Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:28:53 AM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 49
#KOTWEM49
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 7, 2012
காயலின் களறிச் சோறு! ஓர் அலசல்!!

இந்த பக்கம் 9864 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலைவது மனிதனின் இயல்பு. மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும் என்பது காலவிதி! இக் கட்டுரை உள்ளூர்வாசிகளுக்குப் புதுமையாகத் தோன்றாது! எனினும், கடல்கடந்து வாழும் காயலர்களுக்கு ஓர் மலரும் நினைவாகவும், வெளியூர் நண்பர்களுக்கு ஓர் அறிமுகமாகவும் அமையட்டும் எனும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. - ஹிஜாஸ் மைந்தன்.


நொறுங்கத்தின்றால் நூறு வயசு என்பார்கள். அதாவது சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்பதல்ல இதற்குப் பொருள். உண்ணும் உணவை நன்றாக சவைத்து (நொறுங்க)ச் சாப்பிட்டால் அது ஜீரன சக்திக்குப் பெரிதும் உதவுவதோடு அதன் சத்துக்கள் நம் உடலில் நன்றாகப் போய்ச் சேரும் என்பதுதான் இதற்கு அர்த்தம். நாம் உண்னும் உணவுகளில் சுவைகளைக் கூட்டுவதற்காக மனிதன் பல வழிகளைக் கையாண்டு பல்சுவை பதார்த்தங்களை உலகிற்கு இன்றளவும் அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றான். பொதுவாக யாராக இருந்தாலும் தம் சொந்த ஊர் உணவைத்தான் பெரிதாகக் கருதுவர். கடல் கடந்து வாழும் இடத்தில் கூட பல உணவகங்களை நிறுவி தம் பாரம்பரிய உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்டு மகிழ்கின்றனர். தம் சொந்த மண்ணில் ரசித்துப் புசித்த அனைத்து வகை உணவுகளையும் வந்த மண்ணில் வாங்கி உண்பதற்கு அவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. நண்பர்களின் ஒன்றுகூடல், இன்பச்சுற்றுலா, வீட்டு விஷேச வைபவங்கள் என பல் வேறு நிகழ்வுகளிலும் பாரம்பரிய உணவுக்கே முதலிடம்.





சரித்திரப் புகழ் வாய்ந்த நம் காயல்பதியும் இதற்கு விதி விலக்கல்ல! நமதூருகென்றே பல வகைவகையான அருசுவை உணவுகள் இருந்த போதிலும் காயலின் களறி சாப்பாட்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை எனலாம். காயலின் பாரம்பரிய உணவுகள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதலாம் அந்த அளவிற்கு மணம், சுவை நிறம் கொண்ட ஏராளமான உணவு வகைகள் இன்றளவும் நம் காயலின் வீடுகளில் கமகமக்கின்றது. காலை பத்து முதல் பன்னிரெண்டு மணிவரை வீடுகளில் இருந்து வரும் விதவிதமான சமையல் வாசனையை வீதிகளில் உணரமுடியும். குக்கர் சத்தமும், தாளிப்பு வாடையும் பக்கத்து வீட்டில் என்ன சமையல் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும். இத்தனை சுவைமிக்க உணவுகள் இருந்தும் திருமண விருந்தில் களறிச் சாப்பாடு (கறியும் சோறும்) என்றால் உயர் இரத்த அழுத்தத்தை (பிர்ஷர்) கூட பொருட்படுத்தாமல் போய் உண்டு மகிழ்ந்து தினத்தந்தி பேப்பரில் கை துடைத்து கசக்கியெறியாமல் வருவதில்லை!





பொதுவாக முஸ்லிம் சமுதாயத் திருமணங்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். வெறும் சடங்கு சம்பிரதாயத்தில் மட்டுமின்றி திருமண விருந்தில் கூட வேறுபாடுகளைக் காணலாம் .பிரியாணியிலேயே பல விதங்கள், ஆம்பூர், ஹைதராபாத், தலைப்பாக்கட்டு பிரியாணி என அடுக்கிக் கொண்டேபோகலாம். பல ஊர்களில் குஸ்க்கா, தால்ச்சா (முள் சாம்பார்) போன்ற அசைவ உணவுகள் பரிமாறப் படுவதும் இயல்பான ஒன்றே! எனவேதாம் இஸ்லாமியர்களின் திருமண விருந்து என்றாலே உணவுப் பந்திகள் களைகட்டும்! இதில் எல்லா ஊர்களை விடவும் நம் காயல்பட்டணத்தின் களறிச் சோறுக்குதான் மவுசு அதிகம்.





இஞ்சி, பூண்டு, தயிர், பாதம், பிஸ்த்தா, பட்டைக்கருவா, ஏலம், கசக்கசா என்று அரைத்த விழுதுகளுடன் நன்றாக வேகவைத்த ஆட்டிறைச்சியை சுண்ட வற்ற வைத்து நெய் கோர்த்துக் கொண்டு சிவந்த நிறத்திலும் அத்துடன் கத்திரிக்காய், மாங்காய் எனும் கட்டியான பருப்பும் காயலருக்கே உரித்தான ஸ்டைலில் கம,கமக்கும் புளியாணம் ரஸமும், வெறுஞ்சோற்றுடன் பரிமாறப்படும். பிளாஸ்டிக் கப்புகளின் (டிஸ்போஸபுள்) வருகைக்கு முன்புவரை மண் சிட்டிகளில் தான்,கறி, பருப்பு, ரஸமும், மண் களையங்களில் குடிநீரும் பரிமாறி வந்தனர். சஹன் எனும் பரந்த தட்டுக்களில் அவைகளை வைத்து இருவருக்கு ஒரு ஸஹன் என்று உண்மையான சமபந்தி உணவு முறையக் கையாளுவதோடு ஏழை முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை பந்தலில் விரிக்கப்பட்ட பனை ஓலையால் நெய்த பாய்களில் தான் அமர்ந்தே ஆக வேண்டும்.

காலத்தின் சுழற்சிக்கேற்ப நாகரீக உலகில் ப்ஃபே, கஃபே என டேபிள் சேர் போட்டு உபசரித்தாலும் நமதூர் களறி சாப்பாட்டின் மகிமையேத் தனி! அதன் மணமும், சுவையும், பார்த்தமாத்திரத்திலேயே நாவில் எச்சில் ஊறும்! பாரம்பரியமான இந்த உணவுப் பழக்கமும், உபசரிக்கும் விதமும், பந்தி விளம்பும் முறையும் இன்றளவும் புதுமைதான்! கல்யாண வீடுகளில் விருந்துக்கு முதல்நாள் இரவிலேயே செம்மறி ஆடுகள் அணிவகுத்து அழைத்துவரப்பட்டு வெட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். ஆடு அறுப்பதைக் காண கொட்டாக் கொட்ட கண்விழித்திருக்கும் குட்டீஸ்கள். வெறும் ப்ளைன் டீயைக் குடித்துக் கொண்டு தலைப்பாகையுடன் அங்குமிங்கும் உலவும் சில பொறுப்புள்ள பெரிசுகள். இஞ்சிப்பூண்டுக்கு தோலுரிக்கும் ஒரு கூட்டம், வெங்காயம், தக்களி, புதினா, மல்லி, மாங்காய், கத்திரிக்காய் எனக் காய்கறிகளை அரிந்து பீடி வாசனையோடு விறகுப் புகை மண்டலத்தில் விறுவிறுப்பாக செயல்படும் மறு கூட்டம்.

நள்ளிரவில் ட்யூப் லைட் வெளிச்சத்தில் களைக்கம்புகளைக் குறுக்காகக் கட்டி ஆடுகளை அறுத்து தொங்க விடப்படும். அறுப்பவர்க்கு பல்குத்தி (சுவரொட்டி) இலவசம். வீட்டுச் சொந்தக்காரர், தெருவழிக்காரர் ஒன்றிரண்டு ஆடுகளை முதலில் அறுப்பதும் அதன் பின்னர் வரிசையாக அறுக்கப்பட்டு தோல் உரித்துக் கறியை வெட்டிக் குவித்து கடவாபெட்டி, தண்ணீர் டப்பாக்களில் அள்ளிச் சென்று கயிற்றுக்கட்டிலில் பரப்பி தண்ணீர் ஊற்றிக்கழுவி சுத்தம் செய்து பெரிய பெரிய சட்டிகளில் தாளிப்போடு போட்டு காயலின் சிறப்பு மசாலா (ஊர் மசலா) வைக் கிளறி வேகவைத்தபின் அதன் மூடியைத் திறந்தால் போதும் நெய்யும், நெருப்புமாக வாசனை மூக்கைத் துளைக்க, நாக்கில் எச்சி ஊற சும்மா! தளதளவென்றிருக்கும் களறிக் கறி! விருந்து உண்டு வீட்டிற்கு வந்த பின் பல மணி நேரமானாலும்கூட நம் விரல் இடுக்களில் பதிந்திருக்கும் மஞ்சள் நிறமும், கையின் மணமும் மறைந்து போவதில்லை! தொடர்ந்து வரும் கல்யாண சீசனில் அடுக்கடுக்காக விருந்துகளுக்கு அழைப்பு வந்தாலும் அலுப்பு தட்டாமல் உண்டு மகிழும் எம் காயலின் களறிச்சோற்றுக்கு முன்னில் ஆம்பூர் என்ன? ஆயிரம் ஹைதராபாத் பிரியாணி வந்தாலும் ஈடாவதில்லை!

என்ன? இனி காயலரின் வீட்டுத் திருமண விருந்துக்கு அழைப்பு வந்தால் மிஸ்பண்ணிடாமெ போய் ஒரு கட்டுகட்டிட்டு வாங்க...!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: A.R.Refaye (Abudhabi) on 07 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21919

தானத்தில் சிறந்தது கண் தானம்,நற்பண்புகளில் சிறந்த ஒன்று பிரச்சினை உடையோர் மத்தில் சமாதானம் செய்வது,பூலோக ஆனத்தில் சிறந்தது நம் ஊர் கம கமக்கும் புளியாணம் அது இக்கட்டுரைபடத்தில் மிஸ்ஸிங்------------ஓ--நெய்சோரா

இச்சிறப்பு மிகுந்த களரி வைபவத்தில் மட்டும் நம் ஒற்றுமை மேலோங்கி இருப்பது மறக்க முடியாது ஒன்று !!!!!!!!!!!!!!

களரிபற்றி எழுதி எமது பசியை கிளறிவிட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21932

மற்றவர்களுக்கு தெரியாமல் சந்தடி சாக்கில் ஈரலை சுட்டு வைத்துக்கொண்டு அடுத்தவன் பார்கிரானே என்று திருதிருவென முழித்துக்கொண்டு, அதை மறைத்துக்கொண்டு, களறியை கண்காணிக்கிறேன் என்ற போர்வையில் அதை வெந்தும் வேகாமலும் சுடசுட தின்று நாக்கை சுட்டுக்கொள்கிறவர்கள் பற்றி சொல்லவில்லையே.....

.ஒரு டாக்டரிடம் கேட்டேன்," டாக்டர் CHOLOSTROL கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?" சடாரென்று பதில் வந்தது, "காயல்பட்டினத்தில் களறி சாப்பாடு சாப்பிடாதீர்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Vilack SMA (Nha Be , Vietnam) on 07 September 2012
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21935

கட்டுரையை படித்தபின் மனம் களறி சாப்பாட்டிற்காக ஏங்குகிறது . கட்டுரையாளர் சொன்னதுபோல காயல் களறி சாப்பாட்டுக்கு ஒப்பிடும்போது ஆம்பூரும் , ஹைதராபாத்தும் ஒரு துக்கடாதான் . எத்தனைபேர் " தலப்பா கட்டி " வந்தாலும் இங்கே நெருங்க முடியாது என்கிறார் . உண்மைதான் .

நண்பர் ஹிஜாஸ் மைந்தன் சொன்னதுபோல் இங்கே " சமபந்தி " நடப்பது உண்மைதான் . வசதி உள்ளவனும் , ஏழையும் சமமாக அருகருகே உட்கார்ந்து சாப்பிடுகின்றனர் . ஆனால் தனித்தனியாக ... வசதி உள்ளவன் அவன் அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் உள்ளவனுடனும் , ஏழை ஏழையுடனும் உட்கார்ந்து சாப்பிடுகிறான் .

கட்டுரையாளர் சொல்ல மறந்தது :

சஹன் சாப்பாட்டின் குறிக்கோளே சகோதரத்துவத்தை உணர்த்துவதுதான் என்று பெருமையாக சொல்கிறோம் . ஆனால் அப்படி நடக்கிறதா ? திருமண விருந்தில் ஒரு ஏழை தனியாக வந்துவிட்டால் அவர் பாடு கஷ்டம்தான் . யாரும் அவருடன் உட்கார மாட்டார்கள் . அதுபோல் வசதி உள்ளவர் தனியாக வந்து , திருமண வீட்டார் அவரை மற்றவருடன் உட்கார சொல்வார் . இவரோ தன்னுடைய பார்ட்னர் யார் என்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு , சரியில்லையெனில் " ஒரு போனுக்காக வெயிட் பண்ணுகிறேன் , கொஞ்சம் பொருத்து உட்காருகிறேன் ' என்று சொல்லி சமாளித்து , தன் அந்தஸ்துக்கு ஈடான பார்ட்னர் வரும் வரை காத்திருப்பார் .

முன்பின் தெரியாதவர் , ஆனால் பார்பதற்கு நல்ல அந்தஸ்தாக தெரிகிறார் என்று உட்கார்ந்தாலும் சில சமயங்களில் ஒருசில கன்றாவிகளும் நடக்கும் . இப்படித்தான் ஒருமுறை நல்ல குடும்பத்து ஆளிடம் உட்கார்ந்தேன் . மிகவும் அசிங்கமான முறையில் சாப்பிட்டார் . நானும் சரியாக சாப்பிடாமல் எழுந்துவிட்டேன் . பெண்களோ ஒருபடி மேலே . வீட்டில் இருந்து வரும்போதே தன்னுடைய பார்ட்னரை அழைத்துக்கொண்டுதான் வருவர் . எங்கே இருக்கிறது சகோதரத்துவம் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21936

எல்லாம் சரிதான். ஊரின் புறத்தே இருக்கும் நமதூர்வாசிகளின் நாக்கின் சுவைமொட்டுக்களில் நீர் ஊறச்செய்யும் உங்கள் கட்டுரை. ஊரிலேயே இருந்தும் அதை சுவைக்க முடியாமல் திண்டாடும் ஏன் போன்ற இதய நோயாளிகளின் பாடும் கொஞ்சம் கஷ்ட்டம்தான். "காயல் களரி"வெறும் களரி மட்டும் அல்ல. காயலை உலகத்திற்கு அடையாளம் காட்டும் "காலரியும் "அதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: P.S.ABDUL KADER (KAYAL PATNAM) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21946

சிறந்த பண்டாரி கசகசா மொகுதூம் உடைய கலரி சாப்பாடு என்றால் சும்மாவா ? இது எங்கே நடக்கிறது ? அல்பாத்தாஹ் ஹஜ் சர்வீஸ் ஆ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. களரியும் கலோரியும் !!
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 07 September 2012
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21950

நல்லதொரு கட்டுரை. உணவுப் பிரியனாய் அந்நிய தேசத்து உணவுகளைத் (ஹலால் ரெஸ்ட்டாரன்ட்) தேடித் திரிந்து புசித்தாலும் நம்மூர் களறி சாப்பாட்டுக்கு நிகர் எதுவுமே இல்லையென்பது உண்மைதான்.

எவ்வுணவும் உடலுக்கு நலம்... 'தன்னிலை' அறிந்து அளவோடு, தவிர்க்க வேண்டிய நேரத்தில் / பருவத்தில் தவிர்த்து, அவ்வுணவின் மூலம் பெற்ற கலோரியை முறையாக உடற் பயிற்சியின் மூலம் 'பர்ன் /சமன்' பண்ணத் தெரிந்திருந்தால்!!

கல்யாண விருந்த பொறத்தவரை எவரும் ஆற அமர நொறுங்க தின்று கொண்டிருப்பதில்லை. காரணம் போடு சோறு, கத்திரிக்காய் & புளியாணம் எல்லாம் 'இரண்டாம் ரௌன்ட்டில்' பந்தி மாறி போய்விடும்.

முஸ்லிம்கள் வீட்டு திருமணம் என்றாலே 'பிரியாணி' என்று ஆசையுடன் வருவோருக்கு நமது களரி உணவு, அட என்னடா இவனுங்க... வெறும் கறியும் சோறும் ரசமும் தரானுங்கன்னு ஒரு சிறு ஏமாற்றமே.

விளக்கு காக்கா குறிப்பிட்டதுள்ளது போல, திருமண விருந்தை பொறுத்த வரை ஒவ்வொருவரும் தத்தமது சம அந்தஸ்த்து உள்ளவர்களுடன் ஒன்றாக உக்காந்து உண்பது தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதற்க்கு காயலும் விதிவிலக்கல்ல. அதனை சம்பந்திக்கு ஒப்பிடுவது மிகையே.

களரி (திருமண) விருந்தில் நடந்த ஒரு கொடுமை... ஏழை (அடாப்பில் இல்லாதவர்) என்பதற்க்காக ஒரு வயதான சகோதரர் திருமண வீட்டுக்காரரால் (அவரும் ஒரு முதியவர் என்பது வேற விஷயம்) எல்லோர் முன்னிலையிலும் அவமான & தனிமை (சிங்கிள் சகன்.. ஒரு சட்டி கரி கத்திரிக்காயுடன்) படுத்த பட்டார். இது நடந்தது என்னுடைய பள்ளிப் பருவத்தில் என்றாலும் கூட, அன்று அப்பெரியவருக்கு ஏற்பட்ட அவமானத்தை 'ஒரு சக மனிதனாய்' இன்றுவரை சகிக்கவும் மறக்கவும் முடியவில்லை.

விருந்துக்கு வந்த 'கெஸ்ட்' களை 'மனம்' கோணாமல் கவனிப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம் ஆனால் ஏழைக்கும் அதே மனம் உண்டு என்பதனை மறந்து தனிமைபடுத்து கின்றோம். சகன் (திருமண) விருந்துகள் 'சகோதரத்துவத்தை' உணர்த்தா விட்டலும் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் மனித நேயத்தையாவது உணர்த்தட்டும் !!

நாம் உண்ணும் 'களரி' உணவில் எத்தனை கலோரி இருக்கின்றதென்று யாருக்காவது தெரியுமா??? அட போங்கங்க, களரி சாப்பிடும் போது கலோரியாவது குலோரியாவது என்கின்றீர்களா... அதுவும் சரிதான் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: RabiyaRafeeq (kayalpattinam) on 08 September 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 21972

Ungal katturaiyai paditha anaivarukkum nichiyamaha kalari saapadu saapida vendum yendra aasai varum.. Ungal yeluthu nadai kadinamaha illamal mihavum nadaimuraiyaha ullathu..En vaazhthukkal..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: M Sajith (DUBAI) on 08 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21976

நண்பரே,

களறி என்பது 'கலோரி' என்னும் ஆங்கிலச் சொல்லில் இருந்து மருவியதாக சொல்கிறார்களே உண்மையா ?

உமது காயல் தமிழ் கட்டுரையில் விடுபட்டுவிட்டதே !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...ரிபாய், கண்ணாடிய மாட்டு
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 10 September 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22001

வாப்பா ரிபாய், சீக்கிரம் நீ ஒரு கண்ணாடிய வாங்கி மாட்டு, இல்ல இப்ப இருக்குறத மாத்து, மூணாவது போடல பெரிய சட்டி நெறைய புளியாணம் காச்சி வச்சு இங்க வரைக்கும் மணக்குதே, அது தெரியலயாக்கும் உனக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இது ஓர் தனி நபர் விமர்சனமல்ல...! தவிர்ப்பதற்கு! மாறாக, ஓர் விளக்கம் மடுமே...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 11 September 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22013

இக் கட்டுரைக்கு கருத்தெழுதிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆயிரம் நன்றி!

எனது ஆக்கங்கள் அனைத்துமே நமதூர் கலாச்சாரத்தைத் தழுவியே அமைந்திருக்கும். நமதூர் பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் காயல் சார்ந்த நிகழ்வுகளை, நிதர்சணங்களை மைய்யக் கருவாகக் கொண்டு கட்டுரை வடிவில் வெளிக்கொணர்வது எனது வழக்கம்.

ஒரு கட்டுரையாளன் தனது ஆக்கங்களுக்கு வரும் சாதக,பாதக கருத்துக்களையும், விமர்சனங்களையும் உள் வாங்கினால் மட்டுமே அவனது எழுத்து மென்மேலும் பொலிவு பெறும். இதை நான் உருதியாக நம்பக் கூடியவன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 12 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22040

தம்பி சாஜித் சொல்லும் "கலோரி "உண்மையல்ல. ஒரு பெரும் பரபரப்பான நிகழ்வு நடப்பதை "களறி"என்பார்கள் இது தமிழின் பழைய சொல். சாஜித் சொல்வது உண்மையானால் "இரத்தக்களரி "ஆகிவிட்டது என்கிறார்களே...அதை எப்படி பொருள் கொள்வது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...வாய் ஊருது......
posted by: M. Fauz (AlAin) on 13 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22081

உங்களுகென்ன கட்டுரை எழுதி போடோஸ் ம் போட்டுடிங்க. வெளி நாட்ல இருக்கும் எங்களுக்கல்ல வாய் ஊருது. சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வரும்... (பாட்டு) வாழ்த்துகள்.

M . பவுஸ். அல் ஐன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கலரி படுத்தும் பாடு
posted by: NIZAR AL (kayalpatnam) on 20 September 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22289

ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

தங்களுடைய இந்த கட்டுரை எல்லோரையும் நிச்சயம் சந்தோஷத்தில் ஆள்திவிடாது என்றே கருதுகிறேன். ஏனனில் இந்த கலரி சாப்படை அணைத்து மருத்துவர்களும் சாப்பிடாதிர்கள்,இதனால் பல முக்கியமான ஆபத்தான இதயநோய் ,நீரழிவு,குடல்நோய் போன்றவைகளுக்கு மிக காரணமாக உள்ளது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.எனவே இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திருமண விருந்து என்றாலே இந்த களரியை நினைத்து விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இன்னும் இந்த உணவுக்கு மாற்றுவழி தேடாமல் களரிக்கு கதை சொல்வது கடுப்பாக இருக்கிறது.அதன் மூலம் சாப்பிடும் எண்ணையை எப்படி வெளியற்றுவது என்பது நினைக்கவே அதிர்ச்சியாக உள்ளது,எவ்வளவு ஆபத்து இருக்கும் இந்த களரியை இரவில் வைப்பது இன்னும் கொடுமை இல்லையா ?

எனவே ஹிஜாஸ் மைந்தன் அவரகளே அணைத்து வகை நோயாளிகள் பெர்கிவரும் இந்த காலத்தில் இந்த கலரி சாப்பாடுக்கு பதிலாக மாட்ட்ருவளியை சிந்தித்து ஆரோக்கியமான சுவையான உணவை மக்கள் தேந்தடுப்பதுக்கு தங்களின் மேலான ஆலோசனை கூடிய நல்ல கட்டுரையை எதிபார்கிறேய்ன்.

தங்களின் பனி தொடர வாழ்த்துக்கள் .
YOURS,
NIZAR AL
DEEVU STREET,
KAYALPATANAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by: NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) on 20 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22310

காயலை உலகத்திற்கு அடையாளம் காட்டும் "காலரி ,"அதுதான்."காயல் களரி....... காயல் களறி சாப்பாட்டுக்கு நிகர் வேரதுவும் கிடையாது ..

காயலின் களறிச் சோறு! ஓர் அலசல்!! என்ற தலைப்பில் சகோதரர் சமூக ஆர்வலர் ஆசிரியர்: எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) அவர்கள் எழுதிய கட்டுரையே படிப்பதற்கு கம கம என மணக்கிறது. நொறுங்க திண்டால் நூறு வயது என்பார்கள் .ஆனால் இப்போவெல்லாம் ஒரு பிடி வாயில் வைபதற்குக்கூட மக்கள் பயப்படுகிறார்கள் .காரணம் ;அந்த அளவுக்கு மக்களுடைய உடம்பு சூழல் ஆகிவிட்டது. எந்த மக்களைப்பார்த்தலும் இனம் புரியாத நோய் யால்தான் அவதிப்படுகிறார்கள்.

ஆய்ளைக் குறைத்தால் ஆயுள் கூடும் ...என்றும் சொல்கிறார்கள் . அப்படியானால் என்னதான் செய்வது ? கல்யாண வீட்டுசாப்பாட்டுப்பக்கம் கூட நெருங்கக்கூடாதா ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...கலரி
posted by: NIZAR AL (kayalpatnam) on 24 September 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22393

சகோதரர் அஹ்மத் முஹைதீன் அவர்கள் கலரி சாப்பாடு ஆயிலகதான் இருக்கும் அதற்காக கல்யாண சாப்பாடுக்கு செல்லக்கூடாத என்று கேட்கிறார்,உங்களுக்கு அந்த சாப்பாடு ஆரோக்கியம் எனில் நீங்கள் சாப்பிடுங்கள்,சாப்பிட இயலாத மக்களுக்கு மாற்று சாப்பாடு கொடுக்கவேண்டாமா?இரவில் சாப்பிட அழைத்து எல்லோருக்கும் இந்த களரியை சாப்பிட சொல்வது எவ்வளவு கொடுமை என்பதை நீங்கள் உணரவில்லையா ?

YOURS
NIZAR
DEEVU STREET,
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by: SEYED ALI (ABUDHABI) on 24 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22400

கட்டுரையாளர் களறி சாப்பாட்டு பிரியர் என்பதை அவர் தேர்ந்தெடுத்த சுவையான சப்ஜெக்டை ஒரு பருக்கை விடாமல் நன்றாக மென்று சுவைத்து ரசித்து எழுதி இருப்பதிலிருந்து புரிகிறது.களரியை சமைக்கும் பண்டாரியின் கைங்கரியத்தை விட ஆண்டவனின் கைங்கரியம் அபாரமானது,மட்டுமல்ல கொடுமையானது.பின்னே பாருங்களேன்,கெட்ட கொலஸ்ட்ராலையும் அறுசுவையையும் சயாமீஸ் ரெட்டையர்களை போலல்லவோ அவன் ஒட்டி வைத்திருக்கிறான்.ஒரு வேண்டுகோள் களறி சாப்பாட்டில் மட்டன் மட்டும்தான் சுவைக்குமா யாராவது நெய் மீனில் அந்த சுவையை கொண்டுவர மாட்டர்களா? இரத்த கொதிப்பு கொலஸ்ரால் சுகர் இத்யாதி இத்யாதி பேஷண்டுகளுக்கு அந்த புதுமை களறி ஒரு வரப்பிரசாதமாக இருக்குமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஆரோக்கியமானதா...? ஆபத்தானதா...? விவாதம் தவிர்க்கவும். ப்ளீஸ்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 27 September 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22444

எனதருமை வாசகர் மற்றும் கருத்தாளர்களே! காயலின் களறிச் சோறுக்கு எத்தனை வயது என்று எனக்குத் தெரியாது! ஆனால் அது தொண்டுதொட்டே நம்மவர் பாரம்பரிய உணவாக இன்று வரை இருந்து வருகின்றது. சாப்பாட்டு பிரியத்தால் நான் இதை எழுதவில்லை. மாறாக நம் பாரம்பரிய உணவு எனும் கண்ணோட்டத்தில் தான் எழுதியுள்ளேன்.

நம் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன இந்த உணவு களறி வேலைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கென்று (சூழிப் பிள்ளைக்கு) என தனித் தாலம் போவது வழக்கம். இதில் பவுத்தி என்றால் சென்ற பாதையெல்லாம் மணக்கும். தாங்கள் குறிப்பிடும் சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் இவையனைத்தும் இந்த நவீன காலத்தில் (கருவிலிருந்தே ஊசி போட்டு வளர்ந்த நம் காலத்தில்) வந்தவைகள் தாம்! நம் முன்னோர்கள் மூக்குப் பிடிக்க ஒரு கட்டு கட்டித்தானே இருந்திருப்பார்கள். அவர்களுக்கு ஏன் இந்த பிரச்சனைகள் வரவில்லை?

இதை உண்பது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா? என ஆராய்ச்சி செய்யும் நோக்கில் நான் எழுதவில்லை! அந்த உணவைப் பற்றி ஒரு அலசல் என்று தான் தலைப்பும் கொடுத்துள்ளேன். தவறு இருப்பின் பொறுத்தருளுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நன்றி! வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved