Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:13:00 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 46
#KOTWEM46
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 16, 2012
நவீன யுகத்தில் ஹிஜாப் !!

இந்த பக்கம் 4029 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அமெரிக்காவில் AT&T நிறுவனத்தில் பணியாற்றி வந்த சூசன் என்பவர், இஸ்லாத்தை தழுவி ‘ஹிஜாபுடன்’ பணிக்கு வரத் தொடங்கிய போது மதப் பாகுபாட்டுத் தொல்லைகள் (religious discrimination) சக பணியாளர்கள் மூலம் வர ஆரம்பித்தது. இதனை அவர் ‘Equal Employment Opportunity (EEOC)’ கமிசனிடம் முறையீடு செய்ததை அறிந்த சூசனின் மேலதிகாரி, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபை பிடித்திழுத்தார். அவ்வளவுதான்… ஈமானில் உறுதி பூண்ட பெண் சிங்கம் அசூர பலம் கொண்டு அந்நிறுவனத்தை நோக்கி கர்ஜிக்கத் தொடங்கிற்று!!

நீதிமன்ற முறையீடு செய்ததில், அந்நிறுவனம் அவர் இழந்த வேலை மற்றும் தண்டனைத் (Punitive) தொகையாக 6.4 மில்லியன் டாலர் தர வேண்டும் என்ற தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டு வந்த சூசன் பஷீர் போன்றவர்களை எண்ணி பெருமைபட்டுக் கொள்ளும் அதே வேளையில், கலாச்சார பாரம்பரியமிக்கதாக முஸ்லிமல்லாத சமூகத்தாலும் அறியப்பட்ட (மதிக்கப்படுகின்ற), கனிசமான பிறவி முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் / நாட்டில் 'ஹிஜாபின்' நிலை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.

ஷாப்பிங்-க்காக வெளியூர் பயணம் செல்பவர்கள், கல்லூரி படிப்பு மற்றும் வேலைக்காக நகரங்களில் தங்கி வசிப்பவர்கள் சினிமா / நகரத்து கலாச்சார மோகம் மற்றும் அதீத கல்வி / வேலையே பெற்று விட்டதாக எண்ணி... “நாம் எப்படி உடையணிந்தாலும் யாருக்கு அது தெரிய போகின்றது... யார் கண்காணிக்கப் போகிறார்கள் அல்லது நவீன காலத்தில் இதெல்லாம் சகஜம்தானே?” என்று, பெற்றோர்கள் / கணவர்கள் தன்னை 'நம்பி' தந்த சுதந்திரத்தை தனிமையை தனக்கு சாதகமாக்கி ஹிஜாபை கல்லூரிகளிலும், பணி / பொது இடங்களிலும் துறந்திருக்கின்ற நிலை.

எதற்காக ஹிஜாபை அணிகின்றோம்? இளம் பிராயத்திலேயே பிள்ளைகளை அணிய சொல்லுகின்றோம் என்பதனை உணர்த்தாத பெற்றோர், படைத்தவனின் உன்னத வலியுறுத்தலை, ஹிஜாப் தரும் சுய பாதுகாப்பை உணராது... இன்று அதனை வெறும் மார்க்கக் கடமையாக (உடலை மட்டும் மறைத்து மனதைக் காற்றில் பறக்க விட்டு), நவீன கலாச்சாரத்தின் பேஷனாக (பல டிசைன்களில்) வடிவமைத்து அணிந்து வருகின்றனர்.

அதிகம் படித்து வேலைக்கு போகின்றவர்கள் (குறிப்பாக உருது / நகரத்து மக்கள்) ஹிஜாபை பொது மற்றும் பணியிடத்திலும் பின்பற்றாததற்குக் காரணமாக கூறுவது, 'வீட்டு பெரியவர்கள் ஹிஜாப் அணிந்தாலும் இளம் பருவத்தினரை ஹிஜாப் அணிவதற்கு கட்டாய - பழக்கப் படுத்தவில்லை' என்பார்கள். தான் அணியும் ஹிஜாபை பிள்ளைகளிடமும் பழக்க படுத்த தவறிய பெற்றோரையும், 'ஹிஜாப் - வயதான காலத்தில் மட்டும்’ என்று எண்ணும் படித்த (?) சமுதாயத்தையும் தான் குறை சொல்ல வேண்டும்.

வேலைக்காக அல்லது கணவர்களின் விசாவில் வெளிநாடுகளுக்கு வரும் ‘மேற்கூறியவர்களின்’ ஹிஜாபின் நிலை, ஒன்றிரண்டு நாட்கள் ஹிஜாப் அணிந்து விட்டு இது இந்நாட்டு கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது அல்லது ஹிஜாப் பற்றிய குர்ஆனின் அத்தியாயங்கள் 'தலையை மறைப்பதை' கட்டாயபடுத்த வில்லை என்று ஒரு சிலரின் வாதங்களை அடிப்படையாக வைத்து… தொழுகையில் மட்டும் ஹிஜாபை பேணி, மறுகணமே டைட் ஜீன்ஸ் டி-ஷர்ட்ஸ் பறக்கும் கூந்தல் என்று மாறிவிடுவதை மேலைநாடுகளில் காணலாம்.

‘Get –together’ பொது நிகழ்ச்சிகளின் போது, எங்கே தனது விலையுயர்ந்த பகட்டான ஆடை உடல் அலங்காரத்தை பிறர் கண்டு மெச்ச அல்லது போட்டோ-க்களை ஃபேஷ்புக்கில் போட்டு பிறர் கமன்ட் எழுத வேண்டும் என்பதற்க்காக கூட, ஹிஜாபை துறக்கும் சில ஓதி படித்தவர்களும் இருக்கின்றார்கள்.

கலாச்சார பாரம்பரியமிக்க தனது ஊரில் / நாட்டில் கட்டுக் கோப்புடன் வாழ்ந்து விட்டு வெளியூர் மேலைநாடுகள் சென்றவுடன் கலாச்சார மற்றும் இட சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக்கி நம்மவர்களே முறையாக பேணாதிருக்கும்போது... இஸ்லாத்தின் வாசனையே அறியாத ‘ஹிஜாப் அணிபவர்களை பழமைவாதிகள்’ என்று விமர்சிக்கும் மேலைநாட்டினர் மாற்று மதத்தவர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்?

முஸ்லிம்கள் மிக குறைவாக வாழும் ஊருக்கோ / தேசத்துக்கோ செல்லும்போது... ஹிஜாப் அணிந்து சென்றால், வகுப்பில் - அலுவலகங்களில் - பொது இடங்களில் வித்தியாசமாக பார்ப்பார்களோ...? அச்சுறுத்துவார்களோ...? தனிமைபடுத்தப் படுவோமோ...? என்று எண்ணுவது இயல்பு. ஆனால் பெரும்பாலான நாடுகளில் பணியிடத்தில் - பொது இடங்களில் தனி நபருடைய உடை மார்க்க வழிபாடு விசயத்தில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. எவ்வித மத - மொழி மற்றும் இன வேறுபாட்டிற்கு இடமே இல்லை. மாறாக அதனை மதிக்கத்தான் வற்புறுத்துகின்றது .

உதாரணத்துக்கு, அமெரிக்க நாட்டு சட்டப்படி (According to the Civil Rights Act of 1964, it is illegal for public establishments to deny service based on someone's race, color, religion, sex, or national origin) என்று பொது இடங்களில் கூட மத இன பேதமை கூடாதென்றுதான் கூறுகின்றது. இதற்க்கு விதிவிலக்காக ஒரு சில நாடுகள் (பிரான்ஸ்) இருக்கலாம்.

இஸ்லாம் - உடலுக்கு & மார்க்கத்திற்க்கு புறம்பான எண்ணங்களுக்கு திரையிட சொன்னதே தவிர, அறிவிற்கு தனி மனித ஆற்றலுக்கு திரையிட சொல்லவில்லை. 2008-ன் ஒலிம்பிக்கின் போது வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தபடியே பங்கெடுத்தார்கள். ஹிஜாப் அவர்களின் வெற்றியை துளி அளவும் தடுக்கவில்லை. பளு தூக்கும் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து பங்கேற்க 'IWF' அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் அணிந்து கால்பந்து விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து 'ஃபீஃபா' மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது.

இரட்டை கோபுரங்களின் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவிலே ஹிஜாப் அணியும் பெண்களுக்கு சோதனைகள் பல வந்தது. அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றித்தான் இஸ்லாம் வேகமாக பரவி வருகின்றது.

‘உங்கள் அறிவுக்கும் (ஹிஜாப்) ஆடைக்கும் தொடர்பில்லையே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவரான தவக்குல் கர்மன், ‘நான் இன்றைக்கு யார், என்ன உடுத்தியிருக்கின்றேன் என்பது மனிதன் எத்தனை உயரம் அறிவிலும் நாகரித்திலும் உயர்ந்திருக்கிறான் முன்னேறியிருக்கிறான் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே தவிர பின்னேற்றத்துக்கு அல்ல’ என்றார்.

மேற்கத்திய கலாச்சார நாட்டிலே பிறந்து வாழ்ந்து வரும் ஸ்வீடனின் பெண் காவலதிகாரி ‘டோன்னா எல்ஜம்மால்’ போன்றவர்கள் கூட ஹிஜாபை முழுமையான விருப்பத்துடன் அதனை பணி இடங்களிலும் நடைமுறை படுத்தும் போது, பிறவி முஸ்லிம்களாகிய நமக்கு மட்டும் ஏன் அவ்வளவு கடினமாக தோன்றுகிறது? பலவீனப்பட்டு வரும் நமது இஸ்லாமிய சிந்தனையும், வாழ்வியலும், ‘காம்ப்ரமைஸ்’ என்ற தேவையற்ற மனபோக்கும்தான் அதற்குக் காரணம்.

(நபியே!) உம்முடைய மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும் முஃமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள்ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 33:59)

நமது சமுதாயம் (ஆண்களும் பெண்களும்) நன்கு படித்து தலையெடுக்க ஆரம்பித்து விட்டனர். வேலை மற்றும் கல்லூரிக்காக வெளியூர் மற்றும் மேலைநாடுகளில் மனைவி -மக்களுடன் செட்டில் ஆகும் சூழ்நிலை 'இன்னும் அதிகம்' வருங்காலங்களில் ஏற்படும்.

பெண்கள் அதிகம் படித்த சமுதாயித்தினராக மாறும் போது, ஹிஜாபை அறியாமையினால் ‘மேற்க்கூறியவர்களை’ போன்று புறக்கணிக்கும் அலட்ச்சியபடுத்தும் அவல நிலைகள் ஏற்படுவதட்க்கு முன்… பெற்றோர்களும் சமுதாயத்தினர்களும் இதன் அவசியத்தை பாதுகாப்பை நம் இளைய தலைமுறையினருக்கு ‘தொடர்ந்து’ வலியுறத்தி, அதனை முறையாக முழுமையாக ‘எவ்விடத்திலும்’ நடைமுறை படுத்தும்போது தான்… ஒரு சில நாடுகள் துவேசிகள் அதற்க்கு விதித்துள்ள தடைகளும் & ஹிஜாப் என்றால் ஒரு ‘பிற்போக்குத்தனம் / அடிமைத்தனம்’ என்ற மாயை முற்றிலுமாக ஒழியும் !!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நவீன யுகத்தில் ஹிஜாப் !!...
posted by: cholukku (chennai) on 18 July 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20832

எதை குறிப்பாக நமது ஊர் பெண்களுக்கு சொல்ல நினைத்தேனோ அதை நண்பர் கட்டுரை மூலம் சொல்லிவிட்டார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நவீன யுகத்தில் ஹிஜாப் !!...
posted by: mahmood jawz (Chennai) on 18 July 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20833

ஹிஜாப் என்று குரிபுடுவது " முகத்தை மறைகனுமா இல்லையா? தெளிவா தரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஹிஜாப் எனும் கேடயமே கற்பிற்கும், கன்னியத்திற்கும் சிறந்ததோர் பாதுகாப்பு...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (????? ?????.) on 18 July 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20835

ஈமானிய சிந்தனையின்றி மறுமையின் அச்சமின்றி பகட்டாக வாழும் பெண்களுக்கு அறிவுறுத்துகின்றது இக் கட்டுரை! நமதூரைப் பொறுத்த வரை நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது சதவிகித பெண்கள் ஹிஜாப் எனும் கேடயத்தை விரும்பியே அணிந்து வருகின்றனர் என்பது தான் உண்மை!

ஒரு சில தெருவாசிகள் தங்களின் மூதாதையர் காலத்திலிருந்தே ஹிஜாப் அணியும் பழக்கமில்லாத காரணத்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆணால் ஃபர்தா அணிந்து தலைக்கு ஷால் போட்டுவதைக் காண முடியும். கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் சில நவநாகரீக மங்கையர்கள் வேண்டுமானால் தம் கணவனின் வற்புறுத்தல்களால் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது மேற்குறிப்பிடுள்ளது போல் சில தெருவாசிகளாகக் கூட இருக்கலாம். ஹிஜாப் என்பது கன்னியத்திற்கும், கற்பிற்கும் பாதுகாப்பு என்பதால் தான் இன்று அநேக பெண்கள் அதை ஒரு கேடயமாகக் கருதி அணிந்து வருகின்றனர்.

வெளியூர் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட இவ் வழக்கத்தை அவர்கள் கை விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் பாடசாலைகள் மற்றும் பெண்கள் கல்லூரிகளிலும் கூட அவர்கள் ஹிஜாபைத் தவிர்ப்பதில்லை! என் துனைவி என் தாயார் வீட்டுக்கு வந்தாலும் கூட ஹிஜாப் மற்றும் பர்தாவைக் கழற்றுவதில்லை. காரணம் மாமா, மச்சான் இருப்பார்கள் மரியாதையாகவா இருக்கும்? எனக் கூறுவாள். இது சாதாரணமாக எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒன்றே!

தலைக்குக் துணியின்றி அல்லது ஹிஜாப் இன்றி நம்தூரில் நம் பெண்மணிகளைக் காண்பது அரிது. இக் கட்டுரைக்கு நான் மறுப்பு தெரிவிக்க வில்லை. மாறாக ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தை பிறர் எடை போட்டுவிடக்கூடாதே என்பதால் தான் இதை நான் இங்கு பதிவு செய்கின்றேன். கட்டுரையாளர் என்னைத் தவறாக எண்ணிவிடக்கூடாது.

பெருநகரங்கள்,பிற ஊர்கள் ஆகியவற்றோடு நமதூரை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆடை ஒழுக்கத்தில் நம் பெண்மணிகள் பொடுபோக்கானவர்கள் அல்ல என்பதே எனது வாதம்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நவீன யுகத்தில் ஹிஜாப் !!...
posted by: Vilack SMA (saigon , vietnam .) on 19 July 2012
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20836

கட்டுரை நன்றாக உள்ளது . நம் பெண்கள் எத்தனைபேர் இதை படித்து , பின்பற்றுவார்கள் ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Situation In My Office
posted by: Mohamed Hussain (Chennai) on 19 July 2012
IP: 202.*.*.* India | Comment Reference Number: 20838

Assalamu Alaikum,

Recently in our Office(Well Known IT company, Chennai), Our sisters faced the same Hijab issue, the securities at the entrance forced our sisters to remove the Hijab while entering into Office,citing the reason that there shouldn't be any religious things in Office.

Then they approached the local Chennai HR team and no positive response from them. then One of our sister wrote a letter about this to the Board Member and vice president of the Company and got a permission to wear Hijab.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நவீன யுகத்தில் ஹிஜாப் !!...
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 27 July 2012
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20843

இக்கட்டுரையின் நோக்கம் மார்க்க ரீதியாக ஹிஜாபா அல்லது நிகாபா என்பதல்ல. இருப்பினும் சகோதரரின் கேள்விக்கு பதில்.

ஹிஜாப் என்றால் தலையையும் உடலையும் மறைக்க வேண்டும். இதில் முகத்தை & கைகளை மறைக்க வேண்டுமா என்பதற்க்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடத்தில் ஒருமித்த கருத்து இல்லை.

சூரா நூரிலே 31 ஆம் அத்தியாத்தில் உள்ள, "சாதாரணமாக வெளியில்" தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது என்பதனை ஆதாரமாக கொண்டு முகம் மற்றும் கரண்டை வரை உள்ள கைகளை மறைக்க வேண்டியதில்லை என ஒரு சாராரும், இல்லை... கட்டாயம் முகத்தை கைகளை மறைக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

இதில் பெரும்பாலான அறிஞர்களின் கூற்று படி, வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை (ஹிஜாப்) அணிய வேண்டும்

பெண்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய அந்த இரு பாகங்களையும் மறைத்துக் கொள்வது (நிகாப்)அவரர்கள் விருப்பம். மேலதிக விபரங்களுக்கு உலாமா பெருமக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கட்டுரையை நமதூர் பெண்களை மட்டும் மையமாக வைத்து எழுத வில்லை (சகோதரர் அவர்களின் இது தொடர்பான கூற்றில் எனக்கும் மாற்று கருத்து இல்லை... இதற்க்கு விதி விலக்காக பெருநகரங்களிலும் & முஸ்லிம்கள் குறைவாக வாழும் நாடுகளில் சிலர் இருக்கலாம்).

மாறாக இவ்விணைய தளத்தை காணும் பிற சகோதரர்கள் & ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கவனத்தில் கொண்டு ஒரு தொலைநோக்கு பார்வையில்... கல்விக்காகவும் வேலைக்காகவும் செட்டில் ஆவதற்காக பெருநகரங்களுக்கும் அரபு நாடுகள் அல்லாத முஸ்லிம்கள் குறைவாக வாழும் நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் சந்திக்கும் ஹிஜாப் சோதனை, அதனை அற்ப காரணங்களை கூறி அலட்சியபடுத்தி வருபவர்களின் முன் உதாணரங்களை காட்டி இன்று நன்கு படித்து வரும் நம் இளைய தலைமுறையினருக்கு ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக வரைய பட்டதே தவிர மற்றபடி ஒட்டு மொத்த சமுதாயத்தை (குறிப்பாக நமதூர்) குறை கூறுவதாக யாரும் எண்ணி விட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இரத்தக்ண்ணீருடன் வருந்தி நம் சமூகத்குதிற்காக்க (குறிப்பாக காயலர் களுக்காக)
posted by: T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) on 05 August 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21068

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்று அநேகமான கட்டுரை, கமன்ஸ் குறிப்புகளில் இஸ்லாமிய பண்பாட்டில் பெரிய பெரிய ஓட்டை மற்றும் சரீஅத்துக்கு மாற்றமான செய்திகளெல்லாம் நம் நடைமுறைகளில் வந்ததைப் பார்த்து நாங்கள் அதிஷயப்படவில்லை. ஆனால் இரத்தக்ண்ணீருடன் வருந்தி நம் சமூகத்குதிற்காக்க (குறிப்பாக காயலர் களுக்காக) அனுதினமும் அழுது தொழுது துஆ கேட்ட வண்ணமாக இருந்து வரும் எங்களுக்கு இந்த கட்டுரையாளரின் படைப்பு ஒரு ஆறுதல் தரத்தான் செய்கிறது. அல்லாஹ் அவருக்கு மேலான நற்கூலியை தருவானாக!

ஆதிகாலம் தொட்டு முழுமையான (கட்டுரையில் கண்ட குர் ஆன் 33-59 ஆயத்தின் படி ) புர்கா எனும் முழு ஹிஜாப் வழிமுறை களை கெடுத்தது நமது பெண் மக்கள் வெளியூருக்கு செல்லும் பழக்க வழக்கம் வந்து அந்த கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்தது மற்றும் நமதூரில் பெண்கள் பாடசாலைகள் திறந்தது, அதில் வெளியூர் காஃபிற்,மார்களும் முஸ்லிம் டீச்சர்களுடனும் சகவாசம் ஏற்ப்பட்டு அதற்க்கு “அம்மா பிடவை” என பேர்சூட்டி அந்த ஹிஜாபற்ற கலாசாரத்தைக் கடைபிடித்து முழு ஹிஜாபும் துறந்து வந்த காலத்தில் தான் 1983=1403 ல் உருவான எங்கள்,தீவுத்தெரு அறூஸுல் ஜன்னஹ் எனும் பெண்கள் மத்றஸாவின் மூலம் வேறு வடிவில் முழு புக்காவை அறிமுகப் படுத்தினோம் அதற்க்கு இப்போது “போறா புற்க்கா ” எனப் பெயரும் கூறப்படுகிறது. சிலர் “போறா போடு “ என்றே .கொச்சை மொழியில் கூறுகின்றனர்.

இதற்கு மத்தியில் 1950 ல் இருந்து 1980 வரை நமது மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் தீவிர பிரச்சாத்தால் புற்க்காவின் ஃபேஷன் மாறி அலங்காரம் செய்து உடுத்த ஆடைகளுடன் மேற் போர்வையாக ஒரு வெல்லை பிடவையை உடுத்து வரும் வழக்கம் இருந்து வந்தது, இன்றும் ஒரு சிலரிடம் காணலாம். இதுவும் ஹால்ஃப் புர்க்கா தான்.இந்த புர்க்கா அணிய கட்டாயப்படுத்தி பீரங்கி முழக்கம் செய்த மற்ஹூம் செய்யிது இப்றாஹீம் ஆலிமவர்கள், மற்ஹூம் எம் கே ஈ அபுல்ஹசன் ஆலிம் அவர்கள்.மி.அபுல் ஹஸன் ஆலிம் அவர்கள் ஆகியோர்கள் மிக முக்கிய மானவர்கள்.

ஆல்லாஹும்மங்ஃபிற் லஹூம் வற் ஹம் ஹும். என்ன செய்வது நம்ம ஊரின் தலை நஸீபு இந்த புற்கா கலாச்சாரத்தையே (குற் ஆன் கூறிய 33-59ன் ஆயாத் படி ) இல்லாமலாக்க செய்தது போல 1980 க்குப்பின் வந்த புது இஸ்லாமிய இயக்கங்கள் கூட அதரவு அளிப்பதை பார்த்தால் மொத்தத்தில் ஈமான் பலஹீனம் என்றே கூறலாம். பே ஷக்கு. அல்லாஹும்ம இன்னா நவூது பிக மின் ஃபிதனத்தின் நிஸாஉ. வ அதாபில் கப்று எனும் துஆ வை தினம் தினம் ஓதி வருவோமாக , இதை தவிர வேறு வழி தெரிய இல்லை அல்லாஹ் உதவி செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved