Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:27 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 115
#KOTWEM115
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 1, 2013
தருமம் தலை காத்ததே!

இந்த பக்கம் 3357 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"ஐயா..."

குரல் கேட்டு தலையுயர்த்தி நோக்கினாரவர்.

அது வரை வரவு-செலவு ஏடதில் ஆழ்ந்து போய் பேனாவை ஓட விட்டுக்கொண்டிருந்தார். பெரு நகர் ஒன்றில் தோல் வாணிபத்தில் பேரோங்கித் திகழ்ந்த வணிகக் குழுமங்களின் உரிமையாளருள் ஒருவரவர்.

தமது அலுவலகப் படியேறி உள்ளே வந்து, தனக்கெதிரில் அதிக வயதில்லாத ஒருவன் வறுமையின் உருவாய் கூனிப்போய் நின்றதைக் கண்ட அவர்

"என்னப்பா வேண்டும்?" எனக் கேட்க,

"ரெம்ப பசியாயிருக்குதுங்க" என்ற பதில் வந்தது.

அப்போது பிற்பகல் நேரம் மூன்று மணி போலிருக்கும். அவர் மனம் கசிந்தது இரக்கத்தால்.

அலுவலகமும், அவர் உண்டு உறையுமிடமும் ஒன்றேதாம். தனக்கருகிலிருந்த அழைப்பு மணியினைத் தொட்டதுதான் தாமதம்! சில நொடிகட்குள் அடுக்களை அலுவலர் வந்தெதிரில் பவ்வியமாக நின்றார். முதலாளியை விட வயதில் சற்று மூத்தவர். அவர் மீது அளவிலா அன்பும் அக்கறையும் கொண்டவர் அவ்வூழியர்.

"இவருக்கு சாப்பிடக் கொடும்!"

"எல்லோரும் உண்டாகிவிட்டதே; மீந்தது ஒன்றும் இல்லையே தம்பீ...? "

-இது சமையற்காரரின் மறுமொழி.

"நான் இன்னும் உண்ணவில்லைதானே...? அதைக்கொடும்!”

"அப்ப தம்பி உமக்கு?"

"எனக்கு ஒரு பன்னு ரொட்டியும், பழமும் வாங்கித் தாரும்!"

ஒன்றும் சொல்ல வழியுமின்றி, மனப் பொருத்தமும் இன்றி முணமுணத்துக் கொண்டேயகன்றார் அவ்வூழியர். சில கணத்தில் வந்தவனுக்கு உண்ணவும் பருகவும் தந்துவிட்டுப் போய் விட்டார். வயிறார உண்டவன் வாயார வழுத்தி விட்டு கை கூப்பி விடைபெற்றான்.

இது நடந்து மாதங்கள் பல - அல்ல! ஆண்டுகள் பல நகர்ந்திருக்கலாம். நினைவில் பதித்து வைக்க வேண்டிய நிகழ்வு ஒன்றும் இதுவல்லதான். இதுபோன்று பலமுறை நடந்தும் இருக்கலாம்...

ஒரு ஞாயிற்றுக்கிழமை... நகரை விட்டு வெகு தொலைவிலிருந்த தோல் பதனிடு தொழிற்சாலையொன்றுக்கு பணம் கொண்டு செல்ல வேண்டியது வந்தது. அந்த முதலாளி, தன் நண்பர் ஒருவரையும் துணைக்கழைத்துக்கொண்டு, வாடகைக் கார் ஒன்றையும் பேசியமர்த்திக்கொண்டு, பணத்தையும் கட்டியெடுத்துக்கொண்டு பயணமானார்.

நகரத்தை விட்டு வெகு தூரம் வந்தாகி விட்டது. போக்குவரத்து சந்தடி அதிகம் அற்ற வீதியின் மருங்கொன்றின் மர நிழலில் வண்டியினை நிறுத்திய ஓட்டுனன், கண்ணெட்டிய தொலைவிலிருந்த குடிலொன்றைக் காட்டி,

"சார், அங்கு சென்று என் தங்கையைக் கண்டு ஓரிரு வார்த்தை பேசி விட்டு ஐந்தே நிமிடத்தில் வந்து விடட்டுமா?"

என அடக்கமாகக் கேட்டதும்,

'சரி' என்றார்.

சென்றவன் சொன்னது போன்று சில மணித்துளிகளில் குடிசையை விட்டும் வெளியேறி, இன்னும் ஒருவனுமாக பேசிக்கொண்டே வண்டியை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அண்மி வந்ததும், வண்டிக்குள்ளிருந்தவாறே

"என்னப்பா, பரவாயில்லையே... சொன்னது மாதிரி சீக்கிரமாகவே வந்துவிட்டாயே...?"

என்று சொன்னதுதான்! ஓட்டுனனுடன் வந்தவன் தன் முதுகுப்புறமாக சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த கொடுவாளைக் கையில் எடுத்துக்கொண்டு,

"இறங்குங்கடா, பணக்கட்டை எடுங்கடா" என அச்சுறுத்திக் கத்தினான்.

அச்சத்தில் அதிர்ந்து போய் நடுங்கிக்கொண்டே கார் கதவைத் திறந்திறங்கியவரைப் பார்த்ததுதான் தாமதம்... வந்தவன் கையிலிருந்த வாளைக் கீழே வீசியெறிந்துவிட்டு, அவர் காலில் வீழ்ந்து கிடந்தான்! உணர்ச்சி பொங்க ஓவென்றழுதான்!! ஓட்டுனன் உள்ளிட்ட ஒருவருக்குமே சூழல் இன்னதென்று புரியவில்லை.

அப்போது கொள்ளையடிக்க வந்தவன் வார்த்தையை வரவைத்துப் பேசினான்.

"எசமானே...!

தான் பசித்திருந்து எனக்குப் பசி தீர்த்தாயே...?

உனக்கா பாதகம் நினைத்தேன்...??

கேடு கெட்டுப்போனேனே...

மன்னித்தருள் மகாராசனே..."

என்றழுது மீண்டும் காலில் வீழ்ந்தான். அவனைக் கைத்தாங்கி எழுப்பிய முதலாளி, அவனைத் தேற்றி நல்வழியில் உழைத்துப் பொருளீட்டி உண்ணென்று அறிவுரை தந்து கைப்பொருளும் ஈந்துதவினார்.

"தருமம் அல்லலையகற்றும், விதியையும் மாற்றும்" எனும் பொருள் பதிந்த அருளுரையை அருளின் உரையை ஆழ்ந்துணர்ந்து செயலாற்றுதல் நம் கடமை அன்றோ?

கேட்டறிந்தவன் : "அல் யமீன் "

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்...
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 01 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31127

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,..எனும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்
வரிகள் இக்கட்டுரைக்கு பொருந்தும்.

சொல்ல வந்த செய்தியை சுருக்கமாக செல்லத்தமிழில் மெல்ல உரைத்து நம் மனதில் தர்ம வித்துக்களை அள்ளித் தெளித்துள்ளார் கட்டுரையாளர். பாராட்டுக்கள்...!

இத்தகைய எழுத்து நடைகளைப் பார்த்து பல வருடங்களாகின்றன. எழுத்து மேடையில் நடை பழகி வரும் என்போன்றோர் தங்கள் விரல் பிடித்து தத்தி தத்தி நடை போட தாங்கள் தொடர்ந்து பல முத்தான ஆக்கங்களைத் தாருங்கள். அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்து வைத்து சரீர சுகத்தையும் மனதில் சந்தோஷத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நெஞ்சை உருகச் செய்து கண்ணீரை வரவழைத்த கட்டுரை.....!!!
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 01 November 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31132

மாஷா அல்லாஹ். நெஞ்சை உருகச் செய்து கண்ணீரை வரவழைத்த கட்டுரையை எங்களின் அன்பிற்கினிய சாச்சப்பா அவர்கள் வடித்துள்ளார்கள். ஜஸாகல்லாஹு ஃகைரன்.

ஆரம்பிக்கும் போதே முடிந்து விடும் தூரத்தில் கட்டுரை அமைந்து இன்னும் தொடரத என ஏங்க வைத்தாலும் ஒரு நீண்ட காலத்திற்கு இக்கட்டுரை நம் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

எழுத்தின் ஓட்டமும் செய்தியும் மிக நன்றாக உள்ளதோடு கவிதையையும் அதனுள்ளே இலக்கியத்தையும் அதையும் கடந்து கருத்தையும் தருகிறது.

சாச்சப்பா. உங்களிடம் பல திறமைகள் உண்டு என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அதைக் கொணர இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே என நினைக்கும் போது தான் இலேசான கவலை நம் உள்ளத்தில் மேலிடுகிறது.

நேற்று கூட உங்களின் நீண்ட நாள் நண்பரிடம் சொன்னேன். சாச்சப்பா இருக்குமிடத்தில் ஒரு ரசனை இருக்கும். கடந்த கால நினைவுகள் இருக்கும் என.

உங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நம்மவர்கள் பற்றி எங்களின் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாங்கள் நிறையச் சொல்ல வேண்டியுள்ளது. அவ்விரண்டு காலத்திற்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாக இருப்பவர்கள் நீங்கள்.

தயவு செய்து வெளிக் கொணருங்கள். நான் நம் குடும்பத்திற்காக மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த காயலர்களுக்காக கேட்கிறேன்.

ஏனெனில் காயலின் வரலாற்றுப் பெட்டகத்தில் உள்ள பொக்கிஷங்களின் திறவுகோல் உங்கள் கையில் நிச்சயம் உண்டென்பது எனக்கு எப்பவே தெரியும். தொடர்வீர்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன்.

அன்பு மகன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) on 02 November 2013
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31139

மரியாதைக்குரிய பாக்கர் மாமாவின் இந்த கட்டுரை , குறிப்பிட்டுள்ள சம்பவம் கற்பனை மாதிரி தெரியவில்லை . ஏதோ உண்மை சம்பவம் போலத்தான் தெரிகிறது . ஏனெனில் மாமா அவர்கள் தோல் வணிகர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் .

தொழிலில் நேர்மை, வாழ்க்கையில் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் மாமாவின் இதுபோன்ற கட்டுரைகளை மேலும் எதிர்பார்க்கிறோம் .

Vilack SMA,
Shiqiao, Guangzhou, சீன மக்கள் குடியரசு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தர்மத்தை நினைவு கூறச்செய்த ...
posted by: N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) on 02 November 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31140

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நடந்த நிகழ்வை, தாங்கள் கேட்டறிந்ததை கட்டுரை வடிவில் வடித்து மிகச்சிறந்த கட்டுரையாக வாசகர்களுக்கு வாசிக்க தந்தது மட்டுமல்லாமல் – வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய தர்மத்தை நினைவு கூறச்செய்த சகோதரர் அவர்களுக்கு நன்றிகள் பல.

இதுபோன்று பல நிகழ்வுகளை தாங்கள் அறிந்திருப்பீர்கள் அவைகளையும் கட்டுரை வடிவில் எங்களுக்கு தந்துதவினால் பயன்கள் பல பெறுவோம்.

இந்த எழுத்து மேடைக்கு தாங்கள் தொடராக வந்து மக்களுக்கு பல பயனுள்ள கட்டுரைகளை தர எல்லாம் வல்ல அல்லாஹ்! தங்களுக்கு ஆரோக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) on 02 November 2013
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31153

பல்கலை வித்தகரான ஹாஜி பக்கர் காக்கா அவர்கள் இது போன்று நமது முன்னோர்களின் சம்பவங்கள் கட்டுரையாக தந்தால் மிக நன்றாக இருக்கும்.

பல்வேறு சுவையான சமபவங்கள் அவர்களிடம் கேட்டு அறிந்து இருக்கிறேன். எனது பாட்டனார் பாவலர் அப்பா அவர்களின் பல பாடல்களை மிக அழகாக அடி பிசகாது பாடும் பாங்கே தனி.

ஆனால் இலைமறை காயாக தான் எபோதும் விளம்பரம் விரும்பாத வகையில் இருப்பவர்கள் தொடர்ந்து வரட்டும் உங்கள் கைவண்ணம். வாழ்க நலமுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லுதவியால்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved