Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 114
#KOTWEM114
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 29, 2013
யார் மோசடிகாரர்கள்!

இந்த பக்கம் 3894 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை மவுன்ட்ரோட்டில் உள்ள மக்கா பள்ளியில் ஜுமுஆ தொழுது வந்தேன். ஜுமுஆ பேருரையை உத்தரபிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் மத்ரஸாவின் மூத்த அறிஞரும் அங்குள்ள ஹதீஸ் கலைப் பிரிவின் தலைவரும் அகில இந்திய ஜம்யிய்யதுல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்ஃக் முஹம்மத் அஸ்அத் மதனீ அவர்கள் தூய தித்திக்கும் உர்தூவில் உரை நிகழ்த்தினார்கள். சூரா அல்முதஃப்ஃபிஃபீன் அத்தியாயத்தின் முதல் ஆறு வசனங்களை ஓதி அதற்கான விளக்கத்தையும் தனதுரையில் வழங்கினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

83:1 وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

83:2 الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ

83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

83:3 وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

83:3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

83:4 أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

83:5 لِيَوْمٍ عَظِيمٍ

83:5. மகத்தான ஒரு நாளுக்காக,

83:6 يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

இங்கு எடைகளிலும் அளவைகளிலும் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான் என அல்லாஹ் கூறுகின்றான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பிரரிடத்தில் தனக்காக எதையும் வாங்கும்போது சரியான எடைக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள்; ஆனால் தான் எதையாவது அளந்துகொடுக்கும்போதும் நிறுத்துக்கொடுக்கும்போதும் அதன் எடையில் குறைவு செய்யவே நாடுகிறார்கள். எனவேதான் அவர்களைப்பற்றி குர்ஆனில் அல்லாஹ் மோசடியில் ஈடுபட்டவர்கள் எனக் கூறுகிறான். இங்கு மோசடி என்பதற்கு “தத்ஃபீஃப்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேடு என்பதற்கு “வைல்” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதே வார்த்தைக்கு இன்னுமொரு பொருள் உண்டு. அதாவது, அல்லாஹ் மறுமையில் “வைல்” என்னும் ஒரு ஓடையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்.

மது, விபச்சாரம், சூதாட்டம் போன்ற பெரும்பாவங்களைச் செய்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நரகில் எடை மற்றும் அளவையில் மோசடி செய்பவர்களைப் வீசியெரியாமல் அவர்களுக்காகவே பிரத்தியேகமாக அமைத்துள்ள இடம் தான் “வைல்” என்னும் நரகின் ஓர் பகுதியாகும். ஏனெனில் மற்ற பாவங்களை மனிதன் அல்லாஹ்விற்கு எதிராகவே செய்கின்றான். ஆனால் அளவு மற்றும் எடையில் மோசடி செய்பவர்கள் பிறமனிதர்களுக்குரிய உரிமையில் தலையிடுவதால் அல்லாஹ் அவர்கள் மன்னிக்காதவரை அவனும் மன்னிப்பதில்லை.

ஹதீஸ்குதுஸியில் ஒரு ஹதீஸ் பின்வருமாறு வருகிறது.

ஆதமின் மகன் வானளவு பாவங்கள் செய்து பிறகு அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் (இஸ்திஃக்ஃபார்) தேடினாலும் அல்லாஹ் தான் நாடினால் அப்பிழை பொறுப்பை ஏற்று அவனை மன்னித்து விடுகிறான். பிழைபொறுப்பின் மூலம் மனிதன் செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் அல்லாஹ்வால் பரிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் எடை மற்றும் அளவு மோசடி அவ்வாறானது அல்ல. மனிதனுக்கு எதிராக மனிதன் செய்யும் நம்பிக்கை மோசடி அது.

அத்தகையவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்போது அவரது மோசடித் தனத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டு வந்து நீதி செலுத்துவதற்காகவே தனியாக “வைல்” என்னும் ஒரு ஓடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அஃதல்லாமல் எடை மற்றும் அளவையில் மட்டும்தான் மோசடியா (தத்ஃபீஃப்) எனில் அவ்வாறில்லை. குர்ஆன் மிகவும் சுருக்கமான ஒரு நூல். ஆனால் அதில் வழங்கப்படும் கருத்துக்கள் மிகவும் விரிவானது. விசாலமானது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு அதன் உரிமையாளர் சரியான ஊதியம் செலுத்தவில்லையெனில் அதுவும் “தத்ஃபீஃப்” ஆகும். அதேபோன்று அந்த ஊழியர் வாங்கும் சம்பளத்திற்கு உரிய முறையில் அவ்வூழியர் கடமையாற்றத் தவறினால் அதுவும் “தத்ஃபீஃப்” ஆகும்.

ஒரு கணவன் தன் மனைவியிடமிருந்து உரிமைகளை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டு கடமையைச் செய்யாமல் விடுவதும் “தத்ஃபீஃப்” ஆகும். அதே போலத்தான் ஒரு மனைவி தன் கணவரிடம் சகலவிதமான உரிமைகளையும் எதிர்பார்த்துக் கொண்டு அவனுக்குச் செய்யும் கடமைகளை செய்யாதொழிவதும் “தத்ஃபீஃப்” ஆகும்.

குழந்தையாக இருந்த போது தாயின் மார்பிலிருந்து உரிஞ்சி உண்டும் தகப்பனின் ஆதரவில் உடுத்தும் படித்தும் பெரிதாக ஆளாகிய பின் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பணிவிடைகளையும் ஒருவன் செய்யாமல் புரக்கணிப்பதும் “தத்ஃபீஃப்” ஆகும். இவர்களுக்காகவே அல்லாஹ் அந்த “வைல்” என்னும் மிக மோசமான நரக ஓடையை ஆயத்தப்படுத்தியுள்ளான்.

எனவே தான் உலகில் இதுபோன்ற தத்ஃபீஃப்களில் (மோசடி) ஈடுபடுபவர்களை நோக்கி, “மகத்தான ஒரு நாளுக்காக, அகிலாத்தாரின் இரட்சகன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் (அல் குர்ஆன் 83:5-6)” என எச்சரிக்கின்றான் அல்லாஹ். அல்லாஹ் அந்த நாளிலிருந்தும் அதில் மோசடிகாரர்களுக்கு வழங்கும் நீங்காத வேதனைகளிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக என உரையை கொடுக்கப்பட்ட மிகச்சுருக்கமான நேரமாகிய 25 நிமிடத்திற்குள் (அஷ்ஷெய்ஃக் ஷம்சுத்தீன் காசிமி அவர்களின் மொழிபெயர்ப்பு உட்பட) ஆற்றொழுக்கு மிக்க தமது உரையை முடித்துக் கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...யார் மோசடிகாரர்கள்
posted by: netcom buhari (chennai) on 30 October 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31084

முதலில் தான் கேட்டதை , பிறருக்கு எட்டி வைத்த நண்பன் சமீமுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அளவை மோசடியை போண்டு, நிலம் மோசடி இறந்த காலம் முதல் நிகழ் காலம் வரை தொடர்து நடத்து வருகினறது (தனியார் , அரசு மட்டும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலம் )இந்த தப்பை பண்ணும் மக்களில் மார்க்கம் தெரிதவர்களும் இருகின்டர்கள் என்பது தான் வருந்ததக்க ஒன்று.இவர்கள் பண்ணும் தப்பால் பின்னாடி வரும் சந்ததிகள் பாதிக்கப்பட்டு, குடுபத்திற்கு இடையில் பெரும் பிரச்சினை நிலவு கிறது.

அதை போண்டு சாட்சி கையப்பம் போடுபவர்கள் அந்த சொத்து கரெக்டான சொத்த, எண்டு சரி பார்த்து போடவும் , நீங்கள் தப்பான சொத்து எண்டு தெரிதும் நீங்கள் சாட்சி கையப்பம் போட்டாள் நீங்களும் அல்லாஹு கு மத்தியில் குற்றவாளிகள் ஆகிவிடுவீர்கள். குற்றம் செய்பவரை விட , குற்றம் செய்ய துணையாக இருபவருக்கு தண்டனை அதிகம்.

இதை போன்டு மோசடிசெய் பவர்கள் 2 உலகிலும் பதில் சொல்லும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறார்.

ஆதமின் மகன் வானளவு பாவங்கள் செய்து பிறகு அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் (இஸ்திஃக்ஃபார்) தேடினாலும் அல்லாஹ் தான் நாடினால் அப்பிழை பொறுப்பை ஏற்று அவனை மன்னித்து விடுகிறான். பிழைபொறுப்பின் மூலம் மனிதன் செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் அல்லாஹ்வால் பரிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் எடை மற்றும் அளவு மோசடி அவ்வாறானது அல்ல. மனிதனுக்கு எதிராக மனிதன் செய்யும் நம்பிக்கை மோசடி அது. (கோப்பி பேஸ்ட்)

மக்களே அல்லாஹு கு அஞ்சி கொள்ளுகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved