Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:01:01 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15571
#KOTW15571
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 13, 2015
நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்குவது குறித்த சர்ச்சைக்கு 05ஆவது வார்டு உறுப்பினா் தன்னிலை விளக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்” எனும் தலைப்பில், காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சர்ச்சை குறித்து, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் பின்வருமாறு தன்னிலை விளக்கமளித்துள்ளார்:-

30.04.2012 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தின் பொருள் எண் 25 கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது.

அரசு ஆணைகள் அனுமதித்துள்ளபடி நகர்மன்ற தலைவருக்கு பிரத்யேக வாகனம் ஒன்று வாங்க - வார்டு 1 உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் அனுப்பியுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கு.
அலுவலக குறிப்பு:
மன்றம் அனுமதி வழங்கலாம்.

இப்பொருள் மன்ற கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தபோது நானும் சகோதரர்கள் K.ஜமால், M.S.M. சம்சுத்தீன் ஆகியோரும் ஆதரித்தது உண்மை.

எங்கள் மூவரோடு மன்றத்திற்கு கடிதம் கொடுத்த சகோதரர் A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம். அந்த பொருள் குறித்த விவாதத்தின் இறுதியில், பெரும்பான்மை உறுப்பினர்கள், இப்பொருளுக்கு ஒப்புதல் தராததால், மன்றம் வாகனம் வாங்க அனுமதிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சில மாதங்கள் கழித்து, நகர்மன்றத் தலைவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கு மாற்றமாக, மன்றம் இதற்கு அனுமதி வழங்கியதாக, மினிட் புத்தகத்தில் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தீர்மானத்தை நீக்கிவிட்டு, திருத்தி எழுதும்படி மன்றக் கூட்டம் ஒன்றில் அப்போதே நான் கேட்டுக்கொண்டேன்.

அதனால் ஏற்பட்ட சர்ச்சையின் முடிவில், மினிட் புத்தகத்தில் திருத்தி எழுதமுடியாது என்றும், எனவே புதிதாக ஒரு பொருளை மன்றத்தின் பார்வைக்கு கொண்டுவந்து, பழைய தீர்மானத்திற்கு மாற்றமாக புதிய தீர்மானம் நிறைவேற்றலாம் என கூறப்பட்டது. அதனடிப்படையில் 2013 ஜனவரி 29-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட பொருளுக்கு, கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காயல்பட்டணம் நகராட்சியானது இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 40542 ஆகும். நகராட்சியின் மொத்த பரப்பளவு 12.50 சதுர கிலோமீட்டா். நகராட்சிப் பகுதிகளில் அதிகமான திட்டப்பணிகள் நடப்பதாலும் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும் நகராட்சி ஆணையாளா் அவா்களுக்கு தனியாக ஒரு வாகனம் நகராட்சியில் உள்ளது. தற்பொழுது நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்த இருப்பதாலும் நகா்மனற தலைவா் அவா்களுக்கு தனியாக வாகனம் ஒன்று DGS&D விலையில் பொது நிதியிலிருந்து வாங்குவதற்கு தொகை ரூ.8.00 இலட்சத்திற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலக குறிப்பு:
DGS&D விலையில் பொது நிதியிலிருந்து வாங்குவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையா் அவா்களின் அனுமதி பெற்று வாங்கிட மன்றம் அனுமதி வழங்கலாம்.

தீர்மானம்:
நிதிபற்றாக்குறை காரணமாக மன்றம் அனுமதி வழங்கவில்லை.

இரண்டாவது தீர்மானத்தை தலைவர் மினிட் புத்தகத்தில் எழுதும்போதுகூட, நிதிநிலையை கருத்தில் கொண்டு என்று உறுப்பினர்கள் சொன்ன வாசகத்தை, நிதிநிலை பற்றாக்குறை என்று எழுதியுள்ளார். அப்போதைய நிதிநிலை திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும். பணிகள் அதிகம் நிறைவேற்ற வேண்டிது இருந்ததால், அவைகளை மனதில் கொண்டு, நிதிநிலையை கருத்தில் கொண்டு என்ற வாசகம் சொல்லப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முதல் தீர்மானப் பொருளில் விவாதம் நடைபெற்ற போதுகூட மக்களுக்கு உருப்படியாக ஏதேனும் செய்துவிட்டு, வாகனம் வாங்குவது பற்றி யோசிக்கலாம் என்றுதான் உறுப்பினர்களின் பெரும்பாண்மையோர் கருத்தாக இருந்தது. அக்கருத்தின் அடிப்படையிலேயே வாகனம் வாங்க தேவையிலை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைதான் தலைவர் மன்றம் அனுமதி வழங்கியதாக எழுதிவிட்டார்.

இந்நிலையில், முதல் தீர்மான நாளில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் கழித்தும், இரண்டாவது தீர்மான நாளில் இருந்து சுமார் 2 ஆண்டுகள் கழித்தும் தற்போது நகர்மன்றத் தலைவர் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்கிறார். அதாவது, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு, இரண்டாவது தீர்மானத்தை மறைத்து, அவர் திட்டமிட்டு தவறாக எழுதிய முதலாவது தீர்மானத்தை சுட்டிக்காட்டி, வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்கிறார். இது தவறு தானே?

இந்த முறைகேட்டை எதிர்த்து, ஒரு உறுப்பினரைத் தவிர, நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பினோம்.

இந்நிலையில், உள்ளூரின் ஒரு இணையதளம், முதல் தீர்மானத்திற்குரிய பொருளை ஆதரித்த என்னையும், என்னோடு இணைந்து ஆதரித்தவர்களையும் சுட்டிக்காட்டி, நாங்கள் இந்த புகார் கடிதத்தில் கையெழுத்திட்டதை முரண்பாடாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறது. என்னுடைய விளக்கம் என்னவெனில், 2012- ம் ஆண்டு தீர்மானத்திற்குரிய பொருளை நான் ஆதரித்தது உண்மை. இப்புகார் கடிதத்தில் நான் ஆதரிக்கவில்லை என குறிப்பிடவில்லை.

இரண்டாவது தீர்மானம் மறைக்கப்பட்டதையும், முதல் தீர்மானம் கூட உண்மைக்கு மாற்றமானது எனவும் குறிப்பிடும் புகாரில்தான் நான் கையெழுத்திட்டுள்ளேன். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? முதலாவது தீர்மான பொருளை நான் ஆதரித்தாக குறிப்பிடும் அந்த இணையதளம், அந்த தீர்மானத்தை உண்மைக்கு மாற்றமாக எழுதியதை நான் ஒரு மன்றக் கூட்டத்தில் கண்டித்ததையும் அது வசதியாக இந்த செய்தியில் மறைத்தது ஏன்?

ஒரு விசயத்தை ஆதரிப்பதும், பெரும்பாண்மையினரின் கருத்துக்கு கட்டுப்படுவதும், முரண்பாடு கிடையாது, மாறாக அதுதான் ஜனநாயகம். ஆனால் செய்த தவறை மூடிமறைக்க அல்லது நியாயப்படுத்த அல்லது தவறு செய்தவர்களைக் காப்பாற்ற இவ்வாறு செய்தி வெளியிடுவது குறித்து மிகவும் வருந்துகிறேன்.

மேலும், முதல் தீர்மானத்திற்கு முன்பு, நகராட்சிக்கு கூடுதலான பணியாட்களை நியமிக்க வேண்டி தலைவரின் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை சென்றோம். அந்நேரத்தில் நகர்மன்றத் தலைவர் தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை கேட்டறிவதிலேயே கவனம் செலுத்தினார், அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது.

இப்படி ஒரு உறுப்பினர் கேட்டு உரிய விளக்கத்தை பெற்றதை வைத்தும், முதல் தீர்மான விவாதத்தின்போது நான்கு பேர் ஆதரித்து பேசியதை வைத்தும், எல்லா உறுப்பினர்களுமே இப்பொருளை ஆதரித்து, தீர்மானம் நிறைவேற்றியதாகவோ, பின்னர் மாறுபட்டுவிட்டதாகவோ கருதமுடியாது.

மேலும், முதல் தீர்மானப் பொருளில் நகர்மன்ற தலைவருக்கு ”பிரத்தியேக வாகனம் வாங்க” என்ற வாசகமும், இரண்டாவது தீர்மானப் பொருளில் "தற்போது நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்த இருப்பதாலும் நகா்மனற தலைவா் அவா்களுக்கு தனியாக வாகனம் ஒன்று வாங்க", என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

செய்தி வெளியிட்டுள்ள அந்த இணையதளம், தலைவருக்கு வாகனம் வாங்குவது பற்றி குறிப்பிடாமல், செய்தி தலைப்பில், ஏதோ அலுவலகப் பணியாளர்களுக்கு வாகனம் வாங்க இருப்பது போன்று செய்தி வெளியிட்டுள்ளது. தலைப்பை படிப்பவர்கள் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். இது எந்த வகையில் சரி?

இரண்டாம் குடிநீர் திட்ட பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்ற இப்போதைய காலகட்டத்தில், அதை பார்வையிட தலைவருக்கு வாகனம் தேவையில்லை என்றும், அதிலும் மக்களின் வரிப்பணமான பொதுநிதியில் இருந்து வாகனம் வாங்கத் தேவையில்லை என்றும், மக்கள் நலப்பணிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அந்த இணையதளம் தலையங்கம் எழுதுவதற்கு பதிலாக, உறுப்பினர்களை குறைகூறுவது எந்த வகையில் நியாயம்?

அண்மையில் 2015 பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்து, நகர்மன்றத் தலைவரால் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கான மாதிரி அஜன்டாவில் இடம்பெற்ற பொருள் ஒன்றை, நகர்மன்றத் தலைவர் இறுதி வடிவம் செய்த அஜன்டாவில் இடம்பெறச் செய்யாமல் தவிர்த்த காரணம் என்ன?

மாதிரி அஜன்டாவில் இடம்பெற்ற பொருள் பின்வருமாறு:

காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்குவதற்கு நகர்மன்ற தீர்மானம் 234 நாள் 30.04.2012-ல் அனுமதி பெறப்பட்டது. நகராட்சி நிர்வாக ஆணையாளர் சென்னைக்கு கருத்துரு 07.08.2014-ல் அனுப்பப்பட்டது. காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்கிக் கொள்ள ந.க.எண் 19745 பி2/2014-2 நாள் 22.01.2015 தேதியில் DGS&D விலையில் வாங்கிக்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சென்னை அவர்கள் அனுமதி அளித்துள்ளார். மேலும் ஈப்பு வாகனத்திற்கு ஓட்டுநராக டெஸ்கோ நிறுவனம் (முன்னாள் இராணுவத்தினர் மூலம் அல்லது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு:
1) இந்நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்க DGS&D விலையில் விலைப்புள்ளி பெற்று வாங்கி கொள்ள அதற்கான தொகையினை நகராட்சி பொது நிதியில் செலவு செய்ய மன்றம் அனுமதிக்கலாம்.

2) டெக்ஸ்கோ நிறுவனம் மூலம் அல்லது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநரை நியமனம் செய்ய மன்றம் அனுமதிக்கலாம்.

3) புதிய ஈப்பு வாகனம் வாங்கிய பின்பு பதிவு செய்ய உண்டாகும் செலவினத்தை மன்றம் அனுமதிக்கலாம்.

இந்த பொருளை கூட்ட அஜன்டாவில் இணைக்க தலைவர் ஏன் மறுத்தார்? என்று மீண்டும் கேட்கிறேன்.

முதல் தீர்மான எண்ணை மேற்கோள்காட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வாகனம் வாங்க அனுமதி பெற்றிருப்பதாக இப்பொருளில் குறிப்பிட்டிருப்பதால், இது விவாதத்திற்கு வந்தால் உண்மைக்கு மாற்றமாக முதலாவதாக எழுதிய தீர்மானம் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதாலும், அதனால் மீண்டும் விமர்சனம் எழும் என்பதாலும், விவாதங்களை தவிர்த்து, மறைமுக குறுக்கு வழியில் வாகனத்தை வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில்கூட தலைவர் இந்த பொருளை கூட்ட அஜன்டாவில் சேர்ப்பதை தவிர்த்திருக்கலாம் என்பது எனது குற்றச்சாட்டாகும்.

இந்த தன்னிலை விளக்கத்தில், முதலாவது இரண்டாவது தீர்மானம் பற்றி, நான் குறிப்பிட்டிருப்பதை நடுநிலையோடு உன்னிப்பாக படித்தால், இதன் உண்மை நிலவரம் புரியும். நடுநிலை தவறி, எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதுகின்றவர்கள் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள வாகனம் சம்பந்தமான செய்திக்கும் உறுப்பினர்களுக்கு எதிராகவே கருத்துக்களை பதிகின்றனர். இந்த என்னுடைய தன்னிலை விளக்கத்தையும் அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதும் எனக்குப் புரியும். இருப்பினும் மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு மட்டுமே இந்த தன்னிலை விளக்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உண்மை வெல்லும். இன்ஷாஅல்லாஹ்.


இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [13 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39595

தலைவரின் பயன் பாட்டிற்கு என்பதை மறைத்து, அலுவலக பயன்பாட் டிற்கு என்று தலைப்பிடுவதிலிருந்தே, புத்தி " சாலி " தனம் என்று நினைத்துக் கொள்ளும் அவர்களின் முகமூடி தெளிவாக கிழிபடுகிறது.

தீர்மானங்களை மாற்றி தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நடிப்பு சகிக்கவில்லை!
posted by Hameed Rifai (jeddah ksa) [13 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39596

5ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்களின் தன்னிலை விளக்கம் படிக்க சுவராசியமாக இருந்தது. நல்ல முயற்சி, ஆனால் எடுபடவில்லை. எனது கேள்விகள் சில...

1) நகராட்சிப் பணிகளைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவருக்குத் தேவையான வாகனம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தது தலைவியல்லவே? 1ஆவது வார்டு உறுப்பினர் சகோதரர் ஏ.லுக்மான் அவர்கள்தானே?

2) 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தது 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த ஏ.லுக்மான் அவர்கள் ஆதரவு.
2வது வார்டு சகோதரி மம்செய்து ஃபாத்திமா எதிர்த்தாரா?
4வது வார்டு சகோதரி முத்து ஹாஜரா எதிர்த்தாரா?
5வது வார்டு நீங்கள் ஆதரித்தீர்கள்.
7வது வார்டு திரு அந்தோணி எதிர்த்தாரா?
9வது வார்டு சகோதரி ஹைரியா எதிர்த்தாரா?
13வது வார்டு சகோதரர் சம்சுதீன் ஆதரித்தார்.
14வது வார்டு சகோதரி பாக்கிய ஷீலா எதிர்த்தாரா?
15வது வார்டு சகோதரர் ஜமால் ஆதரவு.
18வது வார்டு சகோதரர் சாமி எதிர்த்தாரா?

அக்கூட்டத்தில் அத்தீர்மானத்தை எதிர்த்து பேசியவர்கள் இரண்டேயிரண்டு உறுப்பினர்கள்தானே?

என்னவோ வாக்கெடுப்பெல்லாம் நடந்து, 10 பேர் எதிர்த்து கையைத் தூக்கியது போல கதையளக்கப்படுகிறதே...? யார் யார் அந்தக் கூட்டத்தில் எதிர்த்தார்கள் என்று அல்லாஹ்வுக்கு அஞ்சி மனசாட்சியோடு சொல்ல முடியுமா?

3) சரி அதை விடுங்க! ஒரு நகர்மன்ற கூட்டம் நடக்கும்போது, அங்கு ஆணையர் மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள். நம் நகராட்சி கூட்டங்களில், ஊடகங்களும் தற்போது உள்ளன, பார்வையாளர்களும் வருகிறார்கள்.

உங்கள் கூற்றுப்படி - பெருவாரியான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, தலைவி மாற்றி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மினிட் புத்தகம் ஆணையரிடம்தானே இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும்? அவர் சும்மா விடுவாரா? “என்ன மேடம், உறுப்பினர்கள் எதிர்க்கவல்லவா செய்தார்கள்? நீங்கள் ஆதரவு என்று எழுதி இருக்கிறீர்களே...?” என்று கேட்க மாட்டாரா?

4) அதையும் விடுங்கங்க. அந்த மினிட் புத்தகம், அதன் பிறகு - கணினி பிரிவுக்குப் போகிறது. அவர்கள் அதனைத் தட்டச்சு செய்து, சில நாட்களில் நகராட்சி இணையதளத்தில் ஏற்றுகிறார்கள். பிற இணையதளங்களும் அதனை வெளியிடுகின்றன. (நீங்களோ, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் முன்னரே தட்டச்சு செய்யப்பட்ட தீர்மானங்களை வாங்கி வெளியிட்டீர்கள்.) “நாங்க எதிர்த்தோம், எதிர்த்தோம்”ன்னு இப்போ தொடர்ந்து பல்லவி பாடும் உறுப்பினர்களான நீங்கள் யாவரும் அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்களோ?

5) அதையும் விடுங்க! நகராட்சியில் ஒரு காரியம் நடக்க - குறைந்தது இரண்டு தீர்மானம் தேவை...
(1) அந்தப் பணிக்கான மன்ற ஒப்புதல்...
(2) அந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அல்லது செலவினத்திற்கு ஒப்புதல்.
நீங்கள் உறுப்பினர் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இது உங்களுக்குத் தெரியாதா?

உங்களை ஏமாற்றி பணிக்கு ஒப்புதல் பெற்றுவிட்டு, ஒப்பந்தப் புள்ளிக்கோ, செலவினத்திற்கோ நகர்மன்ற கூட்டத்தில் அந்தப் பொருள் மீண்டும் வர வேண்டும் என்று நகர்மன்றத் தலைவருக்கு தெரியாதா? அப்போது, “இதற்கு நாங்கள் எங்கே ஆதரவு தெரிவித்தோம்?” என்று நீங்களெல்லாம் கேட்பீர்களே என்பது அவருக்குப் புரியாதா?

சொல்லும் பொய்யை சற்று பொருந்தச் சொல்லக் கூடாதா சகோதரர் ஜஹாங்கீர் அவர்களே...?

6) “சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு புதிய ஆணையர் வந்தார், அவரிடம் ஜனவரி 2013 தீர்மானம் மறைக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது” என கூறுகிறீர்கள். வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி அல்ல, திருநெல்வேலி RDMA. வாகனம் வாங்க திருநெல்வேலி RDMA பரிந்துரைத்து கடிதம் எழுதியது ஆகஸ்ட் 2014. புதிய DMA/ஆணையர் பிரகாஷ் IAS வந்தது நவம்பர் 2014. இரண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்ல முடியுமா கதாசிரியர் அவர்களே?

7) அதை விடுங்கள். திருநெல்வேலி / சென்னை அதிகாரிகளுக்கு - ஜனவரி 2013 நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரியாதா? நீங்கள் மார்ச் 2013இல் கொடுத்த நம்பிக்கை இல்லா கடிதத்தில்தான் அது குறித்து உள்ளதே? அது அப்படி இருக்க - தலைவி நினைத்தாலும் அந்த தீர்மானத்தை மறைக்க முடியுமா?

ஜனவரி 2013 தீர்மானம் எது குறித்து சகோதரரே? நிதி பற்றாக்குறை என பொய்யான காரணம் கூறிய தீர்மானம். ஏப்ரல் 2012 தீர்மானத்தை ரத்து செய்த தீர்மானமா அது? ஜனவரி 2013இல் அந்த தீர்மானம் வந்தபோது, ஏப்ரல் 2012 தீர்மானத்தை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அப்போது கூறியிருக்க வேண்டியதுதானே? மறந்துட்டீங்களோ...?

மாதாமாதம் நகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் அனுப்பும் சென்னையில் உள்ள அரசு அதிகாரிக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் நிதி நிலை தெரியாதா ஜஹாங்கீர் காக்கா...?

நாடகங்கள் முடிந்து வேஷங்கள் களையும் நேரம் இது. நடிப்பு சகிக்கவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ம.ஜஹாங்கிர் (Kayalpatnam) [14 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39598

என்னை காக்கா என்று அழைத்ததினால்... ஹாமிது ரிபாய் தம்பி நீ கேட்டுள்ள ஒருதலைபட்ச கேள்விகளுக்கு விரைவில் பதில் தருகிறேன். இன்ஷாஅல்லாஹ்.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால், ஊர் திரும்பியதும் கண்டிப்பாக பதில் தருகிறேன். இன்ஷாஅல்லாஹ்.

எனது பதிலினால் உன்னை போன்றோர் திருப்தி அடைவார்கள் என்ற நம்பிக்கையில் இல்லை... நடுநிலைவாதிகள் தெளிவு பெறுவதற்காக பதில் தருகிறேன்.

உன்னை போன்றோர்களுக்கு எனது தன்னிலை விளக்கத்திலேயே இவ்வாறு கூறிவிட்டேன்...

(இந்த தன்னிலை விளக்கத்தில், முதலாவது இரண்டாவது தீர்மானம்பற்றி, நான் குறிப்பிட்டிருப்பதை நடுநிலையோடு உன்னிப்பாக படித்தால், இதன் உண்மை நிலவரம் புரியும்.

நடுநிலை தவறி, எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதுகின்றவர்கள் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள வாகனம் சம்பந்தமான செய்திக்கும் உறுப்பினர்களுக்கு எதிராகவே கருத்துக்களை பதிகின்றனர்.

இந்த என்னுடைய தன்னிலை விளக்கத்தையும் அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதும் எனக்குப் புரியும்.

இருப்பினும் மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு மட்டுமே இந்த தன்னிலை விளக்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உண்மை வெல்லும். இன்ஷாஅல்லாஹ்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒன்னும் அவசரமில்லை!
posted by Hameed Rifai (jeddah ksa) [14 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39599

ஒன்னும் அவசரமில்லை ஜஹாங்கீர் காக்கா! உங்க வெளியூர் வேலைகளையெல்லாம் பொறுமையா முடிச்சிட்டு, ஆற அமர உக்காந்து விளக்கம் தாங்கோ...

அதுக்குத்தானே காத்திருக்கிறேன்...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [14 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39601

நடுநிலை தவறி, எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதுகின்றவர்கள் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள வாகனம் சம்பந்தமான செய்திக்கும் உறுப்பினர்களுக்கு எதிராகவே கருத்துக்களை பதிகின்றனர்.(c &p )

என்ற வாசகம் பொத்தாம் பொதுவாக ஒரு உறுப்பினர் தன மறுப்பு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். இவ்விசியத்தில் கருத்து தெரிவித்தவனில் நானும் ஒருவன்.ஒருவேளை என்னை இலைமறை காயாக கோடிட்டிருந்தால் அது அவரின் அறியா புரிதலின் வெளிப்பாடே!.

நான் எந்த இடத்திலும் தலைவியை ஆதரித்தும்,உறுப்பினர்களை எதிர்த்தும் என் கருத்தைப்பதியவில்லை (மறுமுறையும் படித்தாலே புரியும்)

இந்த உறுப்பினரின் தன்னிலை விளக்கத்திற்கு பிறகு எனக்கு தோன்றும் சில நடுநிலைவாதிகளின் வினாக்கள் சிலவற்றை கேட்க விரும்புகிறேன்!

தலைவி அவர்கள் முதல் தீர்மானத்தை மாற்றி எழுதி விட்டார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு.

இந்த குற்றத்தை அந்த நகராட்சி நிர்வாகிகள் எவராலும் கண்டுபிடிக்காத அளவிற்கு ஒழித்து வைக்கப்பட்டிருந்த்தா?

இந்த தீர்மான நகல் வடிவம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வில்லையா? அந்த தீர்மான நகல் வடிவம் உண்மையாக எப்பொழுது கிடைத்து?

உடனேவா அல்லது இதே பொருள் விவாதிக்கப்படும் மற்றைய கூட்டத்திலா அதாவது சுமார் மூன்று வருடங்கள் கழித்துதான் தெரிய வந்ததா?

அப்படி தெரிய வந்த உடனேயே அனைத்து உறுப்பினர்களும் சென்றகூட்டத்தின் தீர்மானங்கள் மறைக்கப்பட்டு,உண்மைக்கு மாறாக மோசடியாக தலைவியால் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்கின்ற ஒரு தீர்மானத்தை ஒட்டுமொத்த உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதா?

வாகனமே வாங்கக்கூடாது என்று அத்தனை உறுப்பினர்களும் திடமான தீர்வாக இருக்கும் வேளையில், அந்த வாகனம் வாங்குவதற்குறிய நிதிநிலைப்பற்றிய விவாதத்திற்கு அவசியமே இல்லையே. அந்த நிதி நிலை இருப்பு பற்றி ஏன் விவாதித்தீர்கள்?

( பொராட்டாவா சீ வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவன் உன் ஜேப்பில் எவ்வளவு காசு இருக்குது என்று கேட்க்கின்றவன் கதையைப்போல் இருக்குதல்லவா)

சரி உறுப்பினர் வாதப்படி எவராலும் கண்டுபிடிக்க இயலாதவகையில் தலைவியின் தனி அதிகாரத்தாலும், துஷ்பிரயோகத்தாலும் முதல் தீர்மானத்தை மாற்றி எழுதி விட்டார்கள் அதை ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருபவர்களே, அதே தலைவி உங்களின் இரண்டாவது தீர்மானத்தையும் (நீங்கள் எல்லோரும் மறுபடியும் எதிர்த்த அதையும்) மினிட் புத்தகத்தில் மறுபடியும் மாற்றி எழுதி தனக்கு சாதகமான பயனை அடயமாட்டார்களா? அதை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும் ?

இதையெல்லாம் விட மேலாக முதல் கூட்டம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவு எங்கே? அதை போட்டுக்காட்டி மக்கள் முன் தலைவியின் முகத்திரையை கிழிக்கலாமே?

அல்லது அவர்கள் உண்மைக்கும் அல்லாஹ்விற்கும் மாற்றமாக மனசாட்சி இல்லாமல் மினிட் புத்தகத்தில் மாற்றி எமுதினார்கள் என்பதை இமியளவும் செந்தேகம் இல்லாமல் தீர்க்கமாக அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக நீங்கள் சொல்ல முன்வருவீர்களேயானால்,தலைவி அவர்கள் திருக்குரானை எடுத்து மேடையில் சத்தியம் செய்ய முன்வந்தார்களே அதேபோல் அவர்கள் பாணியில் அவர்களை சத்தியத்தை செய்ய சொல்லுங்களேன்,இது நீங்கள் கேட்க்கும் வழிமுறையல்ல அவர்கள் சொன்னதால் கேட்க சொல்கிறேன்.

ஆக,நான் மேலே பதிந்த்ருக்கும் கருத்துக்கள் அனைத்தும் நடுநிலையானவர்கள் விளக்கம் பெறநினைக்கும் வினாக்களே! உண்மை நிலையை அல்லாஹ் அறிவான் அவன் மீது பாரத்தை சுமத்துவதை விட்டுவிட்டு,நடுநிலை கருத்தாளர்களை கடித்து குதற்வதென்பது மனித இன மாண்புடைய செயல் அல்ல. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தன்னிலை விளக்கத்தில் தங்களது நேரத்தை தயவு செய்து வீணாக்காதீர்கள் தம்பி.
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [14 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39602

இவரின் தன்னிலை விளக்கம் இந்த இணையதளத்தில் புதியது அல்ல..!

பல விளக்கங்களை படித்தாகி விட்டது,, அதை படித்ததில் எனக்கு ஓன்று மட்டும் உணர முடிந்தது - அது என்னவென்று நடுநிலைவாதிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

இது முன் இந்த 5 வது வார்டு உறுப்பினா் சமூக ஆர்வலர் சாளை சலீம் என்பருக்கு தன்னிலை விளக்கம் அளித்தது குறித்து அன்று நகரின் நடுநிலைவாதிகள் என்ன உணர்ந்தார்களோ அதே உணர்வில் / தெளிவில் தான் இந்த இந்த 5 வது வார்டு உறுப்பினரின் விளக்கமும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

மேலும் சிறு குறிப்பு:- இனி மாறி மாறி தன்னிலை விளக்கம் என்ற பெயரில் இருக்கின்ற கொஞ்ச காலத்தையும் இதில் நேரம் செலுத்தாமல் உருப்படியாக இரண்டாம் குடிநீர் திட்டத்தின் மூலம் இது முன் திருட்டு தனமாக / முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்று இருக்கும் இணைப்பை துண்டிக்க மற்றும் தனவந்தாரால் நகராட்சிக்கு இலவசமாக அளிக்கப்பட சர்வே எண் 278 நிலத்தை பல முறை மாசு கட்டுபாட்டு வாரியம் பயோ கேஸ் திட்டத்திற்கு அந்நிலத்தை தடை செய்த பிறகும் மேலும் மேலும் அந்த நிலத்திலேயே நீங்கள் மல்லுகட்டுவதை நிறுத்தி விட்டு - தானம் அளித்த அதே நபரிடம் வேறு நிலமிருந்தால் கேளுங்கள் அல்லது நகரில் நகராட்சிக்கு சொந்தாமான நிலத்தில் பயோ கேஸ் திட்டத்தை கொண்டு வர குரல் கொடுங்கள் தம்பி ஜகாங்கீர் அவர்களே...!

மீதமிருக்கும் கொஞ்ச காலத்தில் தங்களின் தன்னிலை விளக்கத்தை ஓரம்கட்டுங்கள் தம்பி..!

குறிப்பு:- இனி தம்பி எனக்கு விளக்கம் தர பிறகு நான் தம்பிக்கு விளக்கம் தர இதை நான் விரும்பவில்லை தம்பி.

நகராட்சியில் தாங்களின் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டிட அனுமதி வேண்டி கொடுக்கப்பட்ட விண்ணப்பம் தேங்கி பல மாதம் கிடக்கிறது அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் ஜகாங்கீர் தம்பி.!

தன்னிலை விளக்கத்தில் தங்களது நேரத்தை தயவு செய்து வீணாக்காதீர்கள் தம்பி.

காக்கா ஹாமித் ரிபாய் அவர்களே...! தம்பி ஜகாங்கீர் அவர்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுக்க தம்பி ஜகாங்கீர் பிறகு உங்களுக்கு விளக்கம் அளிக்க இப்படி அவரின் நேரத்தை வீண் போக நீங்கள் காரணமாகதீர்கள்.. காக்கா.. அவரை எங்கள் வார்டுக்கு சேவை செய்ய நீங்கள் தடையாக இருக்க காரணமாகதீர்கள்..காக்கா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by nizam (india) [14 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39605

அட சண்டை போடுவதை விடுங்கப்பா. விவாதம் பண்ணுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. ஏற்கனவே பெய்த அடைமழையில் ஊரின் கால் பகுதி அழிந்துவிட்டது. அடுத்த மழை வரவதற்கு முன்பு தாழ்வான பகுதிகளில் வடிகால் கட்டுவது விசயத்தில் நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பன்றிகாச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த விசயத்தில் நகராட்சி தடுப்பு நடவடிக்கையை ஆக என்ன செய்துள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விசயத்துக்கு இவ்வளவு விவாதம் சண்டை தேவையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தலைப்பிலிருந்தே புத்தி
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [15 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39617

எங்களது 5 ஆவது வார்டு உறுப்பினர் அவர்களுக்கு

தலைவி புராணம் பாடும் வெறும் 10 நபர்கள் மட்டுமே காயல் நகரின் பொது மக்கள் அல்ல. இன்னும் 49,990 க்கும் மேற்பட்ட பொது மக்கள் காயலில் இருக்கிறார்கள்

ஜனநாயக முறையில் வார்டு தேர்தலில் போட்டியிட தெம்பு திராணி இல்லாத வீணர்களும் , வார்டு தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட வீணர்களும் A C அறையில் கணினி முன் உட்கார்ந்துக்கொண்டு கேட்கும் வீண் விதண்டா வாதமான கேள்வி களுக்கு பதில் அளிப்பதில் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காமல் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நீங்கள் முயற்ச்சி எடுத்து நிறைவேற்றிய உங்கள் வார்டு நலப்பணிகளில் மேலும் கவனம் செலுத்தி மீதமுள்ள ஒன்றரை ஆண்டுகளில் உங்களால் முடிந்த அளவு முயற்ச்சி செய்து மேலும் பல நலப்பணிகளை உங்கள் வார்டில் நிறைவேற்ற வேண்டுமாய் 5 ஆவது வார்டு பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தலைவி புராணம் பாடிக்கொண்டு வீண் விதண்டா வாதம் செய்யும் வீணர்கள் தமது சுய லாப நோக்கிலான வெளியூர் / வெளிநாட்டு வேலைகளை புறந்தள்ளி விட்டு மனதில் தெம்பு திராணியோடு அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற நகராட்சி தேர்தலில் ஜனநாயக முறையில் வார்டு தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணியாற்ற முன் வருவார்கள் என்று எதிர் பார்ப்போம்

அப்படி போட்டியிடும் பட்சத்தில் இவர்களுக்கான தகுந்த தண்டனையையும் தகுந்த பாடத்தையும் அல்லாஹ் நிச்சியம் வழங்குவான் அதுக்குதான் நாங்களும் காத்து இருக்கிறோம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...அறிக்கைப்போரில் உங்க நகராட்சி ஓடுது
posted by Omer Abdul Qadir (Chennai) [15 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39621

நடக்கட்டும்.. நடக்கட்டும்... எத்தனை நாள்தான் இப்புடி அறிக்கைப்போரில் உங்க நகராட்சி ஓடுதுன்னு ..உங்களை வச்சுத்தான் காயல் மக்கள் மிகப்பெரிய பாடம் கற்றுக்கொண்டுள்ளார்கள். வரும் காலங்களில் மாற்றம் தெரியும் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...குற்றச்சட்டுகளுக்கு பதில்
posted by ம.ஜஹாங்கிர் (Kayalpatnam) [19 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39695

அஸ்ஸலாமு அலைக்கும்... தம்பி ரிபாய் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி உனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதன் மூலம் மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு கீழ்கண்ட எனது விளக்கத்தை மீண்டும் தரவிரும்புகிறேன்.

குற்றச்சாட்டு : நகராட்சிப் பணிகளைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவருக்குத் தேவையான வாகனம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தது தலைவியல்லவே? 1ஆவது வார்டு உறுப்பினர் சகோதரர் ஏ.லுக்மான் அவர்கள்தானே? (C&P)

பதில் : யார் இல்லை என்று சொன்னது? எனது அறிக்கையின் துவக்கத்திலேயே இதுபற்றி குறிப்பிடும்பொழுது, இந்த பொருள் அஜன்டாவிற்குள் வருவதற்கு லுக்மான் அவர்களின் கடிதமே மேற்கோள்காட்டப்பட்டிருந்தது.

ஆனால் எனது அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்த கீழ்கண்ட வரிகளை மீண்டும் படிக்கவும்...

மேலும், முதல் தீர்மானத்திற்கு முன்பு, நகராட்சிக்கு கூடுதலான பணியாட்களை நியமிக்க வேண்டி தலைவரின் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை சென்றோம். அந்நேரத்தில் நகர்மன்றத் தலைவர் தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை கேட்டறிவதிலேயே கவனம் செலுத்தினார், அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது.

அடுமட்டுமல்ல, தலைவரே அந்த அதிகாரி திரு.ஸெபஸ்டியன் அவர்களிடத்தில் கேட்டார் என்பதையும் இப்போது நான் நினைவு படுத்துகிறேன்.

தலைவருக்கு வாகனம் வாங்குவது அப்போது தனக்கு சரியாகபட்டதால் லுக்மான் காக்கா தனது வேண்டுகோளாக மன்றத்தில் கடிதமாக கொடுத்தார், அதுவே அஜன்டாவில் இடம்பெற்றது.

இப்போது பிரச்சனை அதுவல்ல, உன் அபிமானத்தைபெற்ற உள்ளுர் இணையதளம், ஆதரித்தவர்கள் எதிர்த்து முறண்படலாமா என்று தலைவருக்கு ஆதரவாக குட்டையை குழப்பியதால் பல உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதுதான் உண்மை.

மேலும் வாகனம் வாங்குவது சம்பந்தமாக மன்றத்திற்கு கடிதம் கொடுத்த முன்னாள் உறுப்பினர் சகோ. லுக்மான் அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்று யாரிடமாவது சொல்லியிருக்கிறாரா?

குற்றச்சாட்டு : 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தது 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த ஏ.லுக்மான் அவர்கள் ஆதரவு.
2வது வார்டு சகோதரி மம்செய்து ஃபாத்திமா எதிர்த்தாரா?
4வது வார்டு சகோதரி முத்து ஹாஜரா எதிர்த்தாரா?
5வது வார்டு நீங்கள் ஆதரித்தீர்கள்.
7வது வார்டு திரு அந்தோணி எதிர்த்தாரா?
9வது வார்டு சகோதரி ஹைரியா எதிர்த்தாரா?
13வது வார்டு சகோதரர் சம்சுதீன் ஆதரித்தார்.
14வது வார்டு சகோதரி பாக்கிய ஷீலா எதிர்த்தாரா?
15வது வார்டு சகோதரர் ஜமால் ஆதரவு.
18வது வார்டு சகோதரர் சாமி எதிர்த்தாரா?

அக்கூட்டத்தில் அத்தீர்மானத்தை எதிர்த்து பேசியவர்கள் இரண்டேயிரண்டு உறுப்பினர்கள்தானே? (C&P)

பதில் : இதில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் இருக்கின்றன. அந்த பொருள் விவாதத்திற்கு வந்தபோது, நான் ஏற்கனவே தெரிவித்தபடி நான் உட்பட நான்கு பேர் மட்டுமே இறுதி வரை ஆதரித்தோம்.

சிலர் ஆரம்பத்தில் எதிர்க்காமலும், ஆதரிக்காமலும் மவுனம் காத்தார்கள். விவாதத்தின் இறுதியில் வாகனம் வாங்க தேவையில்லை என்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட காரணங்கள் சரியாக பட்டதால், அமைதியாக இருந்த சில உறுப்பினர்களும் அக்கருத்தை ஆமோதித்தார்கள்.

இறுதியில் முற்குறிப்பிட்ட இந்த நான்கு பேரை தவிர மற்றவர்கள் அப்பொருளை ஆதரிக்காததால் தீர்மானத்தில் அனுமதியில்லை என்றுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு எழுதாமல் மாற்றமாக எழுதியது கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பிரச்சனை உருவானது. அதைத் தொடர்ந்து, அடுத்து தனி தீர்மானத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம் என உறுதி கூறப்பட்டது.

பின்னர் வாகனம் வாங்க பணம் ஒதுக்க வேண்டி ஒப்புதல் கோரும் தீர்மானத்தை அலுவலக பொருளாக வைக்கும்போது அதை பயன்படுத்திக் கொண்டு, அப்பொருளை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

மேலும் அப்பொருளில் இரண்டாம் குடிநீர் திட்டத்தை பார்வையிட தலைவருக்கு வாகனம் வேண்டும் என்ற அலுவலக குறிப்பும் இருந்து, ஆக மொத்தத்தில் தேவையில்லை என்று நிராகரிக்கப்பட்டு, மாற்றமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைவர் தற்போது மறைத்தார் என்பதுதான் எனது குற்றச்சாட்டு.

இந்த விசயத்தில் உண்மைக்கு மாற்றமான தீர்மானம் எழுதியது ஒரு தவறு, ஒழுங்காக எழுதிய தீர்மானத்தை உரியவர்களிடம் மறைத்தது இரண்டாவது தவறு.

குற்றச்சாட்டு : சரி அதை விடுங்க! ஒரு நகர்மன்ற கூட்டம் நடக்கும்போது, அங்கு ஆணையர் மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள். நம் நகராட்சி கூட்டங்களில், ஊடகங்களும் தற்போது உள்ளன, பார்வையாளர்களும் வருகிறார்கள்.

உங்கள் கூற்றுப்படி - பெருவாரியான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, தலைவி மாற்றி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மினிட் புத்தகம் ஆணையரிடம்தானே இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும்? அவர் சும்மா விடுவாரா? “என்ன மேடம், உறுப்பினர்கள் எதிர்க்கவல்லவா செய்தார்கள்? நீங்கள் ஆதரவு என்று எழுதி இருக்கிறீர்களே...?” என்று கேட்க மாட்டாரா? (C&P)

பதில் : ஆணையாளர் மினிட்புக்கை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் தீர்மானங்கள் செயல் வடிவமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் அவர்கள் மினிட் புத்தகத்தை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

தலைவர் மீது சந்தேகப்பட்டு, அவர் ஒழுங்காக எழுதியிருக்கிறாரா என்று ஆணையாளர் சரிபார்ப்பது இல்லைதான். அந்த அளவுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எந்த தலைவரும் அப்படி தவறு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

இம்மாதிரி விசங்களில் அவர் தவறு செய்கிறார் என்று கண்டுபிடிக்கும் வரை நாங்களும் அப்படித்தான் நம்பினோம். ஆகவே பெரிய தவறை கண்டுபிடித்து விட்டதைப்போல் தம்பி என்னை மடக்கி சந்தோஷப்பட தேவையில்லை. மீறி சந்தோஷப்பட்டால் பட்டுக்கொள். உண்மையைத்தான் நான் எழுதி இருக்கிறேன்.

மேலும் இந்த தலைவர் இப்படி எல்லாம் மாற்றி எழுதுவார் என்பதற்கு இந்த விசயம் மட்டும் ஆதாரமில்லை, பலவிசயங்களில் இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளார். என்பதுதான் உண்மை. இருப்பினும் ஒன்றைமட்டும் ஆதாரமாக தம்பிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தம்பி நீ நம்புகிற, நீ கருத்து பதிகிற இணையதளமே இதற்கு ஆதாரமாகும். அதாவது நகராட்சி டிராக்டர் விசயமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றமாக தலைவர் மினிட் புக்கில் எழுதினார் என்பதற்கு கீழ்கண்ட ஆதாரங்களை முன்வைக்கிறேன்.

பழுதடைந்த அந்த வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் கூட இல்லையென்றும், எனவே இதற்கு இவ்வளவு தொகை செலவழிப்பதை விட, புது வாகனம் வாங்கலாம் என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.

தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர். (News ID : 8410)

ஆனால் பின்னர் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தலைவர் என்ன சொன்னார் என்பதை அறிய அதே இணையதளத்தில் வெளிவந்த செய்தியை கீழே தருகிறேன்.

பதிவுப் புத்தகம் இல்லாத வாகனத்திற்கு எண் எவ்வாறு வந்தது என்று நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார். பெயிண்டர் தவறுதலாக எண்ணைப் பதிந்துவிட்டார் என பொருத்துநர் நிஸார் தெரிவித்தார்.

பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் கடந்த கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் மாற்றியெழுதப்பட்டது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். அதே கேள்வியை 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவும் வலியுறுத்தினார்.

அன்றைய கூட்டத்தில் இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர் சுகு பழைய நகர்மன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும், கடந்த 20 வருடங்களாக ஆவணம் இல்லாமல் ஓடிய வண்டி குறித்து தெரிந்திருந்தும் அவர் பழைய நகர்மன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார்.

இவ்வாறாக, செய்யாததையெல்லாம் செய்ததாகவும், செய்ததையெல்லாம் செய்யவில்லை என்றும் தலைவராகிய தானோ - உறுப்பினர்களோ மாற்றிப் பேசும் வாய்ப்பை ஆதாரப்பூர்வமாகப் போக்கிடவே கூட்டங்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தான் தெரிவிப்பதாகவுமு் அவர் மேலும் தெரிவித்தார்.

“தெரியாமல் செய்துவிட்டேன்” என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதானே என்று 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் தெரிவித்தார். தெரியாமல் செய்ய இதில் ஒன்றுமில்லை என்றும், அன்று எதிர்த்து கருத்து தெரிவிக்காத பல உறுப்பினர்கள் இன்று அதுகுறித்து கருத்து தெரிவிப்து வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

வாடகைக்கு வாகனம் எடுக்கவே அக்கூட்டத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டதாக 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். அதனை மறுத்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நகராட்சி பொது நிதியிலிருந்து பெருந்தொகையை வாடகைக்காகவே கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான் பழைய வாகனத்தைப் பழுது பார்க்கும் அம்சம் கூட்டப் பொருளில் சேர்க்கப்பட்டதாகவும், இன்று சொல்லப்படும் பலதரப்பட்ட தகவல்களை அன்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் தெரிவிக்காமல் இருந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். (News ID : 9565)

இந்த கடைசி பாராவில் வாடைக்கு வாகனம் எடுக்கவே என துவங்கும் வரிக்கு முன்னால், புதிய வாகனம் வாங்கும் வரை என்ற வரி இருக்கவேண்டும், ஆனால் அந்த இணையதளத்தில் தவறுதலாக விடுபட்டு இருக்கின்றது. படிப்பவர்கள் குழம்பக்கூடாது என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன்.

இப்போது நான் கேட்கின்ற கேள்வி உறுப்பினர்களாகிய எங்களை நம்பவேண்டாம், நீ நம்புகிற இணையதளம் “புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்.” எனச் சொல்கிறது.

ஆனால் “இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். “ என்றும்,

“தெரியாமல் செய்ய இதில் ஒன்றுமில்லை என்றும், அன்று எதிர்த்து கருத்து தெரிவிக்காத பல உறுப்பினர்கள் இன்று அதுகுறித்து கருத்து தெரிவிப்து வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். “ என்றும் அதே இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இப்போது பொய் சொல்வது தலைவரா? இணையதளமா? இதை தம்பியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் சுற்றிவளைத்து தத்துவம் பேசி, வக்கீல் போல் வாதாடி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, தலைவி புராணம் பாடுவதாக இருந்தால், தாராளமாக பாடட்டும் நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.

குற்றச்சாட்டு : அதையும் விடுங்கங்க. அந்த மினிட் புத்தகம், அதன் பிறகு - கணினி பிரிவுக்குப் போகிறது. அவர்கள் அதனைத் தட்டச்சு செய்து, சில நாட்களில் நகராட்சி இணையதளத்தில் ஏற்றுகிறார்கள். பிற இணையதளங்களும் அதனை வெளியிடுகின்றன. (நீங்களோ, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் முன்னரே தட்டச்சு செய்யப்பட்ட தீர்மானங்களை வாங்கி வெளியிட்டீர்கள்.)

“நாங்க எதிர்த்தோம், எதிர்த்தோம்”ன்னு இப்போ தொடர்ந்து பல்லவி பாடும் உறுப்பினர்களான நீங்கள் யாவரும் அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்களோ? (C&P)

பதில் : நகர்மன்ற தலைவர் மினிட் புக்கில் எழுதுவதைதான், நகராட்சி இணையதளம் வெளியிடும், எனது செல்வாக்கை பயன்படுத்தி நகர்மன்ற இணையதளத்தில் அத்தீர்மானம் ஏறுவதற்கு முன்னால் அதைபெற்று நான் எனது இணையதளத்தில் வெளியிடவில்லை.

மேலும் அப்பொருள் இடம்பெற்ற கூட்டம் சம்பந்தமாக எதையும் நான் வெளியிட்டதாக நினைவில்லை, இருந்தால் சுட்டிக்காட்டவும் ஏற்றுக்கொள்கிறேன்.

நகர்மன்ற இணையதளமும், என்னோடு தொடர்புடைய இணையதளமும் ஒருபுறம் இருக்கட்டும், நீ உண்மையானது என நம்புகின்ற, நீ கருத்துப்பதிகிற இணையதளம் இப்பொருள் குறித்து என்ன சொல்கிறது என்பதை தயவு செய்து ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன்.

உனது அபிமான இணையதளம், அந்த பொருள் இடம்பெற்ற கூட்டத்தில், அப்பொருள் உட்பட மொத்தம் 25 பொருள்களில், 8 பொருள்களுக்கு மட்டுமே தீர்மான முடிவை சொல்லியிருக்கிறது. அதில் டிராக்டர் குறித்த தீர்மானமும் அடங்கும்.

மீதி உள்ள பொருள்களின்கீழே விவாதத்தோடு தனது எழுத்தை முடித்துவிடுகின்றது.

இப்பொழுது சொல், உறுப்பினர்கள் உள்ளபடியே இந்த பொருளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் ஏன் அந்த உண்மையை உங்கள் அபிமான இணையதளம் செய்தியில் குறிப்பிடவில்லை?

அதுவும் அந்த இணையதளத்தாரின் ஆதரவைப்பெற்ற தலைவருக்கு வாகனம் வாங்கும் விசயத்தில் இப்படி கவனக்குறைவாகவா இருந்திருப்பார்கள்?

மேலும் 8 பொருள்களுக்கு தீர்மான முடிவை எழுதியவர்கள், முக்கியமான இந்த பொருளுக்கு முடிவு எழுதாமல் ஏன் விட்டார்கள். இதன் மூலம் தீர்மானம் நிறைவேறவில்லை என்பது தௌிவாகிறது.

v குற்றச்சாட்டு : அதையும் விடுங்க! நகராட்சியில் ஒரு காரியம் நடக்க - குறைந்தது இரண்டு தீர்மானம் தேவை...
(1) அந்தப் பணிக்கான மன்ற ஒப்புதல்...
(2) அந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அல்லது செலவினத்திற்கு ஒப்புதல்.

நீங்கள் உறுப்பினர் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இது உங்களுக்குத் தெரியாதா?

உங்களை ஏமாற்றி பணிக்கு ஒப்புதல் பெற்றுவிட்டு, ஒப்பந்தப் புள்ளிக்கோ, செலவினத்திற்கோ நகர்மன்ற கூட்டத்தில் அந்தப் பொருள் மீண்டும் வர வேண்டும் என்று நகர்மன்றத் தலைவருக்கு தெரியாதா? அப்போது, “இதற்கு நாங்கள் எங்கே ஆதரவு தெரிவித்தோம்?” என்று நீங்களெல்லாம் கேட்பீர்களே என்பது அவருக்குப் புரியாதா?

சொல்லும் பொய்யை சற்று பொருந்தச் சொல்லக் கூடாதா சகோதரர் ஜஹாங்கீர் அவர்களே...? (C&P)

பதில் : திட்டமிட்டு தவறுதலாக எழுதப்பட்ட தீர்மானம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் தொடர்ந்து கூட்டப்புறக்கணிப்பு, வெளிநடப்புகள் அவ்வப்போது நடைபெற்றதால், அதற்கு பின்னர் கூடிய கூட்டத்தில் செலவு ஒப்புதலை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பொருளை பயன்படுத்தி, எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

செலவு ஒப்புதலுக்கு வருகின்ற பொழுது பிரச்சனை வரும் என்று தலைவருக்கு தெரியாதா என்று கேட்கிறாய். தெரியத்தான் செய்யும், மோதிப் பார்ப்போம் என்று முயற்சித்திருக்கலாம். அதற்கு ஆதாரம்தான் டிராக்டர் வாங்கும் விசயம் குறித்த தலைவரின் பேச்சு. அவர் அதில் பொய் சொல்கிறார் என்பதற்கு நீங்கள் நம்புகிற இணையதளமே சாட்சி, அதில் பொய் சொன்னவர் இதில் பொய் சொல்லக்கூடாதா?

குற்றச்சாட்டு : “சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு புதிய ஆணையர் வந்தார், அவரிடம் ஜனவரி 2013 தீர்மானம் மறைக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது” என கூறுகிறீர்கள். வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி அல்ல, திருநெல்வேலி RDMA. வாகனம் வாங்க திருநெல்வேலி RDMA பரிந்துரைத்து கடிதம் எழுதியது ஆகஸ்ட் 2014. புதிய DMA/ஆணையர் பிரகாஷ் IAS வந்தது நவம்பர் 2014. இரண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்ல முடியுமா கதாசிரியர் அவர்களே? (C&P)

பதில் : சென்னையில் உள்ள நிர்வாக இயக்குனர் விசயத்தில் வேண்டுமென்றால் நான் தவறுதலாக புதிய இயக்குனர் என்று குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் அது பெரிய குறையல்ல, காரணம் இவ்விசயமாக பழைய தீர்மானத்தை ஆதாரமாக வைத்து வாகனம் வாங்கலாம் என ஒப்புதல் அளித்தவர் புதிய நிர்வாக இயக்குனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

RDMA பரிந்துரை கடிதம் எழுதிய தேதியிலிருந்து பழைய இயக்குனர் பணிமாறிய காலம் வரையுள்ள நாட்கள் நீ குறிப்பிட்டதை வைத்து பார்க்கும் போது, சுமார் 3 மாதங்கள் ஆகும். இந்த மூன்று மாதங்களில் முடிவுக்குவராத இந்த விசயம், புதிய இயக்குனர் வந்தபோது அனுமதிபெற்று முடிவுக்கு வருகிறது. அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியை அடிப்படையாக கொண்டுதான் நான் இந்த வாதத்தை வைக்கிறேன்.

முன்னாள் இயக்குனரின் பணி நிறைவுபெற்று, சுமார் இரண்டு மாதம் கழித்து புதிய இயக்குனர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்தானே? புதிய இயக்குனரிடத்தில் பென்டிங்கில் இருக்கும் அந்த கோரிக்கையை தலைவர் ஏன் வலியுறுத்தி, இரண்டாவது தீர்மானத்தை மறைத்து ஒப்புதல் பெற்றிருக்க கூடாது?

நீ குறிப்பிடுகின்ற RDMA-யூம் புதியவர்தான், நகராட்சியில் இருந்து இக்கோரிக்கையை அனுப்பிவைக்கும் ஆணையாளரும் புதியவர்தான். இதுசம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது இவ்விருவரும் பொறுப்பில் இருந்தவர்கள் இல்லை.

ஆக ஆணையர், RDMA, இயக்குனர் மூவருமே இவ்விசயம் சம்பந்தமான சர்ச்சைகளை அறியாதவர்கள். இவ்விசயம் தெரியவந்ததும் உறுப்பினர்கள் தங்கள் புகாரை இயக்குனருக்கு அனுப்பிவைத்து விட்டார்கள்.

அதுசரி வாகனம் வாங்க பரிந்துரைத்தது தலைவி இல்லை என சொல்கிறாய் அப்படியானால், தலைவிக்கு தெரியாமல், தலைவி கேட்டுக் கொள்ளாமல் 1000 தீர்மானங்கள் எழுதப்பட்டுள்ள மினிட் புத்தகத்தை ஆணையாளர் படித்து, இந்த ஒரேயொரு (பொய்யான) தீர்மானத்தை மட்டும் கண்டுபிடித்து, அனுப்பினாரா? அதற்குத்தான் RDMA பரிந்துரைத்தாரா?

தம்பி இந்த விசயத்திற்கு இந்த அளவு போதுமா விளக்கம் ?

குற்றச்சாட்டு : அதை விடுங்கள். திருநெல்வேலி / சென்னை அதிகாரிகளுக்கு - ஜனவரி 2013 நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரியாதா? நீங்கள் மார்ச் 2013இல் கொடுத்த நம்பிக்கை இல்லா கடிதத்தில்தான் அது குறித்து உள்ளதே? அது அப்படி இருக்க - தலைவி நினைத்தாலும் அந்த தீர்மானத்தை மறைக்க முடியுமா? (C&P)

பதில் : 2013 மார்ச்சில் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்களில் ஏரேனும் ஆணையருக்கு, RDMA-க்கு, இயக்குனருக்கு நினைவு படுத்தியிருந்தால் அவர்கள் பரிசீலிப்பார்கள்.

எங்களில் எவருக்கும் தெரியாமல் ஆணையாளர் மூலமாக தலைவர் மேற்கொண்ட முயற்சியில். அதிகாரிகள், முதல் தீர்மானத்தை மட்டுமே நம்பி முடிவுக்கு வரமுடியுமே தவிர, நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் கொடுத்த நேரத்தில் பொறுப்பிலேயே இல்லாத இந்த மூவரும் எப்படி இதுபோன்ற பிரச்சனை உள்ளது என்று யூகிக்க முடியும்?

அந்த நம்பிக்கையில்லா தீர்மான குற்றச்சாட்டில் இவ்வாகன விசயமும் இருக்கலாம் என்று அவர்கள் எப்படி யூகிக்க முடியும்?

தம்பி இப்பொழுது நீ என்ன சொல்ல வருகிறாய். இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றவே இல்லை என்று சொல்லவருகிறாயா? அல்லது தலைவர் அதை மறைக்கவில்லை என்று சொல்ல வருகிறாயா? அல்லது மறைக்காமல் தீர்மானத்தை அதிகாரிகளிடத்தில் காட்டினார் என்று சொல்ல வருகிறாயா? அவ்வாறு காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு, முதல் தீர்மானத்தின் அடிப்படையில் வாகனம் வாங்க ஒப்புதல் அளித்தார்கள் என சொல்ல வருகிறாயா?

குற்றச்சாட்டு : ஜனவரி 2013 தீர்மானம் எது குறித்து சகோதரரே? நிதி பற்றாக்குறை என பொய்யான காரணம் கூறிய தீர்மானம். ஏப்ரல் 2012 தீர்மானத்தை ரத்து செய்த தீர்மானமா அது? ஜனவரி 2013இல் அந்த தீர்மானம் வந்தபோது, ஏப்ரல் 2012 தீர்மானத்தை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அப்போது கூறியிருக்க வேண்டியதுதானே? மறந்துட்டீங்களோ...?

மாதாமாதம் நகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் அனுப்பும் சென்னையில் உள்ள அரசு அதிகாரிக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் நிதி நிலை தெரியாதா ஜஹாங்கீர் காக்கா...? (C&P)

பதில் : முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஊருக்கு ஏதேனும் உருப்படியாக செய்துவிட்டு, வாகனம் வாங்குவதுபற்றி முடிவு செய்வோம் என்றுதான் முடிவு செய்தோம், அதைதான் தலைவி ஒப்புதல் அளித்ததாக மாற்றி எழுதிவிட்டார்.

இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் போது. ஊரில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், அதற்கு நிதி தேவைப்படும் என நாங்கள் கருதியதால், நிதிநிலையை கருத்தில் கொண்டு என்ற வார்த்தையை தான் நாங்கள் பயன்படுத்தினோம், ஆனால் தலைவர் நிதி பற்றாக்குறை என்று தவறுதலாகவோ, திட்டமிட்டோ எழுதிவிட்டார்.

இதுகுறித்தும் எனது முந்தைய தன்னிலை விளக்கத்தில் தௌிவாக சொல்லியுள்ளேன்.

எனது விளக்கத்தை நிறைவு செய்வதற்கு முன்னால் ஒரு விசயத்தை இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்.

தலைவருக்கு வாகனம் தேவையா இல்லையா? அதுவும் மூண்றரை வருடம் கழித்த பின்னும் அவசியம்தானா? வாகனம் இல்லாத காரணத்தினால்தான் நகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு முன்பு இருந்தவர்கள், நகராட்சி பொதுநிதியில் வாகனம் வாங்கி, மாதாமாதம் அதற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்தார்களா? தலைவருக்கு சொந்த வாகனம் இல்லையா? தேர்தல் நேரத்திலும், ஆரம்பத்தில் பலமாதங்களிலும் அவருக்கு சொந்தமான வாகனத்தில் நகர்மன்றத்திற்கு அவர் வரவில்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது, என்னுடைய தன்னிலை விளக்கத்தின் நோக்கம் அல்ல.

வாகனம் சம்பந்தமான பொருள் மன்றத்திற்கு வந்தபோது, ஆதரித்த ஒரே காரணத்திற்காக வேண்டி, பொய்யான தீர்மானத்திற்கு துணைநிற்க விரும்பவில்லை என்பதே எனது தன்னிலை விளக்கத்திற்கு உண்மையான நோக்கமாகும்,

இதை நீயும், உன்போன்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது நூறு சதவிகிதம் நிச்சயம். மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மேலும் விடாப்பிடியாக நீ எழுதிக்கொன்டே சென்றால், அதற்கு பதில் அளிக்க எனக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.

குற்றச்சாட்டு : நாடகங்கள் முடிந்து வேஷங்கள் களையும் நேரம் இது. நடிப்பு சகிக்கவில்லை. (C&P)

பதில் : உண்மைதான் தம்பி! உன்னைப்போன்ற பலநடிகர்கள் பங்கேற்ற மெகா நாடக குழுவிலிருந்து பலர், இப்போது இயக்குனர்களின் போக்கு பிடிக்காததால் விலகிவிட்டனர். ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. உன்னைப் போன்று ஒரு சிலர் மட்டுமே நாடகத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இறைவன் உதவியால், இந்நாடக கம்பெனி விரைவில் மூடுவிழா காண வேண்டும் என ஊர்நலன் நாடுவோர் விரும்புகின்றனர். இவ்விருப்பத்தை ஏற்று, நாடக கம்பெனியைவிட்டு ஒதுங்கினாலும் சரி அல்லது தொடர்ந்து தலைவி புராணம் பாடிக்கொண்டு நாடக மேடையில் வேஷம் போட்டு நடித்துக் கொண்டு இருந்தாலும் சரி உனது விருப்பம்.

கதை, வசனம், நாடகம், வேஷம், சகிக்கலை, எடுபடலை, போன்ற சொற்களை நீ எனக்கு எதிராக பயன்படுத்தியதை நான் தாங்கிக் கொண்டேன், எனவே என்னுடைய பதிலையும் நீ தாங்கிக்கொள்வாய் என்று நம்புகிறேன்.

மஅஸ்ஸலாமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தல வலிக்குதே...
posted by Hameed Rifai (Jeddah) [19 March 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39696

ஐயோ...... காக்கா, இவ்வளவு நீ.........ண்ண்ண்ட விளக்கம் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல காக்கா.

வரிக்கு வரி பதில் தந்துதான் இருக்கிறீங்க! ஆனா, புரியத்தான் மாட்டேங்குது! தப்பா நெனைக்காதீங்க காக்கா. எனக்கு தல வலி தாங்க முடியல. உடனே ஒரு மாத்திரை போட்டுடனும்.

அடுத்த முறையும் நீங்க கவுன்சிலர்க்கு நிக்கனும் காக்கா. (நகராட்சிய ஆண்டவன்தான் காப்பாத்தனும்!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Hameed Rifai (Jeddah) [19 March 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39699

“மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு” என தாங்கள் பதிந்துள்ள விலாவாரியான பதிலை கண்டேன். சிலருக்கு, நாம் நீண்ட பதிலை கொடுத்தால், மக்கள் உண்மையாக இருக்குமோ என்று நினைப்பார்கள் என்ற நம்பிக்கையில் - நீளமாக பதில் கொடுப்பார்கள். அந்த வரிசையில்தான் தங்கள் பதிலும் உள்ளது.

உங்கள் அறிக்கை வாசகம்:

"... அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது..." C&P

இது உங்கள் அறிக்கை வாசகம். அதில் நீங்கள் பதிவு செய்துள்ள வாசகம் - "தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க". தங்களின் இந்த வாசகம் பச்சை பொய்! தலைவி கூறி அந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை, லுக்மான் காக்கா அவர்களின் சொந்த விருப்பமே என்பதை லுக்மான் காக்கா அவர்களின் பேட்டி தெளிவுபடுத்தியுள்ளது.

உங்கள் அறிக்கை வாசகம்:

"...எங்கள் மூவரோடு மன்றத்திற்கு கடிதம் கொடுத்த சகோதரர் A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம்..." (C&P)

இந்த பதிவில் இருந்து தெளிவாக தெரிகிறது, தங்களுக்கு அன்றைய தின நடப்புகள் எதுவும் மனதில் பதியவில்லை. இணையதள செய்தியை வைத்து, கற்பனையாக தான் கூறுகிறீர்கள் என்று!

நான் அறிந்த வரை, அந்தக் கூட்டத்தில் 15 உறுப்பினர்கள்தான் கலந்துக்கொண்டார்கள். லுக்மான் காக்கா, மம்மி ஹாஜியார் மற்றும் சாமு ஹாஜி ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவேயில்லை.

இதனை அந்தச் செய்தியிலேயே காண முடிகிறது. புகைப்படத்திலும் அவர்கள் இல்லை. 1வது வார்டு உறுப்பினர் சம்பந்தமான பிற பொருட்களில் - அவர் பேசியதாக பதிவும் இல்லை.

அப்படி இருக்க,

“A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம் ...” C&P

என்று கூட்டத்திலேயே இல்லாத ஒரு உறுப்பினரை, இறுதி வரை அந்தக் கூட்டத்தில் தங்களுடன் அந்த தீர்மானத்தை ஆதரித்தார் என்று எப்படி கூறினர்கள்?

“சிலர் ஆரம்பத்தில் எதிர்க்காமலும், ஆதரிக்காமலும் மவுனம் காத்தார்கள். விவாதத்தின் இறுதியில் வாகனம் வாங்க தேவையில்லை என்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட காரணங்கள் சரியாக பட்டதால், அமைதியாக இருந்த சில உறுப்பினர்களும் அக்கருத்தை ஆமோதித்தார்கள்.” C&P

தங்களின் இந்த கூற்று பொய் என்று இணையதள செய்தியும், அந்தக் கூட்டத்தை செய்தியாக வெளியிட்ட எஸ்.கே.சாலிஹ் அவர்களின் கருத்தும் தெளிவு படுத்துகிறது.

பிற உறுப்பினர்கள் ஆதரவு / எதிர்ப்பு என தலையை அசைத்தார்களா? கையை உயர்த்தினார்களா?? அல்லது சைகை மொழியில் பேசினார்களா???

குறிப்பிடும்படி பேசியிருந்தால் அவர்கள் பேசியது செய்தியில் பதிவாகியிருக்கும். இறுதியில் வாக்கெடுப்பு நடந்திருந்தால் அதுவும் பதிவாகியிருக்கும்.

எந்தெந்த உறுப்பினர்கள் பின்னர் எதிரிப்பு தெரிவித்தார்கள் என்று இறைவன் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் சகோதரரே!

சகோதரர் எஸ்.கே.சாலிஹ் பதிவு செய்தது போல், ஒவ்வொரு பொருளுக்கும் 18 பேரும் கருத்து சொல்லும் வழக்கம் நகர்மன்றத்தில் அப்போது இல்லை. பின்னர்தான் வந்தது.

எழுத நிறைய உள்ளது. பின்னர் எழுதுகிறேன் இறைவன் நாடினால்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பாவம்..... உங்கள் பொய்யை அதிகாரிகள் நம்பவே இல்லை!!!
posted by Hameed Rifai (jeddah ksa) [20 March 2015]
IP: 49.*.*.* Australia | Comment Reference Number: 39710

எனது முந்தைய கருத்துப் பதிவின் (Comment Reference Number: 39699) தொடர்ச்சி:-

“அவ்வாறு எழுதாமல் மாற்றமாக எழுதியது கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பிரச்சனை உருவானது. அதைத் தொடர்ந்து, அடுத்து தனி தீர்மானத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம் என உறுதி கூறப்பட்டது.” C&P

வாகனம் வாங்குவது குறித்து தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்று எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அடுத்து தனி தீர்மானத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம் யாரால் உறுதி கூறப்பட்டது? சொல்ல முடியுமா சகோதரரே?

“மேலும் அப்பொருளில் இரண்டாம் குடிநீர் திட்டத்தை பார்வையிட தலைவருக்கு வாகனம் வேண்டும் என்ற அலுவலக குறிப்பும் இருந்து” C&P

நீங்கள் கூறுவது போல், தனி தீர்மானத்தில் மாற்றிக்கொள்ளலாம் என்று யாராலோ உறுதி கூறப்பட்டிருந்தால், அத்தீர்மானத்த ரத்து செய்யச் சொல்லியல்லவா ஜனவரி 2013இல் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்? ஏன் அரசு DGSD தொகைக்கு ஒப்புதல் வழங்கலாம் என அலுவலக குறிப்புடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது? அதுவும் உறுப்பினர்கள் வெளிநடப்புகள் துவங்கி 7 மாதங்கள் கழித்து கொண்டு வரப்பட்ட புதிய தீர்மானத்தில்??

“ஆணையாளர் மினிட் புக்கை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் தீர்மானங்கள் செயல் வடிவமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் அவர்கள் மினிட் புத்தகத்தை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தலைவர் மீது சந்தேகப்பட்டு, அவர் ஒழுங்காக எழுதியிருக்கிறாரா என்று ஆணையாளர் சரிபார்ப்பது இல்லைதான்.” C&P

கூட்டம் முடிந்ததும் - தீர்மானப் புத்தகத்தை நகராட்சி ஆணையர் பார்க்கவே மாட்டார் என நீங்கள் கூறுவதைக் கேட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மினிட் புத்தகம் எதற்கு உள்ளது என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் நீங்கள் மூன்றரை ஆண்டுகளை ஓட்டியிருக்கிறீர்கள். அல்லாஹ்தான் இந்த ஊரையும், குறிப்பாக உங்கள் வார்டையும் காப்பத்தனும்! நல்ல வேலை..... ஆணையரை ‘கூமுட்டை’ன்னு சொல்லாமல் விட்டீர்களே...? சந்தோசம்.

“உனது அபிமான இணையதளம், அந்த பொருள் இடம்பெற்ற கூட்டத்தில், அப்பொருள் உட்பட மொத்தம் 25 பொருள்களில், 8 பொருள்களுக்கு மட்டுமே தீர்மான முடிவை சொல்லியிருக்கிறது. அதில் டிராக்டர் குறித்த தீர்மானமும் அடங்கும்.

மேலும் 8 பொருள்களுக்கு தீர்மான முடிவை எழுதியவர்கள், முக்கியமான இந்த பொருளுக்கு முடிவு எழுதாமல் ஏன் விட்டார்கள். இதன் மூலம் தீர்மானம் நிறைவேறவில்லை என்பது தௌிவாகிறது.” C&P

என்ன லாஜிக் சகோதரரே? ரொம்ப சிரமப்பட்டிருப்பீர்கள் போல தெரியுதே.....? இருக்கிறது. 25 பொருள்களில், 8க்கு தீர்மானம் முடிவு குறித்து இணையதளம் எழுதியது, வாகனம் குறித்து எழுதவில்லை, அதனால் அது நிறைவேறவில்லை என்பது நிரூபணம் என்று கூறுகிறீர்கள். சரி அப்படியே வச்சிக்குவோம்.

அப்போ, மீதி 16 தீர்மானங்கள் குறித்த முடிவையும் இணையதளம் எழுதவில்லை, அவையும் நிறைவேறவில்லை என கூற வருகிறீர்களா ஜஹாங்கீர் காக்கா??? ஏன் காக்கா, இப்படியெல்லாம் எங்க நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

“அதற்கு பின்னர் கூடிய கூட்டத்தில் செலவு ஒப்புதலை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பொருளைப் பயன்படுத்தி, எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம்.” C&P

இதிலிருந்தே உங்கள் கருத்தில் முரண்பாடு தெரிகிறதே...? "அடுத்து தனி தீர்மானத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம் என உறுதி கூறப்பட்டது" என்று கூறினீர்கள். அது உண்மையென்றால், ரத்து செய்ய அல்லவா தீர்மானம் வந்திருக்கவேண்டும்?

புறக்கணிப்புகளுக்குப் பின்னர் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கூட்டங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இந்த வாகனத் தீர்மானத்தை ரத்து செய்ய ஏன் நீங்கள் முயற்சி செய்யவில்லை?

‘பயன்படுத்தி... பயன்படுத்தி... பயன்படுத்தி...!’ தற்போது நீங்கள் கூறும் இதுதான் உண்மை:

"அதற்குப் பின்னர் கூடிய கூட்டத்தில் செலவு ஒப்புதலை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பொருளை பயன்படுத்தி எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம்". C&P

அதாவது - “எங்களுக்கு அடிப்பணியாத உனக்கு வண்டியாவது, கத்திரிக்காயாவது! இதோ விட்டேன் பார் - நிதி இல்லை பட்டம்” என்ற போக்கில் அல்லவா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்? உங்களைச் சார்ந்தோரை விடுங்கள்! பொதுமக்கள் மண்டைகளிலும் களிமண்தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?

“ஆக ஆணையர், RDMA, இயக்குனர் மூவருமே இவ்விசயம் சம்பந்தமான சர்ச்சைகளை அறியாதவர்கள். எங்களில் எவருக்கும் தெரியாமல் ஆணையாளர் மூலமாக தலைவர் மேற்கொண்ட முயற்சியில். அதிகாரிகள், முதல் தீர்மானத்தை மட்டுமே நம்பி முடிவுக்கு வரமுடியுமே தவிர, நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் கொடுத்த நேரத்தில் பொறுப்பிலேயே இல்லாத இந்த மூவரும் எப்படி இதுபோன்ற பிரச்சனை உள்ளது என்று யூகிக்க முடியும்?

அந்த நம்பிக்கையில்லா தீர்மான குற்றச்சாட்டில் இவ்வாகன விசயமும் இருக்கலாம் என்று அவர்கள் எப்படி யூகிக்க முடியும்?” C&P

வருத்தமாக இருக்கிறது சகோதரரே..... மூன்றரை ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறீங்க! ஒரு அரசு அலுவலகம் எப்படி இயங்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறீங்களே.....? உண்மையை சொல்லப்போனால், இணை இயக்குனர் செபாஸ்டினிடம் நீங்கள்தான் நிறைய கற்றுக்கொண்டு வந்திருக்கவேண்டும். பா...வம் நீங்க..... தலைவி கற்றுக்கொண்டு வந்துவிட்டு, உங்களை எல்லாம் படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறார்.

அது இருக்கட்டும், ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி மாற்றலாகி போனால், அவர் காலத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அவர் பார்சல் கட்டி கையில் எடுத்துக்கொண்டு போய்விடுவாரா?

அப்படியானால், முன்னாள் ஆணையர் தனது புது நகராட்சி வாலாஜாபேட்டைக்கு இது சம்பந்தமான ஆவணங்களை கொண்டு போய்விட்டாரா?

மறைந்த RDMA மோகன், தனது மண்ணறைக்கு இது சம்பந்தமான ஆவணங்களை கொண்டு போய்விட்டாரா?

அல்லது பழைய CMA காம்ப்ளே, தனது புது பொறுப்பு வகிக்கும் நிறுவனத்திற்கு எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டாரா?

சகோதரரே, அரசு அலுவலகங்களில் - அனைத்து ஆவணங்களும் - அந்தந்த செக்சனில், அந்தந்தக் கோப்புகளில் பராமரிக்கப்படும். ஒரு முடிவெடுக்கப்படும்போது, பல சிறு அலுவலர்கள் கையெழுத்திட்டுத்தான் மேலேயே வரும். இதனால்தான் அரசு அலுவலகங்களில் முடிவுகளுக்கு காலதாமதம் ஆகிறது. இதைத்தான் RED TAPISM (சிவப்பு நாடா முறை) என்பார்கள்.

உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும் - மாறியது ஆணையர், RDMA மற்றும் CMA மட்டும்தானே? அவர்கள் கீழ் இருந்த அதிகாரிகள் அல்லவே?? ஒவ்வொரு அதிகாரியும் மாறும்போது, முந்தைய நடப்புகள் புது அதிகாரிக்குத் தெரியாது என்று கூறுவது அறியாமையின் உச்சக்கட்டம்!

காயல்பட்டினத்தின் தலைவிதி, உங்களைப் போன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் என்பது!!!

“தம்பி இப்பொழுது நீ என்ன சொல்ல வருகிறாய். இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றவே இல்லை என்று சொல்லவருகிறாயா? அல்லது தலைவர் அதை மறைக்கவில்லை என்று சொல்ல வருகிறாயா? அல்லது மறைக்காமல் தீர்மானத்தை அதிகாரிகளிடத்தில் காட்டினார் என்று சொல்ல வருகிறாயா? அவ்வாறு காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு, முதல் தீர்மானத்தின் அடிப்படையில் வாகனம் வாங்க ஒப்புதல் அளித்தார்கள் என சொல்ல வருகிறாயா?

நிதிநிலையை கருத்தில் கொண்டு என்ற வார்த்தையை தான் நாங்கள் பயன்படுத்தினோம், ஆனால் தலைவர் நிதி பற்றாக்குறை என்று தவறுதலாகவோ, திட்டமிட்டோ எழுதிவிட்டார்.” CP

வெரி சிம்பிள் சகோதரரே! வாகன தீர்மானம் ஏப்ரல் 2012இல் நிறைவேற்றப்பட்டது என்பது (புதிய / பழைய) RDMAக்கும் தெரியும், (புதிய / பழைய) CMAக்கும் தெரியும்.

ஜனவரி 2013இல் நிதி பற்றாக்குறை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (புதிய / பழைய) RDMAக்கும் தெரியும், (புதிய / பழைய) CMAக்கும் தெரியும்.

மார்ச் 2013இல் நம்பிக்கை இல்லா தீர்மான மனுவில் - வாகன தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இணைக்கப்பட்டதும் (புதிய / பழைய) RDMAக்கும் தெரியும், (புதிய / பழைய) CMAக்கும் தெரியும்.

ஏன் தெரிந்தும் கொடுத்தார்கள் என்றால், உங்கள் பொய்யை அவர்கள் கொஞ்....சங்கூட நம்பவில்லை. அதனால்தான் ஜனவரி 2013 நிதி பற்றாக்குறை தீர்மானத்தைப் புறந்தள்ளிவிட்டு, ஏப்ரல் 2012 வாகன தீர்மானம் அடிப்படையில், புதிய வாகனம் வாங்க CMA உத்தரவு பிறப்பித்தார்.

ஆகஸ்ட் 2014இல் புதிய வாகனம் பிரேரணை திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டதே, பழைய CMAயின் உத்தரவு அடிப்படையில்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாகனம் வாங்கட்டும் அல்லது வாங்காம போகட்டும்! நீங்கள் அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் கூறி வந்த பொய்யை அதிகாரிகள் நிராகரித்து, தீர்ப்பு வழங்கிவிட்டார்கள்.

ஸபூர் செய்துகொள்ளுங்கள் சகோதரரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved