Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:25:22 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 140
#KOTWEM140
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 13, 2014
பே ஓட்டம்!

இந்த பக்கம் 4687 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மனிதர் 1

பொறித்த உருளைகிழங்கில் செய்யப்படும் குச்சி போன்ற தின்பண்டமும், திராட்சைப் பழமும் தின்ன அவருக்கு கொள்ளை ஆசை. ஆனால் ஒன்றிரண்டு துண்டங்களுக்கு மேல் அவர் அதை தின்னக்கூடாது என மருத்துவரின் கண்டிப்பான கட்டளை. காரணம் அவருக்கு சிறு நீரகங்கள் இரண்டும் பழுதாகி போயிருந்தன.

தின்ன ஆசைப்பட்ட அந்த மனிதருக்கு வயது 65 இருக்கும். ஊர் ராமநாதபுரம் பக்கம். அவருக்கு 2 ஆண் மக்கள். நல்ல குண சாலிகள். மலேஷியாவில் பெரிய பல்பொருள் அங்காடிக்கு உரிமையாளர். வாழ் நாளில் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவர். தன் வாழ்வின் கடைசி காலத்தில் மருத்துவத்திற்காக தமிழகம் வந்திருந்தார்.

ஊண், உறக்கம் மறந்து கோக்கோ கோலாவையும் உருளைகிழங்கு குச்சி பொரியலையும் மட்டுமே பல வேளைகளில் கொறித்து மாடாய் உழைத்து அந்த பெரும் பல்பொருள் அங்காடியை உருவாக்கியிருந்தார். அவர் நினைத்ததை விட சிறப்பாக அங்காடியும் உருவாகிவிட்டது . ஆனால் மென்பானமும் நொறுக்குத்தீனியும் ஓய்வு உறக்கமின்மையும் அவரது இரண்டு சிறு நீரகத்தையும் கெடுத்து விட்டது.

பல்பொருள் அங்காடியின் வாயிலாக வந்த கொழுத்த பணத்தின் வாயிலாக அவருக்கு சிறந்த மருத்துவம் நடந்தது. தொடர்ந்த சீரற்ற சிறு நீர் ஒழுக்கு, அதிக கோபம், கைகால் வீக்கம், உடல் வலி என்பவற்றுடன் கடைசியில் அவர் இறந்தே போனார்.

மனிதர்கள் 2, 3

இந்த மனிதர்கள் நமதூரை சார்ந்தவர்கள்.

இந்த 2 ஆம் மனிதர் வெளிநாடு ஒன்றில் முதலில் மாணிக்க வணிகம் செய்து வந்தார். வணிகத்தில் ஏற்பட்ட சரிவும் நலிவும் அவரை அலுவலக உதவியாளராக, பணியாளராக, காவலாளியாக கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் அவர் குடும்பத்திற்குள் நடந்தவைகள் :

ஆண் மக்கள் நல்ல தொழிலில் நிலையான வருவாயில் உள்ளனர். பெண் மக்களுக்கு திருமணம் முடித்து கொடுத்தாகி விட்டது. மருமக்களின் நிறைவான வருமானம். பேரனும் படித்து முடித்து விட்டு வேலையில் சேர்ந்து விட்டான்.

இப்போது அவருக்கு வயது எழுபதை நெருங்குகின்றது. மனிதர் நிம்மதியாக இனி ஊரில் வீட்டில் ஓய்வெடுக்கலாம். ஆனால் அவர் மாத சம்பளத்தில் பணியாளராக வெளிநாட்டில் இன்னும் நீடிக்கின்றார். இந்த ஆண்டு படித்து முடித்து விட்டு வேலை தேடும்போது அவரது பேரனுக்கு ஏற்பட்ட எதிர்கால வாழ்வு மீதான பதட்டத்திற்கு சற்றும் குறையாத பதட்டத்துடன் அவர் அந்த வேலையில் நீடிக்கின்றார். அவரால் கலகலப்பாக இருக்க முடிவதில்லை. மனம் விட்டு சிரிப்பதுமில்லை.

03 ஆம் மனிதனும் ஊர் ஊராக அலைந்து திரிந்து வணிகம் செய்பவன். வாரத்திற்கு தொலை தூரமான மூன்று ஊர்களுக்கு சுற்றி வருபவன். எந்த ஊருக்கு சென்றாலும் அந்தந்த ஊர்களின் புதினங்களையோ சுற்றுலா இடங்களையோ பார்க்க போகவே மாட்டான். கேட்டால் எனக்கு வியாபரத்த உட்டா வேற சிந்தனையே இல்ல என்பான்.

பல கோடிக் கணக்கில் வரவு செலவு. மூன்று மாதம் கழித்து ஊர் சென்றவன் இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் வீட்டில் தங்கவில்லை. ஏன் மச்சான் ஊரிலிருந்து சீக்கிரம் வந்துட்டா என ஒருவர் கேட்டதற்கு குடும்பத்தோடு மனைவியோடு இருந்தா பணம் கிடைக்குமா? என கேள்வி கேட்டவரைப்பார்த்தே திரும்ப இவன் கேட்கின்றான்.

இவனின் இந்த போக்கினால் வீட்டை நிலை குலைய வைக்கும் பலத்த அதிர்வுகள் சில நிகழ்ந்தன. கையை பிசைந்து கொண்டு நண்பர்களிடம் இவன் கண்ணீர் விட்டான். கண்ணீரின் ஈரம் காய்வதற்கு முன்னரே தனது முடிவற்ற தொழில் வலசை என்ற பே (ய்) ஓட்டத்தை தொடங்கி விட்டான்.

வாழ்வின் எதிர்மறையான ஆளுமைகளை பற்றி மட்டுமே நான் இங்கு கூடுதலாக எழுத ஒரு காரணமிருக்கின்றது.

எதிர்மறையான ஆளுமைகளும் போக்குகளும் நமக்கு முன் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றது. எது அதிகமாக பெரும்பான்மையாக இருக்கிறதோ அதுதான் உண்மையான வாழ்க்கை என அனைவரையும் நம்ப வைப்பதில் அந்த எதிர்மறை போக்கு வெற்றி பெற்றுள்ளது. பிறழ்வுகள் பொது விதியாக்கப்பட்டு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவர் மீதும் திணிக்கப்படுகின்றது.

இப்படி வலிந்து உருவாக்கப்பட்ட பொது விதியை மீற நினைப்பவர்களுக்கு ஏராளமான இலவச நல்லுரைகள் அள்ளி வழங்கப்படுகின்றது. அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவும் வினோதமானவர்களாகவும் பொது சமூகத்தால் பார்க்க்ப்படுகின்றனர். இந்த பிறழ்வு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் உயர்ந்த மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் பெருங்கடலின் நடுவே மிதக்கும் வெண்ணெய் படலம் போன்றவர்கள். வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை அவர்களுடையது.

தீவில் பிறந்த பெரு நிலம்



அந்த தோப்பில் இரண்டு மரங்களுக்கிடையே கயிறிலானல் பின்னப்பட்ட வலை ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. வானத்தை பார்த்துக் கொண்டு அதில் ஹாயாக குழந்தைக்குரிய குதூகலத்துடன் கிடந்தபடி மெதுவாக ஆடிக்கொண்டிருக்கின்றார் 76 வயது முரய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான். நடுவண் அரசின் மீன்வளத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அரசு துறை என்றவுடன் பெரும் பதவி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அருங்காட்சியக உதவியாளராக மட்டுமே பணியாற்றிவர். ஓய்வு பெறும் வயது வரை அதில் ஒட்டிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றவர். தன் வாழ்வின் சாரத்தை இழையை ஒட்டி பயணிப்பதற்கு அரசு வேலை தடையாக இருந்ததால்தான் அவர் இந்த முடிவை எடுத்தார்.

எளிமையான மாத ஊதியத்தில் தனது நான்கு மக்களையும் வளர்த்தவர். முறை சார்ந்த கல்விக்கூடங்களுக்கு அவர்களை அனுப்பாமல் தனது வீட்டிலேயே வைத்து அவர்களுக்கு கல்வி புகட்டி ஆளாக்கியவர். அவருக்கென சொத்து பத்துக்கள் எதுவுமில்லை. பணப்பாதுகாப்பும் இல்லை. அரசு ஊதியத்தில் வாங்கிய கொஞ்ச நஞ்ச நிலங்களையும் தனது மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு ஓய்வூதியத்தில் தன் வாழ்க்கையை கழிக்கின்றார்.

அவர் ஒரு இயற்கை அறிவியலாளர். அத்துடன் கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டிடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில் நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, புவிபரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றிலும் தனது தடங்களை பதித்தவர்.

இந்த அபாரமான அபூர்வமான திறமைகளை வைத்துக் கொண்டு அவர் ஒருபோதும் செல்வத்தை குவிக்க முயற்சித்ததே இல்லை. கல்வியும் திறமைகளும் வயிற்றைக்கழுவ மட்டுமே என்ற மூட நம்பிக்கையும் அவருக்கில்லை. இறைவன் வழங்கிய இந்த திறமைகளை வைத்து மனித வாழ்வை இன்னும் எப்படி எளிமையாக கையாள்வது என சிந்தித்தவர். அதற்காக தனது சொந்த வாழ்க்கையையே சோதனைக்களமாக மாற்றி சோதித்து அறிந்தவர்.

லட்சத்தீவில் பிறந்து தமிழகத்திலும் கேரளத்திலும் வளைகுடாவிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிந்தவர். ஆழ்கடலின் மௌன அலைகள் வீசும் தீவின் தனிமையோடு தன்னை முடக்காமல் பெரு நில நதியாக பாய்ந்தவர்.

முடிவிலா சுழல்



இவனுக்கு வயது 40 . தாய் வழி உறவினரான இளம் மனைவி. அவர்களின் அன்பான இல்லறத்திற்கு சாட்சியாக வருடந்தோறும் வரிசை பிள்ளைகள். அண்டை மாநிலத்தில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வந்தான். வயிற்றுக்கும் மானத்திற்கும் ஒரு குறைவுமில்லை. திடீரென சொந்தமாக கல் வீடு கட்டும் ஆசை வந்தது.

கடையை மூடினான். ஆசிய நாடொன்றுக்கு ஆகாய கப்பலேறினான். போன கையோடு குடியேற்ற விதி முறைகளை மீறியதற்காக தடுத்து திரும்ப அனுப்பப்பட்டான். இவன் விடா முயற்சிக்காரன். மீண்டும் அய்ரோப்பிய நாடொன்றுக்கு பயணித்தான். கை நிறைய பொருள் தேடினான். ஆசைப்பட்டமாதிரி கல் வீட்டைக் கட்டி முடித்தான்.

நிமிர்ந்து பார்த்தான். குடும்ப தொடுதல் இல்லாமல் அய்ந்து வருடங்கள் பறந்து விட்டன. இப்போது ஊருக்கு வந்துள்ளான். எவ்வளவு நாள் விடுமுறை என அவன் நண்பன் கேட்க 06 மாதங்கள் என்றான். அதன் பிறகு என்ன திட்டம் என்றதற்கு மீண்டும் அய்ரோப்பிய பயணம்தான் என எந்த தயக்கமும் இல்லாமல் தெளிவாக அவனிடமிருந்து விடை வந்தது.

கேட்கவே பாரமாக இருந்தது. எழுதி விட்டேன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அருமை
posted by: Fazel Ismail (Singapore) on 14 April 2014
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 34301

என்ன பஷீர் காக்கா... ரொம்ப நாளா ஆளை காணோம்..

சமூக பிரச்சனைகள் குறித்து அதிகமான ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்கிறோம்.

சிங்கம் படத்திற்கும் (கட்டுரையில் உள்ள) கதைக்கும் என்ன சம்பந்தம் ?

இந்த பே ஓட்டத்தில் அளவுக்கு அதிகமான நாட்கள் வீட்டை பிரிந்து, குடும்பத்தினருக்கு (குறிப்பாக துணைவிக்கு) செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதால் குடும்ப சீரழிவுகள்தான் எத்தனை எத்தனை .... இதுக்கு தனி கட்டுரை தேவைப்படும் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) on 14 April 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34303

குறுக்கும் நெடுக்குமாக கிளைகள் . அதன் மேல் அமர்ந்திருக்கும் சிங்கம் என்ற அம்சங்களுடைய இந்த படத்தை நான் இந்த கட்டுரையின் கருப் பொருளோடு தொடர்புடைய குறியீடாக பயன்படுத்தியுள்ளேன்.

குழம்பி கிடக்கும் முடிவில்லாத பாதைகள் என்பது நாம் பொருள் தேடி ஓடும் கண்மூடித்தனமான ஓட்டத்தையும் அது ஒரு முடிவே இல்லாத புதிர்கள் நிறைந்த ஒரு சதுரம்தான் வாழ்க்கை என்பதையும் குறிக்கும்.

ஒரு வேளை குழம்பிய பாதைக்கு ஒரு முடிவு தெரிந்தாலும் கூட அந்த பாதைக்கு வெளியே பசியுடன் காத்திருக்கும் சிங்கம் போல பேய் ஓட்ட வாழ்க்கையின் இறுதியில் பெரும் பிரச்னைகள் மட்டுமே எஞ்சும் என்பதை குறிக்கின்றது.

இந்த படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தேக்கடிக்கு மகிழ் உலா செல்லும்போது நண்பர் ஹாஃபிழ் புகாரீயால் எடுக்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...துபாயிலிருந்து ஒரு சோக கதை.
posted by: mackie noohuthambi (chennai) on 14 April 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34304

ஆசிரியர் அவர்கள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பலர் நீங்கள் கூறும் 2வது மனிதர்கள், ஆலிம்கள் ஹாபிழ்கள் என்ற பரிணாமங்கள் இவர்களுக்கு உண்டு. உலகிலேயே பெரிய வெற்றியாளன் யாரென்ற கேள்விக்கு தனக்கு இறைவன் தந்திருப்பதைக் கொண்டு திருப்தி பட்டுக்கொள்பவன், மன நிறைவு கொள்பவன்தான் என்று நபிகள் நாயகம் சொல்வதை இவர்கள் விலாவாரியாக இந்த ஹதீதுக்கு ராவிகள் யார், இந்த ஹதீது எந்தெந்த நூல்களில் வருகின்றன என்பதையும் தெளிவாக மக்கள் முன் விளக்குவார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை நெறி வேறு விதமாக இருக்கும்.

துபாயில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன். புதிதாக திருமணம் செய்து பின்னர் வாழ்வாதாரம் தேடி அங்கு செல்கிறான். ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. ஊர் வரநினைக்கும்போது மனைவி சொல்கிறாள், நமக்கு என்று ஒரு வீடு இல்லை, நீங்கள் கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு அங்கு சம்பாத்தியம் பண்ணி அனுப்பினால் நாம் சொந்த வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். மனைவி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது...நாட்கள் ஓடுகின்றன..வீடும் தயாராகி விட்டது. இப்போது மனைவி எழுதுகிறாள், பக்கத்துக்கு வீட்டு நண்பன் புதிதாக ஒரு கார் வாங்கி அவர் மனைவியுடன் ஜாலியாக சுற்றுலா செல்கிறார். நீங்களும் ஒரு கார் வாங்கினால் நாமும் ஜாலியாக இருக்கலாம், நியாயம்தானே என்று கணவன் யோசித்து இன்னும் ஐந்து வருடங்கள் உழைக்கிறான், புதிய காரும் வாங்கியாகி விட்டது. இப்போது பல கனவுகளுடன் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்கிறான். விமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் வந்த விபத்தில் இவன் அகால மரணம் அடைகிறான். செய்தி ஊருக்கு போகிறது. இப்போது குடும்பத்தினர்கள் ஆலோசனை நடக்கிறது.கணவன் மனைவி சந்தோஷமாக சுற்றிப் பார்க்க வாங்கிய காரை அனுப்பி, ஜனாஸாவை கொண்டு வர மனைவி சொல்கிறாள். போயும் போயும் மய்யிதையா புதிய காரில் கொண்டு வருவார்கள்,, கூடாது வாடகை கார் பிடித்து அதில் ஜனாஸா ஊர் வந்து சேர்க்கிறது. மய்யித்தை எங்கே வைப்பது, குளிப்பாட்டுவது? ஆசையாக கட்டிய புதிய பங்களாவில் வைக்குபடி மனைவி சொல்கிறாள். போயும் போயும் மய்யிதையா புதிய பங்களாவில் வைப்பார்கள். கூடி இருக்கும் பெருந்தலைகள் முடிவு செய்து பழைய ஓட்டு வீட்டில் மைய்யித் வைக்கப் படுகிறது, குளிப்பாட்டப் படுகிறது. யாருக்குமே சொந்தமில்லாத யாருமே உரிமை கொண்டாடாத ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்காத அந்த பறந்து விரிந்து கிடக்கும் மைய வாடியில் அந்த மீளா துயில் கொள்கிறான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா...ஆறடி நிலமே சொந்தமடா...என்ற பாடல் எங்கிருந்தோ ஒலிக்க, அந்த இளைஞனின் மனைவியின் உள்ளம் படும்பாட்டை யார் அறிவார்.

இது துபாயில் இருந்து எனது மகன் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பிய சோகக் கதை. இது கதையாகவே இருக்கட்டும் யார் வாழ்விலும் இப்படி ஒரு சோகம் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக , ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எதிர்மறையை நேர்மரையாக்க வேண்டும் கரங்கள் ....
posted by: அ.மு.அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) on 14 April 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34350

அன்பு பஷீர் காகா,

ஆதங்கங்களை கொட்டி இருகிறீர்கள்.

ஆழ்கடலாய் ஆர்ப்பரிக்கும் ஆதங்கங்களில்
இது ஒரு சிறு அலை மட்டுமே.

ஆனாலும் அழுத்தமான மண் அரிப்பை
தொடர்ந்து நிகழ்த்துவது.

என்ன செய்வது என்பதை தான் யாருக்கும் புரியவில்லை...

வேதனை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புலி வாலைப் பிடித்த கதைதான்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 16 April 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34397

வேலைப் பளு காரணமாக இக்கட்டுரையைக் கண்டும் வாசிக்க கால அவகாசம் கிட்டாதிருந்தது. இன்று எப்படியேனும் அதைப் படித்துவிட நாடினேன், படித்தேன், சுவைத்தேன்.

என் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டுள்ளது இக்கட்டுரை. (அனைத்தையும் இங்கு உரைப்பது தனி கட்டுரையாகிவிடும். இறைவன் நாடினால், எனது மேடையில் பகிர்கிறேன்.) வெறுமனே நான்கைந்து பத்திகளோடு முடிக்க வேண்டிய தலைப்பல்ல இது! மாறாக, தொடர் கட்டுரையாக பல காலம் எழுதிட வேண்டிய முக்கியமான அம்சம்.

சுருங்கக் கூறின், நம்மில் 99 சதவிகிதம் பேர் தனக்காக வாழ்வதேயில்லை. அடுத்தவரைப் பார்த்தே வாழ்கின்றனர்.

வாழ்வின் அடிப்படைத் தேவை:

உண்ண உணவு,
உடுக்க உடை,
இருக்க இடம்.

இது கிடைத்தால் போதும் என்று வாழ்பவன் மனம், உடல் நிம்மதியுடன் - பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறான்.

ஆனால், மற்றவர்களைப் பார்த்து வாழ நினைப்பவன், ஒரேயொரு கல் வீடு கட்டுவதற்காக வளைகுடாவிலும், கூடுதல் பொருள் சேர்ப்பதற்காக கிழக்காசிய நாடுகளிலும் தன் மொத்த வாழ்வையும் தொலைக்கிறான்.

விளைவு???

வீடிருந்தும் வாழத் தெரியாமல் தவிக்கிறான்.

தேவை ஒரு சிறு மனமாற்றமே! அது நடந்துவிட்டால், சகலமும் நன்மையாகவே முடியும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Rat Race !!
posted by: Salai.Mohamed Mohideen (Philly) on 17 April 2014
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 34417

நல்லதொரு கட்டுரை . ஆனால் பே ஓட்டத்தில் பிஸியாக இருப்பவர்களுக்கு இதனை படிப்பதற்கு நேரம் இருக்கிறதா?

அத்தியாவசிய தேவைகளுக்காக (அதாவது குறைந்த வருமானம் உள்ளவர்கள்) இந்த பே ஓட்டத்தில் ஓடுபவர்களை விட, அதீத பணப்பேராசையில் ஓடுபவர்கள் ஏராளம். மேலை நாடுகளில் இந்த பே ஓட்டத்தில் அநியாயத்துக்கு பிஸியாக இருப்பவர்கள்... வெளிநாடுகளிலிருந்து இங்கே பிழைக்க வருபவர்கள் தான். இதற்கு நேர் எதிர் மேலை நாட்டினர். அதாவது, ஊதியம் ஈட்டுவதற்கு ஒரு வேலை, பெர்சனல் வாழ்க்கையை பாதிக்காத அளவு மிதமான வேலைப்பளு (8hrs) & சேமிப்பு. இவை இரண்டும் இருந்தாலே போதும் என்று எண்ணுபவர்கள் பலர்.

'பணம் மட்டும்' தான் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை (?) தீர்மானிக்கின்றது என்று எண்ணி இதில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகத்தானே (அதாவது அவர்களை day care / பிறர் பரமாரிப்பில் விட்டு விட்டு) கணவனும் மனைவியும் இப்படி 'பே ஓட்டம்' ஓடுகிறோம் என்று ஒரு காலத்தில் சொல்லுபவர்கள், பின்னொரு காலத்தில் 'அட கைசேதமே' என்று வருத்தபடுகின்றார்கள். பணத்தை மட்டும் சேர்த்து வைத்து விட்டால் சந்ததியினருக்கு போதுமா???

அதே நேரத்தில் காலச்சூழலையும், தற்காலஅடிப்படை தனி மனித /குடும்ப பராமரிப்பு செலவுகளையும் அல்லது அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்வதும், அதற்காக குறிப்பிட்ட காலம் வரை கடினமாக உழைக்க வேண்டிய சூழலும் காலத்தின் கட்டாயமே.

இவ்விடயத்தில், தன்னிலை அறிந்து தன்னை சமநிலை படுத்த வேண்டியது தனிமனிதன் தானே அன்றி சமூகமோ அல்லது பிற நபர்களோ அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பொருத்தமான தலைப்பு...!
posted by: ஹிஜாஸ் மைந்தன். (சிங்கப்பூர்.) on 19 April 2014
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34435

பே...ஓட்டம். அதாவது Pay ஓட்டம். நண்பர் S.K.சாலிஹ் சொன்ன மாதிரி வருமானத்திற்கு ஏற்றார் போல் நமது தேவைகளை சுருக்கிக் கொண்டு போதும் எனும் மனம் இருந்தால் இந்த பே ஓட்டத்திற்கு அவசியமே இருக்காது. சில பேய்களும் ஓடியிருக்காது. என்ன செய்ய? அங்கு நிறைய (Payment) அதிகமாக இருப்பதால்தால்தான் அந்நிய நாட்டில் அடியெடுத்து வைத்து அரக்கு போல் ஒட்டிக்கொள்கிறோம்.

பே(ய்) ஓட்டிய கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை வாழ்ந்து காட்டுபவர்!
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) on 30 April 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34668

நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள் சகோ. சாளை பஷீர் அவர்களின் எழுத்தோவியத்தில் மலர்ந்த – “தீவில் பிறந்த பெரு நிலம்” இயற்கை அறிவியலாளர் அலீ மனிக்ஃபான் அவர்கள் பற்றிய இக்கட்டுரை நேற்றைய “தி இந்து” நாளிதழிலும் வெளிவந்து இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்!

இப்படியும் ஒரு மனிதரா? இயற்கையோடு இயைந்த வாழ்வில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மானிக்ஃபான் அவர்கள், கற்காத மேதையாகவும் திகழ்ந்து வருகிறார்! கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டிடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில் நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, புவிபரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றிலும் தனது தடங்களை பதித்தவர். 40 ஆண்டுகள் வானவியல் ஆய்வு செய்தவர்..சந்திர நாள்காட்டியை மிக துல்லியமாக வடிவமைத்தவர்

இந்த அபாரமான அபூர்வமான திறமைகளை வைத்துக் கொண்டு அவர் ஒருபோதும் செல்வத்தை குவிக்க முயற்சித்ததே இல்லை. கல்வியும் திறமைகளும் வயிற்றைக்கழுவ மட்டுமே என்ற மூட நம்பிக்கையும் அவருக்கில்லை. இறைவன் வழங்கிய இந்த திறமைகளை வைத்து மனித வாழ்வை இன்னும் எப்படி எளிமையாக கையாள்வது என சிந்தித்தவர். அதற்காக தனது சொந்த வாழ்க்கையையே சோதனைக்களமாக மாற்றி சோதித்து அறிந்தவர். பிறழ்வு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் உயர்ந்த மனிதர்! பெருங்கடலின் நடுவே மிதக்கும் வெண்ணெய் படலம் போன்றவர். வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை வாழ்ந்து காட்டுபவர்!

Salute to him!

கட்டுரையாளர் சாளை பஷீர் காக்காவின் தெளிவான எழுத்து நடை, வாசிப்புக்கு மேலும் மெருகூட்டுகின்றது. மென்மேலும் தொடருங்கள்!

கட்டுரையை முழுமையாகப் படிக்க....

http://tamil.thehindu.com/general/environment/நவீன-சிந்துபாத்தின்-இயற்கையோடு-சில-பரிசோதனைகள்/article5958876.ece

http://www.kayalpatnam.com/columns.asp?id=140

சுற்றுச்சூழல் ஆர்வலர் பஷீர் காக்கா அவர்களுடன், இத்தகைய இயற்கைத் தேடலில் எமது விடுமுறைக் காலங்களைக் கழிக்க ஆவல்! இன்ஷா அல்லாஹ், நடக்குமா என்று பார்ப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஒரு விளக்கம்
posted by: சாளை பஷீர் (திருச்சிராப்பள்ளி) on 01 May 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34683

அன்பு நண்பருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

நான் கண்ணியமான ஒரு வாழ்க்கைக்காக போராடுபவர்களை இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை.

என்னுடைய விமர்சனமெல்லாம் அத்தியாவசிய தேவைகள் நிறைவேறிய பிறகும் பொருள் தேடுவதற்காக வாழ்க்கையை காணாமலடிப்பவர்களை பற்றி மட்டுமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved