Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:13:12 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15564
#KOTW15564
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 12, 2015
சர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3753 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசாணைகள் - நகராட்சியின் அலுவல் பயன்பாட்டிற்காக, ஜீப் போன்ற வாகனங்களை வாங்க அனுமதிக்கின்றன. இவ்வாகனங்களை - நகர்மன்றத் தலைவர், ஆணையர் ஆகியோர் பயன்படுத்தலாம் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாகனங்களை பயன்படுத்தும் முறைகளையும், (டீசல் போன்ற விஷயங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் அரசாணைகள் தெரிவிக்கின்றன.

THE TAMIL NADU LOCAL FUND AUDIT DEPARTMENT MANUAL இல் இருந்து...



காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது அலுவல் பயன்பாட்டிற்காக ஒரு ஜீப் உள்ளது. அதனை ஆணையர் பயன்படுத்தி வருகிறார். வெறும் காயல்பட்டினம் நகராட்சி என்ற பெயர் பலகை மட்டும் இத்தனை ஆண்டுகளாக கொண்டிருந்த வாகனத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகராட்சியின் புதிய ஆணையராக காந்திராஜ் என்பவர் பொறுப்பேற்றப்பின், ஆணையர் என கூடுதல் பலகையும் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நகர்மன்றம் பதவியேற்ற சில மாதங்களில், மார்ச் 2012 இறுதியில் - நகர்மன்றத் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள், சென்னை சென்று அரசு அதிகாரிகளை சந்தித்தனர். அவ்வேளையில் - நகராட்சியில், அலுவல் பயன்பாட்டிற்காக - ஒரு வாகனம் தான் உள்ளது என்றும், அதனை ஆணையர் பயன்படுத்தி வருவதாகவும், நகர்மன்றத் தலைவர் - தன் பணிகளை செய்ய வாகனம் இல்லை என்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



இதற்கு பதில் கூறிய - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே IAS, வாகனம் வாங்க தீர்மானம் நிறைவேற்ற கூறியுள்ளார் என தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் (2012) இறுதியில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - புதிய வாகனம் வாங்குவது குறித்த பொருள் (எண் 25) இடம்பெற்றது. இப்பொருளை முன் மொழிந்தது - அப்போதைய 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான்.

இக்கூட்டம் குறித்த செய்தி - மே 7, 2012 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியானது.

ஏப்ரல் 30, 2012 அன்று நடந்த கூட்டம் குறித்த செய்தியில் இருந்து...



இச்செய்தியில் காண்பது போல் - நகர்மன்றத் துணை தலைவர், சட்டத்தில் தலைவருக்கு வாகனம் அனுமதி இல்லை என கருத்து கூறினார். 10வது வார்டு உறுப்பினர், ஊருக்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க பணிகள் செய்த பின்னர் வாகனம் வாங்கலாம் என கருத்து கூறினார்.

இப்பொருள் குறித்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தே பேசினர். பெருவாரியான உறுப்பினர்கள் விருப்பத்தில் பெயரிலேயே - 1வது வார்டு உறுப்பினர் மூலமாக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானமும் நிறைவேறியது (தீர்மானம் எண் 234).

இக்கூட்டம் நிறைவுற்ற சில வாரங்களில் - தலைவர் மற்றும் பெருவாரியான உறுப்பினர்கள் இடையில் கருத்து வேறுபாடுகள் துவங்கியது.

முதலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வாகன தொகை கூறப்படாததால், ஜனவரி 22, 2013 அன்று நடந்த கூட்டத்தில் - மீண்டும் வாகனம் குறித்த பொருள் இடம்பெற்றது. அதில் - ஆணையரின் அலுவலக குறிப்பாக, DGSD என்ற அரசு நிர்ணயித்த விலையில் வாகனம் வாங்க அனுமதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள், நிதிபற்றாக்குறை காரணமாக மன்றம் அனுமதி வழங்கவில்லை என இப்பொருள் குறித்து தீர்மானம் எழுத கூறவே, அப்பொருள் நிராகரிக்கப்பட்டது (தீர்மானம் எண் 447).

முதலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், தற்போது பரிசீலனைக்கு வந்த தீர்மானத்திற்கும் இடைப்பட்ட 9 மாதங்களில் நகராட்சியில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. நகர்மன்றத் தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் நீக்க முடிவு செய்திருந்த பெருவாரியான உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றான - பெருவாரியான உறுப்பினர்களின் கருத்துக்கு எதிராக - நிறைவேறியதாக எழுதப்பட்ட தீர்மானங்களில் - இதுவும் ஒன்று.

தீர்மானம் எண் 234 ரத்து செய்யப்படாத காரணத்தாலும், தீர்மானம் எண் 447 - நிதிபற்றாக்குறை என்ற காரணத்தை மட்டும் கூறியதாலும், நிதிபற்றாக்குறை என்பது உண்மையான காரணம் அல்ல என்பதனை நிதி அறிக்கைகள் மூலம் கருத்தில் கொண்டும், பல திட்டப்பணிகள் நடந்து வருவதாலும், அலுவல்களுக்கு கூடுதல் வாகனம் தேவை என்ற அடிப்படையிலும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஜி.பிரகாஷ் IAS, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சீனி அஜ்மல் கான் பரிந்துரையின் அடிப்படையில் - அரசு அனுமதித்துள்ள DGSD விலையில், வாகனம் வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

தற்போது - நகராட்சிக்கு, அலுவல் பயன்பாட்டிற்காக புதிய வாகனம் வாங்குவது, உறுப்பினர்களால் - சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்து பேசிய 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால் உட்பட பலர் - வாகனம் வாங்க அனுமதி வழங்கப்படவில்லை என திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 11:30 am / 12.03.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ம.ஜஹாங்கிர் (காயல்பட்டினம்) [12 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39581

இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல், முதல் முறை பொருள் விவாதத்திற்கு வந்தபோது நான் ஆதரவாக பேசினேன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் ஒரு சில உறுப்பினர்களை தவிர பெரும்பாண்மை உறுப்பினர்கள் வாகனம் வாங்க மறுத்ததால், அந்த பொருள் முதல் முறையே ரத்து செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.

பெரும்பாண்மை உறுப்பினர்களின் முடிவே மினிட் புத்தகத்தில் பதியப்பட வேண்டும் என்பதே சட்டம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெரும்பான்மை உறுப்பினரின் கருத்தே மினிட் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.

ஆனால் உண்மைக்கு மாற்றமாக, பொருள் அங்கீகரிக்கப்பட்டதாக (தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக) மினிட் புத்தகத்தில் எழுதியிருந்ததை எதிர்த்து பேசினேன் அதுவும் உண்மைதான்.

நான் கார் வாங்க முதலில் ஆதரித்தேன் என்பதற்காக தலைவர் பொய்யாக எழுதிய தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று வரை பேச சொல்கிறீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39582

வேண்டாத மருமகளுக்கு ஒரு வேளை கஞ்சி ஊத்துவதே அதிகம் என்று நினைக்கும் இந்த காலத்தில்ன், நீங்க என்னன்னா நெய்சோறு கொடுக்க வில்லை, பிரியாணி கொடுக்கவில்லை என்று கூவுறீங்க.

எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியாமல் ,ஒரு வேளைக்கு அரை குறை வயிறுக்கு சோறு போட்டு, வேண்டாத மருமகளாகவே இருந்துவிடு போகட்டும் என்று விட்டு வைதுள்ளார்கள்....!!!!! விடுங்க பாஸ்.. நடித்துவிட்டு போகட்டும்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [13 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39583

நகராட்சியின் அலுவல் பயன்பாட்டிற்காக சேர்மனுக்கு ஜீப்பும் - மாதம் 150 லிட்டர் டீசலும் / உறுப்பினர்களுக்கு ஆட்டோவும் - மாதம் 50 லிட்டர் பெட்ரோலும் என்ற கணக்கில் இவர்களுக்குள் பேசி முடிவு செய்து இருந்தால் இந்த சர்ச்சைகள் இன்று எழுந்து இருக்காது என எண்ணுகிறேன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒரு உண்மை விரைவில் வெளிவரத்தான் போகிறது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [13 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39585

எனக்கு ஒரு உண்மையை தெரிஞ்சுக்க ஆசைபடுகிறேன்! தலைவிக்கு வாகனம் வாங்குவதற்கு பத்து உறுப்பினர்கள் முதலில் ஆதரவு தெரிவித்து,அது தீர்மானமாக நிறைவேறிய பின்னர். நிதிநிலை விசியம் வரும்பொழுது,அந்த வாகனத்தை வாங்கவே வேண்டாம் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் மறுப்பதின் காரணமென்ன? நிதிநிலை தடையாக இல்லை என்பதை நிநிலை அறிக்கை கூறிய பின்னரும் பல மாதங்கள் கழித்து முதலில் சம்மதித்த மெம்பர்கள் பின்னர் மறுப்பதின் மர்ம பின்னணி என்ன?

தலைவி அவர்கள் ஒரு வாகனத்தை அரசுமூலம் பெறுவதில் என்ன பாதிப்பு நமதூருக்கோ அல்லது நம் மக்களுக்கோ ஏற்பட்டுவிடும் என்று பயபடுகிறீர்கள்.அந்த பயத்தையும்,பாதிப்பையும் நடுநிலை மக்களுக்குத்தெரிவித்தால் மக்களாகிய நாங்களும் உங்களுடன் சேர்ந்து எதிர்க்க தோதுவாக இருக்குமல்லவா?

தலைவி அவர்கள் மாநகராட்சிப்பொருளை தவறாகவோ அல்லது சொந்த தேவைக்காகவோ பயன்படுத்தி இருக்கிறார்களா? அல்லது இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தில் ஒன்றை தன் சொந்த தேவைக்காக உபயோகித்து இருக்கிறார்களா? எந்த அடிப்படையில் அவர்களுக்கு வாகனம் வாங்க எதிர்க்கிறீர்கள்?

10- வது வார்டு உறுபினர் கூறுகிறார் தலைவியைப்பாத்து, நீங்கள் ஏதாவது ஊருக்காக செய்யுங்கள் பிறகு வாகனம் வாங்கலாம் என்ற உத்தம வார்த்தையை உதிர்த்திருக்கிறார். வாஸ்த்தவம்தான் தலைவி அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம். அந்த எதாவது செய்ய வேண்டுமென்றாலும் வாகன வசதி தெவைபடுகிறதல்லவா?

நீங்கள் ஏதாவது ஊருக்கு செய்துவிட்டு நகராட்சியிலிருந்து சம்பளம் பெறுங்கள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.ஏன் அப்படி கேட்க மறுக்கிறார் அந்த உறுப்பினர்,அவர் நகராட்சியிலிருந்து வெளிநடப்பு செய்த காலத்திலெல்லாம் காலணா சம்பள காசைக்கூட கடாசிவிட்டு வந்த உத்தம வீரரல்லவா?

ஆக, இந்த விசியத்தில் பல உள்நோக்கமுடைய உண்மைகள் இருதரப்பிலும் புதைந்து ஒளிந்திருப்பதாகவே எண்ணுகிறேன். ஒவ்வொன்றாக ஒவ்வொரு பருவத்திலும் பதமையாக பூனைக்குட்டி பவனி வரத்தான் போகிறது, அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விவாதங்கள்.
posted by mackie noohuthambi (colombo) [13 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39587

ஒரு ஆட்சி பொறுப்பில் உள்ள தலைவர் தலைவி - ஒரு நிர்வாகத்தின் டைரக்டர் இவர்களுக்கு தங்கள் பணிகளை துரிதமாக செய்ய இப்படி ஒரு வாகனம் தேவை என்பதை யார்தான் மறுக்க முடியும். சாதாரண பள்ளிக் கூடமானாலும் கல்லூரியானாலும் நிறுவனமானாலும் அங்கே முக்கிய பணிகளுக்காக சென்று வர ஒரு வாகனம் இருப்பது ஒன்றும் புதியதல்ல.

ஆனால் அந்த வாகனத்தை பல கோடிகள் செலவு செய்து சொகுசு காராக மாற்றுவதும் அதை தனக்குரிய ஆளுமையின் அடையாளமாக நினைத்து அதில் அமர்ந்து பயணம் செய்வதும் தான் தவறு.

இந்த வகையில் முன்னாள் உறுப்பினர் லுக்மான் அவர்கள் நிலைப் பாடு அவர்கள் மன்றத்தில் நடந்து கொண்ட முறைகள் எல்லாமே சிறப்பாக இருந்தன. காலப் போக்கில் கருத்து வேறுபாடுகள் விரிசல்களாக விசுவரூபம் எடுத்தபோது இந்த சிக்கல்கள் பெரிதாகிவிட்டன.

பக்கத்துக்கு வீட்டுக்காரர்களோடு உறவாக இருக்கும்போது நமது குழந்தைகள் அவர்கள் வீட்டுக்கு சென்று மலம் ஜலம் கழித்து விட்டால் நாம் அந்த பிள்ளையை எசுவோம் பேசுவோம். ஆனால் பக்கத்துக்கு வீட்டுக் காரார்கள், குழந்தைபிள்ளை தானே அதுக்கு என்ன தெரியும் நீ ஏன் திட்டுகிறாய் என்று நம்மிடம் கோபித்துக் கொள்வார்கள் அந்த பிள்ளையை வாரி அணைத்துக் கொள்வார்கள்.

அதே பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பகைவர்களாக இருக்கும்போது நமது குழந்தை அங்கு போய் சிறுநீர் கழித்தால் கூட அவர்கள் உடனே நம் மீது பாய்வார்கள். "புள்ளயா பெத்திருக்கிறாய் பிள்ளை, மூதி புள்ளை ஊரெல்லாம் போய் நாத்தக் கேடாக்கிறதே, புடவை எல்லாம் நஜீசா போய்விட்டதே" என்று சொல்லி நம்மையும் திட்டி பிள்ளையையும் காலால் மிதித்து வெளியே தள்ளுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கும் இந்த வாகன நிகழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

நமது நாட்டில் நாடாளுமன்றம். சட்டமன்றம் நகர்மன்றம் எல்லாமே அரசியலாகி போய்விட்டது. பொது விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது, விட்டுக் கொடுத்து போவது அரவணைத்து செல்வது, ஆலோசனைகள் செய்வது எல்லாம் போய்விட்டது. எங்கும் ஈகோ எதிலும் ஈகோ.....

நேரம் காலம் இப்படி வீணாக கழிகிறது தேவையற்ற சர்ச்சைகள். தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியவை.

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அட அண்ட காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை....இரண்டும் ஒரே நிறமாக இருக்கிறதே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உண்மைக்கு புறம்பான தகவல்கள்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [13 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39593

தலைவிக்கு வாகனம் தேவையா இல்லையா? என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். VMS மாமா முதல் இதற்கு முன் இருந்தவர்களுக்கு, தலைவர்களுக்கென்று தனி வாகனம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களும் தங்களது பணிகளை செவ்வனே செயதார்கள்.

இப்போதைய பிரச்சனை, தலைவி முறைப்படி செய்தார்களா? இல்லையா? உங்களது செய்தியில் கூட, மே 2012 நடந்த நகரமன்ற கூட்டத்தில், அப்போதைய 1-வது வார்டு உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து மற்றும் எதிர்த்து பேசியவர்கள் என்ற தகவல் மட்டுமே உள்ளது. பிரச்சனை என்னவென்றால், தீர்மானத்துக்கு ஆதரவாக 4 பேர் மட்டுமே ஆதரித்தனர். மற்றவர்கள் வாகனம் வாங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். தீர்மானம் தோற்றுவிட்டது.

ஆனால், தலைவி, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாற்றமாக, தீர்மானம் நிறைவேறிவிட்டதாக மினிட் புத்தகத்தில் எழுதினார். இது உண்மையா இல்லையா? என்று தலைவி & உறுப்பினர்கள் மட்டுமே சாட்சி. அல்லாஹ் மிகவும் அறிந்தவன். "தலைவருக்கு எதிராக எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றான - பெருவாரியான உறுப்பினர்களின் கருத்துக்கு எதிராக - நிறைவேறியதாக எழுதப்பட்ட தீர்மானங்களில் - இதுவும் ஒன்று.(C&P)

ஏற்கனவே எழுதிய (மாற்றி எழுதிய) தீர்மானத்தை திருத்தம் செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, 9 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த பொருள், நகரமன்ற கூட்டத்தில் வருகிறது. இந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினரை தவிர மற்ற அனைவரும் தலைவிக்கு எதிராக இருந்தனர். அதனால், தலைவிக்கு வாகனம் வாங்க தீர்மானம் தோற்கடிக்கபடுகிறது.

தீர்மானத்தின் நிலை இப்படியிருக்க, தலைவி சுமார் 2 வருடங்கள் கழித்து, உயர் அதிகாரிகளிடம், ரத்து செய்யப்பட 2-வது தீர்மானத்தை மறைத்து, இவர் மாற்றி எழுதிய முதல் தீர்மானத்தை காட்டி ஒப்புதல் கேட்கிறார். இது உண்மையா? என்று அவர் விளக்கட்டும்.

இப்படிக்கு உண்மைக்கு புறம்பாக தலைவி செயல்பட்டதால், முதல் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஜஹாங்கிர் மற்றும் ஜமால் ஆகியோர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து வாகனம் வாங்க அனுமதி வழங்கப்படவில்லை என திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

அரசு தரப்பில் இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- சாளை.அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தலைப்பிலிருந்தே புத்தி
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [13 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39594

தலைவரின் பயன் பாட்டிற்கு என்பதை மறைத்து, அலுவலக பயன்பாட்டிற்கு என்று தலைப்பிடுவதிலிருந்தே புத்தி " சாலி " தனம் என்று நினைத்துக்கொள்ளும் உங்களின் முகமூடி தெளிவாக கிழிபடுகிறது.

தீர்மானங்களை மாற்றி தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Hameed Rifai (jeddah ksa) [13 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39597

வருக சாளை லுக்மான் காக்கா அவர்களே!

“VMS மாமா முதல் இதற்கு முன் இருந்தவர்களுக்கு, தலைவர்களுக்கென்று தனி வாகனம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களும் தங்களது பணிகளை செவ்வனே செயதார்கள்.” C&P

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. பணக்காரர்கள்தான் இந்தப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கூறுகிறீர்கள், அப்படித்தானே காக்கா...? பாய்ண்ட்ட புடிச்சிட்டேன்ல? சந்தோஷம்!

“தீர்மானத்துக்கு ஆதரவாக 4 பேர் மட்டுமே ஆதரித்தனர். மற்றவர்கள் வாகனம் வாங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். தீர்மானம் தோற்றுவிட்டது.” C&P

4 பேர் ஆதரிச்சு பேசினாங்க. 2 பேர் எதிர்த்து பேசினாங்க. இதுதான் வாக்கெடுப்பா? சரியாப் போச்சி! ஏதாவது ஜமாஅத்துல, சங்கத்துல, மன்றத்துல நீங்கள் அங்கம் வகித்தால் அங்கே இதை மாதிரி சொல்லி விடாதீர்கள். ஒரு மாதிரியாகப் பார்க்கப் போறாங்க.

“ஏற்கனவே எழுதிய (மாற்றி எழுதிய) தீர்மானத்தை திருத்தம் செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அந்த தீர்மானத்தை ரத்து செய்து...” C&P

தீர்மானத்தை ரத்து செய்தா? சற்று உறக்கம் கலைத்துவிட்டு நன்றாகப் படிங்க காக்கா! தொகைக்கான ஒப்புதல் தீர்மானம் அது, ஏப்ரல் 2012 தீர்மானத்தை ரத்து செய்து அல்ல.

“தீர்மானத்தின் நிலை இப்படியிருக்க, தலைவி சுமார் 2 வருடங்கள் கழித்து, உயர் அதிகாரிகளிடம், ரத்து செய்யப்பட 2-வது தீர்மானத்தை மறைத்து, இவர் மாற்றி எழுதிய முதல் தீர்மானத்தை காட்டி ஒப்புதல் கேட்கிறார்.” C&P

வழமை போல பச்சைப் பொய்! ஆகஸ்ட் 2014இல் பரிந்துரைப்பது RDMA. ஜனவரி 2015இல் ஒப்புதல் கொடுப்பது CMA. ரத்து செய்யப்பட்ட தீர்மானம் அல்ல அது; நிதி பற்றாக்குறை என பொய்யாக காரணம் கூறப்பட்ட தீர்மானம்.

“அரசு தரப்பில் இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.” C&P

அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்பது இருக்கட்டும்! தார்ப்பாயில் சலித்தெடுத்த பொய்களையே தொடர்ந்து கருத்துக்களாக எழுதி வருவோருக்கு அல்லாஹ்விடம் இனி என்ன நடக்கிறது என்பதையும் பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39603

அஸ்ஸலாமு அலைக்கும்

இது ஒரு பெரிய மேட்டரே '' இல்லை ...இந்த சிறிய மேட்டருக்கு ' ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை ....ஒரு நகர் மன்றத்துக்கு ...ஒரு நல்லதோர் நிர்வாக திறமை உள்ள ..ஒரு தலைவிக்கு வாகனம் வாங்குவது சரியே ....தலைவி அவர்கள் நிர்வாக வேலையாக பல இடங்களுக்கு & பல நிர்வாக அதிகாரிகளை சந்திக்கவும் + நம் ஊரில் ஒரு அவசர வேலை இருப்பின் கூட போக வேண்டிய கட்டாய சூழ் நிலைமைகள் அடிக்கடி வரும் ....அதற்க்கு அவசியம் வாகனம் தேவையே ....இது வீண் விரையம் அல்லவே ....

மாஷா அல்லா நம் நகர் மன்ற தலைவி அவர்கள் அவர்களின் சொந்த பணத்திலிருந்து வாங்கிய சொந்த வாகனத்தில் இவ்வளவு காலம் நம் ஊரின் நலனுக்காக எந்த ஒரு எதிர் பார்ப்பும் இன்றி அவர்களின் வாகனத்தை '' உபயோக படுத்தியதே நமக்கு பெருமை ....

ஓன்று மட்டும் நமக்கு உண்மை தெளிவாகிறது ....நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் எது செய்தாலும் நம் மரியாதைக்குரிய உறுப்பினர்கள் ஒரு சில பேர்கள் குறை கூறித்தான் வருகிறார்கள் ....அது எதனால் தான் என்று இன்று நாள் வரைக்கும் மக்களுக்கு புரிய வில்லை .....

நம் மரியாதைக்குரிய தலைவி அவர்களை எதிர்க்கிறோம் என்று நினைத்து ....நீங்கள் நம் ஊருக்கு நல்லது செய்ய நினைப்பது இல்லை & நம் ஊருக்கு வருகின்ற பல நல்லதோர் திட்டங்களையும் தடுத்து வருகிறீர்கள் .....என்பதும் மக்கள் யாவர்களுக்கும் நன்கு தெளிவாகிறது ......அல்லாஹ் போதுமாணவன் ....

நம் மரியாதைக்குரிய உறுப்பினர்கள் தயவு செய்து ... தேவைகற்ற பிரச்சனைகளை விட்டு , விட்டு, நம் ஊருக்கு நல்லதை செய்ய நினையுங்கள் ......நாங்களும் பல தடவைகள் உங்களிடம் முறையிட்டு விட்டோம் ...நீங்கள் செவி சாய்ப்பதகவே இல்லை .....உங்களுக்குள் இருக்கும் வெறுப்புகளை விட்டு ,, விட்டு .... மக்களுக்கு நல்லது செய்ய நினையுங்கள் .....

நம் நகர் மன்ற உறுப்பினர்களின் பதவி காலம் முடிய கூடிய தருவாயில் தான் இருக்கிறது ....ஆதலால் இப்பவாது நீங்கள் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய நினையுங்கள் ...இன்ஷா அல்லாஹ் அடுத்து வருகின்ற நகர் மன்ற தேர்தலில் மக்கள் உங்களை நினைத்து பெருமை படுவதோடு ...உங்களையே மீண்டும் தேர்வு செய்வார்கள் ....இல்லையேல் ,,நம் ஊர் மக்களின் வெறுப்புக்கு நீங்கள் ஆளாகுவீர்கள் ....இது தான் உண்மை ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved