Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:05:20 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 189
#KOTWEM189
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 26, 2016
விடுதலைப் போரில் காயலர்...!

இந்த பக்கம் 4059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கருத்து வழிச் சொற்கள் காற்றில் கலந்து காலாவதியாகிப் போகும். ஆனால், எழுத்து வழி ஏடுகள் தாம் காலத்தைக் கடந்து சிரஞ்சீவித்துவம் பெற்றுச் சிறப்புறும். எத்தனையோ வரலாற்று நாயகர்களின் சிறப்புத் தியாகங்கள் செவிவழிச் செய்தியாக மட்டுமே தலைமுறை தலைமுறையாகப் பரவி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மறைந்தே போனது.

ஆனால், எழுத்தில் வாழுகின்ற தியாகிகளின் தகவல்கள் மட்டும் தான் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றில் கூட ஆவணங்கள் அழிப்பு, தீயிட்டுக் கொளுத்துதல், கரையான் அரிப்பு, காணாமல் போவது, சண்டையில் நாசமாகிப் போனது, களவு போனது, இடமாற்றம் செய்யும் போது தவறிப் போனது, காலங் காலமாகக் கிடப்பில் இருந்ததால் காகிததாளே உடைந்து நொறுங்கிப் போனது என்றவாறு பல்வேறு இடையூறுகளையும் தாண்டி மிஞ்சி நிற்கின்ற ஆவணங்கள் மட்டுமே தற்போது தகவல் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன்.

இவையும் எங்கெங்கு உள்ளன என்பதும் வெகு சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இனி யாரும் ஈடுபடும் வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே தியாகிகளாக இருந்தவர்களின் தகவல் ஆவணங்களைப் பாதுகாக்காப்பதே நமது நாட்டின் மிக பெரிய சொத்தாகும்.

இந்தப் பணிக்கான தேடுதலில் ஒரு பத்திரிகையாளர் ஈடுபட்டார். 'தினமணி" நாளிதழின் தலைமைச் செய்தியாளராக இருந்தவர் அவர். ஏராளமான இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர், தமிழ்க்கடல் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை வைத்திருந்து ஏராளமான நூல்களை வாசகர்களுக்கு வழங்கியவர். ஆண்டுதோறும் தமிழக அரசின் பரிசுகளை வாங்கி வெற்றிக் கோப்பைகளைத் தொகுத்துக் காட்டியவர் என்றவாறு ஏராளமான அனுபவ ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்டவரும், ஆயிரமாவது பிறை காணக் காத்திருப்பவருமான திருவாளர் வி.என். சாமி அவர்கள்தான் இந்தத் தேடுதல் நாயகர்.

அவர் மிகப் பெரும் சிரமங்கள் எடுத்து தேடித் திரட்டிய தகவல்களைச் சீர்மைப்படுத்தி நூல் வடிவில் வழங்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்தப் பேதமும் இன்றி அனைவரும் ஓரணியில் நின்று போராடினர். அப்போது சிறைக் கூடங்களை நிரப்பினர். இறுதியாக நாடு சுதந்திரம் பெற்றது. முஸ்லிம்களுக்கு என பாகிஸ்தான் உருவாயிற்று.



'இந்தியாவைத் துண்டாட முஸ்லிம்கள் காரணமாகி விட்டார்களே! என்ற கோபத்தில் சுதந்திர இந்தியாவில் இருந்த சில உணர்ச்சிவாதிகள் முஸ்லிம்களின் தியாக வரலாற்று ஆவணங்களை நாசப்படுத்தி விட்டனர். அவற்றையும் தாண்டி எஞ்சியுள்ள ஆவணங்களை மையமாக வைத்தது திருவாளர் வி.என். சாமி இந்த அரிய நூலை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

வெளிவராத அபூர்வத் தகவல், மறைந்தும் மறையாத தியாகிகளின் புகைப்படங்கள் கிடைக்காத நிலையில் வரைபடங்கள் என்றவாறு கருத்துக்களைப் படம் பிடித்துக் காட்டியது போல் நூல் உருவாகி இருக்கிறது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏராளமான பகுதிகளின் இன்னும் இருள்தான் சூழ்ந்திருக்கிறது. அவற்றுக்கு ஒளியூட்டக் கூடிய விளக்கங்கள் இந்த நூலில் ஏராளம். தமிழில் வெளியான முஸ்லிம் தியாகிகள் பற்றிய முழுமையான ஒரே நூல் என்ற இதனைக் குறிப்பிடலாம். இதன் மொழியாக்கங்கள் மிகவும் அவசியம் என்பதை அரசும் உணர வேண்டும்.

வரலாற்று ஆய்வுப் பேழையாகவும், ஆய்வாளர்களின் பார்வை நூலகவும் இருந்தே தீர வேண்டிய அம்சங்கள் இந்நூலில் ஏராளம்.

இந்நூலை முழுமையாகப் படித்து முடிப்பவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தினரின் சுதந்திர வேட்கையையும், தன்னலம் கருதாத அர்ப்பணத் தொண்டையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆகும். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். அவர்கள் பங்கு கொண்ட போராட்டங்கள், பெற்ற தண்டனை, சிறைவாசம் அனுபவித்த ஊர்கள் பற்றிய விவரங்களை அரசு ஆவணங்களிலிருந்து இயன்ற அளவு திரட்டி எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைப் பேரில் தமது இன்னுயிரை தியாகம் செய்த முதல் பத்திரிகையாளர் ஒரு முஸ்லீமாவார். அதன் தொடர்ச்சியில் கண்ணிய மிகு புண்ணிய காயல்பட்டணத்தில் 1878 - ஆம் ஆண்டு பிறந்தவர் செ.யி.ம. செய்யது அகம்மது மவுலானா. இவர் விடுதலைப் போராட்ட வீரர். 1925 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'அல் ஹிதாயா" என்னும் இதழின் ஆசிரியர். அந்த இதழை இவர் விடுதலைப் போருக்குப் பயன்படுத்தினார். அதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு இவரைச் சிறையில் தள்ளியது.



அன்னார் 93/c தைக்கா தெருவை சேர்ந்த ஜனாப். மர்ஹீம் மௌலானா அவர்களின் மகன்.

ஜனாப். செ.யி.ம. செய்யது அஹமது மௌலானா அவர்களின் மகன்கள் இருவர்

1. மர்ஹீம். செய்யிது யாஸீன் மௌலானா

2. மர்ஹீம் செய்யது சல்மான் மௌலானா.

இவரின் மகன் ஜனாப் S.S.M. மஹ்மூது மர்ஜீக், குறுக்குத் தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எண்ணற்ற இஸ்லாமிய மக்கள் விடுதலைப் போரில் தங்கள் தியாகங்களை இத்திருநாட்டுக்காக அர்பணித்தவர்கள் வரிசையை தொகுத்து பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத் திட்ட நிபுணர்கள் இந்நூலின் மீது கவனம் செலுத்தினால் நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் சகாப்தத்தின் ஓயாத தியாக உணர்வு சென்று சேரும்.
சுதந்திர தினங்கள் மற்றும் குடியரசு தினங்களின் போது, இது போன்ற நூல்களை மாணவ - மாணவியர்களுக்கு விநியோகித்து மகிழ வேண்டும். பள்ளி - கல்லூரிகளிலும் - பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு போட்டிகளுக்காக வழங்கப்படும் நூல்கள் பட்டியலில் இந்த நூலுக்கும் மகத்தான இடத்தை வழங்கலாம்.

67-வது குடியரசுதினம் கொண்டாடும் 26.01.2016 இன்று அனைத்து இஸ்லாமிய தியாகிகளின் தியாகத்தை நினைவில் கொள்வோம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விடுதலைப் போரில் காயலர்
posted by: kumandaan ismail (kayalpattinam) on 27 January 2016
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42952

ஓர் அரிய நூலையும் அத்தோடு விடுதலைப் போரில்பங்கு பெற்ற கண்ணியமிகு காயலரையும் தனது அற்புதமான கட்டுரையின் மூலம் எடுத்துரைத்த கட்டுரை ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெளிவரும் விருட்சம்...
posted by: MUJEEB (KAYALPATNAM) on 27 January 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42966

அஸ்ஸலாமு அலைக்கும்... சகோதரர் அன்பின் அலாவுதீனின் பதிவு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நமது அண்டை ஊர்களில் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் பட்டியல் உள்ளது... அந்த பட்டியலில் நமதூரின் நிலை மிகவும் வருந்தத்திற்குரியதாக இருப்பதாக எண்ணியிருந்தேன்... ஆனால் இந்தப்பதிவின் மூலமாக மிகுந்த மகிழ்ச்சி என் மனதில் மலர்கிறது... நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தில் நமதூர் முன்னோர்களின் பங்களிப்பு குறித்து நமதூர் கல்வியாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் ஆகியோர் இணைந்து முழுமையான ஆராய்ச்சியில் ஈடுபடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்... இந்த சீரிய முயற்சிகளுக்கு நமதூர் தனவந்தர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க முன்வருவார்கள்...

என்னை போன்ற இளைய தலைமுறைகள் இதுகுறித்து அறிய மிகுந்த ஆர்வமுடன் உள்ளார்கள்... எதிர்கால தலைமுறைகளும் இதுகுறித்து அறிந்து கொள்வது மிகுந்த அவசியமாகவும் உள்ளது...

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து, நம் முன்னோர்களின் அறிய பங்களிப்பை உலகிற்கு வெளிவரசெய்ய பிரார்த்திக்கின்றேன்...

இப்படிக்கு,
அ.முஜீபு,
அரசு நூலகர்,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தேடுதல் தேவை
posted by: M.S.SAYYID MOHAMMED (BANGKOK) on 11 February 2016
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 43064

காயல் பட்டினத்தில் ஒரு விடுதலைப் போராளி இருந்துள்ளார், அவர் தன் எழுத்தின் மூலம் மக்களைத் தட்டி எழுப்பியதன் விளைவாக சிறையும் சென்றுள்ளார் என்ற செய்தி அறுபது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கே புதிய செய்தியாக உள்ளது என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால மக்களுக்கும் எப்படி தெரிய வாய்ப்புள்ளது.

எழுத்து வழி ஏடுகளையே ஏய்த்து மாய்த்துக் கொண்டிருக்கும் சதிகார காலத்தில் சொற்கள் வழியேனும் நம்மூரில் விடுதலைப் போராளிகள் வாழ்ந்துள்ளார்கள் என்ற உண்மையை இதுகாறும் யாரும் உணர்த்தாது துரதிஷ்டமே.

இன்னும் எத்தனைப் பேர் இருந்தார்களோ தெரியவில்லை. தேடுதலில் ஈடு பட்டால் கண்டிப்பாக இருந்தவர்கள் பட்டியல் நீளும் என்பதே என்னுடைய கருத்து.

சகோதரர் அன்பில் அலாவுதீன் அழகான ஒரு தேடுதலைத் தூண்டிவிட்டுள்ளார். காயல் முன்னோர்கள் ஆன்மிகத்தில் மட்டும் இருந்து விடவில்லை, அரசியல் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பங்காற்றியுள்ளனர் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் பொருட்டு வருங்கால தலைமுறையினருக்காக கண்டிப்பாக ஏடுகளில் பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும்.

யார் செய்வது, எப்படி செய்வது என்ற ஆலோசனையை நம்மூரில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை அணுகலாம். எழுத்தாளர்கள் தம்பி சாளை பஷீர், S.K. சாலிஹு போன்றவர்கள் இதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களை அணுகுதல் சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்.

ஆர்வமுடன்
M.S.செய்யிது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved