Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:23 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்குவது குறித்த சர்ச்சைக்கு 05ஆவது வார்டு உறுப்பினா் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...குற்றச்சட்டுகளுக்கு பதில்
posted by ம.ஜஹாங்கிர் (Kayalpatnam) [19 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39695

அஸ்ஸலாமு அலைக்கும்... தம்பி ரிபாய் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி உனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதன் மூலம் மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு கீழ்கண்ட எனது விளக்கத்தை மீண்டும் தரவிரும்புகிறேன்.

குற்றச்சாட்டு : நகராட்சிப் பணிகளைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவருக்குத் தேவையான வாகனம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தது தலைவியல்லவே? 1ஆவது வார்டு உறுப்பினர் சகோதரர் ஏ.லுக்மான் அவர்கள்தானே? (C&P)

பதில் : யார் இல்லை என்று சொன்னது? எனது அறிக்கையின் துவக்கத்திலேயே இதுபற்றி குறிப்பிடும்பொழுது, இந்த பொருள் அஜன்டாவிற்குள் வருவதற்கு லுக்மான் அவர்களின் கடிதமே மேற்கோள்காட்டப்பட்டிருந்தது.

ஆனால் எனது அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த கீழ்கண்ட வரிகளை மீண்டும் படிக்கவும்...

மேலும், முதல் தீர்மானத்திற்கு முன்பு, நகராட்சிக்கு கூடுதலான பணியாட்களை நியமிக்க வேண்டி தலைவரின் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை சென்றோம். அந்நேரத்தில் நகர்மன்றத் தலைவர் தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை கேட்டறிவதிலேயே கவனம் செலுத்தினார், அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது.

அடுமட்டுமல்ல, தலைவரே அந்த அதிகாரி திரு.ஸெபஸ்டியன் அவர்களிடத்தில் கேட்டார் என்பதையும் இப்போது நான் நினைவு படுத்துகிறேன்.

தலைவருக்கு வாகனம் வாங்குவது அப்போது தனக்கு சரியாகபட்டதால் லுக்மான் காக்கா தனது வேண்டுகோளாக மன்றத்தில் கடிதமாக கொடுத்தார், அதுவே அஜன்டாவில் இடம்பெற்றது.

இப்போது பிரச்சனை அதுவல்ல, உன் அபிமானத்தைபெற்ற உள்ளுர் இணையதளம், ஆதரித்தவர்கள் எதிர்த்து முறண்படலாமா என்று தலைவருக்கு ஆதரவாக குட்டையை குழப்பியதால் பல உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதுதான் உண்மை.

மேலும் வாகனம் வாங்குவது சம்பந்தமாக மன்றத்திற்கு கடிதம் கொடுத்த முன்னாள் உறுப்பினர் சகோ. லுக்மான் அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்று யாரிடமாவது சொல்லியிருக்கிறாரா?

குற்றச்சாட்டு : 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தது 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த ஏ.லுக்மான் அவர்கள் ஆதரவு.
2வது வார்டு சகோதரி மம்செய்து ஃபாத்திமா எதிர்த்தாரா?
4வது வார்டு சகோதரி முத்து ஹாஜரா எதிர்த்தாரா?
5வது வார்டு நீங்கள் ஆதரித்தீர்கள்.
7வது வார்டு திரு அந்தோணி எதிர்த்தாரா?
9வது வார்டு சகோதரி ஹைரியா எதிர்த்தாரா?
13வது வார்டு சகோதரர் சம்சுதீன் ஆதரித்தார்.
14வது வார்டு சகோதரி பாக்கிய ஷீலா எதிர்த்தாரா?
15வது வார்டு சகோதரர் ஜமால் ஆதரவு.
18வது வார்டு சகோதரர் சாமி எதிர்த்தாரா?

அக்கூட்டத்தில் அத்தீர்மானத்தை எதிர்த்து பேசியவர்கள் இரண்டேயிரண்டு உறுப்பினர்கள்தானே? (C&P)

பதில் : இதில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் இருக்கின்றன. அந்த பொருள் விவாதத்திற்கு வந்தபோது, நான் ஏற்கனவே தெரிவித்தபடி நான் உட்பட நான்கு பேர் மட்டுமே இறுதி வரை ஆதரித்தோம்.

சிலர் ஆரம்பத்தில் எதிர்க்காமலும், ஆதரிக்காமலும் மவுனம் காத்தார்கள். விவாதத்தின் இறுதியில் வாகனம் வாங்க தேவையில்லை என்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட காரணங்கள் சரியாக பட்டதால், அமைதியாக இருந்த சில உறுப்பினர்களும் அக்கருத்தை ஆமோதித்தார்கள்.

இறுதியில் முற்குறிப்பிட்ட இந்த நான்கு பேரை தவிர மற்றவர்கள் அப்பொருளை ஆதரிக்காததால் தீர்மானத்தில் அனுமதியில்லை என்றுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு எழுதாமல் மாற்றமாக எழுதியது கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பிரச்சனை உருவானது. அதைத் தொடர்ந்து, அடுத்து தனி தீர்மானத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம் என உறுதி கூறப்பட்டது.

பின்னர் வாகனம் வாங்க பணம் ஒதுக்க வேண்டி ஒப்புதல் கோரும் தீர்மானத்தை அலுவலக பொருளாக வைக்கும்போது அதை பயன்படுத்திக் கொண்டு, அப்பொருளை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

மேலும் அப்பொருளில் இரண்டாம் குடிநீர் திட்டத்தை பார்வையிட தலைவருக்கு வாகனம் வேண்டும் என்ற அலுவலக குறிப்பும் இருந்து, ஆக மொத்தத்தில் தேவையில்லை என்று நிராகரிக்கப்பட்டு, மாற்றமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைவர் தற்போது மறைத்தார் என்பதுதான் எனது குற்றச்சாட்டு.

இந்த விசயத்தில் உண்மைக்கு மாற்றமான தீர்மானம் எழுதியது ஒரு தவறு, ஒழுங்காக எழுதிய தீர்மானத்தை உரியவர்களிடம் மறைத்தது இரண்டாவது தவறு.

குற்றச்சாட்டு : சரி அதை விடுங்க! ஒரு நகர்மன்ற கூட்டம் நடக்கும்போது, அங்கு ஆணையர் மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள். நம் நகராட்சி கூட்டங்களில், ஊடகங்களும் தற்போது உள்ளன, பார்வையாளர்களும் வருகிறார்கள்.

உங்கள் கூற்றுப்படி - பெருவாரியான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, தலைவி மாற்றி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மினிட் புத்தகம் ஆணையரிடம்தானே இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும்? அவர் சும்மா விடுவாரா? “என்ன மேடம், உறுப்பினர்கள் எதிர்க்கவல்லவா செய்தார்கள்? நீங்கள் ஆதரவு என்று எழுதி இருக்கிறீர்களே...?” என்று கேட்க மாட்டாரா? (C&P)

பதில் : ஆணையாளர் மினிட்புக்கை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் தீர்மானங்கள் செயல் வடிவமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் அவர்கள் மினிட் புத்தகத்தை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

தலைவர் மீது சந்தேகப்பட்டு, அவர் ஒழுங்காக எழுதியிருக்கிறாரா என்று ஆணையாளர் சரிபார்ப்பது இல்லைதான். அந்த அளவுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எந்த தலைவரும் அப்படி தவறு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

இம்மாதிரி விசங்களில் அவர் தவறு செய்கிறார் என்று கண்டுபிடிக்கும் வரை நாங்களும் அப்படித்தான் நம்பினோம். ஆகவே பெரிய தவறை கண்டுபிடித்து விட்டதைப்போல் தம்பி என்னை மடக்கி சந்தோஷப்பட தேவையில்லை. மீறி சந்தோஷப்பட்டால் பட்டுக்கொள். உண்மையைத்தான் நான் எழுதி இருக்கிறேன்.

மேலும் இந்த தலைவர் இப்படி எல்லாம் மாற்றி எழுதுவார் என்பதற்கு இந்த விசயம் மட்டும் ஆதாரமில்லை, பலவிசயங்களில் இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளார். என்பதுதான் உண்மை. இருப்பினும் ஒன்றைமட்டும் ஆதாரமாக தம்பிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தம்பி நீ நம்புகிற, நீ கருத்து பதிகிற இணையதளமே இதற்கு ஆதாரமாகும். அதாவது நகராட்சி டிராக்டர் விசயமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றமாக தலைவர் மினிட் புக்கில் எழுதினார் என்பதற்கு கீழ்கண்ட ஆதாரங்களை முன்வைக்கிறேன்.

பழுதடைந்த அந்த வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் கூட இல்லையென்றும், எனவே இதற்கு இவ்வளவு தொகை செலவழிப்பதை விட, புது வாகனம் வாங்கலாம் என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.

தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர். (News ID : 8410)

ஆனால் பின்னர் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தலைவர் என்ன சொன்னார் என்பதை அறிய அதே இணையதளத்தில் வெளிவந்த செய்தியை கீழே தருகிறேன்.

பதிவுப் புத்தகம் இல்லாத வாகனத்திற்கு எண் எவ்வாறு வந்தது என்று நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார். பெயிண்டர் தவறுதலாக எண்ணைப் பதிந்துவிட்டார் என பொருத்துநர் நிஸார் தெரிவித்தார்.

பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் கடந்த கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் மாற்றியெழுதப்பட்டது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். அதே கேள்வியை 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவும் வலியுறுத்தினார்.

அன்றைய கூட்டத்தில் இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர் சுகு பழைய நகர்மன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும், கடந்த 20 வருடங்களாக ஆவணம் இல்லாமல் ஓடிய வண்டி குறித்து தெரிந்திருந்தும் அவர் பழைய நகர்மன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார்.

இவ்வாறாக, செய்யாததையெல்லாம் செய்ததாகவும், செய்ததையெல்லாம் செய்யவில்லை என்றும் தலைவராகிய தானோ - உறுப்பினர்களோ மாற்றிப் பேசும் வாய்ப்பை ஆதாரப்பூர்வமாகப் போக்கிடவே கூட்டங்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தான் தெரிவிப்பதாகவுமு் அவர் மேலும் தெரிவித்தார்.

“தெரியாமல் செய்துவிட்டேன்” என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதானே என்று 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் தெரிவித்தார். தெரியாமல் செய்ய இதில் ஒன்றுமில்லை என்றும், அன்று எதிர்த்து கருத்து தெரிவிக்காத பல உறுப்பினர்கள் இன்று அதுகுறித்து கருத்து தெரிவிப்து வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

வாடகைக்கு வாகனம் எடுக்கவே அக்கூட்டத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டதாக 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். அதனை மறுத்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நகராட்சி பொது நிதியிலிருந்து பெருந்தொகையை வாடகைக்காகவே கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான் பழைய வாகனத்தைப் பழுது பார்க்கும் அம்சம் கூட்டப் பொருளில் சேர்க்கப்பட்டதாகவும், இன்று சொல்லப்படும் பலதரப்பட்ட தகவல்களை அன்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் தெரிவிக்காமல் இருந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். (News ID : 9565)

இந்த கடைசி பாராவில் வாடைக்கு வாகனம் எடுக்கவே என துவங்கும் வரிக்கு முன்னால், புதிய வாகனம் வாங்கும் வரை என்ற வரி இருக்கவேண்டும், ஆனால் அந்த இணையதளத்தில் தவறுதலாக விடுபட்டு இருக்கின்றது. படிப்பவர்கள் குழம்பக்கூடாது என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன்.

இப்போது நான் கேட்கின்ற கேள்வி உறுப்பினர்களாகிய எங்களை நம்பவேண்டாம், நீ நம்புகிற இணையதளம் “புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்.” எனச் சொல்கிறது.

ஆனால் “இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். “ என்றும்,

“தெரியாமல் செய்ய இதில் ஒன்றுமில்லை என்றும், அன்று எதிர்த்து கருத்து தெரிவிக்காத பல உறுப்பினர்கள் இன்று அதுகுறித்து கருத்து தெரிவிப்து வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். “ என்றும் அதே இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இப்போது பொய் சொல்வது தலைவரா? இணையதளமா? இதை தம்பியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் சுற்றிவளைத்து தத்துவம் பேசி, வக்கீல் போல் வாதாடி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, தலைவி புராணம் பாடுவதாக இருந்தால், தாராளமாக பாடட்டும் நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.

குற்றச்சாட்டு : அதையும் விடுங்கங்க. அந்த மினிட் புத்தகம், அதன் பிறகு - கணினி பிரிவுக்குப் போகிறது. அவர்கள் அதனைத் தட்டச்சு செய்து, சில நாட்களில் நகராட்சி இணையதளத்தில் ஏற்றுகிறார்கள். பிற இணையதளங்களும் அதனை வெளியிடுகின்றன. (நீங்களோ, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் முன்னரே தட்டச்சு செய்யப்பட்ட தீர்மானங்களை வாங்கி வெளியிட்டீர்கள்.)

“நாங்க எதிர்த்தோம், எதிர்த்தோம்”ன்னு இப்போ தொடர்ந்து பல்லவி பாடும் உறுப்பினர்களான நீங்கள் யாவரும் அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்களோ? (C&P)

பதில் : நகர்மன்ற தலைவர் மினிட் புக்கில் எழுதுவதைதான், நகராட்சி இணையதளம் வெளியிடும், எனது செல்வாக்கை பயன்படுத்தி நகர்மன்ற இணையதளத்தில் அத்தீர்மானம் ஏறுவதற்கு முன்னால் அதைபெற்று நான் எனது இணையதளத்தில் வெளியிடவில்லை.

மேலும் அப்பொருள் இடம்பெற்ற கூட்டம் சம்பந்தமாக எதையும் நான் வெளியிட்டதாக நினைவில்லை, இருந்தால் சுட்டிக்காட்டவும் ஏற்றுக்கொள்கிறேன்.

நகர்மன்ற இணையதளமும், என்னோடு தொடர்புடைய இணையதளமும் ஒருபுறம் இருக்கட்டும், நீ உண்மையானது என நம்புகின்ற, நீ கருத்துப்பதிகிற இணையதளம் இப்பொருள் குறித்து என்ன சொல்கிறது என்பதை தயவு செய்து ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன்.

உனது அபிமான இணையதளம், அந்த பொருள் இடம்பெற்ற கூட்டத்தில், அப்பொருள் உட்பட மொத்தம் 25 பொருள்களில், 8 பொருள்களுக்கு மட்டுமே தீர்மான முடிவை சொல்லியிருக்கிறது. அதில் டிராக்டர் குறித்த தீர்மானமும் அடங்கும்.

மீதி உள்ள பொருள்களின்கீழே விவாதத்தோடு தனது எழுத்தை முடித்துவிடுகின்றது.

இப்பொழுது சொல், உறுப்பினர்கள் உள்ளபடியே இந்த பொருளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் ஏன் அந்த உண்மையை உங்கள் அபிமான இணையதளம் செய்தியில் குறிப்பிடவில்லை?

அதுவும் அந்த இணையதளத்தாரின் ஆதரவைப்பெற்ற தலைவருக்கு வாகனம் வாங்கும் விசயத்தில் இப்படி கவனக்குறைவாகவா இருந்திருப்பார்கள்?

மேலும் 8 பொருள்களுக்கு தீர்மான முடிவை எழுதியவர்கள், முக்கியமான இந்த பொருளுக்கு முடிவு எழுதாமல் ஏன் விட்டார்கள். இதன் மூலம் தீர்மானம் நிறைவேறவில்லை என்பது தௌிவாகிறது.

v குற்றச்சாட்டு : அதையும் விடுங்க! நகராட்சியில் ஒரு காரியம் நடக்க - குறைந்தது இரண்டு தீர்மானம் தேவை...
(1) அந்தப் பணிக்கான மன்ற ஒப்புதல்...
(2) அந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அல்லது செலவினத்திற்கு ஒப்புதல்.

நீங்கள் உறுப்பினர் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இது உங்களுக்குத் தெரியாதா?

உங்களை ஏமாற்றி பணிக்கு ஒப்புதல் பெற்றுவிட்டு, ஒப்பந்தப் புள்ளிக்கோ, செலவினத்திற்கோ நகர்மன்ற கூட்டத்தில் அந்தப் பொருள் மீண்டும் வர வேண்டும் என்று நகர்மன்றத் தலைவருக்கு தெரியாதா? அப்போது, “இதற்கு நாங்கள் எங்கே ஆதரவு தெரிவித்தோம்?” என்று நீங்களெல்லாம் கேட்பீர்களே என்பது அவருக்குப் புரியாதா?

சொல்லும் பொய்யை சற்று பொருந்தச் சொல்லக் கூடாதா சகோதரர் ஜஹாங்கீர் அவர்களே...? (C&P)

பதில் : திட்டமிட்டு தவறுதலாக எழுதப்பட்ட தீர்மானம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் தொடர்ந்து கூட்டப்புறக்கணிப்பு, வெளிநடப்புகள் அவ்வப்போது நடைபெற்றதால், அதற்கு பின்னர் கூடிய கூட்டத்தில் செலவு ஒப்புதலை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பொருளை பயன்படுத்தி, எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

செலவு ஒப்புதலுக்கு வருகின்ற பொழுது பிரச்சனை வரும் என்று தலைவருக்கு தெரியாதா என்று கேட்கிறாய். தெரியத்தான் செய்யும், மோதிப் பார்ப்போம் என்று முயற்சித்திருக்கலாம். அதற்கு ஆதாரம்தான் டிராக்டர் வாங்கும் விசயம் குறித்த தலைவரின் பேச்சு. அவர் அதில் பொய் சொல்கிறார் என்பதற்கு நீங்கள் நம்புகிற இணையதளமே சாட்சி, அதில் பொய் சொன்னவர் இதில் பொய் சொல்லக்கூடாதா?

குற்றச்சாட்டு : “சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு புதிய ஆணையர் வந்தார், அவரிடம் ஜனவரி 2013 தீர்மானம் மறைக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது” என கூறுகிறீர்கள். வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி அல்ல, திருநெல்வேலி RDMA. வாகனம் வாங்க திருநெல்வேலி RDMA பரிந்துரைத்து கடிதம் எழுதியது ஆகஸ்ட் 2014. புதிய DMA/ஆணையர் பிரகாஷ் IAS வந்தது நவம்பர் 2014. இரண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்ல முடியுமா கதாசிரியர் அவர்களே? (C&P)

பதில் : சென்னையில் உள்ள நிர்வாக இயக்குனர் விசயத்தில் வேண்டுமென்றால் நான் தவறுதலாக புதிய இயக்குனர் என்று குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் அது பெரிய குறையல்ல, காரணம் இவ்விசயமாக பழைய தீர்மானத்தை ஆதாரமாக வைத்து வாகனம் வாங்கலாம் என ஒப்புதல் அளித்தவர் புதிய நிர்வாக இயக்குனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

RDMA பரிந்துரை கடிதம் எழுதிய தேதியிலிருந்து பழைய இயக்குனர் பணிமாறிய காலம் வரையுள்ள நாட்கள் நீ குறிப்பிட்டதை வைத்து பார்க்கும் போது, சுமார் 3 மாதங்கள் ஆகும். இந்த மூன்று மாதங்களில் முடிவுக்குவராத இந்த விசயம், புதிய இயக்குனர் வந்தபோது அனுமதிபெற்று முடிவுக்கு வருகிறது. அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியை அடிப்படையாக கொண்டுதான் நான் இந்த வாதத்தை வைக்கிறேன்.

முன்னாள் இயக்குனரின் பணி நிறைவுபெற்று, சுமார் இரண்டு மாதம் கழித்து புதிய இயக்குனர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்தானே? புதிய இயக்குனரிடத்தில் பென்டிங்கில் இருக்கும் அந்த கோரிக்கையை தலைவர் ஏன் வலியுறுத்தி, இரண்டாவது தீர்மானத்தை மறைத்து ஒப்புதல் பெற்றிருக்க கூடாது?

நீ குறிப்பிடுகின்ற RDMA-யூம் புதியவர்தான், நகராட்சியில் இருந்து இக்கோரிக்கையை அனுப்பிவைக்கும் ஆணையாளரும் புதியவர்தான். இதுசம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது இவ்விருவரும் பொறுப்பில் இருந்தவர்கள் இல்லை.

ஆக ஆணையர், RDMA, இயக்குனர் மூவருமே இவ்விசயம் சம்பந்தமான சர்ச்சைகளை அறியாதவர்கள். இவ்விசயம் தெரியவந்ததும் உறுப்பினர்கள் தங்கள் புகாரை இயக்குனருக்கு அனுப்பிவைத்து விட்டார்கள்.

அதுசரி வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி இல்லை என சொல்கிறாய் அப்படியானால், தலைவிக்கு தெரியாமல், தலைவி கேட்டுக் கொள்ளாமல் 1000 தீர்மானங்கள் எழுதப்பட்டுள்ள மினிட் புத்தகத்தை ஆணையாளர் படித்து, இந்த ஒரேயொரு (பொய்யான) தீர்மானத்தை மட்டும் கண்டுபிடித்து, அனுப்பினாரா? அதற்குத்தான் RDMA பரிந்துரைத்தாரா?

தம்பி இந்த விசயத்திற்கு இந்த அளவு போதுமா விளக்கம் ?

குற்றச்சாட்டு : அதை விடுங்கள். திருநெல்வேலி / சென்னை அதிகாரிகளுக்கு - ஜனவரி 2013 நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரியாதா? நீங்கள் மார்ச் 2013இல் கொடுத்த நம்பிக்கை இல்லா கடிதத்தில்தான் அது குறித்து உள்ளதே? அது அப்படி இருக்க - தலைவி நினைத்தாலும் அந்த தீர்மானத்தை மறைக்க முடியுமா? (C&P)

பதில் : 2013 மார்ச்சில் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்களில் ஏரேனும் ஆணையருக்கு, RDMA-க்கு, இயக்குனருக்கு நினைவு படுத்தியிருந்தால் அவர்கள் பரிசீலிப்பார்கள்.

எங்களில் எவருக்கும் தெரியாமல் ஆணையாளர் மூலமாக தலைவர் மேற்கொண்ட முயற்சியில். அதிகாரிகள், முதல் தீர்மானத்தை மட்டுமே நம்பி முடிவுக்கு வரமுடியுமே தவிர, நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் கொடுத்த நேரத்தில் பொறுப்பிலேயே இல்லாத இந்த மூவரும் எப்படி இதுபோன்ற பிரச்சனை உள்ளது என்று யூகிக்க முடியும்?

அந்த நம்பிக்கையில்லா தீர்மான குற்றச்சாட்டில் இவ்வாகன விசயமும் இருக்கலாம் என்று அவர்கள் எப்படி யூகிக்க முடியும்?

தம்பி இப்பொழுது நீ என்ன சொல்ல வருகிறாய். இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றவே இல்லை என்று சொல்லவருகிறாயா? அல்லது தலைவர் அதை மறைக்கவில்லை என்று சொல்ல வருகிறாயா? அல்லது மறைக்காமல் தீர்மானத்தை அதிகாரிகளிடத்தில் காட்டினார் என்று சொல்ல வருகிறாயா? அவ்வாறு காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு, முதல் தீர்மானத்தின் அடிப்படையில் வாகனம் வாங்க ஒப்புதல் அளித்தார்கள் என சொல்ல வருகிறாயா?

குற்றச்சாட்டு : ஜனவரி 2013 தீர்மானம் எது குறித்து சகோதரரே? நிதி பற்றாக்குறை என பொய்யான காரணம் கூறிய தீர்மானம். ஏப்ரல் 2012 தீர்மானத்தை ரத்து செய்த தீர்மானமா அது? ஜனவரி 2013இல் அந்த தீர்மானம் வந்தபோது, ஏப்ரல் 2012 தீர்மானத்தை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அப்போது கூறியிருக்க வேண்டியதுதானே? மறந்துட்டீங்களோ...?

மாதாமாதம் நகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் அனுப்பும் சென்னையில் உள்ள அரசு அதிகாரிக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் நிதி நிலை தெரியாதா ஜஹாங்கீர் காக்கா...? (C&P)

பதில் : முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஊருக்கு ஏதேனும் உருப்படியாக செய்துவிட்டு, வாகனம் வாங்குவதுபற்றி முடிவு செய்வோம் என்றுதான் முடிவு செய்தோம், அதைதான் தலைவி ஒப்புதல் அளித்ததாக மாற்றி எழுதிவிட்டார்.

இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் போது. ஊரில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், அதற்கு நிதி தேவைப்படும் என நாங்கள் கருதியதால், நிதிநிலையை கருத்தில் கொண்டு என்ற வார்த்தையை தான் நாங்கள் பயன்படுத்தினோம், ஆனால் தலைவர் நிதி பற்றாக்குறை என்று தவறுதலாகவோ, திட்டமிட்டோ எழுதிவிட்டார்.

இதுகுறித்தும் எனது முந்தைய தன்னிலை விளக்கத்தில் தௌிவாக சொல்லியுள்ளேன்.

எனது விளக்கத்தை நிறைவு செய்வதற்கு முன்னால் ஒரு விசயத்தை இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்.

தலைவருக்கு வாகனம் தேவையா இல்லையா? அதுவும் மூண்றரை வருடம் கழித்த பின்னும் அவசியம்தானா? வாகனம் இல்லாத காரணத்தினால்தான் நகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு முன்பு இருந்தவர்கள், நகராட்சி பொதுநிதியில் வாகனம் வாங்கி, மாதாமாதம் அதற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்தார்களா? தலைவருக்கு சொந்த வாகனம் இல்லையா? தேர்தல் நேரத்திலும், ஆரம்பத்தில் பலமாதங்களிலும் அவருக்கு சொந்தமான வாகனத்தில் நகர்மன்றத்திற்கு அவர் வரவில்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது, என்னுடைய தன்னிலை விளக்கத்தின் நோக்கம் அல்ல.

வாகனம் சம்பந்தமான பொருள் மன்றத்திற்கு வந்தபோது, ஆதரித்த ஒரே காரணத்திற்காக வேண்டி, பொய்யான தீர்மானத்திற்கு துணைநிற்க விரும்பவில்லை என்பதே எனது தன்னிலை விளக்கத்திற்கு உண்மையான நோக்கமாகும்,

இதை நீயும், உன்போன்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது நூறு சதவிகிதம் நிச்சயம். மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மேலும் விடாப்பிடியாக நீ எழுதிக்கொன்டே சென்றால், அதற்கு பதில் அளிக்க எனக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.

குற்றச்சாட்டு : நாடகங்கள் முடிந்து வேஷங்கள் களையும் நேரம் இது. நடிப்பு சகிக்கவில்லை. (C&P)

பதில் : உண்மைதான் தம்பி! உன்னைப்போன்ற பலநடிகர்கள் பங்கேற்ற மெகா நாடக குழுவிலிருந்து பலர், இப்போது இயக்குனர்களின் போக்கு பிடிக்காததால் விலகிவிட்டனர். ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. உன்னைப் போன்று ஒரு சிலர் மட்டுமே நாடகத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இறைவன் உதவியால், இந்நாடக கம்பெனி விரைவில் மூடுவிழா காண வேண்டும் என ஊர்நலன் நாடுவோர் விரும்புகின்றனர். இவ்விருப்பத்தை ஏற்று, நாடக கம்பெனியைவிட்டு ஒதுங்கினாலும் சரி அல்லது தொடர்ந்து தலைவி புராணம் பாடிக்கொண்டு நாடக மேடையில் வேஷம் போட்டு நடித்துக் கொண்டு இருந்தாலும் சரி உனது விருப்பம்.

கதை, வசனம், நாடகம், வேஷம், சகிக்கலை, எடுபடலை, போன்ற சொற்களை நீ எனக்கு எதிராக பயன்படுத்தியதை நான் தாங்கிக் கொண்டேன், எனவே என்னுடைய பதிலையும் நீ தாங்கிக்கொள்வாய் என்று நம்புகிறேன்.

மஅஸ்ஸலாமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved