Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:21:37 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 41
#KOTWEM41
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 8, 2012
கவனக்குறைவால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் (பாகம் 3)!

இந்த பக்கம் 2904 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகளாவிய வாழும் இணையதள நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மூன்றாம் பாகம் சற்று கால தாமதம் ஆவதற்கு காரணம் பொறுப்பற்ற நிலையல்ல, விமான பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து வெளிநாட்டு பயணங்களை தொடர்கின்றவர்களிடம் தகவல் கேட்டேன், இதுவரை ஊரில் யாரும் தரவில்லை. அவர்களின் நேரமின்மையால் எனது கட்டுரை சுனங்கி எழுத வேண்டியதாகிவிட்டது. இத்தொடரில் புகைரதம்(ரயில்), பேருந்து(பஸ்), வாகனம்(2 முதல் நான்கு சக்கரவண்டி), பறவக்கப்பல்(விமானம்) குறித்து எழுதி காட்ட முன்வந்துள்ளேன்.

புகைரதம் (ரயில்) பயணம்:

நான் சென்னைக்கு பயணம் செய்து 2007 வரை 50 வருடங்கள் பூர்த்தியானது. அதிகநாள் ரயில் பயணம், அடுத்து அரசு பேருந்தில் பயணம் தொடர்ந்திருக்கிறேன். ரயில் பயணம் சுகமானது, ஆனால் பலதரப்பட்ட ஊர்மக்கள் பலகுனம் படைத்தவர்கள். டிப்டாப் கில்லாடிகள் பயணம் செய்வார்கள். பேச்சில் இனிமை இருக்கும் ஏமாந்தால், நாம் கொண்டுசெல்லும் உடமைகள் காணாமல் போய்விடும். திட்டமிட்டு திருட வருபவர்களை காண்பது அரிது. ரயில் பயணத்தில் நம்மை சுற்றி ஐந்து பேர் அமர்ந்து இருப்பார்கள்,ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறை சார்ந்தவர்களாக பல்வேறு தொழில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். வலியவந்து பேச்சு கொடுத்தால் அவரை புரிந்துகொண்டு பேச்சை கட்பன்னுவது புத்திசாலித்தனம். ரயிலில் தனித்து பயணம் செய்தால் நமது பெட்டிகளுக்கு நீண்ட சங்கிலி போட்டு பூட்டி வைக்கனும். மேல்நாட்டு நல்ல பூட்டாக இருக்கனும். நம் நாட்டு பூட்டுகளுக்கு கள்ளசாவி தயாரித்து வைத்து ரயிலில் பயணம் செய்யும் கும்பல் நிறைந்து காலம். சமீபத்தில் ஒரு ஒரு பள்ளி மாணவனை போலீசார் சந்தேகத்தில் பிடித்து இசாரித்தால் அந்த பையன் பூட்டுகளுக்கு பலவித கம்பிகள் மூலம் பூட்டை திறக்கும் மாஸ்டர் பைக், கார், வீடுகளில் தொங்கும் பூட்டு பீரோ என்று பலவித சாவி கிடையாது சாதாரண கம்பியை வைத்து திருகி பூட்டை திறக்கும் திறமைசாலி இப்படி பட்டவனும் தமிழ் நாட்டில் கள்ளர்களுடன் தொடர்பு வைத்ததாக தெரிகிறது. இவன் வீட்டிற்கு அடங்காமல் காணாமல் போன சிறுவன் தானாம்.

ரயிலிலோ,....... பஸ்ஸிலோ கவனம்:

ரயிலிலோ....பஸ்ஸிலோ பிஸ்கட், மிகஷர், ஜூஸ் தந்தால் அன்போடு வாங்கி சாப்பிட்ட காலம் மலை ஏறிவிட்டது. ரயில் பயண அன்பு - வம்பில் மாட்டிவைக்கிறது. ரயிலில் பாசத்தோடு தந்த பிஸ்கட் தூக்கத்தில் போட்டு உடமை பறிகொடுத்து கடைசியில் துக்கத்தில் தள்ளிவிடுகிறது. ரயிலில் உள்ள அறிவிப்புகளில்- பயணம் செய்பவர்களுக்கு பிஸ்கட் கொடுக்காதீர்கள் நீங்களும் யார்தந்தாலும் வாங்கி சாப்பிடாதீர்கள் என்று போடு எழுதி உள்ளது. ரயிலில் சக பயணிகளுக்கு உதவி செய்தோமா அத்துடன் நிறுத்திகொள்ளுங்கள். அவர்களை முழுமையாக நம்பிவிட்டால் - அதேகதிதான். லட்சத்தில் ஒரு நபர் நல்லவராக இருக்கலாம். ரயில் பயணத்தில் இக்காலத்தில் யாருடனும் பேசாமல் பிரயாணம் செய்வதே சாலச்சிறந்தது. ஒரு நல்ல நூலை கொண்டு போங்க அதை படித்துக்கொண்டே உலகத்தை அறியலாம் அல்லது தமிழில் திருக்குர்ஆன் தர்ஜுமா படித்து தெரிந்துகொள்ளாம். அதேசமயம் உடமைகளில் கவனம் இருப்பது நல்லது, நமது கவம் சிதறும் போது திருடன் உஷார் ஆகிவிடுவான்.

நடைமேடை (பிளாட்பாரம்) ஓர் கவனம்:

திருசெந்தூரில் இருந்து நமதூர் மார்க்கமாக சென்னை செல்லும் ரயில் பலகாலம் மீட்டர் கேஜ் (சின்ன இருப்புபாதை) ஆகா இருந்தது. சமீபகாலமாக பிராட் கேஜ் பாதைக்கு மாறி உள்ளதால் ரயில் நிற்கும் போது ரயிலில் ஏறும் போது ரயிலின் நுழைவு வாயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையில் அரை அடி இடைவெளி பள்ளமாக உள்ளது. இதை கவனத்து காலை கொஞ்சம் பார்த்து அகலமாக வைக்கனும். ரயிலில் பயணம் செய்யும் புதிய நபர் இந்த இடைவெளி பள்ளத்தில் தெரியாமல் காலை விட்டு அவதிப்பட்ட பெரியவர்களும் உண்டு. மக்கள் சவுகரியத்திற்காக ரயில்வே அதிகாரிகள் எதையும் செய்யாமல் கண்டுகொள்வதில்லை. அரசு இந்த குறையை தீர்க்க மக்களுக்கு நன்மை செய்ய அல்லது ரயில் பயணிகளுக்கு உதவிட பலகோடி முதலீட தயாராக இல்லை. ரயில்வே சங்கங்களுக்கு எடுத்து வைத்தால் - போராட்டம் நடத்தினால், நடத்தியவனுக்கும் ஆதரவு கிடைக்காது. நன்மை செய்ய போய் திண்மையில் மாட்டி கொள்ள வேண்டுமா என்று ஒதுங்கி விடும் நபர்களை அன்றாடம் காணுகின்றோம். மீட்டர் கேஜ் பாதையில் பிராட் கேஜ் ரயில் தண்டவாளம் அமைக்கும் போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பிளாட்பாரத்தை உயரத்தில் படிக்கட்டு பக்கம் நெருக்கமாக்கி இருந்தால் மக்கள் இந்த அவதிக்கு தினமும் ஆகமாட்டார்கள்.

ரயில் பயணத்தில் நள்ளிரவில்:

ரயில் பயணத்தின்போது நள்ளிரவில் தனியாக எந்த பெண்ணும் ஆண் துணை இல்லாமல் பாத் ரூம் செல்லக் கூடாது. ஆண் துணையோடு நள்ளிரவில் பெண்கள் பாத் ரூம் போகும் போது வெளியே ஆண்களை நிற்கவைத்து செல்ல வேண்டும். பெங்களூர் லேடி டாக்டரை நள்ளிரவில் ரயிலில் பாத் ரூம் அருகில் கற்பழிக்க முயன்றபோது அவள் போட்ட கூச்சலால் பிரயாணிகள் விளித்து ஓடிவர - கதவை திறந்து கயவன் நள்ளிரவில் ஓடும் ரயிலில் இருந்து ஓடிமறைந்து விட்டான். ரயில்வே பாதுகாவலன் கூட சிலசமையம் நள்ளிரவில் தனியாக பாத் ரூம் செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து இருப்பதாக பத்திரிகை குறிப்பில் கண்டோம்.

பதட்டமான பயணத்தில்:

எப்போது ரிசர்வு செய்து சுகமாக பயணம் செய்பவர்கள் கூட திடீர் பயணத்தால் சீட்கிடைக்காமல் அல்லல்படும் நேரம் டிக்கட் தூர பயணத்திற்காக வாங்கியாகிவிட்டது பெர்த் கிடைக்கலே என்று திகைக்கும் பதட்டமான வேளையில் ஒருவர் எதோ ஒரு டிக்கட்டை தந்து நான் இன்று பயணம் செய்யலே பெர்த் உள்ளது கேன்சல் செய்ய நேரமில்லை நீங்கள் பாதி காசு தந்தால் போதும். இதை பிடியுங்கள் பயணம் செய்யுங்கள் என்று பாதி ரூபாயை மீதிவாங்காமல் ரயிலில் ஏற்றிவிட்டு போய்விடுவார் பெர்த் கிடைத்த உற்சாகம் அப்பாடா எதோ கிடைச்சது என்று திருப்தியோடு ஓடும் ரயிலில் சீட்டின் அமர்ந்த சில நிமிடத்தில் ஓர் பேர் இடி சார் இதே தேதி போனமாச டிக்கட் எனக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டிவிட்டு போங்க என்று சொன்ன டி டி ஆர் உம உண்டு. அவசரத்தை பயன்படுத்தி ஏமாற்றும் எத்தர்கள் கூட்டம் நம் நாட்டில் அதிகம். உழைக்காமல் சம்பாதிக்கணும், யாரையாவது எமற்றனும் எப்படியோ பணம் வந்துவிடணும் என்ற ஒரு குறுகிய ஆசைகொண்ட கயவர்கள் நிறையவே உண்டு.

பெட்டியை மாற்றும் கும்பல்:

ரயில் பயணத்திலும் சரி, பஸ் பயணத்திலும் சரி பெட்டியை மாற்றி எடுத்துபோகும் களவானி கும்பல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் கீழக்கரையை சார்ந்த ஒருவர் பிறை 28 ரமளானில் ஊர் புறப்பட்டு போக பஸ் ஏறினார் பின்தொடர்ந்து கண்காணித்து வந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து போய் அவர்வைத்த அதே பகுதியில்(தனியார் பஸ்ஸில்) திருடும் கும்பல் பெட்டியை வைத்து அவரை அங்கும் இங்கும் நகரவிடாமல் அவரின் பெட்டியை மாற்றி அபேஸ் செய்து மறைந்துவிட்டார்கள். ஊரில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்க பண கவர்கள் 45000 அதில் இருந்திருக்கிறது. பஸ் புறப்பட்டு சிறிது நேரத்தில் பெட்டி மாறி இருப்பதை உணர்ந்து டிரைவரிடம் ரிபோர்ட் செய்தபின் பஸ் நிறுத்தப்படுகிறது. போன பெட்டி போனது தான் இழந்த ரூபாய் இழந்தது தான். திறமைசாலியான கீழக்கரை நபருக்கே இப்படி ஆனதை கேட்கும் போது டிப்டாப் களவாடி கும்பலை காண்பது கஷ்டம் என்கிறார்கள். பஸ் ரயில் பயணத்தில் பிளாட் பாரத்தில் வியாபாரியிடம் மீதி பணத்தை பெற்றி உரிய பொருள்களை வாங்கிய பின் நம் பணம் கொக்க இல்லாவிட்டால் வெளியில் நின்ற வியாபாரி ரயில் பஸ் புறப்படும் வரை பொருளையும் தராமல் பணத்தையும் தரமாட்டான். ரயிலோ பஸ்ஸோ புறப்படும் சமயம், ஓடிவந்து தருவதுபோல நடிப்பான், நமது பணம் இழந்துவிட்டதை நினைப்போம்.

ரயிலில் விற்பனை வியாபாரிகள்:

ரயிலில் கொண்டுவந்து விற்பனை செய்யும் பெட்ஷீட், புடவைகள் ஏற்க்கனவே உபயோகித்ததாக இருக்கும், அல்லது பெரிய லாட்ஜில் போடப்பட்ட பெட்ஷீடாக புதுசு போலா இருக்க செய்து லேபில் ஒட்டி ஏலம் இடும் முறை நடத்துவார்கள். 25 ரூபாய்க்கும் பிரோஜனப்படாத பல்லாண்டு பழையது பார்க்க புதிதாக தெரியும் 100 ரூபாயில் ஆரம்பித்து ரயில் பயணத்திலேயே ஏலம் விடுவான். ஏலம் கேட்பவருக்கு ஒரு சீப்பு அடையாளமாக தருவான் ஏலம் கேக்கும் அனைவரும் அவனின் ஆட்கள்தான் வெளியாள் போல காட்டி கொள்வார்கள், பயந்தவன் பாதி விலை கேட்டமாதிரி போல 250 ருபாய் கேட்டபின் யாரும் கேட்கவில்லை சார் எடுங்க உங்க அதிர்ஷ்டம் பாம்பே டையிங் துணி 650 ருபாய் போகும் நீங்க கொடுத்து வைத்தவங்க என்று நம் தலையில் கட்டி பணத்தை எண்ணி வாங்கிட்டு போடுவார்கள். வீடு சென்று பார்த்தல் பல இடத்தில் டேமேஜ் புரியும் அது லாட்ஜில் படுத்த விபரம் பின்னால் தெரிய வரும். சோதித்து பார்த்தால் எங்கோ ஓர் இடத்தில் வண்ணன் குறி தலையை காட்டும். ரயில் பஸ்ஸில் தங்க சயின்போட்டு கொண்டு ஜன்னல் அருகே அது வெளியே தெரிகிற மாதிரி இருந்தால் ரயில் பஸ் புறப்படும் சமயம் சில களவாடி பயல்கள் தங்க செயினை இழுத்து அறுத்து ஓடி மறைவார்கள். ரயில் பஸ் புறப்படும் சமயம் ஓர் கும்பல் ஏறி மறைந்து நிற்கும் மற்றவர் பெட்டிகளை கடத்துவதில் ஈடு படுவார்கள் இதில் நமது கவனம் அதிகம் தேவையாக இருக்க வேண்டும். அனுபவசாலியை கூட ஏமாற்றும் கும்பல் உண்டு.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

ரயிலிலோ ..........பஸ்சிலோ............. தலைப்பின் கீழ் மூணாவது வரியில் பிஸ்கட் துக்கத்தில் என்பதற்கு பதிலாக "தூ"க்கத்தில் (அதாவது து பதிலாக தூ இருக்க வேண்டும்). ஐந்தாவது வரியில் ரயிலில் உள்ள அறிவிப்பு பதிலாக அரிப்பு என்று இருக்கிறது, இந்த இரு வரிகளில் உள்ள பிழைகளை திருத்தி வாசகர்களுக்கு தர விரும்புகின்றோம்.

ALS மாமா.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நம்மளையும் பலி கிடாவாக்கிட்டானுங்க...மாமா...!!!
posted by: ஹிஜாஸ் மைந்தன். (????? ?????.) on 09 June 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20811

காயல் இப்னு அப்பாஸ் மாமா உங்களது அறிவுரை நிச்சயம் பலன் தரும். இரயிலில் திருடர்கள் இருப்பது சகஜம். ஆனால் ஏர்ப்போர்ட்டுக்குளேயா ஏய்க்கும் எத்தர்கள் இருக்கின்றனரே அவர்களை என்ன செய்ய?

இம் முறை நான் ஊரிலிருந்து மக்காவுக்குப் புறப்பட்டு வந்த போது சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து தான் புறப்பட்டேன். எனது ட்ராலி பேக்கில் சுமார் பதிநான்காயிரம் ரூபாய் மதிப்பிலான என் ஃபேவரேட் சோனி டிஜிட்டல் காமிராவை வைத்திருந்தேன். சரி இந்த பேக்கை ஏன் வீணாகச் சுமக்க வேண்டும்? என அதன் உள்ளே இருந்த எனது லேப்டாப்பை மட்டும் கையில் எடுத்து கொண்டு பூட்டு அதுவும் நீங்க சொன்ன மாதிரி வெளிநாட்டுப் பூட்டு போட்டு ட்ராலி பேக்கை லக்கேட்ஜில் போட்டு விட்டு விமானம் ஏறினேன்.

ஜித்தா வந்து இறங்கியவுடன் லக்கேட்ஜை எடுத்துக் கொண்டு மீண்டும் லேப்டாப்பை அதன் உள்ளே வைப்பதற்காக திறந்தேன்.மடித்து வைத்த சாமான்கள் குலைந்து போயிருந்தது. சரி ஏதோ உருண்டு பிரண்டு வந்திருக்கும் என எண்ணிக்கொண்டு உள்ளே பார்த்த போது பெரும் அதிர்ச்சி! கேமிராவைக் காணவில்லை! தேடினேன்..தேடினேன் பெட்டியின் மூலை முக்கெல்லாம் தேடினேன். பூட்டு பூட்டக இருக்க ஜிப்பை பேனா முனையால் குத்தித் திறந்து கேமிராவை சுட்டு விட்டு மீண்டும் இழுத்து மூடியுள்ளனர். பரிசோதனைக்காக ஸ்கேன் போடுமிடத்தில் தான் படம் காட்டியிருக்கானுங்க!

என்னதான் பூட்டு போட்டாலும் கேவலம் ஒரு இரண்டு ரூபாய் பென்சிலாலெ ஜிப்பைத் திறந்து மூடி விடலாம்.இதை நான் ஃபேஸ் புக்கில் வீடியோவில் பார்த்திருக்கின்றேன். என் கவனக் குறைவால், பாழாப்போன சடவால் விலையுயர்ந்த பொருளை பறிகொடுத்து விட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றேன். பத்து வருடங்களுக்கு முன் இதே ஏர்ப்போர்ட்டில் லக்கேட்ஜில் போட்டிருந்த ட்ராவல் பேக்கில் சுமார் ஐயாயிரம் ரூபாய் மதிப்பிலான என் போலீஸ் சன் கிளாசையும் பறிகொடுத்துள்ளது நினைவுக்கு வருகின்றது.

உஷார்...பயணிகளே...உஷார்...! ஜிப்பு போட்ட எந்த பேக்கும் பாதுகாபில்லை. லக்கேட்ஜில் விலையுயர்ந்த சிறிய பொருட்கள் மற்றும் நகைகளை வைக்க வேண்டாம். திரும்பும் இடமெல்லாம் திருடர்கள் தான். இனி “திருடர்கள் ஜாக்கிரதை” ன்னு ஒரு கட்டுரை எழுதனும்...பாவிகளா...ஏர்ப்போர்டிலேயுமா...? நாடு வெளங்கின மாதிரி தான்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கவனக்குறைவால் ஏற்படும் கஷ...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????) on 09 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20812

தெளிவு இல்லா மக்களை தெளிவு பெற மிக தெளிவாக தெளிவு படுத்திய A L S மாமாவுக்கு வாழ்த்துக்கள்...

A L S மாமா அவர்கள் கட்டுரைகள் அதிகம் வெளி வரவேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கவனக்குறைவால் ஏற்படும் கஷ...
posted by: Raiz (Sydney) on 20 June 2012
IP: 211.*.*.* Australia | Comment Reference Number: 20814

அருமையான அறியுரைகள் ALS மாமா ! பட்டா தான் திருந்துவர் பல பேரு ! ஆனால், அறியுவுரை மற்றும் அனுபவத்தை சொன்னாலே அறியும், திருந்தும் சில பேருக்காக அமைந்த அழகான கட்டுரை! தொடரட்டும் உங்கள் நற்பணி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கவனக்குறைவால் ஏற்படும் கஷ...
posted by: hylee (kayalpatnam) on 27 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20815

அருமையான நல்ல உபயோகமான கட்டுரை வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved