Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:36:13 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 32
#KOTWEM32
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 26, 2012
சீரியல் கில்லர்!

இந்த பக்கம் 3185 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அன்பு வாசகர்களே! வலைதளங்களின் வாயிலாக புதுப்புது விஷயங்களை கட்டுரையாக எழுதுவது உண்மையில் புதுமை அல்ல! சமுதாயத்தில் புரையோடிப் புதைந்து கிடக்கும் புற்று போன்ற நிகழ்வுகளை நிதர்சனங்களாக வெளிக்கொணர்வதே என் நோக்கம். அதன் தாக்கத்தினால் உருவாகும் ஆக்கங்கள்தாம் இவைகள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். - ஹிஜாஸ் மைந்தன்.


பொதுவாக பெண்கள் இளகிய மனம் படைத்தவர்கள் எனவேதான் பிச்சைக்காரன் கூட தனக்கு ஏதேனும் நிச்சயமாகக் கிடைக்கும் என நம்பி, “அம்மா தாயே! பிச்சை போடுங்கம்மா...” என தாய்க்குலத்தையே தானத்திற்கு அழைக்கின்றான். இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் பெண்களை அதிகம் கவரும் வண்ணம் விளம்பரங்களும், சினிமாக்களும், சீரியல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்தகால அரசின் இலவச திட்டங்களில் இல்லங்களுக்கு சுலபமாகக் கிடைக்கப்பெற்ற தொலைக்காட்சிப் பெட்டிகளால் இல்லத்தரசிகளின் சீரியல் மோகம் இன்னும் அதிகமாயிற்று என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

காலை முதல் வீட்டு வேலைகளில் மூழ்கும் தாய்மார்கள், சாதம் வடித்து சற்று ஓய்வெடுக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மாத - வார இதழ்களை வாசித்து வந்த பழக்கம் அடியோடு மறைந்தொழிந்து போயிற்று. தொலைக்காட்சியின் தொடர்களில் நேரத்தையும், காலத்தையும் தொலைத்து வருவதால்தான் அதற்கு “தொலை” காட்சி எனப் பெயர் வந்ததோ என்னவோ?

எனக்குத் தெரிந்த வரை வேறு எந்த மொழிகளிலும் இல்லாத வகையில் நம் தமிழ் மொழியில்தான் சானல்கள் அதிகமாக உள்ளன. வணிக ரீதியில் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதத்தில் வெவ்வேறு நேரங்களில் விதவிதமான சீரியல்கள் வீடுகள்தோறும் புகுந்து விளையாடுகின்றன.

வானத்தில் உள்ள நிலாவைக் காட்டி தம் பிள்ளைகளுக்கு அமுதூட்டிய தாய்மார்கள் இன்று தம் இல்லதில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டி ஊட்டும் அவலம்.

கைப்பிள்ளையாக அன்னையின் இடுப்பில் இருந்து கொண்டு வண்ணக் காட்சிகளைக் கண்டு வளரும் பிள்ளைகள் வாய் பேசத் துவங்கும்போது சீரியலில் வரும் டைட்டில் சாங்ஸைக் கேட்டதும் அதன் பெயரை உச்சரிக்கும் போதும், அதன் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பெயரைக் கூறும்போதும் தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மழலையின் கன்னத்தில் அழுத்தமாக முத்த மழை பொழிந்து பெருமிதம் கொள்கின்றாள் அந்தத் தாய்.

அதே பிள்ளைகள் ஐந்து வயதை அடையும் போது நூற்றுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கிச் சண்டைகள், ஆயிரம் கொலைகள், கற்பழிப்பு, ஆள் கடத்தல், விவாக ரத்து, மாமியார் மருமகள் சண்டை, சின்ன வீடு, வன்முறைக் காட்சிகள், என உலகில் உள்ள அனைத்து தீமைகளையும் கண்கூடாகப் பார்த்து விடுகின்றனர். காரணம் இதுபோன்ற காட்சிகள்தான் டி.வி சீரியல்களில் (தொடர்ச்சியாக) காட்டப்பட்டு வருகின்றன. அதை தாங்களும் பார்ப்பதோடு தம் மழலைகளை மடியில் வைத்துக் கொண்டு பார்த்து வருவதுதான் தாய்க்குலம் செய்யும் இமாலயத் தவறு.

டி.வியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது விளம்பரங்கள் வந்தாலோ? அல்லது மின்சாரம் தடைபட்டாலோ குழந்தைகளின் முகம் அஷ்டகோணலாக மாறிவிடுவதை நாம் காணலாம். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் சீரியல் தொடர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும் என்பதை ஏனோ இவர்கள் இன்னும் உணரவேயில்லை.

பருவம் எய்தும் நிலையில் உள்ள இளம்பிராயத்தினர் கள்ளக்காதல், ஓடிப்போதல், கணவன் மனைவி பிரிந்து வாழ்தல், தாய் தந்தையரை மதியாமை, சூழ்ச்சி, சுய நலம் இவைகளால் சூழப்பட்டுள்ள சீரியல்களை தினமும் - ஐம்புலன்களையும் ஒன்றுபடுத்தி - கவனக்குறைவின்றி தவறாமல் பார்த்து வரும்போது ,அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை பெற்றோர்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

பருவ மாற்றத்தால் உடலிலுள்ள சுரப்பிகளில் மாற்றம் காணும்போது அவர்களுக்கு ஆவலும், வேகமும் அதிகரிக்கும். ஆசையின் உந்துதலால், ஆர்வக் கோளாறுகளால் அவர்கள் தட்டுத் தடுமாறித் தடம் மாற வாய்ப்புகள் உள்ளனவே...?

இன்னும் தாய்மார்களின் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, குடும்பச் சுமைகள், ஆகியவற்றால் அவர்கள் மன உளச்சலில் இருக்கும்போது டி.வி தொடர்களில் வரும் டென்ஷனான காட்சிகள் இன்னும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். கண்ணிர், சோகம், அனுதாபம், பரிதாபம் என பெண்களை சுலபமாக உணர்ச்சி வசப்படச் செய்யும் கதைகளை மட்டுமே தொடர்களாக சானல்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றன.

இவற்றின் மாய வலையில் சிக்கி, தன்னிலை மறந்து காட்சியோடு ஒன்றிவிட்ட நிலையில் தம் பிள்ளை “அம்மா பசிக்குது” என்றாலோ அல்லது தம் கணவன், தன் சகோதரன் ஏதேனும் கேட்டாலோ ஒருவித எரிச்சலுடன் எழுந்து வரும் நிலைதானே நம்மிடத்தில் உள்ளது? அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவைகளுக்கு உலைவைக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் யாவும் உண்மையில் ஒரு சீரியல் கில்லரேதான்!

ஏதேனும் காரணங்களால் ஒரு நாள் தொடரைப் பார்க்கவிட்டால் அதைப் பார்த்தவர்களிடம் போய் கதை கேட்டு ஆசுவாசப்பட்டுக்கொள்ளும் ஜன்மங்கள் (மன்னிக்கவும்) தாய்மார்கள் ஏராளம்! அதே நேரம் அண்டை வீட்டுக்காரர் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் அதன் பக்கமே அண்டாமல் ஒதுங்கும் நிலையும் நம்மிடத்தில் உள்ளது. கேட்டால் “நேரமில்லை”, “வேலையாக இருந்தேன்” என ஆயிரம் காரணங்கள் கூறி சமாளித்து விடுகின்றோம்.

சீரியலின் சீரழிவை நீட்டிக் கொண்டே போனால் நாமும் தொடர் எனப் போடும் நிலை வந்துவிடும். எனவே அருமைத் தாய்மார்களே!

டி.வி. எனும் சாத்தானைக் காட்டி சோறூட்டும் பழக்கத்தை இன்றோடு கைவிட்டு விடுங்கள்...

இம்மைக்கும், மறுமைக்கும் எவ்விதத்திலும் பயன் தராத சீரியல்களை பொழுது போக்கிற்காகக் கூட பார்க்க வேண்டாம்...

வளரும் தலைமுறையான மலரும் மொட்டுகளுக்கு மார்க்க போதனைகள், நீதிக் கதைகள், வாழ்வியல் தத்துவங்கள், சரித்திர சான்றுகள், தனி மனித ஒழுக்கம், கற்பு, ஆகியவற்றைக் கற்றுக்கொடுங்கள்...

நம் வீடு தேடி உறவினர்கள், நண்பர்கள், அயல் வீட்டுக்காரர்கள் என யாராவது வந்தால் டி.வியை அணைத்து விட்டு அவர்களைக் கவனியுங்கள்...

எக்காரணம் கொண்டும் கைவிட்ட சீரியலை எங்காவது எப்போதாவது எதேச்சையாகக் காண நேரிட்டால் அத்திசையின் பக்கமே திரும்பாதீர்கள். அது மீண்டும் தொற்றிக்கொள்ளும் ஒரு பவர்ஃபுல் தொற்றுக் கிருமி.

எனவே, எல்லாம் வல்ல நாயன் நம்மையும், நம் சமுதாயத்தையும் இந்த சீரியல் கில்லரிடமிருந்து பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சீரியல் கில்லர்!...
posted by: ummu (bangalore) on 26 April 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20730

serial killer, மிஹவும் arumai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அதிகம் தின்றால் அமுதமும் நஞ்சு.........
posted by: s.s.md meerasahib (zubair) (riyadh) on 26 April 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20732

அஸ்ஸலாமு அலைக்கும். கட்டுரையின் கருத்து உண்மையிலும் உண்மை. கட்டுரையில் நமக்கு புதுமை தெரியவில்லை என்றாலும்....... நம்மை நாமே..... புதுபித்து கொள்ள வாசகம்கள் எவ்வளவோ உள்ளன.

நம் தாய்மார்கள் தொழுகையை முறையாக நேரம் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள், தர்மம் செய்கிறார்கள், ஒழுக்கத்திலும் அதிக குறை ஒன்றும் இல்லை. இப்படி பட்ட தார்மார்கள்..... நம் பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பதை நினைவில் கூர்வது இல்லை.

கட்டுரையின் ஆசிரியர் சொன்னது போன்று சீரியல் காண்பதை தவிக்கவும். வீட்டில் டி.வி.வைத்துக்கொண்டு சீரியலை தவிர்க்க முடியவில்லை என்றால்......... டி.வி.யை ஓரம் கட்டுவதே....... நல்லது. இதை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் நிம்மதியும்,பிள்ளைகள் ஒழுக்கமும், இபாதத்தும், பரக்கத்தும் தழைத்தோங்கும்.

குறிப்பு:-
நம் ஊர்களில் சில வீடுகளில் டி.வி.யை ஓரம்கட்டிய தாய்மார்களும் உண்டு என்பதை நினைவில் கூறவும், அவர்களுக்காக துவாவும் இறைஞ்சுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சீரியல் கில்லர்!...
posted by: ALADHEEN .A.M.S ( MUMBAI ) (KUWAIT) on 26 April 2012
IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 20733

தொலை காட்சியின் அர்த்தத்தை தொலைந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியாகிய இஸ்லாத்தை மிக தெள்ளத்தெளிவாக கூறிய எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் .

தொடர்கள் என்ற மாயையைகளின் பிடியில் சிக்கி மாய்ந்து போய்க்கொண்டிருக்கும் மார்க்கமாகிய இஸ்லாத்தையும் ,பண்பாடுகளையும் ,பாசம் ,நேசம் ,உறவு ,மரியாதை போன்றவைகளை கணவனும் மனைவியும் சேர்ந்து கேடாக்குவதை நன்றாக கூறியதற்கு மீண்டும் பாராட்டுக்கள்.

ஒரு தூய்மையான முவ்மீன் நரகம் செல்வதற்கு நான்கு நபர்கள் காரணமாக இருப்பார்களாம் 1 தாய் 2 மனைவி 3 சஹோதரி 4 மகள்.... எனவே கண்ணியவான்களே இக்கட்டுரையை படித்து எழுத்தாளர் நாடியதைப்போல் நாயன் அல்லாஹ்வை பயந்தாவது பெண்களைத் திருத்துங்கள் .

ALADHEEN . A M . S
DAKHNAN GROUP OF COMPANIES
SAALMIYA / HAWELI
KUWAIT
MOBILE :00965 65031182
TEL :22622407 / 408 --22629920 / 22619544 /22619455 / 22620583 .
E - MAIL :dakhnan companies global @gmail .com
PERSONAL :neyyakkaran @yahoo .com
WEBSITE :www .dakhnanonline .com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நன்மை என்பது அத்தி பூத்ததுபோல்தான்
posted by: N.S.E. மஹ்மூது ( ???????????? ) on 26 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20734

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் முஹம்மது ரஃபீக் எழுதி உள்ள கட்டுரை சுருக்கமானதாக இருந்தாலும் ஆழமான , ஆணித்தரமான கருத்துக்களை மிகத் தெளிவாக, அழகாக சொல்லி இருக்கிறார் - அவருக்கு வாழ்த்துக்கள்.

தொலைக்காட்சி பெட்டி வைத்திருப்பவர்களுக்கு சிரமங்கள்தான் அதிகம் , தீமைகள்தான் அதிகம் - நன்மை என்பது அத்தி பூத்ததுபோல்தான் - இதை உணர்ந்தவர்கள் வீட்டில் தொலைகாட்சி பெட்டி இருக்காது.

தொலைகாட்சி பெட்டி இருப்பது என்பது ஷைத்தான் இருப்பதற்கு சமம் - ஷைத்தானுடன் போரிட்டு வெல்ல தைரியமுள்ளவர்கள் தொலைக்காட்சி பெட்டியை வைக்கலாம் - தைரியமில்லாதவர்கள் அந்த ஷைத்தானை விட்டு தூரமாகிவிடுவதே சிறந்தது.

-----------------------------------

தொலைகாட்சியில் அது மார்க்க சம்பந்தமான தொடர் ஹதீதுகளாக இருந்தாலும் சரி, குர்ஆனாக இருந்தாலும் சரிதான் எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை உண்டு என்பதை மக்கள் உணர வேண்டும்.

குர் ஆனையும், ஹதீதையும்தானே கேட்கிறோம், பார்க்கிறோம் - சினிமா, சீரியல் என்று பார்க்கவில்லையே என்பதாக சொல்லி ஃபர்லான கடமையான தொழுகையை விட்டு விடுகிறார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு தொழுகையைவிட முக்கியமானது வேறு எதுவுமில்லை என்பதை உணரவேண்டும் - தொலைகாட்சியை பார்ப்பதை நெருப்பை பார்ப்பது போல் உணர்ந்தால் தீமையை விட்டு விலகலாம்.

சகோதரர் ரஃபீக் மேலும், மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சீரியல் கில்லர்!...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 26 April 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20735

சீரியல் கில்லர் . புதுமை இல்லை என்றாலும் , அத்தனையும் உண்மை . சமீபத்திய வார இதழில் படித்த ஒரு சிறுகதை .

ஒருத்தி டாக்டரிடம் சென்று மாஸ்டர் செக் அப் பண்ணி இருக்கிறாள் . டாக்டர் எல்லா பரிசோதனைகளையும் செய்து முடித்து விட்டு , அவளிடம் , நீங்கள் 100 % perfect . எந்த குறையும் இல்லை என்று சொன்னதும் , அவளோ , " அப்பாடா " என்று பெருமூச்சு விட்டு , இப்போதான் மனசுக்கு நிம்மதி டாக்டர் . இன்னைக்கு ஒரு " மெகா சீரியல் " ஆரம்பிக்கிறது . அது முடிவதற்குள் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தேன் . நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னதும்தான் மனசுக்கு நிம்மதி . சீரியல் முழுவதையும் நல்லபடியா பார்த்து விடுவேன் என்றாளாம் . அத்தனை வீட்டிலும் இதுதான் நிலைமை .

( தாய்குலத்தை தானத்திற்கு அழைப்பது , நிச்சயம் கிடைக்கும் என்பதால் அல்ல . அது நேரத்தை பொருத்தது . பகலில் ஆண்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள் . அதனால்தான் " அம்மா தாயே " . மற்ற நேரங்களில் ' அய்யா சாமீ " . )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சீரியல் கில்லர்!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 26 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20736

இன்றைய கால சூழலுக்கு ஏற்ற தரமான கட்டுரை. சினிமா பார்ப்பதையே "ஹராம்"என்று சொன்ன நமது சமூக பெரியவர்கள்.பின்னொரு காலத்தில் அதே சினிமா "சீரியல்"என்று வேறொரு வடிவம் எடுத்து ஒவ்வொரு வீட்டின் வரவேற்ப்பு அறையையும் அலங்கரிக்கும் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

முன்பெல்லாம் திருமணமாகாத குமரிப்பெண்கள் வீட்டில் பொழுது போக்குவதற்காக "ராணி""குமுதம்"போன்ற இதழ்களை வாங்கி வாசிப்பதும் ஓய்ந்த நேரங்களில் "ரேடியோ சிலோன் "கேட்பதும் வாடிக்கை. ஒரு நியாயமான பொழுதுபோக்கான இதைக்கூட அக்கால பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். "அதென்ன....எப்போ பார்த்தாலும் ரேடியோ...புஸ்தகம் ...?"என்று அதட்டுவார்கள்.(எனது மனைவியே இந்த சங்கடங்களை ஒருபாடு அனுபவித்திருக்கிறாள்.)

ஆனால் இன்று சிறியவர்களை விடுங்கள்---பெரியவர்களே இந்த சீரியல் மோகத்தில் மிகைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாள் கூட இவர்கள் அதை தவற விடுவதில்லை. ஏதாவது வேலை நிமித்தம் ஒரு நாள் இவர்கள் இதை பார்க்காது போனாலோ ,அல்லது அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மின்தடை எற்ப்பட்டாலோ இவர்கள் அடையும் சங்கடம் கொஞ்ச நஞ்சமல்ல. விடுபட்டுப்போன தொடரை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளும் வரையில் இவர்களுக்கு தூக்கம் வராது.

இத்தனைக்கும் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றுக்கு ஓன்று எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. அதே மாமியார் மருமகள் சண்டை, கொடூர சித்தி, வில்லன்களாக உருமாறும் கணவனின் தங்கை அல்லது மனைவியின் அண்ணன் அல்லது விஷமம் செய்யும் வீட்டிலுள்ள கிழடு கட்டைகள் ----இதே புளித்துப்போன பார்முலா கதைகள்தான். தலைப்பை மட்டும் எடுத்துவிட்டால் எது எந்த சீரியல் என்று யாருக்கும் தெரியாது.

மூளையை மழுங்க வைக்கும் இத்தகைய தொடர்களால் ஒரு வேளை இது போன்ற கொடுமைகளை தங்களது நிஜ வாழ்விலும் அனுபவிக்கு ம சிலருக்கு வேண்டுமானால் சற்றே ஆறுதல் கிடைக்கலாம். மற்றவர்கள் --பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கு உள்ளேயே ஒரு போலி உலகத்தை சிருஷ்டித்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் உண்மை.

பெண்களின் இந்த பலஹீனத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் இந்த சீரியல் கில்லர்கள் இதை ஜவ்வு மிட்டாய் மாதிரி 100 episode 200episode என இழுத்தடிக்கிறார்கள். ஒரு வேளை pain killar மாதிரி இதுவும் ஒரு கில்லரோ..என்னவோ...!ஆனால் இந்த கில்லரால் வலி தீராது. நோய்தான் பெருகும். இதை நம்மவர்கள் உணர்ந்தால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சீரியல் கில்லர்!...
posted by: SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI) on 26 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20737

அருமை , அருமை ,தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சீரியல் கில்லர்!...
posted by: Ahamed (Chennai) on 26 April 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20738

அட்மின் அவர்களே...ஒவ்வொரு கமெண்ட்ஸ் அருகிலும் Like Unlike symbol ஐ வைக்கலாமே..facebook ஐ போல.

Administrator: ஆலோசனைக்கு நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:சீரியல் கில்லர்!...
posted by: M Sajith (DUBAI) on 26 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20739

சகோதரர் மிகவும் அவசியமான ஒரு தலைப்பை தெரிவுசெய்துள்ளார் எனினும் இதில் ஆண்கள் விதிவிலக்கு என்பது போல சித்தரிதிருப்பதில் உடன்பாடு இல்லை.

டைம் பாஸுக்காக டிவி பார்த்த காலம் மாறி, இன்று டிவி பார்ப்பது போக டைம் இருந்தால் வேலையை பார்ப்போம் என்ற நிலமைதான் அநேக வீடுகளில்...

மனதளவில் முழுக்க முழுக்க Negative Thoughts தான் இந்த சீரியல்கள் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. யாராவது யாருக்காவது எதிராக திட்டம் தீட்டுவது பின் அதற்கு பழிவாங்குவதுமாகவே அனைத்து சீரியல்களும் அமைந்துள்ளது - இதுக்கு குடும்பத் தொடர் என விளம்பரம் வேறு!!

இதை தவறாமல் பார்ப்பதில் பெரிசுகளின் ஈடுபாடு கேட்கவே வேண்டாம்... 'செல்வி'யில நீ அவள என்ன பாடு படுத்தினாய் அதனாலத்தான் ஆண்டவன் உன்ன'தங்கத்'தில் இப்படி தடுமாற வச்சிருக்கிறான் என்று அவைகளில் வரும் நடிக-நடிகைகளை வசைபாடும் அளவுக்கு ஒன்றிவிட்டார்கள்.

பொதுவாகவே வேலை இன்மையைத்தான் பிரயோஜனம் இல்லாத பயனில்லாத செயல்கள் ஈடு செய்யும். சீரியல் விசயத்தில் அவசியமான வீட்டு வேலைகளை கூட புறந்தள்ளும் நிலமை - ஒரு வகையான போதை போல ஆகிவிட்டது.

உண்மையில் நேரம், உடல் நலம், மன நலம், நல்ல எண்ணங்கள் என பலவற்றை அழித்துவிடும் கில்லர்தான் இது...

இதிலிருந்து விடுபட இறைவனின் துனையை நாடுவதுடன், நமது முயற்சியாக பயண் தரும் பொழுதுபோக்கு வழிகளை கண்டறிந்து அதில் ஈடுபடுத்துவதே சரியாக இருக்கமுடியும்.

டிவியையே வீட்டிலிருந்தது ஓரம் கட்ட முடியுமா என்றால் சந்தேம்கம் தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நமது ஊர் தாய்மார்களின் சீரியல் பற்று???
posted by: Habeeb Mohamed (Doha - Qatar) on 26 April 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20740

வெளி நாட்டில் வசிக்கும் நமதூரை சார்ந்தவர் காயலில் உள்ள தனது மனைவியுடன் தொலைபேசியில் ஊரின் நடப்புகளை விசாரிக்கும் போது ஊரில் நடந்த மரண செய்தியை கூறிய அதே வேகத்தில் சீரியலில் வரும் கதா பாத்திரத்தின் மரணத்தையும் சொல்ல அந்த கணவர் சீரியலில் வரும் கதா பாத்திரதிறக்கும் சேர்த்து அல்லாஹ் விடத்தில் துஆ செய் என்று தமாஷாக சொன்னதாக அறிய முடிகிறது. இதில் இருந்தே நமது ஊர் தாய்மார்களின் சீரியல் பற்றை??? உணர முடிகிறது!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:சீரியல் கில்லர்!...
posted by: Abdul Kader S.H. (Jeddah) on 26 April 2012
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20742

நல்ல பல ஆழமான சிந்தனையோட்டத்தை இங்கே அள்ளித் தெளித்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். . அவரின் ஆதங்கம் உண்மையானதே! நம் ஊரின் அனைத்து இல்லங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி பெரும் தொல்லைகாட்சியாகவே இருந்து வருகிறது. நன்மை பயக்கும் நல்ல விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை மாறாக ஓயாத சீரியல் படம் பாட்டு இவைகளில்தான் ஆர்வம் ஊற்றெடுக்கிறது.

"சீரழிய சினிமாவை பாருங்கள்" என்ற தலைப்பிலே பெருந்தகை மர்ஹும் எஸ்.எம்.ஐதுருஸ் ஆலிம் மௌலவி பாசில் பாக்கவி அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டார்கள். சினிமாவின் தாகம் நம் ஊரில் இல்லாத அந்த தருணத்திலே வெளியிட்டு பல மேடைகளிலே உபதேசமும் செய்து வந்தார்கள். இன்று பல இல்லங்கள் சினிமா அரங்கமாகவே மாறிவருகிறது. அதுமட்டுமில்லாமல் பெருந்தகை மர்ஹும் செய்யது ஆலிம் முப்தி அவர்கள் பெண்கள் ரோட்டுப்படிகளிலே உட்கார்ந்து அரட்டை அடிப்பதை நேரில் பார்த்து கண்டித்ததை பல முறை கண்டுள்ளேன். அன்னாரின் காலடி (செருப்பு) கட்டையின் ஓசை கேட்டதும் வெகுண்டு ஓடி வீட்டுக்குள் ஒழிந்ததையும் நான் நன்கறிவேன்.

மேலும் பெண்கள் குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது, ஓடக்கரை தாண்டியதும் மரப்பு மேலே சென்றுவிடும், வண்டியில் இருப்பவர் வெளியில் தெரிய திறந்தவாறே பயணம் செய்வதையும் பல மேடையில் வருத்ததுடன் உபதேசம் செய்தார்கள். இன்று இப்படி அறிஉரை கூறும் பெரியவர்கள் எங்கே? அறிஉரை கூறினாலும் அதை ஏற்று நடப்போர் எத்தனை பேர்?

தொலைக்காட்சி முன் தவம் இருப்போர் ஊண் உறக்கம் யாவும் நேரம் தவறி வாழ்கின்றனர். பள்ளிப்பருவத்திலே இசைகேற்ற நடனத்தை பிஞ்சி குழந்தைகளின் மனதில் பயிற்றுவித்து பதிய வைக்கின்றனர். இதனால் காயல் காலசாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடுமோ! என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

கடை வீதியில் தொண்டுகள் தொலைந்து போனது. நம் ஊரின் பஜாரை சரியாக நம் கம்மாக்கள் கண்டதில்லை. இன்றோ பெண்கள் நம் முக்கிய வீதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.

இதற்கெல்லாம் நிச்சயம் சீரியலும் ஒரு பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.

முன்பெல்லாம் சுபுஹு வேளையிலும், மக்ரிப் வேளையிலும், தெரு வீதிகளில் நடந்து செல்லும் போது குரான் ஓதும் சப்தம் வீட்டினுள்ளிருந்து வந்து நம் காதுகளில் விழும். இன்று அது மிகக்குறைவாகவே அறிய முடிகிறது. ஆகையால் சீரியலை சீரியசாக்கி படுக்கவைத்து நாம் இபாதத்தின் நல் வழியில் நடை பயின்று நம் ஊரின் பெருமைகளை கட்டிக்காப்போம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக ஆமின்.

நல்ல சிறந்த தலைப்பில் கட்டுரை வடித்து வலைதளத்திற்கு மெருகூட்டிய அன்பு மைத்துனர் அருமை இளவல் ஹிஜாஸ் மைந்தனுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் கட்டுரைகள். சிந்தட்டும் பேனாவின் மை. (இப்ப எங்கே பேனாவும், மையும் ) தட்டட்டும் உங்கள் கை விரல்கள்... வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
yeshetch...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:சீரியல் கில்லர்!...
posted by: ALS mama (Kayalpatnam) on 27 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20743

அஸ்ஸலாமு அலைக்கும்,

சீரியல் கில்லர்!... எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) சமூக ஆர்வலர். தம்பியின் தொலைகாட்சி தொடர் பார்ப்பது குறித்து கருத்து (இக்காலம் பயினி சீசன் காலம் அதிலிருந்து வரும் புட்டு என்ற ஸ்வீட்டை நியாபகபடுத்துகிறார்) புட்டு புட்டு வைக்கிறார். நான் புட்டு தின்பதில்லை காரணம் ஒரு நோய் தாக்கி உள்ளது. உங்கள் கருத்து புட்டு சுவையாக இருந்தது.

உங்கள் கட்டுரையை படித்த N.S.E மஹ்மூத் காக்கா தொலைக்காட்சி பெட்டி அது சைத்தானின் கருவி என்று வர்ணித்திருக்கிறார். எனது வீட்டில் இன்றுவரை தொலைக்காட்சி பெட்டி, தொலைபேசி, கைபேசி எதுவும் இல்லை. எனது மனைவியும் என்னுடைய கொள்கைக்கு இன்றுவரை ஒத்துப்போவதால் நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹு பெரும் உதவி செய்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ். எலா வசதியும் ஓரளவு அல்லாஹ் தந்திருந்தும் மேற்சொன்ன பொருளை வாங்கி வீட்டில் வைக்க இதுவரை எனது மனம் இடம்தரவில்லை.

சைத்தானின் கருவி தொலைக்காட்சி பெட்டி என்பது எப்போது உண்மையாகிறது என்றால். பாங்கு சொல்லும் போது, ஆடல் பாடல் கோவில் ஆராதனை கொட்டுமேளம் எல்லாமே நமது வீட்டில் நமது பெண்கள் தொழும் பகுதியில் அவைகள் வரும்போது அந்த சப்த அலைகள் வீடு பூராவும், முஸ்லீம் வீடுகளில் வியாபித்திருக்கிறது. நமது முஸ்லீம் வீடுகளில் சைத்தானின் கருவியான தொலைக்காட்சி பெட்டியின் கேடுகள் இவ்வளவு இருக்கும் போது முஸ்லீம் வீடுகளில் பாங்கு சொல்லும் போது அவைகள் மூடப்படாமலும், மூட கரங்கள் போகாமலும் இருந்தால் எந்த அளவு சைத்தானின் ஆதிக்கம் நம் முஸ்லீம் வீட்டிற்க்குள் வந்திருக்கிறது. இதைதான் சைத்தானின் பெட்டி என்று காக்கா கூறி இருக்கலாம்.

எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஓவியர், ஆலோசகர் - ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சி குழு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:சீரியல் கில்லர்!...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 29 April 2012
IP: 119.*.*.* China | Comment Reference Number: 20744

அஸ்ஸலாமு அழைக்கும் ALS மாமா .

தங்களுடைய கருத்தை தற்போதுதான் படிக்க நேர்ந்தது , நீங்கள் இன்னும் ஒரு " புதுமையான பழமைவாதி " யாகத்தான் இருக்கிறீர்கள் . உங்கள் வீட்டில் கைப்பேசி , தொலைபேசி , தொலைகாட்சி இன்றளவும் இல்லை என்கிறீர்கள் . அது உங்களின் மனக்கட்டுப்பாட்டையே பிரதிபலிக்கின்றது . இதையெல்லாம் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதா , வேண்டாமா என்பதெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.

NSE மாமா அவர்களின் கருத்தை நூற்றுக்கு நூறு வரவேற்பவன் நான் . ஆனால் இந்த நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளை சைத்தானின் கருவிகள் என்று வர்ணிப்பது சற்றும் பொருத்தம் இல்லாதது . எதுவொன்றிலும் ஆக்கம் , அழிவு இரண்டுமே உண்டு . நல்லதை எடுத்து , தீயதை வெறுப்போம் .

தம்பி ஹிஜாஸ் மைந்தனையும் , அவருடைய கட்டுரையையும் இந்த கணினி மூலமாகத்தானே நாமெல்லாம் அறிந்தோம் . கணினியின் பயன்களையும் பாதகங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இன்று வரும் செய்தித்தாள்களில் செய்திகளைவிட , ஆபாச விளம்பரங்களைத்தான் அதிகளவில் காண முடிகிறது . அதற்காக செய்தித்தாளே வாங்க மாட்டேன் , படிக்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி ? வானொலியை திறந்தால் முக்கல் , முனகல் பாட்டுக்கள் , வானொலியும் சைத்தான் என்று சொன்னால் , இன்று உலகை உங்களால் புறியவும் , அறியவும் முடியாது .

அரபு நாட்டின் தொலைக்காட்சியில் நாள்பூராவும் நமது புனித மக்காவை காட்டிக்கொண்டிருக்கின்றனர் . கவ்பாவில் நடக்கும் 5 வேலை தொழுகையும் நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர் . நேரில் சென்று கண்டுகளிக்க வசதி இல்லாதவர்கள் , சைத்தான் என்று நீங்கள் வர்ணித்த தொலைக்காட்சியின் மூலம்தான் கண்டுகளிக்கின்றனர் .

K .S . Shuhaib மச்சான் ஒரு கருத்தில் சொன்னதுபோல , போர்வாளை கொடுத்தேன் , போர் செய்ய . ஆனால் புடலங்காயை நறுக்கினால் அது யார் மீது குற்றம் ?

ஆக எதுவொன்றிலும் , நல்லது , கெட்டது இருக்கும் . நல்லதை மட்டுமே எடுப்போமே .

இவ்வளவு மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கும் நீங்கள் , கணினியின் மூலமாகத்தானே உங்கள் என்னத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள் . கணினி பெரிய சைத்தான் ஆயிற்றே ? அதற்காக , உங்கள் எண்ணங்களை " ஓலைசுவடியில் " எழுதி அனுப்புவீர்களா ?

அப்புறம் மாமா , உங்களுக்கு சுகர் வியாதி இருப்பினும் , நீங்கள் பதநீர் சாப்பிடலாம் . மருத்துவரிடம் கேளுங்கள் .

மாமா நீண்ட ஆயுளுடன் இருக்க நாம் அனைவரும் அல்லாஹ்வை வேண்டுவோமாக .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:சீரியல் கில்லர்!...
posted by: Rabiya Shuaib (Kayalpatinam) on 29 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20745

அருமையான மற்றும் உண்மையைச் சொல்லும் கட்டுரை! இன்றைய இளம் பெண்கள் எல்லோரும் மக்ரிப் தொழுது முடித்ததும் சீரியல் மற்றும் ரியாலிடி ஷோ பார்க்க தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுகின்றனர். அதன் பின் இஷா தொழுவதற்க்கு இரவு பதினோரு மணி ஆகி விடுகின்றது. இன்னும் சில பெண்கள் தொழாமலே தன் நேரங்களை எல்லாம் தொலைக்காட்சியிலே கடத்தி விடுகின்றனர். கட்டுரையாளரின் உண்மையான கருத்துக்கள் நிச்சியமாக ஒரு சில பெண்களையாவது மாற்றும்.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:சீரியல் கில்லர்!...
posted by: N.T.Mohamed Ismail Buhari (kayalpatnam.) on 01 May 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20746

அருமைச் சகோதரர் ஹிஜாஸ்மைந்தன் எழுதிய இக் கட்டுரை உண்மையான கருத்துக்களை பிரதிபலிப்பதாக உள்ளது. சமூகத்தில் வேரூன்றி இருக்கும் விபரீதங்களை மெல்ல சாடி இருக்கின்றார். இன்று நம் தாய்மார்கள் பெரியவர்கள் பெரும்பாலானோர் டி.வி.சீரியலில் மூழ்கி காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்து வ்ருகின்றார்கள் என்பது உண்மை. இபாதத்துகள் செய்யும் நேரம் வெகுவாக குறந்து சீரியல் பார்க்கும் நேரம் அதிகரித்துள்ளது.

சில நண்பர்கள் நவீன கால கண்டுபிடிப்புகளை ஏன் தடுக்க வேண்டும்? கணினியின் பயன்பாடு தேவைதனே? பழமை வாதம்,புதுமை வாதம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். நம் வீட்டு சலையல் அறையில் கூர்மையான கத்தி உள்ளது. நம் பிள்ளை அங்கு செல்லும் போது அது கத்தி கையை அறுத்து விடும் கவனமாக இரு என்று நாம் சொல்லுவது பழமை வாதம் ஆகாது.

அதற்காக நாம் கத்தியை கையாளாமல் தவிர்த்து விட இயலாது. எனவே டி.வி. கணினி,செல்போன் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் அப்படிதான். நாம் கையாளும் விதத்தில் தான் அதன் பயன்பாடுகள் அமையும். அல்லாஹ் நம் சமுதாயத்தை அதன் தீமைகளில் இருந்து பாதுகாப்பானாக. ஆமீன்.

சகோதரர் ஹிஜாஸ்மைந்தன்அவர்களின் நல்ல கட்டுரைகள் இன்னும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வர வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved