Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:38:06 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 155
#KOTWEM155
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 5, 2014
அறியாமல் உண்ணப்படும் தூய்மையற்ற உணவுகள்!

இந்த பக்கம் 4150 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

படைப்பினங்கள் அனைத்திற்கும் , படைத்தவன் உணவளிக்கிறான். அவனை வணங்குபவர்களுக்கு, வணங்காதவர்களுக்கு என்று மட்டுமல்ல அவனை நிராகரிப்பவர்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே!

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கடலில் வாழும் மீனுக்கும், வானில் பறக்கும் பறவைக்கும் , பூமியில் வாழும் மிருகங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் இறைவன், படைப்பினங்களிலேயே சிறந்த படைப்பான மனித குலத்தை பார்த்து சொல்கிறான், “ அனுமதிக்கப்பட்டதையும், தூய்மையானதையுமே! உண்ணுங்கள் “ என்று, ஆகவே இறைவனால் அனுமதிக்கப் படாததையும் தூய்மையற்றதையும் உண்ணுவது அறிவுடைமையாகாது.

ஹலால் என்னும் அனுமதிக்கபட்ட உணவு என்பது இரண்டு வகையான பொருளைக் குறிக்கிறது. முதன்மையானது இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதும், இரத்தம், சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை இல்லாமல் (ஹலாலான) அனுமதிக்கப்பட்ட உணவுகளாகும். இரண்டாவது, வட்டி, சூது மற்றும் பிறரை ஏமாற்றி ஈட்டிய பணம் அல்லாமல் நேர்மையாக (ஹலாலாக) அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட உணவுகளாகும்.

இதிலே முதன்மையாக கூறப்பட்டதில் நாம் அனைவருமே! கவனமாக இருந்து ஹராமானவைகளைத் தவிர்த்து, ஹலாலானவைகளை உண்போம் – அதில் மாற்றுக்கருத்து இருக்காது.

ஆனால் இரண்டாவதாக கூறப்பட்டதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோமா என்றால் நிச்சயமாக இருக்காது. இன்று நம்மிலே பலர் ஹராமான சம்பாத்தியத்திலேயே மூழ்கிவிட்டதால் – ஹலாலான அனுமதிக்கப்பட்ட உணவு என்பது அவர்களிடம் இல்லை என்றே கூறலாம். அனுமதிக்கப்படாத (ஹராமான) உணவை உண்பவர்களின் பிரார்த்தனைகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?. மேலும் அனுமதிக்கப்படாத ஹராமான உணவை உண்பதன் காரணத்தால் பலவிதமான நோய்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை வாட்டி வதைக்கிறது. எனவே, இறைவனின் கட்டளைப்படி அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியில் சம்பாதித்த உணவையே! உண்ண வேண்டும். அதுதான் மேன்மையைத் தரும் – மன அமைதியை நல்கும்.

அடுத்து தூய்மையான உணவையே உண்ணும்படி இறைவன் வலியுறுத்துகிறான். தூய்மையானது என்பது உணவின் தூய்மையைத்தான், என்னதான் நாம் (ஹலாலான) அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதித்த பணத்தில் ஹலாலான உணவுகளை வாங்கினாலும் அவைகளை முறையாக கெட்டுப்போகாமல் பார்த்து சாப்பிட்டாலே, அது தூய்மையானது ஆகும்.

இன்று நம்மிலே பெரும்பாலோர் அறியாமையால் அல்லது கவனக்குறைவால் தூய்மையான உணவை சாப்பிடுவதில்லை – இதை நாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். எந்த உணவையும் அது கெட்டுப்போகாமல் தூய்மையாக இருக்கிறதா என்பதை நன்கு பார்த்தே! உண்ண வேண்டும். அது கெட்டுப்போய் இருந்தாலோ அல்லது அதில் துர் வாடை (கெட்டுப்போன வாசனை) வந்தாலோ அவைகளை உண்ணவும் கூடாது பிறருக்குக் கொடுக்கவும் கூடாது.

உதாரணமாக சொல்வதானால் நாம் இறைச்சியை வாங்குகிறோம் அது ஹலாலாக அறுக்கப்பட்டதுதான், ஹலாலான பணத்தில் வாங்கியதுதான் இருந்தாலும் ஏதோ காரணத்தால் கெட்டுப்போய்விட்டது அல்லது சமைத்தப்பின் கெட்டுப்போய்விட்டது என்றாலும்கூட அதை கீழே கொட்ட வேண்டுமே தவிர, அதிக பணம் கொடுத்து வாங்கினோமே என்பதற்காக அதை நாம் சாப்பிடவோ அல்லது பிறருக்குக் கொடுக்கவோ கூடாது. அப்படி அதை சாப்பிட்டோமேயானால் அதன்மூலம் பல நோய்கள் நம்மை வந்து தாக்கும், எனவே என்றும், எப்போதும் தூய்மையான உணவையே சாப்பிட வேண்டும்.

இன்றைய மக்கள் வித,விதமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும், வித, விதமாக புதினமான உணவுகளை விருந்தினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பி செய்கிறார்களே! தவிர, அந்த உணவுகளின் தன்மை என்ன, தரம் என்ன அந்த உணவுப்பொருட்களின் காலாவதி (EXPIRY DATE) எப்போது என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. ஏதோ மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கிறது அல்லது அவர்களுக்கு அந்த பொருள் புதிதாக இருக்கிறது என்பதற்காக தரமற்ற உணவு பொருட்களை வாங்கி வந்து சமைப்பது அறிவுடைமையாகாது.

நாகரீக மோகம் காரணமாக இன்று குமரிப்பெண்கள் கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவது பெருகிவிட்டது ஒருபக்கமிருக்க, அவர்கள் வாங்கி வரும் பொருட்களாவது நன்றாக இருக்கிறதா என்றால் இல்லை – எக்ஸ்பையரியான பொருட்களையும், உடலுக்கு கெடுதியான பொருட்களையுமே வாங்கி வருகின்றனர் – இப்படி படித்த நாகரீகம் தெரிந்தவர்களே! பொருட்களை தரம் பார்த்து அதன் எக்ஸ்பையரி டேட் பார்த்து வாங்காமல் வருவது வேதனையிலும் வேதனை.

எல்லா பொருட்களிலுமே அதை தயாரித்த தேதி, அதை எவ்வளவு நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்று (EXPIRY DATE) காலாவதியாகும் தேதியையும் குறிப்பிடுகிறார்கள் எனவே அவைகளை கவனித்து பார்த்து வாங்க வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மருந்து வகைகள், உணவுப் பொருட்களை மிக, மிக அவசியம் கவனித்து பார்த்து வாங்க வேண்டும்.

சில கடைகளிலே, பொருட்களில் பிரிண்ட் ஆகியிருக்கும் எக்ஸ்பையரி தேதியை கிழித்து / அழித்து விடுகிறார்கள் அல்லது அந்த தேதிகளின் மேலேயே ஸ்டிக்கரை ஒட்டி அதன்மேல் விலையை எழுதியிருப்பார்கள். அதனால் நமக்கு அந்த பொருட்களின் எக்ஸ்பையரி டேட் தெரியாமல் போய்விடும். இதை கவனித்து வாங்கினால் தூய்மையற்ற உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

சில உற்பத்தியாளர்கள் செய்யும் வியாபார தந்திரம் என்னவென்றால் ஒரு பொருளின் காலாவதியாகும் தேதியை குறிப்பிட எக்ஸ்பையரி டேட் என்று குறிப்பிட்டால் மக்கள் அவைகளை எழிதில் தவிர்த்துவிடுவார்கள் என்பதற்காக “ பெஸ்ட் பிஃபோர் 6 மன்த்ஸ் ஃப்ரம் பேக்கேஜிங் ஆஃப் மனுஃபேக்ஷரிங் “ என்று மொட்டையாக குறிப்பிடுகிறார்கள். இப்படி எழுதினால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் – 6 மாதத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது , 6 மாதத்திற்கு பிறகு சாப்பிடுவதால் பாதிப்பு ஒன்றும் இருக்காது ருசிதான் குறைவாக இருக்கும் என்பதாகவும் – அதில் “எக்ஸ்பையரி டேட்” என்று குறிப்பிடவில்லையே! அதனால் பாதிப்பு இல்லை என்ற எண்ணத்தையும் மக்கள் மனதிலே உருவாக்கக்கூடிய விதத்தில்தான் இப்படி செய்கிறார்கள் – இது தவறு.

அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் போன்ற விளையும் பொருட்களுக்கு சரியான காலாவதி தேதியை நிர்ணயம் செய்ய இயலாது. அவைகள் விளையும் நிலம், காலத்திற்கு ஏற்றவாறு அதனதன் தன்மையைப் பொறுத்துதான் அதன் எக்ஸ்பையரி தேதியை நிர்ணயிப்பார்கள். அதனால் விளைப்பொருட்களுக்கு பெஸ்ட் பிஃபோர் என்று குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதே!. ஆனால் விளைப்பொருட்களை உரு மாற்றினாலோ, பண்டங்களாக செய்தாலோ அதன் தன்மை மாறிவிடும். அதன் தன்மை மாறிவிட்டால் அதற்கு தகுந்த காலாவதியை (Expiry Date) கண்டறிந்து அதை குறிப்பிட்டுதான் விற்க வேண்டும்.

ஆகவே விளைப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களுக்கு அதில் குறிப்பிட்டிருக்கும் ” பெஸ்ட் பிஃபோர் “ என்பதையே காலவதியாகும் (Expiry Date) தேதியாக கருதி, அதில் மக்கள் விழிப்புணர்வுடனிருந்து எக்ஸ்பையரி டேட்டை கவனித்துப் பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும்.

மேலும் பொதுவாக பொருட்களை வாங்கும்போது சில விசயங்களை கடைபிடிப்பது நல்லது - சமைக்காமல் நேரிடையாக அப்படியே உண்ணக்கூடியவைகளான பிஸ்கெட், சாக்லெட், குளிர்பானங்கள் போன்றவைகள் மற்றும் குழந்தை உணவுகளை எக்ஸ்பைரி டேட் அதிகமாக இருப்பதையும் அதாவது 6 மாதத்திற்குள் உபயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் குறைந்தது 3 மாதம் டைம் இருக்கிறதாக பார்த்து வாங்க வேண்டும்.

அதே நேரத்தில் சமைத்து சாப்பிடக்கூடிய ரவா, சேமியா, மாவு வகைகள், தானிய வகைகள் போன்றவற்றுக்கு 1 மாதகாலம் அல்லது 15 நாட்கள் டைம் இருந்தாலும் வாங்குவதில் குற்றமில்லை. ஆனால் அந்த தேதிக்குள் சமைத்து சாப்பிட வேண்டும். எந்த ஒரு பொருளையும் எக்ஸ்பைரி டேட் பார்த்து வாங்கி விட்டால் மட்டும் போதாது – அது எக்ஸ்பைரி ஆகும் முன்பு அதை உபயோகித்துவிட வேண்டும் – தவறினால் அது உடலுக்கு கெடுதியை உண்டாக்கும். எனவே, எக்ஸ்பைரி டேட்டை பார்த்து வாங்குவதில் மக்கள் மிக கவனமாக இருப்பது நல்லது.

குளிர்சாதனப் பெட்டியில் அவசியமின்றி உணவு பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இறைச்சிகளை சமைத்து ஃப்ரிட்ஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடுகிறார்கள் இது தவறு, அன்று சமைத்ததை அன்றைய தினமே சாப்பிடுவதுதான் நல்லது. ஏதோ ஒரு நேரம் கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அதை மறுநாளே சாப்பிட்டுவிட வேண்டும். எந்த ஒரு உணவையும் ஃப்ரிட்ஜில் வைத்தால் நாள் ஆக, ஆக விஷத்தன்மை ஏற்படத்தான் செய்யும் – அதனால் அந்த உணவு தூய்மையான உணவாகாது.

இன்னும் சில வீடுகளில் ஆட்டிறைச்சி, தலை, கால், குடல், ஈரல், காடை, கெளதாரி மற்றும் கோழி இறைச்சியை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள், இப்படி வாரக்கணக்கில் வைக்காதீர்கள் என்று சொன்னால், அதற்கென்ன டீப் ஃப்ரீஸரில்தானே வைத்திருக்கிறோம் – நாங்கள் சவுதியிலே, துபாயிலே, லன்டனிலே அமெரிக்காவிலே (என்று வெளிநாடுகளின் பெயர்களை சொல்லி அங்கு) உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வந்து டீப் ஃப்ரீஸரில் மாதக் கணக்கில் வைத்திருந்து சாப்பிடுகிறோம், ஒன்றும் கெடுவதில்லையே! என்கிறார்கள்.

அவர்கள் சொல்வது என்னவோ உண்மைதான்! காரணம் சூப்பர் மார்க்கெட்டில் விற்பது பதப்படுத்தப்பட்டது, ஒரு மாதம் என்ன பல மாதங்களுக்கும் கெடாமல் இருக்கும். ஆனால் நீங்கள் இங்கே கறிக்கடையில் வாங்கியதை பதப்படுத்தாமல் வைப்பதால் சில தினங்களே! கெடாமல் இருக்கும்.

மேலும் வெளிநாடுகளில்கூட ஃப்ரஷ் சிக்கன் / ஃப்ரஷ் மட்டன் என்று அன்றைய தினம் அறுத்ததை பதப்படுத்தாமல் ஃப்ரஷ்ஷாக பேக் செய்து வைத்திருப்பார்கள் – அதில் 2 அல்லது 3 நாட்களில் காலாவதியாவதை (EXPIRY DATE) குறிப்பிட்டிருப்பார்கள் – அவைகளை நாம் அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட முடியாது அப்படி சாப்பிட்டால் உடலுக்கு கேடுதான்.

ஆனால் ஃப்ரோஜன் (பதப்படுத்தப்பட்ட) அயிட்டங்கள் 6 மாதம் அல்லது 9 மாதத்திற்கு பின்தான் காலாவதியாகும். எது எப்படியானாலும் மேலே கூறப்பட்ட அத்தனையும் உடலுக்கு கேடு விளைவிப்பவையே! ஃப்ரிட்ஜ் / ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவதை தவிர்த்தால் அந்த உணவு தூய்மையான உணவாகும்.

பால், தயிர், கடல்பாசி, கேரமல் என்று பலவற்றையும் நாட்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதல்ல. அட்டைப்பால் (LONG LIFE MILK), ஜூஸ் இவைகளை ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டியதில்லை 6 மாதங்கள் வரை காலாவதியாகாமல் இருக்கும். ஆனால் பாக்கெட்டை ஒப்பன் செய்துவிட்டால் அவசியம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் – மேலும் அதை 3 நாட்களுக்குள் உபயோகப்படுத்திவிட வேண்டும்.

இதை சில மக்கள் அறியாமல் 7,8 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிப்பர். இப்படி கெட்டுப்போனவைகளை சாப்பிடுவதால்தான் சிறுக, சிறுக விஷத்தன்மைகள் உருவாகி சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் நம் உடலிலே சேமிப்பாகி , பலவிதமான நோய்கள் உருவாகிறது – சில நேரம் கேன்சர் நோய் வரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மேலும் முழுமையாக வேக வைக்காத புரோஸ்டெடு சிக்கன், கிரில் சிக்கனை (இவைகளெல்லாம் வியாபாரம் விடுபட்டுவிடக்கூடாதே! என்று அரை,குறை வேக்காட்டுடன்தான் சப்ளை செய்யப்படுகிறது), தவிர்க்க வேண்டும், மற்றும் இயற்கையாக பழுக்காத - கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள் எல்லாம் தூய்மையான உணவுகள் அல்ல – இவைகள் எல்லாம் வியாதியை உண்டு பண்ணுபவைகளே!.

அரைத்து பாக்கெட்டில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு – இவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே! முதல்நாள் விற்காத மீதமான மாவை மறுநாள் அரைத்த மாவுடன் கலந்து விற்கிறார்கள் – அரைக்கும் இடங்களில் சுத்தம் பேணப்படுவதில்லை. வாங்கிய மாவில் கரப்பான் பூச்சி அரைகுறையாக கிடந்ததை பார்த்தபின் வெளியில் வாங்குவதை நிறுத்தியவர்களும் உண்டு. எனவே, இவைகளும் தூய்மையான உணவாகாது.

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் – இன்று பெரும்பாலான மக்கள் மைதாவினால் செய்யப்பட்ட “ புரோட்டா “ வையே மிகுதியாக சாப்பிடுகின்றனர் – இதை சாப்பிடுவதாலேயே உடலில் பல நோய்கள் உருவாகின்றன என்று டாக்டர்களும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர் அதை எவரும் காதில் போடுவதில்லை.

மேலும் மைதாவினால் தயாரித்த புரோட்டவை சாப்பிடும் மக்களில் எழுபத்தியைந்து (75%) சதவீத மக்கள் மலட்டு தன்மை அடைகின்றனர் என்ற கூற்றும் நிலவி கொண்டிருக்கிறது. – இந்த செய்தி உண்மை என்பதற்கான சாத்திய கூறுகளை இன்று நாம் காணமுடிகிறது. எனவே, இந்த தூய்மையற்ற உணவை சாப்பிடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ரோட்டோரம் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சுத்தமில்லாமல் செய்யப்படும் ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஹோட்டல் உணவுகளில் என்னென்ன கலப்படங்கள் உள்ளன, எந்த எண்ணையில் தயார் செய்கிறார்கள் என்பது நமக்கு உறுதியாக தெரியாது என்றாலும் கூட, ரோட்டோரம் அடுப்பு வைத்து உணவை அவர்கள் தயார் செய்கிறது நமது கண்களுக்கு நன்றாக தெரியத்தான் செய்யும்.

அவர்கள் ரோட்டோரத்தில் திறந்த வெளியிலே உணவு தயாரிக்கும்போது, அந்த உணவில் மரத்தின் மேலிருந்து விழும் காக்கையின் எச்சம், ரோட்டிலே செல்லக்கூடிய வாகனங்களின் புகை, வாகனத்திலே செல்வோரின் எச்சில் மற்றும் தும்மல் காற்றில் பறந்து வந்து அந்த உணவிலே விழுந்து அதன் சுவையை! அதிகப்படுத்துகிறதா?.

இல்லை அந்த இடத்தை சுற்றியுள்ள குப்பைக்கூளங்களின் துர்வாடை, நாய்,பூனை,ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற மிருகங்களின் உடல் சிலிர்த்து அதனால் வரக்கூடிய நீர், தூசி போன்றவைகள் அங்கே தயாரிக்கப்படும் உணவில் கலக்கிறதே! அதனால் அந்த உணவின் சுவை அதிகப்படுகிறதா? எனவே, ரோட்டோரம் தயார் செய்யப்படும் எந்த உணவும் தூய்மையான உணவாகாது – ஆகையால் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ரோட்டோர ஹோட்டல்கள் சமையலை அதாவது உணவு தயாரிப்பதை ஹோட்டலுக்கு உட்புறம் சுகாதாரமாக வைத்து தயார் செய்து, வெளியே கண்ணாடிப் பெட்டிக்குள் உணவை பாதுகாப்பாக, சுத்தமாக வைத்தார்கள் என்றால் – அது தூய்மையாக இருந்தால் அந்த ஹோட்டல்களிலே அவசியத் தேவைக்கு வாங்கலாம். அதல்லாத சுகாதாரம் பேணாத ஹோட்டல்களிலே வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடுவதிலே தூய்மையை கடைபிடிப்பதில்லை பொதுவாக எல்லா பழங்களையுமே தண்ணீரில் நன்றாக நனைத்து, கழுவி சாப்பிட வேண்டும் – சிலர் நினைப்பதுண்டு ஆரஞ்சு , வாழை, மாதுளை போன்றவற்றை தோலை உரித்துவிட்டு உள்ளே உள்ள சுளையைத்தானே சாப்பிடுகிறோம் அதனால் அவைகளை கழுவ தேவையில்லை என்று – அது தவறு.

அந்த தோலில் காக்கை எச்சம், சாணம் மற்றும் ஏதாவது அசுத்தங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் , அந்த பழங்களை கையில் பிடித்து உரிக்கும்பொழுது அந்த அசுத்தங்கள் உரித்த சுளையில் படும்தானே! அதன் மூலம் கிரிமிகள் அந்த பழங்களை தின்பவரின் உடலுக்குள் செல்ல வாய்ப்பாகிறது. ஆகவே எல்லாவற்றையும் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்தே சாப்பிட வேண்டும் – அது தேங்காயாக இருந்தாலும் சரி - அப்போதுதான் அது தூய்மையான உணவாகும்.

பழரசம் என்று ஜூஸ் கடைகளிலே விற்கிறார்களே! அவைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எல்லா கடைகளிலும் நல்ல பழங்களில் பழரசம் தயாரிப்பதில்லை. சிலர் அழுகிய , கெட்டுப்போன வண்டுகள் உள்ள பழங்களை நல்லப் பழங்களுடன் கலந்து போடுவதோடு , சுத்தம் செய்யாமல் , கழுவாமல் தயார் செய்கிறார்கள் அதனால் வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. எனவே இதுவும் தூய்மையான உணவாகாது.

நம்மில் பலர் டீ கடைக்கு சென்று டீ குடிக்கும்போது வடை, பஜ்ஜி போன்றவைகளை வாங்கி சாப்பிடுவர். அந்த வடை , பஜ்ஜி எண்ணையாக இருக்கிறது என்று நியூஸ் பேப்பரில் சுற்றித் தருவார்கள். அந்த நியூஸ் பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் விஷத்தன்மை கொண்ட “மை” நாம் திண்ணும் வடை, பஜ்ஜியுடன் சேர்ந்து நம் உடலுக்குள் சென்று விஷத்தை சேமிக்கிறது.

மேலும் கல்யாணம் மற்றும் விஷேசங்களில் விருந்து சாப்பிட்டுவிட்டு, கையை கழுவிய பின் நியூஸ் பேப்பர் கொண்டு, கையையும் வாயையும் துடைப்பர் இதன் மூலமும் பிரிண்ட்டிங் “மை” நம் உடலுக்குள் செல்கிறது. மேலும் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ குடிப்பதற்காக கப்பில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் டீ, காஃபி ஆறிவிடக்கூடாதே! என்று அதன்மேல் நியூஸ் பேப்பர் அல்லது ஏதாவது அட்டைப் போன்றவற்றால் மூடி வைப்பர். இதன் மூலமாகவும் விஷம் கொஞ்சம், கொஞ்சமாக நம் உடலுக்குள் செல்கிறது. இவ்வாறு உட்கொள்வதெல்லாம் தூய்மையான உணவாகாது என்பதை மக்கள் உணரவேண்டும்.

இப்படி கவனக்குறைவாக தூமையற்ற உணவுகளை உண்டு விட்டு, கொடூரமான கேன்சர் போன்ற நோய் வந்து விட்டால் – அவருக்கா இந்த நோய்!?? சீதேவியான மனிதரல்லவா? ஒரு பாவமும் அறியாதவர், எல்லோருடனும், அன்பாக, நல்ல பண்பாக பழகுபவர் என்று அவரை புகழ்ந்து பயனில்லை. உண்ணும் உணவு தூய்மையானதாக இருக்குமானால் இன்று நிலவிக்கொண்டிருக்கும் பல நோய்கள் நம்மை அணுகாது. எனவே, நாம் அனைவரும் உண்ணும் உணவு தூய்மையான உணவாக இருக்க கவனம் செலுத்தி , துய்மையான உணவையே உண்ணுவோமாக! அதற்கு இறைவன் அருள்பாலிப்பானாக!! ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: zakariya (chennai) on 05 November 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 38013

சில விஷயங்கள் மிகைபடுதபட்டு எழுதப்பட்டு இருந்தாலும் பயனுள்ள கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எதை தவிர்க்க வேண்டும் என்று கூறியவர் எவ்வளவு உன்ன வேண்டும் எனவும் கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இதற்கு நாம் எங்கு சென்றும் ஆராய தேவையில்லை நம்முடைய மார்க்கம் வலியுறுத்திய இரண்டு மடங்கு உணவு ஒரு மடங்கு தண்ணீர் ஒரு மடங்கு வெற்றிடம் என்பதை ஒவ்வொரு வேலை உணவு உண்ணும்போதும் கடைபிடித்தாலே போதும் நமக்கு எந்த நோயும் வராது.

இதை நம்முடைய பழக்கத்திற்கு கொண்டு வருவது சற்று கடினம் என்றாலும் ஒருவாரத்தில் நமக்கு பழகி விடும் ஆரம்பத்தில் இவ்வாறு உணவை சாப்பிடும் பொது உணவு உட்கொண்ட திருப்தியே இருக்காது. ஆனால் நம்முடைய நடைமுறைக்கு இந்த உணவு பழக்கம் வந்து விட்டால் அதிகமாக சாப்பிடுவதை நாம் வெறுக்க ஆரம்பித்து விடுவோம். காரணம் அளவோடு சாப்பிடும்போது கிடைக்கும் புத்த்யுயிற்சி அதிகமாக சாப்பிடும்போது கிடைபதில்லை தூக்கமும் வராது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. 'சுத்தமே விழிப்புணர்வு
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 05 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38014

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வபரக்காத்துஹு.

நம்மக்களிடம் விழிப்புணர்வென்பது பெரும்பாலும் வெகுவாக மறைந்தும்,மறந்தும் போய்விட்டது, எல்லாமேவேகமாகிப்போய்விட்டதால் விவேகம் எடுபட்டுப்போய்விட்டிருக்கிறது,

முக்கியமாகமுடிதிருத்தும் கடைகளில் சுத்தம்செய்யப்பட்டு கத்திகத்திரிகள்,பிளேடுகள் பயன்படுத்தப்படுகிறதா?, மருத்துவமனைகளில் ஊசிபோன்ற உபகரணங்கள் sterilize செய்யப்பட்டதா? மருந்துகள் தூய்மையானவையா? என்பதையெல்லாம் கவனித்து பயன்படுத்த அனுமதிதரவேண்டும் அப்படி சுத்தம்செய்யப்படாத உபகரணங்களால் விரைவிலேயே பேராபத்தைவிளைவிக்கும் அதாவது கேன்சர் புற்றுனோயைக்காட்டிலும் இதுவரை நிவாரணம் கண்டுபிடிக்கப்படாத மிகக்கொடிய மரணத்தை எட்டச்செய்யும் எஸ்.ஐ .வி எனும் ஏப்பு அல்லது தேய்வு நோய்கிருமிகள் (எய்ட்ஸ்) இப்படித்தான் பரவுகின்றன எனவே விழிப்புணவுதான் சுத்தம், சுத்தம்தான் விழிப்புணர்வு என்று ஆசிரியர் சகோதரர் என்.எஸ்.இ. மஹ்மூது அவர்கள் மாஷா அல்லாஹ் சுத்தமே சுகமென்று சப்தமாக,சகாப்தமாக தனது படைப்பைத்தந்துள்ளார்கள் அவர்களுக்கு நமது நன்றிகளும் பாரட்டுகளும், வல்ல இறைவன் மென்மேலும் நல்லநல்ல ஆக்கங்களைத்தர காலத்தையும் நலத்தையும் வளமாக்கிக்கொடுப்பானாக ஆமீன்

"பொருட்களைப்பயன்படுத்துமுன் விழிப்புணர்வோடு தலைமைச்செயலகத்தைப்பயன்படுத்துவோம்"

சுகமான சுத்தமான வாழ்வைத்தர வல்ல இறைவன் போதுமானவன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: sintha (muscat) on 08 November 2014
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 38058

அஸ்ஸலாமு அழைக்கும். நல்ல விஷயம். இதை அப்படியே பிரிண்ட் எடுத்து பொது மக்களுக்கும் ஜும்மா அன்று விநியோகிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Mauroof (Dubai) on 08 November 2014
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38062

யதார்த்தத்தை கூறியிருக்கிறது இந்தக் கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved