Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:06:27 PM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 23
#KOTWEM23
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 28, 2012
எதிரும் புதிருமாக எத்தனை உலகங்கள்!!!

இந்த பக்கம் 1796 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒவ்வொரு ஊரிலும்,கிராமத்திலும்,நகரத்திலும் அகன்று விரிந்த தெருக்களையும்,சாலைகளையும் நிறைப்பது யார்? நேர்த்தியாய் உடையணிந்து பல்வேறு பணிகளுடனும்,கனவுகளுடனும்,விருப்பங்களுடனும் விரைந்து செல்லும் ஆண்கள்,பெண்கள்,இளையவர்,பெரியவர்கள்,அத்துடன் சீறிச்செல்லும் ஊர்திகளும்.

கூடவே..... விளையாட்டுத்திடலில் குதூகலிக்கும் குழந்தைகள் காற்றின் ராகத்திற்கேற்ப பயிர் தலையசைக்கும் வயல்களில் உழைத்து ஓயும் உழவர் அந்த தெருக்களின் சாலைகளின் திடல்களின் வயல்வெளிகளின் மேல் கவிழ்ந்திருக்கும் நீல வான வெளியை அதே மனிதர்களின் பேச்சு,சிரிப்பு,ஊர்திகளின் இரைச்சல்,புகை,களைப்பு போன்றவை ஆக்கிரமிக்கின்றன.

தனது சுடரொளியின் வண்ண ஜாலங்களால் உதயத்திலும் அந்தியிலும் பூமியின் மீது கதிரவன் வரையும் ஓவியம்தான் ஒரு நாள் என்பது.

ஆனால் வண்ணமயமான இந்த ஒரு நாள் என்பது இப்பூமியில் வாழும் அனைவருக்கும் ஒன்று போல மகிழ்ச்சிகரமானதாகவும், நிறைவளிக்கக்கூடியதாகவும் உள்ளதா?

நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் வர்ணித்த காட்சிகள் மட்டும்தான் பூமியின் மீது விடியும் ஒரு நாளின் முழுமையான உண்மையான காட்சிகளா? பரபரப்பாகவும்,சுறுசுறுப்பாகவும்,துடிப்புடனும் சாலைகளிலும்,தெருக்களிலும் சுழன்றியங்கும் ஒரு நாளானது அதே வேகத்துடன் பூமியின் எல்லாப்பகுதிகளிலும் எல்லா மனிதர்களிடமும் இயங்குவதில்லை. உயிர்த்துடிப்புடன் இயங்கும் தெருவின் சாலையின் ஓரத்தில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் மருத்துவமனைகளினுள்ளே சற்று சென்று காணும்போது இந்த உண்மையை உணர முடியும்.

கால நேரமானது மருத்துவமனைகளில் தனது உயிர்த்துடிப்புமிக்க இயக்கத்தை நிறுத்தி உறைந்து போய் விடுகின்றது. ஆம்!

விபத்துக்களில் சிக்கி உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் விபத்தினாலும், நோயினாலும் உடல் தோற்றம் சிதைந்தவர்கள் கொடிய உயிர் கொல்லி நோயின் வாயில் சிக்கியவர்கள் நோயை விட கூடுதலான தனியார் ஆஸ்பத்திரிகளின் கொள்ளை மருத்துவக்கட்டணங்களை கட்ட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் போன்றவர்களுக்கு ஒரு நொடி கழிவதென்பது ஒரு யுகம் கழிவது போல் இருக்கும். மருத்துவமனைகளில் மட்டுமல்ல....

நான்கு பெரும் மதில்களுக்குள் அநியாயமாக முடமாக்கப்பட்ட சிறை வாசிகள் கணவனை இழந்த, கைவிடப்பட்ட கைம்பெண்கள் பருவ வயதை எட்டியும் திருமணம் என்ற வாழ்வின் வசந்தம் இன்னும் வராத முதிர்கன்னிகள் வன்புணர்ச்சி (கற்பழிப்பு) செய்யப்பட்ட மகளிர் உடலும் மனதும் ஓய்வைத்தேடும் தருணத்தில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட முதியவர்கள் பாசம் அறியா அனாதைச் சிறுவர்கள் மலரும்முன்னே வாழ்வு களவாடப்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் நகர வளர்ச்சி என்ற பெயரில் இருப்பிடமில்லாமல் வீதியில் எறியப்பட்ட மாந்தர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை கழிக்க ஆண்டாண்டு காலமாக அற்ப கூலியில் கசக்கப்படும் கொத்தடிமைத்தொழிலாளர்கள் விவசாயம் பொய்த்ததால் வாங்கிய பயிர்க்கடனை அடைக்க வழி தெரியாமல் மானம் காக்க பூச்சி மருந்தை குடிக்கும் உழவர்கள்

கனிம வள அகழ்வு , அணு உலை, வேதியியல் ஆலை உற்பத்தி என்ற பெயரில் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பெயர்த்தெறியப்பட்ட ஆதி வாசிகள்,பழங்குடிகள் அல்லது இவற்றின் இயக்கத்தால் ஏற்பட்ட நச்சு மிக்க பின் விளைவுகளினால் வாழ்வு உருக்குலைக்கப்பட்ட ஊர், நகர மக்கள் என வாழ்வு மறுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் அனைவரும் காலம் என்ற சில்லிடும் பனிக்கட்டிக்குள் சிக்கிய ஈ போல உறைந்து போய் விடுகின்றனர்.

நாம் பிறப்பதும் இறப்பதும் ஒரே பூமியில்தான் என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும்போது நாம் வாழும் காலத்தில் நமக்குள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய அநீதிகளுடன் எத்தனை உலகங்கள் !!!

இத்தகைய முரண்பாடுகளுடைய உலகங்களை உருவாக்குபவர்களை நாம் எளிதாக அடையாளங்காட்டிட முடியும்.

ஆனால் இந்த அநீதமான பல முரண்பாடுடைய உலகங்கள் நீடிப்பதற்கான அடிப்படை எது தெரியுமா?

தனது வாழ்வானது அமைதியும் பாதுகாப்பும், நிம்மதியும் நிறைந்த ஒன்றாக அமைந்தால் போதும் வேறு எவரைப்பற்றியும் எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை என வாழும் ஒரு மனிதனின் எண்ணம்தான்.

சக மனிதனின் துயரத்தை, வலியை, இழப்பை, ஏக்கத்தை தேவையை உணராத அல்லது உணர மறுக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இந்த எதிரும் புதிருமான அநீதமான முரண்பாடுகளுடைய உலகங்களின் அத்திவாரக்கல் என்றால் அது மிகையில்லை.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எதிரும் புதிருமாக எத்தனை ...
posted by: Shameemul Islam SKS (Chennai) on 28 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20666

சுய நலம், சுய நலம் ஒன்றே காரணம்.
அது கொடுத்தது இறுகிய மனம்.
அது அவங்க பிரச்னை என சும்மா இருந்துவிட்டு போகியும் குணம். அவசர உலகம்.
பணம் ஒன்றே குறிக்கோலாகிப்போன இவ்வுலகில் எதப் பத்தியும் சிந்திக்க யாரும் தயாரா இல்லை.
அதன் விளைவு தான் கட்டுரையாளர் படம் பிடித்துக் காட்டியுள்ள சமூக அவலம்.
இறை அச்சம் மற்றும் மறுமை வாழ்வு பற்றிய பயத்துடம் வாழ்ந்தால் மட்டுமே சிலரது நெஞ்சைப் பிளக்கும் இச்சமூக அவலங்கள் பலரின் மனதையும் வாட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எதிரும் புதிருமாக எத்தனை ...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) on 28 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20667

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது அருமை சகோதரர் .சாளை.பஷீர் அவர்களின். இந்த '''''எதிரும் புதிருமாக எத்தனை உலகங்கள் ''''' கட்டுரை மிகவும் அற்புதம் . இந்த உலகதில் நடக்க கூடியதை தான் அப்படியே குறிபிட்டு உள்ளார். பொதுவாக அன்பு சகோதரின் எல்லா கட்டுரைகளும் மிக நிதானமாகவும் & அற்புதமாகவும் இருக்கும் .

அருமை சகோதரர் .சாளை.பஷீர் அவர்களுக்கு எம் பாராட்டுகள் .

வஸ்ஸலாம

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எதிரும் புதிருமாக எத்தனை ...
posted by: Kader K.M (Dubai) on 28 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20668

ஆசிரியரின் நற்சிந்தனை வெளிப்படுகின்றது வாழ்த்துக்கள். நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் ஆண்/பெண்ணே ஒரு முறை கேன்சர் சென்ட்டர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து வா! உனது ஆணவம் அழிந்து முக்தி பெற்றுவிடுவாய்! நான் என்ற அகந்தை அழிந்துவிடும்.அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக. ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இதயத்தில் வலி
posted by: sheit (Dubai) on 28 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20669

கட்டுரையை படித்து முடித்ததும் கண்கள் பனிக்கின்றன,இதயத்தில் சின்ன வலி, என்னை நானே உரசிபார்கிறேன், நம்மில் எத்துனை பேர் மாதத்தில் ஒரு தடவையாவது நோயாளியை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி நல்ல இஸ்லாமிய சிந்தனை புத்தககங்கள் கொடுத்திருக்கிறோமா? அதைபோல் சிறைவாசிகள், குறைந்தபட்சம் பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கலாமே! ஒவ்வருமுறை ஊர் சென்று வரும்பொழுது முதியவர்கள் சொல்லும் வார்த்தை இது நீ அடுத்த முறை ஊர் வரும்பொழுது நான் இருக்கிறேனோ இல்லையோ, என்ன அற்ப உலகமடா! கட்டுரையாளர்கு எனது துவாக்கள்

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எதிரும் புதிருமாக எத்தனை ...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 02 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20686

ஒவ்வொரு மனிதனிலுமே எதிர் எதிர் அம்சங்கள் இருக்கும் போது உலகில் அது இருப்பது நிதர்சனம். இதுதான் இயற்க்கை நியதி என்பதா ?அல்லது மனிதர்களின் சுயநலத்தால் உலகம் இப்படி ஆகிவிட்டது என்பதா ?

என்றாலும் தம்பி பஷீர் இதை எழுதி இருப்பதில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஒரு கருணை யுள்ள இதையத்திலிருந்து இதை தவிர வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது. புற உலக விஷயம் மட்டும்தான் ஒரு கட்டுரைக்கு கருப்பொருள் என்பதில்லை. இது போன்ற அகம் சார்ந்த விசயங்களையும் கூட பிறர் வியக்கும் வண்ணம் எழுதலாம். மனிதனோடு மனிதநேயமும் சேர்ந்து இருப்பதுதானே அழகு

அது தம்பி பஷீரிடம் நிறையவே இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved