Re:...காயல்பட்டினம்..... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23176
காயல்பட்டினம்.... இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும். அலைகளின் வாயும் ஹதீதுகள் பேசும்.....என்று ஒரு கவிஞர் நமதூர் கடற்கரை நண்டுகள் ஊர்ந்து செல்லும் கோட்டின் அழகையும், அலைகள் வந்து மோதும் எழிலையும் வர்ணிப்பார்.
என்ன அழகான தோற்றம். இங்கே மக்கள் கூட்டம். சிறுவர்கள் ஆட்டம் பாட்டம். தொழுகை நேரத்தில் ஜமாஅத் நடக்கும் பாங்கு. எவ்வளவு அழுத்தமான உள்ளத்தோடு வந்தாலும் சற்று கடற்கரையை சுற்றிவந்து சென்றால் துயரங்கள் பறந்து போவதை காணலாம். இது அனுபவித்து உணர்ந்து பார்க்க வேண்டிய கடற்கரை.
ஆனால் சூதாட்டங்களும் தவறான நிகழ்வுகளும் இங்கு அரங்கேறுவதாக ஆங்காங்கே சில செய்திகள் கசிகின்றன. இதன் புற தூய்மையை பாதுகாக்க நகர்மன்றம் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். உள தூய்மையை பாதுகாக்க நமதூரில் அமைக்கப்பட்டுள்ள kayalpatnam beach users association உடனடியாக களம் இறங்கி ஆவன செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். காலம் கடந்தபின் கைசேத படுவதில் பயனில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross