செய்தி: நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை பறிப்பைக் கண்டித்து இந்திய தொழிற்சங்கம் சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[17 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35980
கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அநியாயத்திற்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.
அநியாயத்திற்கும் அக்கிரமங்களுக்கும் ஆதராவாக கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்கள் களம் இறங்கி வீதியில் கோஷம் போடுவது சாலையில் செல்வோருக்கு வியப்பாக இருந்தன.
நகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடமோ, கடையோ, ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் முறையான ஆவணங்களுடன் நகராட்சியுடன் 1 ஆண்டோ, 6 மாதமோ, 3 மாதமோ என்ற கணக்கில் ஒப்பந்தம் செய்து அந்த ஒப்பந்தம் முடிவுற்ற பின் மறு ஒப்பந்தம் விடுவது வாடிக்கை நகராட்சியின் நடைமுறை விதி இருக்கும் போது ஆரம்பத்தில் நான் தான் அந்த கழிபிடத்தை, அந்த கடையை முன்பு காலத்தில் ஒப்பந்த அடிபடையில் நகராட்சியிலிருந்து பெற்று இருந்தேன் ஆகையால் எனக்கு தான் திரும்பவும் அந்த கழிபிடத்தை, அந்த கடையை தரவேண்டும் என்று அர்த்தமில்லாமல் அடம்பிடிப்பது சரியாகுமா.! நகராட்சியின் நடைமுறை விதிமுறை சட்டத்திற்கு சரி வருமா..!
அது போன்று தான் ஒப்பந்த பணியாளர்களின் ஒப்பந்த காலமும் முடிவுற்று விட்டன. இனி நகராட்சியின் காலி பணி இடங்களுக்கு படித்த அணைத்து சமுதாய உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலை முன்னுரிமை திட்டங்கள் இருக்கலாம் அல்லவா..!
இனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் பல உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டாமா..!
அன்று ஒப்பந்த பணியில் இருந்து தற்போது அந்த ஒப்பந்தம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் நாகர்கோயில் - காயாமொழி - மற்றும் சில வெளியூர் நபர்களே அதிகம்.
உள்ளூரில் தலைமுறை தலைமுறையாக பிறந்து வளர்ந்து கல்லூரியில் படிப்பை முடித்து வரும் அணைத்து சமுதாய மக்களின் வேலை வாய்ப்புக்காக யாரும் குரல் கொடுத்த மாதிரி இதுவரை தெரியவில்லை - எந்த செய்தியுமில்லை.
காயல்ப்பட்டினம் நகராட்சியில் அலுவலக பணியில் (ஊனமுற்றோர் பட்டியல் தவிர்த்து) உள்ளூர் பணியாளர் என்று ஒருவரை கண்பிக்க முடியுமா..? ஏன் இதுமுன் பல நிர்வாகம் (சேர்மன்) கள் ஆகட்டும்..! இப்போதைய நிர்வாகம் சேர்மன் ஆகட்டும்..! யாரவது ஒரு நிர்வாகம் - சேர்மன் நகரின் படித்த பட்டதாரிகளுக்கு நமது நகராட்சியில் அலுவலக வேலைக்காக பணியில் அமர்த்த முயற்சி எடுத்திருப்பீர்களா..?
CITU அமைப்பினரின் இந்த ஆர்ப்பாட்டம் உள்ளூரில் படித்த பட்டதாரிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமே தவிர வேறில்லை... ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே கருத தோன்றிகிறது.
படித்த பட்டதாரிகளுக்கு நகராட்சியில் வேலை வழங்கு என்று என்றாவது கம்யுனிஸ்ட் கட்சி நகராட்சியின் முன்பு பட்டதாரிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தி இருக்குமா..!
கம்யுனிஸ்ட் கட்சியின் தோழர்களே..! நகரின் நடுநிலைவாதிகளே...! பதில் தாருங்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross