Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:36:12 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 13
#KOTWEM13
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 2, 2012
கூடங்குளமும், காயல்பட்டினமும்! (பகுதி-1)

இந்த பக்கம் 5659 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று நமதூரில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக முஸ்லிம் லீக் கட்சி கலந்தாலோசனை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தின் பின்னணியில் இது தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்தின் அடிப்படையே இக்கட்டுரை உருவாவதற்கு காரணம்.

நமதூரில் மட்டும்தானா மின் வெட்டு நடைமுறையில் உள்ளது? தமிழகம் முழுக்க மின் வெட்டு நடைமுறையில் உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத்திறந்தால் நமது மின் தடை நீங்கும் என்று யார் சொன்னது? அரசியல் வாதிகள் தரும் உத்திரவாதங்கள் ஓடுகின்ற நீரில் உலக்கையால் எழுதப்படவேண்டியவையே.

அணு நிலையங்கள் மூலம் இந்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் என்பது வெறும் 2% ந்தான். அப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியானது பண முதலைகளின் பாரிய முதலீட்டில் இங்கு நிறுவப்பட்டுள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கும்,ஆலைகளுக்குமே செல்லும். இந்த ஆலைகள் ஒன்றும் மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை உற்பத்தி பண்ணக்கூடியவை இல்லை. நுகர்வு வெறியை ஊக்குவிக்கும் ஆடம்பர பொருட்களை தயாரிக்கக்கூடியவை மக்களுக்கும்,சிறு தொழில் நிறுவனங்களுக்கும் பெப்பே தான்.

நடைமுறையில் உள்ள மின் வெட்டிற்கான ஒரே காரணம் கூடங்குளம் ஆலையை திறக்க அனுமதிக்காததுதான் என்ற பரப்புரையில் எந்த நீதியுமில்லை, நியாயமுமில்லை. மின் வெட்டிற்கான உண்மைக்காரணங்கள்

------இருக்கின்ற அனல்(நிலக்கரி), புனல் (நீர்) மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரிக்காதது, தரமற்ற நிலக்கரியை வாங்கியது, வாங்குவதில் இடம்பெற்ற ஊழல்கள்

-------மாற்றுமுறை மின் உற்பத்தி முறைகளான கதிரொளி முறை (SOLAR ENERGY) சாண எரிவாயு ,கடலலை, காற்றாலை போன்றவற்றை ஊக்குவிக்காதது

-------மின் வினியோகத்தில் ஏற்படும் மின் இழப்பு, ,மின் திருட்டு போன்றவற்றை சரி செய்ய முறையான முயற்சிகளெடுக்காதது

------அரசு அலுவலகங்களிலும்,பொது விழாக்களிலும் விரையமாக்கப்படும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாதது

------மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைப்பற்றி எந்த கவலையும்படாதது

------இங்கு கிளைகளைத்திறக்கும் கொள்ளை ஆதாய வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் வீசி எறியும் சில்லறைகளுக்கு கைமாறாக சலுகை விலையில் மின்சாரத்தை அவர்களுக்கு தாரை வார்த்தது.

இந்த குற்றங்களை செய்தது நம் தாய் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களே.

அணு மின் நிலையத்தின் ஆபத்துக்கள்:

நடைமுறையிலிருக்கும் அனைத்து மின் உற்பத்தி முறைகளை விடவும் மிகவும் ஆபத்தானது அணு மின் நிலைய உற்பத்தி முறைதான் என்பதை உலகெங்கிலுமுள்ள மனித நேயமிக்க அறிவியலாளர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ,மனித உரிமைப்போராளிகள் ஆகியோர் ஆணித்தரமான சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றனர்.

சாதாரண காலத்தில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்தும் கதிரியக்கம்,அணு கழிவு அகற்றல் போன்றவை இன்றளவும் உலகால் தீர்க்கவியலா சிக்கல்களாக நீடிக்கின்றன. அணு விபத்து ஏற்பட்டாலோ சொல்லவே தேவையில்லை. ரஷ்யாவின் செர்னோபில்,ஜப்பானின் ஃப்குஷிமா அணு உலைகளில் நடந்த விபத்துக்கள் ஏற்படுத்திய அனர்த்தங்களை ( புற்று நோயாளிகள் பெருக்கம்,,இறப்பு, மூளை,உடல் உறுப்புக்குறைபாடான குழந்தைகள் பிறப்பு ) என எழுதப்போனால் ஏடு தாங்காது.

அணு உலையும் நமதூரும்:

சில வாரங்களுக்கு முன்னர் அணு மின் நிலைய எதிர்ப்புக்குழுவினர் போராட்டங்களுக்கு நிதி கேட்டு வந்த போது நமதூர் கடைக்காரர்கள் அவர்களை விரட்டியுள்ளனர்.இது மிகவும் வருத்தம் தரும் நிகழ்வாகும். கூடங்குளம் அணு உலையில் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டால் 75 கி.மீ சுற்றளவில் உள்ள ஊர்கள்தான் பெரும் அழிவிற்குள்ளாகும். நமதூரோ இந்த அபாய சுற்றெல்லைக்குள்தான் வருகின்றது.

ஏற்கனவே புற்று நோய் பரவலால் அவதிப்படும் நாம் நமதூரின் எல்லையில் உள்ள வேதியியல் தொழிற்சாலையை குற்றஞ்சாட்டும் நாம் அதை விட பல மடங்கு ஆபத்தான அணு உலை பற்றி கூடங்குளம் மக்கள் தெரிவிக்கும் அச்சத்தையும்,காட்டும் எதிர்ப்பையும் சட்டை செய்யாமலிருப்பது என்ன வகை நீதியோ? ஒரு வேளை நமதூரின் எல்லையில் அணு மின் நிலையம் இருந்தால்தான் நாம் எதிர்ப்போமோ என்னவோ?

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: ayyadurai.d (nellai) on 02 March 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20578

thavarana பாதையில் செல்வோர் திரும்பி வருவது நல்லது தான் ஆனால்.பாதி kinaru thandum போது திரும்ப நினைப்பது aapathu


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: HABEEB RAHMAN (abu dhabi) on 02 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20579

எழுத்தாளரும் நல்ல சமூக நல சிந்தனையாளரும் எனது நண்பருமான பஷீர் அவர்களின் கூடங்குளம் பற்றிய இந்த கட்டுரையின் கருத்தோடு இங்குள்ள பெரும்பான்மையான மக்களைபோன்று எனக்கும் உடன் பாடில்லை என்றே சொல்வேன்.

அணு மின் நிலையங்களால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி நாம் எதிர் வாதம் புரிய வில்லை. அது ஓரளவு உண்மைதான். ஆனால் இங்கு பெரும் அளவில் மின்சார உற்பத்தி செய்ய பயன் படுத்தும் அனல் மின் நிலயங்களினால் ஏற்படும் விளைவுகள் அதைவிட மோசமானது என்பதனையும் சிந்திக்க வேண்டும்.

அணு மின் நிலையங்களின் ஆபத்து எப்போதாவதுதான்! முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பாக இருக்கும் கல்பாக்கம் தாராப்பூர் இதற்கு உதாரணம். ஆனால் நிரந்தரம் சுற்றுபுறத்தை பாதிக்கும் அனல் மின் நிலையங்களுக்கு இது எவ்வளவோ மேல்.

ஒஜோனை ஓட்டை போடும் கார்பன்களை அள்ளி கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அதனை சுற்றியிருக்கும் மக்களுக்கு பல சுவாச தொடர்பான நோய்களை உண்டாக்குகின்றது. நீர் நிலையையும் மாசு படுத்துகின்றது.

தமிழ் நாட்டிலேயே மிக பெரிய அனல் மின் நிலையத்தை 15 km (நேர் தூரம்) அருகில் வைத்து கொண்டு நாம் படும் கஷ்டங்களுக்காக குரல் கொடுக்க இதுவரை எந்த உதயகுமாரும் வரவில்லை. 75 km அப்பால் இருக்கும் அவர்களுக்கு குரல் கொடுக்க நாம் ஏன் போக வேண்டும்?

இது அவ்வளவு கொடுமையானது என்றால் ஏன் 14000 கோடி மக்கள் பணம் செலவாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? 25 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டம் உருவாகிய நேரத்திலோ, அல்லது குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு முன் இதன் கட்டிட பணிகள் தொடங்குவதற்கு முன்போ இதே வீரியத்தில் போராட்டத்தை நடத்தியிருக்கலாமே?

அப்போதெல்லாம் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக குரல் கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்? கேன்சருக்கு அணு மின் நிலங்கள் மட்டும்தான் காரணம் என்றால் நம் ஊரில் பல ஆண்டுகளாக இருக்கும் கேன்சருக்கு என்ன சொல்வது? கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக காயல் பட்டினத்தில் நிதி திரட்டிய இந்த ம க இ க வினர் நிரந்தரம் dcw போன்ற தொழிற்சாலைகளினால் அவதிப்படும் நம் ஊர் மக்களுக்காக போராட அல்லது நிதி திரட்ட கூடங்குளம் போவார்கள?

காவி துவேச படைகளுக்கு எதிரான அவர்களின் பல போராட்டங்கள் போற்றப்படவேண்டியதுதான். ஆனால் அது அவர்களின் கண்மூடித்தனமான எல்லா செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நிலையில் கொண்டு போய் விடக்கூடாது.!

காற்றாலை சூரிய ஒளி போன்ற வைகளில் மின்சாரம் பெரும் அளவில் உருவாக்க இன்னும் பல தடைகள் இருக்கின்றது என்பதை வல்லுனர்கள் கூறுகின்றார்கள். அதனால்தான் இது போன்ற முறைகளுக்கு கோடிகளை வாரியிறைக்கும் அமீரகம் போன்ற நாடுகள்கூட கூடவே அணு மின் நிலையங்களை உருவாக்கும் வேலைகளையும் தொடங்கிருகின்றது.

கூடங்குளத்தில் இனியும் நிறுவ இருக்கும் ரியாக்டர்களை வேண்டும் என்றால் தடுத்து நிறுத்த அவர்களோடு நாமும் சேர்ந்து போராடலாம். ஆனால் இதுவரை நிறுவிய ரியாக்டர்களை செயல் படாமல் தடுக்கும் அவர்களின் போராட்டத்தை நாம் ஒரு போதும் ஆதரிக்க முடியாது, நாம் செலவு செய்த 14 ஆயிரம் கோடிகளை வெளிநாட்டிலிருந்து உதயகுமாரின் சகாக்கள் கொண்டுவந்து நம்மிடம் கொட்டினால் ஒழிய!

கூடன்குளத்திருக்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 15 லட்சம் மக்களுக்காக போராடுபவர்கள் கல்பாக்கத்திற்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 85 லட்சம் மக்களுக்காக என்ன செய்ய போகின்றார் என்பதனையும் அறிய விருப்பம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை...
posted by: Shireen (Kayalpatnam) on 02 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20580

பஷீர் மாமாவின் கட்டுரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை... என்ன... கொஞ்சம் லேட் ஆயிடிச்சி...

Shireen,
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: அமீர் சுல்தான் (????? ???????) on 02 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20581

அணுஉலை கூடாது என்ற போராட்டம் தேவையற்றது; கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்பட வேண்டும் - இ.யூ. முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். இந்த அறிக்கையை பத்திரிகையில் பார்த்தபோது சற்று அதிர்ச்சிதான். இருந்தாலும் மக்களின்மீது அக்கறை கொள்ளாத சாதாரண அரசியல்வாதிதானே அவரும் என்ற மனநிலையே ஏற்பட்டது. அது போன்றே இந்த லீக்கினர் காயலிலும் விவாதிக்க இருக்கும் நிலையில் அணுஉலை பற்றிய புள்ளி விபரங்களோடு எழுதப்பட்ட சகோதரர் பசீர் அவர்களின் கட்டுரை மிக்க தேவையானதே.

இது தொடர்பான கருத்தை பதிவுசெய்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அணு உலையின் விபரீதங்கள் பற்றி அறியவில்லையோ என்ற சந்தேகம்தான் எழுகின்றது.

அனல் மின் நிலையத்தை அணு உலையோடு ஒப்பீடு செய்யும் போது அணு உலையின் விபரீதம் மிகக் கொடுரமானது. அலைஉலையின் கழிவுகள் 48 ஆயிரம் ஆண்டுகள் வீரியமிக்கது. அதனை அழிக்க முடியாது. கழிவுகளை கையாளும் விதம்பற்றியும் இன்னும் தெளிவில்லை. கான்கீரீட் அடைப்புக்குள் வைத்து கடலில் தாக்கப்போவதாகவும் பரவலான செய்திகள்.இருப்பினும் அதன் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.(DCW வினால் அவ்வப்போது நமது கடல் செங்கடலாகும் ..அதைவிட பல ஆயிரம் இல்லை இல்லை கோடி மடங்கு அபாயமானது அணு உலை கழிவுகள்..)

30 , 40 ஆண்டுகள் பயன்படுத்திய பின் அதனைஉலைகளை சாதரணமாக மூடிவிட்டு சென்றவிட முடியாது அதனை பல ஆண்டுகள் பல கோடி செலவிலே பாதுகாக்க வேண்டும். இந்த உலை நம்மையும் அழிக்கும் நம்முடைய சந்ததிக்கும் உலை வைக்கும்.

இன்றைய மின்வெட்டு இது செயல்படாததால் அல்ல...இது மத்திய மாநில அரசுகளின் சதி. மேலும் ஒருவேளை இன்று முதல் செயல்பட ஆரம்பித்தாலும் இதிலிருந்து மின்சாரம் கிடைக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்.

அதுபோன்று அப்பாவியாய் ஒரு கேள்வியையும் தொடுத்திருக்கின்றார் சகோ.ஹபீப் ரஹ்மான் அவர்கள். 25 ஆண்டுக்கு முன் ஏன் எதிர்க்கவில்லை என்று..

அன்றே ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒருங்கினணக்கப்படவில்லை. அணுஉலையின் விபரீதமும் அந்த மக்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இடிந்தகரை ஒரு கிராமம். மேலும் இது அங்குள்ள மக்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளும் நில மதிப்பு உயர்தல் போன்ற தற்காலிக நன்மைகள் பின்வரும் விளைவுகளை மறைத்திருக்கக் கூடும்.

புகுஷிமா அணுஉலையின் விபத்திற்குபின் அதன் பேரழிவு பரவலாக பேசப்பட்டது. அணுஉலை பற்றிய விழிப்புணர்வும் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டது, அதனால் அதனை எதிர்கின்றனர்.

௧.இந்தியாவில் பலகோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் போலி மத நம்பிக்கை அடிப்படையில் கைவிடப்பட்டதே! இது நமனைவரும் அறிந்ததே.
௨. பல இலட்சம் கோடிகள் 2 ஜி யில் கொள்ளையடிக்கப்பட்டதே அந்தப்பணத்தை கொண்டு இதுவரை எந்த முயற்ச்சிகளும் எடுக்கப்படவில்லையே
௩.அடுத்தடுத்த விசாரணைகளில் உள்ள பல கோடி கொள்ளை, கருப்பு பணம், நில மோசடி, வரிபாக்கி இப்படி ஏராளம் கோடிகள் விரயமாகிக் கொண்டுதானே இருக்கின்றது.... அது போன்று சந்ததிகளை கொல்லும் திட்டத்தை தடுப்பதில் ஏற்பட்ட கோடிகள் ஒன்றும் இழப்பாக தெரியவில்லை.

கல்வியாளர்களும் பணமுதலைகளும் நிறைந்த காயல் பதியில் DCW அணுதித்துள்ளோமே...அதனால் கேன்சரும் கொடிய நோய்களும் ஏற்படும்போது இப்போது எதிர்கின்றோமே இதுபற்றிய தங்களது கருத்து...

DCW க்கு எதிராக தொடரான. பரவலானதொரு போராட்டத்தை தாங்களும் ஆரம்பியுங்கள் மகஇக கூடங்குளத்தில் மட்டுமல்ல கல்பாக்கத்திலே தங்களுக்காக நிதி திரட்டி தருவார்கள். . போராட்டம் வீரியமடையும் போது ஒரு உதயகுமாரல்ல பல உதயகுமார்கள் வருவார்கள்.

அமீர் சுல்தான்
சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: MAHMOOD HASAN(mammaash) (QATAR) on 03 March 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20582

அருமையான கட்டுரை .நண்பர் சுல்தான் கருத்து மிகவும் சரியானது ,இந்த அணு மின் நிலையத்தால் பாமர மக்களுக்கு எந்த பயனும் பெரியதாக இருக்காது,

நாமெல்லாம் ஆறுமுகநெறிலையோ.திருசெந்தூர்லயோ அணுமின் நிலையம் வந்தால் தான் எதிர்போம் என்பது போல் இதற்கு துணை குரல் கொடுப்போம் என்பது சரியா???இறுதியில் முஸ்லிம் லீக்கும் ஒரு அரசியல் கட்சிதானே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கூடங்குளம் பயம் தேவையற்றது
posted by: V D SADAK THAMBY (KAYALPATNAM) on 03 March 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 20583

HABEEB RAHMAAN அவர்களின் கருத்து மிகச்சரியானது.

கட்டுரையாளரின் எண்ணம் மிகவும் பிற்போக்கானது. முன்னேற்றப்பாதையில் அவர் தம் என்ணத்தை கொண்டு செல்லவில்லை.

மொத்தத்தில் இது அரசியல்ரீதியான கட்டுரை. ஒருவர் வேண்டுமென்றால் மற்றொருவர் வேண்டாம் என்று சொல்வது.இந்திய அரசியலில் இது வாடிக்கைதான்.

14000 கோடி பணத்தை கொட்டியபிறகு , அதை வீணாக கடலில் போடவா முடியும்? பொது பணத்தை யார் வீனடிதாலும் தவறுதான் .மற்ற ஊழல்களுன் ஒப்பிட்டு இந்த 14000 கொடியையும் வீணடிக்க சொல்வது நியாயமா?

மொத்தமுள்ள 8000 MW கூடங்குளத்தையும் நாம் பூர்த்தி செய்தால்தான் நம் எதிர்கால மின்சார தேவையை ஓரளவேனும் ஈடு செய்ய முடியும் .

அணு மின்சாரம்தான் இதர மின் உற்பத்தி வழிகளைவிட மிகவும் சிக்கனமானது.

இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளுக்கு அணு மின் நிலையங்களே சிறந்தது.

விபத்து ஏற்பட்டால் பாதிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை . ஆனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவானது.

பேருந்து,ரயில், விமானம் , கப்பல் பயணங்களிலும் விபத்து ஏற்படத்தான் செய்கிறது.அதற்காக நாம் பயணம் செய்யாமலா இருக்கின்றோம்?

முன்னேற்றத்திற்கு நாம் எப்போதும் தடை போடக்கூடாது.

எனவே கூடங்குளம் பயம் தேவையற்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Fission or Fusion ?
posted by: Lebbai (Riyadh) on 03 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20584

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அருமை. நன்மை தீமை என்று அலசி பார்த்தால், அணுவால் ஏற்படும் அபாயமே அதிகமாக உணரலாம்.

chernobyl என்ற இடத்தில் ஏற்பட்ட தாக்கம் காண:
http://photos.denverpost.com/mediacenter/2011/03/a-look-at-chernobyl-the-worlds-worst-nuclear-accident/#

அணு மின் உற்பத்தியால் "புவி வெப்பமாகுதல்" காரணியான கார்பன்-டை-ஆக்சைட் வெகுவாக வெளியாவது தடுக்கப்பட்டாலும், ரிஸ்க் மற்றும் பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்த்தால், இது போன்ற அணு சார்ந்த உற்பத்தியை ஊழல் நிறைந்த நம் நாட்டில் ஆதரிப்பது சரியல்ல.

சூரிய ஒழி கதிர் மூலமும், காற்று மூலமும் இருவகையில் மின் உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் அளித்தால், கார்பன்-டை-ஆக்சைட் வெளி வராமல் மின் உற்பத்தி செய்ய முடியும்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் எந்த மாநில அரசுக்காவது இருக்கும், நமக்கு இருக்குமா என்பது சந்தேகமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: HABEEB RAHMAN (abu dhabi) on 03 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20585

சகோ. அமீர் சுல்தான் அவர்களே!

அணு உலைகளின் ஆபத்துகளை நாம் ஒன்றும் குறைவாக மதிப்பிடவில்லை! ஆனால் மற்ற தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உங்களை போன்றவர்கள் குறைவாக எடைபோடுகின்றீர்கள் என்றுதான் சொல்கின்றோம். இதையும் ம க இ க வந்து சொன்னால்தான் ஏற்பீர்கள் போல?

அடிக்கடி செர்னோபில் செர்னோபில் என்று குறிப்பிடுவது இருக்கட்டும். அந்த கசிவில் இதுவரை 30-40 பேர்களுக்கு மேல் இறக்கவில்லை என்று கொஞ்சம் google செய்து பாருங்கள் தெரியும்! ஆனால் உங்கள் அறிவில் குறைந்த ஆபத்து உள்ள போபால் விசா வாய்வினால் மூன்றே நாட்களில் விட்டில் பூச்சிகள் மாதிரி தெருவில் வீழ்ந்து மடிந்தது 3000 பேர்களுக்கு மேல்! இதுவரை கிட்டத்தட்ட 25000௦௦௦ பேர்களுக்கு மேல் இதன் விளைவாக இறந்திருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஒரு நடுத்தர அறிக்கை தெரிவிக்கின்றது. அதை யாரும் இங்கு குறிப்பிட காணோம்!

அமீர் சுல்தானுக்கு தேவை என்றால் நாம் ஆதாரத்தை அனுப்பலாம்! இது போல் இன்னும் எத்தனையோ தொழிற்சாலைகள் நம் நாட்டில் இப்போதும் இருகின்றது, நம் அருகில் இருக்கும் DCW உட்பட! எல்லா காலமும் நிரந்தரமாக உயிருக்கு ஊரு விளைவிக்கும் இது போன்றவைகளுக்கு எதிராக போராடிவிட்டு பின்னர் கூடங்குளத்துக்கு வரலாம்!

கழிவுகளை களைவது பற்றி நீங்கள் மட்டும்தான் உதயகுமாரின் உதவியோடு, சவூதியிலிருந்து கவலை பட முடியும், இதில் தொடர்புடைய பல வின்ஞானிகள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், முன்னால் ஜனாதிபதி உட்பட நல்ல பொறுப்புள்ள பிரஜைகளுக்கு சிந்திக்கவோ கவலைப்படவோ முடியாது என்று நீங்கள் நினைப்பதுதான் தவறு!

புற்றீசல்கள் போல் பெருகிவரும் கொடிய விளைவுகளை நிரந்தரம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை திறப்பதை தடுக்க வேண்டும். நீங்கள் தொடங்குங்கள் ஆதரவு தருவார்கள் என்று கிண்டலடிக்காமல், ம க இ க போன்ற உள்ளத்தில் உறுதி உள்ள (கொள்கையில் குளறுபடிகள் இருந்தாலும்) இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினால் மக்களின் ஆதரவும் கிடைக்கும். பயனும் ஏற்பட வாய்ப்பு உண்டு, என்று நினைத்ததால்தான் அப்படி சொன்னோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 03 March 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20586

இந்த நேரத்தில் இந்த கட்டுரை தேவையற்ற ஒன்றே!

போராட்டம் நடத்துபவர்கள் சுய நலனுக்காகவே எதிர்க்கிறார்கள், என்பது பல விஞ்ஜானிகளின் அறிக்கை, இதில் கைதேர்ந்தவர்களின் உட்கட்டமைப்பு சோதனை மூலம் நிரூபன மாகிறது.

ஆளும் அரசும் இது நமக்கு பெயர் வாங்கி தராத திட்டம் என்பதால் கண்ணை மூடிக்கொண்டுள்ளது. இறுதியில் மின் வெட்டு தலையை தாண்டி போகும் போது இதற்கான குழு அமைக்கிறோம் என்றும் அது அறிக்கையை கொடுத்ததும் ஆரப்போட்டதாக தெரிகிறது.

பக்கத்தில் இருக்கும் தனியார் தொழிற் சாலையை இதோடு ஒப்பிடுவது சரியல்ல.

ஆரம்பமாக இது ஒரு தனி குடும்பம் பயன்பெற.

கூடங்குளமோ நாம் உட்பட மொத்த நாடும் பயன்பெற , நமதூர் தொழிற்சாலையில் சுற்று வட்ராரம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என சுகாதாரத்துறை திறந்து அறிக்கை கொடுக்கிறார்கள். கூடங்குளத்தில் எல்லாம் பாது காப்பு என அறிக்கை கிடைத்த பின்தான் இவ்வளவு பெரிய அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது.

சுனாமி நேரத்தில் எண்ணூர் பாதிக்கபடமால் காக்கப்பட்டது இதற்கு உதாரணம்.

இப்படியே நம்மைச்சுற்றி வரும் எல்லா தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் அணைத்து நிறுவனங்களையும் நம் பகுதியில் உள்ள சுய நல வாதிகளால் தடுக்கப்பட்டு வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது.நம்மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தை பிரிந்து கடல் கடந்து கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கு மேல் மனிதன் தன்னால் முடிந்த எல்லா பாது காப்புடனும் அமைக்கிறான். இறைவன் நாடினால் எதுவும் நடக்கும். இது எல்லா விசயங்களிலும் தான். விமான பயணம் முதல் பேருந்து பயணம் வரை எல்லாம் அடங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Mohamed Gowdu VNM (chennai) on 03 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20587

Assalamu alikum.

We accept our brother Bashir's concept about disadvantages of koodangulam nuclear project. This shows his thought about our future life and health but my opinion is that nuclear project has lot of advantages and benefits while compare to their disadvantages.

Because scientist and graduated professors including our APJ visited that nuclear project site and conform no issues to start that project because that project has lot of safe measures and fully protectable.

We thought Japan’s Fukushima and Russia’s Chernobyl accident, but these all accidents were happened due to natural disasters and non safety compliance. But professors said this plant fully protectable so we all pray our Allah to support for start this project.

And we only fear about the cancer disease, cancer diseases are not only caused by nuclear power plant but also cause by using mobile phone also. So don’t blame only the nuclear plant.

Any way every thing( like mobile phone, bike, etc.,) have both advantages and disadvantages. So my opinion on this project is more advantageous than disadvantage. We pray to our Allah to protect our people and pray to avoid any disaster from this Koodangulam nuclear project and support to start this power plant.

Insha allah we will get benefit from this nuclear power after two or three year. I thank to our brother Bashir Aarif share this knowledge to our kayal people. Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: omar--- maraikar palli streeet (riyadh) on 03 March 2012
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20588

Kudamkulam Power Plant is good for Tamil Nadu and the country in common. We can not grow as nation with the negative mentality. No technology or system is cent percent safe.

Our 1000s of malnutrition-ed children are dyeing without food, shelter or basic health care. nation are pro vacating the innocent people of this nation. Our people are without any foreseen. We can not eradicate poverty without development . tamil nadu is going to 50% of this out put , what else we need . government has to deal with protestors with iron hand since we are losing 14000 crores.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 03 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20589

விமான பயணம்/பேருந்து பயணம் இவைகளை அணுமின் உலைக்கு ஒப்பிட்டு ஏற்புடையதல்ல. உதாரணத்துக்கு ஒருவர் சவுதி வர வேண்டும் என்றால் விமானத்தை பயன்படுத்தி தான் ஆகவேண்டும்.

ஆனால் மின்சாரம் வேண்டும் என்றால், கண்டிப்பாக அணுமின் நிலையம் தான் வேண்டும் என்றில்லை. எத்தனையோ பாதுகாப்பான வழிகள் அதன் உற்பத்திக்கு உண்டு.

சவுதி அரேபியாவில் என்றாவது நாம் மின் தடை கண்டதில்லை. இதுவரை இங்கு எந்த ஒரு அணுமின் நிலையமும் கிடையாது. இங்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? அதுவும் குறைந்த விலையில் நுகர்வோர்களுக்கு கிடைகிறது.

அணுமின் மூலம் ஏற்படும் நன்மை தீமைகளை அறிய:
http://www.triplepundit.com/2009/02/nuclear-energy-pros-and-cons/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 03 March 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20590

செர்னோபில் அணுஉலை விபத்து, இயற்கை பேரழிவால் நடந்தது என்று நண்பர் தகவல் தருகிறார். அது தவறு. இது மனித தவறால் நிகழ்ந்த சம்பவம்.

இந்த நாட்டை பொறுத்தவரை எந்த சம்பவத்தை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் ஊழலின் பங்கு உண்டு.

இது போன்ற நிறுவனங்களை ஆதரிப்பது மூலம் ஒருவரை முற்போக்குவாதியாக அல்லது எதிர்ப்பதின் மூலம் பிற்போக்குவாதியாக சித்தரிக்கப்படுவது சரியல்ல.

நாம் இதை எதிர்த்து கருத்து சொல்லுவதால், போராட்ட காரர்களை ஊக்குவிப்பதற்காக இல்லை. இது போன்ற நிறுவனம் தொடங்குவதற்கு நம் நாட்டில் எத்தனை ஊழல் நடைபெற்று இருக்கும் ? எத்தனை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனம் நன்மை அடைந்துள்ளது என்பது படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

நமது சுற்று வட்டாரத்தில் பல தொழிற்சாலைகள் வந்து எல்லோருக்கும் அதில் வேலை கிடைத்தால் நாம் மகிழ்ச்சியாக ஊரிலேயே சம்பாதிக்கலாம் தான், இந்த அணுமின் நிலையம் வந்தது நம்மில் எத்தனை மக்கள் அதில் வேலை வாய்ப்பு பெற்று பயன் பெறுகிறார்கள் என்று பார்ப்போம்! இன்ஷா அல்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: K S Muhamed shuaib (Kayalpatnam) on 03 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20591

நண்பர் பஷீர் அவர்களின் கருத்து சரியானது.இன்று நமக்கு ஏற்பட்டிருக்கும் மின்வெட்டை மாத்திரம் கணக்கில் கொண்டு இப்பிரச்சினையை அணுகக்கூடாது. இன்று உலகளாவிய முறையில் அணுஉலைக்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அணுஉலையில் விபத்து வந்தால் மட்டுமல்ல..அது இயல்பாக செயப்படும் போதே கூட ஆபத்து நிறைந்ததுதான்.

இன்னும் சொல்லப்போனால் அணுஉலையை மக்கள் தாமாகவே வரவேற்க வேண்டும்என்பதற்காகவே இந்த மின்வெட்டு அமுல் படுத்தப்படுகிறதோ..என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு உண்டு, பல கோடி ரூபாய் செலவழித்தாகி விட்டதே.. அதை என்ன குப்பையில் வீச முடியுமா..?என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்வி. மக்களின் உயிர் வாழ்விற்கு முன் எத்தனை கோடி ரூபாயும் ஒரு பொருட்டல்ல. நண்பர் சொல்வது போல் மின்னுற்பத்தியை துரிதப்படுத்தி வீணாகும் மின்சாரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தாலே ஒரு 50 சதவீதம் மின்வெட்டை குறைத்துவிடலாம்.

மின் உற்பத்தி செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க அனுஉலைதான் வேண்டும் எனபது அரசியல்வாதிகளின் பையை நிறப்பதான்,அணு உலையினால்நிகழ்ந்த விபத்துகளை நம்மில் பல பேர் அறிந்து இருந்தும் அதற்காக வாதாடுவது துரதிர்ஷ்ட வசமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Reம், :கூடங்குளமும்மு காயல்பட்டின...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) on 03 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20592

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது அன்பு சகோதரர் .சாளை.பசீர் அவர்களின் .இந்த கட்டுரையை நாம் பாராட்ட முடியாது .காரணம் .இவர்கள் எல்லாம் குறைந்த பட்ச்சம் 15 / 20 வருஷம் எங்கு போனார்கள் ????? இந்த கூடங்குளம் .வேலையை ஆரபிக்கும் போது ஏன் இவர்கள் ஒன்றும். சொல்லவில்லை ??????

அன்பு சகோதரர் .சாளை.பசீர் அவர்களின் இந்த கோரிக்கை மட்டும் நியமானது . நமது தமிழ் நாடு அரசு அதிகாரிகளும் & மந்திரி மார்களும் நமக்கு தேவை இல்லாத அரசு விழாக்களில் ( பவர் ) எலெக்ட்ரி குறைத்து செயல் படலாம் .

தற்போது நம் மாநிலத்துக்கு மின்சாரம் நிச்சயம் தேவை படுகிறது . அதனால் நாம் இதை தடுப்பது சரி அல்ல ........ அன்பு சகோதரர். நீர் ஜப்பான் & ரஷ்யா இந்த நாடுகளை ஒப்பிடு பார்பது சரி அல்ல .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: thameemul ansari riyas (Al Ain, UAE) on 04 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20593

அன்புள்ள பசிர் அவர்களுக்கு,

நீங்கள் எழுதிள்ள இந்த கட்டுரை மிகவும் அழகாக உள்ளது. ஆனால் இதுக்கு இது சரியான நேரம் அல்ல. நமக்கு இப்போது மின்சாரம் வேண்டும். நீங்கள் நம் சட்டசபையில் இருக்கிற எதிர் கட்சி என்ன பேசுவாரோ அதை போல் பேசுகிறிர்கள்.

நாம் இப்போது இருகின்ற காலம் 21 ஆம் நூற்றாண்டு. நாம் 20 நூற்றாண்டு பாதி வரைக்கும் மிசரமே இல்லாமல்தான் இருந்தோம். ஆனால் இப்போது எல்லா வசதிகளையும் நாம் அடைந்து இருக்கின்றோம். இதற்கு முதலில் நாம் அல்லாஹுகுதான் நன்றி சொல்ல வேண்டும்...

சில நன்மைகள் நமக்கு கிடைக்கும் போது தீமைகளும் வரதான் செய்யும் (உதரணமாக உணவு பொருள் எடுத்துக்கொள்வோம் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தீமைகள் இருக்கத்தான் செய்கிறது) மின்சாரம் இல்லாத நேரத்தில் மக்களின் ஆயுள் காலம் அதிகமாகத்தான் இருந்தது (இந்த காலத்தை ஒப்பிடும்போது). அதற்காக மின்சாரம் வேண்டாம் என்று அழகல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 04 March 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20594

அன்பு சகோதரர் லெப்பை அவர்கள் சில உதாரணங்களை இத்தோடு ஒப்பிடுவது சரியல்ல என்றும் அதற்கு மாற்று வழி இல்லை என்பது போலும் கீழே குறிப்பிட்டுள்ளார். இது தவறு என்றே நினைக்கிறேன், காரணம் அனைத்திற்கும் மாற்று வழி உண்டு. சவுதி அரேபியாவிற்கு நீர்வழி போக்கு வரத்து, தரை வழியாக மூக்கை தலையை சுற்றி தொடுவது போல் தரை வழி இல்லாமல் இல்லை, சிரமங்களும் சிக்கலுமே நிறைந்ததை விட ஆபத்து நிறைந்த இலகுவானதையே தேர்ந்தெடுக்கிறோம்.

மேலும் சவுதி அரேபியா வை நம்மோடு ஒப்பிட்டுள்ளார். இது பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் இங்கும் அறிவிக்க படாத மின்வெட்டு (தொடராக அல்லாமல்) நடக்கிறது.அதுவும் நம் நாட்டை போல் கோடை காலங்களில் அதிகம்.

மேலும் தன்னிறைவு பெற்ற சவுதி அரேபியா வில் பல கிராமங்கள் அரசாங்க மின் வசதி இல்லாமல் சுய ஜெனரேட்டர் வசதியிலேயே மின்சாரம் பெருகிறது. இதை நான் சொல்ல வில்லை மறைந்த நம் குடியரசு தலைவர் திரு. வெங்கட் ராமன் அவர்களே பாரதத்தின் முன்னேற்றம் பற்றிய தனது கட்டுரையில் நாம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதனை ஒப்பிட்டு எழுதியிருந்தார். இன்றும் இது உண்மையே!

அது மட்டுமல்ல இவர்களுக்கு பெட்ரோல் ஒரு பொருட்டல்ல!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. எல்லா முறைகளிலும் (source of energy ) ஹை-டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் தான் இருக்கிறது
posted by: Lebbai (Riyadh) on 04 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20595

அன்பு நிறைந்த ஜாபர் காக்கா, தங்களின் கருத்துக்களை அடிக்கடி இந்த இணையதளத்தில் நான் பார்த்து ரசிப்பவன்.

சிரமங்களும் சிக்கலுமே நிறைந்ததை விட ஆபத்து நிறைந்த இலகுவானதையே தேர்ந்தெடுக்கிறோம், என்று அணு உலைக்கு ஆதரவாக தங்கள் கருத்து உள்ளது. 98 % மின்சார தயாரிப்பாளர்கள் ஏன் அணு சாராத மின் நிலையங்கள் பயன்படுத்தி மின் தயாரக்கிறார்கள்.

“அணு” வால் வெறும் இரு சதவித மின்சாரம் மட்டும் இன்று இந்த உலகம் பெற்று கொண்டு, ஏனைய 98 % மின்சாரம் மற்ற அணு சாராத மின் நிலையங்களில் இருந்து தானே இன்றைய நவீன உலகத்தில் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். அணுமின் தான் இன்றைய முக்கிய தேவை என்பதெல்லாம் வெறும் மாயை.

அணுமின் நிலையம் இல்லாமலேயே சவுதி போன்ற நாடுகளில் மின்சார தேவை பூர்த்தி செய்து தன்னிறைவு பெற்றுள்ளது ஊர்ஜிதம்.

சவுதி அரேபியாவில் வெகு தூரத்திலுள்ள பாலைவன கிராமங்களில், தயாரித்த மின்சாரத்தை அனுப்புவதில் சிரமம், சிக்கல் இருப்பதால் தற்காலிகமாக, தாங்கள் சொல்லுவதுபோல் சுய ஜெனரேட்டர் கொண்டு மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது அரசு. (In KSA, there are difficulties in transmitting the generated power to the remote villages due to non-availability of nearby sub-staions). தற்போது, அதுவும் படிப்படியாக அங்கங்கே பவர் பிளான்ட் அமைத்து நிவர்த்தி செய்கிறார்கள் (எல்லாம் அணு சாரா மின் உற்பத்தி தான்). நம் நாட்டில் எத்தனை வசதி இருந்தும் ஊழல் அரசியல் வாதி இருக்கும் வரை இந்த மின்சாரதடைக்கு ஒரு முடிவே வராது (அது கூடங்குளம் மின்நிலையம் வந்தாலும் சரியே).

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. ஆம், நாம் அதன் வேகத்தில் ஒத்துத்தான் போகணும். போக்குவரத்து என்று எடுத்துகொண்டால், ஒரு காலத்தில் சைக்கிள் தான் சென்றோம், இப்பொது விமானத்தில் பறக்கிறோம், பயந்து கொண்டு இருந்தால் முடியுமா?

என் ஒரு நண்பர், நமக்கு தலைக்கு மேல் வீட்டில் மின்சாரம் ஓடுகிறது? வீட்டில் காஸ் உபயோகிக்கவிலையா? என்று வினா தொடுக்கிறார்.

விமானத்தில் போங்கள், அதே நேரம் "கடுமையான மேகமூட்டம்" உள்ள நேரத்தில் விமானிகள் யாரும் விமானத்தை இயக்க மாட்டார்கள். அது மிக பெரிய ரிஸ்க் (Unknown Risk ). அதை தான் இங்கே சொல்லுகிறோம். விமானத்தில் / கப்பலில் எல்லோரும் பயணம் செய்வோம்; ஆனால் கடுமையான மேகமூட்டம், பேரலை சமயத்தில் தவிர்த்து விடுவோம். அது மிக பெரிய ரிஸ்க் (Unknown Risk ).

இந்த அறியப்படாத ரிஸ்க் அணு மின் உற்பத்தியில் தான் மிக மிக அதிகம். ஏனைய மின் உற்பத்தியில் இருந்தாலும், அதை ஒரு கட்டுக்குள் இலேசாக கொண்டு வர முடியும்.

நீராவி, புவிவெப்ப ஆற்றல், தாவரங்கள், எரிவாயு, காற்று, நீர், நிலக்கரி, புதைபடிவ எரிபொருள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். எல்லா முறைகளிலும் (source of energy ) ஹை-டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. ஏன் அதை எல்லாம் விட்டு விட்டு, அணு சார்ந்த ஹை-டெக்னாலஜி தான் வேண்டும் என்று சொல்லணும்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு செலவழித்த பெரும் தொகையை நஷ்டத்திலிருந்து மீள, அரசு நினைத்தால் அதன் பயன்பாடு முறையை அணுவிலிருந்து மற்ற முறைக்கு மாற்றி பெரும் நஷ்டம் தவிர்க்க முடியும்.

இந்த அணுமின் நிலையமே, பிசினஸ் motive தான், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், நம் அரசியல்வாதிகளுக்கும்.

சுருங்க சொன்னால், மின்சாரம் வேண்டும்; விமானம் வேண்டுவதுபோல், அணுவால் உற்பத்தியாகும் மின்சாரம் முடிந்தவரை தவிர்ப்போம்; கடும் மேகமூட்டத்தில் விமானம் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது போல். (let's avoid unknown risks).

டாக்டர் அப்துல் கலாம், பல விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் இன்று இதன் தன்மை குறித்து சர்டிபிகேட் தரலாம். இன்னும் பல வருடம் கழித்து, இதன் செயல்பாடு, பராமரிப்பு என்று வரும்போது, சிறு தவறே பேரழிவு ஏற்படுத்த வாய்ப்புண்டு. மனித தவறு என்பது இயல்பு. அல்லாஹ் பாதுகாப்பான்.

சிந்தனைக்கு - நம் வீட்டு மின்சாதனங்கள் மின்அணுவால் தயாரித்த மின்சாரம் கொடுத்தால் தான் வேலை செய்வோம் என்று அடம் புடிக்காது.

நல்லதை என்றும் நாடுவோம், இன்ஷா அல்லாஹ்-வஸ்ஸலாம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Missing Uncle Sam's Blessing..!!
posted by: M.Sajith (DUBAI) on 05 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20596

இது ஒரு பாதுகாப்பு பிரச்சினையோ, சுற்றுப்புற சூழல் பிரச்சினையோ இல்லை... இது முழுக்க முழுக்க ஒரு அரசியல்/பொருளாதர பிரச்சினை.

Thermal Power-ஐ Dirty Power என்று சொல்லும் அளவுக்கு அதன் கேடுகளை கேட்டு அலுத்துவிட்டது., தூத்துக்குடியிலும் புதிதாக உடன்குடியிலும் என ஒன்றுக்கு இரண்டாகிவிட்டது நமதூரின் அருகில்.. குரலெழுப்ப யாருமில்லை.

86-ல் நடந்த செர்னேபில் விபத்துக்கு பிறகு அறிவியல் முன்னேற்றம் பலமடங்காகியுள்ளது, பல புதிய அனுமின் நிலையம்க்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எண்ணைவளம் மிகுந்த நாடுகளான ஈரானும், U.A.E யும் கூட அனுமின் உற்பத்திதான் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யவழி என்பதை உணர்த்து செயல்பட துவங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

இந்தியாவிலும்,8 அனுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது, கூடங்குளம் உட்பட மேலும் 5 புதிய நிலையங்கள் தயாராகிவருகிறது.. இதில் கனடா மற்றும் பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இரண்டு நிலையங்கள்.. - இவை எதிலும் எதிர்ப்புக்கள் இல்லை.. ரஷ்யாவின் துணையால் நடக்கும் கூடங்குளத்தில் மட்டும் இதுனை விளிப்புணர்வும் வேகமும் அதுவும் செயல்பாட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் இன்று..!!

மொத்ததில் இந்தியாவின் தவறு ஒன்றுதான், இதையும் அமெரிக்க, ஐரோப்ப நாடுகளுடன் ஒன்று சேர்ந்து செய்திருந்தால் இது என்றோ உற்பத்தியை துவங்கியிருக்கும்..

கூடங்குளம் வெற்றிகரமாக செயல்பட்டால், சர்வதேச அளவில் ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடும் இந்த நாடுகளுக்கு இன்னும் 'ஒரு போட்டியாளர்'-ஐ சமாளிக்கும் தலைவலியை தவிற்க ண்Gஓக்கள் மூலம் நடத்தப்படும் நாடகம் - இதில் நாமும் ஒரு பலி ஆடு ..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved