Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:45:48 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 110
#KOTWEM110
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 6, 2013
மனம் திருந்துவார்களா இத்தகைய மருத்துவர்கள்...!

இந்த பக்கம் 3973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“நோய்லெ பாய்லெ கிடக்காம சீக்கிரமாப் போய் சேரணும்” வயதான பின்னர் சில பெரிசுகள் அடிக்கடி இப்படிப் புலம்புவதுண்டு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் முதுமொழிக்கேற்ப, என்னதான் பில்கேட்ஸ் லெவலுக்கு நம்மிடம் பணம் இருந்த போதிலும் ஆஸ்பத்திரியில் பில் கட்டாமல் நாம் வாழ்வதுதான் உண்மையான செல்வம்.



ஆரம்பகாலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதன் உணவைத் தேடி அலைந்து வேட்டையாடியபோது மிருகங்களால் ஏற்பட்ட காயங்கள், மரக்கிளைகளில் இருந்து விழுந்து கை, கால் எலும்பு முறிந்து ஏற்பட்ட காயங்கள், வண்டுகள், புழுக்கள், பூச்சிகள் பாம்புகள் ஆகியவற்றின் தீண்டுதலால் நோய்க்கு ஆளானது - இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவத்தை நாடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அன்று அவனுக்கு சுலபமாகக் கிடைத்த மரப்பட்டைகள், பச்சிலைகள், மூலிகைகள், மண் ஆகியவற்றால் மருந்துகளைத் தயாரித்து தனக்குத் தானே மருத்துவம் செய்யும் அறிவையும் பெற்றுக் கொண்டான்.

காலப்போக்கில் அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும், அனுபவங்களையும் பெற்று மருத்துவம் செய்ய தனித்துவம் பெற்று வைத்தியர்கள் எனும் பெயரில் பல மருத்துவர்கள் உருவாகினார்கள். அரண்மனை வைத்தியர்கள், குருகுல வைத்தியர்கள், கானகத்தில் வாழும் சித்தர்கள் இப்படி பல்வேறு தகுதிகளைப் பெற்று மருத்துவ உலகம் தனது எல்லையை விரிவு படுத்தத் துவங்கிற்று.

இதில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம், யூனானி மருத்துவம், சீன மருத்துவம் என பல வழிமுறைகளில் மருத்துவ சிகிச்சைகள் கையாளப்பட்டு வந்தது. இன்று மருத்துவ உலகம் சொல்ல முடியாத அளவிற்கு அபார வளர்ச்சியையும், நவீன முறைகளையும் தன்னுள் புகுத்தி, தனது சாம்ராஜ்ஜியத்தை வான் எல்லையைத் தொடும் அளவிற்கு உயர்த்தியுள்ளது பெருமைக்குரியதே!

அந்தப்புரத்தில் தம் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்த மகாராணி திடீரென தலை சுற்றி மயக்கமடைந்து விழ, பதறியடித்துக் கொண்டு சபை என்றும் பாராமல் உள்ளே நுழைந்து,

“மன்னா...! தங்கள் பத்தினி மயங்கி விழுந்துவிட்டார்கள்!!”

என செவிலியப் பெண்கள் மன்னனிடம் கூற,

“யார் அங்கே...? அரண்மனை வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள்!”

என மன்னன் கட்டளை பிறப்பிக்க, அந்தப்புரத்திற்குள் சென்ற வைத்தியர் மகாரணியின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணித்து,

“மன்னாதி மன்னா! உமது மடியில் தவழ இந்த சோழ நாட்டிற்கு ஒரு வாரிசு வரப்போகிறது...”

எனும் நற்செய்தியைக் கூறி, மன்னரின் முத்துமாலையைத் தட்டிச் செல்லும் எத்தனை கதைகளை நாம் படித்திருக்கின்றோம்? ஆக, அரசனானாலும், ஆண்டியானாலும் மருத்துவர்கள் ஒரு மரப்பெட்டியைச் சுமந்து கொண்டு நோய்வாய்ப்பட்டவன் வீட்டிற்குச் சென்று வைத்தியம் செய்வதுதான் வழக்கமாக இருந்து வந்தது.

இதில் நமதூர் மட்டும் விதிவிலக்கா எனில் இல்லை எனலாம். எனக்கு நினைவு தெரிந்த காலங்களில், குதிரை வண்டியிலிருந்து முன்னேறி நமதூரில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய காலம். கண்ணைப் பறிக்கும் கலரில் வண்ண வண்ண இருக்கைகள்... உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி... சிறுவர்களுக்கான மடக்கு இருக்கை... பின்னால் ஜன்னல்... சுற்றிலும் திரை... கதவுகளுக்குப் பகரமாக வெறும் தடுப்புக் கம்பிகள்... அழுத்தும் கால் பெடலுக்கு கீழே தொங்கவிடப்பட்ட பெல்லில் நரம்புக் கயிற்றை இழுத்து ‘நங்... நங்’ என்று ஒலியெழுப்பிக் கொண்டு ஊரில் வலம் வந்து கொண்டிருந்த சைக்கிள் ரிக்ஷா காலகட்டம் அது.

அன்று நமதூரில் மருத்துவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருந்தனர். மதிப்பிற்குரிய அரசு மருத்துவர் டாக்டர் ஜானகி அம்மாவை மறக்க இயலாது. மருத்துவம் என்பது மகத்தான சேவை என்பதை உணர்ந்து பணியாற்றிய தியாகி அவர். செந்நிறத்தில் பிரேம் போட்ட பெரிய மூக்குக் கண்ணாடி, ஷிஃபான் சேலைக்கு மேல் போட்ட வெள்ளை நிறக் கோட்டு, வீட்டில் சதா குரைத்துக் கொண்டிருக்கும் வெள்ளை வெளேரன்ற நாய்க்குட்டி, சிவன் கோவில் தெருவில் முதல் வீட்டில் வசித்து வந்த ஜானகி அம்மாளுக்கு திருமணம் ஆன புதிது. இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து இன்முகத்தோடு வைத்தியம் பார்க்கும் அழகே தனி!

நள்ளிரவில் ஏற்படும் சுகக்குறைவுக்கு ஒரு பெண்மணி துணைக்கு வந்தால் மட்டும் போதும்! ரிக்ஷாவில் பத்தே நிமிடத்தில் நமது வீட்டு வாசலில் வந்திறங்கும் கடமை உணர்வு மிக்கவர். வந்ததும் இனாமல் பாத்திரத்தில் வெந்நீர் போடச் சொல்லி கண்ணாடி சிரிஞ்சுகளை அதில் கொதிக்க வைத்து, ஸ்டீல் இடுக்கியால் அவற்றை எடுத்து சுத்தம் செய்து, பாட்டிலில் உள்ள மருந்தை உறிந்து எடுத்து, சுகக்குறைவானவரிடம் குசலம் விசாரித்துக் கொண்டே இடுப்பில் இதமாக சொறுகி “ஆங்... எல்லாம் சரியாகி விட்டது! இனி கவலைப்பட வேண்டாம்...” என ஆறுதல் சொல்லி, தான் கொண்டு வந்த சதுர வடிவிலான தோல் பேக்கை எடுத்துக் கொண்டு, கொடுப்பதை மட்டும் ஃபீஸாகப் (திறந்து பார்ப்பது கூட கிடையாது) பெற்றுக் கொண்டு செல்லும் அந்த மகத்துவமிக்க மருத்துவ சேவகியை நான் இன்றும் நினைவு கூர்கின்றேன்.

இந்த வரிசையில் நமதூரில் பல நல்ல குணம் கொண்ட மருத்துவர்களும் இடம் பெறுவார்கள். அன்று நாம் அழைத்தவுடன் அவசரத்திற்கு ஓடி வந்த அன்புள்ளம் கொண்ட மருத்துவ மாணிக்கங்களில் சிலர் வயது முதிர்ந்த நிலையில், இறையருளால் இன்றும் நம்முடன் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இது அன்றைய காட்சி. கொஞ்சம் வருடங்கள் நகர்ந்தன. காலச்சக்கரத்தின் கடும் வேகத்திற்கேற்ப மனித மனங்களிலும் மாற்றங்கள் பல குடியேறத் துவங்கின. அதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கில்லை என்பது போல, தனது (கிளினிக்) மருத்துவ நிலையத்திற்கு அருகிலேயே ஒருவர் மயங்கி விழ, ஓடோடிச் சென்று பொதுமக்கள் டாக்டரை அழைக்க, “அவரை எடுத்துக் கொண்டு இங்கே வாருங்கள்!” என டாக்டர் அடம் பிடிக்க, ஒரு மாத்திரையை நாவிற்கடியில் வைத்தால் உயிர் பிழைத்திருக்க வேண்டிய அந்த ஜீவன், இத்தகைய பிடிவாத குணமுள்ள மருத்துவர் வந்து பாராததால் பரிதாபமாக உயிரிழந்த கொடுமையை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். மனசாட்சியுள்ளவராக இருப்பின், இச்செயல் அந்த மருத்துவரைக் காலமெல்லாம் உறுத்திக்கொண்டே இருக்கும்.



தற்காலத்தில், இரவில் எவருக்காவது சுகவீனம் ஏற்பட்டால் அவசரத்திற்கு நமது இல்லம் வர மருத்துவர்கள் மறுக்கின்றனர். “அங்கே கொண்டு போங்க... இங்கே கொண்டு போங்க... இல்லை காலையில் கிளினிக்குக்கு கொண்டு வாங்க...” என தட்டிக்கழித்து, செய்வதறியாத குழப்ப நிலைக்கு தள்ளப்படும் நோயாளிகள் நிலை பரிதாபத்திற்குரியதே! இவர்கள் ஏன் இப்படி வரத் தயங்குகின்றனர்? மருத்துவம் படிக்கும்போதே மகத்தான மக்கள் சேவையை மனதில் வளர்த்துக்கொள்ளத் தவறியதாலா? அல்லது வியாபார நோக்கில் மருத்துவம் மருவிப்போய் விட்டதாலா?

ஒரு முறை என் இளைய சகோதரி வயிற்று வலியால் துடிதுடிக்க, இரவில் ஒரு மருத்துவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். அந்த மகா மருத்துவர் டி.வி.யில் சீரியஸாக சீரியல் பார்த்து முடித்துவிட்டுதான் “என்னாச்சு?” என்று கேட்டார். வலியின் கொடுமையால் தளர்ந்து தவித்த என் சகோதரியின் நிலை கண்டு புழுவாய்த் துடித்தேன். சர்வ சாரதாரணமாக சீரியல் பார்த்துவிட்டு சாவகாசமாய் வந்து மாத்திரை தந்த அந்த மகா புருஷனை என்னவென்று சொல்ல?

இது ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன் நான் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு, கை - கால் மூட்டுகள் பாதித்தவனாக நமதூருக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றேன். டோக்கன் எடுத்து வரிசையில் அமர்ந்தேன். சில மணி நேரத்திற்குள் எனது முறை வரவே, உள்ளே சென்று ஸ்டூலில் அமர்ந்தேன். டாக்டர் என்னை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. தனது கணினியில் ஏதோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். நான் இருப்பு கொள்ளாமல் இருமிக்கொண்டே இருந்தேன். சரி ஏதோ மருத்துவம் சம்பந்தமாக இண்டெர்நெட்டில் பிஸியாக இருப்பார் என எண்ணிய எனக்கு அடுத்தடுத்த வினாடிகள் அதிர்ச்சியையளித்தன. காரணம், அவர் தான் சொந்தமாக வாங்கப் போகும் கார் பற்றிய விபரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அதுவும் வேலை நேரத்தில் நோயாளியை அருகில் வைத்துக் கொண்டு! இப்படி செய்வது எனக்கு எரிச்சலை மூட்டியது.

அட, இதெல்லாம் கூட பரவாயில்லைங்க. சில நேரங்களில் மூச்சு பேச்சற்று மயக்க நிலையில் கிடக்கும் ஒருவரது தொண்டைக் குழியில் உயிர் மூச்சின் கடைசி சுவாசம் உள்ளதா என பார்த்துச் சொல்லக் கூட இந்த மருத்துவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடு என தட்டிக் கழிப்பது ஏன்? சட்ட விதிகள் ஏதேனும் தடைக்கற்களாக நிற்கின்றனவா? குற்றவாளியாக்கப்பட்டு விடுவோம் எனும் அச்சத்தின் உச்ச கட்டமா? இல்லை மரணித்தவர் வீட்டாரிடம் பீஸ் வாங்க சங்கடம் தோன்றுவதாலா? என்னவென்பது புரியாத புதிராகவே உள்ளது. இது குறித்த ஆதங்கத்தை ஒரு மருத்துவரிடம் கேட்ட்தற்கு, “அட இதற்கெல்லாம் டாக்டர் வந்துதான் கன்ஃபார்ம் பண்ணணுங்கிற அவசியமில்லை. இரண்டு மூன்று சிம்டம்ஸ் இருக்கு அதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் ஒரு சாதாரண ஆள் கூட பார்த்து உயிர் இருக்கா போயிடுச்சான்னு தெரிஞ்சுக்கல்லாம்” என படு கேஷுவலாக கூறினார். இவரது கடமை உணர்வையும் ஊருக்கு உழைக்கும் மனபாண்மையையும் என்னவென்று சொல்வது?

அண்மையில் எனது நண்பரது உறவினர் ஒருவர் திடீரென மயக்கமுற்று மூச்சு பேச்சின்றி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த நிலையில் பல மருத்துவர்களுக்கும் போன் போட்டு அழைத்தபோது வர மறுத்தனர் மருத்துவர்கள். இனி இவர்களிடம் கெஞ்சிப் பலனில்லை என ஆட்டோவை வரவழைத்து, அவரைச் சுமந்து கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அங்கு சென்ற சில நிமிடங்களில் அந்த ஆத்மா நிரந்தரமாக நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டதெனும் அதிர்ச்சித் தகவலை அறிந்து மனம் வெதும்பி வீட்டிற்குத் திரும்ப கொண்டு வந்து, ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தனர். அந்த நிகழ்வு என் மனதில் ஆழ்துளைக் கிணறு போல ஊடுறுவிச் சென்றது. இந்நிகழ்வை என்னால் மறக்கவே இயலவில்லை. அதன் வேதனையும், தாக்கமும் என்னை வாட்டியெடுத்து வருத்தியதன் விளைவே இக்கட்டுரையின் பிறப்பு எனலாம்.

மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பல கிளினிக்குகள் நவீனமயமாக்கப்பட்டு, அவைகள் வியாபார நோக்குடன் மட்டும் செயல்பட்டு வருவதால், நோய்களும் நவீனமயமாகி விதவிதமான மருந்துகள், வினோதமான சிகிச்சை முறைகள் என - பணம் பறிக்கும் பகல் கொள்ளையர்களின் கூடாரமாக அவைகள் மாறி வருகின்றன. சேவை என்பது வெறும் சொல்லளவில் மட்டும்தான் இவர்களிடம் இருக்கின்றது. மனித நேயம் என்பதெல்லாம் மறந்து அல்லது மறத்துப்போன ஒன்றாகி விட்டது.

ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் அரங்கேறும் அவலங்களோ சொல்லி மாளாது. கேட்பார் கேள்வி இல்லை என்பதால் நோயாளிகளைக் கொல்லாமல் கொன்று புதைக்கும் பணப்பறிப்பு எனும் பகல் கொள்ளைதான் பெரும்பாலான மருத்துவர்களிடமும், மருத்துவமனைகளிலும் காணப்படுகின்றது. பலசரக்குக் கடைகளில் போடும் பில் அளவிற்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தந்து, அதையும் அவர்கள் நடத்தும் மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி... அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்.

இது இவர்களின் வியாபாரத்தைப் பெருக்கும் நவீன யுக்தி. அப்பாவி பொதுமக்களின் இயலாமையை தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி வயிறு வளர்க்கும் இதுபோன்ற இரண்டாம் தர மருத்துவர்களை நாம் இனம் கண்டு கொள்வதுடன், இத்தகைய இரக்கமற்ற மருத்துவர்களை ஒரு தலைவலிக்குக் கூட நாம் நாடாமல் புறக்கணிப்பதோடு இன்னும் விழிப்போடு இருக்க வேண்டும். இத்தகைய மருத்துவர்கள் மக்கள் சேவையில் மகத்தான பங்கு வகிக்கும் மருத்துவப் படிப்பின் மகிமையை உணராத வரை, மனிதநேயம் என்பது இவர்களுக்கு வெறும் கிள்ளுக்கீரை போன்றதே!

பொதுமக்களின் மனநிலை அறிந்து சேவை அடிப்படையில் தம் வாழ்வின் இலட்சியத்தை வகுத்துக் கொண்டு அதையே வழிநடத்திச் சென்று, அலட்சியப் போக்கில்லா இலட்சிய மருத்துவர்களாக இவர்கள் திகழ வேண்டும் என்பதே மக்களின் நாட்டம். மனம் திருந்துவார்களா...? இத்தகைய மருத்துவர்கள்...!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உதயமாகும் தீர்வு
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 06 October 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30557

அருமையான கட்டுரை. நண்பர் ரஃபீக் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

கல்வி வணிக மயமாகியதன் விளைவுதான் இன்று நாம் காணும் இந்த நிலை.

முன்பு சேவைத்துறையாக இருந்த மருத்துவத்துறையானது இன்று லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுவிட்டது.

``` மருத்துவத்திற்கான படிப்பபிற்காக கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கப்படும் கையூட்டு

```` பெருகும் நோய்களையும் , அவஸ்தைப்படும் நோயாளிகளையும் லாபம் கொட்டும் வணிகமாக பார்க்கும் பெரும் மருந்து & மருத்துவ கருவிகள் உற்பத்தி நிறுவன மாஃபியாக்கள் , மருத்துவமனைகள்

```` உடலின் கூற்றையும் உடல் நலத்தின் அடிப்படைகளையும் அறியாத மக்களின் அறியாமை

போன்ற பல காரணிகளினால் நவீன மருத்துவர்கள் பெரும்பாலானோர் மரண வணிகர்களாக மாறி விட்டனர். இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

தேள் என்றால் கொட்டத்தான் செய்யும் ; வணிகமயமான மருத்துவர்கள் என்றால் இரக்கமில்லாமல்தான் இருப்பர். நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

முழுக்க முழுக்க இந்த மருத்துவ வணிகர்களை சார்ந்திருக்க தேவையில்லாத அளவிற்கான சூழ் நிலையை நாம் உருவாக்குவதுதான் இந்த அவலத்திற்கு தீர்வாக அமையும்.

இந்த திசையில் சில நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. விரைவில் அவை வடிவம் பெறும் நாளில் அவற்றின் பலன்கள் இன்ஷா அல்லாஹ் இந்த சமூகத்திற்கு கிட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மக்கள் வைத்தியர் சுகுமாறன்
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 06 October 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30558

மருத்துவர் சுகுமார் அப்போது நினைவுக்கு வந்தார்.

என் மகளுக்கு உடல்நலமில்லாமல் போகும்போதும், எங்கள் நோய்களுக்கும் பெருங்குடி ரயில் நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் அவர்தான் சிகிச்சை செய்துவந்தார்.

வேளச்சேரி-தரமணி சாலையில் குடியிருக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கும் அவர்தான் மருத்துவர். எந்த ஆடம்பரமும் விளம்பரங்களும் விற்பனைப் பிரதிநிதிகளும் இல்லாத அவரது வீட்டின் கார் ஷெட் போன்ற முன்பகுதியில் திரைமறைப்பில் தான் அவர் அவர் மருத்துவம் பார்த்துவந்தார்.

அவரிடம் மாத்திரை மற்றும் ஊசியோடு சேர்த்து 50 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணம். எனக்கு திருமணமான காலத்தில் 30 ரூபாய் பீஸ் வாங்கினார். யாரையும் நோய் குறித்து அச்சம்கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் குடும்ப நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார்.

பணம் இல்லாமல் சிலர் சிகிச்சை பெற்றுப் போவதையும் பார்த்திருக்கிறேன். குடி காரணமாக வயிற்று வலியோடு அவதிப்பட்டு வருபவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது அவசியமாக இருக்கும். அவர்கள் கூலி மற்றும் துப்புரவு வேலை செய்பவர்கள். வீட்டின் முன்பகுதி முற்றத்திலேயே ஒரு மரக்கட்டிலில் படுக்கவைத்து அவர்களுக்கு டிரிப்ஸ் ஏற்றுவார்.

நோய் குறித்து அச்சம் கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார்.

கடந்த ஓராண்டாக நீரிழிவு நோயால் அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாங்கள் சிகிச்சைக்குப் போகும்போது, அவரது உடல்நலன் குறித்தும் நாங்கள் விசாரிப்போம்.

சில நாட்களில் எழ முடியாமல் எழுந்து வந்துதான், காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார். உடன் ஒரு உதவியாளரையும் சேர்த்துக் கொண்டிருந்தார். சுகுமார் மருத்துவரை விட்டால் அவர்களுக்கு வேளச்சேரியில் எளிமையாக மருத்துவம் செய்ய இப்போது ஆளே கிடையாது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது சுகுமார் மருத்துவர் உயிருடன் இல்லை. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நானும் என் மனைவியும் அவர் வீட்டுக்குப் போனோம். அங்கே இருந்த கூட்டத்தைக் காண ஆச்சரியமாக இருந்தது.

மருத்துவரின் உறவினர்களை விட அவர் சிகிச்சை அளித்த ஏழைகள்தான், சொந்தத் தந்தையின் மரணத்தைப் போல சொந்த இழப்பைப் போல அழுது அரற்றிக்கொண்டிருந்தனர். ஒரு புறம் நெகிழ்வும், இத்தனை நேசத்தை அவர் சம்பாதித்திருப்பது தொடர்பான ஆச்சரியமும் ஏற்பட்டது.

இவரைப் போன்றவர்கள்தான் இன்று அருகிவருகிறார்கள்.

நன்றி : தி ஹிந்து தமிழ் நாளிதழ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved