Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:00 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 11
#KOTWEM11
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012
மாணவர்களுக்கு பெற்றோரின் அக்கறைத் தேவை!

இந்த பக்கம் 2498 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மாணவர்கள் மீது பெரும்பாலான பெற்றோர்களுக்கு அக்கறை இருப்பது இல்லை என்பதையே இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் செல்வது இல்லை. அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். சிலர் டியூஷன் படிக்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு விளையாட போகின்றனர். இவைகளை எல்லாம் பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நேர்வழிப் படுத்துவதில்லை.

சென்ற பத்து நாட்களாக நமது ஊரின் சில பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பம்பரம் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு எந்நேரமும் ரோட்டிலே பம்பரத்துடனே இரவு, பகலாக விளையாடிக் கொடிருக்கின்றனர்.

அவர்களிடம், தம்பி இந்த நேரத்தில் (இரவு 9 மணி) ஏன் விளையாடுகிறீர்கள்? படிக்கவில்லையா? என்று கேட்டால், நாங்கள் 7 ஆவது வகுப்புங்கோ! 10 ஆவது வகுப்பு படிக்கிறான் அவனே விளையாடுகிறான் பாருங்கோ! என்கிறான். 10 ஆவது படிக்கும் மாணவனை கூப்பிட்டு அறிவுரை சொன்னவுடனே, சரிங்க படிக்க போகிறேன் என்று சொல்லி போய் விட்டான்.

மறுநாள் மதியம் 2 1/2 மணிக்கு கூட்டமாக என் வீட்டருகில் பம்பரம் விளையாடி கொண்டிருந்தனர், என்னுடன் வந்த ஒரு பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகளில் ஒருவர் , பம்பரம் விளையாடிக்கொண்டிருந்த 8 ஆவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை அழைத்து ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்றார், அதற்கு அவன் திருச்செந்தூருக்கு டாக்டரை பார்க்கப் போகிறேன் அதனால் பள்ளிகூடம் செல்லவில்லை என்றான், என்னிடம் வந்து அனுமதி வாங்கினாயா என்றார். இல்லை நாளை வந்து உங்களிடம் சொல்வேன் என்றான். ஏம்பா! விடுமுறை எடுப்பதற்கு முன்பு அனுமதி வாங்குவியா ? அல்லது விடுமுறை எடுத்தபின் அனுமதி கேட்பியா ? இது என்ன முறை என்று கூறிவிட்டு அவனுடைய பெயர் விவரங்களை வாங்கி செல்கிறார்.

மாணவர்கள் விளையாடுவதை குறையாக சொல்லவில்லை. அதுவும் கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் மற்றும் டிவி என்று வீணாக பொழுதை போக்குவதைவிட இப்படி வெளியே வந்து விளையாடுவது உடலுக்கும் , மனதுக்கும் சிறந்ததுதான் இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த காலம்தான் சரி இல்லை. காரணம் மாணவர்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்கு மாறுவதற்காக பரீட்சை எழுத கூடிய காலம் இது.

முதல் வகுப்பு மாணவராக இருந்தாலும் சரி அல்லது 11 ஆவது வகுப்பு மாணவராக இருந்தாலும் சரி பரீட்சைக்கு நெருக்கமான இந்த நாட்களில் அவர்கள் நன்றாக படித்து பரீட்சை எழுதினால்தான் நல்ல மார்க்குகளை எடுத்து பாஸாக முடியும். பிற்காலத்திலும் அவர்கள் மேற்படிப்புகளை அதிக அக்கறையுடன் படித்து முன்னேற வாய்ப்பளிக்கும்.

சின்ன வகுப்புத்தானே எப்படியும் பாஸாகிவிடலாம் , எட்டாவது வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் அந்த சலுகை அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று ஒரு மாணவரோ அல்லது அவருடைய பெற்றோரோ நினைத்தார்களானால் அது தவறு. அப்படி நினைப்பது மாணவருடைய முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழியாகும்.

நேர்மையற்ற அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசுகள் நிச்சயமாக நேர்மையானதாக இருக்க முடியாது - ஆகவே அரசாங்கங்கள் கொடுக்கும் இந்த சலுகையானது அறிவுப்பூர்வமானதல்ல. ஒரு மாணவன் கற்றுத்தேர்ந்து சிறந்த மனிதனாக வளர வேண்டும் என்றால் அவன் ஆரம்பம் முதலே, சிறுவனாக இருக்கும்போதே நல்லது எது ? கெட்டது எது ? என்பதையும் வெற்றித் தோல்வியையும் உணர்ந்தவனாக வளர வேண்டும்.

அதல்லாமல் முதல் வகுப்பு முதல் 8 ஆவது வகுப்புவரை தோல்வி என்றால் என்ன என்பதை என்னவென்று விளங்கிக் கொள்ளாமல் வளரச்செய்து விட்டு, அவன் 13 , 14 வயது டீன்னேஜ் மாணவனாக வளர்ந்து 9 ஆவது வகுப்பு படிக்கும்போது அவனுக்கு தோல்வியைப் பற்றி உணர்வுப்பூர்வமாக , செயல் ரீதியாக காட்டினால் அவனுடைய மன நிலை என்னவாகும் ?. எனவே பெற்றோர்கள்தான் பிள்ளைகள் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

8 ஆவது வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் கட்டாய தேர்ச்சிப் பெறச்செய்வது எவ்வளவு மோசமான செயல் என்பதற்கு உதாரணம் இந்த வாரம் ஒரு நாளிதழில் வெளியான செய்தியாகும். அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்கள் கல்வியை பற்றிய ஆய்வு நடத்தியதில் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 32 % மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிகிறதாம், 8 ஆம் வகுப்பில் 66 % மாணவர்களுக்குத்தான் எளிய தமிழை படிக்க இயலுகிறதாம்.

அடுத்து 5 ஆம் வகுப்பில் 45 % மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும் 14 % மாணவர்களுக்கு மட்டுமே கழித்தல் , வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறதாம்.

8 ஆவது வகுப்பில் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் செய்யக்கூடியவர்கள் 45 % மாணவர்கள்தானாம்.

மேலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களிடம் 2 ஆம் வகுப்பு தமிழ் பாட நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது அரசு பள்ளி மாணவர்களில் 68 % திணறினார்களாம் - தனியார் பள்ளி மாணவர்களில் 66 % திணறினார்களாம்.

நமது கல்வியின் தரம் இந்த நிலையில் இருந்தால் வருங்கால மாணவர்களின் கல்வித் தரம் என்னவாகும் என்பதை சற்று யோசித்து பாருங்கள். எட்டாம் வகுப்பு வரை எல்லோரையும் தேர்ச்சிப்பெற செய்தால் கல்வித்தரம் இப்படித்தான் இருக்கும். எனவே அரசாங்கத்தை நம்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சிதைக்க வேண்டாம்.

குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரம் செய்து விட்டு அரசாங்கமே மது கடைகளை திறந்து விற்பனை செய்கிறது. புகைப் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு , கேன்சர் நோய் வரும் என்று சிகரெட் பெட்டிகளில் படங்கள் போட்டு விளம்பரம் செய்து, அந்த சிகரெட்டை விற்பதற்கு அனுமதிக்கிறது.

எனவே அரசாங்கம் மக்களை படுகுழியில் தள்ளுகிறதே தவிர , மக்களுக்கு நன்மையை செய்யவில்லை. இதுபோன்றுதான் 8 ஆம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சிப் பெறச்செய்வது என்பது. எனவே பெற்றோர்களே! உஷாராக இருங்கள். உங்கள் மக்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் , அரசாங்கம் கொடுக்கும் சலுகையில் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்தும் , அரவணைக்க வேண்டியபோது அரவணைத்தும் நடந்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைவிட நல்லவர்களாக , மேலானவர்களாக வளர்வார்கள்.

உங்கள் அன்பு செல்வங்களுக்காக உங்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து , கொஞ்சம் தியாகம் செய்து , அவர்களை நல்லவர்களாக வளர்த்தால் - இப்பொழுதும் சந்தோஷமாக உங்கள் வாழ்வு அமையும் , வயோதிக காலத்திலும் நீங்கள் நிம்மதியாக மிகவும் சந்தோஷமாக உங்கள் காலத்தை கழிக்கலாம். இது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை அறியத்தருகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! பெற்றோர்கள் அனைவரையும் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தி வளர்க்கவும் அந்த பிள்ளைகள் பெற்றோர்களை நல்ல மரியாதையுடன் நடத்தவும் கிருபை செய்வானாக ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மாணவர்களுக்கு பெற்றோரின் ...
posted by: ATC ABUBACKER (DUBAI) on 26 February 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20562

நல்லதொரு கட்டுரையை ஆசிரியர் தந்து இருக்கிறார்.

முன்பு இருந்த காலங்களை விட இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் வெளியில் விளையாடுவதை விட கணினியில் அதிக நேரம் செலவிடுகின்றனர்... (Games & Internet) .

ஒரு மாணவனை பார்த்து... " ஏம்பா தம்பி, உனக்கு பள்ளிக்கூடம் போறது பிடிக்குதா" அப்படினு கேட்டா... அதுக்கு அந்த மாணவன் " எனக்கு பள்ளிக்கூடம் போறதும் பிடிக்குது.. வர்றதும் பிடிக்குது.. ஆனா நடுவுல அங்க இருக்கிறதுதான் பிடிக்கல.. அப்படினு சொல்றான்.

பெற்றோர்கள் தனது பிள்ளைகளை உலக கல்வி மட்டும் அல்லாது, மார்க்க கல்வியும் கற்று கொடுத்தால் அவன் ஒழுக்கமாக தனது அரவணைப்பில் வளர்ந்து ஊர் போற்றும் அளவிற்கு நல்ல மாணவனாக திகழ்வான்.

S.M.B. முகமது அபூபக்கர்
துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மாணவர்களுக்கு பெற்றோரின் ...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 27 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20563

அஸ்ஸலாமு அழைக்கும்!

மிகவும் அக்கறையோடு பெற்றோர்களுக்கு உபதேசம் பண்ணி இருகின்றீர்கள்!கோடி பாராட்டுக்கள்! பொதுவா மிகுந்த பெற்றோர்கள்,பிள்ளைகள் மேல் அக்கறையோடுதான் இருக்கின்றார்கள். பசங்க டிமிக்கி கொடுத்து விடுகிறாங்கள்! நன்றி எழுத்தாளருக்கு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாணவர்களுக்கு பெற்றோரின் ...
posted by: Syed Ismail (Chennai) on 27 February 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 20564

அஸ்ஸலாமு அழைக்கும்!

உண்மைதான் மாமா இன்றைய குழந்தைகள் நிறைய பேருக்கு சரியாக படிக்கவும் தெரியவில்லை எழுதவும் தெரியவில்லை. இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக கவனிப்பது இல்லை என்பதே உண்மை...

என்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன் `வைகை ` என்று எழுவதற்கு பதிலாக `வேகை` என்று எழுதுகிறான். அவன் தமிழ் எழுதும் பொழுது நிறைய பிழைகள் செய்கிறான். ஒரு இன்ஜினியரிங் படிக்கும் மாணவனுக்கு தன் தாய் மொழியை கூட சரியாக எழுத தெரியவில்லை என்று சொன்னால் அவனால் எப்படி வேறு மொழியை கற்று தேற முடியும்.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே அடிப்படை விசயங்களை கற்று கொடுக்க வேண்டும். அதான் அவர்கள் டியூஷன் செல்கிறார்களே அங்கே படித்து கொள்வார்கள் என்று இருக்காமல் இன்று ஆசிரியர் என்ன சொல்லித்தந்தார் நீ என்ன கற்று கொண்டாய் என்று அறிந்துகொண்டு நாமும் கற்று கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் சரியாக பள்ளிக்கு செல்கிறார்களா டியூஷன் செல்கிறார்களா என்பதை அறிந்து தங்கள் பார்வையில் வைத்துகொள்ள வேண்டும்.

அதற்கு அவர்களை ஓயாமல் படி படி என்று சொல்லாமல் படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும் விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடவும் வைக்க வேண்டும்.

அசர் நேரத்தில் படி டியூஷன் செல் என்று சொல்லாமல் அந்த நேரத்தில் விளையாட விட்டு விட்டு மக்ரிபுக்கு பின்னால் படிக்க வைப்பது நல்லது.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவைத்து வரக்கூடிய தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சிபெற உதவ வேண்டும்.

10 மற்றும் 12 படிக்கும் மாணவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பெற்றோர்கள் இந்த பிள்ளைகளை சுபுஹுக்கு எழுப்பி விடுவது அவர்கள் சோர்வடையும் பொழுது தேநீர் போட்டு கொடுப்பது போன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

வரக்கூடிய பொதுத்தேர்வில் எல்லா மாணவர்களும் நல்ல முறையில் எழுதி அதிகமான மதிப்பெண் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவானாக ஆமீன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved