Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:12:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15562
#KOTW15562
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 11, 2015
நகரில் CCTV கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நகர்மன்றத் தலைவர் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5658 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசு, 2012ம் ஆண்டு - The Tamil Nadu Urban Local Bodies (Installation of Closed Circuit Television Units in Public Buildings) Rules 2012 என்ற சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி - பொது இடங்களில், மக்கள் பாதுகாப்புக்காக, CCTV கேமராக்கள் பொருத்துவது அவசியமாகும்.

நகரின் பொது இடங்களில் - CCTV கேமராக்கள் பொறுத்த, நகர்மன்றம் சமீபத்தில் அனுமதி மறுத்தது.

ஆறுமுகநேரி காவல் நிலையம் ஆய்வாளர், CCTV கேமாராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து மீண்டும், நகராட்சிக்கு நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து நகர்மன்றத் தலைவர், ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவு வருமாறு:

2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட The Tamil Nadu Urban Local Bodies (Installation of Closed Circuit Television Units in Public Buildings) Rules 2012 சட்டம், CCTV கேமராக்களை பொது இடங்களில் கட்டாயமானதாக ஆக்கினாலும், துணிக்கடைகள், ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் மூலம் அவை நம் வாழ்வில் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிறது.

காயல்பட்டினத்தின் பொது இடங்களிலும் CCTV கேமராக்களை துரிதமாக நிறுவிட - காவல்துறை, சில மாதங்களுக்கு முன் - நகராட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அக்டோபர் 2014இல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், அக்கடிதமும் பொருளாக வைக்கப்பட்டிருந்தது. ஜமாதுகளிடமும், பொது நல அமைப்புகளிடமும் கலந்தாலோசனை செய்து தான் தங்களால் இது குறித்து சம்மதம் தெரிவிக்க முடியும் என உறுப்பினர்கள் கூறவே அப்பொருள் ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 2014இல் அப்பொருள் மீண்டும் அஜெண்டாவில் வைக்கப்பட்டது. ஆனால் - நகர்மன்ற வளாகம் தவிர, வேறு பொது இடங்களில் - CCTV கேமராக்கள் நிறுவ, பெருவாரியான உறுப்பினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அரசு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மன்றத்திற்கு அனுமதி கிடையாது என்றாலும், உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

கடந்த மாதம் இறுதியில் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த அதிர்ச்சியளிக்க கூடிய கொலை சம்பவம் குறித்து அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். காயல்பட்டினம் பேருந்து நிலையம் - சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது குறித்து, காவல் துறைக்கு தொடர்ந்து நான் புகார் தெரிவித்து வந்த்துள்ளேன். கொலை சம்பவத்தை தொடர்ந்து, அச்சம்பவம் குறித்தும், இன்னும் சில விஷயங்கள் குறித்தும் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அண்மையில் புகார் தெரிவித்து வந்தேன்.

தற்போது மீண்டும் - காவல்துறை மூலம்,

காயல்பட்டினம் பேருந்து நிலையம்,
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி புறவழிச்சாலை சந்திப்பு பகுதி,
கஸ்டம்ஸ் சாலை சந்திப்பு,
பெரிய நெசவு தெரு - கூலக்கடை பஜார் சந்திப்பு,
காயல்பட்டினம் கடற்கரை

போன்ற பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவவும்,

சமூக விரோதிகள் பதுங்க தோதுவாக இருக்கும்

கொம்புத்துறை முதல் ஓடக்கரை வரை கடற்கரை ஓரத்தில் உள்ள உடைகளை அகற்ற கோரியும், நகராட்சிக்கு கடிதம் வந்துள்ளது.

அனைத்து மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய இந்த நடவடிக்கைகளுக்கு, நகரின் அனைத்து ஜமாத்துகளும், பொது நல அமைப்புகளும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்.


இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மிக,மிக அவசியமான ஒன்று!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [12 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39573

நமதூர் விரிவடைந்து விட்டது .மிக்க மகிழ்ச்சி.ஆனால் அதே வேளையில் எப்படிப்பட்ட இதுவரை கண்டிராத,கேள்விப்படாத கண்ணியக்குறைவான காரியங்களும் விரிவடைந்து கொண்டே போகிறது என்பதை மிக,மிக மனவேதனையுடன் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்!

பட்டியலிட்டு நம் பரம்பரை புண்ணிய கலாசாரத்திற்கு பெயர்பெற்ற காயலுக்கு களங்கச்சாயலை பூச விரும்பவில்லை!

நமதூருக்கு காவல் நிலையம் எந்த நிலையிலும் தேவை இல்லை என்ற நம் கொள்கையிலிருந்து கடுகளவும் பின்வாங்கவே கூடாது. துரதிஷிட்டவசமாக நடக்கும் சில, சில தீய சம்பவங்களின் ஆணி வேர்களை ஆராய்ந்து அதை அடியோடு பிடுங்கி எறியவேண்டும்.

அதற்கு ஒவ்வொரு காயல்குடிமகனும் நம் புண்ணிய ஊரின் கலாச்சாரத்தையும், கண்ணியத்தையும் எந்நாளும் காத்து நிற்ப்போம் அதில் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத்தயார் என்ற உறுதியை நம் உள்ளத்தில் பதித்துக்கொள்ளவேண்டும்!

நாம் கேள்விப்படும் தீய செயல்களும்,பெண்களுக்கு பாதுகாப்பு இன்மையும் இருக்கின்ற பல இடங்களில் சிலவற்றை அடையாளம் கண்டு அதில் CCTV கேமராக்களை பொருத்தவேண்டும் என்ற கோரிக்கையை நம் நகர்மன்ற தலைவி அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். அவர்களின் புண்ணிய நோக்கத்தை புரிந்துகொண்டவர்களாக,நமதூர் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுள்ள அனைத்து காயல் குடிமக்களும்,இந்த நன்மையான வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உறுதுணையாக நிற்கவேண்டும்!

நம் அனைத்து கண்ணியமுடைய ஜமாத்தார்களும் மிக மிக முக்கியமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விசியமாகும்!

இந்த CCTV கேமராக்களை மிக மிக முக்கியமாகவும், முதலாவதுமாகவும் பொருத்தப்பட வேண்டிய இடம் பஸ்ஸ்டாண்ட் ஆகும். பல போக்கிரிகளுக்கு பேருந்து நிலையம்தான் புகழிடமாக விளங்குகிறது.

சில வீம்பர்களுக்கும், சில வீணர்களுக்கும்,சில அரசியல்வாதிகளுக்கும்,சில தீய சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கும்,சில கயவர்களுக்கு கடைசி கால வாழ்க்கை கூடமாகவும் இருப்பது இந்த பேருந்து நிலையம்தான் என்பதை பல ஊர்களிலும் பார்க்கக்கூடிய நிதர்சனமான நிகழ்வாகும்,

அப்படிப்பட்ட ஒரு நிலைக்கி நமதூரும் விதிவிலக்கில்லை என்ற இழி நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கேள்வியுறுகிறோம் .அல்லாஹ் காப்பாற்றுவானாக!

இப்பேருந்து நிலையத்தில் பொருத்தப்படும் கேமராவால் பலபெண்கள் இரவில் ஊர்வந்திரங்கவும்,வெளியூருக்கு பேருந்துக்காக காத்திருக்கவும் பயமின்றி இருப்பார்கள்.நம்மை கண்காணிக்க பல கண்கள் தங்கள் கடமையை கேமராமூலம் செய்துகொண்டிருக்கிறது என்ற நினைப்பே ஒரு மிகப்பெரிய தைரிய உணர்வுவை உண்டாக்கி விடும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இது காலத்தின் கட்டாயம்...!
posted by M.N.L.முஹம்மத ரபீக் (சிங்கப்பூர்) [12 March 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 39575

காலத்தின் கட்டாயம் இது! உள்ளூரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோதிகளின் தீமையைத் தடுக்கவும், காவல்துறையின் ஆலோசனைப்படி நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக பேருந்து நிலையம், கடற்கரை, தானியங்கி வங்கி போன்ற இடங்களில் CCTV நிறுவப்பட வேண்டும். சேர்மன் எதைச் செய்தாலும் எதிர்க்கும் உறுப்பினர்கள் ஊருக்கு உதவ முன் வராதது வருத்தமே!

உறுப்பினர்களில் சிலர் பெரும்பாலும் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட கடையின் முன்புதான் கூடுவார்கள். சேர்மனுக்கு எதிரான சூழ்ச்சிகள், புதிய சூத்திரங்கள், கவிழ்ப்பதும், கழுவுவது எல்லாமே அங்கேதான். இனி CCTV வந்துடுச்சுன்னா ஒன்றுகூடலுக்கு உதைக்கும். இது தவிர எதிர்ப்பதுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இனி கலாச்சாரம் கத்திரிக்காய்ன்னு முட்டுக்கட்டை போட வந்தால் ஊரில் பெரும்பாலான கடைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில் CCTV உள்ளது. யாரும் அதற்கு முன்னால் போய் நின்று போஸ் கொடுக்க மாட்டார்கள். பஸ் ஸ்டாண்டுலெ பட்டப் பகலில் ஒருத்தரை வெட்டி சாய்ச்சாங்களே...? மறந்துட்டீங்களா? கல்லூரி செல்லும் நம் மகளிர்க்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

இனி புதிய பஸ் ஸ்டாண்டுலெ CCTV வந்தால் கஞ்சா, கள்ளச்சாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்ற சமூக தீமைகளுக்கு உடந்தையான ஆட்களின் முகம் வெளிச்சத்திற்கு வரும். வரட்டுமே? வந்தால்தான் இதற்கு ஓர் விடிவு பிறக்கும். அப்புறம் ஏன் மரியாதைக்குரிய நகர்மன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடுகின்றனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (india) [12 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39576

வரவேற்க வேண்டிய செயல். அதே சமயம் நகரமன்ற உறுபினர்களை பற்றி அநாகரிகமான கம்மன்ட்கள். அவர்களும் நமதூர் மக்கள்தானே.,அவர்களையும் காயல் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். வார்த்தைகளை எழுதுவதற்கு முன்பு அதின் ஆதாரத்தையும் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு எழுதினால் நல்லது.

தனிமனித சுதந்திரம் நமதூர் பாரம்பரிய கோசா கலாசாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பு இருக்காது துஸ்பிரயோகம் செய்யபடாது என்பதை காவல்துறையிடம் உறுதிசெய்யபடவேண்டும். உதாரணம் காலையில் சாமான் வாங்க போன காதர் பாய் கமராவில் தெரிகிறார் என்று சாட்சிக்கு அழைக்கும் நிலை இருக்க கூடாது

இரண்டாவது நான் இணையத்தின் மூலம் தங்களுக்கு தெரிவித்த கோரிக்கையான ஒருவழிப்பாதை ஆணையில் இருந்து பள்ளி கல்லூரி வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் விசயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருகிரீர்கள் என தெரிய விரும்புகிறேன்.

மூன்றாவது அடிக்கடி கோர விபத்துக்கள் நடக்கும் பல மனித உயிர்களை பலிகொள்ளும் திருச்செந்தூர் காயல் சாலையின் ஓடக்கரை முதல் மகுதூம் பள்ளி தர்கா வரை விபத்துபகுதியாக அறிவிக்க அதிகபட்ச வேகம் 60 ஆக இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கோரிக்கை விடுக்க தங்களை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39578

அஸ்ஸலாமு அலைக்கும்

மரியாதைக்குரிய நம் தலைவி அவர்களை நாம் யாவர்களும் இந்த நேரத்தில் ,,இந்த விசயத்தில் .. பாராட்டுவதோடு ,,இந்த செயலை மிகவும் துரிதமாக நிறைவேற்றிட வேணும் என்பதை நாம் யாவர்களும் நம் நகர் மன்றத்தை மிக துரித படுத்த .. அனுக வேனும்,,

நமது ஊரும் தற்போது முன் போல இல்லை ,,காயலின் பாதுகாப்பும் ,, கண்ணியமும் ,, ஒரு சில மட்டமான நபர்களால் நாளுக்கு நாள் '' குறைந்து வருவதை நாம் நினைக்கும் போது நமக்கு மனது சங்கடமாக இருக்கிறது ......ஆதனால் இந்த கால கட்டாயத்தின் சூழ் நிலைமைக்கு ....ஏற்ப ..CCTV .... ரொம்பவும் அவசியமே .....இந்த விசயத்தில் நம் நகர் மன்றம் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல் பட்டால் நல்லதே ....

இந்த விசயத்தில் நம் நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பை ,,நம் மரியாதைக்குரிய தலைவி அவர்களுக்கு '' நல்கினால் '' சிறப்பே ..இதிலும் இவர்கள் பிரச்சனையை தூக்கினால் அது நல்லது அல்ல ,,

தற்போது நமது ஊரில் ஒரு சில தீய சக்திகளால் நிறையவே தேவைக்கற்ற அசபாவிதங்கள்'' நடக்கின்றன ..& நம் ஊரில் பெண்கள் தனியாக நடப்பதற்கே பயமாக இருக்கிறது ...மேலைக்கு அது நடக்காமல் கண்டிப்பாகவே தடுக்கப்படலாம் ......

நம் நகர் மன்றம் முக்கியமான பகுதிகளை கண்காணித்து ....படிப்படியாக இன்னும் நம் ஊரின் ஒரு சில முக்கியமான பொது மக்கள் அதிகம் நடமாற்றம் உள்ள பகுதிகளிலும் ...CCTV ... வைக்க முயற்ச்சி எடுத்தால் நல்லதே ...இன்னும் நம் ஊர் தீய சக்திகளால் ...அது நடக்காமல் பாதுகாட்க படலாம் ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Kayalpattinam) [13 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39586

CCTV வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விவாதப்பொருளாக உள்ளது . CCTV வைக்க வேண்டும் என்பது காவல்துறையின் பரிந்துரை . அதை நகர் மன்றத்தில் எடுத்து சொல்ல வேண்டியது மன்றத்தலைவரின் கடமை . மக்களிடம் எடுத்து சொல்லி அவர்களின் கருத்தையும் அறிய வேண்டியது மன்ற உறுப்பினர்களின் விருப்பம் . இவைகள் தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது .

மாறாக , இத்திட்டத்தை ஏதோ தலைவி கொண்டு வந்தது போலவும் , அதற்காகவே உறுப்பினர்கள் அதை எதிர்ப்பது போலவும் தலைவியின் ஜால்ரா ஒன்று எழுதியிருப்பது வேடிக்கையானது .

உறுப்பினர்கள் பஸ் ஸ்டாண்டில் கூடித்தான் தலைவிக்கு எதிராக திட்டம் போடுவார்களாம் . பஸ் ஸ்டான்டில் CCTV வைக்க எதிர்ப்பதன் காரணம் இதுதானாம் . பாதகமான ஒரு செயல் திட்டம் போடுவதற்கு இப்படிப்பட்ட ஒரு பொது இடம்தான் தோதுவானதா ? ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

தலைவியை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் . ஜால்ரா அடித்து அவரது வேலைக்கும் , ஊரின் பொது நல காரியங்களுக்கும் வேட்டு வைக்காதீர்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [13 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39590

உண்மைக்கு எப்போதும் சோதனை ஏற்படும். மனத்திண்மை படைத்தவர்களே அநீதியை எதிர்த்து போராடமுடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உள்ளதைச் சொன்னால் உங்களுக்கேன் பொத்துக்கொண்டு வருகிறது....?
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [13 March 2015]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 39592

அருமை நண்பர் விளக்கு SMA அவர்களே...! உள்ளதைச் சொன்னால் உங்களுக்கேன் பொத்துக்கொண்டு வருகிறது. உள்ளூரில் ஒன்னரை வருஷம் இருந்தவன் நான். அக்கால கட்டத்தில்தான் உறுப்பினர்களுக்கிடையில் தலைவிக்கு எதிராக தீவிர எதிர்ப்பும், நகர்மன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நடந்து கொண்டிருந்த காலம்!

சிலரின் சூழச்சிகளும் சுட்சமங்களும் புதிய பேருந்து நிலையத்தில் கூடியிருந்து கும்மாளம் அடித்தலும் கண்கூடாகக் கண்ணூற்றவன் நான்!

ஜால்ரா ஒன்று என என்னை ஒருமையில் தாங்கள் அழைத்தமைக்கு நன்றி!

உண்மை, உழைப்பு, நேர்மை, கடமை அகியவற்றிர்க்கு ஆதரவாக நிற்பற்கு உங்கள் அகராதியில் பொருள் ஜால்ரா எனில் அது ஜால்ராவாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

உள்ளூருக்கு வாங்க வந்து அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசமாவது இருந்து பாருங்க நகர்மன்ற கூட்டத்துக்குப் போங்க அப்ப தெரியும் ஜால்ரா என்பதன் உண்மையான பொருள்!

இறைவன் மீது ஆணையாக தலைவியை வைத்து இந்த ஜால்ராக்களுக்கு ஒரு அஞ்சு பைசாக்கூட லாபமில்லை! பல சக்திமான்களின் குத்தலுக்கும் கொடச்சலுக்கும் உருட்டல் மிரட்டலுக்கும் ஆளாகி போரட்டங்கள், அதிகாரிகள் சந்திப்பு, மனு, வழக்கு என நாயா அலைஞ்சு எங்க பாக்கெட்லெ இருந்துதான் காசு கொடுத்தோம். எங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட எந்த தனவந்தர்களும் கிடையாது.

உண்மைக்கு உறுதுணையாக நின்றோம் அவ்வளவுதான். இனி இதை சாக்காக வைத்து எங்க ஜேப்பை நிறைக்கணும்ங்கிற அவசியமும் இல்லை! அதற்கு தலைவியும் உடன்பட மாட்டார்கள். ஊர் நன்மைக்காக நாங்கள் ஒன்று பட்டோமே தவிர ஊரை அடிச்சு உலையில் போடுவதற்கல்ல! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.

-ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பொதுமக்கள் கூடும் இடங்கள் என்றால் எதெல்லாம் வரும்?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39613

அக்டோபர் மாத கூட்டத்தில், "காயல்பட்டணம் நகராட்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர், ஆறுமுகநேரி அவர்களின் அறிவுரையின்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வேண்டப்படுகிறது. (பொருள் எண்-24)

"இது அரசு அறிவிப்பாக இருந்தாலும், நகர ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்பே இதுகுறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து இப்பொருள் ஒத்தி வைக்கப்பட்டது" (C&P) (செய்தி என்-14789).

இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் என்ன வாதத்தை எடுத்து வைத்தனர், தலைவி என்ன சொன்னார்? என்ற வீடியோ ஆதாரம் இந்த செய்தியில் இருக்கிறது.

இப்போதய அறியுறுத்தலில், குறிப்பிட்டு சில இடங்களில் நிறுவ சொல்லியுள்ளனர். ஆனால், முந்தைய அறியுறுத்தலில், "நகராட்சி பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில்" என்று பொத்தாம் பொதுவாக சொன்னது. பொதுமக்கள் கூடும் இடங்கள் என்றால் பள்ளிவாசல், மைதானம் உட்பட அனைத்து இடங்களும் அடங்கும்.

ஒத்திவைக்கப்பட்ட அதே பொருள் மீண்டும் நவம்பர் மாத கூட்டத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு கூட்டங்களுக்கு இடையில் இருந்த 1 மாதத்தில், இது விஷயமாக ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கலந்தாலோசித்திருந்தால் ஒரு நல்ல ஆலோசனை கிடைத்திருக்கும். ஆனால், அப்படி எந்த கலந்தாலோசனையும் நடக்கவில்லை.

நவம்பர் மாத கூட்டத்தில் இந்த பொருள் விஷையமாக உறுப்பினர்கள் / தலைவி என்ன பேசினார்கள் என்ற வீடியோ ஆதாரம், இந்த இணையத்தின் செய்தி எண்-14973-யில் இருக்கிறது. அதை பார்த்த பின் உறுப்பினர்களை கழுவுங்கள்.

"ஒரு குறிப்பிட்ட கடையின் முன்புதான் கூடுவார்கள். சேர்மனுக்கு எதிரான சூழ்ச்சிகள், புதிய சூத்திரங்கள், கவிழ்ப்பதும், கழுவுவது எல்லாமே அங்கேதான்". (C&P) அந்த இடம் இல்லையென்றால், வேறு இடம் கிடைக்காதா? இது தான் காரணமா?

அதே நபர், சொல்லுகிறார், "இதுக்கு எதுக்கு ஜமாஅத் அனுமதி ...? இது என்ன ஃபத்வா சமந்தப்பட்டதா..?" (C&P). ஊரின் முக்கிய பிரச்னைக்கு நகர ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கலந்தாலோகாமல் யாரிடம் கேட்பது? இவருக்கு 'ஜமாஅத்துகள்' என்றதும் ஐக்கிய பேரவை நினைவுக்கு வந்துவிட்டது போலும். சும்மா குறை சொல்ல வேண்டும் என்று குறை சொல்லாதீர்கள்.

ஆனால், இப்போது தானே காவல்துறை, CCTV கேமராக்கள் எங்கெங்கு நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி அறிவுறுத்தி உள்ளனர்.

அதை பற்றி விவாதிக்கலாம் என்றால், தலைவி தான் கூட்டத்தை நடத்த மாட்டாரே? டிசம்பர் மாத கூட்டம், "ஆல் பாஸ்" என்று பத்தே நிமிடங்களில் கூறி வெளியே சென்றார். ஜனவரி மாத கூட்டம் நடத்தவில்லை. பிப்ரவரி மாத கூட்டம், உறுப்பினர்கள் கையெழுத்து போட்டால் தான் நடத்துவேன் என்று ஒத்தி வைத்தார். இனி மார்ச் மாத கூட்டம் நடந்தால்(?) தான் நிச்சயம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved