Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:55:24 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 162
#KOTWEM162
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 8, 2015
டாக்டர் ஃபீஸ் வேண்டாம்!

இந்த பக்கம் 7804 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை, மதுரை...... ஏன், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குச் செல்வது என்றால் கூட எனக்குப் பிடிப்பதேயில்லை. காரணம் நகர்ப்புற வாழ்வின் பரபரப்பை என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. என்றாலும், சில காலமாக சென்னைக்குச் செல்வதில் மட்டும் கொஞ்.....சம் ஆர்வம். அதற்குக் காரணம் என் பாசத்திற்குரிய தம்பி குளம் முஹம்மத் தம்பி, சகோதரர் சாளை பஷீர் உள்ளிட்ட சிலரின் உறுதுணையுடன் - சென்னையில் எனது ஓரிரு நாட்கள் பயணத்தை முற்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வேன். பரபரப்பான அந்த ஊரிலும் கூட ஒரு தோப்புக் குளியல், ஒரு கபாப் இஸ்த்தல், சில உறவினர்கள் - நண்பர்களைச் சந்தித்தல் ஆகிய இன்பமூட்டும் நிரல்களுடன், நான் எதற்காகப் பயணித்தேனோ அதையும் சாதித்துக் கொள்வதும், திட்டமிடப்பட்ட பணிகள் நிறைவுற்ற பின் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், கிடைத்த வாகனத்தில் புறப்பட்டு ஊர் வந்து சேருவதும் வழமையாகிவிட்டது.

அந்த அடிப்படையில், சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் காண காயல்பட்டினத்திலிருந்து நானும், நண்பர் முஜாஹித் அலீ, எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் நெல்லை விரைவுத் தொடர்வண்டியில் சென்னைக்குக் கிளம்பிச் சென்றோம். இலங்கை - மீள்பார்வை மாதமிருமுறை இதழின் துணையாசிரியர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீனை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற பின், மண்ணடியில் இரண்டு அறைகள் எடுத்து தங்கினோம். எம் குழுவினருடன், சகோதரர் சாளை பஷீரும் இணைந்துகொண்டார்.





எழுத்தாளர்கள், இலக்கியப் படைப்பாளிகளுடன் அவர்களது இல்லங்களில் சிறப்பு சந்திப்பு, புத்தகக் கண்காட்சியில் சந்திப்பு என பல புகழ்பெற்ற இலக்கியவாதிகளையெல்லாம் சாதாரணமாகக் கண்டு கருத்தறிந்து வந்தோம்.







மொத்தம் மூன்று நாட்கள் சென்னையில்... புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பிடித்த நம்மாழ்வார் அய்யாவின் வானக நிர்வாகிகளால் நடத்தப்படும் இயல்வாகைப் பதிப்பகம் உட்பட எல்லாப் பதிப்பகங்களின் லட்சக்கணக்கான நூல்களையும் இடது - வலது புறங்களில் தலையைத் திருப்பி, ஓரக்கண்களால் விழுங்கினோம். சில நூற்களைக் காசு கொடுத்து வாங்கவும் செய்தோம்.













புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள் என பலர் அங்கே - ஏதோ நம்ம ஊர் குத்துக்கல் தெருவில் நண்பன் செம்பருத்தி இப்றாஹீமைச் சந்திப்பது போல மிகவும் எளிதாகவும், இயல்பாகவும் காட்சியளித்தனர்.

நிறைவு நாளன்று, என்னோடிருந்த அனைவரும் மீண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் படையெடுக்க, நானோ கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற அனாட்டமிக் தெரபி எனும் செவிவழி தொடு சிகிச்சை கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டேன். (கொஞ்......சம் ஃப்ளாஷ் பேக் போய்விட்டு வருவோம்...)

என் குழந்தைப் பருவம் தொட்டு, பதின்பருவம் தொடர்ந்து தற்போதைய ‘இளம்’பருவம் வரை, எனக்கு நோய் வந்தால் அதோடு சண்டை பிடிப்பது என் வழமை. காய்ச்சல், தடுமல், இருமல் என எப்போதாவது என்னைத் தேடி வரும் நோய்கள், “ஹூம்... போயும் போயும் இவனைத் தேடியா நாம வந்தோம்...?” என்று அலுத்துக்கொள்ளும் அளவிற்கு, அவற்றை என் மனதால் வெறுக்கடிப்பேன். மருந்து, மாத்திரைகளைப் பெரும்பாலும் தீண்டுவதில்லை. சில நேரங்களில் உறவினர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக எனது போராட்டத்தை அவ்வப்போது நான் தற்காலிகமாக ஒத்திவைத்துக்கொள்வதுமுண்டு!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில் ஏதாவது நிழல் தரும் மரங்களைக் கண்டுவிட்டால், சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அங்கே அமர்ந்துவிட்டோ, சிறிது படுத்துறங்கிவிட்டோ வருவேன்... ஓடும் தண்ணீரைக் கண்டால், (நான் ஆயத்தமாக வரவில்லையென்றாலும்) ‘தற்காலிக’ ஏற்பாடுகளுடன் குளித்து இன்புற்றுவிட்டுத்தான் அடுத்த வேலையில் நாட்டம் காண்பிப்பேன். (இப்படியே சொல்லிக்கொண்டு போனால், இதுவே பல கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

இவ்வாறு இருந்த எனக்கு, கடந்த சில ஆண்டுகளாக - சகோதரர் சாளை பஷீர், செம்பருத்தி இப்றாஹீம் உள்ளிட்ட எங்கள் கடற்கரை நண்பர் வட்டத்தின் தொடர் உரையாடல்கள் காரணமாக, மாற்றுமுறை வாழ்வியல் பால் இனம் காணப்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவே, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற - இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார் அய்யா அவர்களது வாழ்வின் கடைசி முகாமில் பங்கேற்றதும், அதன் பிறகு அது தொடர்பான எனது இரண்டு கட்டுரைகளும்.

இத்தனை நாட்கள் முறையான திட்டங்கள் எதுவுமின்றி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட எனக்கு, இந்த முகாமைத் தொடர்ந்து - இயற்கை வாழ்வியல் நெறியின் பால் அறிவு சார்ந்த பேணிக்கை ஏற்பட்டது. (ஃப்ளாஷ் பேக் முடிவு!)

சில வாரங்களாக ஹீலர் பாஸ்கர் அவர்களின் அற்புதமான உரைகளை YouTube இணையதளத்தில் மனைவி, மக்களோடு பார்த்து வந்தேன். (அவரைப் பற்றி அறியாதவர்கள், இக்கட்டுரையின் நிறைவில் அறிந்துகொள்வர்.)



உறவினர் ஒருவரது உடல் நலக் குறைபாட்டிற்குத் தீர்வு கேட்பதற்காக ஹீலர் பாஸ்கர் அவர்களின் அலுவலகப் பொறுப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் சென்னையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரிலேயே சந்தித்து விளக்கம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

“நாமும் சென்னையில்தானே இருக்கிறோம்...? புத்தகக் கண்காட்சியைத்தான் இரண்டு நாட்கள் பார்த்தாகிவிட்டதே...? இன்று மட்டும் திட்டத்தை மாற்றிக்கொள்வோம்” என்று கருதி, என் குழுவினரை விட்டுப் பிரிந்து, தனியாக மெட்ரோ ரயிலேறி தாம்பரம் சானட்டோரியம் நிலையத்தில் இறங்கி, சில நிமிடங்கள் நடந்து, நிகழ்விடம் சென்றடைந்தேன்.

இங்கே ஒரு தகவலைக் குறிப்பிட்டாக வேண்டும். நமதூரில் நகர்நலச் சேவைகள் ஆற்றிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற வேகம் அனைத்துலக காயல் நல மன்றங்களிடமும் காணப்படுகிறது. அதன் தாக்கமாக, நகரில் பல்வேறு மருத்துவ முகாம்கள், கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் செய்து வரும் இச்சேவைகளுக்கு இறைவனிடம் நிறைவான நற்கூலிகள் அவர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

எனினும், மருத்துவ முகாம்களை நடத்தியதன் மூலம் - அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று வந்த அல்லது இதுவரை அறவே சென்றிராத பொதுமக்களை சில மருத்துவர்களின் அல்லது மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக ஆக்கி விட்டோமோ என்ற குற்ற உணர்வு என் மனதை நீண்ட காலமாக வருத்திக்கொண்டே இருந்தது. இதற்கு விடை காணும் நோக்குடன், நான் பிரதிநிதியாக இருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் நண்பர் ஃபாஸுல் கரீம், அதன் துணைத்தலைவர் நண்பர் முஹம்மத் யூனுஸ் ஆகியோருடன் இதுகுறித்து பலமுறை கலந்துரையாடினேன்.

அம்மன்றம் சார்பில், அண்மையில் நமதூரில் நடைபெற்ற உள்ளூர் கலந்துரையாடல் கூட்டத்தில், மாற்றுமுறை மருத்துவ முகாம்கள், சிறுதானிய உணவுத் திருவிழா, பாரம்பரிய வாழ்க்கை முறையின்பால் மீளல் உள்ளிட்ட அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டு நானும், சகோதரர் சாளை பஷீர் அவர்களும் அம்மன்ற அங்கத்தினரிடம் உரையாடினோம்.



இவ்விரு உரையாடல்களின் நிறைவிலும், எமது ஆதங்கத்தில் நியாயமிருப்பதாகக் கூறிய பங்கேற்பாளர்கள் கத்தரில் நடைபெற்ற முறைப்படியான மன்றக் கூட்டத்திலும் இவ்வகையிலான மாற்றுமுறை மருத்துவ மற்றும் வாழ்வியல் நிகழ்ச்சிகளை நடத்திட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அண்மையில், KCGC அமைப்பின் சார்பில் நடைபெற்ற இன்பச் சிற்றுலாவிலும் இது தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அதில் பங்கேற்றோர் கூறியது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது.

துவக்கமாக இந்த ஹீலர் பாஸ்கர் அவர்களை நமதூருக்கு வரவழைத்து முகாம் நடத்துவது குறித்து, கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் நிறைவில் அவரிடம் நான் விருப்பம் தெரிவிக்க, நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்ட பின் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அடிப்படைச் செலவினங்கள், உள்ளூரில் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பார்த்துக்கொள்ளுமாறும், தனக்கென வேறெந்த ஊக்கத்தொகையும் தரத் தேவையில்லை என்றும் அவர் கூறியதே எனக்கு ‘வழமை’க்கு மாற்றமாகப் பட்டது.

10.00 மணி முதல் 18.00 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கில், மதிய உணவு இடைவேளைக்குப் பின்புதான் என்னால் கலந்துகொள்ள முடிந்தது. “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!” என்று துவங்கிய மனிதர் பேசினார், பேசினார்... பேசிக்கொண்டேயிருந்தார். பொதுவாக நீண்ட நேரம் உரையாற்றுவோர் எவ்வளவு ஆர்வமூட்டும் வகையில் பேசினாலும், அதிகபட்சம் 40 நிமிடங்களுக்கு மேல் சென்றால் மனித வாய் மரணிக்காமலே பிளக்கும் என்பது உலகப் பொது நியதி. ஆனால், இவர் பேசப் பேச, எங்கே நிறுத்திவிடுவாரோ என்ற எண்ணமே மேலோங்கியது - எனக்கு மட்டுமல்ல; அங்கிருந்த எல்லோருக்கும்தான்!







நோய்களை இரண்டாகப் பிரிக்கிறார்... உடலில் தானாக வரும் நோய், தேடிப் பெறும் நோய். சர்க்கரை, இரத்த அழுத்தம், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற அனைத்தும் தானாக வருவது; வெட்டு, கீழே விழுவதால் ஏற்படும் காயம் போன்றவை தேடிப் பெறும் நோய்களாம். தானாக வரும் நோய்களை - மருந்து, மாத்திரைகளின்றி - அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை முறைப்படுத்திக்கொண்டால் தானாகவே போக்க இயலும். தேடிப் பெறும் நோய்களுக்குத்தான் அலோபதி, சித்தா, ஹோமியோ என மருந்துகள் தேவைப்படும் என்கிறார்.

எல்லா நோய்களுக்கும் அடிப்படை 5 அம்சங்கள் என்று கூறிய அவர், (1) இரத்தத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் குறைபாடு, (2) இரத்தத்தில் ஒரு பொருள் முற்றிலும் இல்லாமல் போதல், (3) இரத்த அளவு குறைவு, (4) மனம் கெட்டுப்போதல், (5) உடல் செல்கள் அறிவற்றுப் போதல் ஆகியவைதான் அந்த ஐந்து அம்சங்கள் எனப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றுக்கும் மனங்கவரும் வகையில் மணிக்கணக்கில் விளக்கமளித்தார். ஏதோ, நம் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்து, நமது நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்துக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது போலிருந்தது அவரது பேச்சுக்கள்.

சாப்பிடும் ஒழுங்குகளைக் கூறுகிறார்: சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும்... நன்கு மென்று, எச்சிலுடன் முழுமையாகக் கலக்கவிட்டு, கூழாக்கி விழுங்க வேண்டும்... இடையில் நீர் அருந்தக் கூடாது... சாப்பிடும்போது பேசக் கூடாது... உணவை உணர்ந்து, உணவை மட்டுமே எண்ணத்தில் முழுமையாகக் கொண்டு உண்ண வேண்டும்... உணவு, நீர் தவிர காற்றுக்கும் இடம் வைக்க வேண்டும்... குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு உணவுண்ணக் கூடாது... உணவுண்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது... இப்படிப் பல!

நீர் அருந்தும் ஒழுங்குகளைக் கூறுகிறார்: பாத்திரத்தில் வாய் வைத்து அருந்த வேண்டும்... ஒரு வாயில் உட்செலுத்தும் நீரை, நான்கு விடுத்தங்களாக உள்ளே அனுப்ப வேண்டும்... வாய்க்குள் நீரைச் சிறிது நேரம் வைத்திருந்து, எச்சில் கலக்கவிட்டு விழுங்க வேண்டும்... நன்கு சப்பிக் குடிக்க வேண்டும்... இப்படிப் பல! மொத்தத்தில், இன்றைய நாகரிக உலகத்தில் எதையெல்லாம் அநாகரிகமாக (இன்டீஸன்ட் என்று கூறி) தவிர்த்து வந்தோமோ அவையனைத்தையும் செய்யச் சொல்கிறார்.

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, க்ரைண்டர், ஹீட்டர், மோட்டார் பம்ப் செட், இன்டக்ஷன் அடுப்பு, எரிவாயு அடுப்பு போன்றவற்றின் பரவலுக்கு முன்பு நாம் நம் உடலைச் சுழற்றிச் செய்த அனைத்தையும் மறந்ததன் விளைவுதான் இத்தனைக்கும் காரணம் என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார்.

“இருந்தாலும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை... உடம்பில் மொத்தம் 9 வகை joints மூட்டுகள்தான் உள்ளன. அவற்றைச் சுழற்றி சிறிது இயக்கினாலே போதும்” என்று கூறி, தான் அமர்ந்திருந்த மேசையில் எழுந்து நின்று, 10 நிமிடம் செய்யத்தக்க ஓர் உடற்பயிற்சியைச் செய்து காண்பித்தார். (ஒரு குட்டி டான்ஸே ஆடினார்!) அப்பயிற்சிக்குள் அத்தனை மூட்டுகளும் சில நிமிடங்களில் சுழற்றி அசைக்கப்படுகிறது.





அவர் பேசப் பேச, கேட்டுக்கொண்டேயிருந்த எனக்கு - “ஆமா... இதையெல்லாம் ஏற்கனவே எங்கோ கேட்ட மா........திரி இருக்கே...?” என்று எண்ணியபோதுதான் உணர்ந்தேன் - அனைத்துமே பாலர் பருவத்தில் நான் ஹாமிதிய்யாவில் கற்ற மார்க்க ஒழுக்க நெறிமுறைகளில் உள்ளவைதான் அவை என்பது.

இக்கருத்துக்கள் புதியவர்கள் பெயரில் வெளிப்பட்டால்தான் நம் கவனம் கூர்மையாகிறது. “கால ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்...)” என்று நான் துவங்கினால், பல கம்ப்யூட்டர்கள் ஒன்று ஷட் டவுன் ஆகும் அல்லது வேறு இணையதள பக்கங்களை நாடும். என்ன செய்வது? காலம் செய்த கோலம்!

கருத்தரங்கம் நிறைவுற்று வெளியே வந்து, அங்கே தொங்க விடப்பட்டிருந்த பதாகைகளையும், பரத்தப்பட்டிருந்த கடைகளையும் பார்த்தேன். ஹீலர் பாஸ்கர் அவர்களின் மொத்த உரைகளையும் உள்ளடக்கிய “அனாட்டமிக் தெரபி - செவிவழி தொடு சிகிச்சை” எனும் தலைப்பிலான பெரிய நூல், அவரது உரைகளைக் கொண்ட டிவிடி குறுந்தகடுகள் என ஓர் ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினேன்.



அவரது உரையிலும் கூறினார்... பதாகையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது: இந்த டிவிடிகளை யாருக்கு வேண்டுமானாலும் பிரதி எடுத்துக் கொடுக்கலாம்... காப்புரிமை கிடையாது...



“எல்லாத் துறைகளும் வணிகக் கோணத்தில் (கார்ப்பரேட் தன்மையில்) பார்க்கப்படும் இக்காலத்தில் இப்படியும் இருக்கிறார்களா...?” என்று வியந்தே போனேன்.

சென்னைப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஷுஅய்ப் காக்காவை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு, நான், நண்பர் முஜாஹித், எழுத்தாளர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் ஆகிய மூவரும், கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று, நண்பர்கள் ஜாவித், களவா இப்றாஹீம் குழுவினரின் துணையுடன் அருகேயுள்ள மலைப் பகுதியான வயநாட்டில் இரண்டு நாட்கள் தங்கி, இயற்கையை ஆசை தீர கண்களாலும், மனதாலும் விழுங்கிவிட்டு ஊர் திரும்பினோம்.

திரும்பிய வேகத்தில், நமதூரில் “சேனல் 7” என்ற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை நடத்தி வரும் தம்பி எம்.எம்.ஷாஹுல் ஹமீதைக் கண்டு பேசி, ஹீலர் பாஸ்கரின் அரிய தொடர் உரைகளை ஒளிபரப்பக் கேட்டுக்கொண்டேன். உடனேயே இசைவு தெரிவித்ததோடு நில்லாது, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்த விபரங்களை உள்ளடக்கிய பிரசுரத்தையும் ஜும்ஆவில் வினியோகிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். தற்போது, அன்றாடம் 11.00 மணி, 19.00 மணி என இரண்டு முறை ‘சேனல் 7’இல் ஒளிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.



இதற்கு மேல் என்ன தேவை...? கேட்டாச்சி... கேட்டதைப் பகிர்ந்தாச்சி... வாழைப்பழத்தை உறித்து வாயிலும் வெச்சாச்சி... தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியைப் பார்ப்போர் நிச்சயம் நற்பயன் பெறுவர் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

எங்கள் குடும்பத்தில் ஒவ்வொன்றாக வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். உடல் கழிவுகளை வெளியேற்ற அங்கு பயிற்றுவிக்கப்பட்ட சில செய்முறைப் பயிற்சிகளைக் கடைப்பிடித்ததற்கு கண் முன் பலன் தெரிகிறது.



தூரப்பார்வை காரணமாக இத்தனை காலம் கண்களைக் கூசிக்கொண்டு பார்த்து வந்த எனக்கு தற்போது அந்தப் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது... சிறு வயதில், பள்ளியில் என் வகுப்பாசிரியர் முதுகில் அடிப்பார்... எனக்கு உடனடியாக இளைப்பு வந்து விடும். பள்ளிக்கு விடுமுறை எடுக்க அனுமதி என்பது என் தாயாரிடம் குதிரைக் கொம்புதான்... ஆனாலும், இந்த இளைப்பு வந்துவிட்டால், ஒரு 3 நாட்களாவது விடுமுறை எடுக்க வேண்டி வரும். அவ்வளவு அவதிப்படுவேன்... சில நாட்களுக்கு முன்பு வரை அந்த இளைப்பு எனக்கு இருந்தது... எனினும், முதுகில் அடிக்க வாத்தியார் இல்லாததால் பெரும்பாலும் வெளியில் தெரியவில்லை... எனினும், நீண்ட பெருமூச்சை இழுத்தால் இளைப்பதை உணர முடிந்த எனக்கு, தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை... கொஞ்சங்கொஞ்சமாக உடல் எடையும் குறைந்து வருகிறது... அந்தந்த வேளைகளில் பசி எடுக்கிறது. பசித்த பின் புசிப்பதால், உண்ணும் உணவு எளியதாயினும் எல்லையற்ற இன்பம் கிடைக்கிறது.

“சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல! அதற்காக லேப் டெஸ்ட், மருந்து - மாத்திரைகள் எல்லாம் அவசியமே இல்லை... அவையனைத்தும் நம்மை நிரந்தரமாக அவற்றுக்கு அடிமையாக்கும் செயலே...! ஏற்கனவே மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருவோர், இன்சுலின் போட்டுக்கொள்வோர் - நான்கு வருடங்கள் மருந்து எடுத்திருந்தால் நான்கு மாத கால அளவில் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைத்து, முற்றிலும் மருந்தே சாப்பிடாமல் நோயின்றி வாழலாம்... அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம்... நான் சொல்லும் முறைப்படி உண்டு, பருகி, உடல் உழைப்பு செய்து, வாழ்க்கை நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொண்டால், வாழ்நாளெல்லாம் வியாதியின்றி நிம்மதியாக வாழலாம்... மருந்து மாத்திரைகளுக்கும் குட்பை சொல்லலாம்...” என்று அழுத்தமாகக் கூறினார்.

அதில் பெற்ற நம்பிக்கை காரணமாக, தற்போது என் குடும்பத்தில் சர்க்கரை நோய்க்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்போருக்கு பாடம் நடத்தத் துவங்கியுள்ளேன். அவர்களும் இயங்கத் துவுங்கியுள்ளனர். இறைவன் அதில் நல்ல பலனைத் தருவான்... தந்த பிறகு அந்த நல்ல செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசையும் உள்ளது! இத்தனை நாட்கள் கணினியில் ‘பிஸி’யாக இருந்த நான் - என் மனைவி பேச்சைக் கேட்டு, வாஷிங் மெஷினில் அரைகுறையாகத் துவைத்து அணிந்த எனது உடைகளை, கடந்த 2 வாரங்களாக என் உடல்நலனைக் கருத்திற்கொண்டு - நானே கையால் துவைத்து, பளிச்சிடும் வெண்மையுடன் மணக்க மணக்க அணிகிறேன். கையால் துவைப்பதால், குனிந்து நிமிரும் எனக்கு ஹீலர் பாஸ்கர் சொல்லித் தந்த உடற்பயிற்சி தேவையில்லை என்றே படுகிறது...

எழுத்தில் ஓரளவுக்குச் சொல்லிவிட்டேன். இறைவன் நாடினால், மன்றங்கள் துணையுடன் சேவை நடவடிக்கைகள் துவங்கலாம், தொடரலாம். நமதூர் காயல்பட்டினத்தில் இந்நிகழ்ச்சியை நடத்திடுவது குறித்து உங்கள் கருத்தைக் கூறுவீர்களா...?

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இக்கட்டுரை பயனுள்ள பல கருத்துக்களை விவரித்துள்ளது...!!!
posted by: SK Shameemul Islam (Chennai) on 09 February 2015
IP: 111.*.*.* India | Comment Reference Number: 39164

என் சாச்சி மகன் தம்பி பீ.எஸ்.ஷாஹுல் ஹமீத் இன்னொரு ஹீலர் பாஸ்கர்தான். 6 மாதம் முன்பு அவனிடம் உரையாடிய போதே 200 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தில் மேய்ந்து மென்ற இயற்கை வாழ்க்கை முறையை பற்றியும் அவனது நெருங்கிய உறவினர்களுக்கே அதை நடைமுறைப்படுத்தி பயன் பெறுவதையும் தடுப்பூசி போன்ற மெதுவகை நஞ்சு ஊசிகளை போடாமல் தவிர்த்து வருவதையும் அதில் குடும்பத்தவரை பயமின்றி ஏற்கவைக்க பெருமுயற்சி எடுத்து வருவதையும் கூறினான்.

இன்று எம் குடும்பத்தில் பலருக்கு அவன் ஒரு மருத்துவ ஆசான். இன்னொரு தகவல் அவன் கூறியதுதான் எம்மை புருவம் உயர்த்தச் செய்தது.

ஹாங்காங்கில் நீண்ட நாள் புற்று நோயால் அவதியுற்ற ஒரு நடுத்தர வயதுடைய மாது அலோபதியை ஓரங்கட்டி இயற்கை முறைகளை இணையத்தில் கற்றறிந்து வாழ்வில் செயல்படுத்தி வந்ததன் பயனாய் புற்றை இருந்த இடம் தெரியாமல் தம் உடலிலிருந்து விரட்டியடித்ததை அவன் கூறியது ஆச்சரியமூட்டியது.

அதுவும் இரவு உறங்க வேண்டிய நேரம் என்பதையும் அந்நேரத்தில் மின்விளக்குகளை வீடுகளில் ஒளிரச்செய்து நீண்ட நேரம் விழித்திருப்பதையும் பகலில் சூரியன் உதயமாகி பொட்டில் அறைந்தார் போல் சூடேற்றிய பின் விழிப்பதையும் முதலில் அம்மாது மாற்றியதையும் மேலும் நடுநிசிக்குப் பின் (தஹஜ்ஜத் நேரம்) விழித்தெழுந்து வீட்டு ஜன்னல் வழியாக வெளியே இலவசமாக அந்நேரத்தில் கொட்டும் ஒசோன் காற்றை இழுத்து சுவாசித்தத்தையும் அத்துடன் முற்றிலும் இயற்கை சார்ந்த உணவு முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டதையும் அதன் பின்னர் தான் புற்றுநோய் இல்லாதொழிந்தத்தையும் அம்மாது கூறியதை அவன் தெரிவித்தபோது கட்டுரையாளர் தம்பி சாலிஹ் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

நாம் பின்பற்றும் மார்க்கம் அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளை சிறப்பாகக் கற்றுத்தந்திருந்தும் அவற்றை உதறி உதாசீனப்படுத்திவிட்டு மதிப்பிற்குரிய ஹீளர் பாஸ்கர் போன்றோர்தான் அதனை நமக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் எனும் நிலையை யாரிடம் சொல்வது?

ஹீளர் பாஸ்கர் அவர்களின் 6 மணி நேரம் தொடர்ந்து கேட்கவேண்டிய குறுந்தகடை என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் மூன்று வருடம் முன்பு எனக்கு வழங்கினார். மேலும் அப்போது நாங்களிருவரும் எங்கள் குடும்பத்தவரோடு சென்னைக்கு காரில் போகும் போது அதில் பெரும் பகுதியை கேட்டு முடித்தோம். ருஜூ' இலல்லாஹ் (அல்லாஹ்வின் பால் மீள்வது) தான் நம் உடலில் உள்ள அத்தனை நோய்க்கும் தீர்வு தரும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வோமாக.

இக்கட்டுரை பயனுள்ள பல கருத்துக்களை விவரித்துள்ளது. பாசமிகு என் தம்பி சாலிஹுக்கு நன்றிகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Mohamed Younus (Chennai) on 09 February 2015
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39166

தம்பி எஸ்.கே சாலிஹ் சொன்னதன் பேரில் நானும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். மிக அருமையான எளிமையான, யாருடைய துணையும் இல்லாமல் செயல்படுத்தக்கூடிய மருத்துவ முறை. கண்டிப்பாக நமதூரில் நடத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Javed Nazeem (Chennai) on 09 February 2015
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39168

மூன்று வருடங்களாக இந்த முறையை பின் பற்றி வருகிறேன். இறைவன் அருளால் அனைத்தும் நலம். நோய் பற்றிய பயம் போனதுடன் மருந்து செலவு மிச்சம்.

சமீபத்தில் KCGC சுற்றுலாவில் பஷீர் உடன் பேசும் போதும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

இதன் மூலம் பலன் அடைந்த என் நண்பர்கள் சொன்ன விஷயங்கள் கீழே:

1. To my cousin – Last six years, he lost sense in a vein at one leg after an operation. Now he got back the sense.

2. My brother in law at 55 years – Diabetic patient and was wearing eye glass. Now stopped the insulin and not wearing glass any more.

3. One of my relative at 60 years - His hemoglobin came down to 6 and after this method the hemoglobin increased to 13 and now he is become normal.

4. And some other friends told that their gas problem, digestion and stomach problem has been solved.

Another friend :

I was diabetic since 2007 after I came to Dubai. I had been taking pills daily and even for cholesterol. I had not lowered my Glucose levels below 130mg even taking tablets. But a month I could see a miracle while following "Healer Baskar" method. My Glucose levels are normal. Now I could enjoy all the sweets,foods which I thwarted taking because of this very worst disease as ever thought.

These are my close friends after whose suggestions i started following this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 09 February 2015
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39169

முதலில் தம்பி SKS அவர்களுக்கு நன்றிகள் பல.

நேற்று இரவு என் தாயாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். வழமையாக அதிக நேரம் பேசினால் தான் என் தாயாருக்கு திருப்தி வரும்.

ஆனால் வழமைக்கு மாற்றமாக பேச்சை குறைத்து அவசரமாக எங்கோ கிளம்புவது போல பேசினார்கள். என்னமா என்று விசாரித்ததும், ஒரு டாக்டர் பாஸ்கர் என்பவர் டிவி இல் பேசுகிறார், அருமையாக உள்ளது என்று கூறி துண்டித்து விட்டார்கள்.

நானும் இரண்டு வருடமாக பாஸ்கர் ஐயா அவர்களின் ஆலோசனையை முடிந்த அளவு பின்பற்றி வருகிறேன். பசித்தால் சாப்பிடுவது, நன்கு மென்று சாப்பிடுவது, தண்ணீர் குடிக்கும் முறை, அரைவயிறு சாப்பிடுவது(பார்ட்டிக்கு போனால் சற்று கூடுதல்), நடை பயிற்சி என்று.

அல்ஹம்து லில்லாஹ்.. நல்ல மாறுதல். 102 கிலோ இருந்த நான், 84 கிலோவிற்கு வந்து விட்டேன். 23 வருடமாக BP க்கு மாத்திரை எடுத்த நான், கடந்த 2 வருடமாக நிறுத்தி விட்டேன். அடிக்கடி BP செக் பண்ணிக்கொண்டே வருகிறேன். கிட்டத்தட்ட 135/85 என்றே இருக்கின்றது. வேலை பளு, டென்ஷன் இருந்தால் 140/90 என்று இருக்கின்றது.

மூட்டு வலி, இரண்டு நிமிடம் நடந்தால் வரும் மூச்சு இரைப்புடன் கூடிய நெஞ்சுவலி ஆகியவைகள் இல்லை. இரண்டு வருடமாக எந்த மாத்திரையும் என் உடலுக்குள் செல்லவில்லை. நலமாக ஆரோக்கியமாக இருக்கின்றேன்.. அல்ஹம்து லில்லாஹ்.. அல்ஹம்து லில்லாஹ்.

மருத்துவர்களின் பயமுறுத்தல், அலோபதி மருந்துக்களின் பிரச்சனைகள், நாட்டு மருந்து, அக்குபஞ்சர், அக்கு பிரஷர் என்று போலி மருத்துவர்களின் அட்டூழியம், இயற்கை மருத்துவத்தின் மகிமை போன்றவற்றைப் பற்றி ஒரு கட்டுரை எழுதனும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன், நேரம் மேலாண்மை கைகொடுக்கவில்லை. தம்பி SKS முந்திக்கொண்டு விட்டார்.

அனைவர்களும் நலமுடனும் வளமுடனும் வாழ பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: Javed Nazeem (Chennai) on 09 February 2015
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39170

ஊரில் இந்த நிகழ்ச்சி, கட்டாய தேவை. நம்பிகையுடன் கேட்டு செயல் படுத்தினால் இதன் பலனை உணரலாம், இன் ஷா அல்லாஹ்

இதன் முழு பதிவு என்னிடம் உள்ளது, சில நண்பர்களுக்கு தந்து அவர்களும் பலன் பெற்று உள்ளார்கள். சென்னை நபர்கள் வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும் - DVD இல் copy செய்து தருகிறேன்.

Youtube link: https://www.youtube.com/watch?v=lQud6IbV1fc


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. nalladhai mattum naam yeduppom
posted by: K.S.Seyed Mohamed Buhary (kayalpatnam) on 09 February 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39174

Anatomic therapy nan 2 varudama theriyum yedhellam nam nabiyin kootrukku vutpattuladho avaigalai mattum pin patrugiraen( niraya nabi vali techniques thaan solraru indha badker, 10% may be discound irkkum adha mattum avoid pannitta podhum)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம். ) on 12 February 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39241

ஹா...ஹா...ஸாலிஹ்... மரணிக்காமலே மனித வாய் பிளக்கும்.... நல்ல உதாரணம். நீண்ட நேர ஜும்மா உரைகளில் நான் உட்பட - பலருக்கும் இந்த "வாய் பிளக்கும் '( அதாவது தூக்கம் ) துயரம் வந்துருகிறது.

தமிழில் "சொல் வலை வேட்டுவன் " என்று ஒரு இலக்கியச் சொல் உண்டு. அதாவது சொல்லையே வலையாக வீசி மனிதர்களை வேட்டையாடுவது. எனபது இதன் பொருள். தம்பி ஸாலிஹ் குறிப்பிடும் ஹீலர் பாஸ்கர் இந்த ரகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஹீலர் பாஸ்கர் அவர்களின் நிகழ்வுக்குச் சென்று விட்டு தம்பி ஸாலிஹ் மீண்டும் நாங்கள் இருந்த நந்தனம் புத்தகக் காட்சிக்கே வந்தார். அவரது கையில் தடிமனான ஒரு புத்தகம் இருந்தது. புத்தகக் காட்சிக்கே இவர் வெளியிலிருந்து ஒரு புத்தகத்தோடு வருகிறாரே.... என்ன புத்தகம்... என்று வாங்கிப் பார்த்தேன். ஹீலர் பாஸ்கர் அவர்களின் செவி வழி தொடு சிகிச்சை குறித்த புத்தகம்தான். சிறிது நேரம் அதை வாங்கி புரட்டியும் பார்த்தேன். புத்தகக் காட்சியில் "இலக்கியப் பித்து " பிடித்து திரிந்ததால் ,அதிகமும் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதுபோன்ற வித்தியாசமான சோதனை முயற்சிகளில் தம்பி சாலிஹும், தம்பி சாளை. பஷீரும் ஆர்வமுள்ளவர்கள். உடலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். என்போன்றவர்களால்.... அது முடியாது போனாலும்.... அவர்களாவது செய்கிறார்களே... என்று ஆர்வமுடன் அவர்கள் செய்வதைப் பார்த்திருப்பேன்.

தம்பி ஸாலிஹ் தனது முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: Javed Nazeem (Chennai) on 16 February 2015
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39275

இந்தக் கட்டுரை: நேற்றிரவு தான் முழுமையாக படித்து முடித்தேன். முன்னர் வெளியான இந்தக் (goo.gl/ksC06h) கட்டுரையின் தொடர்ச்சி என்று குறிப்பிடலாம். அதன் முடிவுப் பகுதியில் இது துவங்குகிறது.

நிறைய பதில் பதிவுகளை எதிர் பார்த்தேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் இருந்தும், குறைவான கருத்துக்களே உள்ளன - சிந்தித்துப் பார்க்கையில், உடல் நலம் பற்றிய அக்கறை நம் அனைவரிடமுமே சிறிது குறைவாக இருப்பதை உணர முடிகிறது. ஏதேனும் நோய் ஏற்பட்டு அது முற்றிய பிறகு (இறைவன் காக்க வேண்டும்), இவற்றை எல்லாம் நாம் அப்போதே செய்திருக்கலாமோ என்று தோன்றும். நல்ல நேரம் இப்போது தான் - இப்போதே ஆரம்பித்து விடுங்கள்.

சாலிஹ்: நல்ல விஷயங்களை தேடிச் சென்றறிந்து, பின்பற்றுவதோடு மட்டுமல்லாது அவற்றை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற ரீதியிலான உனது சொல்லும் செயலும், இறைவனிடம் நற்கூலிகளைப் பெற்றுத் தரும், இன்ஷா அல்லாஹ்.

"மரங்களைக் கண்டுவிட்டால், சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அங்கே அமர்ந்துவிட்டோ, சிறிது படுத்துறங்கிவிட்டோ வருவேன்". கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன், மதுரை முத்துச்சாவடியில் எதிர்பாராத சூழ்நிலையில் சில நாட்கள் நாமெல்லாம் தங்கி இருந்தது நினைவில் வந்து சென்றது. சந்தோஷத்தை அளவீடாக கொண்டு செல்வத்தை கணக்கிட்டால், உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் நீ இருப்பாய் என்று உறுதியாக சொல்லலாம்.

(மேலோட்டமாக பார்த்து முன்னர் கருத்து பதிந்தமையால், KCGC சுற்றுலா நிகழ்வு பற்றி குறிப்பிடப் பட்டிருந்ததை கவனிக்காமல் என்னுடைய பதிவிலும் குறிப்பிட்டு விட்டேன்.)

ஷுஐப் காக்கா: உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது. ஆள விடுங்கப்பா நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது என்கிற தொனியில் உள்ளது. அட்டடயத்துல* ரெண்டு காலையும் தூக்க வேண்டாம், அந்தர் பல்டி அடிக்க வேண்டாம், அஞ்சு மணிக்கு எழுந்து ஆறு ரவுண்டு ஓட வேண்டாம். அறுசுவை உணவைத் தவிர்க்கவும் வேண்டாம், மாறாக புசிக்க வேண்டும், அதில் சில எளிய பக்குவங்களைப் பேண வேண்டும். என்ன கஷ்டம் கண்டீர்கள் இதில்?

உடம்பும் உடல் நலமும் இறைவனின் அமானிதம். அதைக் காப்பது நமது கடமை. மேலும் உங்கள் எழுத்துக்களும், கருத்துக்களும் எங்களுக்குத் தேவை. நீங்கள் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். தயவு செய்து முயற்சிக்கவும். (ஷுஐப் காக்கா இந்த முறைகளைப் பின்பற்றி அவர்கள் பாணியில் ஒரு சுவையான கட்டுரை கிடைக்க சாலிஹ், பஷீர், முஜாஹித் போன்றவர்கள் முயற்சிக்குமாறு வேண்டுகிறேன்)

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் "நான் நம்மாழ்வார் பேசுகிறேன்", மற்றும் "ஜன்னலில் ஒரு சிறுமி" ஆகியவை அடங்கும். இரண்டாம் புத்தகத்தை உங்கள் விமர்சனம் மூலம் அறிந்து கொண்டேன். நன்றிகள் பல. இதை ஒரு பள்ளிக்கூட நிர்வாகிக்கும் பரிசளிக்க உள்ளேன் இன்ஷா அல்லாஹ்.

* இது என்ன புது வார்த்தை என்று எண்ண வேண்டாம். அட்டடயத்துல = at a time = at the same time = ஒரே நேரத்தில் :). யோகா கிளாசில் இருந்து பாதியில் சென்று விட்ட ஒரு colleague சொன்னது - "இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது, அட்டடயத்துல ரெண்டு காலையும் தூக்க சொல்றாங்க". யோகாவை குறை கூறவில்லை, அதிலும் நிறைய நன்மைகள் இருக்கின்றன - ஒரு நகைச்சுவைக்காக அதை பயன் படுத்திக் கொண்டேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: W.Z.Seyedh Muhammedh Salih (CHENNAI) on 10 April 2015
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40094

அஸ்ஸலாமு அலைக்கும்... எனது பாசத்திற்குரிய சகோதரர் ஹாபிள் SK SALIH காகா வின் கருத்துகள் அருமையாக இருந்தது மற்றும் பயனுள்ளதாகும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ் இந்த கருத்தை அடிப்படியாக வைத்து ஒரு விழிப்புணர்வு கூட்டம் நமது ஊரிலும் நடத்தினால் நன்றாகும்.

இதனை QUAIDA MILLATH & AL AMEEN & YUF போன்ற அமைப்புகள் மூலம் நடத்தினால் நன்றாக இருக்கும் ஆகையால் SK SALIH காகா இவர்களிடம் ஆலோசனை செய்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved