Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:11:48 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 199
#KOTWEM199
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 18, 2016
கொக்கு பற… பற… (பாகம் 1) - சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்!

இந்த பக்கம் 4719 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென அழகிய வயல் வெளிகள்… மரங்களால் நிரம்பிய வளாகம்… மனதிற்கு இதமாக வீசிய ‘மதுரை’ தென்றல்! பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறோமா என்ற ஐயம் என்னுள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருந்தது!

இவ்வாண்டின் சர்வதேச பல்லுயிர் தினத்தையொட்டி (International Day for Biological Diversity 2016), ”சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்” எனும் தலைப்பில் மே 23-24 தேதிகளில் குழந்தைகளுக்கான இயற்கை முகாமொன்றை, ”மதுரை இயற்கை பேரவை” (Madurai Nature Forum) நடத்தவிருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் திரு இரவீந்திரன் நடராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் பங்குபெறும் எனது விருப்பத்தை அலைபேசி தொடர்பில் அவரிடம் தெரிவித்ததும், ”இது குழந்தைகளுக்கான முகாம்... இயற்கை மற்றும் சூழல் பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டுமே கற்றுத் தரப் போகிறோம். எனவே, ஒரு தன்னார்வ ஒருங்கிணைப்பாளராக கலந்துகொண்டு உதவமுடியுமானால், தாராளமாக வாருங்கள்,” என பச்சைக்கொடி காட்டினார். அடிப்படை விஷயங்களைத்தான் இன்றைய கல்விமுறை அரைகுறையாக சொல்லித்தருகிறது என்பதை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ, கற்றவை நம் பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் பயன்படுமே என்றெண்ணி, யாதொரு தயக்கமுமின்றி மதுரை விரைந்தேன்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் தன்னார்வலர்கள் என சுமார் 60 நபர்கள் என்னுடன் அப்பள்ளி வளாகத்தை (PNU ASNN மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம்) ரசிக்க வந்திருந்தனர் (மன்னிக்க வேண்டும், முகாமில் கலந்துக்கொண்டனர்)! இதில், ஐந்து வயதே நிரம்பிய ஓர் அழகிய பெண் குழந்தையும் அடக்கம்.

மாணவர்களிலோ, அரசுப் பள்ளிகள், பெற்றோர்களின் சட்டைப் பைகளில் ஓட்டைப் போடும் தனியார் பள்ளிகள்; கிராமப்புறம், நரகம் (திருத்தம், நகரம்; திருத்த வேண்டிய தேவையில்லாத போதும்!) தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயில்வோர் என பல தரப்பிலிருந்தும் வந்திருந்தனர்.

சர்வதேச பல்லுயிர் தினம் 2016

அலைபேசியில் மட்டுமே பேசியிருந்தாலும் (அதுவும் ஒரே ஒரு முறை மட்டும்), திரு இரவீந்திரன் அவர்களை நேரில் சந்தித்ததும், ஒரு புதியவரை கண்ட உணர்வு துளியும் இல்லை. பறவைகள் காணுதல் கலையின் (birding or bird watching) ஆர்வலரான இவர், ’நிறைகுடம் தளும்போது குறைகுடம் கூத்தாடும்’ என்னும் பழமொழிக்கேற்ப ஒரு சிறந்த - தளும்பும் நிறைகுடம். அவ்வளவு எளிமை!

எந்த ஒரு கல்விக்கான தேடலிலும் நிச்சயம் சில படிப்பினைகளும் அனுபவங்களும் கிட்டுவதுண்டு. பெரியவர்களும் குழந்தைகளாக மாறிய இந்நிகழ்வில், நான் கற்றுக்கொண்ட பாடங்களோ ஏராளாம்… ஏராளம்…

மரங்களுடன் பேசினோம்!

தரையில் கிடக்கும் பல விதமான இலைகளையும், பூக்களையும், சிறு காய்கள், பழங்களையும் குழந்தைகளை எடுத்து வரச்சொல்லி, அவைகளின் வடிவம் மற்றும் நிறம் போன்ற அடையாளங்களைக் கொண்டு, மரம் செடிகளை இனம் காண பயிற்றுவிக்கப்பட்டனர். வழக்கமான பள்ளிக் கல்வியில், இதனை herbarium என்னும் பெயரில் பன்னிரெண்டாம் வகுப்பில் தானே நமக்கு சொல்லித் தந்தார்கள் (அதுவும், ஒரு குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மட்டும்) என ஆச்சர்யப்பட்ட எனக்கு, அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன!

திரு கார்த்திகேயன் மற்றும் திரு ஆனந்த பெருமாள், மரக் கன்றுகளை நடும் செயல்முறையை எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கினர். மூடாக்கு (mulch) என்பது இலை தழைகளைக் கொண்டு (நடப்படும் மரம் செடிகளை சுற்றி) மண்ணின் மேற்பரப்பில் அமைக்கப்படும் அடுக்காகும். இது ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும், மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

இயற்கை வழி விவசாயத்தின் முக்கிய பங்கான இந்த மூடாக்கை, இளையவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். குழந்தைகளின் உதவியுடன், அப்பள்ளிக்கு ஒரு சிறு தோட்டம் அமைத்துக் கொடுத்தது இம்முகாமின் சிறப்பு! குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு மரம்/செடி நடுவது, இதுவே முதல் முறையாக இருந்தது (இந்த சாதனையை நிகழ்த்தாத பெரியவர்கள் நம்மில் பலர் இருப்பர்!). இந்நிகழ்வு அவர்களை இன்னும் பல மரம்/செடிகள் நடுவதற்கு, ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை!


காஞ்சனாரம் என்று அழைக்கபடும் மந்தாரை மரம் நடுகையில்…

நாட்டு மரங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவரான மதுரையின் பிரபல கண் மருத்துவர் திரு Dr. பத்ரி நாராயணன், சூழலுக்கு ஏற்றவாறு மரங்களை தேர்வு செய்யும் அவசியம் குறித்தும், நாட்டு மரங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மேலும், ஒரு குறிப்பிட்ட வகை தாவரங்களை மட்டும் நடுவதற்கும், பலவகை தாவரங்களை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எளிய முறையில் குழந்தைகளுக்கு விளக்கினார். மதுரை என்னும் ஊர்ப்பெயர் வர காரணமாக இருந்த மருத மரங்கள் (முற்காலத்தில், வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதியாக இருந்தது), இன்று மிக மிக குறைவாக உள்ளதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.


மரத்தடியில் மரத்தை பற்றி…

கற்றல் என்பது கருத்து திணிப்பாய் இல்லாமல், புரிதலாகவே காட்சியளித்தது. சிறு விஷயங்கள் கூட, கேள்வி-பதில் மூலமாகவும், நகைச்சுவையுடன் கூடிய உரையாடல்களின் மூலமாகவுமே பயிற்றுவிக்கப்பட்டன.

உதாரணமாக, ஆலமர விழுதை ஏன் ‘விழுது’ என்று அழைக்கிறோமெனெ மாணாக்கர்களை கேட்க, அவர்கள் சிறிதும் தயங்காமல், ”அது மேலிருந்து கீழே விழுது, சார்” என ஒருமித்த குரலில் பதிலுரைத்தனர். ”சரி, கீழிருந்து மேல் நோக்கி சென்றால், அதனை எவ்வாறு அழைப்பீர்கள்?” என கேட்டதும், நீண்ட நேர நிசப்தத்திற்கு பிறகு, ஒரு மாணவி, “மேலிருந்து கீழே விழுந்தால், ‘விழுது’ சார்; கீழிருந்து மேலே போனால், ‘போகுது’ சார்” என சிரிக்காமலேயே விடையளித்தார். மற்றவர்களின் வயிறு தான் சிரித்தே புண்ணானது! அனைவரும் அமைதியாக இருக்கையில், துணிவுடன் பதிலுரைத்த அம்மாணவிக்கும், பிற மாணவர்களுக்கும், ‘விழுது’ மற்றும் ‘கொடி’யின் தன்மைகளை அழகாக விளக்கினர் பயிற்சியாளர்கள்.

விலங்குகளுடன் விளையாடினோம்!

காட்டுயிர்களின் மகத்துவத்தையும், அவைகளின் வாழ்வியல் முறையையும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம், கதைக் களம் ஒன்றை நடாத்தினர் திரு பூபதி ராஜ் மற்றும் திரு விக்னேஷ் செல்வம். குழந்தைகளையும் இணைத்து நடைப்பெற்ற இந்த நையாண்டி நாடகம், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது.



காண்டா மிருகம் வருது…



கம்பியின் மீது விளையாடிய படியே கற்கவும் முடியும்!

பறவைகளுடன் பாடினோம்!

Angry Birds-யை ஒரு உண்மையான பறவை இனமாகவே நினைக்கும் நவீன யுக, ’tech savvy’ குழந்தைகளுக்கு, பறவைகளைப் பற்றிய முறையான அறிவை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

அன்றாடம் காணும் பறவைகளின் பெயர்களை மழலையர்களை கூற வைத்து, புகைப்படங்கள் மூலம் அவைகளில் சிலவற்றின் அங்க அடையாளங்களையும், இனப் பெருக்க காலங்கள் மற்றும் சுபாவங்களையும் எளிமையாக அறிமுகம் செய்து வைத்தார், திரு இரவீந்திரன். அதன் பின், பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலத்திற்கு அழைத்து சென்று, மாணவர்களை 18 வகை பறவைகளை இனம் கண்டறிய செய்த, அந்த 2 மணி நேர கள ஆய்வை விளக்க வார்த்தைகளே இல்லை.

கண்டு வந்த பறவைகளில், அன்றில் பறவையும் அடக்கம்! என்றோ இலக்கியங்களில் படித்தது, அன்று கண் முன்னால் வந்து ‘Hi…’ சொன்னது!

மனிதர் பறவைகளை மட்டுமல்ல, சிறார்களையும் நன்கே புரிந்து வைத்துள்ளார்! கண் முன்னால் இருக்கும் பகுதியை கடிகாரமாக எண்ணி, பறவைகள் இருக்கும் திசையை சுட்டிக்காட்டும் எளிய முறையை (clockwise positioning) புரியும் வண்ணம் விளக்கினார்.

தொலை நோக்கி (binocular) வழியாக பறவைகளை காண்பதற்கு, குழந்தைகள் காட்டிய ஆர்வத்தை பார்த்த போது, இனிமையான இந்த கள-ஆய்வு வழி கல்வி, தற்போதைய கல்வி முறையில் நான்கு சுவற்றிற்குள் முடக்கப்பட்டுள்ளதே என ஆதங்கப்பட்டேன்!

இனப் பெருக்க காலங்களில் ஆண் பறவைகள் வண்ணம் மாறுவது தொடர்பான தகவலை எளிதாக விளக்குவதற்கு, உண்ணிக் கொக்கும், மடையானும் (சிறிய நாரையினம்) மாறுபட்ட வண்ணத்தில் இருந்தது திரு இரவீந்திரன் அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஒரு பறவையின் பெயர் கூறி (வெண் புருவ வாலாட்டி), அது இருந்த திசையை மட்டும் சொல்லி, மாணவர்களை தேட வைத்தது, இக்கள ஆய்வின் சிறப்பம்சமாக அமைந்தது.


பறவைகளின் அறிமுகம்…


பறவைகளைக் காணும் கள ஆய்வில்…

மறுசுழற்சி செய்து மகிழ்ந்தோம்!

காகிதம் மற்றும் சிரட்டை போன்ற வீணாகும் பொருட்களில் இருந்து விளையாட்டு சாதனங்களை தயார் செய்யும் பயிற்சியை திரு ஆனந்த பெருமாள் வழங்கினார். சமீபத்தில் நிகழ்ந்த சென்னை புத்தக கண்காட்சியில் (01-13 ஜூன்), இயல்வாகை பதிப்பகத்தின் திடலை இவரது கைவினைப் பொருட்கள் அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.

திரு. பூபதி மற்றும் திரு. விக்னேஷ் ஜோடி, எடைக்குப் போகும் செய்தித்தாள்களை பல வகை தொப்பிகளாக மாற்றும் பயிற்சியை அளித்து மாணவர்களை அசத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதி வரை, தங்களின் மனங்களை கவர்ந்த இந்த தொப்பிகளை, சில குழந்தைகள் கழற்றாமல் இருந்தது வியப்பாகவே இல்லை.

இவ்வாறு காகிதத்தை மடித்து விளையாட்டுப் பொருட்களை செய்யும் இந்த கலைக்கு ஒரிகமி (Origami) என்று பெயர். இது ஜப்பானில் மிகவும் பிரபலம்!


சிரட்டை சிற்பியுடன் மறுசுழற்சி பற்றி…


காகித தொப்பி…

உணவோடு உறையாடினோம்!

மனித இனத்துக்கு சுமார் 95 சதவிகிதம் உணவு மண்ணில் இருந்தே வருவதால், (மண் வளத்தோடு) நல்லுணவு தொடர்பான தகவலும் இம்முகாமில் முக்கிய இடம் பிடித்தது.


WorldHealth.Net இணையத்தளத்திலிருந்து!

”நாம் உண்பதும் குடிப்பதும், (உடலின்) நோய்களுக்குத் தீனியாகவோ அல்லது அதனை எதிர்க்கும் சக்தியாகவோ இருக்கிறது”, என அமெரிக்காவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர், ஹீத்தர் மார்கன் கூறுகிறார். தாவரங்கள், பயிர்களில் இருந்து கிடைக்கும் உண்மையான உணவுக்கும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாக்கப்படும், இக்கால பதப்படுத்தப்பட்ட உணவு-போன்ற-பொருட்களுக்கும் (food vs food-like-substances), நம்மில் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

செல்வி அனுரித்தா விநாயகமூர்த்தி சிறுதானியங்களை (millets) குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவற்றின் பயன்களை விளக்கி, அவைகளை வைத்து (நெருப்பில்லாமல்) சுவை மிகுந்த உணவுப் பண்டங்களை உருவாக்கும் பயிற்சியை வழங்கினார். சிறுதானியங்கள் நிறைந்த சத்து மாவினால், சத்து உருண்டைகளை குழந்தைகளே ஆர்வமாய் தயார் செய்தனர்.

பசித்து சாப்பிடுவதே சாலச் சிறந்தது; உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கு பசியை உண்டாக்கும். குழுவாக பிரிக்கப்பட்டு, காய்கறிகளையும் பழங்களையும் நறுக்கி, குழந்தைகள் அதனை தட்டில் அடுக்கி வைத்து அழகு பார்த்தனர் (salad dressing). இந்த அழகுணர்ச்சியே, சாப்பிடும் ஆசையையும் தூண்டியது அவர்களுக்கு! விளையாட்டின் மூலம் உணவின் மேல் குழந்தைகளுக்கு ஒரு ஈர்ப்பை / பற்றை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை, குழந்தைகளை சாப்பிட வைக்க கஷ்டப்படும் பெற்றோர்கள் நன்கு அறிய வேண்டும்.

மேலும் இந்நிகழ்வில், ஒட்டுப் பழங்கள் மற்றும் விதையில்லா பழங்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மெய்யான கல்வியை கற்றோம்!

”பள்ளியில் மட்டுமே பயிலும் குழந்தை, ஒரு படிக்காத / கல்வியில்லாத குழந்தை,” என்பது தத்துவஞானி ஜார்ஜ் சந்தன்யாவின் கூற்று!


Collective Evolution இணையத்தளத்திலிருந்து!

ஒரு குடும்பமாய் ஆடிப் பாடி திரிந்த இந்த முகாம், நிச்சயம் குழந்தைகளுக்கு ஒரு இன்ப சுற்றுலாவாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வாகனத்தில் ஏறிச் செல்லும் குழந்தைகள், ”எங்க பள்ளிக்கும் வாங்க சார்…,” என பயிற்சியாளர்களை நோக்கி கூவியதே அதற்கு சான்றாகும். தாம் கற்கிறோம் என்பதை அறியாமலேயே, பல நல்ல விஷயங்களை தமக்குள் உள்வாங்கிக் கொண்டனர். கல்வி திணிக்கப்படும் போது தான், அது சுமையாக மாறுகிறது!

“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” எனும் தனது நூலில், நமதூரின் சகோதரி உம்மு நுமைரா சுட்டிக்காட்டியுள்ள நபிகளாரின் பல கற்பித்தல் முறைகளை, இம்முகாமில் நான் நேரடியாக உணர்ந்தேன்!

கல்வி முறையை மாற்றாவிட்டாலும், குறைந்தது கற்பித்தல் முறையையாவது மாற்ற பள்ளிகள் முன் வர வேண்டும்!

நண்பர்களை சம்பாதித்தோம்!

குழந்தைகள் அவரவர் புது நண்பர்களை கண்டறிந்தது போல், எனக்கும் பல நல்ல நட்புகள் இந்நிகழ்ச்சியினால் கிடைக்கலாயின. பயிற்சி பெறுபவராக இல்லாமல், ஒரு ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றதால், பயிற்சியாளர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டியது.

அரிய வகை பறவை முட்டைகூடுகளை சேகரித்து வைத்துள்ள திரு இரவீந்திரன், 300 வகை நாட்டு மரக் கன்றுகளை தன்னகத்தில் இருப்பு வைத்துள்ள திரு Dr. பத்ரி நாராயணன், இயற்கை வழி விவசாயத்தின் மூலம் சிறுதானிய உற்பத்தியில் மதுரையை கலக்கும் திரு விக்னேஷ் மற்றும் திரு கார்த்திகேயன், நெல்லைக்காரரான ’சிரட்டை சிற்பி’ திரு ஆனந்த பெருமாள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறப்பறிவு பெற்ற ‘கதை சொல்லி’ திரு பூபதி ஆகியோரின் நட்பு வட்டத்திற்குள் நானும் இணைந்தது ஒரு பாக்கியமே!


நன்றியுரைப்பதிலும் முந்திக்கொண்டு, ’மேன்மக்கள் என்றும் மேன்மக்களே!’ என்பதை உணர்த்திய திரு இரவீந்திரன் அவர்களின் முகநூல் பதிவுகள்!



எனது கல்லூரி கால நண்பர்களான திரு இராஜசேகர் மற்றும் திரு ஜெகனாதன் ஆகியோரின் உதவிகளை மறக்க இயலாது! இம்முகாம் செவ்வனே நடைபெற பெரிதும் ஆதாரவாக இருந்த பள்ளியின் தாளாளர் திரு மதிவாணன் அவர்களின் ஆர்வத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்!

மாற்றத்தை நோக்கி!

”அந்த புதர் கிட்ட போகாதே! பத்து skin problems வரும்…,” என ஒரு சோப்பு விளம்பரத்தில் வருவது போல், குழந்தைகளை மரம் செடிகளின் அருகில் கூட செல்லக்கூடாதெனெ எச்சரிப்பவர்கள் நமதூரில் ஏராளம்! காயல்பட்டினத்தில் இன்றைய நிலையில், நிச்சயம் இவ்வாறான இயற்கை சூழல் முகாம்கள் பல நடத்தப்பட வேண்டும்.

”காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு” (Kayalpatnam Environmental Protection Association; சுருக்கமாக KEPA), நமக்கருகாமையில் இருக்கும் நச்சு ஆலைக்கு எதிராக சட்டரீதியாக போராடி வருகிறது. ஊர் மற்றும் அதன் மக்களின் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்ட அவ்வமைப்பின் ஒப்பற்ற செயல்பாடுகளை நாம் நன்கு அறிவோம்.

KEPA தனது நோக்கங்களையும், அமைப்பு விதிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்த வேண்டும். ஒரு முன்னனி அமைப்பாக இருந்து, ஊரின் பிற நல மன்றங்களின் உதவியுடன், இம்மாதிரியான விழிப்புணர்வு முகாம்களையும், சுற்றுச்சூழல் வகுப்புகளையும் மற்றும் இதர சூழல்-சார்ந்த செயல்திட்டங்களையும் KEPA அமல்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பறவை ஆர்வலரிடம் 15 கேள்விகள்!

திரு இரவீந்திரன் அவர்களுடன் நடத்திய நீண்ட உரையாடல்களின் தாக்கத்தால், இவ்வாக்கத்தை இத்தோடு நிறுத்த மனமில்லாமல், அவ்வுரையாடல்களை ஒரு நேர்காணலாக இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் வழங்கவுள்ளேன்.

அதில், எனது எளிமையான கேள்விகளுக்கு, அவர் அளித்த அறிவுபூர்வமான பதில்களை படிக்கவும், அவர் படம் பிடித்த அழகிய பறவைகளை ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் - இறைவன் நாடினால்...

முக்கிய மேற்கோள்கள்!

(1) மூடாக்கு (mulch)

https://ta.wikipedia.org/wiki/மூடாக்கு

(2) ஒரிகமி (Origami)

https://en.wikipedia.org/wiki/Origami

(3) சுமார் 95 சதவிகிதம் உணவு மண்ணில் இருந்தே!

http://www.fao.org/soils-2015/news/news-detail/en/c/277682/

மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட தேதியில் பயன்பாட்டில் இருந்தது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: முத்துவாப்பா (அல் கோபர்) on 19 July 2016
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44274

எழுத்தாளர் உணர்வோடு உறவாடி இருப்பது அருமை . நாமும் அந்த முகாமில் ஒரு பறவையாக ஒரு மரமாக பங்கு பெற்றது போன்ற ஒரு கற்பனை எழத்தான் செய்கின்றது.

ஏட்டு சுரைக்காயாக குழந்தை வளர்ப்புக்கு ஆகிவிட்ட நிலையில் இது போன்ற முகாம்களை நமதூரிலும் நடத்த வேண்டும் என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமானதே ....

மனதுக்கு புத்துயிர் கொடுக்கும் இது போன்ற ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றது சிகப்பு கம்பளம் விரித்து .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: kulam mohamed salih (seychelles) on 19 July 2016
IP: 197.*.*.* | Comment Reference Number: 44276

Semma மிக அருமை //


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அருமை! அருமை!
posted by: Raiz (Sydney) on 19 July 2016
IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 44278

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் இழந்து விட்டோம் என்று கூட தெரியாமல் நாம் இழந்து தவிக்கும் இயற்கையான வாழ்க்கை முறையை பற்றி பேசினாலே நம்மை ஏதோ பிழைக்க தெரியாதவன் , போக்கத்தவன் என்று சொல்லுகிறார்கள் அறிவிலிகள்!

தம்பி ஹபீபின் இந்த ஆக்கத்தை படிக்கும் போது நாம் எவ்வளவு தூரம் இயற்கையை விட்டு விலகி கொண்டுடிருக்கிறோம் எனும் உண்மை மற்றும் ஏக்கம் முதலில் என் மனக்குழியை அமுக்கியது!

பின்னர், தம்பி ஹபீப் எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை ரசிக்கிறார் என்பது தெரிந்து எனக்கு சற்று பொறாமையாக இருந்தது!

அதன் பின்னர் தம்பி ஹபீப் தான் பெற்ற உணர்வையும் அறிதலையும் பிறரும் பெற வேண்டி எவ்வளவு அழகாக இந்த ஆக்கத்தை படைத்துள்ளார் என பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, இருக்கிறது!

இந்த ஆக்கத்திற்கும் இன்னும் பல ஆக்கங்களை வேண்டியும் நன்றிகள் கோடி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Reply to Muthuwappa, Al-Khobar
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்ட்) on 20 July 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44281

அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!

கருத்துக்கு நன்றி!

கல்வி சந்தை மயமாக்கப்பட்டு ஒரு விற்பனைப் பொருளாக ஆகிவிட்ட இக்காலத்தில், நிச்சயம் இயற்கையை நோக்கிய தேடல்கள் அவசியமாகிறது.

’நம்மை சுற்றி இருக்கும் அனைத்தும் (மரங்களும், செடிகளும், பறவைகளும், விலங்குகளும் கூட) நமது சமூகத்தில் ஒரு அங்கமே’, என்ற பேருண்மையை நான் நன்கு உணர இம்முகாம் பெரிதும் உதவியது.

இம்மாதிரியான முகாம்களின் மூலம் நமது பிள்ளைகளும் பயன் பெற வேண்டுமென்ற ஒத்த சிந்தனைக்கும், இது மாதிரியான ஆக்கங்கள் பதிவிட வேண்டும் என்ற ஏக்கத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்!

இறைவன் நமது நாட்டங்களை நிறைவேற்றுவானாக, ஆமீன்! அவனே போதுமானவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Reply to Salih - Seychelles
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) on 20 July 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44283

ஜஸாக்கல்லாஹ் சாலிஹ் பாய்! துஆ செய்யுங்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re: அருமை! அருமை!
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) on 20 July 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44284

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

தங்களது முதல் கருத்து முற்றிலும் உண்மையே! ’Critical thinkers எல்லோரும் கிறுக்கர்களே’ எனும் கருத்தை வெகுவாகவே ஆதரிக்கிறது இன்றைய சமூகம்.

எதற்காக இந்த குழந்தைகள் முகாம் என, பயிற்சியாளர்களில் ஒருவரான நண்பர் விக்னேஷ் அவர்களிடம் கேட்டதற்கு, “இயற்கையை விட்டு விலகிய கடைசி தலைமுறை நமதாக இருக்க வேண்டும்,” என அன்று அவர் கூறியது நினைவில் இன்றும் இருக்கிறது.

வாழ்த்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் கூறியவனாய், தங்களது வார்த்தைகள் இன்னும் பல நல்ல விஷயங்களை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும் அகமகிழ்வோடு தெரிவிக்கிறேன்!

இறைவனுக்கே எல்லா புகழும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நமதூரிலும் வேண்டும்
posted by: Buhary (Abu dhabi ) on 21 July 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44285

நன்றி பல ஹபீப் அவர்களின் அழகிய கட்டுரைக்கு.

நமதூரிலும் இது போன்று பள்ளிகளில் பயின்றுவிக்கலாம் முயற்சியுங்கள் பள்ளி நிர்வாகிகளோடு சந்தித்து முடிந்தால் என் பங்கும் இருக்கும் உங்களோடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பசுமைக்கு பிஞ்சுமனங்களில் உரமிடும் கட்டுரை.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 23 July 2016
IP: 5.*.*.* | Comment Reference Number: 44289

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

பசுமைக்கு பிஞ்சுமனங்களில் உரமிடும் கட்டுரை.

காலத்தின்வேகத்தில் கானலாகும்பசுமையை யும்,பல்லுயிர்களையும்காக்க புதியகோணத்தில் அணுகிய அழகுநிகழ்வுகள்

இந்தஅணுகுமுறையில் உணர்த்தப்பட்டால் பசுமைப்புரட்ச்சியையும்,சிட்டுக்கள்சிறகடித்து உயரப்பறப்பதையும் தடுக்கமுடியாது.

மாஷா அல்லாஹ் அழகுக்கட்டுரை வாழ்த்துக்கள் தொடரட்டும் பசுமைப்புரட்சியும்,பல்லுயிர்களின் வாழ்க்கையும்உயரட்டும்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: SK Shameemul Islam (Chennai) on 01 August 2016
IP: 122.*.*.* India | Comment Reference Number: 44353

கட்டுரை மிக அருமை.

தனது இளமை வயதில் முதிர்ந்த சிந்தனையைக் கொண்ட எழுத்தாளர் தம்பி ஹபீப் இக்கட்டுரை ஆக்கத்திற்கான களத்தில் என்னவோ ஒரு குழந்தையாகவும் மிளிர்ந்து நம் உள்ளக் கிடக்கையையும் உசுப்பேத்தி விட்டுள்ளார்.

இளம் வயதில் இயற்கையோடு உறவாடுவதும் சமூக நலன் குறித்த இவரது அக்கறையின் மூலமே மிகக் குறைந்த காலத்தில் இவரது நடப்பு எனக்கும் கிடைத்தது. அல்லாஹ் இவரது அறிவை மென்மேலும் அதிகரித்து சமூகத்திற்கு இது போன்ற பல நல்ல காரியங்களை செய்வதற்கு இவருக்கு உதவி அருள்வானாக, ஆமீன்.

கட்டுரையை இன்று தான் படித்தேன். உடனே கருத்திட்டுள்ளேன்.

அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved