Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:37:37 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 154
#KOTWEM154
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 5, 2014
பொதுச்சேவையில் இணைவோம் வாரீர்!

இந்த பக்கம் 2643 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்...

நீங்கள் உங்கள் மேஜையில் இருக்கும் லேப்டாப் மூலம் தட்டச்சு அடித்து, நினைத்த இணையதளங்களுக்கு அனுப்பி விடுவீர்கள். அறிவும், படிப்பும், திறமையும் உங்களிடம் உள்ளது. என்னிடம் எழுதும் திறன் உங்களை விட குறைவுதான். இருந்தபோதிலும் நமதூர் இணையதளத்தில் 42 பொதுக் கட்டுரைகள் எழுதி, 28.12.2013 அன்று ஓர் இணையதளம் மூலம் “எழுத்தாளர்” விருது பெற்றேன். என்னுடன் இன்னும் மூவரும் விருது பெற்றனர். எங்களுக்கு எழுத்துத் திறன் இருக்கப்போய்தானே சிறந்த விருது கிடைத்தது? (அல்ஹம்துலில்லாஹ்!)

எழுதிய கட்டுரைகளை உலகறியச் செய்ய தட்டச்சில் யாரும் அடித்துத் தர முன்வர மாட்டேன் என்கிறார்கள். “உரிய பணம் தருகிறேன்” என்று கூறினாலும், “இரண்டு பக்கங்களுக்குள் தந்தால் அடித்துத் தருகிறேன்” என்று கட்டுப்பாடு போடுகிறார்கள். சிந்தனை ஆற்றை கிணறாக்கி கொடுக்க முடியவில்லை. இந்த இணையதளத்திற்கு கட்டுரை கடைசியாக 6 மாதங்களுக்கு முன் எழுதியதாக ஞாபகம்.

“புல்ஸ்கேப் பேப்பரில் எழுதினால் தட்டச்சில் முக்கால் பக்கம் வரும் எழுத்தில் அச்சடிக்கனும். ஆனால் பூதக்கண்ணாடி எழுத்து மாதிரி அரைப்பக்கம் வீதம் பெரிய எழுத்தில் அச்சடிக்கிறார்கள். எது சொன்னாலும் துரத்திவிடும் பார்வை. வெளியூர்களில் போய் கொடுத்தால், முஸ்லிம்களின் பெயர்கள், அரபி வார்த்தையைத் தட்டச்சு செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை.

நிலைமை இப்படியே போனால் நான் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன். என்னால் சாப்பிடாமல் ஒருநாள் பூராவும் இருக்க முடியும். ஆனால் நினைத்த கட்டுரைகளை தினமும் எழுதி வைக்காமல் என்னால் இருக்கவே முடியாது. எனது எழுத்தாணி 40 வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் இருந்து விழித்து வந்து நள்ளிரவில் உதயமான பல வரிகளை எழுதி வைக்க என ஒரு டைரி வைத்துள்ளேன். அதை தேவைப்படும் காலம் சேர்ப்பேன். எழுதுவேன். யாரையும் தாக்க மாட்டேன். “பேனாதானே மூளையின் நாக்கு?”

ஊரில் அனைத்து இயக்கத் தலைவர்களுடனும், அவர்கள் இயக்க மக்களுடனும் அன்பும், பாசமும் உள்ளவன். எனக்கென்று ஒரு இயக்கம் மனதில் ஒரு இடத்தில் ஒட்டி இருக்கிறேன். நீங்கள் கட்டுரையைப் படித்துப் பாராட்டி, புகழ் வார்த்தை வீசியதால்தான் இந்த அளவு உயர்வு புகழ் ‘விருது’ கிடைத்திருக்கிறது. நீங்கள்தான் அறிவாளி - நான் அந்த அளவுக்கு இல்லீங்க!

நான் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கிறேன். சிறப்பான பாரம்பரியமிக்க வணிகர் குடும்பம்! என் மருமக்கள் படித்த பட்டதாரிகள். டாக்டர் கிஸார் DCH என் மருமகன். இன்னொரு மருமகன் அமெரிக்காவில். மற்றொரு மருமகன் சஊதியில். வேறு மருமகன் பி.ஆர்க். துபையில். பேத்தி இருவர் ஆலிமாக்கள். எனது பொழுதுபோக்கு எழுதுவதும், உருவமற்ற ஓவியம் கற்றுக்கொடுப்பதும். அவ்வளவுதானுங்க. மேடைப் பேச்சு வராது. பொதுச் சேவையில் சந்தோஷம்.

நான் சென்னையில் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவன். மண்ணடியில் சொந்த வீடு சௌகார்பேட்டை சைனா பஜார் (வளைவில்) வெளிநாட்டுக்கு ஆர்டர் பொருட்கள் ஏற்றுமதி தொழிலா என் தந்தை ஆரம்பித்து வைத்தார்கள். தந்தையும், நல்வணிகர். இலங்கை புறக்கோட்டை சம்மாங்கோட் பள்ளி இருக்கும் வீதியில் 70 வருடக் கடை இருந்தது.

நான் பொதுச்சேவை செய்வதில் ஆர்வம் மிக்கவன். சென்னையில் இருந்தபோது சென்னை முழுதுமுள்ள நகைக்கடைகளில் சேல்ஸ்மேன், கவுண்டர் பாய்ஸ், டேலி அக்கவுண்டன்ட், எடுபிடி சிறுவேலைக்கு நமதூர் பிள்ளைகள் 500க்கும் அதிகம் சேர்த்துள்ளேன். (இதற்காக எந்தப் பிள்ளையிடமும் கமிஷன் பெற்றதில்லை.) எல்லாம் பொதுச்சேவை மனப்பான்மையில்தான். அப்படி நானே பிரியப்பட்டு தேர்ந்தெடுத்துக்கொண்டு பணி செய்தேன். சென்னையை விட்டு 2007இல் ஊர் வந்து தங்கினேன். 2004இல் கேரி பேக் ஒழிப்பு இயக்கத்தைத் துவக்கி, நான் எந்தப் பொருளையும் துணிப் பையில் வாங்கிச் செல்வேன். யாரையும் கட்டுப்படுத்த மாட்டேன். அதுபற்றி தனிக்கட்டுரை தருகின்றேன்.

2004இல்தான் உருவமற்ற ஓவியம் கற்றுத் தர என் வீட்டு மாடியில் நேரடி ஓவியப் பயிற்சிப் பள்ளி - விடுமுறைக் காலங்களில் மட்டும் துவக்கி, இரண்டு ஆண்டுகள் இலவசமாக கற்றுத் தந்தேன். 2010 முதல் அருகாமையிலுள்ள பள்ளியில் ஓவிய மாஸ்டர் ஆனேன். (இது தனிக்கட்டுரை மூலம் விவரிக்க வேண்டும்.) எனது பொதுச்சேவையில் என்னைக் கிண்டல் அடிப்பவரை நான் அறிவேன். அதே வேளையில் பாராட்டுபவரை மறந்ததில்லை. இரண்டு வகையான மக்களால்தான் உலகம் ஆளப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்.

நமதூரில் பொதுச் சேவை எப்படி நடக்கிறது?

பொதுச் சேவை நமதூரில் சிறப்பாக நடத்துகிறார்கள். வெளிநாட்டில் கடின வேலை பார்த்து அவர்கள் நிம்மதியாக சம்பாதித்து உறங்காமல், தான் பிறந்த மண்ணுக்கும், அதில் பிறந்த ஏழை - எளியோர், முதியோர், ஊனமுற்றோர், ஏழை விதவைப் பெண்கள் அனைவரின் கல்வி நலன், வைத்திய உதவி, சிறுதொழில் உதவிக்காக தன் பணத்தை ஒதுக்கித் தருவதை மனதாரப் பாராட்டுகிறேன். கல்விக்காக இக்ராஃவைத் துவக்கினார்கள். அதில் நூறு சதம் வெற்றி கண்டதால் படிப்படியாக ஏழை காயல் வாசிகளுக்கு வைத்திய உதவி, வசதியற்ற காயல் வாசிகளுக்கு சிறுதொழில் உதவியும் செய்து வருவது அறிந்து, நான் எனது நண்பர் இக்ராஃ தர்வேஷ் மற்றும் ஷிஃபா ஸிராஜியையும் சந்தித்து, ஊரில் பல ஏழைகளுக்கு உதவி பெற்றுத் தந்து வருகிறேன். எனக்கு இதனால் மன அமைதி ஏற்படுகிறது.

ஊரின் நாலாபக்கமும் - குறிப்பாக காயிதேமில்லத் நகர் முதல் கோமான் தெரு வரை, பெரிய நெசவுத் தெரு முதல் கொச்சியார் தெருவைத் தாண்டியும், சுலைமான் நகர் சுனாமி நகர் முதல் ஜெய்லானி காலனி சீதக்காதி நகர் வரை எல்லா மக்களிடமும் நான் நடந்தே போய் இப்படி ஒரு திட்டம் இருப்பதை அந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கூறுகின்றேன். இதற்காக பலர் பொதுச் சேவையர் இருக்கிறார்கள். எனக்கு ஒரு ஆசை. ஊர் முழுக்க ஐநூறு பேருக்காவது வைத்திய உதவி, சிறுதொழில் உதவி (கடன் - வட்டி கிடையாது) கல்வி உதவி வாங்கித் தர ஆவலாக இருக்கிறது. ஏழைப் பெண்கள் என் வீட்டு முகவரிக்கு வரலாம். வசதியற்ற ஆண்கள் தாயிம்பள்ளி முஅத்தின் அலி பாய் அல்லது கே.டி.எம். தெரு ஆயிஷா கடை உஸ்மானிடம் கோரிக்கை மனு தரலாம். அங்கு என்னை சந்திக்க வரலாம். அவர்கள் இருவரும் நான் வரும் நேரம் சொல்வார்கள். தகவல்கள் உண்மையாக இருத்தல் வேண்டும். அல்லது மனு நிராகரிக்கப்படும்.

காயல் வாசிகளுக்கு மட்டும் இதன் விபரங்களை நேரில் சொல்கிறேன். உதவிக்கரமாக உலகம் பூராவும் உழைத்து வாழும் வாலிபர்களுக்கு நீங்கள் துஆ செய்து வாழ்த்துங்கள். நான் அவர்களின் உதவி அமைப்புக்கு உற்ற நண்பன். அவ்வளவுதான்.

காயல் நகர் அல்லாதவர்களுக்கு இத்திட்டத்தில் இடம் உள்ளதா?

காயல் நகரில் பிறந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மற்ற படி வேறு ஒரு வகையில் உள்ளது. நேரில் கேட்கவும். இதுபற்றி விளக்கம் தரப்படும். ஒரு சமயம் ஒருவர் தொழிலுக்கு 79 ஆயிரத்து 900 ரூபாய் உதவி கேட்டு மனு ஆபிஸில் கொண்டு கொடுத்தார். இவ்வளவு தொகையெல்லாம் தர மாட்டார்கள் என்று கூறியதால், அடுத்த நாள் பாதிப்பணம் கேட்டு மனு தந்தார். இப்படிப்பட்டவர்கள் மனு நிராகரிக்க வழி உண்டு. (சில தேவை சிறுதொழில் உதவிக்கு மட்டும் பணம் பெற்றுத் தருகிறேன்.)

உலகளாவிய காயல் மன்ற அமைப்பினர்கள் நம்மூரில் படித்த பிள்ளைக்கு அவர்கள் வாழும் நாடுகளில் வேலை வாங்கித் தந்து வழிகாட்டியாகலாம். ஊரில் 65 வயது ஏழை ஆண் பெண்கள் அறிந்து உதவிப்பணம் தரலாம். இத்திட்டத்திற்கு நான் எப்போதும் இலவச சேவை செய்ய விரும்புகிறேன். என்னை இதில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். நன்றி.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Milk
posted by: Eassa Zakkairya (Jeddah) on 05 November 2014
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 38018

"தாய் பாலுக்கு விலை பேசும் கலியுகத்தின் தாய் மடுவாக A L S மாமா" அவர்களுக்கு கிருபையுள்ள ரஹ்மான் நீடித்த ஆயுளையும் நிலையான பரகத் தையும் தந்தருள் புரிவானாக - ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 05 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

மாமா உங்களுடையபடைப்புகளை வாசித்துவருகிறேன் எழுத்துநடையும் நேர்த்தியும் எளிமையும் நயமும்கூடியதாகவே இருக்கும், எட்டிவைக்கும் நோக்கம் மிகசிறப்பாக இருக்கும் மாஷா அல்லாஹ், வயதுகூடிவரும்போதும் எழுத்தில் இளமைவேகவிவேகங்கள் நலிந்திடவில்லை மாஷா அல்லாஹ் சேவைமனமும் அயர்ந்து உதிர்ந்துவிடவில்லை அல்ஹம்துலில்லாஹ் உங்களின் ஆதங்கங்களைக்உடைந்தமடையாகக் கொட்டியிருக்கிறீர்கள், உங்களுக்கு சொல்லித்தரும் அளவிற்கு வயதோ அனுபவத்திறமையோ சிறிதளவும் இல்லாதவன்நான் இறைவன் மிகப்பெரியவன். இது கணனியுகம் இனியாருடையபடைப்புகளையும் எப்படிப்பட்டபடைப்புகளாக இருந்தாலும்சரி அவைகளை கரையானாலோ அல்லது இடைச்செருகளாலோ சிதைத்துவிடமுடியாது.

உங்களுடையபடைப்புகளை ஒளிஒலிவடிவத்திலோ,ஒலிவடிவத்திலோ பதிவுசெய்துவிடுங்கள் இப்பொழுதுதான் கைக்குக்கை கைகையடக்கப்பேசிகளும் தோள்களில்தொங்க்கும் மடிக்கணினிகளும் மலிந்துவிட்டனவே, இன்னும் தட்டச்சுமுறைகள் இணையதளங்களில் எளியவடிவில் நிறைந்துகிடைக்கின்றன. ஆதலால் இலகுவாக எழுதிவிடமுடியும் உங்களுடைய ஆக்கங்களில் சிலவற்றை எனக்குபேசி ஒலி அல்லது ஒளிஒலிவடிவில் மின்னஞ்சலில் அனுப்பித்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் கூடியபட்சம் விரைவாக எழுதி அனுப்பிவிடுகிறேன் அதுபோல் ஊரிலுள்ளவர்களிடமும் பகுதிபகுதியாகப்பிரித்துக்கொடுத்தால் உங்களுடையபடைப்புகளை பதிவெழுத்தாக்கங்களாக மாற்றிவிடலாம் இச்சிறியோனின் இந்தமுறையீட்டில் ஏதேனும் பிழையிருந்தால் பொருத்தருளவேண்டியது இறைவன் மிகப்பெரியவன்.

வல்ல இறைவன் உங்களுடைய வாழ்நாளை நீமாக்கி ஆற்றல்களை ஒங்கச்செய்து சேவைகளுக்கும்,தரும்ஊக்கங்களுக்கும் நல்லபலனை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ALS.....Vs ASL
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 07 November 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38051

கணினியில் ஒரு சங்கேத வார்த்தை உண்டு. அது ASL .ஒருவரது CV தயார் செய்யும் போது அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது AGE - SEX - LOCATION . வயது, பாலினம் வசிப்பிடம். இது இல்லாத CV க்களை காண முடியாது . அவ்வளவு முக்கியமான குறிப்புக்கள் இவை.

கணினியில் எவ்வளவு முக்கியமான இடத்தை ASL வகிக்கிறதோ அந்த அளவு உண்மை ALS நமதூர் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்து இருக்கிறார்கள். நகைச் சுவையான மனிதர் என்றாலும் தன் எழுத்தாற்றலால் எல்லோரையும் கவர்ந்தவர். நமக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு கவலை இல்லை. தான் சொல்ல நினைத்ததை எழுத்து மூலமாக நம் கையில் திணித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கருத்துக்களை திணிக்க மாட்டார்கள். அது நமது சாய்ஸ்.

இப்படிப் பட்ட மாமாவை சீதக்காதி நினைவு நூலகத்தில் நான் சந்தித்து பல நூறு நூல்களை அன்பளிப்பு செய்தேன். அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பையும் அந்த நூலக ஏட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

மாமா அவர்கள் மனம் திறந்து இந்த மடலை எழுதி இருக்கிறார்கள். அவர்கள் தேவைகள் ஆசைகள் என்ன என்று குறிப்பிட்டுள்ளார்கள். பணம் மூட்டையை மனதுக்கு மேலே வைக்காமல் அதை தன் இதயத்துக்கு கீழே ஓரமாக வைத்து விட்டு நடை போடுகிறவர்கள் - நேற்றைய ஹிந்து தமிழ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரைபோல் - எந்த சுமையும் இல்லாமல் சுதந்திரமாக நிம்மதியாக இருப்பார்கள். மாமாவும் அப்படித்தான். ஆனால் அவர்களுக்கு மக்களுக்கு சேவை சேவை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் தாகம் மட்டும் தணியாமல் இருக்கிறது. இனிமேலும் நமதூரில் உள்ள தொண்டு நிறுவனங்கள் அவரை பயன்படுத்த தவறினால் அது அவரது தவறில்லை, நமது அறியாமைதான்.

மாமாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் நோயற்ற வாழ்வையும் கொடுத்தருள்வானாக. உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதற்கான வடிகால் நிச்சயம் கிடைக்கும்.

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும்.
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்.

உங்கள் பசியும் ருசியும் புரிகிறது. அதை புரிந்து கொள்ளும் நல்ல உள்ளங்கள் வெகு விரைவில் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ வழி வகுத்து கொடு ! நீ வாழ்த்தப்படுவாய் !
posted by: K.V.A.T.HABIB MOHAMED (QATAR) on 07 November 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 38055

ஏ.எல் .எஸ். மாமா அவர்கள் ஒரு சிறந்த சமூக சிந்தனை வாதி, எழுத்தாளர், ஓவியர், பிள்ளை மனம் கொண்ட வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர். சரியோ தவறோ அவர்கள் மனதுக்கு பட்டதை பட்டென்று எடுத்துரைப்பவர் , பொது சேவை செய்வதை ஒரு பொறுப்பாக நினைத்து செயல் படுபவர்.குறிப்பாக தான் சார்ந்த பகுதி மக்களின் மேல் தனிப்பெரும் பாசம் கொண்டவர். இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.

நமதூரில், ஏ.எல்.எஸ். மாமாவைபோன்றோர் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கின்றனர். மாமா அவர்களின் அடிமனதின் தாக்கம் இந்த கட்டுரை மூலம் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் ஆசையும் , எண்ணங்களும், நிச்சயம் வெற்றி பெரும். உங்கள் கருத்து ஆக்கங்கள் அனைவரையும் அடைவதற்கு இறைவன் ஏதோ ஒருவகையில் வழி வகுத்து தருவான்.

நீங்கள் செய்யும் பொது சேவை மக்களை சென்றடையும். வசதி யற்றவர்கள் வாழ வழிவகுத்து தர பாடு படும்போது, நீங்கள் ...உங்கள் குடும்பம் வாழும் ! வாழ்த்தப்படுவீர்கள் ! அதன் மூலம் பேரானந்தம் அடைவீர்கள். அல்லாஹ் துணை புரியட்டும் ! ஆமீன்.

உள்ளன்போடு வேண்டும் அன்பு மருமகன்
கே..வீ. ஏ.டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved