Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:35:44 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 196
#KOTWEM196
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 23, 2016
போக்குவரத்துக்கு இடையூறின்றி வீதியில் வாகனங்களை நிறுத்துவதெப்படி?

இந்த பக்கம் 3319 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகலாவிய நாடுகளில் வாழும் காயல் நகர சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட இடை வெளிக்குபின் கட்டுரை தருகிறேன் படியுங்கள்! இன்று காயல்பட்டினம் பேரூர் ஆட்சி மாறி நகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளதால் வீட்டுவரி, இதர அரசு துறைவரிகள் உயர்ந்துவிட்டது.

பெருமை ஏற்பட்டு மக்கள் வாழ்வில் தொழில் நெருக்கடி ஏற்பட்டதால் இங்கு வாழும் வியாபாரிகள் அதை சரிகட்ட விற்கும் பொருள்களில் விலை கூட்டி லாபம் அதிகம் பெற நாடுவது தெரிய வருகிறது. (இதில் தப்பு இல்லை ஒன்றில் நஷ்டம் மற்றொன்றில் லாபம் தரும் பாதை இதுதான்) 200 வருடங்களாக காயல் நகர மக்கள் கடல் கடந்த நாடு சென்று குறிப்பாக இலங்கை மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஹாங்காங் பாங்காக் (தாய்லாண்ட் நாடு) சென்று தொழில் செய்து உழைத்து கை நிறைய பணத்தை பேங்க் மூலம் அள்ளி வந்து மனைவி மக்களுடன் சந்தோஷமாக செல்வத்துடன் வாழ்ந்து வரும்போது அவர்களுக்கு நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனமாக ஸ்கூட்டர், பைக் போன்ற வாகனமும் வாங்கிக்கொண்டு, ஆறுமுகநேரி திருச்செந்தூர் வரை மனைவி மக்களை பின்னால் வைத்து ஓட்டிச் செல்வது ஏனெனில் பேரூந்தில் மனைவி, மகளை, மருமக்களை, பேத்தியை, இடி மன்னர்களுடன் இடித்து செல்லாமல் பாதுகாக்க டூவீலர்களில் போக பழகியும் இக்காலத்தில் தந்துள்ளனர்.

ஆண்களின் பெரும்பாலோருக்கு காவல் துறை மூலம் லைசன்ஸ் வாங்கி இருக்கலாம். டூவீலர் ஓட்டும் எந்த பெண்ணாவது அல்லது மாணவர்களில் பலர் லைசன்ஸ் முறைபடி வாங்கி இருக்கிறார்களா? எண்ணிப்பாருங்கள். இதனால்தான் மாணவர்களில் பலர் அல்லது படித்தவர்களில் சிலர் படிப்பை விட்ட பலர் வீதியில் வாகனம் நிறுத்தும் முறை தெரியவில்லை. சிக்னலும் புரியவில்லை. ஹாரன் அடிக்காமல் திரும்புகிறான். ஆபத்தில் மாட்டுகின்றான்.

காயல் நகர வீதி எங்கும் டூவிலரில் வருகிறார்கள். கடை முன் நிறுத்தி விட்டு கடை வாசலையே மறைத்து மக்கள் போக இடமின்றி இடங்களை மறைத்து இஷ்டத்துக்கு இடையூறு செய்து விட்டு போகிறார்கள். தம்பி கொஞ்சம் தள்ளி விடுங்களேன் போகும் பாதை இடையூராக இருப்பதாக கூறினால் ஐந்து நிமிடத்தில் வருவதாக காம்ளக்ஸ் பஜார் உட்பகுதியாக பஜார் போய் மணிக் கணக்கில் எங்கேயோ ஒரு கடையில் அரட்டை மண்டபத்தில் அரை மணி நேரம் நேரத்தை வீணடித்து விட்டு மீண்டும் வாகனம் விட்ட பகுதிக்கு வருவதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாக உள்ளது. சொன்னது ஐந்து நிமிடம்! அரை மணிக்கு மேல் அரட்டை விபரத்தில் ஆழ்ந்து விட்டு வருவது நியாயம்தானா? எண்ணிப்பார் உன்நிலையை!

வணக்கஸ்தலம் முன்பு வாகனத்தை நிறுத்துவது சரியா?

பள்ளிவாசல், கோவில், சர்ச், தர்ஹா முன்பும் ஆடவர் மகளிர் கல்லூரி முன்பும் வாகனத்தை நிறுத்தி எப்படி செல்வது என்று அந்த முறையை யார் கடை பிடிக்கிறார்கள்? நினைத்து பாருங்கள் மளிகைக் கடை, நகைக் கடை, ஜெராக்ஸ் கடை, வெளிநாட்டு பொருள்கள் வாங்கும் கடை ஆர்கானிக் பொருட்கள் அங்காடி இன்னும் பழம் காய்கறி மார்க்கெட் முன்பும் தாறுமாராக குண்டக்க மண்டக்கா மாதிரி கண்ட மாதிரி போகும் திசை வந்த திசை வாகனம் ஒன்றாய் நேராக நிற்பதை காயல்பட்டினத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.

போகும் திசையில் வந்தவர் திரும்பும் திசையில் திருப்பி வாகனத்தை ஏன் வாசலை மறைத்து நிறுத்துகிறார். தூரத்தில் எல்லா வீதியிலும் வாகனம் நிறுத்த இடம் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி வாசல்கள் தர்ஹா, கோவில், சர்ச் போன்ற வணக்க ஸ்தலங்களுக்கு நீண்ட கோட்டைச்சுவர் வீணாககாலியாக உள்ளது. அதை அவர்கள் நிர்வாகத்தில் சொல்லி வீதிக்கு வரும் பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் கொடுமை நீங்கி விட வழி பிறக்கும் அல்லவா?

பள்ளி கல்லூரி மாணவர்களே!

மாணவ கண்மணிகளே! நீங்கள் பள்ளி விடுமுறை காலங்களில் அல்லது தினமும் இரவு வேளைகளில் வீதியில் பைக், ஸ்கூட்டர் வாகனத்தை வீதியை ஒட்டி நான்கு ஐந்து மாணவர்களாக நிற்பதை காண்கின்றோம். இது போகும் பேரூந்துக்கும் நடைபாதைவாசிகளுக்கும் இடையூராக தெரியவில்லையா?

பேரூந்து ஓட்டுனர் நமதூரை புறக்கணித்து இரவு பேரூந்துகளை திருச்செந்தூரில் புறப்பட்டு அடைக்கலாபுரம் வந்து ஆறுமுகநேரி சென்று நெல்லை தூத்துக்குடி செல்ல காரணம் நீங்கள்தான். இரவில் வீதியில் சம்பந்தமில்லாமல் பேரூந்து போக முடியாமல் பைக் ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோவை நிறுத்தி இடையூறு செய்வதால் காயல்பட்டினம் வந்தாலே என்ற குற்றச்சாட்டுகளை வெகுதூரம் போகும் பேரூந்து ஓட்டுநர் ஒருவர் ஒரு சமயம் என்னிடம் கூறினார் வேதனையாக! உண்மைதானே?

நம்ம ஊருக்குல் எல்லா ஊர் பேரூந்துகள் வந்து போக நாம் ரூட் வாங்கி வைத்திருந்தும் ஏன் அந்த இரவு பேரூந்து வராமல் போகிறது என்பதை எண்ணிபாருங்கள். பேரூந்து திரும்பும் பாதைகள் இடையூராக டூவிலர் வாகனம் இருப்பதாக குற்றச்சாட்டை தரும் பேரூந்து ஓட்டுநர் கோரிக்கையை காயல்வாசிகள் கவனித்து எல்.கே.லெப்பைதம்பி சாலை மிகக் குறுகிய சாலை ஒன்வே (ஒருவழிப் பாதையில்) இரண்டு பக்கமும் வாகனத்தையும் ஆட்டோவையும் நிறுத்தி வைத்தால் பேரூந்தும் இதர வாகனமும் குறித்த நேரத்தில் இந்த வீதியை விட்டு கடந்து செல்ல ஆமை வேகமாக போய் சுமார் ஒருமணி நேரமாவது இந்த சாலை கடந்து செல்ல முக்கி முனங்கி பாம்பு போல ஆடி அசைந்து நெளிந்து கடந்து போவது பேரூந்து ஓட்டுனருக்கு சிரமம் என்பதை இனியாது எண்ணிப் பார்த்து வெளியூர் வாகனம் நமதூர் வழியாக போக இடம் தருவீர்களா? ஊருக்கு நல்லதை செய்ய முன் வாருங்களேன்.

வீதியின் நிலை எப்படி உள்ளது?

நமதூர் நகராட்சி இருந்து செயல்பட முடியவில்லை. குண்டும் குழியுமான வீதியை ஊர் பொதுநலசபை அமைப்பாளர்கள் வெளிநாட்டு மக்களிடம் நிதி பெற்று போக்குவரத்து அதிகாரி மூலம் கே.டி.எம் தெரு, தாயிம்பள்ளி பின்புறம் உள்ள வீதி பெரிய நெசவுதெரு எல்.கே. லெப்பைதம்பி சாலை (கூலக்கடை பஜார்) மெயின் பஜார் பகுதி வீதிகளை நல்லதாக அமைத்து இருபக்கமும் மக்கள் நடந்து செல்ல மஞ்சல் நிறகோடு போடலாம்.

வாகனம் நிறுத்த ஆறுமுகநேரி காவல் நிலையம் இடத்தை ஒதுக்கி ஆவன செய்தால் நம்மூர் வழியாக வெளியூர் வாகனம் மன திருப்தியாக வந்து செல்லும் வெளியூர் உல்லாச பிரயாணிகள் கடற்கரை செல்லும் பாதையில் ஒருமுறை போனால் வாகனத்தின் பிரேக் அறுந்து போகும் நிலை ஓட்டுனர் இடுப்பும் உடைந்து போகும்.

குண்டும் குழியும் உள்ள சாலையை செப்பனிட்டு சிறப்பாக போட்டு மன திருப்தியாக வாகனங்கள் காயல் கடற்கரை போக வழிகாட்டுங்கள். இது நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் 18 பேரின் கடமையாகும். செய்வார்களா?

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அவசியமான அறிவுரை...
posted by: Sithi Lareefa (Chennai ) on 23 March 2016
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43392

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் அனைவரும் போகும் போதும் வரும் போதும் பார்த்து எரிச்சல் பட்டு புலம்பி விட்டு செல்லும் இந்த விஷயம் அன்றாடம் வாடிக்கை என்றாலும் நாம் வெளியில் சொல்வதில்லை.. பூனைக்கு யாரேனும் மணி கட்டித்தானே ஆக வேண்டும்...

வீட்டுப் பெரியவர்கள் நேரில் நின்று சுவாரஸ்யமாக பேசுவது போலிருந்தது மாமா அவர்களின் கட்டுரை... மாஷா அல்லாஹ்...

இனி குறுக்கு மடக்காக வாகனம் நிறுத்தும் அன்பர்கள் உங்களை ஒரு கனம் எண்ணிப் பார்த்து அதனை தவிர்க்கக் கூடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கூரிய கத்தியை குழந்தைகள்கையில் கொடுக்கப்படுகிறது.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 24 March 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43394

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இடையூறாக செப்பனிடப்படாமல் இருக்கும் சாலைகள்,தெருக்கள் இருப்பது ஒருபுறம் பக்கம்பக்கமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது மறுபுறம் நகராட்சி என்றபெயரில் நரக ஆட்சி.

மீசை அரும்பும்முன் மக்களுக்கு மோட்டோர் இருசக்கரவாகனங்கள் பெருமைக்காகவும் கௌரவத்திற்காகவும் கொடுக்கப்பட்டு உயிரின்விலையும் கண்ணியமும் அறியாமையில் அழிந்துவருகிறது 10,12 வயது மைனர்களுக்கெல்லாம் இப்படி வாகனக்களைவாங்கிக்கொடுத்து கெடுத்துவருகிறார்கள் அவர்களுக்கு அந்தவயதில் வேகம்மட்டுமே தலைகாட்டும் விவேகம் எடுபடாது என்பதைமறந்து நாளுக்குநாள் அதிகரித்துவரும் விபத்து இழப்பு உயிர்சேதங்கள் எல்லாம் தெரிந்தும் பெற்றோர்கள் வழிகெடுக்கிறார்கள்.

இந்தவிஷயங்களை உரியவர்களிடம் சொன்னால் பொறாமையில் பேசுகிறான் வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்று முடிவுசெய்துவிடுகிறார்கள் ஆனால் இவர்களால் இதனால் வரும் இழப்பை இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஒருபாதிக்கப்பட்டவனின் குடும்பத்தின் நிலைகண்டால்தான் புரியும் அஸ்தஃஃபிருல்லாஹுல்அழீம் இன்னும் அவர்களுக்கும் இழப்புவரும்போதுதான் புரிகிறது.

ஏ எல் எஸ் மாமா பலபடி மேலேபோய் இன்னுமொரு கோணத்தில் போக்குவரத்து இடையூறு அதனால் நாம் இழக்கும் பயன்கள் அதாவது பேருந்துகள் நமதூருக்குள் வராமலே சென்றுவிடுகிறது உங்களுக்கென்ன உங்களிடம் வாகனங்களிருக்கிறன நினைத்த நேரத்தில் சென்று காரியத்தைசாதித்துவிடலாம் பாமரன் வழியற்றவன் என்னசெய்வான்?

இந்த வாழ்க்கை சொற்பமண்வாசம் அதன்பிறகு மண்ணறையின்வசமே இதையாருக்கும் வேதனைகொடுப்பதற்காக பதியவில்லை ஆனால் வேதனையோடு எழுதுகிறேன்.

மாமா நல்லதொரு ஆக்கமிகு ஆக்கம் மாஷா அல்லாஹ் தொடர்ச்சிகளில் முடிச்சுகளில்லாத முதிர்ச்சிகள் அல்ஹம்துலில்லாஹ் ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைர் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் எல்லா நன்னிலைகளிலும் உங்களை உயர்த்திவைப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Sheikna Lebbai (Dubai) on 24 March 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43395

அஸ்ஸலாமு அழைக்கும்

ஏ எல் எஸ் மாமா உங்கள் இந்த கட்டுரை பலர் மனதில் உள்ள உணரிச்சி மிகு கேள்விகள் ....

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மெயின் ரோடு விரிவாக்கம் செய்த அரசு வண்டிகளை பார்கிங் செய்யவும் அவசர நடவடிக்கை எடுக்கலாமே ????

நம் காயல்பட்டினம் பெயர் அளவில் வளர்ச்சி பெற்றுவிட்டது....

ஆனால் உட்கட்டமைப்பு அளவில் ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: KJ KALIFA SEYED MOHAMED (Chennai) on 24 March 2016
IP: 122.*.*.* India | Comment Reference Number: 43396

ஆண்களின் பெரும்பாலோருக்கு காவல் துறை மூலம் லைசன்ஸ் வாங்கி இருக்கலாம். (C&P)

"காவல் துறை" என்பதை "போக்குவரத்துத்துறை"(RTO) என மாற்றலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: Musthafa M (Dubai-UAE) on 24 March 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43399

அஸ்ஸலாமு அழைக்கும்,

சின்ன பசங்க, பெண்கள் எல்லாம் பைக் ஸ்கூட்டர் ஒட்ரங்க எங்க இருந்து இவங்களுக்கு rules and regulations சொல்லி கொடுக்க. proper license இருக்கிற ஆண்களே சரியாக follow பண்றது கிடையாது (including me ).

பைக் ஸ்கூட்டர் கடைகளுக்கு முன்பு நிறுத்தி கடை ஒவ்னெர் எடுக்க சொன்ன அனுபவம் அதிகம் இருக்கு. இன் ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் தவிர்க்க முயல்வோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:... போக்குவரத்துக்கு...நிறுத்துவதெப்படி.
posted by: சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. ( கோழிக்கோடு- கேரளா.) on 25 March 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43406

அஸ்லலாமு அலைக்கும் வரஹ்.... ஹு.

நம் நகரின் சாலைப்பணிகள் சம்பந்தமான நம்நகர்மன்ற (தலைவி-அதிகாரிகள்- கவுன்சிலர்கள்) என்று முத்தறப்பு செய்திகளை மீடியாக்கள் மூலமாக முன்பு நாம் வாசித்த போது "தரமான சாலைகள்" அமைய தடையாக இருப்பவர்கள் யார் என்பது நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக நமதூரின் சில சாலைகளில் நான் வாகனத்தில் பயணிக்கும்போது "தரமான சாலைகள்" அமைய தடையாக இருப்பவர்களுக்கெதிராக என் மனது பிரார்த்திக்க தோன்றும். பின்பு சற்று நிதானமாகி யா அல்லாஹ் ! இவர்களுக்கு ஹிதாயத்தை கொடு என்றும், நல்லவைகளை செய்யும் மனோநிலையையும் கொடு என்றும் இவர்களுக்கு ஆதரவான துஆவை கேட்பதுண்டு.

அதற்கு காரணம் பாதிக்கப்பட்டவனின் துஆ விற்க்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் எந்த திரையும் இல்லை என்பதாலும் நம் துஆவால் பிறர் பாதிக்கப்படக் கூடாதென்ற என்னமும்தான்.

"வழிகளில் தொந்தரவு தரக்கூடியவைகளை அகற்றுவதும் இறைநம்பிக்கையின ஒர் அம்சம்" இது போன்ற பூமான் நபி(ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளை நம்மில் பலர் மறந்ததன் விளைவாகவே சாலைககளில் பிறருக்கு தொந்தரவு கொடுக்க கூடிய விததத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடிய அவலநிலை.

தன் வீட்டினுள் நடக்கும் சொளகர்ய குறைவை சீர்செய்ய முனைவது போல் வீதியில் ஏற்படும் முறையற்ற போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த A L S மாமா அவர்கள் தன் முதிரந்த வயதிலும் இந்த கட்டுரையை நமக்கு தந்திருப்பதை பார்க்கும்போது மாமாவின் சமூக முன்னேற்ற என்னம் என்றும் பதினெட்டு வயது தாண்டாமலேயே நிலையாகவுள்ளது. மாஷா அல்லாஹ்.

இந்த ஆக்கத்தின் ALS மாமா அவர்களுக்கும், இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதள சகோதரர்களுக்கும்.. ஜஸாக அல்லாஹு க்ஹைரா.

சாளை : M.A.K.முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.
கோழிக்கோடு- கேரளா.
25:03:2016.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved