Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:10 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 195
#KOTWEM195
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 20, 2016
உம்மா...! ஸே மாஷாஅல்லாஹ்...!!

இந்த பக்கம் 6134 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இரண்டு வருடங்கள் இருக்கும்... அரக்கப் பறக்க வேலைகளை முடித்துவிட்டு, அவசர அவசரமாக ரெடியாகி, அமெரிக்கன் கவுன்சலேட் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பயிற்சி வகுப்பொன்றுக்கு வியர்க்க விறுவிறுக்க போய் நிற்கிறேன். எங்க டீச்சர் Mrs. Conie Greenleaf (நம்ம ஊரு வெத்தலையைத்தான் அங்கே பேரா வச்சிடுறாங்க போல!) “என்ன லேட்?” என்பது போல வாட்ச்சைப் பார்த்து மானத்தை வாங்குவாங்களேன்னு... லே…சா உள்ளுக்குள்ளே பதட்டம்!

ஆனா... அங்கே போனதும், “வாவ்! யூ லுக் வெரி நைஸ் டுடே!” என்று எனக்கு மட்டும் கேட்பது போல என் காதருகில் கிசுகிசுத்துவிட்டுப் போக, எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று கூட தெரியாமல் ஒரு நிமிடம் நான் சிலையாகிவிட்டேன். “நம்மைத்தானா அல்லது வேறு யாரையுமா?” என்று நான் சுற்றுமுற்றும் திருட்டு முழி முழிக்க, “உன்னைத்தான்” என்பதைப் போல ஒரு புன்னகை! பின்னர் சுதாரித்துக் கொண்டு, எனக்கே கேட்காத குரலில் “தேங்க்ஸ் Conie” என்றேன். இதழோரம் ஓர் அசட்டுப் புன்னகையோடு (அந்தம்மாவுக்கு 62 வயசாகுது... ஆனாலும் நாங்க அவங்கள ‘கோனி’ன்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடனும்!) அன்று முழுக்க இந்த உலகமே திடீரென ரொம்...ப அழகாயிட்டாப்புல மனசு முழுக்க ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி! மேலே... உயரே... உச்சியிலே... என என் மனம் அலைபாய்ந்தது. ஒன்னுமில்ல... இதுபோன்ற வார்த்தைகளை நாம் கேட்டதேயில்லையா...? அதான் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம தவிச்சு போயிடறோம்.

பெரியவர்களோ, சிறியவர்களோ... சிறு சிறு அங்கிகாரங்களுக்கும், “மாஷாஅல்லாஹ்...”, “Superb”, “வெரிகுட்” போன்ற சின்னச் சின்ன மோட்டிவேஷன் வார்த்தைகளுக்கும் (பாராட்டு என்பதைத்தான் இப்படி ஜிகினா பேப்பரில் சுத்தியிருக்கேன்) ஏங்குவது இயல்பான ஒன்று. பாராட்டு என்றவுடன், முகத்துக்கு நேரே ஓவராகப் புகழ்வது என்று பொருள் கொண்டு விட வேண்டாம். அது “காக்கா பிடிப்பது!” இஸ்லாம் விரும்பாத செயல் அது.

நான் சொல்ல வருவது...

தோழி உடுத்தியிருக்கும் அழகிய ஆடையைப் பார்த்து, “வெரி நைஸ்” என்று சொல்லும்போது...

பக்கத்து வீட்டு ஆண்ட்டி பராமரிக்கும் தோட்டத்தின் அழகை ரசித்து ஒரு சின்...ன கமெண்ட் செய்யும்போது...

மாடி வீட்டு மாமியின் வத்தக்குழம்பை “சிம்ப்ளி சூப்பர்ப்” என்று பாராட்டும்போது...

கணவரின் புதிய ஹேர்கட்டைப் பார்த்து ஒரு புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ உயர்த்தும்போது...

மகளின் ஓவியத்தை... மகனின் சுறுசுறுப்பை... உம்மாவின் சமையலை... லாத்தாவின் ரசனையை... தங்கையின் கிராஅத்தை... மாமியாரின் பொறுமையை... மாமனாரின் அக்கறையை... நாத்தனாரின் பிள்ளைகளை... என்று நாம் பார்க்கின்ற - ரசிக்கின்ற - வியக்கின்ற சிற்சிறு விஷயங்கள் தொடர்பாக சிம்பிளான சில வார்த்தைகளில் நம் உள்ளத்தை வெளிப்படுத்தும்போது...

அவர்களது கண்களில் பூக்கும் ஒரு கோடி மின்னல்கள் இருக்கே... அதற்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது.

ஒரு படி மேலே சொல்வதென்றால், இவ்வாறு பாராட்டுவது ஸுன்னத் (நபிவழி) என்றும் கூட நான் சொல்வேன். “உனக்கு ஒருவரைப் பிடித்தால் அதை அவரிடம் வெளிப்படுத்தி விடு!” எனும் கருத்திலான நபிமொழி நமக்கு அதைத்தானே உணர்த்துகிறது?

“தம்பி! உன்னோட ஸ்பீட் வேற யாருக்கும் வராதுடா! சூப்பர்!!” என்ற ஒரு வாசகம் வெற்று வாசகமல்ல! உங்கள் தம்பியின் திறமைகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் மிகப்பெரிய உந்துசக்தி அது!.

அருமையாக துணி கப்போர்டுகளை அடுக்கித் தந்த தேவி அக்காவிடம், “அக்கா! சூப்பரா ஷெல்ஃப அடுக்கிட்டீங்க...! ரொம்ப தேங்ஸ்க்கா...” என்று (அவருக்குரிய கூலியையும் கொடுத்துவிட்டுதான் :-) ) நாம் சொல்லும் வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாது, பணியாள் என்பதையும் தாண்டி அவர்கள் நம்மோடு உணர்வுப்பூர்வமான ஓர் உறவைக் கொண்டாடவும் அது காரணமாகிவிடுமல்லவா?

‘வெரிகுட்’டும், ‘ஸ்டாரு’மாய் டீச்சரிடம் அங்கீகாரம் எதிர்பார்ப்பது மாணவர்களது இயல்பு. அதே நேரம், “மேம்! நீங்கதான் என்னோட ஃபேவரைட் டீச்சர்... நீங்க சொல்லித் தர்றது நல்லா புரியுது மேம்...” என்ற ஒரு மாணவனின் அங்கீகாரம், அடுத்தடுத்த நாட்களில் ஆசிரியர்கள் பாக்காவாக prepare பண்ணி வகுப்பறைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான ஒரு ஊக்க மருந்து என்பது ஆசிரியர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

நாங்க நல்ல மூட்ல இருந்த ஒரு நாள்... இன்னிக்கு ஏதாச்சும் புது விதமா ஒரு ரெஸிப்பி செஞ்சி அசத்திப்புடனும்னு, மாங்கு... மாங்குன்னு நெட்டுல தேடி... உம்மாக்கு ஃபோன் போட்டு கேட்டு... ஃப்ரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் ஐடியாஸ் வாங்கி... ரசனையோடு சமைச்சு... புதுப் பாத்திரங்களா... பார்த்து தேடியெடுத்து... சாப்பாட்ட எடுத்து வச்சா...... ஒன்னையுமே கவனிக்காம... என்னைக்கும் போல அன்னைக்கும் அள்ளிப்போட்டுவிட்டு போயிருந்தா கூட பொறுத்துக்கலாம்ங்க...

“இன்னைக்கி என்ன? சாம்பார் வேற மாதிரி இருக்கு?”

என்று நாங்க சமைச்சு வச்ச - வாயில நுழையாத வட மாநில ரெசிப்பிய சாம்பாரா மாத்திட்டு போவாங்க பாருங்க... அப்ப பெண்களுக்கு ஏற்படுற உணர்வை, ‘பாம்பின் கால் பாம்புதான் அறியும்!’ அழுகையா... கோபமா... ஏமாற்றமா...? என்னன்னு எங்களுக்கே புரியாது...



அது என்னான்னா, இந்த பாராட்டுதல், அங்கீகாரங்கள் இதையெல்லாம் எதிர்பார்க்குற க்ரோமோசோம்கள் இயற்கையாகவே பெண்களுக்குத்தான் அதிகமாம்... 44 சதவிகித பெண்கள் தன் உறவுகளுக்குள்ளோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ தனக்கான அங்கீகாரங்கள் கிடைப்பதேயில்லை என்று திருப்தியின்றியே இருக்கிறார்களாம்...

இத எல்லாம் வேல மெனக்கெட்டு கண்டுபிடிச்சி சொன்ன புண்ணியவான், இந்த மாதிரி பாராட்டக்கூடிய இயல்புகளைக் கொண்ட க்ரோமோசோம்கள் ஆண்களுக்கு ரொம்...ப கம்மின்னும் சேர்த்து கண்டுபிடிச்சி சொல்லியிருந்திருக்கலாம்... நாம இயல்பாகவே கவனிச்சிருப்போம்...

ஒரு புடவைய பார்த்தவுடனே, நகைய பார்த்தவுடனே ஓ...டிப்போய், அது தெரியாதவங்களா இருந்தாலும்... “சூப்பரா இருக்கு! எங்க வாங்குனீங்க?”ன்னு கேக்குற பெண்கள காலங்காலமா கிண்டல் பண்ணிட்டிருக்கோம்... எந்த ஈகோவும் இல்லாம வெள்ளந்தியா அவங்க இருப்பதைத்தான் இது காட்டுது!

“ஆகா... பேஷ்! பேஷ்! ரொம்...ப நன்னாருக்கு... சமைச்ச கைக்கு வைர மோதிரம்தான் போடனும்” என்கிற நரசுஸ் காப்பி பாராட்டையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல! “ம்... இன்னைக்கு என்ன சமையல்? கொஞ்சம் டிஃப்ரண்டா இருக்கு?” என்று அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிச்சாலே எங்களுக்குப் போதும்!

அதுக்காக பெண்கள் மட்டும்தான் எப்போதும் வாங்குபவர்களாக இருக்க வேண்டும்... ஆண்கள் வழங்குபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல!

“இன்னைக்கி இந்த ஷர்ட்டுல நீங்க ரொம்...ப யங்கா தெரியறீங்க...!”

“நீங்க மட்டும் இல்லைன்னா... இந்தப் பிரச்சினைய இவ்ளோ ஈஸியா solve பண்ணியிருக்க முடியாது...”

“நீங்க மட்டும் எப்படி எப்பவும் கூ...லா இருக்கிறீங்க...?”

என்று அவ்வப்போது (சும்மாவாச்சும் ) பாராட்டப்படும் கணவர்கள் அவர்களது மனைவியரின் முந்தானைக்குள்தான் தஞ்சப்பட்டுக் கிடப்பார்கள்.

இதுக்கு ‘ஐஸ்’ன்னு நீங்க பேர் வச்சாலும் சரி! பல பேரோட வண்டியே இந்த மாதிரி ‘ஐஸ்’லதான் ஓடுது... அயர்ன் பண்ண ஷர்ட் கொண்டு வரும்போதே, “உன்ன மாதிரி நீட்டா அயர்ன் பண்ண எனக்கு வராது...” என்பதிலிருந்து, “உன்னைப் போல பொறுமையா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க எனக்குத் தெரியாதுமா... என்பது வரை ஐஸ் வைக்கப்படுகிறோம் என்று தெரிந்தும் உருகிப் போய்விடும் அப்பாவிகள்தான் பெண்களாகிய நாங்கள்!

அப்ப மத்ரஸா படிச்சிட்டிருந்த டைம்... ஒரு ப்ரோக்ராமுக்காக வெட்றது... ஒட்றது... எழுதுறது... வரையறது...ன்னு ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு செய்துகொண்டிருந்தேன்... அப்போ பார்த்து இன்னும் ரெண்டு மூனு சார்ட்டுகளோட வந்த தோழிங்க கிட்ட, “அதெல்லாம் முடியாது... வேற யாராவது செய்ங்க... இங்கேயே ஏகப்பட்டது குவிஞ்சி கிடக்குது...” என்று நான் டென்ஷனாக... பின்னாலிருந்து குசுகுசுவென்று ஒரு குரல்...

“அவகிட்ட உன்னத் தவிர வேற யாரும் இத பெர்ஃபெக்டா பண்ண முடியாது...ன்னு கொஞ்சம் ஐஸ் வச்சு கேளுங்க... எப்படி சரி முடிச்சி தந்துடுவா...” என - என் காதில் விழாது என்று நினைத்து ஒரு தோழி மற்றவளிடம் சொல்ல, அதைக் கேட்ட நான் “அடப்பாவிகளா...! இத்தன நாளா இப்டித்தான் என்னை ஏமாத்திட்டிருந்தீங்களா...” என்று நான் செல்லமாகக் கோபப்பட்டுக் கூற... அனைவரும் சிரிக்க... அன்று நடந்த இந்த ரகளைய இன்று எழுதும்போது எனக்கு மீண்டும் சிரிப்புதான் பீறிடுகிறது!

ஐஸ் வைத்து வேலை வாங்கச் சொன்ன அந்த ‘அட்வைஸ் அம்புஜமும்’ இதைப் படிப்பாள் என்று நினைக்கிறேன்... பசுமை நிறைந்த நினைவுகள்... ம்....... அது ஒரு காலம்!

அங்கீகாரம் வேண்டும் என்பதில் - அதாவது appreciate பண்ணப்பட வேண்டும் என்பதில் நாம் எல்லோருமே குழந்தைகள்தான்!

எனது மகனுக்கு நான் ஓதிக்கொடுக்கும்போதெல்லாம்... ஒவ்வொரு வார்த்தையையும் அவன் சரியாகச் சொல்லிவிட்டால்... நான் வெறுமனே “ம்...” என்றோ, “வெரிகுட்” என்றோ சொன்னால், “உம்மா...! ஸே மாஷாஅல்லாஹ்மா...!!” என்று அவன் கேட்கும் அழகிற்காகவே, “ம்...”, “ம்...” என்று மட்டும் சொல்லி அவனைக் கலாய்ப்பதுண்டு!

மாஷாஅல்லாஹ் சொல்லிவிட்டால் போதும்... சிரிப்பும், உற்சாகமுமாய் - அன்றைக்குள்ள பாடத்தைப் பிசிறில்லாமல் ஓதி விடுவான். “இளவரசியின் உயிர் பறவைக்குள் உள்ளது” என்ற அம்புலிமாமாவின் கதை போல, இவனது எனர்ஜி “மாஷாஅல்லாஹ்”வில்தான் ஒளிந்துள்ளது என்பேன்.

அது மட்டுமல்ல! அவன் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும், “உம்மா...! குட்பாய்ன்னு சொல்லு...” என்று நான் மறந்தாலும் மறக்காமல் கேட்டு வாங்கிவிடுவான்.

குழந்தைகள்... உள்ளத்தில் உதித்ததை உள்ளபடி சொல்லிவிடும் சுபாவம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் தயங்காமல் கேட்டு வாங்கிவிடுகிறார்கள்... ஆனால் நாம் அப்படியல்ல! எதிர்பார்த்து... எதிர்பார்த்து... ஏமாந்துவிடுகிறோம்.

எழுத்தாளர்கள் (என்று எங்களை நினைத்துக்கொள்ளும்) நாங்கள் தொடர்ந்து எழுதுவதா அல்லது மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, உருப்படியாக வேறு வேலைய பார்ப்பதா என்பதை வாசகர்களின் கருத்துக்களை வைத்துதான் முடிவெடுக்க முடியும்... ஆயிரம் நபர்களுக்கும் மேல் கட்டுரையை வாசித்திருப்பதாகக் கணக்கு காட்டுகிறது இந்த இணையதளம்! ஆனால், ஏதோ ஒன்றிரண்டு பேரிடமிருந்து மட்டும்தான் கமெண்ட் வருகிறது... அந்த வகையில், “எங்க எட்டாப்பம்மா” கட்டுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று கமெண்ட் அனுப்பியிருந்த சகோதரர் யூனுஸ் என் பார்வையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’. (என்னிடமும், என் வீட்டுக்காரரிடமும் தொலைபேசியில் பாராட்டிய / விமர்சித்த உள்ளங்கள், அந்தக் கருத்தை கட்டுரையின் கீழ் இரண்டு வரி எழுதிவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறதோ தெரியல!)

இப்படி நான் எழுதுவதற்கு ஏ.எல்.எஸ். மாமாதான் இன்ஸ்பிரேஷன்! மாமாவுடைய எழுத்துல... ஆதங்கத்துல... ஒரு நியாயம் இருந்தது... அதன் விளைவுதான் இந்தக் கட்டுரையே!

ராப்பகலா முழிச்சு... வருஷக்கணக்குல சிரமப்பட்டு ஒரு புத்தகம் எழுதுறோம்... குழந்தையைப் பிரசவிப்பதற்கிணையான மகிழ்வோடும், பதட்டத்தோடும் அதை வெளியிடுகிறோம்... நல்லதோ, அல்லதோ! நாலாப்புறமிருந்தும் கூட வேண்டாம்! ஒரு நாலு கமெண்ட்டடாவது வரும்னு... ‘நாஞ்சில் சம்பத்’ மாதிரி காத்திருந்தா... யாருகிட்டேயெல்லாம் புக்க படிக்க கொடுத்தோமோ... அவங்கள்லாம்... கிணத்துல போட்ட கல்லு மாதிரி அமைதியாயிடுறாங்க... ஆர்வக் கோளாறுல நாமே போயி கேட்டா... “படிக்க இன்னும் டைம் கிடைக்கல!” என்று எஸ்கேப் ஆயிடுறாங்க... “சரி, எழுதுனது போதும்! வேற வேலையப் பாரு”ன்னு மனசு முடங்கிப் போயிடுது!

நாஞ்சில் நாடன் போன்ற பெரிய எழுத்தாளர்களே கூட இதுபோன்ற தங்கள் வலிகளைப் பதிவுசெய்துள்ளனர் என்றால் நாமெல்லாம் ஆளில்லாத கடையில உக்காந்து டீ ஆத்த முடியுமா சொல்லுங்க...?

பள்ளிவாசலுக்கு அழகிய ஆடையுடுத்தி வந்த உம்மு ஹாலித் என்ற சிறுமியைப் பார்த்து, “ஆகா! ஆகா! அழகு! அழகு!” என்று பாராட்டிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, அவர்களின் திறமைகள் மேலும் அதிகரிக்க அவர்களுக்காகப் பிரார்த்தித்த அண்ணலாரிடம் நமக்குப் படிப்பினை இல்லையா?

பரீட்சையில் அறுபது சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துவிட்டு... அம்மா திட்டுவாளே... என மருண்டு நிற்கும் குழந்தையை அள்ளியணைத்து... அந்த அறுபது சதவிகித மதிப்பெண்களுக்காகவே அதை உச்சிமுகர்ந்து ஒரு தாய் உற்சாகப்படுத்தும்போது... குழந்தையின் கண்களில் ஒரு உயிர்ப்பூ பூக்கிறதே... அதற்கு ஈடு இணையே இல்லை!!!

அந்த உயிர்ப்பூவை நம் ஒவ்வொருவருக்குள்ளும் விதைக்கும் உந்துசக்தியாக நாம் ஒருவருக்கொருவர் இருப்போம்... முஃமின்கள் என்ற உணர்வால் ஒன்றிணைவோம் - இன்ஷாஅல்லாஹ்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) on 20 March 2016
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43363

அருமையான காலத்திற் கேற்ற கட்டுரை . வாழ்த்துக்கள் சகோதரி.

மாஷாஅல்லாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: mohmed younus (DUBAI) on 20 March 2016
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43364

இது ஒரே அளவிற்கே உண்மை..

அடுத்தவர்களின் அங்கீகாரத்தை ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது உண்மைதான்...

ஆனால்...

அங்கீகாரம், கை தட்டல், நேரிடையாக உண்மையாக புகழ்வது எல்லாம் அடுத்தரிடம் இருந்து கிடைத்தால்தான் நான் ஒரு திறமையானவர் என்ற ஒரு தப்பான நம்பிக்கையை (It is a believe system) இது ஏற்படுத்தி விடுகிறது. We are conditioned to it. Is it?

தனக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் மேலும் மேலும் அதை வெளிப்படுத்துவதற்கு அடுத்தவர்களின் அமோதித்தலை சார்ந்து இருக்க நேரிடுகிறது... மேலும் அடுத்தவர்களின் அமோதித்தால் எப்போதும் ஒன்று போல் இருப்பது இல்லையே!

உங்கள் கட்டுரையிலே அது வெளிப்படுகிறது... இவ்வளவு எழுத்து திறமைகள் இருந்தும் ஏன் அடுத்தவர்கள் அதை பார்க்க வேண்டும் என்றும், புகழ வேண்டும் என்றும் எதிர்பார்கிறீர்கள். ஏன் உங்களின் நம்பிக்கையை அடுத்தவர்களின் பார்வையை சார்ந்து வளர்த்து கொள்ளுகிறீர்கள்.

நம்மை பற்றி சேர்டிபிகட் தருவதற்கு நம்மை தவிர யாருக்கும் இங்கு தகுதி இல்லை... இப்படி சொல்வதினால் நான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்றோ, நான்தான் மிக அறிவாளி என்றோ பொருள் இல்லை .

என்னால் முடிந்த வரையுள்ளும், என் வட்டத்துக்குள் நான் மிக அறிவாளி என்றும்,,மேலும் என் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்த வரை உழைப்பேன் என்பதுதான் இதன் பொருள்.

நம்மின் ரிமோட் கண்ட்ரோல் அடுத்தவர்களிடம் இருக்க கூடாது... அப்படி இருந்தால் அது நான் நானல்ல .

புரிந்து இருக்கும் சகோதரி..

ஒருவரை பிடித்து இருக்கும்... ஆனால் அவரின் கருத்தை கருத்தை பிடித்து இருக்காது

இங்கு அவரை பிடித்தால் தனக்கு பிடிக்காத அவற்றின் கருத்தை பரப்பியது மாதிரி ஆகி விடும்..

மற்றொன்று...

அவரை பிடிக்காது ..ஆனால் அவரின் கருத்தை பிடித்து இருக்கும்... இப்போது அவரின் கருத்தை பிடித்தால் அவரை விளம்பரம் அடித்த மாதிரி ஆகிவிடும்.

அழகாக எழுதுகிறீர்கள்.. அது உங்கள் ஆத்ம திருப்ப்திக்காக மட்டும் இருக்கட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...masha allah
posted by: Zainab fahima (Kayalpatnam) on 20 March 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43365

Masha Allah. It was interesting. the way you composed the article is too good. as u said, keeping ice really does work with kids.

Note: I used to read articles in kpm.com. but never commented. First time, I am commenting after reading ur article


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புகழ் தேடும் எதிர்பார்ப்பல்ல இது!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 20 March 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43366

லாத்தாவின் பல கட்டுரைகளைத் தட்டச்சு செய்யும்போதே ஆர்வமுடன் உள்வாங்கிக் கொள்வதுண்டு.

கருத்துப் பகுதியில் அவர்களின் கட்டுரைகள் தொடர்பான எனது எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய நினைப்பேன்... (நாம்தான் கட்டுரையை வெளியிட்டோம் என்பதால்) ஒரு நான்கு பேராவது கருத்துப் பதிவு செய்த பின் அடுத்த ஆளாக நாம் பதிவு செய்யலாம் என்று காத்திருப்பேன்... ஆனால், பார்ப்பவர்கள் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்கின்றனரே தவிர, அதுகுறித்த தமது கருத்துக்களைப் பதிவு செய்வதில்லை. எனவே, நான் மட்டும் தனியாக கருத்துப்பதிவு செய்தால் பொருத்தமாக இருக்காது என்று கருதி இருந்துவிடுவேன்.

இங்கு ஒரு சகோதரர், கட்டுரையாளர் புகழை எதிர்பார்த்து கருத்துக்களை வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நான் இக்கட்டுரையைப் படித்த வரை, விமர்சனமோ / பாராட்டோ எதுவானாலும் அதை அக்கட்டுரையின் கீழ் பதிவு செய்யலாமே என்றுதான் கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார்.

தொலைபேசி வழியே அவரிடமும், அவரது உறவினர்களிடமும் விமர்சித்தும் / பாராட்டியும் கருத்து தெரிவிக்கும் பலர், சில நிமிடங்களை ஒதுக்கி, கட்டுரையின் கீழ் அக்கருத்தைப் பதிவு செய்தாலென்ன என்பதே அவர்களின் கேள்வி!

வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் நீண்ட நெடிய வாசகங்களைப் பரிமாறிக்கொள்வோருக்கு இது மட்டும் முடியாமல் போவது ஏன் என்பதே அவருடைய கேள்வியாக உள்ளதாக அறிகிறேன். அது நியாயமும் கூட!

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், முகத்தில் எந்த சலனமுமின்றி செத்த சிலையாக அவர்கள் இருந்தால் ஓர் ஆசிரியருக்கு என்ன தோன்றுமோ...

பிள்ளைங்க நல்லா வர வேண்டும் என்பதற்காக பெற்றவர்கள் ஆர்வமுடன் புத்திமதிகளைச் சொல்லிக்கொண்டிருக்கையில், பிள்ளைகள் எதுவுமே கூறாமல் உம்மனாமூஞ்சியாக இருந்தால் பெற்றோருக்கு என்ன தோன்றுமோ...

ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் கருத்துப் பரிமாற அழைக்கப்பட்டிருக்க, ஒருவரை மட்டுமே பேசவிட்டுவிட்டு மற்றவர்கள் மவுனிகளாய் இருந்தால் அந்த ஒருவருக்கு என்ன தோன்றுமோ...

அதுதான் இங்கு கட்டுரையாளருக்கும் தோன்றியுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மாஷா அல்லாஹு ...
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) on 20 March 2016
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43367

சகோதரியின் இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது . மாஷா அல்லாஹ் .

நாம் அனைவர்களும் நமது வாழ்கையில் நல்லதை செய்யவேண்டும் அல்லது எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசை படுகிரோம் . அதை நாம் செய்து முடிக்கும் போது அதற்க்கு ஒரு நல்ல அங்கீகாரம் அல்லது நமக்கு " மாஷா அல்லாஹு " நீ செய்த காரியம் மிக நன்றாக உள்ளது என்ற அந்த வார்த்தை ஒன்றே நமக்கு பல கோடி பணங்கள் பரிசாக தருவதை விடவும் மேலாக தெரிகிறது.

... சகோதரியின் இந்த கட்டுரையும் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது ..... வாழ்த்துக்கள் ... தொடரட்டும் உங்களது எழுத்து பயணம் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மனம் ஒரு குழ்ந்தை
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 20 March 2016
IP: 5.*.*.* | Comment Reference Number: 43368

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி vabarakkaaththuhu.

இறையருள் நிறைக.

"மாஷா அல்லாஹ் சோ க்யூட் எஸ்ஸே கன்க்ராட்ஸ் "

மனம் ஒரு குழந்தையென கட்டுரைமுழுக்க ஆக்கிரமித்துள்ளது ஆசிரியையின் வாசகங்கள்

நிறைவும் குழந்தைத்தனமாக இருக்கிறது குழந்தைத்தனமாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். தொய்வில்லாமல் தொடராக தொடுக்கப்பட்ட பாராட்டுமாலை மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

"மாஷாஅல்லாஹ் எக்செல்லென்ட் சோ க்யூட் எஸ்ஸே கன்க்ராட்ஸ் "

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்ப்புகளுடன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 20 March 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43369

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹ்!!!! மப்ரூக்!!!!

கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!! மிஹ அருமை சஹோதரி.

அன்புடன் வாழ்த்தும் உள்ளங்கள்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...அங்கீகாரம் பாராட்டு
posted by: mackie noohuthambi (colombo) on 20 March 2016
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43371

மிக அருமையான கருத்தோவியம்.

நான் எழுதுவது கடிதம் அல்ல உள்ளம்...
அதில் இருப்பதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்...
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள...
என்று ஒரு கவிஞன் பாடுவான்.

உம்மு நுமைரா அவர்களின் ஒரு கட்டுரையை படித்து நமதூர் பெண்களுக்கு இப்படி எழுத வராதே என்று நான் சந்தேகப்பட்டபோது நெற்றியில் அடித்ததுபோல் ஒருவர் சொன்னார், என்ன இவர்களை தெரியாதா, உங்கள் வாப்பாவின் நண்பர் கலாமி காக்காவின் மருமகள் என்றார்... கலாமி காக்கா எனது வாப்பாவுக்கு மட்டுமா நண்பர் எனக்கும்தான் என்றேன். அப்போ உனக்கு வயசு என்ன என்று கேட்டார்....உஷ் .... அந்த subject க்குள் போகாதீர்கள்......

அகவை 92 தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி காலை 4.30க்கு அறிவாலயம் செல்கிறார், தினசரி நடை பயிற்சி செய்கிறார், உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார், சாதாரண தொண்டன் ஒருவன் எழுதும் கடிதத்தையும் படிக்கிறார், எல்லா தினசரிகளையும் நாளிதழ்களையும் ஒன்று விடாமல் படிக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்தியையும் அட்சரம் பிசகாமல் சொல்கிறார், இதோ தேர்தலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு பாட்டும் நானே பாவமும் நானே என்று திமுகவின் முதலைமச்சர் வேட்பாளராக களம் இறங்கி கலக்குகிறார்... இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது. நமக்கு 50 வயது ஆனவுடனேயே அப்பப்பா எனக்கு வயதாகி விட்டது, இனி வீடும் பள்ளியுமாக இருக்க வேண்டியதுதான் என்று ஆயாசப்பட்டுக் கொள்கிறோம்.

16 வயது பருவம் அடைந்ததிலிருந்து மண்ணறை செல்லும் வரை அன்றாடம் பள்ளிவாசல் மீது ஒரு கண்ணாகவும் வீட்டின் மேல் இன்னொரு கண்ணாகவும் இருக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையல்லவா..

என்ன வளவளா கொள கொளா என்று எழுதுகிறான் என்று யோசிக்காதீர்கள்.

சகோதரி சொல்லும் அங்கீகாரம் பாராட்டு எல்லாம் இருந்ததால்தான் இவர்கள் சாதிக்கிறார்கள். மனசுக்கு வயசில்லை.

மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் நிலை ஆகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?

சகோதரி எடுத்து வைத்துள்ள கருத்துக்கள் நூறு சதவீதம் சரியானது அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

கணவன் மனைவி மகள் மகன் பேரன் பேத்தி உம்மா வாப்பா சகோதரன் சகோதரி எல்லோருமே அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி இந்த அங்கீகாரத்தை பாராட்டை எதிர்பார்க்கிறார்கள் என்பதை குடும்பத்துடன் வாழ்பவர்கள் நன்கு உணர்வார்கள் நானும் அணுவணுவாக அனுபவித்து இருக்கிறேன்.

''எங்க மாப்பிள்ளை எதை வச்சாலும் திண்டுட்டு போய்விடுவோ'' என்று ஒரு மனைவி சொன்னால் மாப்பிள்ளை ஒழுங்கா செலவுக்கு கொடுக்க மாட்டார் என்று அர்த்தம். சமையலை பாராட்டவும் வேண்டும் அதிலுள்ள குறைகளை சொல்லவும் வேண்டும் இரண்டையுமே மனைவி கணவனிடமிருந்து எதிர்பார்க்கிறாள்.

உணவிலே அவளது தலைமுடி இருப்பதை பார்த்து அவள் திடுக்கிடும்போதும் நாம் அவளை பாராட்ட வேண்டும். '' உன் முடி அது உன் தலையில் இருந்தாலும் அழகாகத்தான் இருக்கிறது எனது இலையில் இருந்தாலும் அழகாகத்தான் இருக்கிறது''

இப்படி romantic கட்டுரைகள் ஆண்களுக்கு நிறையவே பிடிக்கும். இன்னும் எழுதுங்கள் உங்கள் கட்டுரைகளை ரசிக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களை மானசீகமாக வாழ்த்துபவர்கள் உங்களுக்காக துஆ செய்பவர்கள். உங்களை போல் என் பிள்ளைகளும் வரவேண்டும் வளர வேண்டும் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்பவர் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Ahamed (Hong Kong) on 21 March 2016
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 43372

மாஷா அல்லாஹ்..அருமையான கட்டுரை..கருத்து பதிவிட்டர்களின் கேள்வியும் சிந்திக்க கூடியதே.. Facebook ஐ போல நீங்கள் கட்டுரைக்கு கீழே Emoticons (👍👌👎) இப்படி எதையாவது வைத்து இருந்தால் கிளிக்கிவிட்டு போய் இருப்போம்லே?? இதே ஆயிரம் கருத்துகளுக்கு சமம் ஆயிடுமே??

இருப்பினும் மாஷா அல்லாஹ் kayal.com மெருகூடிக்கொண்டே இருக்கின்றது..வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 21 March 2016
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43373

மாஷா அல்லாஹ்.

உம்மு நுமைரா அவர்களின் மனக்கிடங்கில் இருப்பதை, ஏன் பலருடைய மனக்கிடங்கில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது இந்த ஆக்கம்.

எனக்கும் முன்பு எந்த கட்டுரை எழுதினாலும், அதற்கு விமர்சன கருத்து வருமா என்று பார்த்து பார்த்து ஏங்கியது உண்டு. பின்பு அட போப்பா என்று ஒன்றும் வராததை பார்த்து, அந்த எதிர்பார்ப்பு நீங்கி விட்டது.

மனம்விட்டு பாராட்ட நம்மிடம் இருந்து காசுபணம் ஏதும் செலவு ஆகப்போகின்றதா..!!..?? இல்லையே. ஒரு சிறு புன்னகையே ஒரு பெரும் பாராட்டுதான்.

ஆனால், இடம் பொருள் அறிந்து பாராட்டனும்.

ஒரு பொங்கல் அன்று, எங்கள் வீட்டு வேலைக்கார அம்மணி புது புடவை உடுத்தி வர, பாராட்டனும் என்று, புதுப்புடவையில் சூப்பராக இருக்கின்றீர்களே என்று வெள்ளந்தியாக பாராட்ட, என் வீட்டுக்கார அம்மணியிடம் சூடு பார்வையை பரிசாக வாங்கிய அனுபவமும் உண்டு.

ஆக பார்த்து பாராட்டுங்க.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Expecting more.....
posted by: Aynus (Chennai) on 21 March 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43374

Assalamu alaikum sister!

I am a student.. I usually don't have the habit of reading any articles... but as your heading itself was very impressive I just thought that I would just surf on it ...

but as I had been reading it... masha Allah your words took me INTO your article. Your saying that " We all need appreciation" is very true! It does not mean that we are underestimating our talent but it encourages us to improve it.

And you have well said this matter in the article! The way you have composed them is very impressive!

நம்ம பெரியவங்க கூட எதாவது very goodஆபன்னனும்ன நம்ம முதுகுல தட்டி கொடுப்பாங்க! ...like that appreciation is also very important... சொல்ல போனா appreciationலெதான் உலகமெ இயங்குது!

Jazakallahu khairan for composing this article ... நானும் இனி எல்லோரையும் appreciate பன்ன போறேன்!

As a student I know the value of appreciation and how much we long for it from parents,teachers,school etc,. Looking forward for your article !congrats!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: zubair rahman (Doha-Qatar) on 21 March 2016
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 43375

ஒரு எழுத்தின் உயிரோட்டம் அதனை ஆதரிப்பதில் தான்,

சிறந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் ,தொரட்டும் எழுத்தோட்டம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by: Musthafa M (Dubai-UAE) on 21 March 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43376

Assalamu Alaikum

I'm a frequent visitor of kayalpatnam.com. mostly i read all the articles. but leave comment for some articles only. appreciation and comments will encourage the person to move forward and give energy to them to achieve more.

Ummu Numairah sister's article always impressive. will make reader's feel good and give energy.Ma Shaa Allah. Ummu Numairah sister never fails to compose the article with islamic quotes. simply awesome. highly appreciated.

Daughter of Misbah Alim's aricle also very impressive. ma shaa allah. women writer's from our society is higly energetic. unknown writer's also still there in our society they should bring it up by their family members. people should encourage them to post it in social media.

usually i try to comment but my comments always incomplete (lack of compose). so i drop and leave.but hereafter, in shaa allah. atleast i will leave Ma shaa allah.

some brothers they leave a comment frequently. Brother Mackie Noohu Thambi,brother SK Salih,Brother Salai Ziauddin...they are always leave comments for the articles.Applause for u brothers.

looking forward for your next article sister.

Thanks,

Musthafa M
Dubai-UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 21 March 2016
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43377

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் .....அருமை சகோதரி உம்மு நுமைரா அவர்களின் எண்ணம் சரியானதே ....ஒரு பதிப்பாளருக்கு ...வாசகர்களிடம் இருந்து ஒரு நல்ல கருத்தை எதிர்பார்ப்பது நியாயமானதே ......நாம் பாராட்டுவது ..அவர்களுக்கு ஒரு '' டானிக்கு '' போன்றது ....இன்னும் அவர்கள் நமக்கு நல்ல கருத்துள்ள கட்டுரைகளை தருவார்கள் .....

தங்களின் இந்த கட்டுரை எம் மனதை தொட்டது ......பாராட்டு என்பது பொதுவான ஒரு பண்பு .....

தங்களின் கட்டுரைகளை நான் படிப்பது உண்டு ...மேலும் அனைவர்களின் மனதை தொடுவதும் உண்டு .....தங்களை போன்று நம் ஊரில் உள்ள படித்த பெண்மக்கள் இது போன்று கட்டுரைகளை நம் '' இணைய தளங்களில் '' எழுத முன் வர வேணும் .....

பொதுவாக நாம் யாரையும் பாராட்டும் போது அவை நம் யாவர்களின் உள் மனதில் இருந்து வர வேணும் .....அப்படி இருக்கும் போது அவை மற்றவரை மனம் மகிழ்ச்சியாக்கும் .... அருமை சகோதரி .. உம்மு நுமைரா அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன் ....தொடரட்டும் தங்களின் பயனுள்ள கட்டுரைகள் .....

நமது ஊரின் '' இணைய தளங்கள் '' சகோதரி அவர்களை போன்ற பெண்மக்களை ...அறிந்து அவர்களை . ஊக்குவித்து '' முன்னுக்கு கொண்டு வர வேணும் ... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Masha allah
posted by: Sithi silmiya (Kayalpatnam) on 21 March 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43379

Masha allah... Thumbs up for your effort my Sachi..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பின்னூட்டம் அவசியமே!
posted by: Ummu Numaira (Chennai) on 21 March 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43380

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் யூனுஸ் அவர்களின் கவனத்திற்கு சில செய்திகள்....

ஆறு பக்கங்கள் வரை எழுதப்பட்ட இக்கட்டுரையில் கடைசி பகுதி மட்டுமே எழுத்தாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது....

கட்டுரை முழுக்க அன்றாட வாழ்வின் நடைமுறை உதாரணங்களைத்தான் பேசியுள்ளேன். தாய், கணவன், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், பணியாட்கள், ஆசிரியர், மாணவர்... என எல்லா தரப்பினருக்குமே appreciation எவ்வளவு அவசியம் என்பதைத்தான் கட்டுரையின் பிரதான கருத்தாகக் கையாளப்பட்டுள்ளது.

எல்லா தரப்பினருக்கும் அவசியம் எனும் போது எழுதக் கூடியவர்களும் கூட தங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரங்களை எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றுதானே! ஏனென்றால் எழுதுவது என்பதே பிறர் வாசிப்பதற்கும் கருத்து சொல்வதற்கும்தானே.

அதிலும் குறிப்பாக எழுத்தாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி குறிப்பிடும் போது... அவர்கள் பாராட்டுகளை வேண்டி நிற்பதாக நான் எங்குமே குறிப்பிடவில்லை. நல்லதோ, பொல்லதோ, பாராட்டியோ, விமர்சித்தோ, உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடுங்கள் என்றுதானே எழுதியிருந்தேன்...?

கட்டுரையை ஒட்டிய பலரது எண்ண ஓட்டங்களும், சிலரது மேலதிகத் தகவல்கள் கூட பல சமயங்களில் பகிரப்படுவது கட்டுரையை மேலும் பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.

சில நண்பர்கள் கூறும் ஆலோசனைகளும், எதிர்பார்ப்புகளும், எங்கள் எழுத்துக்களை நாங்கள் மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

மீண்டும் சொல்கிறேன்.. கருத்துக்கள் பகிர்வைத்தான் கேட்கிறோமே தவிர பாராட்டுக்களை அல்ல...

எட்டாப்பம்மா கட்டுரையில் அவரது கணவர் பற்றி நீங்கள் பகிர்ந்துக் கொண்டதைப் போல... எனது ஆதங்கமெல்லாம்... அதனை வாசித்த அந்த ஆயிரம் நபர்களில் ஒரு பத்து பேர் கூடவா எட்டாப்பம்மாவிடம் படித்திருக்க மாட்டார்கள்.. அவர்களில் யாராவது ஓரிரண்டு பேராவது அவர்களைப் பற்றிய தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்திருந்தால் கட்டுரை இன்னும் மெருகு பெற்றிருக்கும். அவர்களின் குடும்பத்தினருக்கும் அது தங்கள் தாயைப் பற்றிய மறக்க முடியாத ஒரு பதிவாக மாறியிருக்கும்.

ஆத்ம திருப்திக்காக மட்டும் எழுதுவதானால் நான் எழுதி என்னிடமே வைத்துக் கொள்கிறேன்... பொது வெளிப்பார்வைக்கு அதை வைப்பதே பிறர் படித்துப் பார்த்து அவர்களின் பின்னூட்டங்களைக் கூற வேண்டும் என்பதற்காகத்தான்..

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by: D.S.ISMAIL (HONGKONG) on 21 March 2016
IP: 59.*.*.* Hong Kong | Comment Reference Number: 43382

அஸ்ஸலாமு அலைக்கும்

மிக அருமயான யதார்த்தமான பதிவு.

Small and sincere appreciation will give Great engery to perform

மனைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம்....
கணவன் அமைவதும் அதே போல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:... உம்மா...ஸே மாஷா அல்லாஹ்.
posted by: சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (கோழிக்கோடு- கேரளா.) on 22 March 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43383

பாராட்டைப்பற்றிய கட்டுரை
உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய கட்டுரை .

மாஷா அல்லாஹ்!

ஏன் இப்படி ?..எழுத்தாளர்கள் வாசகர்களின் நல்ல /அல்ல கருத்துக்களை எதிர்பார்க்கின்றனர் என்று சிந்திக்கும்போது எமக்கு புலப்படுவது என்னவெனில் அது அவர்களின் எதிர்கால எழுத்துப் பணிகளுக்கான ஏணிப்படி.

அப்படிகளின் மூலம் எழுத்தாளர்களின் ஆக்கங்களின் எண்னிக்கை அதிகரித்து உயரும்போது அதை வாசிக்கும் வாசகர்களின் அறிவும் சேர்ந்துதான் உயர்ந்து உச்சம் அடைகின்றது.

ஆக எழுத்தாளர்களின் இந்த எதிர்பார்ப்பு மிக ஆரோக்யமானதே.

இந்த ஆக்கத்தை வாசித்த பின் பாரட்டப்பட வேண்டியவைகளை பாராட்ட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் அழகியவழி முறையை உயிரோட்டம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னில் துளிர் விட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஆக்கத்தின் சஹோதரிக்கு
ஜஸாகல்லாஹு ஃகைரா.
சாளை:முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. கள்...ளி! கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே...?
posted by: S.K.Salih (Kayalpatnam) on 22 March 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43386

எஸ்.வி. சேகரின் நகைச்சுவை நாடகங்கள் பலவற்றை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிநாடாவில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்...

அப்படி ஒரு நாடகத்தில், அவர் வாங்கிக் கொடுத்த புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு, கணவரின் பாராட்டை எதிர்பார்த்து எஸ்.வி.சேகரின் மனைவி அவருடன் பேசிய உரையாடல்:-

“என்னங்க! இந்தப் புடவையில நா எப்டிங்க இருக்கேன்...?”

“மகாலக்ஷ்மி மாதிரி இருக்கேடீ”

“பொய்....தானே சொல்றீங்க...?”

“(அவளது கன்னத்தைக் கிள்ளி,) “கள்ளி கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே...?”

என்பார்.

இவ்வகையான பாராட்டை இன்றளவும் என் வீட்டில் நடைமுறைப்படுத்திப் பார்ப்பதுண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...well said sister
posted by: mymoon (kayalpatnam) on 22 March 2016
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43387

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லதொரு கட்டுரை லாத்தா. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கின்ற - ஒவ்வொரு பெண்ணும் எதிர்பாக்கிற விஷயம் இது..

நான் ஏன் பெண்களை சொன்னேன்னா.. எல்லோரும் சின்ன appreciationஐ எதிர்பாக்கிறாங்க. ஆனால் பெண்கள் அதிகமாக எதிர்பாக்கிறோம். அது நமக்குத் தேவையும் படுது. முழுக்க முழுக்க டைம் spend பண்ணி ஆர்வமா ஒரு விஷயத்தை செய்றப்போ, “நல்லா இருக்கு”, “வித்தியாசமா இருக்கு”ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா அவ்ளோ உற்சாகமாக இருக்கும்.

இனியாவது நாம appreciate பண்ணுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் இன்ஷாஅல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by: D. Muhammad Shameem (Hong Kong) on 23 March 2016
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 43388

மாஷா அல்லாஹ்!!!..அருமையான கட்டுரை..வாழ்த்துக்கள் சஹோதரி!!!

جزاكم الله خيرا


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. எழுதுங்க..எழுதுங்க...எழுதிக்கிட்டே இருங்க...!
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore) on 23 March 2016
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 43390

அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்...! போட்டு வாங்கிறது என்பார்களே அது இதுதானோ? சரி உங்கள் எண்ணப்படி நிறைய கமெண்ட்டுகள் வந்துள்ளன அல்ஹம்ந்து லில்லாஹ்...!

பொதுவாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடும் கட்டுரைக்கு ஓரிரு கமெண்ட்கள் மட்டுமே வருவது என்பது சற்று நெருடலாகத்தான் இருக்கும். ALS மாமா அவர்களின் ஆக்கங்கள் யாவும் சமுதாய மேம்பாட்டிற்கு வழிகாட்டும் அருமையான விஷயங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும்.

அதே நேரம் கருத்து என்பது ஒன்றோ இரண்டோதான் இருக்கும். அதற்காக அவர் கவலைப்பட்டதே இல்லை! எனது ஆக்கம் அதை சொல்ல வேண்டிய கடமை எனக்குள்ளது. சொல்லி விட்டேன் என மனிதர் கிஞ்சிற்றும் சோர்வடையாமல் எழுதிக் கொண்டேயிருப்பார்.

உங்கள் கட்டுரைகளை நான் தவறாமல் படிப்பதுண்டு. கோர்வையாக இல்லாமல் விட்டு விட்டு பல கோணங்களில் சஞ்சரித்து அங்கே இங்கே தொட்டு கடைசியில் சொல்ல வருவதை சுருக்கென்று சொல்லும் உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுபோலதான் சார்ந்திருக்கும் சூழல்தான் ஒரு எழுதாளரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும். தான் வசிக்கும் வீடு, சொந்தம் பந்தம், அடுக்களை, ஆட்டுக்குட்டி, தோட்டம் இப்படி அவரது கண்களில் படும் காட்சிகளே மனக்கண்ணில் ஊற்றெடுத்து அதுவே எழுத்து வெள்ளமாக பீறிட்டு பாயும்.

இதற்கு உதாரணமாக கேரளத்து மகா எழுத்தாளன் வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களைக் கூறலாம்.

நான் தற்பெருமைக்காக கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். நான் எழுதிய பள்ளிப் படிப்பும் பிள்ளைக் குறும்பும் 2568 முறை வாசிக்கப்பட்டு, 9 நீண்ட கமெண்ட்டுகள் வந்தன. இன்னும் 3000, 4000 முறை என பல ஆக்கங்களும் உள்ளன.

அதுபோல் நண்பர் SK.சாலிஹ் எழுதிய பல கட்டுரைகளுக்கும் நிறைய கமெண்ட்டுகள் வந்துள்ளன. அவையாவும் ஆண்கள் வட்டாரம் என்பதால் அவர்களின் அனுபவத்தை கருத்துக்களாக பரிமாறி உள்ளனர்.

தாங்கள் எழுதிய எட்டாப்பம்மா கட்டுரை மிக அருமையான சுவரஸ்யமான கட்டுரை! உண்மையில் அந்த ஆசிரியையுடன் எனக்கு நடந்த ஓர் குட்டி சம்பவத்தை விளக்கி நான் எனது கருத்தை டைப் செய்தும் விட்டேன். கருத்து என்பது கட்டுரையை விட நீண்டு போய்விடக்கூடாதே என்று அதை நான் பதியவில்லை.

இப்போது இந்த கருத்தும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. அது பெண்கள் படிக்கும் பாடசாலை என்பதால் ஆண்களுக்கு பெரிய அனுபவங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவேதான் கருத்துக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. தயவுசெய்து இதை ஒரு பின்னடைவாக கருதாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் ஆக்கங்கள் அர்த்தச் செரிவுள்ளவை! ஆழமான விஷயங்களை அழுத்தமாக சொல்லக்கூடியவை எனவே எழுத்து மேடையின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடாமல் தொடர்புக்குள்ளேயே இருங்கள். அல்லாஹ் உங்களுக்குத் துணை செய்வானாக ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. AMAZING
posted by: Seyed Ibrahim S.R. (Abu Dhabi) on 24 March 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43403

Masha Allah Sis, your way of explanation regarding 'Encouraging' is simply superb. keep it up and miles to go.

Moreover Bro. Yoonus whenever I meet you personally, I used to appreciate you regarding some of your postings in FB. At that time you used to ask me why there was no 'Like' icon from me.

I hope this is also a way of request for getting others encouragement. Hope you understand.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...உறவுகளின் வழியேதான் உலகைக் காண்கிறேன்...
posted by: Sithi Lareefa (Chennai ) on 24 March 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43404

அஸ்ஸலாமு அலைக்கும்.

" உம்மா....ஸே! மாஷா அல்லாஹ் " கட்டுரை எழுதியே ஆக வேண்டும் என்ற திட்டத்துடன் எழுதப்பட்டது அல்ல. போகிற போக்கில், மனதில் பட்டதை, என்னைச் சுற்றி நடந்த, நடக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை.... உள்ளதை உள்ளபடி கட்டுரையாக்கியிருந்தேன். இது ஒரு எழுத்துப் பாணியா, சுவாரஸ்யத்திற்கான உத்தியா என்பதெல்லாம் நான் அறியேன்....

நானும், எனது குடும்பமும் சார்ந்த நிகழ்வுகளையே பெரும்பாலும் மேற்கோள் காட்டுகிறேன் என்பது கூட எதிர்காலங்களில் என்மீதான விமர்சனமாக வைக்கப்படலாம்.

நான்கு குழந்தைகளின் தாயாக... அதிகமாக வெளியில் செல்ல அவசியமில்லாத ஒரு இஸ்லாமியப் பெண்ணாக, என் உறவுகளின் வழியேதான் உலகத்தைக் காண்கிறேன் என்பதுதான் உண்மை.

கட்டுரைக்கு வந்திருந்த கருத்துக்களை போட்டு வாங்கியது என நீங்கள் குறிப்பிட்டிருப்பது "வாள் முனையில் இஸ்லாம் பரவியது" என்று கூறுவது போலுள்ளது. நான் கேட்டேன் என்பதற்காக முகம் தெரியாத அன்பர்களும், அறிமுகமில்லாத சகோதரிகளும் கூட தங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு கருத்து எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது....?

கட்டுரையின் ஏதோ ஒரு பகுதி அவர்களது வாழ்வின் ஏதோ ஒரு பகுதியைப் பேசியிருக்க வேண்டும்... அவர்கள் சொல்ல நினைத்து முடியாமல் போன விஷயங்களை தொட்டிருக்க வேண்டும்.... நேரிலும், தொலைபேசியிலுமாக என்னிடம் பேசிய சகோதரிகள் மூலமாக இதை நான் உணர முடிந்தது.

சமீபகாலமாக ஏ.எல்.எஸ்.மாமாவின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவில்லை போல் தெரிகிறது... இந்த கட்டுரைக்கான இன்ஸ்பிரேஷனே மாமாவின் போன கட்டுரைதான்.

பெண்கள், மாணவர்கள் என அவரவர்கள் அவரவர்களுக்கான பகுதிகளைக் கொண்டு மட்டுமே கட்டுரையை உள்வாங்கிக் கொள்ள, எழுத்தாளரான நீங்களோ எழுத்தாளர்களுக்கான கடைசிப் பகுதியை மட்டுமே உள்வாங்கியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது...

ஒரு எழுத்தாளராக.... கருத்துக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் உங்களுக்கும் உண்டு என்பதைத்தான்.... காலங்கள் பல கடந்தும் உங்கள் ஆக்கம் பற்றிய புள்ளி விபரங்களை இப்போதும் புள்ளி பிசகாமல் நினைவில் கொண்டிருப்பதைக் கொண்டு உணர முடிகிறது. எது எப்படியோ... நல்ல மாற்றம் ஒன்றிற்கு எனது கட்டுரை வித்திட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி...

வாசக கருத்துக்களின் வாயிலாக எண்ணற்ற எழுத்தாளர்கள் இனங்காணப்படுவதற்கு இக்கட்டுரை நல்லதொரு தொடக்கமாக அமைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by: Mauroof (Dubai) on 29 March 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43428

அருமையான கட்டுரை.

உம்மா...! ஸே மாஷாஅல்லாஹ்...!! என்று தங்களது மகன் கூறும்போது அளவிடமுடியா ஓர் பூரிப்பு அவனது உள்ளத்தில் சிறகடித்துப் பறந்திருக்கும். உங்களுக்கும் அது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...Masha Allah , Ummu Numaira !!!
posted by: IZZADEEN (KAYALPATNAM) on 09 April 2016
IP: 103.*.*.* | Comment Reference Number: 43450

I did hear before, the much touted Ummu Numaira’s article and the subsequent buzz and excitement created around it. But I chanced to read it the article only very recently.

Throughout your essaying journey, you almost took us all together with you; the breeze and the sunshine that enveloped you, did also embrace u too ! This seem to be an unique, distinctive style and slide in your essay; the amazing part of it is your cosiness’ to carry along us - the readers – by the style that is singularly, quite different; the essay takes us through your own selected terrain; as if we are with you, all through the narration; clearly hearing you the pleasantries, murmurs, complaints, requests , sighs, and smiles to simply feel with whatever expressions & manoeuvres , you are involved in; yes ,you completely took us over, by the vivid and variant style.

Your language is simple and clear; you speak in passionate & heart-warming words; you intersperse your dialogue with sparkling, Qur’anic edicts, erudite Prophet’s dictions, down-to-earth witticisms, criticisms, humour, barbs and bouquets. It is so very nice, simple & serene!

The message you propose to propagate is very basic, frank & forthright: Never ever lose an opportunity to ignore a simple help or big, to duly recognize , with words like Maasha Allah, Alhamdu Lillah, Jazakallah, Thank you, Nandri , etc . I am myself a little wanting in this aspect and shall surely make amends soon, In Shaa Allah. Maasha Allah, a great message, Ummu Numaira, Jazakallah.

On a personal note, I add that you have been a priceless pride and possession of our family, in terms of your god-gifted flair, knack and knowledge of the literary and Islamic theology in you. You are my granddaughter, by virtue of being the granddaughter of my paternal first cousin, A.A .Shehu Shahabuddin (himself very articulate in English, both written and spoken), hence the moniker Professor; you are also a ‘baahu’ in your own immediate family of the renowned ‘Kalami Residence’, the confines of which houses, “ the finest human- being” of the contemporary Kayalpatnam.

May Allah bless you - one and all - the whole family !!! Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:... வாசகர்களே..! ஸே எதாவது..!! :-)
posted by: முத்து இஸ்மாயீல் இப்னு காஜா ஆலிம் மஹ்ழரி (Bangalore) on 27 April 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43636

டைட்டிலுக்கு கச்சிதமாக பொருந்தும் கட்டுரையின் சாரம்..

உம்மா..! ஸே மாஷா அல்லாஹ்..!! இது உங்கள் மகனாரின் எதிர்பார்ப்பு..

வாசகர்களே..! ஸே எதாவது..!! இது உங்களின் எதிர்பார்ப்பு..

So இந்த எதிர்பார்க்கும் குணத்தில், தாயைப் போல் பிள்ளையா.?
பிள்ளையிடம் பெற்றுக் கொண்ட தாயா.?

Whatever அருமையான கட்டுரை!! :-) மாஷா அல்லாஹ்.. பாரகல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved