Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:56:29 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 22
#KOTWEM22
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 27, 2012
காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா? சோதனையா? (பாகம் 3))!

இந்த பக்கம் 2080 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எந்த செயலுக்கும், எந்த காரியத்திற்கும், முயற்சிகள் தேவை. முயற்சி என்றால் சாதாரண முயற்சிகள் அல்ல. வெற்றியை பெறவேண்டுமானால் கடுமையான உழைப்பும், அதே சமயம் ஆர்வமும், கலந்தாலோசித்து ஒருசெயலை சரியான திட்டத்தோடு, இறைவனின் நல் உதவியாலும் நாம் செய்ய வேண்டும் அப்போதுதான் சில சோதனைகள் வந்தாலும் அதை ஏற்று, விடாமல் தொடர்ந்து நாம் கொண்ட முயற்சியில் வெற்றிபெற முடியும். வெற்றி பெற்றவர்கள், பல்வேறு நாடுகளில் ஒரு ஸ்தாபனத்தையோ, தொழிற்சாலையையோ, ஒரு குறிப்பிட்ட பொருளையோ உற்பத்தி செய்து விடுகிறார்கள் அவற்றின் ஏற்ப்பட்ட கஷ்டங்களையும், சோதனைகளையும் கண்டு சோர்ந்துவிடாமல் அவர்கள் வெற்றிகண்ட அனைத்தையும் நூல்வடிவில் தந்து சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை சார்ந்த ஜி.டி.நாயுடு அவர்கள் கண்டுபிடத்த விஞ்ஞான புதுகருவிகளை மக்களுக்கு எடுத்துக்காட்ட நூல்வடிவில் தந்து சென்றார்கள்.

நாம் சுமார் 350 வருடங்களாக இலங்கை சென்று பல்வேறு தொழில் செய்து வந்திருக்கிறோம். குறிப்பாக உயர்ந்த மணிகளான நவர்ந்த்தினங்கள் இலங்கை பூமியிலே பன்னெடுங்காலமாக நமது பெரியவர்கள் செய்துவந்திருக்கிறார்கள் அவர்களில் யாராவது ஒருவர் நவமணிகள் பற்றி நூல் எழுதியிருக்கிறார்களா? நமதூர் பிள்ளைகள் அன்றும் சரி, இன்றும் சரி ஜெமாலஜிஸ்ட் படிப்புகளையும், டைமண்ட் கட்டிங் கலைகளையும் கற்றவர்கள் இருந்த போதிலும், அவர்கள் எல்லாம் சிறு நூல்களாவது, பல்வேறு பத்திரிகளில் கட்டுரைகளாவது எழுதி இருக்கிறார்களா? இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் நீங்கள் கற்ற தொழில்களையும், சாதனை புரிந்த செயல்களையும் அவசியம் இந்த இணையதளத்தில் தொடர்ந்து எழுதிவருவீர்களா? முஸ்லீம்களில் நவரத்தினங்களை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் எழுதிய பெருமை நீடூர் அய்யூப் அவர்களை சாரும்.

T.NAGAR L.K.S கோல்ட் ஹவுஸ் அதிபர் அக்பர்ஷா ஹாஜி அவர்களின் தந்தை S.A சுலைமான் M.A அவர்கள் பழமொழி ஆயிரம் என்ற தொடரை முஸ்லீம் முரசில் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிவந்தார்கள். பின்னர் நூல் வடிவிலும் அது வந்திருக்கிறது. இதுபோல நமதூர் டாக்டர். கிஸார் D.C.H குழந்தை நல மருத்துவம் என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக(முதல் பதிப்பு 2004 இரண்டாவது பதிப்பு 2005) சமீபகாலத்தில் வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். நமதூரை சார்ந்த எந்த டாக்டர்களும் இதுவரை நூல் எதுவும் வெளியிட்டதாக தெரியலில்லை, அந்த பெருமையை தட்டிசெல்கின்றார் நமது டாக்டர். கிஸார் அவர்கள். நமதூரை பற்றிய வரலாற்றை எம்.கே செய்து அஹமது அவர்களும், ஆர். எஸ். அப்துல் லதீப் சாஹீப் M.A அவர்களும் நூல் எழுதி இருந்ததை நான் படித்திருக்கின்றேன்.

நம் ஊரை சார்ந்தவர்கள் லண்டன் , அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக எனது டைரி குறிப்பின்படி 32 நாடுகளில் வாழ்வதும் தெரியவருகிறது. ஏன் இவர்கள் அந்த நாடுகள் பற்றி அவர்களின் கலாச்சாரங்கள் பற்றி, தொழில் துறைகள் பற்றி மக்களுக்கு எடுத்துவைக்க நூல் எழுதலாமே. நீங்கள் சென்ற நாடுகள் குறித்து என்போன்ற எழுத்தாளர்களிடம் சொன்னால் நூலாக எழுதிதருவார்களே. உலகம் சுற்றிவரும் காயல் வாசிகளே நூல் எழுத முன்வருவீர்களா. உதாரணமாக நான் சென்ற நாடுகள் என்ற பிரயாண கட்டுரையை நூல்வடிவில் தந்த C. சுப்பிரமணியம் அவர்கள், இதயம் பேசுகிறது மணியம் அவர்களும் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிரயாண கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். இந்த நூல்களை படிக்க வேண்டுமானால் சென்னை கன்னிமாரா நூலகத்தில் போய் படிக்கலாம்.

நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் நாம் பிறந்தோம் பல்வேறு நாடுகளுக்கு சென்றோம் தொழில்மூலம் சம்பாதித்தோம், மனைவி மக்களுக்கு கொடுத்தோம், சுற்றத்தார்களுக்கும் செலவு செய்தோம், இறுதியாக ஓய்வுக்காக ஊர் வந்தோம் காலங்கள் தேய்ந்துவிட்டது, சிலரை மரணமும் தழுவிவிட்டது, அவகளை பற்றிநாம் பேசினால் மட்டும் போதாது, அவர்கள் கற்றவைகளை நூல்வடிவில் தந்தால் காலத்தால் அழியாமல் இருக்கும் அல்லவா அதைதான் என் இதயம் உங்களிடம் படம்பிடித்து காட்டுகிறது. வருங்காலத்தில் நமது வாரிசுகளுக்காக அவசியம் நூல்களை எழுதி வெளியிடுங்கள் நமதூர் இணையதளங்கள் உங்களை பாராட்டி கௌரவிக்க இருக்கிறது மறந்துவிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

லண்டனில் தனது கணவரோடு தங்கி இருக்கும் எனது ஓவிய சகோதரி மோச்சி (எ) மீரான் நாச்சி அங்கு அடிக்கடி ஓவியக்கண்காட்சி நடத்தி வருவதாக அறிகிறேன் இந்த செய்தியை கூட அவர்கள் தவறாமல் படிப்பதும் அறிகிறேன். அவர்கள் தனது செல் போனில் படம்பிடித்து வந்து காண்பிப்பார்கள். நமது இணையதளங்களுக்கு உங்களின் ஒவிக்கன்காட்சியை படம்பிடித்து அனுப்பினால் என்ன? லண்டனில் வாழும் மக்கள் தான் உங்கள் ஓவியக்கலையை காண வேண்டுமா? நானும் நமது இணையதள வாசகர்களும் காண செய்வீர்களா? உங்களின் திறமைகளை எங்கோ மூடிமறைக்க எழுத்தாளனாகிய நானும் நமது இணையதளங்களும் இனி ஒருபோதும் அப்படி செய்ய விடமாட்டோம். இது ஒரு எச்சரிக்கை அல்ல படிக்கிற அனைவர்களுக்கும் அன்புக் கட்டளை என புரிந்துகொள்ளுங்கள்.

ஐரோப்பிய நாடுகள் இருளில் ஆழ்ந்திருந்த காலத்தில் அலி இப்னு சீனா (எ) இப்னு சீன் இவர்களின் வைத்திய குறிப்புகளை ஐரோப்பியர்கள் எடுத்து சென்று பல்வேறு மருத்துவ துறைகளை கற்றிருக்கிறார்கள். இன்னும் சில வைத்திய மேதைகள் அலி அத்தபரி , அல் ராஸி (கி.பி.865 -925), அல் மசூசி இவர்கள் தவிர வானவியலுக்கு அல்மன்சூர், அல் பராசி (கி.பி.721) இது போல் கணக்கியலில் அல்ஜீப்ரா எழுதியவர் ஒரு முஸ்லீம், புவியியல் கண்டுபுடித்தவர்களும், உலக வரைபடத்தை (பூமியின் விஸ்தீரம்) இவைகளை எல்லாம் கண்டறிந்தவர்கள் குறிப்புகளை அக்காலத்தில் எழுதிவைத்ததினால், உலகில் எல்லா நாடுகளும் அவர்களின் ஆய்வு ஆற்றல்களை அவரவர் நாடுகளுக்கு எடுத்துபோய் பயன்பட்டு இருக்கின்ற செய்தியை எல்லா சரித்திர ஆசிரியர்களும் அறிந்திருந்தும் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் அவைகள் ஏனோ மறைக்கப்பட்டு வருவதை காணுகின்றோம். இந்த கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இன்னும் அதிகம் அறியவேண்டுமானால் இலங்கை வெலிகம அல் அஸ்ஹர் வெளியிட்டகம் 1991ல் மூன்றாம் பதிப்பு இஸ்லாமிய நாகரீகம், இதன் ஆசிரியர் முக்தார் ஏ முஹம்மது B.A (honors) அவர்களின் நூல் நமக்கு தெரிவிக்கிறது.

குமர்களின் தந்தை :

நமதூர் சதுக்கை தெருவை சார்ந்த மு.க.அ.ச.முஹைதீன் தம்பி அவர்களைத்தான் வடபகுதிமக்கள் அன்று குமர்களின் தந்தை என்று அழைப்பார்களாம். இவர்கள் பற்றி பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள் வெளியிட்ட 25 ஆம் ஆண்டு மலரில் மாசாமாசம் என்ற தலைப்பில் இவர்களின் கொடை தன்மைகளை, பொதுநல சேவை பற்றி குறிப்பிட்டதாக சொல்கிறார்கள். வடபகுதியில் உள்ள பெரிய ஜும்மா பள்ளி, சிறிய குத்பா பள்ளியின் தரையில் மார்பல் கல் பதிக்க அன்று பெரும்பங்கு செலுத்தியதாகவும் பலரிடம் பணம் பெற்று இந்த இரு ஜும்மா பள்ளியின் வளர்ச்சிக்கு இவர்கள் என்றும் உதவிவந்ததாகவும் தகவல் தந்தவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் உற்ற நண்பராக அம்பலத்தார் என்பவரும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம்.

தோல் வியாபாரத்தில் நேர்மையால், தொழில் வளம் பெருகி இருந்ததால் வட பகுதிமக்கள் தினமும் இவர்களை காண வருவார்களாம். இவர்கள் எங்கு நின்றாலும் அவர்களிடம் சென்று தன் கஷ்டங்களை கூறும் போது செய்கை காண்பித்தி நாசூக்காக யாரும் அறியாவண்ணம் பணங்களை கொடுத்து அவர்களை அனுப்பிவைப்பார்கள். இவர்களின் அதிக பங்கு குமர்களை கரைசேர்க்க பணங்களை நண்பர் அம்பலத்தார் மூலம் ரகசியமாக கொடுப்பார்களாம். இவர்களை காண வந்த ஆண்களை விவரம் விசாரிக்க தன் நண்பரிடம் கூறும் வார்த்தை மாசாமாசம் என்று கேட்பார்களாம் (இந்த சொல்லுக்கு குமர்களை கரை சேர்க்கும் வழியில் பயன் படுத்தும் அதிக பணம் கொடுத்து அனுப்பும் படி ரகசிய சொல்லாகும்). இன்னும் இவர்களின் சேவை வீடு வீடாக சென்று பணங்கள் யாருக்கு தேவைப்படுமோ அவர்களை அறிந்து மறைமுகமாக தர்மம் கொடுக்கும் வள்ளலாக மறைந்திருக்கிறார்கள். இவர்கள் பற்றிய குறிப்புகளை எனக்கு சேகரிக்க உதவியவர்கள் குத்துக்கல் தெருவை சார்ந்த S.E. ஹசன் காக்க ( மூனா. கீனா. குடும்பத்தார்) அல் மர்ஹமா வீட்டின் சொந்தக்காரர் மற்றும் S.E. முஹம்மது தம்பி அவர்களும் இணைந்து மார்ச் மூணாவது வாரத்தில் இவர்களை நேரில் சந்தித்த போது கிடைத்த தகவல் இந்த இருவர்களுக்கும் எனது நன்றி, அல்ஹம்துலில்லாஹ்.

தினமும் ஓர் விருந்தாளி :

சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன் நமதூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி சென்னையில் இருந்து முஸ்லீம் லீகின் இளைஞர் அமைப்பை ஏற்ப்படுத்தி அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தலைவர் இஸ்மாயீல் சாஹீப் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு இளைஞர் காயல்பட்டினம் வந்து பெரிய ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுதுவிட்டு முஸ்லீம் லீக்கிற்கு இளைஞர் அணியில் பலரை சேர்க்க அறிவித்தார்கள் அன்றைய பல இளைஞர்களும் சேர்ந்தார்களாம். தொழுகை முடிந்துவிட்டது சுன்னத்தான தொழுகையும் முடிந்த பின்னர் மக்கள் எல்லாம் அவரவர் வீடுகளுக்கு பகல் உணவு சாப்பிடுவதற்கு சென்றுவிட்டார்கள், இந்த சென்னை இளைஞர் மட்டும் அந்த ஜும்மா பள்ளியின் ஒருபகுதியில் வாடிய முகத்துடன் பசியுடன் அமர்ந்திருப்பதை கண்ட K.T.M தெரு அன்றைய பெரியவர் அந்த இளைஞரை நேரில் சென்று தம்பி சாப்பிட போகவில்லையா, அல்லது யாரும் விருந்துக்கு அழைக்கவில்லையா நீங்கள் தானே முஸ்லீம் லீக் சார்பில் எங்கள் ஊருக்கு வந்த இளைஞர் அணி தலைவர் என்று கேட்க ஆமாம் பாய் இந்த ஊரில் டி சாப்பிட ஒரு ஹோட்டல் கூட இல்லை, சாப்பாடு ஹோட்டல் எங்கே இருக்கும்! நீங்களே சொல்ல்லுங்கள் பாய் என்று அந்த இளைஞர் பசியோடு திக்கித்திக்கி பேசியபோது தம்பி நீ ஒருபோதும் பயப்படாதே நான் தினமும் ஒரு விருந்தாளியை அழைத்து சென்று உணவு அருந்தகொடுப்பேன். நீ இன்று எனது விருந்தாளியாக வரவேண்டும் என்றவாறு அந்த இளைஞனின் கையை பிடித்து தனது K.T.M தெரு ஸ்தாபனத்தின் மேல்மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்று தன்பக்கத்தில் அமரவைத்து தனக்கு வீட்டில் இருந்து வந்த உணவை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு முடிக்கிறார்கள் முடித்த பின் அந்த பெரியவரின் அறையில் அடுக்கிவைக்கப்பட்ட இஸ்லாமிய நூல்களை அந்த இளைஞர் பார்வையிடுகிறார் இந்த நிகழ்ச்சி பற்றி சென்னை மண்ணடி ஜின்னா ஹோட்டல் அருகில் நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் காயல்பட்டணத்தில் தினமும் ஒரு நபருக்கு விருந்தளிக்கும் பெரியார் மூசா சாஹிப் ஆலிம் அவர்கள் பெயரை அன்றைய இளைஞர் அணி தலைவராக ஊருக்கு வந்த முஸ்லீம் லீக் தலைவர் அ.க.அப்துஸ் சமத் சாஹிப் அவர்கள் ஆயிரக்கணக்கான நபர்கள் மத்தியில் கூறிய இந்த செய்திகள் அன்று சென்னை தினசரி பத்திரிக்கைகளில் வெளியாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியாகும்.

மூஸா சாஹீப் அவர்கள் முதன் முதலில் காயல் நகருக்கு தப்லீக் இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் ஒருவர் ஆவார்கள். இவர்களின் மூத்த மகன் ஹசன் காதிரி அவர்கள் ஆவார்கள். நற்சிந்தனை மாத இதழை 74 முதல் 97 வரை நடத்தி வந்தார்கள். இவர்களின் தம்பி அஹ்மது என்பவர் முகம்மதிய மௌலூது சபையை ஆரம்பித்து பல அறிஞர்களை குறிப்பாக மதுரை ஆதீனம் வரை ஆண்டுதோறும் கொண்டுவந்த பெருமை இந்த முஹம்மதியா மௌலூது சபைக்கு உண்டு. அதன் பின் சில காலம் சென்றுஇந்த சபையின் அமைப்பாளரும் தலைவருமான அஹமதுகாக்க முஹம்மதியா மௌலூது சபையை நிறுத்திவிட்டு கௌது முஹைதீன் பெண்கள் தைக்கா என்று உருவாக்கினார்கள். இவர்களின் தந்தை மூஸா சாஹீப் அவர்கள் தாயிம் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளர்கள்.

தாயிம் பள்ளியில் ஹஜ் பெருநாள், நோன்பு பெருநாள் தொழுகைக்கு பின் மூஸா சாஹீப் ஆலிம் அவர்களால் சிறிதுநேரம் மார்க்க பயான் நடத்தப்பட்டு வருவது வழக்கம். மக்கள் மத்தியில் இந்த ஆலீம் அவர்களுக்கு மிகுந்த அன்பும் பாசமும் நிறைந்திருந்தது. ஆலீம் அவர்களும் அமைதியாக மிகவும் மெல்லிய குரலில் அன்பாக பேசுவார்கள், தொழுகைக்கு அழைப்பார்கள் K.T.M தெருக்களில் நிற்கும் சிறுவர்களை அசரு வேளைகளில் அன்பாக பள்ளிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். இவர்களின் தன்மை மகத்தானது எந்த சிறுவனும் இவர்கள் தொழுகைக்கு அழைத்தால் மறுக்காமல் அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவார்கள். இதை எனது அனுபவத்தில் எழுதுகின்றேன்.

முன்னாள் சேர்மேன் சேவை ஒரு பார்வை:

இந்த தொடரில் அன்று சேவை செய்து மறைந்த பெரியவர்கள் பற்றிய குறிப்புகள் எழுதவே ஆசைப்பட்டேன். இக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி எழுதுவது என்றால் அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அப்பா பள்ளி தெருவை சார்ந்த ஆனா.கானா. ஒரு கொடைவள்ளல் ஊரின் நலனுக்காக எப்பொழுதும் பணத்தைம் வாரி கொடுத்துகொண்டே இருப்பார்கள் அவர் குடும்பத்தில் வழி வந்த சின்னத்தம்பி அவர்களின் மனைவி வஹீதா B.Sc. அவர்கள் (2001-2006) சேர்மேனாக இருந்த காலத்தில் நடந்த ஒரு சேவை பற்றி அவர்களின் கணவர் என்னிடம் சமீபத்தில் சொன்ன ஒரு தகவலை காலத்தின் அருமை கருதி எடுத்துவைக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கின்றேன் தயவு செய்து இணையத்தால் வாசர்கள் நண்பர்கள் மன்னிக்க வேண்டுகின்றேன்.

அவர்கள் சேர்மனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி ஆத்தூரில் இருந்து நமக்கு தண்ணீர் வரும் S.S டேங் (ஸ்டும்பு ஸ்டோரேஜ் டேங் ) இதை பார்வையிட்டபோது அதனுள் 8 அடி சகதிகள் தேங்கி நின்றது அதை சுத்தமாக்க கேட்ட போது கலெக்டர் ராஜாராம் அவர்களிடம் இது பற்றி எடுத்து வைத்து நீக்கும் படி கூறியபோது, அவற்றை நீக்க அரசிடம் போதிய வருவாய் இல்லை என்றதும் இந்த கழிவு சகதிகள் விவசாயிகளுக்கு உரமாக்க வழியிருக்கிறது அவர்களுக்கு டெண்டர் கொடுத்து அவர்கள் அள்ளிசெல்ல சொல்லலாமே என்று கூறினார்களாம் அதன் படியே சகதிகள் நீக்கப்பட்டது இன்று சேர்மனின் கணவர் சின்னத்தம்பி காக்க அவர்கள் காயல்பட்டினம் ஜாவியா அருகில் வைத்து சமீபத்தில் என்னிடம் கூறினார்கள். அவர்கள் காலத்தில் நடந்த பல்வேறு சேவைகள் குறித்து சொன்னபோது எந்த செய்திகளையும் இந்த தொடரில் எழுதமுடியாது என்று ஒரேஒரு தகவல் மட்டுமே என்னால் எழுதிகாண்பிக்கப்படும் என்று சொன்னேன்.அதனால் ஒரேஒரு தகவல் மட்டுமே எழுதினேன் இணையதள அன்பர்கள் கோவப்படாதீர்கள். நீங்கள் காட்டும் ஆதரவினால் தான் பக்கம் பக்கமாக எழுதி தகவல் சேகரித்து தருகின்றேன். தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன். நீங்கள் அறிவாளிகள் நான் (ஆ)சிரியன்.

[முற்றும்]

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ...
posted by: Kader K.M (Dubai) on 27 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20660

தொடரட்டும் உங்கள் பயணங்கள் !!! வெள்ளை தாடியோடு உலாவரும் ( ஆ )சிறியாரை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கின்றோம். ஸ்பிரே பெயின்ட் அடிக்கும்போது பக்கத்தில் நின்றீர்களா ? அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்துவைத்து என் சமூகத்தை வழிநடத்த உங்களை கருவியாக ஆகிவைப்பான். தன் வரலாறு தெரியாத எவனும் (யாரும்) சாதனை படைக்க முடியாது !

எங்கள் ஊர் வள்ளல்களையும் வரலாறுகளையும் சொல்லித்தரும் உங்களை அல்லாஹ் வளமோடும் நலமோடும் வாழவைப்பான் !! ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ...
posted by: sheit (Dubai) on 27 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20661

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு ஆசிரியர் சிறந்த ஆசானாக வழி காட்டுகிறார், எனது அன்பின் காயல் சஹோதரர்களே இப்பொழுதே தயாரகுங்கள் ஆம் நமது அனுபவகங்கள் நம் வாரிசுகளுக்கு பயனாக இருக்கட்டுமே அல்லாஹ் கிருபை செய்வான்.

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) on 27 March 2012
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20662

அன்பின் ALS மாமா அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.

மிக அருமையான தொடர் போன்று எழுத்து மேடை கட்டுரை பகுதியில் தாங்கள் எழுதி வரும் கட்டுரைகள் காலத்தால் அழியாத பொன் எழுத்துக்கள். மறைந்த எனது மாமா பாவலர் SAP யூசுப் அவர்கள் தொடராக முத்துசுடரில் ஒவ்வரு மாதமும் நமதூர் நினைவில் வாழும் பெரியார்களை பற்றி கவிதை எழுதி வந்தார்கள். நான் அறிந்து அதற்கு பின் இந்த ஒரு சிறப்பான பணியை தாங்கள் செய்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நலமும் வளமும் வற்றாது வழங்கி அருள்வானாக .ஆமீன்

என்றும் அன்புடன்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டுகள்!
posted by: Firdous (Colombo) on 27 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20663

அன்பின் ALS மாமா அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கட்டுரை மிக அருமை. நமது ஊரில் வாழ்ந்து (உடலால்) மறைந்த பெரியவர்களின் வாழ்க்கையை எங்கள் முன் கொண்டு தரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவனாக!

நீங்கள் வரலாற்று குறிப்புகளை குறிப்பிடும் பொழுது நிகழ்வு வருடங்களையும் குறிப்பிட்டால் எங்களுக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்து கொள்ள இயலும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ...
posted by: ALS maama (Kayalpatnam) on 27 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20664

இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

எனது கட்டுரை தொடரான " சாதனைய? சோதனையா?" எழுத்தோவிய மூன்று தொடரிலும் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 1169 பேர்கள், கருத்து எழுதியவர்கள் 0012 ஆனால் 1169 கணக்கின்படி குறைந்தது 160 பேராவது கருத்து பதிவுசெய்திருக்கலாம்.ஆனால் விரல்விட்டு என்னும் அளவி 12 பேர்கள் (ஒரு டசன்) வாகு எனக்கு கிடைத்திருக்கிறது நன்றி.

நான் இதற்காக எடுத்துக்கொண்டுள்ள சிரமங்கள், சந்தித்த பெரிய மனிதர்கள், வயதில் மூத்தவர்கள், என் வயது 65 ஐ விட அதிகமானவர்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் கண்ணியமானவர்கள், பொதுசேவையில் அதிக பங்கு செலுத்துபவர்கள். இவர்களை சந்திக்கும் பொது அவர்களின் வேலை பளு, சேவையில் ஈடுபட்டிருக்கும் பொது இடையுறு கொடுத்துவிடாமல் அவர்களை கண்காணித்து அவர்கள் கோவப்பட்டு விடாமலும் அதில் நான் எனக்குரிய நளினத்தை கடைப்பிடித்து இந்த கட்டுரை எழுத மிகுந்த சிரமமேடுத்திருக்கிறேன்.

இன்ஷா அல்லா, காயல் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுத 30 வருடங்களுக்கு முன் எழுத ஆசைப்பட்டேன், அதில் ஒருசில பகுதியை எனது மறைந்த ஆசான் அல் ஹாபில், அல் ஹாஜி SKM நூஹு தன்பி ஆலீம் ஜுமானி (முத்துச் சுடர் மாத இதழ் ஆசிரியர் ) அவர்களிடம் கற்றுக்கொண்ட எழுத்து துறையும், கவிதைக்கு SMB மஹ்மூது ஹுசைன் அவர்களிடமும் பல்வேறு பத்திரிகை துறை செய்திகளை அன்று 1960 முதல் அவர்கள் இல்லம் சென்று எல்லா பத்திரிகை விசயங்களையும் அங்கு நான் கற்று குறிப்பெடுத்து டைரியில் நான் பதிந்துள்ளேன்.

புத்தகம் படிப்பதும், அவற்றின் குறிப்புகளை எழுதுவதும் எனது அன்றாட வேலை ஆகும். YUF நூலகத்தில் எனது அன்புக்குரிய மற்றொரு ஆசான் மர்ஹூம் SK ஷாஹுல் ஹமீது அவர்கள் எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊட்டிய முதல் நபர் அதுவும் 1960 - 1961 இந்த காலகட்டத்தில் என்னை சிறந்த நூல்கள் படிக்க அடிக்கடி தூண்டிக்கொண்டே இருப்பார்கள். என்மீது ஒரு தனி பிரியமும், ஆர்வமும் கொண்டவர்கள்.

இதே மாதிரி தான் MYO நூலகம் செப்று பல்வேறு புத்தகங்களை படிப்பேன், அங்கு எனது அன்பு நெஞ்சங்களான ஜிப்ரி கரீம் அவர்கள், பாரூக் அவர்கள் ஆகியோர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்ப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் அறிவு ஜீவிகள், இவர்கள் மூலம் பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளின் கட்டுரை தொகுப்புகளை தமிழில் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நான் இக்கட்டுரை எழுதும்பொழுது நினைத்து பார்க்கின்றேன்.

முத்துச் சுடர் ஆசிரியர் அவர்கள், இதன் துணை ஆசிரியர் SSM ஷேக் அலி ஆலீம் அவர்கள் எனக்கு அவர்கள் பத்திரிகையில் 1976 முதல் 1998 வரை இஸ்லாமிய சிறுகதைகள், கட்டுரைகள், உண்மைசம்பவங்கள், உலக அதிசய துணுக்குகள்,பேட்டிக்கட்டுரைகள் இப்படி பல தலைப்புகளில் எழுத அன்று அவர்கள் உதவினார்கள் நானும் எழு புனைபெயர்களில் விசயங்களை எழுதி வந்தேன். அத்தனையும் இன்றுவரி என்னிடம் பத்திரமாக வைக்க அல்லாஹ் தாலா உதவி இருக்கின்றான்.

காயல்பட்டணத்தில் முதன்முதலில் என்ற தொடரில் 250 குறிப்புகள் எழுதி அது எழுத்தாளர் LS இப்ராஹீம் ஹாஜி அவர்களிடம் பராட்டப்பெற்றுள்ளேன். இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த எழுத்தோவியம் "காயல் தகவல் களஞ்சியம்" அகர வரிசையில் எழுத ஆசைபடுகின்றேன் உங்களுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் இணையதள நண்பர்கள் எனது e-mail முகவரியான alsarts@gmail.com ல் பதிவு செய்து அனுப்ப வேண்டுகிறேன்.

எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெட்கித் தலைகுனிய தோன்றுகிறது...
posted by: S.K.Salih (Kayalpatnam) on 28 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20665

எனதன்பு ஏ.எல்.எஸ். மாமாவின் ஆதங்கம் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் நியாயமானதே! சுமார் 4 அல்லது 5 பத்திகள் கொண்ட ஒரு கட்டுரையைத் தொகுத்தளிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சில...

ஆதாரக் குறிப்புகளை நூலகங்களுக்குச் சென்றோ, நூற்கள் உள்ளவரிடம் சென்றோ நூற்களைப் பெற்று, அவற்றிலிருந்து தனது டைரியில் குறிப்பெடுத்து, அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து, தனக்கு தட்டச்சு செய்யத் தெரியாத காரணத்தால், பலரது உதவியுடன் (சில பல நேரங்களில் கைக்காசை செலவழித்து) தட்டச்சு செய்து தருகிறார்கள்...

நாற்காலியிலமர்ந்து, நினைத்ததை தட்டச்சு செய்து, நொடிப்பொழுதில் ஆக்கங்களை வெளியிடும் என் போன்றவர்களுக்கு ஏணி வைத்தாலும் எட்டாது ஏ.எல்.எஸ். மாமா போன்றவர்களின் உயரம்.

நம் இணையதளத்தில், பரபரப்பான செய்திகள், வித்தியாசமான தலைப்புகளில் செய்திகள் வருகையில், அவற்றில் பெரிய அளவில் தகவல்கள் இல்லையென்றாலும் கூட வாசகர் கருத்துக்கள் தூள் பறக்கும்போது, இதுபோன்ற நல்ல ஆக்கங்களுக்கு ஏன் வருவதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. செய்திகளில் கூட சில செய்திகளுக்கு வாசகர் கருத்துக்கள் அதிகளவில் வருவது நன்றாக இருக்குமே... என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது, அவற்றுக்கு வரும் கருத்துக்கள் ஒன்றோ, இரண்டோ அல்லது அதிகபட்சம் ஐந்தோ மட்டுமே!

இது யாருடைய குறை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை... சில அன்பர்கள் என்னை நேரில் சந்தித்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் அனுதினமும் செய்திகளையும், கட்டுரைகளையும் படித்து வரத்தான் செய்கிறோம்... ஆனால் கமெண்ட்ஸ் போட அச்சமாக உள்ளது... காரணம், யாராவது - ஏதாவது நம்மை கேலி செய்து எழுதிவிடுவார்களோ... என்பதுதான்!” - இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் இப்போதைக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்,

வழமையான கருத்தாளர்கள் இதுபோன்ற நல்ல ஆக்கங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தர இசைய வேண்டும்...

சில நேரங்களில் கரடு முரடாக கருத்தெழுதுவோர், (எல்லாவற்றையும் தணிக்கை செய்வது நன்றாக இருக்காது என்ற - இணையதள நிர்வாகத்தினரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு) இயன்றளவுக்கு தம் கருத்துக்களை நளினப்படுத்த வேண்டும்...

இவற்றைச் செய்தாலே பலர் தமது கருத்துக்களைத் தயக்கமின்றி தர வாய்ப்பேற்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ...
posted by: S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) on 30 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20674

காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா? சோதனையா? [தொடர்-3])!

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

அன்புள்ள ஏ.எல்.எஸ். மாமா அவர்களின் கட்டுரைகள் என்னைக்கவர்ந்து வருகிறது.

மாசா அல்லாஹ் எல்லாமே அறிவுப்பூர்வமனாதாகவே இருக்கிறது. தாங்கள் கோடிட்டுக்காட்டியுள்ள கீழ்கண்ட நபர் எனது உஸ்தாதின் மகன் என்பதில் நான் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் என் தம்பியும் அழுத்கமை ஸாஹிரா கல்லூரியில் படிதுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களது தந்தை முக்தார் ஆலிம் அவர்கள் நடத்தி வந்த முஐய்யது இஸ்லாம் அறபிக்கலூரியில் தங்கி முக்தார் ஆலிமிடம் ஓதி வந்தோம் அது சமயம் இவர்களது மகனும் அவர்களிடம் ஓதிவந்தார்கள். எங்களுக்கு அடிக்கடி அற்வுரைகள் சொல்வர்கள். மேலும் இவர்கள் இலங்கை வானொலியில் சில்காலம் பேச்சாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதும் குரிப்பிடத்தக்கது.

இலங்கை வெலிகம அல் அஸ்ஹர் வெளியிட்டகம் 1991ல் மூன்றாம் பதிப்பு இஸ்லாமிய நாகரீகம், இதன் ஆசிரியர் முக்தார் ஏ முஹம்மது B.A (honors) அவர்களின் நூல் நமக்கு தெரிவிக்கிறது. பலரும் பலவிதமான விமர்சனங்களை எளுதியபோதும் எனது இந்த விமர்சனம் புதுமையானது என்றே எண்ணுகிறேன்.

மேலும் தாங்கள் விமர்சனங்கள் மிகக்குறைவாகவே என்று ஆதங்கபட்டுள்ளீர்கள் ஆனால் வந்துள்ள விமர்சனங்கள் ஒவ்வொன்றும் நூறு விமர்சன்ங்களுக்கு சமம் என்றே நான் கருதுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவன் வழிப்பாட்டில் உங்களது ஹயாதை நீள்மாக்கி வைத்து மேலும் மேலும் மக்களுக்கு நல்ல தகவல் களை தந்து எல்லாரும் பயனுறுமாறு செய்வானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.
எஸ்.டி.சேகு அப்துல் காதிர்.
காயிதே மில்லத் நகர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved