Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:58:59 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 118
#KOTWEM118
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 9, 2013
பிறையே - ஒற்றுமையை கொண்டு வருவாயா??

இந்த பக்கம் 6148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிறை… வருடத்தில் இரு பெருநாள் தினத்தன்று வந்து போகும் ஓர் விவாதப்பொருளாய் ஆகிப்போனது. இனி அடுத்த நோன்பு வரை, பிறை பற்றிய அறைகூவல்கள், வாதப் பிரதிவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் இல்லை என்று பெருமூச்சு விடுவதற்குள் 'முஹர்ரம் பிறை' செய்தி கமெண்ட்களை படித்தவுடன் எங்கே திரும்பவும் தொடங்கி விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. அந்தளவுக்கு மார்க்க அறிஞர்களிடையே, பொதுமக்களிடையே, ஒரு குடும்பத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நமக்குள் உருவாகிவிட்டன.

நம் சமுதாயத்திற்கு மகிழ்ச்சியான இருதினங்கள் அந்த பெருநாட்களே. இபாதத்துடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய அந்நாட்களில் தான் கருத்து வேறுபாடுகளில் சிக்கி, பிறை குறித்து இவ்வளவு சர்ச்சை தேவையா என்று நம்மவர்களே எண்ணுமளவுக்கு, ஒரே ஊரில் இப்படி தனித்தனியாக பெருநாள் கொண்டாடுகின்றார்களே என மாற்றுமத சகோதரர்கள் கூட கவலைப்படும் அளவுக்கு ... உண்மையான நம் பெருநாள் சந்தோசம் நம்மை விட்டு மெல்ல விலகிச் சென்று விட்டது !

பிறையைக் கணக்கிட்டு நோன்பு மற்றும் பெருநாளை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு சாராரும், பிறையை புறக்கண்ணால் தத்தம் பகுதிகளில் பார்ப்பது கட்டாயம் என்று பிரிதொரு சாராரும்... உலகில் எங்கு பிறை பார்த்தாலும் பரவாயில்லை என்று அடுத்த சாராரும் கூறுகின்றனர். மேற்கூறிய மூன்று சாராரில் ஏதோ விபரமரிந்தவர்களின் நிலையை விட, இம்மூவரில் எவர் கூறுவது சரி என மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்து பின்பற்ற இயலாத பாமரனின் நிலை தான் பரிதாபம்.

கடல் கடந்து வெளிநாட்டில் பெருநாள் கொண்டாடி கிடைத்த சந்தோசம் கூட, சொந்த மண்ணில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஒரு புறம். 'உங்களுக்கு பிடிச்சா நீங்க மட்டும் இன்னைக்கு பெருநாள் கொண்டாடுங்க. எங்களுக்கு (பிள்ளைகளையும் சேர்த்து) நாளைக்குத்தான்' என்று கூறுமளவுக்கு கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள். 'எங்க சாச்சாப்பவுக்கு நேத்திக்கு பெருநாள், மாமாவுக்கு இன்னிக்கி... எங்களுக்கு நாளைக்கு’ என்று மழலையர் மனதில் 'பெருநாள் என்றால் மூன்று' என்று எழுதாமல் எழுதி விட்டோம்.

விஞ்ஞான வளர்ச்சி, கொள்கை பிளவு இல்லாத நம் சிறுபருவத்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து அத்தகவலை கொண்டு பெருநாள் அறிவிக்கப்பட்டு, " நாளைக்கு பெருநாள் நம்மளுக்கு நல்ல நாள் கப்பக்கோழி ......." என்று சந்தோசமாக பாட்டு பாடி, பெருநாள் இரவில் மெயின்/கூலக்கடை பஜார்கள் களைகட்டி, தத்தம் பள்ளிவாயில்களில் ஒன்றாக பெருநாள் கொண்டாடி, பெருநாள் அஸரன்று கடற்கரையில் அலைமோதிய அந்நாட்கள் நம் கண் முன்னே வந்து போகின்றது.

இரவில் ஒளிவீசும் நிலவை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக நிலாச்சோறு உண்ட காலம் போய்... அந்நிலவின் தலைப் பிறையை மைய்யமாக பிரிந்து கிடக்கும் அவல நிலை. அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று என்று பிறரிடம் மார்தட்டிக் கொள்ளும் நாம், நீண்டகாலமாக நிலவும் இக்குழப்பமான அவலநிலையிலிருந்து என்றைக்கு ஒரு நிலைப்பாட்டிற்கு வர போகின்றோம்? மார்க்கமும் விஞ்ஞானமும் பிண்ணிப் பிணைந்துள்ள இவ்விடயத்தில் என்று நமக்கு விடை கிடைக்கும்?

இவ்வருடப் பெருநாளை காயலில் கொண்டாடும் வரை இப்பிறை விவகாரம் மனதில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வில்லை. அமெரிக்காவில் வெவ்வேறு மாநிலங்களில் பெருநாள் கொண்டாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நாளில் பெருநாள் கொண்டாடியதில்லை. இத்தனைக்கும் பல தரப்பட்ட கலாச்சாரம் இனம் மொழி தேசத்தை சார்ந்தவர்கள் அங்கு வசிக்கின்றார்கள். இவ்வேறுபாடுகளையும் தாண்டி ஒரு 'புரிந்துனர்தல்' மூலம் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள், ஒன்றாக தொழுகின்றார்கள், ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடுகின்றார்கள். கொள்கை விவாதமோ திணிப்போ அங்கே நாம் காண இயலாது. ஒரே மார்க்கம் தான்... மனிதர்கள் தான் வேறுபடுகின்றார்கள் வேறுபடுத்துகின்றார்கள் !

வட கரோலினாவின் 'சார்லட்டில்' மூன்று வருடம் பெருநாள் கொண்டாடியிருக்கின்றேன். நோன்பு மற்றும் பெருநாள் நாட்களில், இபாதத் & மகிழ்ச்சி பரிமாற்றம் என பள்ளிகள் களைகட்டி விடும். ஒரு முறை சவுதியில் பெருநாள் என்று அறிவிக்கப்படிருந்தது. ஆனால் அமெரிக்காவில் பிறை காணப்படாததினால் நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். ஒரு சில அரபு மக்கள் நோன்பு நோற்காமல் மறுநாள் எல்லோருடனும் ஒன்றாக பெருநாள் கொண்டாடினர். அதைப்பற்றி ஒரு சகோதரரிடம் வினவினேன்.

பலவருடங்களுக்கு முன்னர் 'தத்தம் பகுதி'(இந்தியர் - பாகிஸ்தானியர் வசிக்கும் மஸ்ஜித்களில்), 'சவுதிப்பிறை' என கருத்து வேறுபாடுகள் உருவாகி இருநாட்களில் பெருநாள் கொண்டாடப்பட்டதாக கூறினார். இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 'ஒருங்கிணைந்த அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, சமுதாய ஒற்றுமையை வலியுறத்த வேண்டும் என்ற நன்நோக்கில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 'சவுதி அறிவிப்பை' பின்பற்றுவது என்றும் நோன்புப் பெருநாள் விடயத்தில், அமெரிக்காவில் பிறை காணப்பட்டால் அதனை எடுத்துக்கொள்வது. காணப்படவில்லையென்றால் அண்டை (பிற) நாடுகளின் அறிவிப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்வது என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்நேரத்தில் மாற்றுக்கருத்து / கொள்கையுள்ளவர்கள் கூட ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டது போய், இளைய தலைமுறையினருக்கு இது போன்ற விடயங்களில் ஒரு 'பொதுப்பாதையை' புரிந்துனர்தலின் அடிப்படையில் அழகான முறையில் ஏற்படுத்தும் ஒரு வழிமுறையும் சொல்லி தரப்பட்டு விட்டது. இதனை கூட பலகோணத்தில் ஆராய்ந்து அது தவறு என்று நம்மில் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அங்கே அது எவ்வித மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை.

நம் இந்திய திரு நாட்டில், மார்க்க விடயத்தை பொறுத்தவரை அது விழிப்புணர்ச்சியாகட்டும் அல்லது குழப்பமாகட்டும் (அவரவர் பார்வையை பொருத்தது) அதன் காலடி எப்பவுமே முதலில் நம் தமிழகத்தில் தான். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நமதூர் போன்ற ஊர்களில் தான். பிறை விடயத்தில், ஜமாத் / அமைப்பினர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு அதேநேரத்தில் அம்முடிவில் அதிருப்தியோடு இருப்பவர்களை நமதூரில் காணலாம்.

இஸ்லாத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது என்று கூக்குரல் எழுப்பும் நாம், நம்மிடையே பலவருடங்களாக உள்ள இக்கருத்து வேறுபாட்டை களைய சமரசம் அடைய தீர்வை நோக்கி நகராதற்கு யார் / எது காரணம்? மார்க்கம் எப்பொழுதுமே தெளிவானது எளிமையானது. அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே, அளவு கடந்த (குறிப்பிட்ட) கொள்கை பற்று, எவ்விடையத்திலும் சமரசமின்மை என்பவைகளே கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன என்பதனை நாம் உணராமல் இல்லை.

இஸ்லாம் எப்பொழுதுமே 'இபாதத்' சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. இஸ்லாம் வலியுறுத்துவது சமுதாய ஒற்றுமையே! இந்த சமுதாயத்தை உம்மத்தன் வாஹிதா - ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுகிறான். பிளவுக்கும் பிரிவுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உம்மத்தின் ஒன்றுபட்ட நிலையைப் பேணி பாதுகாத்தார்கள் என்பதனை பலமுறை ஜும்மா / மார்க்க பயான்களில் அறிவுறுத்தப்பட்ட விடயம்.

இக்காலத்தில் கொள்கை வேறுபாடுகளையும் இறைவனின் அருள்மொழிகளை மெய்ப்பிக்கும் விஞ்ஞான வளர்ச்சியையும் தவிர்க்கவோ ஒதுக்கித் தள்ளவோ முடியாது. இவ்விரண்டையும் அரவணைத்துத்தான் நாம் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். உலகளாவிய முஸ்லிம்களுக்கான ஓர் இமாரத் (தலைமை) ஏற்படும் வரை, பிறை / பெருநாள் குழப்பங்களை குறைந்த பட்சம் நமதூரிலாவது 'புரிந்துனர்தலின்' அடிப்படையில் தீர்த்து கொள்ள முன்வரலாம்.

இதற்காக நமதூரில் உலமாக்கள், முஹல்லா நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்தலாம். மேற்கூறிய மூன்று கூற்றில் மார்க்க, விஞ்ஞான மற்றும் தொலை நோக்கிய சிந்தனையில் எது சரியான நிரந்தர தீர்வாக அமையுமோ அதனை எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு 'பொதுப்பாதையை' புரிந்துனர்தலின் அடிப்படையில் ஏற்படுத்தி ஊர் ஒற்றுமைக்காக நம் கொள்கை கோட்பாடுகளை சற்றுத் தளர்த்தி ஒரு சமரசத்திற்கு வரும்போது தான்... நம்மில் பலவருடங்களாக தொலைந்து போன நம் பெருநாள் சந்தோசத்தை மீட்டெடுக்க முடியும். அதன் மூலம் தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரியாய் நம் சமூக ஒற்றுமையை வழியுறுத்த முடியும்.

நாம் எல்லோரும் ஒன்றாக ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடும் அந்நாளை எதிர்பார்த்தவனாக உங்களில் ஒருவனாக அதற்காக துஆ செய்பவனாக இக்கட்டுரையை முடிக்கின்றேன் !!

பின்குறிப்பு - மார்க்கமும் விஞ்ஞானமும் சம்பந்த பட்ட இவ்விடயத்தில் மார்க்க அறிஞர்களே வெவ்வேறு பாதையில் பயணிக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம். இக்கட்டுரையின் நோக்கம் இன்னாரின் கூற்று சரி தவறு என்று ஆராய்ந்து அறிவதற்கு அல்ல. இவ்விடயத்தில் ஏதாவது ஒருவழியில் நமதூரில் சமூக ஒற்றுமை ஏற்படாதா என்ற ஆதங்கத்தில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 09 November 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31325

சரியான நேரத்தில் எதிர்பார்த்த கட்டுரை..

பொருத்து இருந்து பார்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: V D SADAK THAMBY (Hetng,China) on 09 November 2013
IP: 121.*.*.* China | Comment Reference Number: 31326

---------------------------- ஆனால் அமெரிக்காவில் பிறை காணப்படாததினால் நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். ஒரு சில அரபு மக்கள் நோன்பு நோற்காமல் மறுநாள் எல்லோருடனும் ஒன்றாக பெருநாள் கொண்டாடினர். அதைப்பற்றி ஒரு சகோதரரிடம் வினவினேன். ------------------------( காப்பி & பேஸ்ட்)

மறுநாள் எல்லோருடனும் அரபு மக்கள் ஒன்றாக பெருநாள் கொண்டாடிஇருந்திருக்கலாம். அது வேருவிஷயம். ஏன் அரபு மக்கள் உங்களுடன் இணைந்து அன்று நோன்பு நோற்காமல் இருந்தனர்? அல்லது நீங்கள் ஏன் அவர்களுடன் இணைந்து நோன்பு பிடிக்காமல் இருந்திருக்ககூடாது? இங்குதான் குழப்பமே ஆரம்பம் ஆகிறது. குழப்பத்தை துவக்குபவர்கள் அரேபியர்கள்தான். ஏனெனில் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு. இங்கு நான் வசிக்கும் சீனாவிலும் இதேபோன்ற நிலைதான். அரேபியர்கள் லோக்கல் உலமாக்கள் சொல்வதை ஏற்பதில்லை. மாறாக அவர்கள் தாய் நாட்டில் எந்த நாளில் பெருநாள் கடைபிடிக்கிறார்களோ அதையே அவர்கள் வசிக்கும் நாட்டிலும் கடைபிடிப்பர்..

----------------------------------இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 'ஒருங்கிணைந்த அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, சமுதாய ஒற்றுமையை வலியுறத்த வேண்டும் என்ற நன்நோக்கில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 'சவுதி அறிவிப்பை' பின்பற்றுவது என்றும் நோன்புப் பெருநாள் விடயத்தில், அமெரிக்காவில் பிறை காணப்பட்டால் அதனை எடுத்துக்கொள்வது. காணப்படவில்லையென்றால் அண்டை (பிற) நாடுகளின் அறிவிப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்வது என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.------------------- -( காப்பி & பேஸ்ட்)

இது ஒரு Compromise & settlement. ஒரு சமூகமாக போகும் வழி. மார்க்க விதிப்படி எது சரி எது தவறு என்று தீர்மானித்து முடிவு எடுத்தமாதிரி தெரியவில்லை.

நம் ஊரில்தான் உலமாக்கள் கூடி அறிவிப்பு செய்கிறார்களே! அதை பின்பற்றி செல்லவேண்டியதுதானே . இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது? எந்த வருடத்தில் இருந்து இம்மாதிரி இரண்டு மூன்று பெருநாள் வந்திருக்கிறது என்பதை கணக்கெடுத்தாலே யார் குழப்புகிறார்கள் என்று தெளிவாக தெரிந்துவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 09 November 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31327

இப்பல்லாம் யாரும் இந்த விஷயத்துக்காக குழம்புறதெல்லாம் இல்ல. நீங்க சொல்லுற அந்த குழப்பமெல்லாம் 2006 முதல் தொடங்கி அதப்பத்தி புலம்ப வேண்டியதெல்லாம் புலம்பி முடிச்சு இப்ப அவரவர் பாதைல பயணிச்சுக்கிட்டு இருக்காங்க.

அரபிகளெல்லாம் மார்க்கத்துக்கு ஆதாரம் இல்ல. அப்படி அவங்கள பின்பற்றுறதா இருந்தா மார்க்கமே காணாம போயிடும். இறைவனின் கயிற்றைத்தான் ஒன்றாக பற்றிப்பிடிக்க வேண்டுமே தவிர்த்து ஒற்றுமையாக இருக்க இறைவனின் கையிற்றை உதாசீனப்படுத்த முடியாது.

அந்த இறைவனின் கயிறு நமக்கு சுட்டிக்காட்டுவது சூரியனைப் போன்று சந்திரனும் குறிப்பிட்ட பாதையில் கால நிர்ணயத்துடன் வலம் வருகிறது என்பதுதான். படைத்தவன் போதிப்பது போல் அறிவுடைய மக்கள் இதனை குறித்து சிந்தித்து உணர்ந்து கொள்வார்கள்.

சும்மா இருக்குற சங்க ஊதி கெடுக்காம இருந்தா போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Seyed mohamed (Baakavi) (khobar) on 09 November 2013
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31328

மிகவும் சரியான நேரத்தில் தேவை பட்ட கட்டுரை ...

நன்றிகள் ஆசிரியர் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களே ...

எதாவது ஒரு சாரர் என்று கூறுவதை விட்டு விட்டு , ஊரின் நன்மையிக்காகே ,நபி (pbuh) அவர்கள் வலியுறுத்திய ஒற்றுமய்காகே, அன் நன்னாளில் நாம் ஏன் கூடுதல் சாரார் பின்பற்றும் ஒன்றை பின்பற்ற கூடாது ?? ..

மேலே நீங்கள் குறிப்பிட கட்டுரையில் அரபியேர்கள் நோன்பு பிடிக்காமல் இருந்துவிட்டு மறு நாளில் ஒன்றாகே ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடியதெய் நாம் கவனத்திற் கொள்ளவேன்றும்...

இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமானே கேரளாவில் இந்த பிரச்னை இல்லையே .. என்ன ஒரு ஒற்றுமை ... ஊருக்கு பெருநாளைக்கு செல்லுவதா என்று நினைக்கும் போது ஆல் மனதில் ஒரு சந்தோசம் இருகிறதா என்று வினவினால் இல்லை என்றே கூறலாம் .. அப்படி ஊருக்கு போனாலும் பெருநாள் என்பது ஒரு சில நிமிடம் தொழுகை , அப்புறம் வீட்டில் வந்து உம்மாவின் குடும்பத்தார்களுடன் ஒரு சில சந்தோச நிமிடங்கள்ளே..

வாபிச்சா வீட்டிலும் சரி , அண்டை வீட்டிலும் வேறே ஒரு நாள் . அன் நன்னாளில் அவர்களை போய் காணக்கூட முடியாதே ஒரு நிலை .. இது இல்லையே பத்து வருடங்கல்கு முன் ??.. நன் பள்ளியில் படிக்கும்போது , பெருநாள் என்றால் ஒரு வாரத்திற்கு கூதுகலம்.. பின் குடும்பத்தார்கள் எல்லா வீட்டிற்கும் சென்று பெருநாள் ரூபாய் வாங்குவது , அதில் கிடைக்கும் இன்பமே தனி..

சரியாக சொன்னால் உண்மையானே நஷ்ட்ட வாளிகள் நம் சிறார்களே ... !!

இந்த நிலைமை மாற வல்ல நாயாகன் அல்லாஹுவிடம் நாம் யாவரும் பிரார்திப்போமாகே ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு பெருநாள்...ஊர் முழுக்க என வரும் காலம் கனிவதெப்போது...?
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 09 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31329

கட்டுரையாளரின் ஆதங்கம் வரிக்கு வரி புரிகிறது. என்ன செய்ய? எப்படியாவது இதற்கோர் தீர்வு வந்துவிடாதா? எனும் ஏக்கமும், தாக்கமும் மனதை அழுத்துவது உண்மை!

ஊருக்குள் ஒன்பது பெருநாள் அதுவும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு அமைப்புகள் என ஊர் ஒற்றுமை மறக்கப்பட்டு, தனித்தனி குழுக்களாகப் பிரிந்து போய்விட்டோம். ஒரே வீட்டில் சிலருக்கு நோன்பு சிலருக்கு பெருநாள். மனம் வலிக்கிறது.

சரியான வழிகாட்டிகள் இல்லாத குறையா?

அல்லது உலமாக்களுக்கிடையிலான கருத்து வேறுபாடு மற்றும் ஈகோ பிரச்சனையினாலா?

ஊர் முழுக்க ஒரே பெருநாள் இல்லாமல் இன்று கோழி வியாபாரிகள் கூட “முதலாளி அந்தாளுங்களுக்கு என்னைக்கு பெருநாள்?” எனக் கேட்டு நம்மை தலை குனியச் செய்யும் இக்கொடுமைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ...?

பெருநாள் பிறை குறித்து இதயம் சுமக்கும் இனிய நினைவுகள் ஆயிரம் இருந்தபோதிலும் இது போன்ற இதயம் கனக்கும் ஒரு சில நினைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இனி வருங்காலங்களில், எல்லோர் கண்ணுக்கும் ஒரே பிறை தென்பட அந்த வல்லோனை வேண்டி பிரார்த்திப்போமாக.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...பிறை, அது முடிந்த கதை
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 10 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31331

ஆசிரியரின் ஒற்றுமை தாகம் இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அது கானல் நீராக இருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

நபிமார்களின் வாரிசுகள் என்று போற்றப்படும் உலமாக்கள் பல அணிகளாக பிரிந்து நின்று நபி வழியை போதிக்கிறார்கள். இவர்களை பின்பற்றுபவர்களும் பல ஜமா அத்களாக பிரிந்து செயல்படுகிறார்கள்.ஒவ்வொரு தனிமனிதனும் கூட இங்கு ஒரு மார்க்க அறிஞனாக தன்னை முன்னிலைபடுத்தி பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

தமிழிலே ஒன்று சொல்வார்கள்.

"மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம். கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது?". ஆசிரியருக்கும் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தால் உலமாக்களிடம் போய் கேட்போம். ஆலிம்களே சந்தேகத்தின் ஊற்று கண்ணாக இருந்தால் என்ன செய்ய முடியும்.

சூரா பனி இஸ்ராயீல் 83 வது வசனம் அல்லாஹ் மிக அழகாக சொல்கிறான். "நபியே நீங்கள் சொல்லுங்கள்.ஒவ்வொருவரும் தன் வழியிலேயே செயல்படுகிறார்.ஆகவே, நேர் வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இரட்சகன்தான் மிக்க அறிந்தவன்!"

பிறை விஷயம் முடிவுக்கு வந்து விட்டது. ஒரு இறை, ஒரு மறை, ஒரு நபி என்பதோடு நிறுத்திக் கொண்டு, ஒரு பிறை என்ற வாதம் இப்போது எடுபடாது. இது அகீதா சம்பந்தப்பட்டது அல்ல. உலமாக்கள் கூடிப் பேசி மக்களுக்கு இசைவான தீர்ப்பை வழங்கலாம். அவர்கள் பிரிந்து நிற்கும் வரை, பிறை ஒரு குறை இல்லை, பெரிதுபடுத்த வேண்டாம். எல்லோரும் இந்த விஷயத்தை ஜீரணித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்து விட்டோம். ஆசிரியர் அவர்களும் அந்த வட்டத்துக்குள் வந்து அமைதி அடையுங்கள்.

"கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாள் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்?".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Unity should be reached without compromising in religion
posted by: Abdul Wahid S. (Kayalpattinam) on 10 November 2013
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31332

25 வருடங்களுக்கு முன்பு வரை 180 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள கொழும்புவிலிருந்து (இலங்கை வானொலியில்) பிறை பார்த்த தகவல் அறிவிக்கப்பட்டதும் அதை அடிப்படையாக வைத்து நோன்பை ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் அன்றைய நமதூர் ஆலிம் பெருந்தகைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய பெரும்பாலான நமதூர் ஆலிம்கள் 140 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கேரளா மாநிலத்திலிருந்து வருகின்ற பிறை பார்த்த தகவல்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்களாம். அதே நேரத்தில் தலைமை காஜி (அரசு ஊழியர்) சொன்னால், சிவகாசி காலண்டர் பிரகாரம் 1500 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மலேகாவோன் - மகாராஷ்டிராவிலிருந்து பிறை பார்த்ததாக வந்த தகவல்களை ஏற்றுகொள்வார்களாம்.

என்ன முரண்பாடு ?

கண்ணால் பார்த்தே ஆகவேண்டும் என்ற கொள்கை சரியோ தவறோ. ஆனால் எவ்வளவு தூரத்திலிருந்து வருகின்ற (கண்ணால் பார்த்த) பிறை தகவலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு விதி முறை வேண்டும். அது கூட இல்லாமல் தங்கள் தேவைகேற்ப / ஆளுகேற்ப அப்பபோ தூரத்தை கூட்டுவது அல்லது குறைப்பது மார்கத்தில் compromise பண்ணுவதற்கு சமம்.

ஒற்றுமையை என்ற பெயரில் மார்கத்தில் compromise பண்ணுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

---------------- END ----------------

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) on 10 November 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31333

ஒற்றுமைக்கான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.

மக்கீ நூஹுத்தம்பி காக்காவும் ஹூஸைன் நூருத்தீனும் சொல்வது போல மூன்று பெரு நாள் என்பது ஊருக்கு இன்று பழகிப்போயிருக்கலாம்.
ஆனால் தனி மனிதர்களின் மகிழ்ச்சி என்பது உடையத்தான் செய்கின்றது என்பதை மறுக்க இயலாது.

பிறை பிரச்சினை என்பது குறிப்பிட்ட மஸ்அலாவைப் புரிவதில் உள்ள வேறுபாடுகள்தானே தவிர அந்த வேறுபாடுகள் வழிகேடு இல்லை என்பதை தொடர்புடைய அனைவரும் ஏற்க வேண்டும்.

இதிலிருந்துதான் தீர்விற்கான முதல் புள்ளி தொடங்க முடியும்.

இஸ்லாம் என்பது உலகளாவிய ஒற்றை குடை நெறியாகும். அத்துடன் அது இயற்கையான நெறியும் கூட. அது பேரண்ட விதிகளுக்கு ஒருபோதும் முரண்படாது. எனவே பிறை பார்த்தல் தொடர்பான வழிபாடுகளும், கணக்கீடுகளும் ஹிஜ்ரா ஆண்டும் ஒருபோதும் குழப்பத்தை தரக்கூடியதாகவும் முரண்பாடுடையதாகவும் இருக்க முடியாது.

மூன்று பெருநாள் என்பது நம் புரிதலிலும் பின்பற்றுதலிலும் உள்ள குறைபாடுதான் என்பதை உணரும்போது இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தீர்வு வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பிறையில் Otrumai
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 10 November 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31336

கட்டுரை ஆசிரியரின் எதிர்பார்ப்பு நியாயமானதே!

காரணம் என்ன ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என அரபியர்கள் அன்று அமைதி காத்து மறுநாள் அமெரிக்காவில் மற்றவர்களுடன் கொண்டாடினார்கள். ஆக குழப்பத்தை விரும்பவில்லை. இன்று அப்படியா?

முப்பத்தைந்து நாற்பது வருடங்களுக்கு முன்னாள் நோன்புகாலத்தில் சஹர் முடிவு, சுப்ஹு நேரத்தில் இப்படிதான் ஒற்றுமை இல்லாமால் ஒரே குழப்பம் நிலவியது. இறுதியில் உலமாக்கள் கூடி விவாதித்து ஒன்று பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ், குழப்பம் தீர்ந்தது. ஆனால் இன்று பெருந்திரளான உலமாக்கள் கூற்றை இவர்கள் சொல்லி நாம் என்ன கேட்பது என்ற ரீதியில் மற்றவர்கள் செயல் பட்டால் கட்டுரை ஆசிரியரின் எதிர்பார்ப்பு கானல் நீரே!

நாம் விரும்பி படிக்கும் இந்த வளைய தலமே அங்கு இன்று பிறை ஆரம்பம், இங்கு இன்று பிறை ஆரம்பம் என தனியாக செய்தி வெளியிட்டு விட்டு சவுதியில் பிறை அறிவிப்பை வெளியிடும்போது வேறெங்கோ ஒருநாள் முன் எடுத்த பிறையின் படத்தையும் போட்டு அங்கு நேற்று தென்பட்டது சவுதியில் இன்று என்ற தொனியில் செய்தி வெளியிடுகிறது இது தேவையா? எங்கிருந்து ஒற்றுமை ஏற்பட?

வல்ல நாயனை வேண்டுவோம் கட்டுரை ஆசிரியரின் நியாமான ஆதங்கம் நிறைவேற - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அடிப்படையில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர்.!!!
posted by: s.s.md meerasahib (TVM) on 10 November 2013
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31338

அஸ்ஸலாமு அலைக்கும். கட்டுரை ஆசிரியரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. இந்த கட்டுரை. வாழ்த்துக்கள். அதே...... சமயம். பிறையில் மட்டும்தான் ஒற்றுமை தேவை என்று என்னுவது தவறு. ஏனெனில் பிள்ளையின் தொட்டிலை ஆட்டிவிட்டுக்கொண்டு......... பிள்ளையை கிள்ளியும் விடுவது முறையான செயலாகாது. ஆகையால்........ ஒற்றுமையை வலியுறுத்தி எல்லாவிசயத்திலும் ஊருடன். ஆசிரியர் கைகொர்க்கனும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 10 November 2013
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31339

தனிப்பட்ட மனுஷங்க இங்க என்ன தங்களுடைய சொந்த கருத்தையா சொல்லுறாங்க, இல்ல MGR பாடுனாரு, தந்தை பெரியார் சொன்னாருன்னு சொல்லுறோமா, இல்ல வேற ஏதாவது தமிழ் பழமொழிய குறிப்பிட்டு காட்டுறமா, இல்லன்னா படச்சவண்ட வேதத்துல இருந்து தெளிவான வசனத்த முன் வைக்கிறோமா?

அடுத்த ஆளு, இது சரியான நேரத்துல வந்த கட்டுரையாம். அட போங்க சார், அதான் சொல்லுரோம்ல, எல்லாரும் குழம்பி முடிச்சி இப்பத்தான் அவங்க அவங்க பாதைல போய்க்கிட்டு இருக்காங்கன்னு.

சும்மா சும்மா வம்புக்கு இழுக்காம உங்களுக்கு தெரிஞ்ச வகைல மார்க்கத்த பின்பற்றிட்டு போங்க. உங்களுக்கு ரெண்டு கூலின்னா அல்லாஹ் எங்களுக்கு ஒரு கூலிய தரமாட்டானா. அவ்வளவுதான் மேட்டர். உங்க கட்டைக்கு நீங்க சேத்துக்குங்க, எங்க கட்டைக்கு நாங்க பாத்துக்குறோம். ஆனா என்ன, குல்லு ஹிஜ்பின் பிமாலதைஹீம் பரிஹூன் என்கிறதின் அடிப்படையில் நாங்கள் சரி என்று நினைக்கும் கருத்தை மற்றவர்களுக்கு எத்தி வச்சுக்கிட்டுதான் இருப்போம்.

எப்படி மற்ற மார்க்க விஷயங்கள்ளயும் எல்லா காலங்கள்ளயும் வித்தியாசம் இருந்தும் அவங்க அவங்க பொழப்ப பாத்துக்கிட்டு இருக்காங்களோ, அத மாதிரி இதுலயும் இருந்துட்டோம்னா எல்லாரும் சந்தோஷமா இருந்துட்டு போயிறலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) on 10 November 2013
IP: 5.*.*.* | Comment Reference Number: 31341

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது அருமை சகோதரர் .அவர்களின் இக்கட்டுரையின்....கருத்து கணிப்பும் ....எழுத்து வடிவமும் ....அவர்களின் ஆதங்கமும் ....முற்றினும் நியாயமானதே .....

இந்த கட்டுரையின் முழுமையான கருத்தை நாம் யாவர்களும் புரிந்து கொண்டாலே போதும் .நிச்சயமாக பிறை கணக்கை சரியான முறையில் கணித்து நாம் அதன் படிக்கு நமது ஊரில் இரு பெருநாளையும் ஒரே நாளில் நாம் அனைவர்களும் நம் குடும்பத்தோடு ரொம்பவும் மனமகிழ்சியோடு சந்தோசமாக கொண்டாடலாம் ....

நமது கட்டுரையாளர் அவர்களின் வார்த்தை போல் நமது அருமை செல்வங்களின் ...இந்த பேச்சு படி ...டே ....நேற்று என் மாமாவுக்கு பெரு நாள் ......இன்றைக்கு என் வாப்பாவுக்கு பெரு நாள் .... நாளைக்கு எனக்கு ,, என் உம்மாவுக்கு ,,என் தம்பி , தங்கச்சிக்கும் பெருநாள் ....என்று அவன் உள் அருத்தம் புரியாமல் அவன் மனதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் '' தமசாகவே '' சக நண்பனிடம் கூறுவான்....அப்போது சக நண்பர்கள் கேலியாகவே என்னப்பா உனக்கு மூன்று பெருநாளா ?? உங்கள் வீட்டில் மூன்று நாளும் பிரியாணியா ??என்று கேலியாக சொல்லுவதையும் நாம் காதால் கேட்டு உள்ளோம் .....

இப்படி நமது ஊரின் ஒற்றுமை சீர் குழைந்து..... போய் ''இல்லாமையை'' நாம் நினைத்து என்னதான் சொல்லுவது ?? தாங்கள் கூறியது போன்று தான் நமது ஊரின் மற்ற மததித்னர்களும் நம்மை பார்த்து பேசுவதும் தெரிகிறது ....நமது நிலைமையை நாம் எண்ணி வருத்த படுவதை தவிர வேறு வழி தான் என்னா............

வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு நமது ஊரில் மூன்று நாள் பெருநாள் என்கிற போது ...ஒரு எதிர் பார்ப்புயுடன் தைரியமாக எதாவது ஒரு பெருநாளை நம் ஊரில் நம் மக்களுடன் ஒன்றாகவே கொண்டாடலாம் என்கிற தைரியத்துடன் புறப்பட்டு வரலாம் .........நமக்கு இது ஒரு வரபிரசாதம் அல்லவா ..........தமாசு .....

நமது ஊரின் மரியாதைக்குரிய ஆலிம்களும் .../...மரியாதைக்குரிய பெரியாவர்களும் ..../... ஊரின் அனைத்து ஜமாத்தினர்களும் .....ஓன்று சேர்ந்து உக்காந்து பேசினால் தான் இதற்க்கு ஒரு நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்பதும் நமது கணிப்பு ............அது நாடக்குமா ??

நமது ஊரில் முன்பு எல்லாம் ஒரு ஒற்றுமை / அரவணைப்பு / ஊரின் நலன் கருதி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நலமாகவே இருக்கும் ,, அப்படி பட்ட நமது ஊர் இப்போது தேவைக்கு இல்லாமல் தற்போது எங்கோ போய் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உண்மை ...........இதை நாம் சரி செய்வது எப்படி இதான் நம் யாவர்களின் ஒட்டு மொத்தமான கவலையுடன் கலந்த ஒரு ....எதிர்பார்ப்பு.............

>>>>>அருமை சகோதரர் அவர்களே தங்களின் இந்த கட்டுரையை யாம் வரவேற்கிறேன் ..........தொடரட்டும் தாங்களின் இது போன்ற நல்ல கட்டுரைகள் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by: yahya.mohideen (dubai) on 10 November 2013
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31346

ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற நபிமொழிக்கேற்ப, நமதூரின் இருபெரும் மதரஸாக்களின் ஆலிம்கள் கூடி விவாதித்து உம்மத்துகளுக்கு அறிவிக்கும் முடிவை மனதார ஏற்போம், வழிபடுவோம்.

நபி மூசா (அலை) அவர்களை நபியென ஏற்றும், கேள்விக்குமேல் பல கேள்விகள் கேட்டும், விதண்டாவாதம் செய்தும், சீரழிந்து சின்னாபின்னமான கூட்டத்தினர் போல் ஆகாமல், ஒட்டுமொத்தமாக ஆலிம்களின் முடிவுக்கு இணங்கினால், அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் நிச்சயம் நமக்கு உண்டு.

ஒரு சமுதாயத்தை நேர்வழியில் அழைத்து செல்லும் கடமை ஆலிம்களுக்கு உள்ளது. அந்த ஆலிம்களை மதித்து அவர்களின் கூற்றை ஏற்றால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என நம்புகிறோம்.

ஆனால், அந்த ஆலிம்கள், சமூகத்தில் இருக்கிற குறைபாடுகளை, நன்முறையில் களைய முயற்சி செய்தல் அவசியம். நபிமார்களில் யாருமே, அவரவர் உம்மத்துகளை நேர்வழியில் அழைப்பதற்கு மேற்கண்ட யுக்தியை தான் கையாண்டார்களே தவிர, அவர்களையும், அவர்களின் செயல்களையும் கேலியும், கிண்டலும் சக நபிமார்களை இழித்தும் பழித்தும் பேசியதாக நாம் படிக்கவில்லை..

நாம் அறிந்தவரையில், 1989 அல்லது 1990ம் ஆண்டுமுதல் தான் நமதூரில் முதன்முதலாக இரு பெருநாட்கள் என அறிவிக்கப்பட்டது. 1985களில் நமதூருக்கு புதிதாக அறிமுகமான ஒரு கொள்கை சாராரின் 'பரிணாம வளர்ச்சியின்' ஒரு பகுதிதான் இரு பெருநாட்கள் உருவான கதை. ஒரு புதிய கொள்கையை அறிமுகம் செய்தவர், அவர்கூற்றுப்படி, உம்மத்துகள் மத்தியில் இன்னென்ன வழிகேடுகள் நிறைந்துள்ளன, இவற்றை மாற்ற முயற்சி மேற்கொள்வோம் வாருங்கள் என்று சக ஆலிம்களையும் அணுகியிருந்தால் உண்மையிலேயே அவர் போற்றப்படவேண்டியவர். மாறாக சக ஆலிம்களை, இழித்தும் பழித்தும், நிந்தித்தும், பேசினால், இது தான் நபிமார்கள் செய்தஅழைப்புப் பணியா?

உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதை எற்றுகொல்ள்ளலாம் என்ற நிலையில் இருப்பவர்களிடம் - 'உங்களுக்கு பிறை தேடவேண்டும்' என்ற பொறுப்பும் கடமையும் இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.

வானவியலை முறையாக கற்றுத்தேர்ந்த ஒருமார்க்க அறிஞர் மர்ஹூம் நஹ்வி செய்யிது நூஹு ஆலிம் அவர்கள்.

நமதூரில் நெடுங்காலமாக இருந்த பாங்கு நேர பிரச்சினைக்கு ஒரு முயற்சி எடுத்து தீர்வு கண்டது இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF). சற்றொப்ப 30 வருடங்களுக்கு முன், நமதூரின் அணைத்து ஆலிம்களையும் அழைத்து மஜ்லிசுல் புஹாரிஷரீப் சபையில் அமர்த்தி, விவாதித்து மேற்கூறிய ஆலிம் அவர்களின் கணக்கீட்டுப்படி நமதூரின் தொழுகை நேரங்களை முறைப்படுதிக்கொள்வது என்று ஏக மனதாக முடிவு செய்தனர்.

இம்முடிவை, நமதூரின் இருபெரும் கல்விக்கேந்திரங்களான ஜாவியா மற்றும் மஹ்ளரா நிர்வாகிகள் சரியென ஒப்புதல் அளித்தனர்.

இக்கணக்கீட்டு முறையே இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. இதுபோன்றே இன்றைய பிறை கணக்கீடு முறையையும், முறையாக அணுகினால் இன்ஷா அல்லாஹ் இதற்கும் ஒரு தீர்வு பிறக்கும்.

ஆலிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் என்றென்றைக்கும் உண்டு. ஏன்? இமாம்கள் மத்தியிலும்இருந்தன, இன்னும் சொல்லப்போனால் நபிமார்கள் மத்தியிலும் இருந்தன. இக்கருத்து வேறுபாடுகளை அல்லாஹ் குரானிலும் பதிவு செய்துள்ளான்.

நாம் விரும்புவதெல்லாம், நம் ஊரின் சங்கைக்குரிய ஆலிம்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவர்களின் கருத்துகளை குரான் மற்றும் ஹதீத் அடிப்படையில் முன்வைத்து ஒரு தீர்க்கமான முடிவை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பதுதான். மாறாக, வெவ்வேறு திசைகளில் தங்களின் முகங்களை திருப்பிக்கொண்டு உயிரனைய ஷரியத்தின் விசயங்களை சொல்லும் முறையில்தான் நாம் மாற்றத்தை விரும்புகிறோம்

ஒவ்வொரு பிரச்சினைக்கும் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி தீர்வு காண்பது அறிவுடைமை. அதுபோல்தான் இப்பிரச்னைக்கும் தீர்வு எட்டப்படவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

நம்முடைய ஆசையும், எதிர்பார்ப்பும் ஆலிம்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதுதான். எல்லா ஆலிம்களும் ஒன்றுகூடி விவாதித்து, தேவையெனில், அறிவியல் துறைசார்ந்த நிபுணர்களையும் அழைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதியில், அறிவியல் கூற்றுப்படி நம்முடைய கணக்கீட்டு முறையை செயல்படுத்துவோம், அல்லது இக்கணக்கீடுமுறை குரான், ஹதீத் ஒளியில் நின்றும் வேறுபடுகிறது. எனவே, இந்தந்த அடிப்படையில் இன்றைக்கு நோன்பின் முதல் நாள் அல்லது பெருநாள் என்று சமூகத்திற்கு அறிவிக்கும் முறையைதான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

மொத்தத்தில் அணைத்து ஆலிம்களும் ஒன்றுபட்டு அறிவிக்கும் முடிவே நம் விருப்பமும், எதிர்பார்ப்பும். இவ்விருப்பமும், எதிர்பார்ப்பும் நடக்காது என்ற அவநம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை. நிச்சயம் நடக்கும் என்ற மேலென்ணமே ஓங்குகிறது. இதற்கு, மேற்கூறப்பட்ட YUF முயற்சியே சான்று.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எல்லா விஷயங்களிலும் ஒன்றுபடுத்துவானாக ஆமீன்

Best regards,
Yahya Mohiadeen
+97150 5853888


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. EGO
posted by: Abu Rushda (Dubai) on 10 November 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31348

கட்டுரை ஆசிரியரின் ஆதங்கம் அனேக வெளியூர் / வெளிநாட்டு காயலர்களின் உள்ள பிரதிபலிப்புதான். இப்பல்லாம் பெருநாளுக்கு ஊர் போவதை ஸ்கிப் பண்ணும் காயளர்கள் அதிகம். பிரச்சனையின் முதல் புள்ளி ஈகோ, இங்கு இஸ்லாம் secondaryதான். இவன் சொல்லி நான் என்ன கேட்பது, எப்படி அடுத்தவன் அறிவிச்ச தேதிக்கு நாம தேதி தவறாக கூட ஒன்றாக வராமல் செய்வது என்று நெறைய பேர் ரூம் போட்டு யோசிகிறங்கள். இதற்கு நிறைய ஆலிம்களும் துணை என்பதுதான் கேவலமான உண்மை.

நான் இந்த மூன்று கருத்து உள்ளவர்களுடனும் பேசயிருகிறேன். இதில் எல்லா பார்ட்டியும் தங்கள் கருத்து மட்டும் தான் சரி, மற்றது outright தவறு / அவர்கள் வழிகேடர்கள் என்றுதான் பேசுகின்றார்கள். இவர்களுக்கு அந்த ஆதொரிட்டி யார் கொடுத்தது என்று தெர்யா வில்லை.

கட்டுரை ஆசிரயர் சொல்லும் ஓற்றுமை வருவதற்கு முதலில் மக்களுக்கு சுயமாக சிந்திக்கும் பக்குவம், தன்னை சுய பரிசோதனை செயும் அறிவு வர வேண்டும். நமக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் மாற்று கருத்துகளை மதிக்கும், அதை சொல்பவனை நண்பனாக உறவினராக பார்க்கும் பக்குவம் வர வேண்டும். துரதிஷ்டவசமாக காயலில் அந்த பக்குவம் வர ரெம்ப காலம் ஆகும்.

அதுவரை, சமுதாய ஒற்றுமையை விரும்புவர்கள் இப்போ உள்ள மூணு பெருநாள் முப்பதாக ஆகாமல் இருக்க பிராத்திப்பது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by: Shahul Hameed (Abudhabi) on 10 November 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31350

நிதர்சன மான உண்மை,30 வருடங்களுக்கு முன்பு வரை நாம் ஒற்றுமையாக தான் இருந்தோம் ,அப்பொழுதும் பல்வேறு கொள்கைகள் இருக்கத்தான் செய்தது .ஆனால் இன்று ஒரே கொள்கைகளில் இருப்பவர்கள் மூன்று பெருநாள் கொண்டாடுகிறார்கள் .ஒரு சிறிய யோசனை ,இவர்கள் ஒன்றானால் போதும் நாம் அனைவரும் சந்தோசமாக ஒரே பெருநாள் கொண்டாடலாம் .

சிவகாசி காலெண்டரை பின்பற்று வதருக்கு அந்த உண்மையான உலமாக்கள் இன்டர்நெட்டில் மேலோட்ட இல்மை படித்தவர்கள் இல்லை .எங்கள் பார்வையில் உங்களை விட அறிவால்லும் இறைபக்தியால்லும மேலானவர்கள் ,இறுதி முடிவை கலிமாவாக ஆக்கி கொண்டவர்கள் ,ஆனால் நம் நிலை ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 11 November 2013
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31353

ஹா ஹா. தீர்வை சொல்லுகிறார்கள். இரண்டு கல்லூரிகளில் உள்ள ஆலிம்களை கேட்க வேண்டுமாம். முதலில் இந்த இரண்டு கல்லூரிகளில் உள்ள ஆலிம்களுக்குள் ஒற்றுமை உள்ளதா, அந்த இரண்டு வழிகளையும் பின்பற்றும் மக்கள் எல்லா விஷயத்திலும் ஒன்று பட்டுத்தான் நிற்கிறார்களா, அதை முதலில் தெளிவுபடுத்தி விட்டு இந்த விஷயத்தில் தீர்வு காண அவர்களை அணுகுங்கள்.

அடுத்து, அப்படியே அவர்களை அணுகுவதாக முடிவெடுத்தாலும், மாலேகாவுன் பிறை விஷயம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறதே. அது மட்டுமல்லாமல் முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட ஜாவியா பிறை கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளில் நீங்கள் சொல்லும் ஆலிம்களில் ஒருவர் "ஆமா ஹதீதின் படி கணக்கு என்பது இருக்கத்தான் செய்கிறது, பின்பற்றுபவர்கள் பின்பற்றுங்கள், இல்லை என்றால் விட்டு விடுங்கள்" என்று சொன்னது உதைக்கிறதே.

இப்ப சொல்லுங்க முதல்ல நீங்க சொல்லுற ஆலிம்குரவர் யார். அவருக்கு என்ன அடையாளம். பின்னர் இந்த ஆலிம்களிடம் சென்று பேசுவதைப்பற்றி நாம் சிந்திப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள்
posted by: yahya mohiadeen (dubai) on 11 November 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31358

ஆலிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அரபி மொழியை தாய்மொழியாகக் கொண்ட அருமை சஹாபாக்கள் மத்தியிலும், இறை வசனங்கள் அருளப்பட்ட போது வெவ்வேறு கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. உதாரணத்திற்கு,

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ என்ற அத்தியாயம் அருளப்பட்டபோதும், الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

என்ற வசனம் அருளப்பட்டபோதும் வேறுபட்ட கருத்துகள் வெளிவந்தன. அதுபோல்தான், ஒரு ஆயத்தை, அல்லது, ஒரு ஹதீதை ஆய்வு செய்யும் உலமாக்கள், பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றி கருத்து வெளியிடுவர். இதில் சில கருத்து வேறுபாடுகள் இருக்குமே தவிர, கருத்து முரண்பாடுகள் ஒருகாலும் இருக்காது. இவ்விரண்டு மதரசாக்களில் உள்ள உலமாக்கள் பிறை விசயங்களில் ஒன்றுபட்டு செயல்படும்போது, அவர்களை பின்பற்றுவதில் தவறில்லை என்கிறோம்.

அசர் தொழுகை அல்லது மக்ரிப் தொழுகை இமாமத் முடிந்த கையோடு முசல்லாவை விட்டு எழாமலே "எங்களுக்கு வந்த தகவல் படி இன்று நோன்பு அல்லது பெருநாள்" என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும், பிறை பார்க்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஆலிம்களை பின்பற்றுமாறு நாம் இங்கு பேசவில்லை.

குழுவாக அமர்ந்து, பெறப்பட்ட பல்வேறு தகவல்களை குர் ஆன் மற்றும் ஹதீது ஒளியில் ஆராய்ந்து, ஒற்றுமையுடன் ஒரு முடிவை மக்களுக்கு அறிவிக்கிறார்களே, இம்முறையை பாராட்டுகிறோம். இவர்களைதான் பின்பற்ற சொல்கிறோம்.

ஒரு ஆலிமை பின்பற்றுவதற்கு தகுதியானவர்தான் என்பதற்கு ஒரு சிறிய அளவுகோல் - (1) அல்லாஹ்வுடைய வாஜிபான, ஜாயிசான, முஸ்தஹிலான ஷிபதுகளை நம்புவது (2) முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள்மேல் உயரிய எண்ணம் வைப்பது. இவ்விரண்டு தன்மைகளும் ஒருஆலிமிடம் இருந்தால் அவர் பின்பற்ற தகுதியானவர் என்று நாம் நம்புகிறோம்.

ஆலிம்களுடைய இஸ்ஸத் ஏன் சமூகத்தில் குறைந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விரிவஞ்சி விடுகிறோம்.

ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற நபிமொழியை நம்பும் நாம், அவர்களை பின்பற்ற தயங்குவது ஏனோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by: சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) on 11 November 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 31362

“ நாம் அறிந்தவரையில், 1989 அல்லது 1990ம் ஆண்டுமுதல் தான் நமதூரில் முதன்முதலாக இரு பெருநாட்கள் என அறிவிக்கப்பட்டது.

1985களில் நமதூருக்கு புதிதாக அறிமுகமான ஒரு கொள்கை சாராரின் 'பரிணாம வளர்ச்சியின்' ஒரு பகுதிதான் இரு பெருநாட்கள் உருவான கதை. “ ---------- C&P ( yahya mohiadeen ,dubai )

முப்பது வருடங்களுக்கு முன்னர் எந்த கொள்கைப்பிளவும் சச்சரவும் இல்லாத கால கட்டம்தானே ? ஊரெல்லாம் ஒரே கொள்கையில்தானே இருந்தது. ஏன் அப்போது வெவ்வேறு பாங்குகள் ஊரில் நடைமுறையில் இருந்தது ?

மேலும் நபி ( ஸல் ) அவர்கள் ஒரு நாளில் கதிரவனின் உதயம் , மறைவு , உச்சி , நிழல் போன்ற அம்சங்களை நேரடியாக பார்த்துதானே தொழுகைக்கான நேரங்களை கணக்கிட்டதாக ஹதீஸ்களில் அறிய முடிகின்றது.

நாம் ஏன் கடிகாரத்தையும் , சூரியனின் ஒரு வருட ஓட்டத்தையும் கணக்கிட்டு தொழுகை நேரங்களை தீர்மானிக்கின்றோம்?

மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள்தான் மாதப்பிறையின் தோற்றத்தை துல்லியமான அறிவியல்பூர்வமான கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடுவதற்கும் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. வேற்றுமையில் : :.ஒட்ற்றுமை
posted by: A.Lukman (chennai) on 11 November 2013
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31364

வேற்றுமையில் : :.ஒட்ற்றுமை

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று நாம் நம் சமுதாயத்தில் பல்வேறு கருத்துக்களை கூறிக்கொண்டு பல்வேறு பட்டவர்களாக பிருண்டு கிடக்கின்றோம். அதனால் நம் சக்தி என்ன என்பதை நாமே அறியாமல் இருக்கின்றொம் . கருத்து ஒற்றுமை வுள்ள பிரச்சனைகளில் கூட நம் வுனர்வுகளை ஒற்றுமை இல்லாமல் சமுதாய நலன் பார்க்காமல் தங்கள் சார்ந்த எ அமைப்பின் நலன் கருதி தனிதநியகதா வெளிப்படுத்துகிறோ அதற்கு சமிபத்திய வுதாரணம் , நம் வுயிரிலும் மேலான நபிகள் நாயகம் அவர்களை விமர்சனம் செய்தவனுக்கு எதிராக மாநில அளவிலும் , வூரிலும் தனி தனியாகத்தான் போராட்டங்களை நடத்தினோம்.

இந்த நிலை மாற வேண்டும். இன்று நம் சமுதாயத்தில் பல் வேறு நோக்கங்களுக்காக பல அமைப்புகளை நாம் ஏற்படுத்துகிறோம். இனி இந்த அமைப்புக்களை சமுதாய நலன் கருது ஒட்ற்றுமை வுள்ள பிரச்சனைகளை ஒட்ட்ருமையுடன் செயல்பட வைக்ககூடிய பொது அமைப்பு ஒன்று தேவை. பொதுநல ஆர்வலர்கள் சிந்திக்குமாறு வேன்றுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. This is sheer hipociscy
posted by: Abdul Wahid .S (Kayalpttinam) on 11 November 2013
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31365

பிறை விஷயமான எனது கருத்துப் பதிவிலுள்ள (எதார்த்தத்தை (அன்றும் இன்றும்) ஏற்றுக் கொள்பவர்கள் சிலர் இருக்கலாம், மறுப்பவர்கள் பலரிருக்கலாம். ஆனால் இன்று வரை தமிழகத்திலுள்ள எந்த ஆலிமும் மாலேகாவோன் பிறையை இதுவரை குர்-ஆன் , ஹதீஸ்களைக் கொண்டு ஞாயப்படுத்த முடியவில்லை. மௌனம் சாதிப்பதேன்?

அது போகட்டும் சிவகாசி காலண்டருக்குப் பின் மறைந்திருக்கும் உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் பார்வைக்கு உட்படுத்தபட்டபின் இந்த காலண்டர் உருவாகிறது. இந்துக்களின் கணக்கிடுதல் முறையை ஹிஜ்ரி காலண்டருடன் ஒப்பிடுகையில் கிட்டத் தட்ட /ஓரளவு சரியாக வருகிறது. உதாரணத்திற்கு அவர்களின் அமாவாசை தினம் தான் நமக்கு சூரியன் மறைக்கப் படும் நாளாக இருக்கிறது. இந்துக்களின் கனகிடுதல் முறைப்படி தலைப்பிறை, பௌர்ணமி அம்மாவாசை, ஆகியவற்றை சரியாக அச்சிடும் நீங்கள் முஸ்லிம்களின் கணக்கில் மட்டும் மூன்றாம் பிறையை ஏன் முதல் பிறையாக அச்சிடுகிறீர்கள் என்று அச்சிடுவோரிடம் வினவியதில் அவர்கள் அளித்த பதில் கேள்வி கேட்டவரை அதிர்ச்சியடையச் செய்ததாம்.

"உங்க பாய்மார்கள்தான் எங்களை இவ்வாறு அச்சிடும்படி பணிக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் முதல் பிறையை 30ம் பிறையாக அச்சிட்டு தர நாங்கள் தயார் " என்பதுதான் அவர்களின் பதில்.

யார் இந்த பாய்மார்கள் என்று துருவி விசாரிக்கும்போது அரசு ஊழியராக செயல்பாடு தலைமை காஜியார்தான்.

(இந்த விசயத்தை சுமார் 10 வருடங்களுக்கு முன் துருவி ஆராய்ந்தவர் அந்- நஜாத் ஆசிரியர் பெரியவர் அபு-அப்தில்லாஹ்)

பிறையை கண்ணால் பார்த்துதான் நோன்பு நோற்கவேண்டும், பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற சுன்னது வால் ஜமாஅத் கொள்கையை பின்பற்றுபவர்தான் இந்த தலைமை காஜி. அவ்வாறிருக்க இந்த மாதம் எந்நாளில் முடிகிறது, அடுத்த மாதம் எப்பொழுது ஆரம்பிக்கிறது என்று இவர்களுக்கு தெரியாத நிலையில் எவ்வாறு ஒரு வருடத்திற்கான காலண்டரை இவர்கள் தயாரிக்கிறார்கள்?

இவரின் அறிவுரயின்படிதான் அரசு பெருநாள் விடுமுறைகளை அறிவிக்கிறது. இஸ்லாமிய புனித நாட்களை முன்கூட்டிய அரசுக்கு அறிவிக்க இவர்க்கு என்ன தகுதி இருக்கிறது ?

This is a sheer hypocrisy. தான் நம்பாத ஒரு கொள்கை கோட்பாட்டை பிறர் மீது திணிக்கும் செயல். அதாவது தனக்கே தெரியாது நோன்பை எந்நாளில் ஆரம்பிக்க வேண்டும் எந்தநாளில் முடிக்கவேண்டும் என்று . இந்நாளில்தான் பெருநாள் என்று அரசுக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு. அந்நாள் வரும்போது நாங்கள் பிறை பார்கவில்லை ஆதலால் பெருநாள் ஒரு நாளைக்கு தள்ளிப் போடுகிறோம் என்று இந்த காஜி அரசுக்கு தெரிவிக்க முடியாது. அடுத்த நிமிடமே இவருடைய வேலை காலியாகிவிடும். அதனால்தான் என்னவோ சிவகாசி காலண்டர் படி பெருநாள் விடுமுறை தவறாமல் கொண்டு வரப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பிறை கணக்கீடு தொடர்பாக
posted by: yahya mohiadeen (dubai) on 11 November 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31366

"முப்பது வருடங்களுக்கு முன்னர் எந்த கொள்கைப்பிளவும் சச்சரவும் இல்லாத கால கட்டம்தானே ? ஊரெல்லாம் ஒரே கொள்கையில்தானே இருந்தது. ஏன் அப்போது வெவ்வேறு பாங்குகள் ஊரில் நடைமுறையில் இருந்தது ?"

உண்மைதான் - அந்நாட்களில் இதுபோன்ற நேரப்பிரச்சனைகள் இருந்தன - இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியாமல் ஒரு தீர்வை எட்ட காரணமாய் இருந்தது.

ஆனால், இன்றைய பிரச்சனை அவ்வாறு இல்லையே. ஒவ்வொரு இயக்கத்தினரும், அரசியல் அமைப்பினரும் பிறை பற்றி கருத்து கூறி வெவ்வேறு திசைகளில் பயனப்படவே விரும்புகின்றனர். மேலும், ஊடகங்களும் அவர்களின் பங்களிப்பை 'மிகச்சிறப்பாக' செய்கின்றனர்.

ஒற்றுமையாய் ஒரே நாளில் நோன்பு நோற்பதற்கும், ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கும் விரும்புகின்றவர்கள், தத்தமது தலைப்பாகைகளை கொஞ்சம் கழட்டி வைத்துவிட்டு ஒரு பொதுத்தளத்திற்கு வர விரும்புகிறோம். அப்படி வரும் பட்சத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் ஆரோக்கியமான முறையில் நடைபெறும். ஒவ்வொரு ஆலிமும் சக ஆலிம்களை மதிக்கும் நாகரிக தன்மை வெளிப்படும். நிறைவாக, ஒரு சரியான தீர்வு கிடைக்கும்.

நமதூர் ஆலிம்கள் அனைவரையும் அழைத்து இவ்விஷயத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் முயற்சியை இன்ஷா அல்லா நாம் மேற்கொள்ள இருக்கிறோம். இதில் அல்லாஹ்வின் உதவியையும், வெற்றியையும் நாம் ஆதரவு வைக்கிறோம். உங்களின் மேலான ஆலோசனைகளையும் நாம் எதிர்பார்க்கிறோம்

ஒருவேளை, இம்முயற்சியை வேறு யாரும் செய்வதாக இருந்தாலும், நம்மாலான உதவியை இன்ஷா அல்லாஹ் செய்ய இருக்கிறோம்.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. விதவிதமான பிறை கணக்கு பாருங்கள்.
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 11 November 2013
IP: 119.*.*.* China | Comment Reference Number: 31371

காலண்டர்களில்தான் எத்துனை விதம் பாருங்கள்:-

காயல்பட்டணத்தில் (தமிழ்நாட்டில்) முக்கிய பிரிவுக்கு 6.11.2013 தேதி முஹர்ரம் தலைபிறை. இன்று 11.11.2013 தேதி முஹர்ரம் பிறை 6.

காயல்பட்டணத்தில் மற்றொரு பிரிவுக்கு 5.11.2013 தேதி முஹர்ரம் தலைபிறை. இன்று 11.11.2013 தேதி முஹர்ரம் பிறை 7.

காயல்பட்டனத்தின் முக்கிய வலைத்தளமான www.kayalpatnam.com க்கு இன்று 11.11.2013 தேதி முஹர்ரம் பிறை 8.

பார்க்க: http://www.kayalpatnam.com/ Date: 11 November 2013 | Muharram 8, 1435. இதை நாம் எந்த கணக்கில் சேர்ப்பது?

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு பிறை கணக்கு.

முக்கிய அரபு செய்தி வலைத்தளமான http://www.arabnews.com/ இன்படியே இன்றைய தேதி Monday, 11 November 2013 | 7 Muharram 1435 AH தான்.ஆனால் www.kayalpatnam.com க்கு மட்டும் எங்கிருந்து இந்த Muharram 8, 1435 வந்தது என்று தெரியவில்லை.

நாம் மூன்று பிரிவை இரண்டாக்கி , பிறகு இரண்டு பிரிவையும் ஒன்றாக்குவதர்க்கு முயற்சிக்கிறோம். ஆனால் உங்கள் வலைத்தளம் இரண்டை மூன்றாக்கி மூன்றை நான்காக்குவதர்க்கு முயற்சிக்கிறதா? தவறாக இருந்தால் திருத்துங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. பிறை குழப்பம்..
posted by: hasbullah mackie (dubai) on 12 November 2013
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31388

காயல் பட்டினம் இணைய தலத்தில் வெளியான முஹர்ரம் பிறை எப்போது என்ற தகவலின் அடிப்படையில் இன்று சவூதி அரசாங்கம் அல்லது சவுதி செய்தி தாளில் பிறை 8 என்று உள்ளது. அதே நேரத்தில் துபாய் அவ்காப் அறிவித்திருக்கின்ற முஹர்ரம் ஒன்பதாவது நாள் இன்று ஆகும். இதன் மூலம் எந்த உலமாக்களின் அடிப்படை கொண்டு பிறை கணக்கை முடிவு செய்வது. இனி அறிவிக்கும் உங்கள் பிறை அறிவிப்பில் , சர்வதேச சவுதி பிறை அல்லது சர்வதேச துபாய் பிறை என்று அறிவிக்க வேண்டும்..

துபாய் நாட்டில் அறிவித்த முதல் பிறை முஹர்ரம் கடந்த திங்கள் கிழமை ஆக இருந்தது . அதன் பிரகாரம் இன்று பிறை ஒன்பது..

ஆனால் சவூதியில் பிறை இன்று எட்டு.. இந்த குழப்பங்கள் மற்ற மாதங்களில் இருந்தாலும் நோம்பு மற்றும் ஹஜ் பெருநாட்களில் கருது வேறுபாடின்றி ஒன்று பட்டு பொதுவாக gcc நாடுகளில் ஓமன் நாட்டை தவிர்த்து ஒரே நாளில் கொண்டாடுகிறார்கள்.. உலகத்தில் எங்கே பிறை பார்த்தாலும் பெருநாள் கொண்டாடலாம் என்று சொல்லுபவர்கள் சற்றே கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் பிறை அறிவிப்பு கணக்கீட்டின் அடிப்படையில் இருக்கும் என்பதாக ஒரு தகவல்... ஆதலால் மாற்று கொள்கை உடையவர்கள் இங்கேயும் தனியாக பெருநாள் கொண்டாடுவது தான்...

ஆனால் ஒரு கேள்வி , சவூதி மற்றும் uae இல் வாழக்கூடிய நண்பர்கள் இங்கு இருந்து கொண்டு அவர்களின் கணக்கீட்டு பிரகாரம் வித்தியாச நாட்களில் இருந்தால் இங்கே அரசாங்கம் அறிவித்த பிரகாரம் பெருநாள் கொண்டாடுவீர்களா அல்லது உங்கள் பெருநாளை ஒரு நாள் முன்னரே தனியாக கொண்டாடுவீர்களா? அவ்வாறு நீங்கள் செய்வது தெரியவந்தால் அடுத்தது pack up தான். இப்போது யாருக்கு கட்டுபடுகிரீர்கள்.. ?

ஆசிரியர் எழுதிய கட்டுரை எல்லோருக்கும் உள்ள மன கசப்பு தான். முன்னர் ஊரில் ஒரு பெரிய ஆலிம் சொன்னால் கட்டுபடுதல் அவரை மதித்து நடப்பது என்றெல்லாம் இருந்த காரணத்தினால் ஒற்றுமையாக பெருநாள் கொண்டாட முடிந்தது.. இப்போது அவரவர்கள் நாமும் சிந்திக்கிறோம் என்ற அடிப்படையில் ஊரில் எல்லோருமே பெரிவர்களாக இருக்கின்றார்கள். இஜ்மா வை மறுக்ககூடிய ஆள்கள் இருக்கும் வரை இதற்கு முற்று புள்ளியே வைக்க முடியாது. இது பிறை விஷயத்தில் மட்டுமல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்....அவ்வளவு தான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by: Rilwan (Austin, TX) on 13 November 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31397

ஆசிரியரே.. எனக்கு தெரிந்த வகையில் மிச்சிகனில் இந்த வருடம் இரண்டு ஹஜ்ஜுப்பெருநாள்... இரண்டு நோன்பு பெருநாள் கூட நடந்தது.. எனக்கு தெரிந்த ஒரு ஹைதிராபாத் காரரிடம் கேட்டேன்.. இவர் சொன்னது... செயர்க்கைகொல்களின் கணிப்பில் தவறுகள் இருக்குமாம்...நான் அவரிடம் கேட்டுக்கொண்டது செயர்க்கைகொல்கள் எப்படி செயல்படுகின்றன.. வானிலை ஆரைச்சிநிலயங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூகுல் செய்து கற்றுக்கொளும்படி..

பிறை ஒன்றும் ஒரு நாட்டுக்குள் வந்து விட்டு இன்னொரு நாட்டுக்கு தெரியாமல் ஓடி ஒழியாது.. பிறை ஒரு நாள் நூறு கிலோமீட்டர் (ஒரு கணக்கு சொல்றேன்..தப்பு கண்டுபிடிக்காதீங்க..) இன்னொரு நாள் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்திலும் சுத்தாது... பிறை ஒன்றும் போர் அடிக்கிறதுன்னு சாட்டர்னை சுற்ற லீவு விட்டுக்கொண்டு போகாது..

பல ஆயிரம் வருடம் முன்னாள் எப்படி சுற்றியதோ அப்படியே சுற்றுகிறது..

இவ்வளவு கருவிகள் செயற்கை கோள்கள் இல்லாமல் தாளமி போன்றோர் கணித்தது எவ்வளவோ சரி செய்யப்பட்டு விட்டது... உண்மை இப்படி இருக்க.. இதற்க்கு பெயர் பிடிவாதமா இல்லையா?

பிறை என்ன செய்யும்? பிறை அது பாட்டுக்கு அதுக்கு கொடுக்கப்பட்ட வேகத்தில் ஒரே மாதிரி சுற்றிக்கொன்று வருகிறது... ஒற்றுமையை கொண்டு வர வேண்டியது ஆறறிவு படைத்த மனிதர்கள்...

ஒருவர் சொல்கிறார் எங்கே கூட்டம் அதிகம் வருகிறதோ அது பின்னாடி போனால் பிரச்சினை இல்லை என்கிறார்.. அமாம்..நாம் ஆடு மாடுகளாய் இருந்தால் அதுதான் செய்து இருப்போம்.. நமக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்கிறதே? அந்த பகுத்தறிவு தானே சிந்தித்து செயல்பட வேண்டி இருக்கிறது? இல்லையென்றால் ஆடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

விஞ்சான வளர்ச்சியை சரியாக உபயோகபடுதவேண்டும்..எங்க ஹஜ்ரத்து ரெண்டாம்வகுப்புதான் படித்திருக்கிறார்... அவர் ஆராய்ந்து என்ன சொல்கிறாரோ அதை தான் நாங்களும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவோம் என்று சொன்னால் சிரிக்கத்தான் முடிகிறது..

நம்மில் சிலர் தங்களின் பிடிவாதங்களால் அவர்கள் நகைப்புக்குல்லானவர்கலாக ஆக்கிக்கொல்கிரார்கள்.. அதை புரிந்துகொள்ளும் நிலையில் கூட இவர்கள் இல்லை என்பது பரிதாபம்.

இந்த பிடிவாதம் எப்படி தெரியுமா இருக்கிறது? அண்மையில் பெண்கள் கார்கள் ஓட்டினால் பெண்களின் கர்பப்பை பாதிக்கும் என்று நொண்டி சாக்கு சொல்லி உலக மக்களின் கேலிக்கு ஆளானர்களே.. அந்த மடத்தனமான மதவாதிகளை போல உள்ளது..

அல்லா என்பது முஸ்லிம் கடவுள் என்று மலேசியாவில் தீர்ப்பு சொன்னார்களே.. அது போல உள்ளது...

புரியவில்லை.. இவர்கள் யோசிக்கும்போது மூளையை கழற்றி வைட் வாஷ் செய்து விட்டு ரூம் போட்டு யோசிப்பார்களோ ..

உண்மையை உரைக்க சொல்ல வேண்டும்.. இல்லையெனில் மனிதனாக பிறந்து பயன் இல்லை...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 13 November 2013
IP: 220.*.*.* India | Comment Reference Number: 31408

இயங்களை விட்டு சற்று வெளியில் வந்து சிந்தித்து பார்பவர்களுக்கு மட்டும். முடிவுரை கருத்தின் இறுதியில் உள்ளது.

சகோதரரர் ரில்வான் அவர்களுடைய கருத்து ஏற்க தக்கது.

எத்தனையோ இயங்கங்கள், அண்ணன்கள், உலமாக்கள். இந்த இமாம் சொன்னார்கள், அந்த இமாம் சொன்னார்கள், எங்க வாப்பா சொன்னார்கள், எங்க உம்மா சொன்னார்கள் என்று வாதம் செய்வதை விட.

அல்லாஹ் குரானில் சொன்னதாக, ஹதீத் வாயிலாக ஆதாரம் கொடுத்து. அதை அராய்ந்து எது சரி, எது தவறு என்று எண்ணி விளங்கி இபாதத் செய்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள்.

And when it is said to them, "Follow what Allah has revealed," they say, "Rather, we will follow that which we found our fathers doing." Even though their fathers understood nothing, nor were they guided?

The example of those who disbelieve is like that of one who shouts at what hears nothing but calls and cries cattle or sheep - deaf, dumb and blind, so they do not understand.

சூராஹ் அல் பகரா 2:170-171

அல்லாஹ் கருணையாளன், அவன் பொருந்தி கொள்ளகூடியவன்.

நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து குரான் ஹதீஸோடு முரண்படுகிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் அராய்ந்து எடுத்த முடிவு சரியென்றால் இரண்டு கூலி இல்லையென்றால் ஒரு கூலி.

இல்லை என்றால், கடிகாரம் பார்த்து பங்கு சொல்வதை விட்டு விட்டு, சூரியன் உதயமாகும் முன், மறைந்த பின்பு பஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகை பாங்கு சொல்வதை வாஜிப் ஆகி கொள்ளுங்கள், சூரியன் உச்சியில் இருந்து சாய தொடங்கிய பின்பு லுஹரை நிறைவேற்றுங்கள், சூரியன் உச்சியில் இருந்து சாய தொடங்கி உங்களுடைய நிழல் உங்களைவிட 1.5 மடங்கு கடந்தவுடன் அசரை நிறைவேற்றுங்கள். எக்காரணம் கொண்டும் கடிகாரத்தை பார்த்து பாங்கு சொல்ல நினைக்காதீர்கள். மாதத்தை கணகிடுவதில் தானே முரண்படுகிறோம். ஒரு நாளில் உள்ள நேரத்தை கணகிடுவதில் நம்மில் கருத்து வேறுபாடு இல்லையே. அது எவ்வாறு களையப்பட்டது?

As'shamsu wa'lqamaru bihusba'an.

அகீதாஹ் விசயத்தில் நிலைத்து இருக்க வேண்டும், ஓரிறை கொள்கையில் அது இல்லை என்றால் மேல் சொன்ன அனைத்தும் பயன் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. அறிவியல் வளர்ச்சி - படைத்தவனையும் விஞ்சாமல் இருக்க வேண்டும்.
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 13 November 2013
IP: 119.*.*.* China | Comment Reference Number: 31426

உலகம் எவ்வளோவோ முன்னேறிவிட்டது. கல்வி கற்றவர்கள் நிறைந்த இந்த காலத்தில் கல்லாதவர்க்கு மதிப்பே இல்லை. முன்னர் படிப்பறிவில்லாதவர்களை 'மாடு மேய்க்க' தான் தகுதியானவன் என்று சொல்வர். இப்போதோ மாடு மேய்ப்பதற்கு கூட உயந்த பட்ச கல்வித்தகுதி பார்க்கின்றனர்.ஆரம்பக்க் கல்வியான ' அ' 'ஆ' 'இ' 'ஈ' சொல்லித்தந்த ஆசிரியர்களைவிட நாம் தற்போது அதிகம் கல்வி கற்றிருப்பதால் அவர்களை காட்டிலும் நாமே உயர்ந்தவர்கள். காலம் போகிற போக்கை பார்த்தால் 'பள்ளிக்கூடம்கூட இனி நமக்கு தேவைபடாது . புத்தகங்கள்தான் இருக்கிறதே, நாமே படித்து நாமே தேர்வு எழுதி, நமக்கு நாமே பாஸ் மார்க் போட்டுக்கொள்ளவேண்டியதுதான் . நமக்கு இனி யாரும் கற்றுத்தர தேவை இல்லை. நாமாகவே படித்து நாமாகவே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

'குர்ஆன்' ஐயும் அதேபோன்று நாமே படித்து நாமே விளங்கிக்கொள்ள வேண்டியதுதான்.வாப்பா சொல்லியோ உலமாக்கள் சொல்லியோ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் . 2 ம் வகுப்பு வரை தேறியவர்கள் எல்லாம் இனி உலமாக்கள் ஆக முடியாது என்று சொன்னால் , உலமாக்களுக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியோ அல்லது நுழைவு தேர்வோ வைக்க வேண்டியதுதான். இந்த நடைமுறைய பின்பற்றினால் இனி 'MBA ' அல்லது 'MCA ' படித்தவர்கள் மட்டுமே உலமாக்கள் ஆக முடியும். அதன்பிறகாவது உலமாக்கள் சொல்வதை கேட்பார்களா என்று பார்ப்போம்!

நம்முடைய தந்தை யார் என்பதை நம் தாய் அடையாளம் சொன்னால் கேட்கலாமா? அல்லது அதையும் DNA டெஸ்ட் போட்டு பார்த்துதான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமா ? அறிவியல்தான் வளர்ந்துவிட்டதே! தாய் கூட சில சமயம் பொய் சொல்வதற்கு வாய்ப்புள்ளது. தாய் சொல்வதைவிட அறிவியல் உறுதியாக சொல்லிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. பிறை கணக்கீடு...
posted by: yahya mohiadeen (dubai) on 13 November 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31428

Comment Reference Number: 31346 ல் நாம் எழுதிய கீழ்க்கண்ட வாசகங்களை மீண்டும் படியுங்கள்.

நம்முடைய ஆசையும், எதிர்பார்ப்பும் ஆலிம்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதுதான். எல்லா ஆலிம்களும் ஒன்றுகூடி விவாதித்து, தேவையெனில், அறிவியல் துறைசார்ந்த நிபுணர்களையும் அழைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதியில், அறிவியல் கூற்றுப்படி நம்முடைய கணக்கீட்டு முறையை செயல்படுத்துவோம், அல்லது இக்கணக்கீடுமுறை குரான், ஹதீத் ஒளியில் நின்றும் வேறுபடுகிறது. எனவே, இந்தந்த அடிப்படையில் இன்றைக்கு நோன்பின் முதல் நாள் அல்லது பெருநாள் என்று சமூகத்திற்கு அறிவிக்கும் முறையைதான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

---------------------------------------

அறிவியலை முழுதாகபுறந்தள்ளிவிடுங்கள் என்று எப்போதும் நாம் சொன்னதில்லை என்பது மேற்கண்ட வாக்கியங்களை மீண்டும் ஒருமுறைபடித்தால் புரியும். நாம் விரும்புவதும், பொதுமக்களில் பெரும்பான்மையோர் விரும்புவதும், நோன்பு அல்லது பெருநாள் என்பதை அறிவிப்பு செய்யும் முறையில் தான் மாற்றம் காண விரும்புகிறோம்.

மேலும், ஹழ்ரத்மார்களின், உலக அறிவைப் பற்றி கேலி செய்யும் விதத்தில் சில வாசகங்கள் இங்குள்ள பதிவுகளில் காணப்படுகின்றன. நோன்பு அல்லது பெருநாள் - இவற்றை நிர்ணயிப்பதற்கு 'பிறை' யைக்கொண்டு முடிவு செய்யுங்கள் என்ற அடிப்படையை போதித்தது ஆலிம்கள? அல்லது அறிவியல் ஆசான்களா?

இன்றைக்கு, நாம் அறிவியல் வளர்ச்சியில் உச்சநிலை அடைந்த சூழலில் நாம் வாழுவதால், அந்த மிதப்பில் நம்மை இழந்ததால் தான் இதுபோன்ற வாசகங்கள் வெளிவருகின்றன. சற்று உங்கள் இறக்கைகளை பணித்து, கீழே வந்து பாருங்கள், எதார்த்தம் புரியும்.

கல்வி இரண்டுவகைப்படும். ஒன்று 'இல்மு ளதுன்னி' மற்றொன்று 'இல்முல் கஷ்பி' இங்கே மிகச் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். இவற்றைப்பற்றி மேலும் அறிய google உதவியை நாடுங்கள் - ஆலிம்களை அல்ல.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. ஒற்றுமையான பெருநாள்
posted by: Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) on 14 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31437

இனி வரும் காலங்களில், ஊரில் ஒரே பெருநாள் என்பது கானல்நீர் தான். அல்லாஹ்தான் நம்மை ஒரே பெருநாளில் கொண்டாட உதவி செய்ய வேண்டும். நம் ஆலிம்களிடம் EGO இருக்கும் வரை அதற்கு சாத்தியம் இல்லை. எனவே சிலர் பதிந்தது போல், இரண்டு,மூன்று பெருநாள்களை நமதூரின் part & parcel என்று எடுத்து பழகி கொள்ள வேண்டியது தான்.

1990 வரை, சங்கைமிகு ஷைகுல் உலமா. மு.க.செய்யத் இப்ராஹிம் ஆலிம் முப்தி அவர்கள் ஹயாத்துடன் இருந்த காலம் வரை ஊரில் ஒரே பெருநாள் தான். ஊரின் ஒற்றுமைக்கு அவர்களை போன்ற ஆலிம்கள் இருந்த காலம் வரை இந்த பிறை பிரச்சனை இல்லை. அப்போது இருந்த ஆலிம்களிடம் மார்க்க விசயங்களில் கருத்து வேற்றுமை இருந்தபோதும், ego இல்லை.

முன்பு தொழுகை நேர விஷயத்தில், ஊரின் ஒற்றுமைக்கு YUF சங்கத்தினர் எடுத்த முயற்சி மாதிரி எந்த அமைப்போ அல்லது ஊர் ஒற்றுமையில் (பிறை விஷயத்தில்) நலம் நாடும் நல்லுள்ளங்களோ முயற்சி செய்தால் அல்லாஹ், அவர்களுக்கு நற்கூலி கொடுப்பான். ஆனால் முயற்சி கைகூடுமா?

சுமார் 6-7 வருடங்களுக்கு முன்பு, நான் துபையில் இருந்த பொது, தற்போது, பெருநாள் என்று அறிவிக்க கூடிய பொறுப்பில் இருக்கும் ஆலிம் பெருந்தகை அவர்கள், துபாய் வந்த போது. தனிப்பட்டமுறையில், "ஆலிம் அவர்களே! நம்மிடம் பல அகீதா பிரச்சனைகள் இருந்து விட்டு போகட்டும். பெருநாள் மட்டுமாவது ஒன்றாக முடிவு செய்யலாமே? என்று கேட்டதற்கு, அந்த ஆலிம் அவர்கள் சொன்ன பதில், ஒற்றுமையை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு எங்கள் கொள்கைதான் முக்கியம்" என்று சொன்னார்கள். இது சத்தியம்.

தற்போது இருக்கும் பிரச்சனை யார் சரி? யார் தவறு? என்று ஒரு பக்கம் இருந்தாலும், பல குடும்பங்களில் சந்தோஷம் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ், நம் சமுதாயத்தில் ஒற்றுமையை, சந்தோஷத்தையும் ஏற்படுத்துவானாக. ஆமீன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by: Rilwan (Austin,TX) on 18 November 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31519

இரண்டாம் வகுப்பு படித்தவர்கள் சொல்வதை தள்ளி வைக்க வேண்டும் என்பது என் கருத்து அல்ல .. ஒருவர் சொல்லும் கருத்தை அலசுங்கள் .. அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள் . கண்ணை மூடிக்கொண்டு எதையும் பின்பற்றாதீர்கள் என்பது தான் என் கருத்து ..

பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று ஒரு காலத்தில் யார் கூறினார்கள் என்பது உலகத்திற்கு தெரியும் .. இன்றும் பெண்கள் பள்ளிக்கூடம் போவதால் கொல்லப்படுகிறார்கள் .. யார் இவர்களை தாக்குகிறார்கள் என்பதும் உலகத்திற்கு தெரியும் .

எதையும் நடுநிலையோடு அலச வேண்டும் என்பது என் கருத்து.. தேவையே இல்லாமல் தாய் தந்தை ஆராச்சியில் ஈடுபடுவது தேவை இல்லாத விஷயம் .. சிலருக்கு இந்த டி.என்.ஏ. டெஸ்ட்தான் முடிவும் செய்கிறது என்ற வருத்தமான உண்மை தெரிந்திருக்கிறது.. அதாவது நம்புவீர்களா இல்லை உங்க ஹழ்ரத் வந்து சொன்னால் தான் நம்பு வீர்களா?

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் அறின்சர்கள் அநேகம் பேர் முறையான கல்வி கற்றவர்கள் அல்ல .. அதலால் பள்ளிக்கூட படிப்புதான் எல்லாம் என்ற கருத்தில் எனக்கும் உடன் பாடு கிடையாது ..
ஆனால் இவர் சொல்வதை கண்ணை மூடி ஏற்றுக்கொள்வேன் .. அவர் சொல்வதை கேக்கக்கூட மாட்டேன் என்ற முட்டாள் தனத்தை எதிர்க்கிறேன் ...

அறிவியலை முஸ்லிம்கள் மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதோ எதிர்க்கிறார்கள் என்பதோ என்கருத்து அல்ல .. சொல்லப்போனால் மற்ற மதங்களில் அறிவியலை எதிர்க்கும் போக்கு மிகவும் அதிகம் ..

ஆனால் உண்மை எது என்று அறிய வரும் போது நிலையை மாற்றிக்கொள்ளும் முதிர்ச்சி வேண்டும் .. எங்க வாப்பா இப்படிதான் பெருநாள் கொனாடினார்கள் .. எங்க பாட்டனார் இப்படிதான் கொண்டாடினார்கள் .. எங்க ஹழ்ரத் இதை தான் சொல்லுறார் ... இதற்க்கு மேலே கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என நினைப்பது தான் தவறு .... நான் என் பாட்டனார் காலத்தில் வாழும்போது அவர் நம்பியதை நானும் நம்பினேன் . ஏன்? இந்ஃபர்மேஶந் அவேலபிலிடீ!!! அப்பொழுது அவ்வளவு விசயம்தான் கிடைத்தது .. இன்னும் புதிய விஷயங்கள் பழைய விசயங்களை டிஸ்‌ப்ரூவ் செய்யும்போது புதிய விசயங்களை எற்றுக்கொவது தான் அறிவு ... ஆனாலும் இன்றும் நம் வாழ்க்கையில் அனேக விஷயங்கள் பழயவையே .

இதில் பழயன புதியன என்பது அல்ல .. எது உண்மை என்பது மட்டுமே ..

என் இவ்வளவு குழப்பம்?

ஏனென்றால் நம்மிடம் உராயாதால் இல்லை . ஒரு debating habit illai.. agree to disagree என்ற intellectualism இல்லை.. My way or high way என்பது தான் piracchinai. கருத்து சொல்ல யாரும் பயப்பட கூடாது.. எந்த கல்வியும் தப்பு இல்லை என்ற நிலை வர வேண்டும். கேள்விகளுக்கு பதில் தேடுவதை ஆதரிக்க வேண்டும். பதில் சொல்ல கோபம் தேவை இல்லை.. ஈரத் கொதிப்பு தேவை இல்லை.

எல்லோருக்கும் சொந்த karutthu கொள்ளும் உரிமை உண்டு. யாரும் ஆடு மாடு மாதிரி வாழ வேண்டியது இல்லை. கருதித்ஹு கூறும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

மனித நாகரீகம் parinamangal maari கொண்டே உள்ளன. இதில் எந்த பரினாமும் 1500 வருடம் முன்பு நின்று போக வில்லை. மனிதன் வாழும் வரை இந்த பரிணாம வளர்க்சி இருக்கும்.

இந்த மாற்றங்களை சுகீகரிக்க முடியாதவர்கள் பின்தாங்கி போகிறார்கள்.

ஒரே பெருநாள் வேண்டும் என்றாள் பல விசயங்கள் நடக்க வேண்டும். ஒரு debating society முஸ்லிம் மக்களுக்குள் உருவாக வேண்டும்.. தங்கள் ஆதாரங்களை நாகரீகமாக - தனிப்பட்ட தாக்குதல் இல்லாத பதில்கலுடன் வைக்கும் பழக்கம் வேண்டும்.

உங்களுக்கு உங்கள் karutthin மீது எவ்வளவு மதிப்பும் உரிமாயும் இருக்கிறதோ அதே மதிப்பும் urimayum அடுத்தவருக்கு இருக்கிறது என ஏற்றுக்கோலும் பக்குவம் வேண்டும். அடுத்தவர் karutthai ketkkum பழக்கமும் வேண்டும்...

அப்படி ஒரு நிலமை இருக்கிறதா? முஸ்லிம் ஆய்க்க்கிய ஜாமாததிலேயே மற்றவர்கள் karutthai கேட்காமல் தீர்மானம் போடுகிறார்கள். oor மக்களிடம் ketkkaamal oor மக்கள் பிரதிநிததிகளாக முட்படுகிறார்கள்.. இந்த போக்கு தான் matha அமைப்புகளிலும் நடக்கிறது.. இந்தப்பொக்குததான் பிரிவினைக்கு காரணம்..

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. ஒரு இடத்தில் மூன்று பேர் பேசினாள் நாலு விதமான karutthukkal பேசப்படும்.. This is world truth.. எல்லோரும் ஒரே மாதிரி பேச வேண்டும் நடக்க வேண்டும் என நினைப்பது ராணுவத்தில் கூட நடக்க சாத்தியம் இல்லை.. vitthiyaasangal நீதர்சானமான உண்மை.. வித்தியாசங்களை மரியாதயொடு ஏற்றுக்கொள்ளும் muthircchithaan அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. எது அறிவுடைமை
posted by: seyed mohamed buhary (uae) on 18 November 2013
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31524

வான சாஸ்திரத்தில் மிக சிறந்தவர்கள் தான் அன்றைய கி.பி 1500 காலத்தில் வாழ்ந்தவர்கள். நட்சத்திரங்களை வைத்து திசை அறிவார்கள் நிலாவையே தங்களின் நாள் காட்டியாக கொண்டவர்கள்.இரவின் வெளிச்சம் ஒளியும் TUBELIGHT பல்பு சோடியம் லிக்ஹ்ட்ல கிடையாது அவர்கள் சார்ந்து இருந்தது நிலா சூரியன் நட்சத்திரம் மட்டுமே எனவே வேறு வழிஇல்லை அவர்கள் இரவோளிகளின் காலத்தை மிக துல்லியமஆகா அறிவதை தவிர. அப்படி பட்ட காலத்தில் தான் நபி அவர்கள் பிறையை KANNAL கண்டுதான் நோன்பு வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சக்குடைய நேரத்தில் மேகமூட்டம் இருந்தால் பிறை இல்லததகவே கணக்கில்யேடுக்கபடும்.

மார்க்கமென்பது அல்லாஹுவையும் நம்மையும் இணைக்கும் வழி (மார்க்கம்=வழி) ஏந்த ஒரு செயலிலும் அல்லாஹ்வையும் நம்மையும் இணைக்கும் பாலமாகவே இருக்க வேண்டும்.இதுவே அறிவுடைமை மெய் அறிவு.

1.பிறையை KANNAAL காண்பதற்கும்
2.நாளை சுவர்க்கத்தில் இறைவனை PAURNAMI நிலவை போல் காண்பதற்கும்
3.ரமலானின் நோன்பிரு நானே கூலி ஆவேன் என்று அல்லா சொன்னதிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதாகவே தோன்றுகிறது.

நாளை சுவர்க்கத்தில் அல்லாஹ்வை காணவேண்டும் என்ற நோக்கத்தில் பிறையை தேடுங்கள் காணுங்கள் நோன்பு வையுங்கள்.

நபியவர்கள் ஏன் இவ்வாறு காண கோரினார்கள் என்று சிந்தியுங்கள்.

அறிவை வளருங்கள் அதை விட்டு விட்டு அறிவு இருக்கிறது என்பதற்காக விண்கலத்தில் சென்று நிலவில் போய் இருக்கிறதா இல்லையா என்ற அதி மேதாவி தனம் வேண்டாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. ஆலிம்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை.
posted by: yahya mohiadeen (dubai) on 24 November 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31651

அறிவியலை ஒதுக்கிவிட்டு ஆலிம்கள் சொல்வதை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுங்கள் என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அறிவியலாரும், ஆலிம்களும் ஒன்றிணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு ஒரே அறிவிப்புகள் செய்யும்படிதான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒருமுறை நிதானமாக நமது கருத்துகளை படித்தால் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும், இது ஒரு சிந்தனைகளை பரிமாற்ற தளம். A platform for exchange of thoughts. We believe that everyone has equal rights and liberty to express their ideas bravely and without any hesitations. அதே சமயம், மற்ற கருத்தாளர்களையும் அவர்தம் வாதங்களையும், மதிக்கும் பண்பை, அந்த நாகரிகத் தன்மையை போதிய அளவு பெற்றிருக்கிறோம் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவிக்கிறோம்.

இதற்கு சான்றாக, நம்முடைய பிற கருத்துகளை பார்த்ததால் அறிய முடியும். எழுதப்பட்ட கருத்துகள் கொஞ்சமாயினும், தணிக்கை செய்யப்படாமல் வெளிவந்திருக்கும்.

என்றைக்குமே, அறிவியலை குர்ஆணோடும், ஹதீதோடும் தான் ஒத்துப்பார்கவேண்டுமே அன்றி குர்ஆன் வசனங்களையும், ஹதீது மணி மொழிகளையும், அறிவியலோடு ஒத்துப்பார்க்கலாகாது. உரைகல் குர்ஆணாகவும் ஹதீதாகவும் தான் இருக்க வேண்டும். இல்லையெனில், டார்வின் கொள்கைகளை ஏற்கவேண்டியது வருமே. எத்தனை ORANGUTAN கள் இதுவரை மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன? நாம் யாரும் இக்கொள்கையை ஏற்றுகொள்ளவில்லை என்பதும் உண்மை.

எங்கோ ஒரு தாக்குதல் குறிப்பிட்ட வெறியர்களால் நிகழ்த்தப்பட்டால் ஒட்டுமொத்த ஆலிம் சமூகத்தை குறைகூறுவது அறிவுடைமை ஆகுமா? நமதூரின் ஆலிம்கள், இந்த சிந்தனையிலா இருக்கிறார்கள்? ஒருகாலத்தில் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியதாக நாம் கேள்விபட்டிருக்கிறோம். இதற்குரிய காரணங்களை அறிய முற்பட்டோம். தாய் நாட்டை நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி என்பதாலும், ஆங்கிலேயர்களின் தயாரிப்புகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கையில், அவர்களின் மொழியையும் எதிர்க்க நேர்ந்தது. அவ்வளவுதான்.

ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. எத்தனையோ இளம் ஆலிம்கள் நமதூரில் உருவாக்கி விட்டனர். அவர்களுள் குர்ஆணை மனப்பாடம் செய்த ஹாபிழ்களும், அடங்குவர். மேலும், ஹாபிழ் மற்றும் ஆலிம் கல்வி பயிலும்போதே M Com, M B A போன்ற முதுநிலை கல்வியும் கற்று வெளி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், M Phil, படித்தவர்களும் Phd செய்து கொண்டு, கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றிக்கொண்டும், மார்க்கப் பணியாற்றிக்கொண்டும் இருக்கும் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை காட்ட முடியும்.

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ என்பதற்கு "(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? என்பது வெளிப்படையான அர்த்தம், இன்றைய ஆலிம்கள், ZOOLOGY படியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்கின்றனர்.

وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ என்பதற்கு (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? என்பது வெளிப்படையான அர்த்தம், இன்றைய ஆலிம்கள், ASTRONOMY படியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்கின்றனர்

உதாரனத்திற்க்கு இவ்விரண்டை மற்றுமே இங்கே குறிப்பிடிருக்கிறேன். இன்னும் அநேகம் உள்ளன.

இதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் தூய கொள்கைகளை மக்களுக்கு போதிக்கவும் வேண்டும், அதே சமயம், இஸ்லாத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும், வரக்கூடிய அவதூறுகளுக்கும், நட்ச்சுக்கருத்துகளுக்கும் பதில் சொல்லவும் வேண்டும். இக்காரியங்களை நல்லபடி செய்தே வருகின்றனர்.

பிறை பற்றிய சர்ச்சை ஒரு பொதுவானது. இது மட்டுமின்றி, நமதூரில் பல்வேறு குடும்பங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளனவே. கணவன்-மனைவி பிரச்சனைகள் , பெற்றோர்-பிள்ளைகள் பிரச்சனைகள் , தொழில் துறைகளில் பங்காளிகள் மத்தியில் பிரச்சனைகள், நிலத்தகராறுகள், உறவினர்களுக்கு மத்தியில் உள்ள பாகப்பிரிவினை பிரச்சனைகள் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றனவே, இவற்றிற்கான தீர்வுகள் எங்கே, யாரால் வழங்கபடுகின்றன என்பதை கொஞ்சம் அறிய முற்படுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும், நீதிமன்றத்தை அணுகினால், நமதூர் மக்களின், பொருளாதார நிலை என்றோ சரிவை கண்டிருக்கும். அல்லது, நமதூர் வழக்குகளுக்கேன்றே தனி நீதிமன்றம் தேவைபட்டிருக்கும். ஒரு சில ஆலிம்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் இவற்றை இங்கே குறிப்பிட முடிகிறது.

மொத்தத்தில் ஆலிம்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை. ஒரு சமூகத்தை பற்றி அரைகுறையாக தெரிந்துகொண்டு, இவர்கள் இப்படித்தான் என்று சொல்வது எப்படி முறையாகும் சகோதரர்களே?

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved