Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:19:50 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 16
#KOTWART0116
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 24, 2012
சமூக மாற்றத்தில் சிக்கித்தவிக்கும் காயல் மாணவர்கள்!
இந்த பக்கம் 3485 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கம்ப்யூட்டர் யுகத்தின் தாக்கம் பிறந்த பிள்ளைகள் முதல் முதியோர் மீது வரை பிரதிபலிப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இத்தருணத்தில் - நம் மாணவ மாணவிகளை, குறிப்பாக மாணவர்களை, இது எவ்வாறு சீரழித்துக்கொண்டு இருக்கிறது என்பதை, பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வந்து இருக்கும் இவ்வேளையில் - தேர்வு முடிவுகளை ஆராய்ந்து, இந்த கம்ப்யூட்டர் யுக சமூக மாற்றத்தில் சிக்கித்தவிக்கும் காயல் மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கற்காலம் முதல் இக்காலம் வரை - காலத்தின் பரிணாம வளர்ச்சி - பல புதிய கண்டுபிடிப்புகளை தந்து கொண்டே இருக்கின்றது. கடந்த 100 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், மின்சாரம், டிவி, கம்ப்யூட்டர், கைப்பேசி, இணையம் (INTERNET), கார்/பைக் போன்ற போக்குவரத்து கருவிகள் என்று இந்த 6 விசயங்களிலும்தான் தூக்கத்தை போக நம் அனைவரின் நேரங்களும் (வீண) அடித்து செல்லப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் எவரும் விதிவிலக்கல்ல.

ஆனால் எதற்கும் எல்லை என்று ஒன்று அவசியம்/உள்ளது. இஸ்லாம் கூறுவதைப்போல மத்தியஸ்தம் என்று ஒன்று உண்டு. அதுவும் ஒவ்வொரு வயதினர்க்கும். இதனை உணராததன் காரணமாக தான் - தந்தையின் நேர் கண்காணிப்பில் இல்லாத இன்றைய நம் இளைய மாணவ சமுதாயம், சமூக மாற்றத்தில்சிக்கி தன் எதிர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டு வருகிறது.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வரும்போது - பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று, பெருமையின் அடையாளமாக - நாம் வாங்கி வரும் கம்ப்யூட்டர், கைப்பேசி மற்றும் நாம் விடுமுறைக்கு வந்த பிறகு வாங்கிக் கொடுக்கும் கார்/பைக் போன்றவையும், நம் விடுமுறை கழிந்த பின் நம் கட்டுபாட்டில் இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளால் எவ்வாறு உபயோகபடுத்தப்படுகின்றன என்பதை கண்காணிக்க நாம் தவறி விடுகிறோம்.

இணையம் (INTERNET) வசதி இல்லாத வீடுகள் காயலில் இன்று மிக சொற்பமே. அப்படி இல்லையென்றாலும் கண்டிப்பாக கைப்பேசியில் மாதம் 200 ரூபாய் கொடுத்து தடையில்லா வலைதள வசதி (UNLIMITED INTERNET) வைத்து இருக்கும் மாணவர்கள் அதிகம். இன்றைய அனேக மாணவர்களின் லைப்ஸ்டைலே பைக், தடையில்லா வலைதள வசதி/ தடையில்லா SMS வசதி கொண்ட கைப்பேசி, தூக்கம் போக மிச்ச நேரங்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அப்டேட்ஸ். அதன் வெளிப்பாடு +2 முடிவுகளில் தெள்ளத் தெரிகிறது.

நான் காயல்பட்டணம்.காம் வெளியிடும் காயல்பட்டண முடிவுகளை கடந்த நான்கு-ஐந்து வருடங்களாக ஆராய்ந்து வருகின்றேன். உண்மை கசக்கும் என்பார்கள். வருடா வருடம் 10 - 12 மாணவர்களை தவிர்த்து - பெரும்பான்மையான மாணவர்களின் தரத்தை நோக்கினால், கவலைதான் மிஞ்சுகிறது.



=== 2012ம் ஆண்டு 700 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்த மாணவர்களின் சதவிகிதம் 43.28% (Overall - 25.6%)

=== 2012ம் ஆண்டு 901-1000 மதிப்பெண்களுக்கு மத்தியில் உள்ள மாணவர்களின் சதவிகிதம் 7.96% (Overall - 17.35%)

=== அதே வேளையில் 2012, 2009 தவிர்த்து - 2011, 2010, 2008 ஆண்டுகளில் 1000 மதிப்பெண்களுக்கு கூடுதலாக எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்த சதவிகித்தில் பாதிகூட இல்லை

=== ஐந்து ஆண்டுகளில் 858 மாணவர்களில் 2 மருத்துவர்கள் தான் மாணவர்கள், 7 பேர்தான் நல்ல இஞ்சினியரிங்க் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். 22 பேர்தான் ஒரளவு மிதமான இஞ்சினியரிங்க் கல்லூரிகளில் இலவச சீட்களில் சேர்ந்து உள்ளனர். இது 4 சதவிகிதம் கூட இல்லை

நகரில் உள்ள ஆண்கள் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை தற்போது காண்போம். இப்புள்ளிவிபரங்களை வழங்குவதன் நோக்கம் - பள்ளிக்கூடங்களை குறை கூறுவதற்கு அல்ல. இப்புள்ளிவிபரங்கள் எடுத்துக்கூறும் யதார்த்தத்தை - பார்வையாளர்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.



மாறிவரும் சமுதாயத்தில் சிக்கித்தவிக்கும் காயல் மாணவர்களை எவ்வாறு அணுகலாம் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

<> 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கண்டிப்பாக பைக், அலைபேசி , டிவி போன்றவைகளை மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், பெற்றோர்களும் உபயோகிப்பதை, குறைத்தல்

<> வெளியூர், வெளிநாட்டில் உள்ள தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு - அவர்களின் முக்கிய வகுப்புகள் படிக்கும் ஆண்டுகளில் - பெருமைக்காக பைக், கைப்பேசி வாங்கி கொடுத்தல், வீட்டில் புதிதாக இணையம் (INTERNET) பொருத்துதல் போன்றவைகளை தவிர்ப்பது

<> பிள்ளைகளுக்கு 8ம் வகுப்பு முதலே - தான் அரபு நாட்டில் படும் கஷ்டங்களை சொல்லி, நன்றாக படித்தால்தான் நல்ல வேலையில் அமர முடியும் என்றும், தன்னைப் போல வெளிநாட்டில் அவதிபட வேண்டியது இல்லை என்றும், நல்ல வேலையில் அமர்ந்தால்தான் வாப்பா அரபு நாட்டில் படும் கஷ்டத்தில் இருந்து விலகி ஊர் வர முடியும் என்றும் நினைவூட்டி கொண்டே இருப்பது

<> இல்லத்தில் இணையத்தை தவிர்க்க முடியவில்லை என்றால், தங்கள் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் - அவர்களின் சமூக வலைதளங்களில் தந்தையர்களும் இணைந்து அவர்களின் செயல்களை கவனிப்பது

<> அலைபேசிகளில் தடையில்லா இணையம் (UNLIMITED INTERNET) வ்சதி உள்ளதா இல்லையா என்று முக்கிய வகுப்புகளில் கண்காணித்துக்கொண்டே வருவது

<> 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விளையாட்டை குறைப்பது. நண்பர்கள் வட்டம், அவர்களுடன் அரட்டை அடிப்பது ஆகியவற்றை முற்றிலும் குறைப்பது

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Disagree...
posted by: M Sajith (DUBAI) on 24 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21042

Very interesting statistics., yet I failed to understand how internet is cited to be the reason that contributes that systemic failure.

Internet has proved to be an important tool that really helped students to do better even in exams with numerous practice questions to train for exams - though I'm not advocating to be trained - I would prefer learning instead.

It is the up bringing and the influencing of values that matters and not these distractions.

I wish to invite readers to take a look at the link below, an interview with record holder in ISC exam board - which truly state the otherwise.

http://gulfnews.com/news/gulf/uae/education/mum-of-boy-who-got-99-5-was-worried-he-wasn-t-studying-1.1027169

I standby the concern expressed by the author, yet do not subscribe to the view point that entertainment, games nor internet would deter the achievement.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: M.E.L.NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) on 24 May 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21043

அன்பு சகோதரர் ஹசனின் கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை .இப்படி பட்ட சமூக சீர்கேடுகள் குறிப்பாக நமது ஊரின் கலாச்சாரங்கள் அடியோடு குறைந்து விட்டது மற்றுமொரு காரணம்.காயல் பட்டினத்தில் நுழைந்த உடன் தலையிலே தொப்பி அணிந்து செல்லும் வழக்கம்.தொப்பி இல்லாமல் தெருவில் செல்லும் போது பெரியவர்கள் சதுக்கை (சங்கங்கள் )களில் அமர்ந்து தம்பி எந்த ஊரு யாரை பார்க்க செல்கிறீர்கள் என்று விசாரித்து அனுப்புவார்கள். தெரிந்த பிள்ளைகளாக இருந்தால் என்ன தொப்பி இல்லாமல் போகிறாய் என கண்டித்து அனுப்புவார்கள் .

2 இதற்கு முந்திய கட்டுரையில் அன்பு மச்சான் ரபீக் குறிப்பிட்டதை போல் மாணவ செல்வங்கள் இனிய மாலை பொழுதினில் விளையாடி மக்ரிப் பாங்கின் சப்தம் கேட்ட உடன் விளையாட்டை நிறுத்தி மக்ரிப் தொழுது விட்டு வீட்டுக்கு வந்து திரு மறை குர்ஆனை ஓதி அதற்கு பிறகு பள்ளி பாடங்களை படித்து கொண்டிருப்பார்கள்.இந்த நடைமுறைகளை பின்பற்றாத மாணவ மாணவியர்களுக்கு இரவு உணவு மறுக்கப்படும் .மக்ரிப் தொழுகை முடிந்த வுடன் தெருவுக்குள் நுழைந்தால் வீடு தோறும் சாம்பிராணி, பத்தி வாசனை கமகமக்கும். எல்லா வீடுகளிலும் குர்ஆனை ஓதுவது ,சலவாதுகள், திக்ரு போன்ற நல்ல அமல்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் .இப்படி பட்ட நடைமுறைகள் ஒழிந்து போனதினால் ஊரில் முஸீபதுகள் பெருகி மன நிம்மதி இழந்து செல்வ செழிப்பில் இருந்தாலும் மனசஞ்சலன்களில் பீடிகபட்டு இருப்போர் எத்தனை பேர் என்பதை பட்டியல் போட்டு விடலாம் .

3. மார்க்க கல்வி ஈடுபட்டு விட்டது மற்றுமொரு காரணம் .பள்ளிக்கூடங்களின் விடுமுறை நாட்கள் நமது ஊரின் வழக்கப்படி வெள்ளிகிழமை, மற்றும் சண்டே ஆகிய நாட்களில் விடுமுறை விடுவார்கள் .அந்த நாட்களில் சில மணி நேரம் மார்க்க கல் விக்காக நமது மாணவ செல்வங்கள் செல்வது வழக்கம். தற்போது புனித ஜும்ஆ தினத்தில் பள்ளிகூடங்கள் வைத்து மாணவ சமூதாயங்கள் மார்க்க கல்வி கற்க முடியாமலும் ,குளித்தும் குளிக்காமலும் வேர்க்க விருவிருக்க பள்ளிக்கு வந்து கொத்பா தெளிவுரையை கூட அறிந்து கொள்ள முடியாமல் தொழுது விட்டு விருடென சென்று விடுகிறார்கள் . இன்னும் சில மாணவர்களோ களைப்பின் காரணமாக புனித ஜும்ஆ தொழுகையை கூட விட்டு விடுகிறார்கள். நமது முன்னோர்கள் பேணி பாதுகாத்த கலாச்சாரங்கள் மீண்டும் துளிர் விட வேண்டும்.அப்போது தான் நமது மாணவ சமுதாயம் முன்னேறும். காயலின் கலாச்சாரம் பேணி பாதுகாபோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 24 May 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21044

வாப்பாமார்கள் படும் கஷ்டத்தை தாய் சோறுட்டும் போது கூடவே ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே புத்தியுடன் வளருமாம்.இது தம்பியின் புது மொழி! பாருங்கள் .பதிவு செய்யுங்கள்.இதுதான் நம் இளைய சமுதாயத்திற்கு அவசியமான கட்டுரை!

சபாஸ் தம்பி உங்களின் இந்த கருத்துக்கு உண்மையில் ஒரு ராயல் சல்யூட் அடிக்கிறோம்.

உமர் அனசுடன்,
குடாக் புஹாரி
தோஹா கத்தார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 25 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21046

தம்பி ஹசன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது

.அலைபேசியும் இணையதளமும் இல்லாத உலகை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. கூட்டல் கழித்தல் கூட கால்குலேட்டர் இல்லாமல் செய்யமுடியாத ஒரு யுகத்தில் வாழ்கிறோம். இதையும் தாண்டி ROBOISM என்று புதிதாக எல்லாவற்றையும் விழுங்கிவிடும் எல்லாவற்றையும் தானே செய்யும் ஒரு கருவி உருவாகி அதை நோக்கி இளைஞர்கள் வேகமாக சென்றுகொண்டிருக்கிறார்கள்.

பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசங்கள் ஏதடா என்று ஒரு கவிஞன் கேட்பது உங்கள் காதுகளில் விழுகிறதா...எனவே நீங்கள் எதை ஒதுக்க சொல்கிறீர்களோ., எதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்ககூடாது என்று சொல்கிறீர்களோ அவற்றை மக்களே தங்கள் பாக்கெட்டிலிருந்து கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இந்த சிறிய ஊரில் எத்தனை கைபேசி விற்கும் கடைகள். மிக குறைந்த விலையில் மடிக்கணி நம் மாணவ மாணவிகள் மடியிலே இப்போது வந்து விழுகின்றன, அதற்கு விலையில்லா மடிக்கணி என்று புரட்சி தலைவியின் பரிபாஷையில் சொல்லலாம். தொலைக்காட்சி பெட்டி ஏற்கெனவே கலைஞரின் கடைக்கண் பார்வையால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதுபோல் என்ன பொருள்கள் இல்லை நமதூரில் அதை வாப்பா உம்மாதான் வாங்கி கொடுக்கவேண்டும் என்ற நிலையிலும் மாணவர்கள் இல்லை. ஒன்றும் புரியவில்லை.

ஆனால் இவை எல்லாம் இருந்தும் இறை அச்சம், ஹராம் ஹலால் பேணி வாழ்கையை முன்னெடுத்து செல்ல மார்க்க கல்வி கற்று தேறியிருந்தால் அந்த இஸ்லாமிய நெறிமுறையுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் யாரும் வழி தவற மாட்டார்கள்.அதற்காக து ஆ செய்வோம்.அந்த முயற்சியில் ஈடு பட்டுள்ள கல்வி நிறுவங்களை நாம் போற்றி அதற்கு ஊக்கம் கொடுப்போம்.

இருட்டாக இருக்கிறதே என்று கவலைப்படுவதைவிட அங்கே ஒரு சிறு தீகுச்சியயாவது உரசி வெளிச்சம் வரசெய்வோம். உங்கள் கட்டுரையில் காணப்படும் புள்ளியியல் கூட கணினியின் உதவிதான். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: Syed Hasan (Dammam) on 25 May 2012
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21047

அன்பு வாசகர்களுக்கு ,

* வலைத்தளம் என நான் கூற வருவது பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மிக முக்கியமான தருணத்தில் முடிவில்லா (Unlimited) இணையம் மூலம் சமூக வலைதலங்கலான பேஸ்புக்கில் 24 மணி நேரமும் செலவிட்டு கொண்டு இருப்பது.

* இது தம் தந்தையர் வாங்கி தந்த விலையுர்ந்த கைபேசி மூலமே சாத்தியம். இல்லை இவ்வகையான கைபேசிகளை காயல் பட்டன கடைகளிலேயே வாங்கி கொள்கின்றனர் என்றால் இன்னும் மோசம். இவ்வளவு பணமும் எளிதாக பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மிக முக்கியமான தருணத்தில் கைகளில் பிறழ்கிறது.அதை அவர்கள் இது போன்ற இத்தருணத்திற்கு தேவை இல்லாத வழிகளில் செலவு செய்கின்றனர்.

* Internet , TV , Computer ஆகியவற்றை உபயோகப்டுத்துவதை இக்கட்டுரை எதிர்க்க வில்லை.மாறாக பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மிக முக்கியமான தருணத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் குறைத்து கொள்ள வேண்டும் என்றுதான் வலியிருதுத்கிறது. அப்படி உபயோகித்தாலும் பேஸ்புக் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட கூடாது என்று சொல்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: Seyed Mohamed (Chennai) on 25 May 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 21048

எழுத்தாளர் பேஸ்புக் அப்படி உபயோகித்தாலும் பேஸ்புக் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட கூடாது என்று சொல்லவரார். பேஸ்புக் தவிர்க்க சொல்லவும். யாரும் 24 மணிநேரம் நீங்க சொல்வது போல் பார்கவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 26 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21049

தம்பி ஹசன் நிறைய முயற்சிகள் எடுத்து ,நிறைந்த உழைப்பில் ஒரு கட்டுரையை தந்திருக்கிறார். பாராட்டுக்கள். இணையதளம், செல்போன் டி.வி எல்லாம் இன்றைய வாழ்வில் தவிர்க்க இயலாத பொருட்களாக ஆகிவிட்டன. இதையும் மீறித்தான் நமது சமூகம் முன்னேற வேண்டும். அந்த வெற்றியை இறைவன் நமக்குத்தருவானாக...(ஆமீன் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: Rmk.kuthoos (Abudhabi-al ruwais) on 01 June 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21050

sariyaa solla pattathu.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) on 07 June 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21051

தம்பி ஹசன் அவர்களின் ஆதங்கத்தின் சாராம்சத்தில் நம் அனைவக்ருக்கும் பங்குண்டு.அவர் எடுத்து வைக்கும் உதாரணத்தில் வேண்டுமானால் சில விபரங்களை மாற்றலாமே தவிர, அவரின் ஆழமான,கவலையான கருத்துக்கள் காயலர்கலாகிய நம்மில் பலபேருக்கு படிப்பினை தரக்கூடிய நல்லுபதேசமாக நினைத்து நம் பிள்ளைகளை நல்ல வழிக்கு கொண்டுசெல்லும் பாதையை தேர்ந்தடுக்க வேண்டும்!

கம்ப்யூட்டர்,மொபைல் பொன்றவற்றால்தான் 100 % பிள்ளைகள் கெடுகிறது என்பதை முழுவதும் ஏற்கமுடியாது, பலபிள்ளைகளின் வெற்றிக்கு வித்தூண்டியதும் இந்த சாதனங்களே.

ஆகவே பெற்றோர்களின் வளர்ப்பு இதில் மிக மிக முக்கியம், தம்பி ஹசன் உங்கள் அறிவுரையில் மார்க்க விஷியத்தில் கூடுதல் ஈடுபாடு இருக்கவேண்டும் என்ற வலியுறத்தலை காணவில்லை. நம் புனித மார்க்கத்தை ஒருவன் முறையாக பேணினாலே போதும் அவனுக்கு அனைத்து ஒழுக்கமும் உயர்வான கல்விஞானமும் ஒருங்கே ஓடோடி தேடிவரும்.

அடுத்து, சென்னையில் நம்மூர் சகோதரர் ஒருவரை பார்த்தேன்.காலையில் 6 மணிக்கு ஒவ்வொரு கடையாக பிஸ்கட் சப்பளை பண்ணுபவர் இரவு 10 மணிக்குதான் ரூமுக்கு திரும்புகிறார் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு தன் குடும்பத்தையும் தன் பிள்ளைகளையும் படிக்கவைத்து காப்பாற்றுகிறார்.

கஷ்டபடுபவர்கள் அரபு நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்ற சிந்தாந்தத்தை சற்று மாற்றுங்கள். நம்மில் சிலர் எந்த கட்டுரை எழுதினாலும்,எந்த மேடையில் பேசினாலும் அரபு நாட்டைத்தான் குறிவைத்து காரணமாகவும், உதாரணமாகவும் குறிக்கிறார்கள். தயவு செய்து அந்த வழக்கத்தை கைவிடுங்கள்

நம்மூர் சகோதரர்கள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள், அவர்கள் எல்லோருக்கும் அப்பாற்பட்டவர்களா அரபு நாட்டில் பணிபுரியும் அன்பு காயலர்கள்?.

அரபில் வசிக்கும் நம்மூர் வாசிகள் நம்மூரை எவ்வளவு நேசிக்கிறார்கள் தெரியுமா?அந்த அன்புள்ளங்களின் நிலைமையையும், அவர்களின் வேலையையும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் பல இதயமற்றவர்களின் இன்சொல்லை என் செவிகளில் கேட்டதால் தான் என்னுடைய இந்த கருத்தை பதிவு செய்துள்ளேனே தவிர தனிப்பட்ட எவரையும் குறிப்பிடவில்லை. அலலாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:சமூக மாற்றத்தில் சிக்கித்...
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 09 June 2012
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 21052

ஒரு ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் ரிப்போர்ட் போன்று புள்ளி விபரங்களுடன் தரப்பட்டுள்ள நல்லதொரு கட்டுரை. இது போன்ற முயற்சியை நண்பர் செய்யத் ஹசன் போன முறையும் எடுத்து அது செய்தியாக வந்த ஞாபகம் உள்ளது. Tabular ரிபோர்ட்டை விட 'லைன் சார்ட்' எல்லோருக்கும் எளிதாக புரியும் படியாக உள்ளது.

பொத்தாம் பொதுவாக எல்லோரும் கைகாட்டுவது இன்டர்நெட், டிவி, அலைபேசிகள் தான். இவைகளில் எனக்கும் மாற்று கருத்துக்கள் உள்ளன. அவைகளை விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிகின்றேன். ஷுஐப் காக்கா சொன்னது போல, தவிர்க்க இயலாத பொருட்களாகிவிட்ட இவைகளை தாண்டிதான் நம் சமூகம் முன்னேற வேண்டும். அதற்கான வழிதேடல்களே இப்பிரச்சனைக்கு (சமூக மாற்றத்தில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள்) பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

என்னுடன் அறுபது வயது இளைஞர் (இது போன்ற பெரியவர்களை young man / லேடி என்று தான் இங்கு அழைப்பார்கள்) பாட்மின்ட்டன் விளையாட வருகிறார். ஒரு அரை மணிநேரம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடினால் தான், தன் மனம் ரிலாக்ஸ் ஆகி அவ்வயதிலும் சுறு சுறுப்பு கிடைக்கிறது என்கின்றார். அவ்வயதிலே அவருக்கே அது சுறு சுறுப்பை தருகிறதென்றால் மாணவ பருவத்தில் அதை விட பல மடங்கு சுறு சுறுப்பை தரும். அளவோடு குறுகிய நேரத்திற்க்குள் விளையாடி முடிக்க முடியுமென்றால் !!

"அரபு நாட்டில் படும் கஷ்டங்களை சொல்லி" -  தன் தாய் நாட்டில் இது போன்று ்நாம் கஷ்டபட்டாலும், அந்நிய மண்ணில் அடிமையாய் மனைவி மக்களை பல வருடங்கள் பிரிந்து வியர்வையுடனும் நம்மவர்கள் படும் கஷ்டத்தினால், அரபு நாட்டை பொதுவாக நாம் இப்படி குறிப்பிடுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved