Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:41:05 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 36
#KOTWEM36
Increase Font Size Decrease Font Size
புதன், மே 16, 2012
ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-3)

இந்த பக்கம் 2437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு படித்து, பார்த்து - எந்த கொள்கையையும், பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.


ஒலிபெருக்கிகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து ஒலிப்பதினால் பல விதமான பாதிப்புகள் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் ஏற்படுகிறது என்பதை மறைக்கவும் முடியாது - மறுக்கவும் முடியாது. ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன், இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் ஒருவருடன் மற்றவர் சாதாரணமாக பேச முடிவதில்லை என்பது மட்டுமல்லாது அவசர, அவசியமாக போன் பேச வேண்டும் என்றால் கூட பேச முடியுமா? இல்லை அவசியமான, அவசரமான போன் வந்தால் பேச முடிகிறதா ?.

வீட்டின் உள்ளே இருப்பவர்கள், ஒலிபெருக்கிகள் சத்தமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது போன் பேசவேண்டும் என்றால் வெளியில் சென்றா பேச முடியும் ? - அப்படி பேச வேண்டும் என்றாலும்கூட அரை மைல் தூரம் சென்றுதான் பேச முடியும் என்ற நிலை உள்ளது - மொபைல் அல்லாமல் லேண்ட் லைனில் பேச வேண்டியதாக இருந்தால் என்ன செய்வது?. ஒலிபெருக்கியின் சத்தம் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த சிரமம் ஏற்படுகிறது என்பதை நிகழ்ச்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.



மேலும் ஒலிபெருக்கியின் உச்சநிலை சத்தத்தினால், இரைச்சலினால் மனிதன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறான் . அதன் காரணமாக அவனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சில அசம்பாவிதங்கள்கூட ஏற்படுகிறது / ஏற்பட்டிருக்கிறது.



வெளியூர்களில் ஒலிபெருக்கியினால் ஏற்படும் பாதிப்பை நம்மால் கணக்கிடமுடியவில்லை என்பது வேறு - ஆனால் நம் ஊருக்குள் எவ்வளவு பாதிப்புகள் இருக்கிறது என்பதை நாம் உணராமல் இருப்பது தவறு.



விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் - நம் ஊரிலே வழமையாக ஒவ்வொரு வருடமும் ஒலிபெருக்கி வைத்து அதிகமான சத்தத்துடன் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நினைவில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் தெரியும். அங்கே குறிப்பிடப்பட்ட சில ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளாக இருப்பார்கள். காரணம் சில குறிப்பிட்ட மாதம் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு ஒலிபெருக்கியின் தாக்கம் ஏற்படுவதால்தான் மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கிறது என்பதை அறியலாம். இந்த உண்மையை உணர்ந்தீர்களானால் நிச்சயமாக ஒலிபெருக்கியே வைக்க மாட்டீர்கள் - அந்த அளவுக்கு பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது.



வல்ல இறைவனால் அருளப்பட்ட நம் மார்க்கம் மிகவும் மென்மையான , மேன்மையான மார்க்கம் அதிலே எவருக்கும் எந்த ஒரு கஷ்டத்தையும் இறைவன் ஏற்படுத்தவில்லை - மாறாக அதை முறையாக பின் பற்றாத மனிதன்தான் தனக்குத்தானே கஷ்டத்தையும் , நஷ்டத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறான் - இதை மனிதன் உணர்ந்தால் கஷ்டமுமில்லை, நஷ்டமுமில்லை.

மார்க்கத்திலே தொழுகையைவிட சிறந்த அமல் இல்லை - அந்த தொழுகையை கூட நின்று தொழ முடியாதவருக்கு உட்கார்ந்து தொழவும் அதற்கும் இயலாதவருக்கு படுத்துக்கொண்டு சைகையின் மூலம் தொழவும் அனுமதிக்கின்ற இறைவன் , மார்க்க நிகழ்ச்சிகளையும் , உபநியாசங்களையும் நடத்த ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைவாக வைத்தால் ஏற்றுக்கொள்ளவா மாட்டான் என்பதை சிந்திக்க வேண்டும்.

மார்க்க நிகழ்ச்சிகளாகட்டும் , உபநியாசங்களாகட்டும் அதன் மூலம் எவர் ஒருவருக்கும் இடைஞ்சல் ஏற்படக்கூடாது - அது மனிதருக்கு என்றில்லை ஒரு மிருகத்திற்கோ அல்லது ஒரு பறவைக்கோ கூட இடையூறு ஏற்படக்கூடாது - அப்படி இடையூறு ஏற்படுமானால் நிச்சயமாக அந்நிகழ்ச்சிக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது என்பதை மக்கள் உணர வேண்டும்.

நம்மிடையே எவ்வளவுதான் ஒற்றுமைக் குறைவுகள் இருந்தாலும் பிற ஊர்களை ஒப்பிடும்போது நாம் மேலானவர்களாகவே தெரிகிறோம் - அப்படியிருக்க நாம் ஏன் சிந்தித்து செயல்படக்கூடாது, ஒலிபெருக்கியின் சத்தத்தால்தான் இத்தனை கெடுதல்களும் வருகிறது என்பதை அறிந்திருந்தும் நாம் ஏன் அதற்கு மாற்று வழியை ஏற்பாடு செய்யாமல் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

ஒன்று மட்டும் தெளிவாகிறது , இந்த ஒலிபெருக்கியின் தொல்லைகளுக்கு மூலக்காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தலைமைகளோ அல்லது ஆலிம்களோ அல்ல. ஏற்பாட்டாளர்களில் உள்ள சில ஆர்வக்கோளாறு உள்ளவர்களும் , அரைகுறை ஞானமுள்ளவர்களும்தான் என்பது - இதில் கொள்கை வித்தியாசமில்லை அத்தனைக் கொள்கையில் உள்ளவர்களும் சமம்தான்.

தலைமைகள் , நிகழ்ச்சிகளை எப்போதும்போல் தொய்வின்றி சிறப்பாக நடத்த வேண்டும் என்ற செண்டிமென்டின் காரணமாக ஆர்வமுள்ள மக்களின் பொறுப்பில் விடுகிறார்கள். அவர்களோ ஆர்வத்தின் காரணமாகவும் அரைகுறை ஞானமுள்ளவர்களாக இருப்பதாலும்தான் " ஒலிமாசு " உண்டாகிறதை பற்றி கவலைப்படுவதில்லை / சிந்திப்பதில்லை.

ஆலிம்களும் , அறிஞர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து அலுத்துப்போய் விட்டார்கள் - அவர்களை குறைக் கூறுவதற்கில்லை. ஆகவே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தலைமைகள்தான் ஒலிபெருக்கி விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி , மக்களையும் மற்றவர்களையும் பாதிக்காத வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

எவர் ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை தொடங்கி வைக்கிறாரோ அது அவருக்கும் , அதற்கு உதவி ஒத்தாசை செய்தவர்களுக்கும் கியாமநாள் வரை அதன் மூலம் பயனடைந்தவர்களின் கூலி கிடைக்குமோ - அது போல் ஒலிபெருக்கியின் அதிக சத்தத்தால் கியாமநாள் வரை பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகள் அத்தனைக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை மறந்திட வேண்டாம்.

ஒலியின் அளவு கூடும்போது மனிதர்களுக்கு மட்டும் என்றில்லை மிருகங்களுக்கும் கூட கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இதனால்தானோ என்னவோ சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் கூட அழிந்து வருகின்றன. சிலர் கூறுவர் சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் " மொபைல் டவர் " என்று, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் சவுதி அரேபியாவில் இருக்கும் காலத்தில் எங்கள் வீட்டை சுற்றிலும் பல மொபைல் டவர்கள் இருந்த போதிலும் சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டு காம்பௌண்டுக்குள் நிற்கும் - புறாக்களும் கணிசமான அளவில் வந்து செல்லும் ஆகவே மொபைல் டவர் மட்டும்தான் சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணமில்லை - " ஒலிமாசு " அடைவதே காரணம் எனலாம்.

இன்று நம் ஊரிலே இதய நோய் பாதிப்புகள் உள்ள மக்கள் வசிக்கும் வீடுகளை அல்லது அவர்கள் பணி புரியும் இடங்களை உற்று நோக்குங்கள் கண்டிப்பாக அங்கே " ஒலிமாசு " அடைந்திருக்கும். அவ்விடங்கள் ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களாகவே இருக்கும். இதனால்தானோ என்னவோ இன்று பைபாஸ் சர்ஜரி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் நரம்பு தளர்ச்சி , நரம்பு தளர்ச்சி என்று பலருக்கு அதிலும் மிகுதமாக பெண்களுக்கு ஏற்படுகிறதே அதற்கும் ஒலிமாசு முக்கிய காரணமாகிறது. வீட்டிலே டிவி' யை மிக அதிகமான சத்தத்தில் வைப்பதினாலும், அதன் இடர்பாடுகளினாலும் - ஒலிபெருக்கியின் அதிக சத்தத்தினாலும், அதன் இடர்பாடுகளினாலும் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வீடு கட்டுமான பணிகள் இரவு , பகலாக நடைபெறுகிறது அதிலே அதிர்ச்சியையும், அதிக சத்தங்களையும் தரக்கூடிய மெஷின்களை உபயோகிக்கிறார்கள் அதனால் ஒலிமாசு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஆசாரிவேலைகள் , மார்பிள் , டைல்ஸ் இவைகளை அறுப்பதற்காக மெஷின்களை உபயோகப்படுத்தும்போது அதிகமான சத்தம் தொடராக வரும் இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு ( கட்டிடம் கட்டுபவர்களின் வீடாக இருந்தாலும் சரி ) பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகையால் மெஷின்களை கொண்டு செய்யும் வேலைகளை இரவு நேரத்தில் செய்யாமல் , பகலிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் - அதன் மூலம் ஒலிமாசு அதிகம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

" ஒலிமாசு " என்பது பல வகையிலும் , பல வழியிலும் ஏற்பட்டு மக்களை பாதித்தாலும் கூட நம்ம ஊரைப் பொறுத்தவரை அதிகமான பாதிப்பு என்பது ஒலிபெருக்கியின் மூலமே ஏற்படுகிறது என்பதை உணர்ந்ததால் ஒலிபெருக்கியை மையமாக வைத்தே பாதிப்புகளை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

இந்த கட்டுரைகள் வெளியாவதற்கு முன்பே அதாவது சென்ற மாதமும், அதற்கு முந்தைய மாதமும் நமதூரில் நடத்தப்பட்ட மார்க்க சம்பந்தமான 2 நிகழ்ச்சிகளிலும், மார்க்க உபநியாசம் ஒன்றிலும் மக்களை பாதிக்காத வண்ணம் ஒலியின் அளவை குறைத்து வைத்து " ஒலி மாசு " ஏற்படாதவாறு நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நடத்தினார்கள் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்திய வருடங்களிலெல்லாம் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்தவர்கள் இந்த வருடம் சத்தம் குறைவாக வைத்ததன் காரணம் ஒலிபெருக்கியினால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நிகழ்ச்சியாளர்கள் உணர்ந்து இருப்பதே ஆகும்.

ஆகையால் இன்றுமுதல் நாம் அனைவருமே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒலிமாசு ஏற்படாவண்ணம் ஒலிபெருக்கியை உபயோகிக்க சபதம் ஏற்போமாக - வல்ல அல்லாஹ்! அதற்கு அருள் செய்து மக்கள் அனைவரையும் நோய் நொடிகளிலிருந்தும் , குறைபாடுகளிளிருந்தும் காப்பாற்றுவானாக ஆமீன்.

வேண்டுகோள் :

இந்த கட்டுரையை மக்கள் அனைவரும் குறிப்பாக ஒலிபெருக்கியை உபயோகபடுத்துபவர்கள் அனைவரும் படிப்பார்களா? அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா? என்பது தெரியாது.

ஆகையால் இந்த கட்டுரையை படிக்கும் அனைத்து சகோதரர்களும் அவரவர் பகுதிகளிலே எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒலிபெருக்கியை வைத்து நடத்தினால் அவர்களுக்கு தயவு செய்து ஒலிபெருக்கியினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சொல்லி " ஒலிமாசு " ஏற்படாதவாறு நிகழ்ச்சிகளை நடத்தி நம் மக்களையும் , வருங்கால சந்ததியினர்களையும் பாதுகாக்க முயலுமாறு கேட்டுக்கொள்கிறேன். - கட்டுரை ஆசிரியர்.
[முற்றும்]

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: rabiya (kayalpatnam) on 16 May 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20766

masha allah super essay continue ur essays.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) on 16 May 2012
IP: 37.*.*.* | Comment Reference Number: 20767

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த கட்டுரையை படிப்பவர்கள் யாவர்களும் கண்டிப்பாக இதை நிச்சயம் உணர்ந்து நம் ஊர் மக்கள் ஒலிபெருக்கியின் செயல் பாட்டை தவிர்ப்பது ரொம்ப அவசியம். இந்த கட்டுரையின் படைபாலி அவர்களின் கோரிக்கையை மற்றவர்களிடம் தெரிவிப்பது தான் சரியானது. நல்ல அருமையான கட்டுரை.

நம் ஊர் வருங்கால சந்ததியினர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொரு நபர்களின் கடமை. நல்ல அருமையான கட்டுரை தந்த ஆசிரியர் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: vilack Noor mohamed (Dubai) on 16 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20769

எனது அருமை நண்பர் NSE பலரின் மனதில் உள்ள கருத்துக்களை முன்மொழிந்து இருக்கிறார் , நிச்சயமாக இந்த கட்டுரையின் மூலம் படிப்பினை பெற்று செயல் வடிவம் கொடுத்து நமக்கு நாமே ஒலி மாசு கட்டுபடுத்த வேண்டும். அதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாக ஆமீன்.

vilack Noor Mohamed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: M Sajith (DUBAI) on 17 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20770

தெருக்களில் பரவலாக நடைபெறும் நிகழ்ச்சிகளை (திருமணம், நினைவுவிழாக்கள் இன்னும் கட்சிக்கூட்டங்கள்) இவைகள் அனைத்தையுமே படிப்படியாக உள்அரங்கங்களில் மாற்ற முயற்சி செய்தாலே இந்த ஒலிமாசு பெருமளவில் குறைந்துவிடும்.

அவசியம் உள்ளவர்கள் கலந்தது பயனடைவர், மற்றவருக்கு தொந்தரவும் இருக்காது.

வீட்டில் இருந்தபடி கேட்கவும், பார்க்கவும் இன்று காயலில் எல்லா தரப்பினருக்கும் கேபிள் சானல்கள் உள்ள நிலையில், வளைத்து வளைத்து ஒலிபெருக்கி கட்டுவதில் பிடிவாதம் தவிர வேறு காரணம் இருக்க இயலாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: rilwan (Jubail, K.S.A.) on 17 May 2012
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20771

எவ்வித முன்முடிவுகளுமின்றி சிந்தனை உழைப்பு மற்றும் அதிர்ச்சி தரும் நடைமுறை புள்ளிவிபரங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை கானல் நீரா? அல்லது மினரல் வாட்டரா? என்பதை தீர்மானிப்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நடத்தும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களின் பரந்த/குறுகிய கண்ணோட்டத்தில், புரிதலில், ஒத்துழைப்பில், முயற்சியில்தான் இருக்கிறது.

தனது சிந்தனை ஓட்டங்களை ஒவ்வொரு பதிவிலும் தெளிவாக எழுதிவரும் கட்டுரையாளர், வழமைக்கு மாற்றமாக இக்கட்டுரையின் சில இடங்களில் கவனக்குறைவுக்கு இடம் கொடுத்திருப்பது வியப்பளிக்கிறது. அது கட்டுரையின் கருவை சிதைத்துவிடாது என்றாலும் ஆசிரியர் சொல்ல வரும் செய்தியை வாசகர்கள் தவறாக புரிந்துகொள்ள முகாந்திரம் இருப்பதால் அதனை உரிமையோடு விமர்சிப்பதை, இல்லையில்லை, எடுத்து விளக்குவதை கடமையாகவும் கருதுகிறேன். அதாவது, கட்டுரையிலிருந்து....

<>நம் ஊரிலே வழமையாக ஒவ்வொரு வருடமும் ஒலிபெருக்கி வைத்து அதிகமான சத்தத்துடன் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நினைவில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் தெரியும். அங்கே குறிப்பிடப்பட்ட சில ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளாக இருப்பார்கள்<>

[அந்த ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய ‘சில’ குழந்தைகள் என்று சொல்ல வருவதை சரியான வார்த்தை உபயோகம் செய்து தெளிவுபடுத்தியிருக்கலாம்.]

<>இன்று நம் ஊரிலே இதய நோய் பாதிப்புகள் உள்ள மக்கள் வசிக்கும் வீடுகளை அல்லது அவர்கள் பணி புரியும் இடங்களை உற்று நோக்குங்கள் கண்டிப்பாக அங்கே " ஒலிமாசு " அடைந்திருக்கும். அவ்விடங்கள் ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களாகவே இருக்கும். இதனால்தானோ என்னவோ இன்று பைபாஸ் சர்ஜரி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது<>

[ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களில் வசிக்கும் / பணிபுரியும் மக்களுக்கு மட்டுமே இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் என்கிற அர்த்தத்தில் புரிந்துகொள்ள முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதால் கட்டுரையாளர் சற்று தெளிவாக அவ்வாக்கியங்களை அமைத்திருக்கலாம்.]

<>சிலர் கூறுவர் சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் " மொபைல் டவர் " என்று, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் சவுதி அரேபியாவில் இருக்கும் காலத்தில் எங்கள் வீட்டை சுற்றிலும் பல மொபைல் டவர்கள் இருந்த போதிலும் சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டு காம்பௌண்டுக்குள் நிற்கும் - புறாக்களும் கணிசமான அளவில் வந்து செல்லும் ஆகவே மொபைல் டவர் மட்டும்தான் சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணமில்லை<>

[சிட்டுக்குருவிகள் அழிவதற்கு " மொபைல் டவர் " மட்டும் காரணம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததற்கு கட்டுரையாளர் எடுத்துக்காட்டும் மேற்படி உதாரணம் பொருத்தமற்றதாக இருப்பதால் அதனை தவிர்த்துவிட்டு வேறேதும் உதாரணத்தை பதிவு செய்திருக்கலாம்.]

குறிப்பு: எதுவா ஈந்தாலும் பேசி தீர்த்திக்கலாமேடா... வூட்டுக்கு வா, ஒனக்கு வச்சிகிர்ரேன். அப்டீன்னு நீங்க நெனைக்க மாட்டியோண்டு தெரியும் வாப்பா….

ரிழ்வான்,
(S/o. கட்டுரை ஆசிரியர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244) on 19 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20772

ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-3)
ஆசிரியர்: N.S.E..மஹ்மூது
சமூக பார்வையாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்ஹம்து லில்லாஹ் .kayalpatnam.com ல் புதன், மே 16, 2012 அன்று வந்த கட்டுரையுடன் இந்த தலைப்பில் வந்த மூன்று கட்டுரைகளுமே மிக விலை மதிக்க முடியாத ஆணி முத்து போன்றவையே! சென்ற 30௦/40 வருடங்களாகவே என்முதல் பல பெரியோர்களும் முயன்றும் முடியாத ஒரு (வெளி நாட்டினர்கள் எல்லோரும் கூட) அருவருக்க கூடிய இந்த ஈமானையும் ,பாதிக்க கூடிய ஒரு பாவச்செயல் என்றால் அது மிகை ஆகாது.

இந்த ஒலிமாசு (லவ்ட் ஸ்பீக்கெர்) ஆகிய மார்க்க சடங்கு என்னும அமல் களினால் அதில் கூறப்பட்ட பவச்செயல் களுக்கு காரணம் ? ? ? நமது ஈமானின் தரம் மிகவே குறைவாக இருக்குதா இல்லையா என்பதை யோசித்துப் பார்த்தால் இலகுவாகவே தெரியும். . இதற்கென ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் போட்டால்தான் விரிவாகப் பேசலாம்.. எழுபது வருடங்களுக்கு (1943ல் இருந்து) முன்னால் உள்ள உலமாக்களை ஏமாற்றி மார்க்க நிகழ்ச்சிகளில் உட் புகுத்தப்பட்ட முறையான அனுகுமுறை கூட தெரியாது அரங்கேற்றப்படுக் கொண்டிருக்கும் இந்த ஸுகர் கோட்டட் பாய்ஸன் –ஸைலண்ட் கில்லர் என்று ஈ என் ட்டீ டாக்டர்களும் கூறியும் மார்க்க அறிஞர்கள் வாழும் காயலிலுமா இந்த வேதனை என்று அழுதும், தொழுதும் இஸ்த்திங்ஃபாறும் தவ்பாவும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். அல்லாஹ் தான் நமக்கு ஹிதாயத் கொடுக்கணும். அல்லது நம்மை தண்டிக்கிறானா என்று யோசிப்போ.மாக !

நாம் அறிந்தவரை இந்த ஒலிமாசுவை எதிர்த்து பிரச்சாரம் செய்த நம் முன்னோர்களான் நஹ்வி செய்யித் அஹ்மது ஆலிம் அவர்கள்,மு.க. செய்யிது இப்றாஹிம் ஆலிம் அவர்கள், மஹ்மூது ஸுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள்.செய்ஃக் அப்துல் காதிர் ஸூஃபி ஹழரத் ஆலிம் அவர்கள் றழி-அன்ஹும் இன்னோர்களுக்கு அல்லாஹுத்த ஆலா மேலான நற்கூலியை அருள்வானாகவும்.

எனினும் ஒரு சுபச் செய்தி என்னவெனில் சமீபத்தில் புதுப்பள்ளியில் ஒரு மவ்லூது நிகழ்ச்சியில் ஒலிபெருக்கியினை ஒரு வறயீ (பேனுதல் உள்ளவர்).இளம் ஒலி அவர்கள் தடை செய்து விட்டார்கள் என்பதும் ஒரு திக்று மஜலிஸில் ஒலிபெருக்கி வைத்ததனால் திக்று செய்யாமல் நமது ஷெய்கப்துல் காதிர் ஸூஃபி(றஹ்)அவர்கள் மறுத்து விட்டார்கள் எனபதும் வரலாற்றுசெய்தி. இதுபோல் மைக் வைத்து லவ்ட் ஸ்பீக்கர் (குழாய் ஸ்பீக்கர்) வைத்தால் நாங்கள் வஃழு மஜ்லிஸ் நடத்தமாட்டோம் என்று ம்ற்ற உலமாக்களும் செயல் படலாமல்லவா?ஒரு லவ்ட் ஸ்பீக்கருக்கு பதில் 3,4 எண்ணிக்கையில் ஓம்ஸ் பவர் கள் குறைந்த பாக்ஸ் ஸ்பீக்கர்களை நூற்றுக்கணக்கில் கூட உபயோகம் பண்ண லாமே!!!! ஹறம் ஷரீஃபை பாருங்கள் அதன் படி நடப்போமாக!.

யா அல்லாஹ் எங்களுக்கு இந்த விஷயங்களீல் உடனடி ஹிதாயத்தும் நிம்மதியான வாழ்வையும் தந்தருள்வாயாக. எந்த அதாபையும் கொண்டு குறிப்பாக இந்த லவ்ட் ஸ்பீக்கரை கொண்டு தண்டிக்காதே .இந்த வேண்டுதலை நம்முரில் அடங்கிய ஒலிமார்களின் பொருட்டாலும், ஸாலிஹான எல்லா மக்களின் பொருட்டாலும் கபூல் செய்து .காப்பாற்றுவாயாக் ஆமீன்

தகவல்
தைக்கா. றஹ்மத்துல்லாஹ் .
59-தீவுத்தெரு, கயல்பட்டணம்..
போன் 280852. 17-5-2012 வியாழன் 25-6-1433


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved