Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:50:18 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 48
#KOTWEM48
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 30, 2012
இன்னலுறும் இறையில்லப் பணியாளர்கள்!

இந்த பக்கம் 3279 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல்லாஹ்விற்கு விருப்பமானது இறை இல்லங்கள் . உலகில் இறை இல்லங்களாகிய பள்ளிவாசல்களைவிட மேன்மையானது, தூய்மையானது , அமைதியானது வேறு எதுவும் இல்லை.

இறை இல்லங்களில் உலக விசயங்களை பற்றி பேசாதிருப்பதும் , அதை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பதும் , அதற்கு அதிக கண்ணியம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்.

அதை போன்று இறை இல்லங்களில் பணிபுரிகின்ற இமாம்களையும் , முஅத்தின்களையும் மற்றும் இறை இல்லத்தையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தம் செய்பவர்களையும் நாம் கண்ணியப்படுத்துவதும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் நம் மீது கடமையாகும். ஆனால் இந்த கடமையை நாம் முறையாக செய்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

முப்பது வருடத்திற்கு முன்பு ஓர் இமாம் 250 ரூபாய் , ஒரு முஅத்'தின் 150 ரூபாய் சம்பளம் வாங்கினார்கள் என்றாலும் பிள்ளைகளுக்கு "ஓதி" கொடுப்பது முதல் கோழி அறுப்பது மற்றும் சில, சில மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவதில் சைடு வருமானங்கள் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்த வருமானம் பற்றாக்குறைதான் என்றாலும்கூட ஏதோ அவர்கள் வாழ்க்கை அல்ஹம்துலில்லாஹ்! என்று ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் இன்று அவர்கள் 6000 ரூபாய் 5000 ரூபாய் என்று சம்பளம் வாங்கினாலும் கூட இன்றைய விலைவாசியில் , கால சூழலில் அவர்கள் குடும்பத்தை கவனிப்பார்களா , நோய் நொடியை கவனிப்பார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் அன்று போல் இன்று அவர்கள் மக்களுக்கு ஓதிக் கொடுப்பதோ , கோழி அறுப்பதோ இல்லை என்பதல்லாமல் வேறு எந்தவித மேலதிகமான சைடு வருமானமும் அவ்வளவாக இல்லை என்பது தெளிவாகிறது.

அவர்கள் , குடும்ப செலவுக்கும் நோய்க்கு பரிகாரம் பார்க்கவும் போதிய வருமானம் இல்லாத இந்த சூழலில் அவர்களுடைய குமர்களை கரை சேர்க்கவோ , அவர்களுடைய ஆண் மக்களை உயர்கல்விகள் / தொழிற்சார்ந்த கல்விகள் கற்க வைப்பதற்கோ அல்லது இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள அவர்களுடைய வீட்டை புதிதாக கட்டவோ , பழுது பார்க்கவோ என்ன செய்வார்கள் - யாரிடம் போய் கேட்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இறை இல்லத்தில் பணி செய்பவர்களில் சிலர் வேண்டுமானால் நல்ல நிலையில் இருக்கலாம் ஆனால் பலர் மிகவும் கஷ்டத்தில்தான் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்களிலே சிலர் வாய் திறந்து சொல்கின்றனர் - மற்றவர்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். அவர்களுடைய ஆண் மக்களின் மேற்படிப்பிற்காக வேண்டியும், பழுதுபட்டிருக்கும் வீட்டை பழுது பார்பதற்காக வேண்டியும் அவர்கள் பல அமைப்புகளையும் , பல ஜமாஅத்' களையும் அணுகி, கூனி குறுகி நின்று கிடைத்தை பெற்று மற்றதுக்கு தெரிந்தவர்களிடமும் , பைத்துல் மாலிலும் கடன் பெற்று அதையும் சரிவர அடைக்க முடியாமல் சிரமம்படுவதை காண முடிகிறது.

இந்நிலை மாறவேண்டும் அதற்கு அந்தந்த ஜமாஅத்'தை , பள்ளிவாசல்களை சார்ந்தவர்களே பொறுப்பேற்க வேண்டும். இப்படி பொறுப்பேற்று அவர்களுக்கு உதவிடுவதில் சிரமம் இருப்பதாக தெரியவில்லை. அன்று பணம் சிலரிடம் மட்டுமே குவிந்து இருந்தது அதனால் உதவிகளை செய்ய எல்லோராலும் முடியவில்லை - பணம் குவிந்துள்ள சிலரிலும் மிகச் சிலரே உதவிகளை செய்தனர்.

ஆனால் இன்றோ பணம் என்பது மாஷா அல்லாஹ்! பரவலாக எல்லோரிடமும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நல்ல வழியில் செலவு செய்யதான் " மனம் " இருப்பதில்லை அல்லது வழி தெரியவில்லை என்றே சொல்லலாம்.

அன்று ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்காக வசூல் செய்வதற்கு ஒரு கமிட்டியை ஏற்படுத்துவது சுலபமாக இருந்தது - ஆனால் பணம் உள்ளவர்களிடம் பணம் வசூல் செய்வதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் இன்று அது தலைகீழ் , கமிட்டி , கிமிட்டியில் எல்லாம் என்னை போட வேண்டாம், அது நமக்கு சரிபட்டு வராது வெளியூர் போகப்போகிறேன் , என்னால் முடிந்ததை தருகிறேன் என்று சொல்லி நாம் அவரிடம் எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் கூடுதலாகவே தந்து விட்டு நகன்று விடுவர். அதனால் வசூலுக்காக கமிட்டியை ஏற்படுத்துவது என்பது சிரமம் ஆனால் கமிட்டியை உண்டாக்கிவிட்டால் வசூல் செய்வது எளிது.

இன்றையக் காலகட்டத்தில் நம்ம ஊரைப் பொறுத்தவரை எந்த ஒரு பள்ளி வாசலும் / ஜமாஅத்'தும் ஏழ்மையானது என்று சொல்வதற்கில்லை. பள்ளியில் தொழுவதற்கு வரக்கூடியக் கூட்டம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் - மற்றபடி எல்லா ஜமாஅத்'தினர்களும் அல்லாஹ் உதவியால் வசதியுள்ளவர்களாகவே உள்ளனர்.

அதனால் ஒவ்வொரு ஜமாஅத்'தவர்களும் அவரவர் பகுதியில் உள்ள ஏழ்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதே சிறந்தது. அதிலும் குறிப்பாக இறைவனின் இல்லத்தில் பணி புரிபவர்களை தயவு செய்து ஜமாஅத்'துக்கு வெளியே சென்று உதவி தேடி தவிக்க விடுவதை தடுத்து, அவர்களிடம் நாலுபேர் வசைப்பாடுவதை தவிர்த்து அந்தந்த ஜமாஅத்'தவர்களே உதவுவது மிகவும் சிறந்த செயலாகும்.

பள்ளிவாசல்களில் பணி புரிபவர்களைப் பற்றிய முழுவிவரமும் அந்தந்த பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்களுக்கே நன்றாக தெரியும். அதனால் அவர்களின் உண்மையான தேவையை அறிந்து அந்த தேவைக்கு மட்டும் வேண்டியதை அந்தந்த ஜமாஅத்'தில் வசூல் செய்து கொடுப்பது நல்லது.

மேலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களும் , தங்களுக்குத்தான் மார்க்கம் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது அவர்களெல்லாம் தவறான வழியில் நடப்பவர்கள் என்றும் நினைத்து, தங்களையே தாங்கள் மேன்மையாக்கிக் கொண்டு திரிபவர்களும் நம்மிலே பலர் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் தங்களுடையப் பள்ளிவாசல்களிலே பணி புரிபவர்களை நோட்டமிட வேண்டும் - அப்போதுதான் இறை இல்லத்தில் பணி புரிபவர்களின் கஷ்ட நிலை என்னவென்று அவர்களுக்கு தெரியும்.

அல்லாஹ்வுக்கு பிடித்தமானது இறை இல்லம் - ஷைத்தானுக்கு பிடித்தமானது கடைவீதி என்று வாய்க்கிழிய பிரச்சாரம் பண்ணக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும் , தங்களுடைய ஜமாஅத்' தை சார்ந்த பள்ளிவாசல்களில் பணிபுரிபவர்களின் நிலை என்ன அவர்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வது நம்முடைய ஜமாஅத்'தவர்களின் கடமையா ? இல்லையா ? பள்ளிவாசல்களிலே தொழ வருபவர்களுக்கு அந்த ஏழ்மையானவர்களின் நிலை தெரியாதா , அந்த ஏழ்மையை போக்க வழி பண்ணக்கூடாதா ? ஊருக்குத்தான் உபதேசமா , உங்களுக்கு அதை செயல்படுத்த இயலாதா என்பதை எல்லாம் சிந்தித்தால் செயலாற்றலாம்.

இறை இல்லத்தில் பணிபுரிபவர்களின் நிலையை இதுநாள்வரை அறியாமல் இருந்திருந்தால் இன்று முதலாவது அவர்களில் கஷ்டபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மிகவும் அவசியமான உதவிகளை செய்ய ஆயத்தமாகுங்கள்.

ஒவ்வொரு முறையும் ஸஃபரிலிருந்து வரும்போது அவர்களுக்கு ஏதோ உங்களால் இயன்றதை கொடுத்து அவர்களை கையேந்தியே வாழ வேண்டிய நிலைக்கு ஆளாக்காமல் , உண்மையான தேவையை அறிந்து , தேவைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வை சீராக்க, அவர்களின் ஆண் மக்களை படிக்க வைத்து முன்னேற்றமடைய செய்ய , அவர்களில் எவருக்கேனும் வீடு விழக்கூடிய நிலையிலே இருந்தால் புதிதாக கட்டியோ , மராமத்து செய்தோ கொடுத்து உதவிட அந்தந்த ஜமாஅத்'தை சார்ந்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும் - அப்படி செய்தால்தான் முழுமையான பயனை அவர்கள் பெறுவார்கள்.

முஅத்தினுக்கு வேலை, " பாங்கு , இகாமத் சொல்வது - இமாம் வராதபோது இமாமத் செய்வது " இதுவாகத்தான் இருக்க வேண்டும் . ஆனால் அவர் அதை மட்டுமா செய்கிறார் - பள்ளிவாசலைக் கூட்டுவது , தூசியைத் தட்டுவது என்று அணைத்து பணிகளையும் செய்யத்தான் செய்கிறார்கள் இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டுமானால் ஒருசிலர் , ஒருசில பள்ளிகளிலே மூத்திரக்குழியையும்கூட துப்புரவு செய்கிறார்கள். முந்திய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுமிடங்கள் எல்லாம் மிகப் பெரியதாக இல்லாமல் அளவோடுதான் இருக்கும் - மற்றபடி வராண்டாக்கள்தான் பெரிய அளவில் இருக்கும் - பெருநாள் தொழுகைக்கும் , தராவீஹ் தொழுவதற்கும் மேலும் மார்க்க நிகழ்ச்சிகள் , உபநியாசங்களுக்காகவும் இடங்கள் பெரியதாக விடப்பட்டிருக்கும்.

மேலும் அன்றையக் காலத்தில் பள்ளிவாசல்களை பெருக்கி சுத்தம் செய்வது முஅத்'தின் மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்களான பெரியவர்களும் பெருக்கி சுத்தம் செய்தார்கள் - அவர்கள் ஆலிம்களாக , ஹாஜியார்களாக மட்டுமல்ல பணக்காரர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கெளரவம் பார்க்கவில்லை. இறை இல்லம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி இருந்தது. இன்று அந்த மாதிரி யாராவது பள்ளிவாசல்களை சுத்தம் செய்கிறோமா - இல்லை என்றே நினைக்கிறேன். மேலும் இன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களும் விரிவாக்கப்பட்டு வருகிறது , அந்த விரிவாக்கத்திற்கு தக்கப்படி மக்கள் அதிகமாக தொழ வருகிறார்களா என்றால் மிகுதியான பள்ளிவாசல்களில் இல்லை என்றே சொல்லலாம். பள்ளிவாசல்கள் விரிவாக்கத்தினால் துப்புரவு வேலைகள் அதிகரித்து இருக்கிறது முஅத்'தின் உடைய பொறுப்பும் கூடுகிறது என்பதையும் ஜமாஅத்'தார்கள் உணர வேண்டும்.

ஆக மொத்தம் ஊரிலே உள்ள இறை இல்லங்களில் பரவலாக இந்த நிலை இருக்கிறது இதில் கொள்கை வேறுபாடு இல்லை எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கிறார்கள். மார்க்க விசயத்தில் கொள்கை வேறுபாடு உண்டே தவிர இறை இல்லப் பணியாளர்களை கவனிப்பதில் எல்லோரும் - பெரும்பாலும் ஒரே கொள்கையாகத்தான் இருக்கிறார்கள் இதில் கருத்து வேறுபாடுகூட கிடையாது - ஏனென்றால் இது பணம் சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா!

ஆகையினால் இதை படிப்பவர்கள் படித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் அவரவர் ஜமாஅத்'தவர்களுக்கு நினைவூட்டி இறை இல்லப் பணியாளர்களின் வாழ்வை ஒளிரச்செய்யுங்கள் - இறை இல்லமும் ஒளிரும் - மக்களின் மனமும் குளிரும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இன்னலுறும் இறையில்லப் பணி...
posted by: Vilack SMA (Saigon , Vietnam) on 31 July 2012
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20845

மாமாவின் கட்டுரை இறை இல்லப்பணியாலர்களின் வாழ்க்கை தரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது . உண்மை நிலையம் அதுதான் . மாமா சொன்னதுபோல் , ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளவர்கள்தான் மிகவும் வசதியாக உள்ளனர் . பெரும்பாலானோர் மிகவும் கஷ்ட ஜீவனத்தில்தான் உள்ளனர் .

இறை இல்லப்பணியாலர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அந்தந்த ஜமாத் வாசிகள் பொறுப்பேற்கலாம் . இன்றைய விலைவாசிக்கு தகுந்த சம்பளத்தை கொடுக்கலாம் . பள்ளியின் அருகிலேயே , ஏதாவது சிறிய அளவில் தொழில் செய்ய பள்ளியின்மூலம் உதவலாம் . அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளலாம் ,

பொதுவாக இந்த வேலைக்கு , கஷ்டப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான் வருகின்றனர் . அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அந்தந்த ஜமாத்தாரின் கடமையாகவே கருத வேண்டும் .

Vilack sma , saigon , Vietnam .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இன்னலுறும் இறையில்லப் பணி...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 31 July 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20846

அருமையாக சொன்னீர்கள். எனது தந்தை மக்கி ஆலிம் அவர்களை இலங்கையில் கண்டியில் தைக்கா பள்ளியில் கதீபாக இமாமாக பணியாற்ற ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். அதில் பள்ளிவாசல் லைட் மின்விசிறி இவற்றையும் கவனிக்கும் பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். எனது வாப்பா, வாருவோர் போவோர் செருப்பும் காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் எழுதுங்கள் என்று சொன்னார்களாம். அதோடு நிற்காமல் உங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். இங்கு ஐந்து முத்தவல்லிகள் இருக்கிறீர்கள் இவர்களில் யாராவது ஒருவர் ஐந்து வேளை ஜமாத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ன சம்மதமா என்று கேட்டார்களாம். நாங்கள்தான் நிபந்தனை போடுவோம் நீங்கள் எங்களை கேள்வி கேட்கக்கூடாது என்று அவர்கள் சொல்ல, அப்படியானால் அதற்கு வேறு ஆளை பாருங்கள் என்று சொல்லி வெளி ஏறி விட்டார்களாம் இந்த துணிச்சல் இப்போதுள்ள இமாம்களுக்கு வருமா, பொருளாதாரம் ஒரு புறம். தங்கள் மரியாதைகளை விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்தும் உலமாக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உலமாக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். தங்கள் கடமைகளை தட்டி கழிக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் அல்லது மாற்று மதத்தில் அவர்களுக்கு சமுதாயம் எவ்வளவு கவ்ரவம் கொடுக்கிறது என்பதை எண்ணிபாற்கும்போது வேதனையாக இருக்கிறது. குறைந்த சம்பளத்தில் எல்லா வேலையும் பார்க்கக்கூடிய ஒரு கஷ்டப்பட்ட ஆள் கிடைத்தால் அந்த பள்ளிவாசல் முத்தவல்லிக்கு கொண்டாட்டம் தான், அவர் கெட்டிக்காரர் என்றும் போற்றப்படுகிறார். இந்த நிலை மாற வேண்டுமானால் உலமாக்கள் சபை ஊர் தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஜமாதுல் உலமா இதற்கான வியூகம் வகுக்க வேண்டும். சம்பளங்களை நிர்ணயிப்பதில் அவர்கள் தலையிட வேண்டும். ஏன் நமதூர் காயல்நல மன்றங்கள் இதில் அக்கறை காட்டலாம். கல்விக்கு மட்டுமல்ல, இறை இல்லக்கொடைவள்ளல்களை அணுகி அவர்களின் அனுசரணையும் ஆலோசனையும் பெறலாம். கட்டுரை ஆசிரியர் அதற்கான முதல் கோட்டை வரைந்தால், அதற்கான ரோட்டை மற்றவர்கள் போடுவார்கள். புனித ரமலான் அதற்கு அஸ்திவாரம் இடட்டும் . உங்கள் குரல் நாலா பக்கமும் ஒலிக்கட்டும். உங்கள் கட்டுரை இனையதலத்தில் மட்டும் இருந்து விடாமல் ஒவ்வொரு இதய தளத்திலும் இல்லங்களிலும் நல்ல உள்ளங்களிலும் ஒலிக்கட்டும். பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள், மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். என்றாலும் அகல் விளக்குக்கும் தூண்டுகோல் தேவை. அதை செய்திருக்கிறீர்கள் உங்கள் எண்ணம் வீண்போகாது. வியூகம் வகுத்து நீங்கள் பதவி வகிக்கும் இக்ரா மூலமே இதை முன்னெடுத்து செய்யலாம் அது ஒரு சாதாரண சங்கமல்ல காயல்பட்டினம் மக்களின் சங்கமம். .. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: M. S.Sayyid Mohammed (bangkok) on 13 August 2012
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 21229

தாய்லாந்து, சிங்கப்பூர், ரியாத்,அபுதாபி,இலங்கை மற்றும் U.K. காயல் நலமன்ரங்கள் இணைந்து இவ்வாண்டு நோன்பில் நம்மூரிலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் மற்றும் பிலால்களுக்கு Bonus ஆக ரூ. 2500 வழங்க இருக்கின்றன. மேலும் பல மன்றங்கள் இணையும் பட்சத்தில் ஊக்கத்தொகையை மேலும் அதிகரிக்கலாம். ஆனால் இது ஒரு நிவாரண நிதியைப் போன்றதுதான்.

ஊரில் உள்ள ஜமாத்தார்கள் இதில் தனிப்பட்ட அக்கறை எடுத்து இவர்களின் ஊதியத்தை உயர்த்த முயலவேண்டும். எந்தப் பள்ளிக்கும் பிலால் இமாம் கிடைக்கமாட்டேங்கிறார்கள் என்று வருந்தும் பள்ளியின் தலைவர்கள் ஊதியத்தை உயர்த்திக்கொடுத்தால் நம்மூரிலேய அவர்கள் கிடைக்கத்தான் செய்வார்கள்.

மகமூது காக்கா சொல்வைதைப் போன்று கொடுக்க ஆள் இருக்கிறார்கள், கேட்கத்தான் ஆள் இல்லை. யார் கேட்பது . அந்தந்த ஜமாதிலுள்ள தலைவர் மற்றும் ஒரு சில ஆர்வலர்கள்தான். முயன்ருத்தான் பார்ப்போமே.

M.S. செய்யது முகம்மது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved