Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:40:10 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 153
#KOTWEM153
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 22, 2014
கற்றல் என்பது...!

இந்த பக்கம் 2868 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆசியா அழகாக இருப்பாள். ஒரு மலர்ப்பந்து போல வீடு முழுவதும் துள்ளி வருவாள்.

“முஸ்தாக் மாமா”ன்னு கூப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டது போலத் தோன்றும்.

சில கவலைகள் இயற்கையின் அழகில் மறைந்து போகும். சில கவலைகள் அன்னையின் அரவணைப்பில் மறைந்து போகும். சில கவலைகள் அல்லாஹ்வின் நினைப்பில் மறைந்து போகும். ஆனால் ஒரு சில நொடிகளில் ஒரு மனிதனின் “எல்லா”க் கவலைகளும் மழலையின் சிரிப்பில் கரைந்து போகும்.

ஆசியா - மாஷாஅல்லாஹ் ரியல் எஸ்டேட் செய்யது காக்காவின் தங்கச்சி மகள்.

என் உம்மா தனியாக இருப்பதாலும், ஆசியா வீட்டில் இவளைத் தவிர்த்து அவர்கள் வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஏதுவாகவும், செய்தலி லாத்தா, அவளை எங்கள் வீட்டில் விட்டுச் செல்வாள்.

வரும்போதே ஒரு பை நிறைய விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டு சாமான்களைக் கொண்டு வருவாள். எங்கள் வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களையும் சேர்த்து விளையாடத் தொடங்குவாள். அவள் அழகாக அடுக்கி வைக்கும் பொருட்களைக் குலைத்து சீண்டுவதும், அவள் சிணுங்குவதும் எனக்குப் பிடிக்கும்.

“ஆசியா...” உம்மாவின் அழைப்பு கேட்டதும், தன் வீடு செல்ல ஆயத்தமாவாள்.

அவள் விளையாட்டு சாமான்களையெல்லாம் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொருட்களையெல்லாம் அதனதன் இடத்தில் வைத்துவிட்டு “மாமா, போய்ட்டு வாரேன்” என்று சிரித்துப் பிரிவாள்.

அன்று, முப்பது வயது இளைஞன் மூன்று வயது பெண் பிள்ளையிடம், “எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கும்” ஒழுங்கைக் கற்றுக்கொண்டான்.

கற்றல் என்பது வெறும் பள்ளிக்கூடம், புத்தகங்கள் சார்ந்த விஷயங்கள் மட்டுமன்று. இவையாவும் கற்றலின் துவக்கமே! நம்மைச் சுற்றி கூர்ந்து நோக்கும்போது, நோக்கிய விஷயத்தை உள்ளிருத்தி உணரும்போது உண்மையான அறிவை - ஞானத்தைப் பெற முடிகின்றது.

எந்த ஒரு பல்கலைக் கழகமும், தடித்த புத்தகங்களும் சொல்லத் தர முடியாததை, நம்மைக் கடந்து போகும் சாதாரண மனிதர் உணர்த்திவிட்டுப் போவார். இதை உணர - இதையே போதனையாய் ஏற்றுக்கொள்ளத் தேவைப்படுவது எல்லாம், நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வப்படுதலும் மட்டுமே.



ஹாமிதிய்யாவில் படிக்கும்போது, எங்கள் முதல்வர் மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் உரிய நஹ்வி நூருல் ஹக் அவர்கள், ஒவ்வொரு வகுப்பு துவங்குவதற்கும் முன்பாக நடைபெறும் முதல்வர் உரையின்போது, முன்னங்கால்களைச் சற்று அழுத்தி, குதிகால்களைத் தூக்கி, சற்றே முன்மடங்கிய ஆட்காட்டி விரலை நீட்டி, “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள்” என்று சொன்ன மந்திர வார்த்தை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு போட்டியிலும், வாழ்வாதாரம் தேடித் திரிந்த ஒவ்வொரு பயணத்திலும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது; இருக்கிறது.

ஒரு முறை நம் ஊரின் கலைப் பொக்கிஷம் ஏ.எல்.எஸ். மாமாவுடன் நடந்து செல்லும்போது, நடுரோட்டில் கிடந்த கல்லை அப்புறப்படுத்திவிட்டு, தொடர்ந்து நடக்கிறார். என் கால்களோ நகர மறுக்கிறது. உள் அவமானத்தில் மனமும், காலும் கனத்துப் போய்விடுகிறது. “எனக்கு ஏன் இது தோன்றவில்லை...?” கேள்வி கல்வியாய் நெஞ்சில் பதிந்து விடுகிறது.

இன்று வரை நடக்கும்போது திக்ர் செய்துகொண்டே செல்லும் பழக்கம் ஏ.எல்.எஸ். மமாவிடமிருந்து கற்றதுதான்.

“கோபாங்களை உள்ளிருத்தவும், சோகங்களைக் கடந்து போகவும் கற்றுத் தந்தவன் என் நண்பன் ஷேக் தாவூத்.

அண்மையில் என் மனதை மிகவும் ஆக்கிரமித்த பாதிப்பு, முகப்புத்தகத்தில் வாசித்தது:

தன்னை ஒருவன் வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றான்... கொஞ்சமும் பதறாத அந்தக் குழந்தைச் செல்வம்,

“ம்... எங்கே என் பார்ஸ்வேர்டைச் சொல்லு!” என்கிறது. திருடன் திரு... திரு......

எவ்வளவு அடிப்படையான விஷயம், நமக்கு ஏன் தோன்றவில்லை?

மாமியாருக்கு சுகமில்லை. திருச்செந்தூர் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள். அப்படி அவர்கள் சொல்வதே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட மரண தேதியை அறிவித்துவிட்ட மாதிரிதான்.

இதோ, கோவாவிலிருந்து சென்னை நோக்கி, ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ ரெயில் நகரத் தொடங்கிவிட்டது. கடந்து செல்லும் இயற்கை அழகு எதுவும் என் கண்ணில் படாமல் உள்ளிருக்கும் சோகம் தடுக்கிறது. முன்னிருக்கை காலியாகவே இருக்கிறது. ஹுப்ளியில் 55 வயது மதிக்கத்தக்க நபர் புன்முறுவலுடன் ஸலாம் சொல்லி இணைகிறார். சிறிது அறிமுக மவுனம் தொடர்கிறது. தன் சட்டைப் பையில் தயாராக வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்து ஏதோ எழுதுகிறார். நான் அவரைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்கிறேன்.

“தம்பி...” என்ற விளித்தலுடன் என் கையில் தரப்பட்ட அந்தக் காகிதத் துண்டைப் பார்க்கிறேன். அவரது முழுப் பெயர், முதல் அழைப்பு விடுக்கப்பட வேண்டிய நபர், இரண்டாவது அழைப்பிற்கான நபர், தொடர்புக்கான அலைபேசி எண்கள், கொண்டு வந்த உடமைகள் விபரம் அனைத்தும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆச்சரியமும், ஏன் இது என்ற கேள்வியும் எழ, இரண்டிற்கும் விடை தேடும் கண்கள் கொண்டு அவரைப் பார்க்கிறேன்.

“தம்பி, இந்தப் பயணத்தில் எனக்கு மவுத்து ஏற்பட்டால், நீங்க, இந்தத் துண்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்... என் ஆடைகள் விலகி இருப்பின் ஒழுங்குபடுத்துங்கள்... தயவுசெய்து என்னையும், இந்த உடமைகளையும் என் உறவினர்கள் வரும் வரைக் காத்திருந்து ஒப்படைத்து விடுங்கள்... இதற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்குத் தருவான்...”

கொஞ்...சம் யோசித்துப் பாருங்கள்! சப்தங்கள் தொலைத்துவிட்ட, மவுனம் குடிகொண்ட ஏசி அறை... தன் எதிரே மவுத் குறித்த உரையாடல்.

பெரும் கனத்த மவுனம் அந்தப் பெட்டி முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. நீண்ட நேரம் பேச்சே வரவில்லை. வெளியில் இயற்கை அழகாகவும், வெற்று நிலமாகவும், ஓடையாகவும் கடந்து செல்கிறது.

அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

ஏனோ “எனக்கும் மரணம் வரும்; என் முகவரியையும் அவரிடம் கொடுக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை இந்தக் கற்றல் உள் சென்று தங்கி, உணர்ந்து - உணர்ந்ததை நடைமுறைப்படுத்த இன்னொரு பயணம் தேவைப்படலாம். அதுவரை அல்லாஹ் ஹயாத்தை நீளமாக்கி வைக்கட்டும் - எல்லோருக்கும்!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 23 October 2014
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 37869

"தம்பி, இந்தப் பயணத்தில் எனக்கு மவுத்து ஏற்பட்டால், நீங்க, இந்தத் துண்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்..."

இதைப் படித்ததும் எனக்கு நினைவிற்கு வருவது: அது 1964ம் வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். இதனை வாசிக்கும் பலர் பிறக்கவே இல்லை. ஹாங்காங் கின் Queen's Road, Central, China Building அறை எண் 611.

அன்றைய உலகம் சுற்றும் வாலிபனான, கீழக்கரையின் தொழிலதிபர் அல்ஹாஜ் B. S. A. ரஹ்மான் அவர்கள் தனது உலக சுற்றுப் பயணத்தை முடித்து ஹாங்காங் திரும்பிய சில நாட்களில் அல்ஹாஜ் P. A. சதக்கு அவர்களை சந்திக்க எங்கள் அலுவலகம் வந்தார்கள். பல நாடுகளில் தான் அனுபவித்த சுவையான அனுபவங்களை அவர்கள் கூறியதை நான் ஆர்வமாக கேட்டு வந்தேன். அதில் ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அது இதோ :

"நான் முதலில் ஹோட்டலுக்கு போனதும் டெலிகிராம் (தந்தி) படிவத்தை வாங்கி ஹாங்காங் கில் உள்ள எங்கள் கம்பெனி யின் 'புல் புல்' முகவரிக்கு தந்தி ஒன்று எழுதி என் மனைவியின் கையில் கொடுப்பேன். அவள் முகம் கறுத்து விடும். தந்தியில் ; கணவர் இறந்து விட்டார். நான் இந்த நாட்டில், இந்த ஹோட்டலின் இந்த அறையில் இருக்கிறேன். தொலை பேசி இலக்கம் இது. தொடர்பு கொள்ளவும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். எனக்கு எதுவும் ஆகிவிட்டால் இந்த தந்தியை ஹோட்டல் காரரிடம் கொடு என்பேன். ஆங்கிலத்தில் பரிச்சியம் இல்லாத அவள் விசும்புவாள்" என்று சொன்னது என் நெஞ்சில் அப்படியே படிந்து விட்டது.

ஹாஜி ரஹ்மான் அவர்கள் நோயுற்ற நிலையில் இருக்க, அவரது துணைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Hameed Rifai (Jeddah) on 23 October 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37870

நண்பர் .முஸ்தாக் அஹ்மத் வின் கட்டுரை எல்லோரும் படித்து பயன் பெறவேண்டும்

அழகான அவருக்கே உரிய நேர்த்தியான நடையில் படிக்கும் விழிகளில் கண்ணீரை ததும்ப வைக்கும் அருமையான கட்டுரை கற்றல் என்பது

யாரிடம் கற்க்க வேண்டும் என்று யோசித்து நாம் தயங்கி நின்றால் நாம் தனிமை பட்டு போவோம். நிறைய நேரங்களில் சிறிய பிள்ளைகளிடம் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உண்டு நானும் அப்படி என் பிள்ளைகளிடம் இருந்தே நிறைய கற்றிருக்கிறேன்.

வாழ்க்கை வாழும் வரைக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்மை புதிது படுத்திக்கொண்டே (update) இருக்க முடியும்.

அதை தெளிவாக சுருக்கமாக அனுபவத்தில் கற்றதை கட்டுரையாக வடித்த அருமை நண்பர் முஸ்தாக் அஹ்மத் அவர்களுக்கு நன்றிகள் பல உங்கள் ஆக்கங்களின் மற்றொரு மெயில் கல் இது என்பேன் எப்போதும் உங்கள் படைப்புகளை நேசித்தவனாய்

ஹாமித் ரிஃபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by: POCKU.S.I. MD.MOHIDEEN (chennai) on 24 October 2014
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37873

அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் கற்றல் என்பது என்ற கட்டுரையை வாசித்தேன் ஒன்றை நன்றே புரிந்துக் கொள்ள முடிகின்றது. நீங்கள் சொல்லும் விஷயத்தின் மூலம் நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதை.

நிறைய அழகு வாய்ந்த விஷயங்களை கட்டுரையில் விவரித்து உள்ளீர்கள். கோபங்களை உள்ளிநுத்தவும் என்ற வரியின் மூலம் கற்றுதந்தவரை நினைவுசகூறி இருப்பது உங்களின் நன்றி மறவா உள் ளத்திற்க்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இறுதியில் பிராத்தனையுடன் நிறைவு செய்துள்ளீர்கள். தாங்கள் மேலும் தொடர்ந்து எழுத இறைவன் அருள் புரிவானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கற்றல்
posted by: NIZAR (kayalpatnam) on 27 October 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37892

முஸ்தாக்கு கவிதைன்னா எனக்கு கரும்புதான்,ஆனால் இப்ப கட்டுரையிலும் கலக்கி இருக்கிறார்.இதை பார்க்கும்பொழுது சிறுவயதில் அவரோடு சேர்ந்து நானும் மற்ற நண்பர்களும் இணைந்து ஒரு கையெழுத்து பிரதி நடத்தினோம். அந்த மலரும் நினைவுகள் இதயத்தை தொட்டது.

கற்றல் என்பது கடல் போன்றது அதற்கு எல்லையே இல்லை. ஆனால் அதை ஏட்டுசுவடியில் கிடைப்பதைவிட அனுபத்தில் கிடைக்கும் கற்றல் வலிமையானது என்பதை உங்கள் கட்டுரை சொல்லுகிறது. அதிலும் ரெயில் பயணியிடம் கற்றது உண்மையிலேயே புதியதாக இருந்தது.

பொதுவாக கட்டுரைகளில் தனி நபர் புகழாரம், தனிப்பட்ட பெயர்கள் விவரிக்கபடாமல்,பொதுவாக இருப்பது கட்டுரையின் தரத்தை உயர்த்தும்.பொதுவாக வரையப்படும் கட்டுரைகள் சிறிய வட்டத்துக்குள் இல்லாமல் அனைவரையும் அசத்திவிடும்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். ஏதோ குறையாகவோ,வேறு கோணத்திலோ புரிந்து கொள்ள வேண்டாம். இதை விட இனிமையான நல்ல கட்டுரைகளை தாருங்கள்.

சுவாசிக்க என்னைபோன்று நிறைந்த வாசர்கள் உங்களுக்கென்று இருக்கிறார்கள்.

இதயத்தை ரம்மியமாக்கும் கோவாவில் இருந்து ஆரோக்கிய கவிதைகளை, கட்டுரைகளை தொடருங்கள்.உங்கள் இனிய கலை பனி தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை என் இனிய நண்பனுக்கு காணிக்கை ஆக்குகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved