நகர உலமாக்கள் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான தகவல்கள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3440 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ உறுதி செய்து அறிவித்துள்ளதன் அடிப்படையில், இன்று ரமழான் முதல் நாள் இரவு என்றும், நாளை முதலாவது நோன்பு என்றும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற - மஹ்ழரா அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-

ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டிற்கான ரமழான் தலைப்பிறையை முடிவு செய்வதற்கான மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகள் மற்றும் காயல்பட்டினம் நகர உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் இன்று இரவு 07.00 மணியளவில் நடைபெற்றது.



மவ்லவீ ஹாஃபிழ் “முத்துச்சுடர்” என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபிர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாகி ஹாஜி ச.த.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.







இக்கூட்டத்தில், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, அக்கல்லூரியின் ஆசிரியர்களான மவ்லவீ ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ, முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் மற்றும் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃலம் மஹ்ழரீ மற்றும் நகரின் உலமாக்கள் கலந்துகொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை குறித்த தகவல்களை சேகரித்து வழங்கியவண்ணம் இருந்தனர். ஆங்காங்கே பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தபோதிலும், எந்தத் தகவலும் உறுதி செய்யப்படாத நிலையில், உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நீண்ட நேரம் நீடித்தது.

இரவு 08.50 மணியளவில், செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவலை, சென்னையிலுள்ள தமிழக அரசின் தலைமை காஜீ தலைமையிலான உலமாக்கள் குழு ஆய்ந்தறிந்து முடிவு செய்ததன் அடிப்படையில் இன்றிரவு ரமழான் முதல் நாள் இரவு என்று, தலைமை காஜீ அறிவித்ததாக உறுதியான தகவல் பெறப்பட்டது.

அத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, இரவு 09.00 மணியளவில் - இன்று (வெள்ளி பின்னிரவு) ரமழான் முதல் நாள் இரவு என்றும், சனிக்கிழமை முதல் நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் முறைப்படி உலமாக்களால் அறிவிக்கப்பட்டது.

நிறைவாக, கூட்டத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

உலமாக்கள் கூட்டத்தில் வடிவமைத்து வெளியிடப்பட்ட முறைப்படியான அறிவிப்பு பின்வருமாறு:-

ரமழான் தலைப்பிறை குறித்த தகவலைப் பெற்றுச் செல்வதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மஹ்ழரா அரபிக்கல்லூரி வெளி வளாகத்தில் திரளாகக் குழுமியிருந்தனர். தலைப்பிறை செய்தி அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் உற்சாகத்துடன் தமதில்லங்களுக்கும், தமக்கறிமுகமானோருக்கும் அத்தகவலைப் பரிமாறிக்கொண்டனர்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1433: இன்று தலைப்ப...
posted by MAK.JAINULABDEEN, president, kaakkumkarangalnarpanimantram. (kayalpatnam) [20 July 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20076

அஸ்ஸலாமு அலைக்கும்.புண்ணியம் பூக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இந்த புனித மாதத்தின் பொருட்டால் நமதூரில் ஏற்பட்டுள்ள நோய்கள், பலாய், ஃபசாது, முசீபத்துகளும், நம்மை விட்டும், நம் மண்ணை விட்டும் நீங்கி, ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வல்ல ரஹ்மான் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1433: இன்று தலைப்ப...
posted by P.S. ABDUL KADER (jeddah) [20 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20078

வசந்த காலத்தின் வயிட்டுபடிதான் நோம்பு.

உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன.

ஆரோகிய வழியில் நோன்பு வைக்க

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நோறுங்கத் தின்றால் நூறு வாழ்வு’ என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சப்பிடப் பழகிக்கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.

குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கரீம், ஜுஸ் இவைகலை உடல் ஜீரணிப்பதில்லை. உணவு சாப்பிட்ட உடன் ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொருமையிழந்து தவரு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகலையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம்பழத்தை தேனில் நனைத்து மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்க்கூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்ல பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் முழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்க கூடாது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்த்து. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தோவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெமபு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும். எல்லாம் வல்ல இறைவன் இந்த சங்கை மிகுந்த நோன்பு மாதத்தின் வாயிலாக நமதூரில் பரவி வரும் நோய்களை முற்றிலும் யாருக்கும் வராது காத்து அருள்வானாக!

உங்களில் ஒருவன்
P S அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1433: இன்று தலைப்ப...
posted by SEYED ALI (ABUDHABI) [21 July 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20099

நான்கு பிறை நான்கு நோன்பு நான்கு வானம். வெறும் கருத்து வேற்றுமையினாலும் வரட்டுப் பிடிவாதத்தினாலும் பிரிந்து கிடக்கும் நம்மூர் சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி எல்லோரும் சகோதர வாஞ்சையுடன் ஒன்றாக பெருநாள் கொண்டாடுமுகமாக இந்த நான்கு பிறைகளும் ஒன்றாக பிறக்கக்கொடாதா. அவைகளும் இப்படி பிரிந்து ஏட்டிக்கு போட்டியாகத்தான் பிறக்க வேண்டுமா. இறைவா நீயே எல்லாம் அறிந்தவன். இதென்ன சோதனை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved