Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:18:46 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 163
#KOTWEM163
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 2, 2015
கன்னியாகுமரியைப் பார்க்காத “கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ..!”

இந்த பக்கம் 4395 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

25 02 2015 அன்று காலையில், “தி இந்து “ நாளிதழின் கடைசிப்பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி எனது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. அந்தச் செய்தி இதுதான்...

“சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழி மின் ரெயில் பாதை “

அதாவது மறுநாள் வெளியாகப் போகும் மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் சென்னை -கன்னியாகுமரி இரட்டை வழி மின் ரெயில் பாதைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா...? என்பது குறித்த விரிவான தகவல்களுடன் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.

அதாவது, 90 களுக்குப் பிறகு நாட்டின் ரெயில் போக்குவரத்தில் கனிசமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் யாவும் படிப்படியாக அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டன. இப்போது மீட்டர்கேஜ் ரெயில் பாதையே நாட்டில் எங்கும் உபயோகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.. புதிது புதிதாக நிறைய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில்களின் வேகமும் கனிசமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேகத்தில் ரெயில் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. ரெயில் பெட்டிகளுக்குக் கண்ணைக் கவரும் வகையில் நீல நிற வர்ணமும் பூசப்பட்டுள்ளது. பழைய –இருண்டுபோன- மெரூன் கலர் வர்ணத்துக்கும் விடை கொடுத்தாகிவிட்டது.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு இவை எதுவும் ரெயில்வேயில் கிடையாது. நமதூர் வழியாகப் போகும் திருச்செந்தூர் - நெல்லை ரெயிலில் அப்போது நிலக்கரி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டது. சென்னை வரையும் கூட மீட்டர் கேஜ் பாதைதான்.



நெல்லையில் இருந்து சென்னைக்கு அப்போது ஒரே ஒரு ரயில் மட்டும்தான் இருந்தது. ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களுக்கும் சென்னைக்குப் போக அந்த ஒரே ரெயில்தான் அதற்குப் பெயர் “கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்“. ஆனால் அது கன்னியாகுமரியிலிருந்து புறப்படாது. நெல்லையில் இருந்துதான் புறப்படும். ஏனெனில் அப்போது நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரெயில் பாதை கிடையாது. நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரெயில்பாதை போடப்பட்டு, அது கடந்த 1979 ஆம் ஆண்டுதான் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் அப்போது ரெயில் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் அதில் கலந்துகொண்டார். அதற்கு முன்பு வரையிலும் குமரி மாவட்ட மக்களுக்கும் நெல்லைதான் ரெயில்வே சந்திப்பாக இருந்தது. மாலை ஆறு மணிக்கு ஒவ்வொரு நாளும் நெல்லையிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் செல்லும். மறுநாள் காலை எட்டு மணிக்கோ... அல்லது ஒன்பது மணிக்கோ... சில நேரங்களில் சிக்னல் கிடைக்காவிட்டால் சவுகரியம் போல பத்து மணிக்கோ கூட அது சென்னை சென்றடையும். இன்றைய இளம் தலைமுறையினர் சென்னைக்கு அவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொண்டால் வெறுத்துப் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

கன்னியாகுமரி எக்ஸ்பிரசைப் பிடிக்க அப்போது திருசெந்தூரில் இருந்து மாலை மூன்று மணிக்கு இப்போது போல அப்போதும் லோக்கல் வண்டி புறப்படும். நெல்லை - திருச்செந்தூர் இடையே உள்ள எல்லா ஸ்டேஷன்களுக்கும் சென்னைக்கு செல்ல ஒரே பெட்டிதான் ஒதுக்கீடு. எஞ்சினுக்கு அடுத்தாற்போல அந்த சென்னை செல்லும் பெட்டியைத்தான் கோர்த்திருப்பார்கள். சென்னை செல்லும் பதிவு செய்யப்பட்ட நமதூர் ஆம் ஆத்மிக்கள் எல்லாம் அதில்தான் ஏறுவார்கள். நாங்கள் சிறுவர்கள் என்பதால் வண்டி போகும்போதே வாசலில் நின்று எட்டி.. எட்டி... பார்ப்போம்... அநியாயத்துக்கு கரி எஞ்சின் கரிப்புகையை அள்ளி வீசும்.







எஞ்சினுக்கு அடுத்த கோச் என்பதால் ..நெல்லைக்குச் சென்று சேர்வதற்குள்ளாகவே உடை முழுவதும் “அண்டாக்கா கசம் “ஆகி ஆளே ஒரு மாதிரி கரிப்புகையில் குளித்திருப்போம். பெரியவர்கள் என்னதான் நாசூக்காகப் பயணம் செய்தாலும் அவர்களும் கரிப்புகையில் குளித்திருப்பார்கள். ரெயில் செல்லும் வேகத்தில் அந்தக் கரிப்புகையில் கலந்து வரும் நிலக்கரி துகள்கள் எப்படியும் கண்ணில் விழும். கண்ணைக் கசக்காத பயணிகள் குறைவு. இதற்கிடையே ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு அரைமணி நேரம் ஓய்வெடுக்கும். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் ஒரு அருமையான காப்பிக் கடை இருந்தது. அந்தக் காப்பிக்கு ஒரு தனி ருசி இருந்தது. ரெயில் டிரைவர் முதற்கொண்டு அங்கு இறங்கி அந்தக் காப்பியை சுவைத்த பின்பே மறுபடியும் ரெயில் நகரும். இப்போதும் கூட ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் வரும்போதெல்லாம் அந்தக் காப்பிக் கடை எனது நினைவில் ஒளிரும்.

ரெயில் நெல்லைக்கு வந்து சேர்ந்ததும் ,சென்னைக்கு எஞ்சினோடு சேந்திருக்கும் அந்த முதல் பெட்டியை மட்டும் தனியே பிரித்து, ஏற்கனவே நெல்லையில் தயாராக இருக்கும் மற்ற பெட்டிகளோடு இணைப்பார்கள். அதுவும் எங்களுக்கு அப்போது ஒரு வேடிக்கைதான். ரெயில்வே கேங்மேன் பக்கவாட்டில் நின்று பச்சைக் கொடியை அசைக்க..அசைக்க... அந்த ரெயில் பெட்டி மெதுமெதுவாக பின்னகர்ந்து சடக்கென மற்ற பெட்டிகளோடு இணைந்துகொள்ளும். இப்போது கரி எஞ்சினுக்குப் பதிலாக டீசல் எஞ்சின் இணைக்கப்படும். இப்போதும் நமதூர் ஆம் ஆத்மிக்களின் பெட்டியே முதலிலிருக்கும்.

அப்போது கணினி பயன்பாட்டில் இல்லை என்பதால்... இப்போது போல பெட்டிகளுக்கு S1… S2… S3… என்றெல்லாம் வரிசை எண் இருக்காது. A…B…C…D…என்ற அல்பாபெட் வரிசை முறைதான் அப்போது அமுலில் இருந்தது. அதுபோல டிக்கெட்டும் செவ்வக வடிவிலான அட்டை டிக்கெட்த்தான். அதன் பின்புறம்தான் ரிசர்வேஷன் விவரங்களை புக்கிங் கிளார்க் கிறுக்கி இருப்பார். பிறகு நீண்ட ரெயில் தொடராக வண்டி புறப்படும்.

இனி வண்டியில் ஒரு பயண நிம்மதி தெரியும். கடலை மிட்டாய், வெள்ளரிக்காய், போலி, வடை வகைகள் எல்லாம் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு வரும்.





பெரியவர்கள் இருக்கும் பகுதியில் நின்று வாங்காமல், விற்பனையாளன் அந்த பாத்ரூம் பகுதிக்குப் போனதும் ஓடிச் சென்று வாங்கித் தின்பது வழக்கம். இதில் கடம்பூர் போலியும், கோவில்பட்டி கடலை மிட்டாய், இஞ்சி முரப்பாவும் கூடுதல் விஷேசம். அதுபோல மதுரை பால்கோவா மிகவும் ருசி. இப்போது போல அப்போது பால்கோவா எங்கும் கிடைக்காது. அது மதுரையில்தான் வரும். இதற்காக மதுரை எப்போது வரும் என்று காத்திருந்து பால்கோவா வாங்கித் தின்போம்... ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோதான் அப்போது அதுக்கு விலை. மதுரை வந்ததும்.. .”சார்..பாலே.. கோவா...” என்று ஒரு மாதிரியான குரலில் நீட்டி முழக்கிக் கொண்டு தட்டு நிறைய பால்கோவாவோடு வருவார்கள். நான்கோ, ஐந்தோ வாங்கித் தின்போம்...! என்ன ருசி... என்ன ருசி... வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும். தின்ற பிறகும் கூட கையில் பால்வாடை வீசிக்கொண்டே இருக்கும்.

இதற்கிடையே வண்டி மணியாச்சிக்கு வந்து விடும். அங்கு மேற்கூரை இல்லாத நீண்ட நடை மேடையில் வண்டி நிற்கும். அங்குதான் தூத்துக்குடியில் இருந்து வரும் பெட்டிகளை இந்த ரயிலோடு இணைப்பார்கள். நமதூர் ஆம் ஆத்மிகள் இருக்கும் பெட்டி இப்போது நடுவாக வந்து விடும். இனி அது முழுமையான கன்னியாகுமரி விரைவு வண்டி. வேகத்தோடு புறப்படும்.



அனேகமாக மதுரை வரும்போது இரவு மணி பத்தாகி விடும். இனி அவரவர் சாப்பாட்டுப் பொட்டலத்தை அவிழ்ப்பார்கள். ரெயில்வேயில் விற்கும் அந்த ரயில் சாப்பாடு விருதுநகரில் வந்துவிடும். இப்போது போல சில்வர் கவரில் பொதிந்து தரப்படும் உணவல்ல. சில்வர் சாப்பாட்டுத் தட்டில் அதே அளவு மூடி போட்டு பாதுகாப்பாக கொண்டு தருவார்கள். சுவையாகவும் இருக்கும். சென்னையிலிருந்து வரும்போது அது விழுப்புரத்தில் கிடைக்கும்.

மதுரை கடந்ததும் இனி உறக்கம்தான்...! அனேகமாக திருச்சி வரும்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம். பொழுது பள பள வென விடியும்போது வண்டி விழுப்புரத்தில் நிற்பது தெரியவரும். “டீ....காப்பி ...” என்று கூவிக்கொண்டு வருவார்கள். பல் விளக்காமல் காப்பி குடிக்கும் வழக்கத்தை நான் அங்கேதான் கற்றேன்.

விழுப்புரத்தில் வண்டி அதிக நேரம் நிற்கும். டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு அங்குதான் மின்சார எஞ்சினை பொருத்துவார்கள். பொழுது நன்கு விடிந்த உடன் வண்டி விழுப்புரத்தை விட்டு நகரும். விழுப்புரம் தாண்டிய உடனே ஒரு மாதிரி மூக்கைத் துளைக்கும் நாற்றம் நாசியைத் தாக்கும். இது என்னடா... சாக்கடை நாற்றம்..? என்று அப்போது மூக்கைப் பிடித்துக்கொள்வேன். ஒரு ஐந்து நிமிட நேரம் வண்டி அந்த சாக்கடை நாற்றத்திலேயே பயணிக்கும். இப்போதும் அந்த “நாற்றம் “அங்கு இருக்கிறது. பிறகுதான் தெரிந்து கொண்டேன். அது முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை என்று. அதில் கரும்பு பிழியும் வாடைதான் அந்த நாற்றத்துக்குக் காரணம். இப்போது அது நாற்றமாகத் தெரியவில்லை.

இப்படியாக பொழுது புலர்ந்து, வண்டி திண்டிவனம், மதுராந்தகம், போன்ற இடங்களைக் கடந்தோடும். வெய்யில் நேரமாக இருந்தால், அப்போதே உடம்பில் ஒரு பிசுபிசுப்பை உணரலாம். முதல் நாள் மாலையில் உடம்பில் ஒட்டிய கரிப்புகையின் அடர்த்தி அப்போதுதான் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.

வண்டி செங்கல்பட்டை அடைந்ததும் ,அங்கு நிலையத்தில் நிரம்பி நிற்கும் கூட்டம் மளமளவென்று - கிடைத்த எல்லா பெட்டிகளிலும் ஏறி நம் அனுமதியின்றியே நமது ஆசனத்தில் ஹாயாக அமர்ந்து கொள்வார்கள். அவர்கள் அனைவரும் சென்னைக்கு பணிக்குச் செல்பவர்கள். இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வண்டியை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள். வண்டி செங்கல்பட்டில் நின்றதுமே மளமளவென ஏறி அமர்ந்துகொள்வார்கள்.. ரிசெர்வேஷன் கம்பார்ட்மென்ட் ...சாதா கம்பார்ட்மென்ட் என்றெல்லாம் அவர்களுக்கு வேறுபாடில்லை. எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான். அது ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்றே சொல்லலாம். தூங்குவதற்கு மட்டும்தான் உங்களுக்கு ரிசெர்வேஷன்... இரவு கழிந்துவிட்டது... இனி உங்களுக்கு என்ன ரிசெர்வேஷன்...? என்பது அவர்களது ஆக்கிரமிப்பில் தொக்கி நிற்கும் கேள்வி. அதோடு நிற்க மாட்டார்கள்... உடனே சீட்டுக் கட்டைப் பிரித்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். இது இன்னொருவர் பணம் செலுத்தி பயணம் செய்யும் கம்பார்ட்மென்ட் என்ற உணர்வெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. சிரிப்பும், கூத்தும், கும்மாளமுமாக இருக்கும். நம்மை ஒரு அற்ப ஜீவி போன்று பார்ப்பார்கள். நாம் அப்படியே ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்க வேண்டியதுதான். இதை அப்போது ரெயில்வே நிர்வாகமும் அனுமதித்தது டிக்கெட் பரிசோதகர் முதற்கொண்டு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இப்போது இது நடக்குமா...? என்று சொல்லுங்கள்.





இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போது சென்னை மின்தொடர் வண்டிகள் தாம்பரம் வரைக்கும்தான் செல்லும். இப்போது விழுப்புரம் வரையிலும் ஏகப்பட்ட மின்தொடர் வண்டிகளை விட்டிருக்கிறார்கள். பாசஞ்சர் வண்டிகள் மட்டுமே அப்போது செங்கல்பட்டைக் கடந்து செல்லும் .எனவேதான் வேறு வழியின்றி இந்த ஆக்கிரமிப்பு.

வெய்யில் சூடு ஏற... ஏற... ஒரு வகையாக வண்டி தாம்பரத்தை அடைந்துவிடும். இடையில் சிக்னல் கிடைக்காமல் ஆங்காங்கே போட்டு விடுவதும் உண்டு. மூஞ்சி, மொகரக்கட்டை எல்லாம் வியர்த்து, சட்டை பிசுபிசுப்பாக முதுகில் ஓட்டத் தொடங்கும். எப்போதடா எக்மோர் வரும்....என்றாகி விடும்.

ஒரு வழியாக வண்டி எக்மோர் நிலையத்தில் நுழையத் துவங்கும்போதே அப்பாடா.... என்று ஒரு பெருமூச்சு பிறக்கும். ஒரு சாகசப் பயணத்தை ஒரு வழியாக நிறைவு செய்த உணர்வு ஏற்படும்.

(குறிப்பு – எனது வயதுடைய எல்லோரும் அறிந்த பயணம்தான் இது. இதை அறியாத இன்றைய இளைய தலைமுறையை மனதிற்கொண்டே இங்கு இது பதிவு செய்யப்படுகிறது.)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்கே அந்த நிலக்கரி எஞ்சின்...?
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 02 March 2015
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 39404

நிலக்கரி எஞ்சினைப்பற்றி நினைவுக்கு கொண்டு வந்த கட்டுரையாளருக்கு நன்றி!

இரயில் பயணம் என்றாலே சுவாரஸ்யமும், அலுப்பும், ஒருவகை சந்தோஷமும் இருக்கும். எனது சிறு பிராயத்தில் பயணம் அனுப்ப அல்லது வரவேற்க ஸ்டேஷனுக்குச் செல்வது சர்க்கரை பொங்கல் சாப்பிட்ட மாதிரிதான். ரயில் வருவதற்கு முன்னால் மாஸ்டர் அறையில் டெலிஃபோன் மணி மணி ஒலிக்கும். ஆவலுடன் தண்டவாளத்தை நோக்கி ஓடுவோம். கேட் பூட்டப்படும் ரயில் வருகையெ எதிர்பார்த்த வண்ணம் மக்கள் நின்று கொண்டிருப்பர். குழந்தைகளை கவனமாக கையோடு அணைத்தபடி காத்திருப்பர்.

கேபிள் வடம் மூலம் கைகாட்டி(சிக்னல்) போட காக்கிச்சட்டைக்காரர் கையில் தடிமனான நீண்ட சாவியுடன் இரும்பு மேடையில் ஏறி கைப்பிடியுள்ள நீண்ட லிவரை மிதித்து தன் வசம் இழுப்பார். கைகாட்டி லபக்கென்று தலை குனியும். ஒரே ஆரவாரம்தான்.

சில வாண்டுகள் அலுமினியத்துட்டு மூன்று பைசா பத்து பைசாக்களைத் தண்டவாளத்தில் வைத்து காத்திருப்பர். அது சக்கரத்தால் நசுக்கப்பட்டு சப்பி சலிஞ்சு போவதைப் பெருமையாக என்னுவர்.

ஊ... என ஊளையிட்டு கரும்புகை கக்கிக்கொண்டு தொலைவில் இரயிலின் முகப்பு தெரியும். ஆமை போல் மெல்ல மெல்ல நகர்ந்து அருகில் தட மட என பூமி அதிர வந்து நிற்கும் ரயிலில் இருந்து சொந்தக்காரர் டிரங்கு பெட்டி, தலையணை, கம்பளிப் போர்வை, அட்டைப்பெட்டி, பிஸ்கெட் டின்னுடன் வந்து இறங்குவார். கண்கள் சிவப்பு நிறத்தில் மேனியெல்லாம் கருத்து ஆப்ரிக்கா கண்டத்திலிருந்து வந்தவர் போல் காட்சியளிப்பார். வந்து இறங்கியது. பிள்ளைகளுக்கு ஒரே முத்த மழை, மாமா மச்சான், காக்கா, தம்பி என கட்டிப்பிடித்து அன்பைக் கொட்டித்தீர்ப்பர்.

பொக்கப்பா மாட்டுவண்டி, அல்லது கனிக்காக்கா குதிரை வண்டி, பிற்காலத்தில் சைக்கிள் ரிக்ஷா காத்திருக்கும். சாமான்களை அடைத்து இருக்க இடமின்றி வண்டியைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்த காலமும் உண்டு! உறவினர் கொண்டு வந்த சோப்பி ,சீப்பு டவல் ஆடை இவற்றுடன் ஸ்டேஷன் பள்ளியில் குளித்து அத்தர்பூசி நறுமணத்துடன் கம்பீரமாக வீட்டுப்படியேறும் அந்தக்காலம்!

தயாராக வைத்திருக்கும் வெங்காயமும், சீனியும் முதல் உணவு. அன்று அவர் வீட்டில் பெருநாள்தான். கறிதாளிப்பு மணமும், மாப்பிள்ளை முன் வர மறுக்கும் மனைவியும், மடியில் சதா அமர்ந்திருக்கும் பிள்ளைகளும், அரக்கப்பறக்க வேலை செய்யும் கொளுந்தியாள்களும், புள்ளெ மாப்ளெ சிறப்பா வந்தாங்களா என முடுக்கு தலை வாசலில் ஒலிக்கும் குரல்களும் மறக்க இயலாத மலரும் நினைவுகளே...!

இதற்கு மேல் எழுதினால் கருத்தே ஒரு கட்டுரையாகிவிடும். கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...train
posted by: hylee (colombo) on 02 March 2015
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39405

"பச்சை விளக்கு" வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) on 03 March 2015
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39419

ரயில் பயணம் என்றாலே அது ஒரு தனி சுகம்.

அதனை மிக அழகுபட சுவை குன்றாது எழுதி அக்கால பசுமை மாறா நினைவுகளை அசை போட வைத்தும் மனதில் நீங்கா அன்றைய மலரும் நினவுகளை இன்று எங்கள் நெஞ்சங்களில் நிழலாட வைத்துள்ள இக்கட்டுரையின் எழுத்தாளர் குளம் சுஹைப் காக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Mauroof (Dubai) on 03 March 2015
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39435

அருமையான, சுவாரஸ்யமான கட்டுரை. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved