Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:09:56 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 12
#KOTWEM12
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்! (பகுதி – 2)

இந்த பக்கம் 2935 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முந்தைய பதிவில் பெற்றோர்களின் கடமை & இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்பதின் அவசியத்தை பற்றியும் அலசினோம். இப்பகுதியில் மாணவ சமுதாயத்தை பற்றி பார்க்கலாம்.

ஊருக்கு போகிறோமே என்று அங்குமிங்கும் கடன் வாங்கி மனைவி-மக்களுக்கு வேண்டிய பொருட்களை 'சபர்' வரும் போது வாங்கிவரும் தந்தையை பார்த்து...வாப்பாதான் நல்லா சம்பாதிக்கிறாரே நாம் ஏன் கஷ்டபட்டு படிக்கணும் என்று பள்ளிக்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமா தியேட்டரில் தன்னுடைய அபிமான ஹீரோ 'என்னாமா' கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை/ஊரை காப்பாத்துறார்னு ‘உணர்ச்சி’ பொங்கும் இவர்களுக்கு, அந்த அரேபிய பாலைவனத்தில் 'நாம் தான் ஒழுங்கா படிக்காமல் இப்படி கஷ்டபடுகின்றோம் நம்முடைய பிள்ளைகளாவது இப்படி கஷ்டபடாமல் இருக்கணுமே’ என்பதற்க்காக தன்னுடைய இளமையையும் ஆசைகளையும் துறந்து உதிரத்தை வியர்வையாக்கி ‘என் பிள்ளைகள்’ நன்றாக படித்து முன்னேறனுமே என்று நினைக்கும் 'தன் தந்தை' ஒரு 'ஹீரோவாக' தெரியாமல் போனது ஒரு துரதிஸ்டமே. ஒரு காலத்தில் கல்வி என்பது நமது சமுதாயத்தினருக்கு எட்டா கனியாய் பாகற்காவாய் கசந்த காலம் போய் இன்று கல்வி கற்று பல துறைகளில் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பல தேசங்களில் பணி புரிந்து வருகின்றார்கள். ஆனால் நம்முடைய இளைய சமுதாயம் (பெண்கள் உட்பட) போகின்ற பாதையை பார்த்தால் கல்வி கற்க அனுப்ப முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இல்லாமல் இல்லை.

''அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை யானவர் யார்?'' என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், மூன்று முறையும் ''உன் தாய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 5971 . பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று.தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது நபி மொழி என்று பலமுறை கேட்டிருந்தும் நமது மாணவமனிகள் தாயை ஏக வசனத்தில்இங்கே எழுத முடியாத அளவுக்கு திட்டுவார்கள். இதுவும் காலம் காலமாக நமதூரில் தொடர்ந்து வருகிறது. யாரும் இதை சீரியசாக எடுப்பதில்லை.

இன்றைய காலத்து பிள்ளைகள் மேலைநாட்டி​ல் வளரும் பிள்ளைகளை போல் கலாச்சாரத்திலும், உடை நடையிலும், நவீன பொழுது போக்குகளை பயன்படுத்துவதிலும் தாங்களும் மாற/அனுமதிக்க பட வேண்டும் என்று நினைக்கிறா​ர்கள். அத்தேவையற்ற ‘மாற்றம்’ தான் முதற்பிரச்ச்சனை. கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை எனில் அமெரிக்க குழந்தைகள் இந்தியா, சீனா போன்ற மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர் என்று ஒபாமாவே அச்ச்சபடுகின்றார் என்றால் அதற்க்கு காரணம் நாம் கல்வியில் சிறந்து விளங்குவதினால் தான். நாம் ஒழுங்காக படிக்கிற வரைக்கும் தான் நமக்கு மேலை நாடுகளில் வேலை. ஒழுக்கமும், பெற்றோர்களின் அரவணைப்பும், ஆதரவும், படித்து முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் பெரும்பாலான மேலை நாட்டு குழந்தைகளுக்கு அமையாத வரைக்கும்தான் நாம் அவர்கள் மண்ணில் ‘அவர்களையே’ வேலை வாங்க முடியும். ஒரு வேளை அவர்களுக்கு இதெல்லாம் அமைந்து விட்டால் அல்லது நமது நாட்டில் கல்வித்திறன் குறைந்து விட்டால் ‘இந்தியர்கள்’ அனைவரும் ஊரை பார்த்து பெட்டி கெட்ட வேண்டியது தான்.

தெருவிலும் விளையாட்டு மைதானத்திலும் விளையாடிய காலம் போய் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் ‘சதா’ வீடியோ கேம்ஸ், டிவி, அலைப்பேசி, கணினி என்று தனிமை/தனியறையில் முடங்கி கிடக்கின்றனர். அத்தனிமைதான் அவர்கள் கெட்டு போவதற்க்கு முதற்ப்படியாகவும், பெற்றவர்களுக்கு அவர்கள் 'தனிமையில்' என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் போகிறது. பின்னர் எதிர்பாராத விபரீதங்கள் நடக்கின்றது. அலைப்பேசி, கணினி,டிவி போன்றவைகளை ‘தேவைக்கு’ பெற்றோர்கள் அனுமதியுடன் அவர்கள் முன்னிலையில் பயன்படுத்தும் போது தவறான எண்ணங்களுக்கு முற்று புள்ளி வைக்க முடியும். இன்டர்நெட் என்பது கூர்மையான கத்தியை போன்றது. அது அறிவையும் வளர்க்கும் அதே நேரத்தில் தீய வழிக்கும் இட்டு செல்லும். இன்டர்நெட் யுகத்தில் புரியாத ஒரு பாடத்தை நீங்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேடினால் நிறைய விபரங்கள் செய்திகளாகவும் செய்முறை வீடியோகளாகவும் கிடைக்கின்றது. சுயமாகவே சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எத்தனை மாணவர்கள் அதற்காக பயன்படுத்துகிறார்கள்?

மேலை நாடுகளில் பிள்ளைகளின் 18 வயதுக்கு (12th std) மேல் அவர்களை பராமரிக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு இல்லை. சரிவராத பிள்ளைகளை வீட்டைவிட்டே துரத்தி விடுகிறார்கள். ஏனென்றால் கல்லூரி படிப்பு நமது நாட்டை போல் அங்கு எல்லோருக்கும் சுலபம் இல்லை. வருடத்திற்க்கு சுமார் $30000 செலவு வரும். அதுவும் படிக்கும் படிப்பையும் யுனிவர்சிட்டியை பொருத்து அமையும். அச்சுமையை சுமக்க அங்குள்ள பெற்றவர்கள் தயாராக இல்லை. இங்குள்ள பெரும்பாலானோர்கள் ‘மாணாக்கர் கடன்’ திட்டத்திலும் பகுதி நேர வேலை (அதாவது கார்வாஷ்) செய்தும் படிக்கின்றார்கள்.ஆனால் நமது நாட்டில் இந்நிலைமை இல்லை. நமது பெற்றோர்கள் பிறந்தது முதல் வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகிற வரை தம் பிள்ளைகளுக்கு எவ்வித கஷ்டத்தையும் தராமல் பராமரிக்கின்றார்கள்.அப்பேர்பட்டவர்களுக்கு நாம் செய்கின்ற கைமாறு என்னஎன்று சிந்தித்து அதை படிப்பில் நல்லொழுக்கத்தில் காட்ட வேண்டும்.

“…எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.”

ஒரு காலத்தில் படிப்பில் சுமாராக இருந்தாலும் ஒழுக்கத்தில் உயர்ந்திருந்தார்கள். எதாவது தப்பு செய்ய தோணினால் இறையச்சம் பெற்றோர்கள்,குடும்ப கௌரவம்/ஊர் பண்பாடுகள் தடுத்து விடும். ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இவைகளில் எதுவும் இருக்கிறதா என்றே தெரியவில்லை.அப்படியிருந்திருந்தால் ‘மாற்று’ மதத்தவனை காதலித்து அவன் மதத்திற்கே (அதாவது இஸ்லாத்தை விட்டே வெளியேறும் அளவுக்கு) மாறும் அவலங்கள் நடக்குமா. யார் எப்படி போனால் நமக்கென்ன என்கிற ‘சுயநலம்’கூட இவர்கள் வழிதவறுவதட்க்கு ஒரு காரணம். ஒரு காலத்தில் பிள்ளை ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை மட்டும் தான் பெற்றவர்களுக்கு இருந்தது ஆனால் இன்று வெளியில் தலை காட்ட முடியாத அவமானத்தையும் மிகுந்த மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற திருக்குறள் அளவுக்கு உங்களை பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க விட்டால் கூட பரவாயில்லை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தாலே நலம்.

சில வருடங்களுக்கு முன் ‘ஆர்குட்’ மூலம் நமதூரை சார்ந்த கடைசி வருடம் பொறியியல் பயிலும் பையன், எனக்கு அமெரிக்கா வந்து MS பண்ண வேண்டும். அது சம்பந்தமாக எனக்கு உதவுங்கள் என்றான். நானும் டபுள் MS படித்த என் நண்பனை அவனுக்கு அறிமுக படுத்தி வைத்து உதவினேன். பின்னர் அந்த பையனிடம் கேட்டேன்...எப்பொழுது MS படிக்க வருகிறாய் என்று. அதற்க்கு அவன் சொன்னான்...எனக்கு மூன்று நான்கு அரியர்ஸ் இருக்கிறது. நான் அதை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வருடம் வருவேன் என்றான். அரியர்ஸ் வைத்திருந்தாலும் அவனுடைய தன்னம்பிக்கையை வியப்பூட்டியது. இன்றைய மாணவர்கள் தன்னம்பிக்கையில் மிக பலவீனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அதை முதலில் துடைத்தெரிய வேண்டும்.

சமீபத்தில் ஆசிரியர் திட்டியதன் காரணமாக, உடுமலைப்பேட்டை பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை. தேர்வில் வெற்றிபெற தவறியதற்காகவும், ஆசிரியர் திட்டியதற்காகவும், மதிப்பெண் குறைந்ததற்காகவும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தோல்வியால் துவண்டு உட்காருவதை விட சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயலவேண்டும். குறைவாக வாங்கியதற்காக ஆசிரியர் திட்டினார் என்றால் அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இன்றைய மாணவர்களிடம் போராட்டங்களைச் சந்திக்கும் ‘மனதிடம்’ குறைவாகவே உள்ளது. அவர்கள் வளரும்போதே அப்பருவத்தில் பொதுவாக ஏற்படும் போராட்டங்களைச் சந்திக்கும் மன திடத்தையும் வளர்த்துக் கொள்ள நாம் பழக்க வேண்டும்.

பூக்கள் வசந்த காலத்தில் தான் பூக்கும் அது போல உங்களுடைய பள்ளி பருவம் தான் மாணக்கருடைய வசந்த காலம். அதுதான் நாளை நீங்கள் யார் என்பதனை சொல்லும். ஒரு தடவை சறுக்கி விட்டோம் என்பதற்க்காக படிப்பில் தோற்று விட்டோம் என்று மனம் தளராதீர்கள். நம் மண்டைக்கு ஏறின படிப்பு அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வராதீர்கள். இயற்பியலில் கோட்டை விட்டு இன்று நமதூருக்கே கணிதம் எடுக்கும் ஆசான் அது போல பணிரெண்டாம் வகுப்பு வரை மிக சாதரணமாக படித்து கல்லூரியில் மிக கடினமாக உழைத்து பல்கலைகழகத்திலே முதல் மாணவனாக திகழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

சமீபத்தில் மேலப்பாளையத்தை சார்ந்த சிகாகோ பல்கலைகழகத்தில் MS பயின்றவர் சொன்ன விஷயம். இன்று 'தான்' ஒரு நல்ல மார்க்க பற்றுள்ளவனாக ஒழுக்கமானவனாக இருக்கிறதட்க்கு ஒரே காரணம், அதே பல்கலைகழகத்தில்...படிப்பிலும், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டுமோ அது போன்ற தோற்றத்திலும், மார்க்க ஒழுக்கத்திலும் பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருந்து பேராசிரியர்களிடத்தில் தனக்கென்று நற்பெயரையும் பெற்றிருந்த நமது மாநிலத்தை சேர்ந்த மற்றொரு முஸ்லிம் மாணவர் என்றார். வருடங்கள் பத்தாகியும் அவருடன் பயின்ற மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் இன்றுவரை பெருமையாக பேச படுகின்றார். இது போன்ற மாணவர்கள் மேலை நாடுகளுக்கு உயர்கல்வி பயில்வதோடு நின்று விடாமல் இஸ்லாத்தின் நறுமணத்தை பல்கலைகழக வளாகத்திலும் வீசி செல்கின்றனர்.

இன்றைய பெற்றோர்கள் தனக்கென்று என்று எதையும் பிள்ளைகளிடம் எதிர் பார்ப்பதில்லை.அவர்கள் எதிர் பார்ப்பு எல்லாம் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேறி மார்க்க நெறிபடி நடக்க வேண்டும் என்பதே. தன்னுடைய கருத்து பதிவில் மக்கி நூஹு தம்பி காக்கா உல பூரிப்பு அடைந்து கூறியது போல் (அதாவது எனது மக்கள் அனுப்பிய மடிக்கணினியை எப்படி இயக்க வேண்டும் என்ற அறிவை அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். புதுயுகத்தில் இருக்கும் எனது மக்கள் அல்லாஹ்வின் பேருதவியால் "இஸ்லாமிய உணர்வுகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள்") அது போன்ற ஒரு சந்தோசத்தை உங்களை பெற்றவர்களுக்கும் கொடுங்கள்.

நண்பா (மச்சான்) ! உன்னை போல் நானும் நன்றாக படித்திருந்தால் இன்றைக்கு உன்னை போல் நல்ல வேலையில் இருந்திருப்பேன். என்னுடைய குடும்பமும் நல்ல நிலையில் இருந்திருக்கும் என்று அன்று படிப்பில் கோட்டை விட்டவர்கள் /கவனக்குறைவாக இருந்தவர்கள் இன்று வருந்தி தன் சக நண்பர்களிடம் கூற கேட்டிருப்போம். இது போல் இன்றைய மாணவசெல்வங்களும் நாளை உங்கள் நண்பர்களிடம் கூறாதிருக்க வேண்டும் என்றால்...இன்றே விழித்து கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல ஆகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்!! வல்ல இறைவன் நம் இளைய சமுதாயத்தினருக்கு நேர் வழியையும் மார்க்க ஒழுக்கத்துடன் கூடிய கல்வியையும் தருவானாக!!

(இறைவன் நாடினால் தொடரும்)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 29 February 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20569

கட்டுரையின் ஆரம்பம் ( second para ) மனதை தொட்டது .

" எல்லாம் எனக்கு தெரியும் " ......... அறியாத வயதில் எல்லோரும் சொல்வதுதான் . வெற்றி பெற்றவர்கள் அனுபவிக்கும் சுகத்தை பார்த்து ஏங்கும்போது , படிக்க வேண்டிய வயதில் தாம் படிக்காமல் இருந்ததின் விளைவுதான் இது என்பது அப்போது அவர்களுக்கு தெரிய வரும் .

கட்டுரை நன்றாக இருந்தது .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 29 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20570

நண்பா! நானும் நன்றாக படித்திருந்தால் இன்றைக்கு உன்னை போல் நல்ல வேலையில் இருந்திருப்பேன். என்னுடைய குடும்பமும் நல்ல நிலையில் இருந்திருக்கும் என்று அன்று படிப்பில் கோட்டை விட்டவர்கள் கவனக்குறைவாக இருந்தவர்கள் இன்று வருந்தி தன் சக நண்பர்களிடம் கூற கேட்டிருப்போம். இது போல் நாளை உங்கள் நண்பர்களிடம் நீங்களும் கூறாதிருக்க வேண்டும் என்றால்...இன்றே விழித்து கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல ஆகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்!!

வல்ல இறைவன் நம் இளைய சமுதாயத்தினருக்கு நேர் வழியையும் மார்க்க ஒழுக்கத்துடன் கூடிய கல்வியையும் தருவானாக!!

இது உண்மையிலும் உண்மை!
சாளையாருக்கு பாராட்டுக்கள்!
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி விடுவது, உணவை மட்டும் இன்றி,அவர்களை பெற்றோரின் கடமையினையும்,அவர்கள் படும் கஷ்டத்தினையும்,சேர்த்து ஊட்டுங்கள்.தன்பிள்ளை தானே வளரும்.அன்பிலும், படிப்பிலும்,உயரிய பண்பிலும்,இஸ்லாமிய உணர்விலும், நம் தேச கடமையிலும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: b.a.buhari (chennai) on 29 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20572

இன்றைய மானவா சமுதாயத்துக்கு அவசியமான கட்டுரை, mohideen bhai அவாகள் கட்டுரை, தொடர வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 29 February 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20573

கட்டுரை அருமை. இன்றைய இளைய சமுதாயம் மற்றுமல்லாமல், பெற்றோர்களும் கட்டாயம் உணர வேண்டிய கருத்துக்கள். மக்களை அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைப்பதும், தட்டிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கொட்டுப்பதும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும் பெற்றோர்களின் கட்டாயக் கடமை, இதில் எதையாவது கோட்டை விட்டால் மக்கள் வழி தவறுவது உறுதி.

முப்பது ,முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நமதூரில் பட்ட படிப்புகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வில்லை, காரணம் அணைத்து பெற்றோர்களும் சுய தொழிலில் தன்னிறைவு பெற்றிருந்தனர். உயர் கல்வி முடிந்ததும் மக்களை தங்களது தொழிலில் ஈடு படுத்தினர்.மக்களும் பெற்றோரின் கண்காணிப்பில் ஈடேற்றம் பெற்றனர்.

பக்கத்துக்கு நாடான சிறிலங்காவில் தொழில் செய்த போது கூட மக்களை இந்த முறையிலேயே வளர்த்தனர். அங்குள்ள கல்வியின் தகுதியும் முற்போக்காக இருந்தது. அங்கு உயர் கல்வி படித்த ஒருவர் தற்போது நம் நாட்டில் பட்டம் பயின்றவரை விட அதிக அறிவாற்றலும் ஆங்கில புலமையும் பெற்றவராக இருந்தார். சிறிலங்காவில் வியாபாரம் பிரச்சனை, பாரதத்தில் தொழிலில் ஆட்சி மாற்றங்களால் சுய தொழில் இழப்பு போன்ற சூழ்நிலைகளால் அரபு நாடுகளில் வேலைவாய்ப்பை தேடி பெரும் வியாபாரிகள் உட்பட பலர் படையெடுத்த போதுதான் உயர் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து மக்களை பட்ட படிப்புகளில் எப்பாடு பட்டாவது கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட படி ஈடுபடுத்து கின்றனர், பலர் மக்களை நல்லமுறையில் கண்காணித்து வெற்றி பெறுவதோடு மட்டுமல்லால் நம் மண்ணுக்கும் பெருமை தேடி தருகின்றனர். சிலர் தோல்வியடை கின்றனர். இக்கட்டுரை மூலம் இனி நம்மவர்களை தோல்வியிலிருந்து காப்பார்கள் என்பது உறுதி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: siddiq (Chennai) on 01 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20574

கட்டுரை அருமையான கருத்துகளை கொண்டுள்ளது. ஆனால் "இன்றே விழித்து கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல ஆகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்!! " இந்த பழமொழி இதற்க்கு பொருந்தாது. கண் பார்வை இருக்கும் போதும் சூரிய நமஸ்காரம் செய்தாலும் நரகம்தான் . கண் பார்வை இல்லாவிட்டாலும் சூரிய நமஸ்காரம் செய்தால் நரகம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852) on 01 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20575

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்து லில்லாஹ்.!

அப்பனுக்கும் மக்களுக்கும் தப்பாமல் ஈமான் ஒழுங்காக இருந்தால் இம்மை, மறுமை iவாழ்க்கையில் எந்த கவலையும் படதேவையே இல்லையே ! அது (அது தான் ஈமான் ) ஈமான் வழங்கும் இடங்களாகிய பள்ளிவாசல் களிலேயே உலமாக்களும்,நிர்வாகிகளும் களவு, லஞ்சம்,, பொய் வழக்கு, திட்டமிட்டு முஸ்லிம்களை பழி வாங்குவது, அல்லாஹ் ரசூல் பேரை சொல்லியே சமாதான் ஒப்பந்தங்கள்,சத்தியங்கள், பண்ணியபின் உடன்படிக்கையும் கிழித்து போட லஞ்சம் கொடுப்பது, ஹராமான வழிகளில் சம்பாதிக்க ,பொய் சர்டிபிகட், இன்னுமெத்தனையோ ???. இவ்வளவும் செய்து வாழ்க்கை நடத்தி அதில் கிடைத்ததை உணவாக்கி அதில் ஊறிய உயிர் அணுக்களில் கரு விளைந்தால் பிள்ளைகுட்டிகளும் அப்படித்தான் வளரு மென்பதில் சந்தேகம் இருக்குதா?.

நாமெல்லாம் இரும்பைத் திண்டுவிட்டு சுக்கு கஷாயமல்லவா குடிக்கிறோம்?

தவ்பத்தன் நசூஹா என்ற முறையான தவ்பா செய்வோம் .-அதன் பின் துஆ செய்வோம. திட்டமாக அல்லாஹ் மண்ணிப்பான், வழி காட்டுவான். இன்ஷா அல்லாஹ் .! இதோ காட்டுகிறான். திருக் குற் ஆன் தர்ஜமா கிதாபுகளில் எடுத்து தொடர்ந்து பார்ப்போமா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 20:124 وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ

20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا
20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.

இன்னும் நல்ல தீர்ப்பும் திருந்தி சந்தோஷமாய் வாழ வழியும் காட்டுகிறான்.

யா அல்லாஹ் இவைகளை எடுத்தெழுத ,நெட்டில் அறிமுகப்படுத்து வதற்க்கு உதவி ஒத்தாஷைகள் செய்த அத்தனை மக்களுக்கும் கேட்டு நடந்த அணைவருக்கும் மண்ணிப்பு தந்து றஹ்மத்தையும் தந்தருள்வாயாக ஆமீன்!

அட்மின் காறர் அவர்களுக்கு,தயவு செய்து எடிட் கட் பண்ணாமல் காப்பி பேஸ்ட் பண்ணி மேற்கண்ட ஆயத்தின் படி அமல் செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852) on 01 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20576

அல்ஹம்து லில்லாஹ்.! மிக முக்கைய மான தற்சமயம் உடனடி தேவையான செய்தி குடும்பத்தார்களை மார்க்க அறிவில்லாமல் வைத்திருப்பது ஆகப் பெரும் பாவமாகும்..குடும்பத்தார்களை தீனுடைய படிப்பில்லாதவர்களாக வத்திருந்த மனிதனாகிறவன்(நாளை கியாமத்து நாளில்) அல்லாஹ்வை சந்திக்கும்போது வேறு எவ்வளவு பாவங்கள் புரிந்திருந்தாலும் யாவும் இதைவிட சின்னப்பாவங்களாகவே இருக்கும். என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

நூல்; ஃபக்கீஹ் அபுல் லைஸ் ஸமற்கந்தீ (றஹ்) அவர்கள் குர்றத்துல் உயூன் எனும் கிதாபில் பதிவு செய்துள்ளார்கள்

. நன்றி, :இலங்கை வானொலி, தமிழ் தேசிய சேவை.

இஸ்லாமிய நிகழ்ச்சி. பயான் மணி மொழி.நிகழ்த்துபவர் பள்ளப்பட்டி. மவ்லானா மற்ஹூம் எம்.ஜே.ஃகலீலுர் றஹ்மான் அவர்கள். 8-7-1958ல் ஒலிப்பதிவு செய்து , பின்பு 2009ல்,ஸீ டீ இன் மூலம் ஒலிபெயர்ப்பும் செய்து 2011ல் டீட்டீ ப்பீ செய்தவர் தைக்கா றஹ்மத்துல்லாஹ்.11-11-2011 வெள்ளி 14-12-1432 மகுதூம் ஜும் ஆ மஸ்ஜித். ஆரம்பதினம்.

மக்களின் உடல் நலங்களுக்கும் , பொருளாதாரதேடும் படிப்பு களுக்கும் அனுசரனைகள் செயதுவரும் நல்ல பல மன்றங்கள் மேற்கண்ட ஹதீது களையும், கீழகாணும் ஆயாத்துகளையும் மனதிற்கொண்டு சன்மார்க்கம் பயிலும் பயிற்று விக்கும் உலமாகள், மத்றசாக்கலுக்கும் அதிக அளவில் உதவி செய்யுங்கள்

9:24 قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved