Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:23:10 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 53
#KOTWEM53
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 17, 2012
பணம் பத்தும் செய்யுமா?

இந்த பக்கம் 4270 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காட்சி 1

அது ஒரு கஞ்சிக்கு வழியில்லாத ஏழையின் வீடு
வைகறைத் தொழுகை முடிந்து இருள் கலையும் நேரம்
வீட்டு முற்றத்தில் பொட்டலம் கிடக்கின்றது
அருகில் சென்று குனிந்து பார்த்தால்
மஞ்சள் நிற துணியில் ஒரு பொருள் பொதியப்பட்டுள்ளது
கையிலெடுத்து பிரித்து பார்த்தால் பணக்கட்டு
ஏழையான அந்த வீட்டுக்கார விதவை முகம் தெரியாத
அந்த கொடையாளிக்காக இறைவனிடம் வயிறும் நெஞ்சும் நிறைந்து வேண்டுகின்றார்

காட்சி 2

மக்கள் அடிக்கடி புழங்கும் ஒரு பொதுவிடத்தில் பொருத்துவதற்காக சாதனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குகின்றார் ஒரு கனவான். தான் நன்கொடையாக அளித்த பொருளில் தனது பெயரையும் எழுதி பதித்திட வேண்டும் என நிபந்தனையொன்றையும் விதிக்கின்றார்.

“பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை”

என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள்தான் நெஞ்சில் வந்து மோதுகின்றது.

வறுமையும் வளமும் பணமும் முடையும் மனித வாழ்வில் மாறி மாறி வரும் காட்சிகள்.

இந்தக் காட்சி மாற்றங்களில் நாமும் நம்முடைய செயல்பாடுகளும் எந்த எண்ணத்தின் அடிப்படையில் அமைகின்றன என்பதுதான் தலையாய விஷயம். நிறைந்த மனதுடையோர் வாழ்வின் உயர்வு தாழ்வுகளில் தம் நிலையை தாழ்த்திடுவதில்லை. தரமிறங்கி தரையில் உருண்டிடுவதில்லை. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்த பொது நலத்திட்டங்களில் பெரும்பான்மையானவை நம் முன்னோர்களின் தயாள மனதின் விளைவுகளேயாகும்.

பொது விடயங்களில் தங்களது நேரத்தையும் செல்வத்தையும் திறமையையும் உழைப்பையும் ஈந்த அந்த நல்ல மனிதர்கள் யாரும் தங்களின் கொடையின் பெயரால் சட்டாம்பிள்ளைத் தனத்தையோ அல்லது சர்வாதிகாரப் போக்கையோ கைக்கொள்ள விரும்பியதில்லை. காரணம் அந்த பென்னம்பெரும் கொடைகளுக்குப் பின்னணியாக இருந்த அவர்களின் மனதில் அது பற்றிய தெளிவான களங்கமற்றதொரு பார்வையிருந்தது.

அது என்ன பார்வை?

தன்னிடமிருக்கும் நேரம், பணம், திறமை, செல்வாக்கு, சமூக அந்தஸ்து போன்றவையனைத்தும் தமக்கு உரித்தானதல்ல. மாறாக அவையனைத்தும் கடனாக - இரவலாகப் பெற்றவை. அவற்றின் முழு முதல் உரிமையாளன் - சொந்தக்காரன் அந்த அல்லாஹ்தான் என்ற தெளிவு அவர்களுக்கிருந்தது.

அவற்றை வீணடிப்பதோ முறையற்ற வழிகளில் பயன்படுத்துவதோ மிகவும் பாரதூரமான பக்க, பின் விளைவுகளுடன் கைசேதமான முடிவுகளையும் தரவல்லது என அழுத்தமாக நம்பினார்கள்.

ஆனால் இன்றோ...?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட இரண்டு காட்சிகளுமே நமதூரில் நடந்தவைதான். அவற்றுக்கிடையே உள்ள கால அளவில்தான் வித்தியாசம்.

இரண்டாம் காட்சிக்கும் முதலாம் காட்சிக்கும் உள்ள கால இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் மேலாகும். பள்ளத்திலிருந்து சிகரம் ஏற பல காலமாகும். ஆனால் சிகரத்திலிருந்து பள்ளத்திற்கு பாய சில விநாடிகள் போதும்.

மூன்றாம் காட்சி அதற்கு நிகழ்கால சாட்சியாக உள்ளது.

மூன்றாம் காட்சியை நாம் தனியாக எழுதிடாததற்கு காரணம் உண்டு.

இன்று நடக்கும் பரபரப்பு அலம்பல் நிகழ்வுகளுக்கு மூன்றாம் காட்சி என்று பெயரிடுவதை விட ஒரு வருட பழமையான நெடுந்தொடர் என பெயரிடுவதே பொருத்தம் எனத்தோன்றியது.

இரண்டாம் காட்சியில் நாம் கண்ட கனவான்களின் பரிணாம வளர்ச்சிதான் இந்த நெடுந்தொடரின் கதை, திரைக்கதை, வசனம், நகைச்சுவை, சண்டைக்காட்சி, இயக்கம் என அனைத்துமாக உருவெடுத்துள்ளது.

என்னிடம் ஏராளமான பணமுள்ளது. அது ஒன்றே எனக்கு சகல அதிகாரத்திற்கான தகுதியாகும். என்னிடம் கேட்காமல் ஊரிலுள்ள மரத்தின் ஒரு இலை கூட அசையக் கூடாது என சிலர் ஆசைப்படுவதை நினைத்து சிரிக்கவா அழவா என தெரியவில்லை.

நம்மிடம் உள்ள பணம் செல்வாக்கு மூலம் பிறருக்கு உதவ இறைவன் வழியமைத்து தந்தானே என அவனுக்கு நன்றி பகருவதுதான் ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு.

அதை விடுத்து சமூகத்திலுள்ள பலர் தன்னிடம் உதவி பெறுவதையே காரணங்காட்டி அதன் மூலம் அந்த சமூகத்தையே முழந்தாளிட்டுப் பணிய வைக்க முயலுவது இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தமல்ல.

இங்கு பண்ணையார் தோரணையிலான அதிகாரமெல்லாம் காலாவதியாகி பல காலமாகிவிட்டது.

எல்லா வகையான சுதந்திர உரிமைகளையும் கோரும் சனநாயக நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாராவது அந்த கனவுலகில் வாழும் கனவான்களுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

மகுடிக்கு தலையாட்டும் பாம்பு போல தன் பேச்சிற்கு ஊர் மொத்தமும் அசைந்தாட வேண்டும்; இல்லையெனில் என்ன விலை கொடுத்தாவது யாரையும் தன் சொல்லுக்கு முன் மண்டியிட வைக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு செயல்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. உயர்வும் மாண்பும் படைத்த மனிதர்களை விலைப்பட்டியிட்டு அங்காடியில் தொங்கும் கடைச்சரக்காக்கிப் பார்ப்பதென்பது சிலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

இந்த முரட்டுப் பிடிவாதத்தின் விளைவாக ஊரை அடித்து உலையில் போடுபவர்கள், மொடாக்குடியர்கள், வகுப்புவாதி, நெறி பிறழ்ந்தவர்கள் என ஒரு ஏவல் கும்பலுக்கே இரை போட்டு தன் வீட்டு செல்ல விலங்குகளாக வளர்த்து வரும் பெரிய மனிதர்களும் உண்டு. இவர்களின் இந்த சதுரங்க விளையாட்டில் பாரம்பரியமிக்க நமதூர் சிக்கித் தவிக்கின்றது. பொது வாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் முழு மூச்சோடு சில ஏவலாளிகளால் இரவும் பகலுமாக எதிர்க்கப்படுகின்றது.

இவர்களின் துர்போதனைகளில் தலை கிறங்கி வழி பிறழாமல் இருப்பது கனவான்களின் ஈருலக வாழ்வு சிறக்க வழி வகுக்கும்.

நீர் வறண்ட குளத்திலிருந்து பறவைகள் பறந்து செல்வது போல கனவான்களின் பையிலிருக்கும் பணம் கரைந்து விட்டால் அவர்களைச் சுற்றியிருக்கும் துதி பாடிகள் சூடான அடுப்பில் பட்ட பனிக்கட்டி போல கரைந்தோடி காற்றில் கரைந்து மாயமாய்ப் போய்விடுவர். பொதுமக்கள் பாடுபட்டு தேடிய பணங்காசு அரசு அலுவலகங்களில் வாழும் சில ஊழல் பெருச்சாளிகளுக்குத் தீனியாக தாரை வார்க்கப்பட கனவான்களே ஏன் காரணமாக இருக்கின்றீர்கள்?

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் மன உளைச்சலும் உடல் அலைச்சலும் எத்தனை கனமானது என்பதை அறிவீர்கள்தானே? ஊழலும், முறைகேடுகளும் பூமியில் பரவக்காரணமாக இருப்பவர்களுக்கு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் காத்திருப்பது என்ன என்பது தெரியாதா? தீச்செயலுடன் இக்கனவான்கள் செய்யும் அறச்செயல்கள் பாதி குடம் பால் மீதி குடம் நஞ்சு என்பது போல்தான் உள்ளது. காலமும் வரலாறும் தீயவற்றுக்கு சாட்சியாக இருப்பது போலவே தீமைக்கெதிரான முயற்சிகளுக்கும் சாட்சியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மரணத்தை நினை
posted by: D.S.ISMAIL (HONG KONG) on 18 September 2012
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 22238

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு நல்ல முஸ்லிம் கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும் என்ற எண்ணம் இருந்தால், இறைவனுக்கு பயந்து பணத்தை தீய வழியில் செலவு செய்யமாட்டான்.

வீணான வழியில் செலவு செய்யும் தனவந்தர்களுக்கு அல்லாஹ இறையச்சத்தை கொடுத்து நல்ல வழியில் மட்டும் செலவு செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அனைவரும் துஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Nice to read!
posted by: M.A. Muhammad Ibrahim (Guangzhou) on 18 September 2012
IP: 183.*.*.* China | Comment Reference Number: 22240

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ. சாளை பஷீர் ஆரிஃப்,

ஒரு அருமையான, தெளிவான கட்டுரைக்கு நன்றி & வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: salai s nawas (singapore) on 18 September 2012
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22241

பணம் பத்து மட்டும் செய்யாது, பதிநான்கும் செய்யும். புரிஞ்சா புரிஞ்சிகோங்க. உங்களுக்கு விளக்கம் சொல்லியே...................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காட்சி 3
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 18 September 2012
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22242

காட்சி 3 புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி... அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளுங்கள்.....

காட்சி 3 ஏழை நாடுகளை அடித்து அவர்களிடம் உள்ள சிறு செல்வங்களையும் தன வசபடுத்தி, தன்னை ஒரு சர்வாதிகாரி போலவே நினைத்து கொண்டு, நம் கண்மணி நாயகத்தை இழிவு படுத்திய திரைப்பட காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கர்களுக்கும் பொருந்தும்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எந்த சேவல் கூவியவது நல்ல பொழுது விடியட்டும்
posted by: SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 18 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22247

காலத்தின் (காயலின்) கட்டாயம்தான் இவரை இந்த கட்டுரை எழுத வைத்துள்ளது. அருமை அருமை.. புரிந்து கொண்டு செயல்பட்டால் நல்லது.

மகுடிக்கு தலையாட்டும் பாம்பு போல தன் பேச்சிற்கு ஊர் மொத்தமும் அசைந்தாட வேண்டும்; இல்லையெனில் என்ன விலை கொடுத்தாவது யாரையும் தன் சொல்லுக்கு முன் மண்டியிட வைக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு செயல்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

உயர்வும் மாண்பும் படைத்த மனிதர்களை விலைப்பட்டியிட்டு அங்காடியில் தொங்கும் கடைச்சரக்காக்கிப் பார்ப்பதென்பது சிலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

சாளை பஷீர் ஆரிஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. எந்த சேவல் கூவியவது நல்ல பொழுது விடியட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: L.A.K.BUHARY (HONG KONG) on 18 September 2012
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 22249

மிகவும் அருமையான ஓர் கட்டுரை...!! நாட்டின் (தற்கால) நடப்பு நிகழ்வுகளை கோடிட்டு காட்டி மிகவும் அருமையாக வடிவமைத்து இருக்கிறார் எழுத்தாளர்..! சமூக சீர்கேடுகளின் ஆரம்ப காரணியை வேரோடு களைந்தெடுக்கும் நல்ல உள்ளத்துடன்,தூர நோக்கு சிந்தனையுடன் பதிவு செய்திருக்கும் இக்கட்டுரை நிச்சயமாக பாராட்டிற்குரியதே.!!ஆசிரியர் அவர்கள், நம் நகரின் வாழ்ந்து மறைந்த தனவந்தர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக எடுத்துரைத்தது போல, இனி வரும் காலங்களில் அப்படிப்பட்டவர்கள் சமூக பொறுப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் அதற்குண்டான தீர்வுகளையும் பாகம்-2 இல் தொடர்ந்து வழங்கினால் நலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: buhari (chennai) on 18 September 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 22257

assalamualaikum

அருமையான கட்டுரை. சுட சுட தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். இதை போன்று இன்னும் இன்றைய காலத்துக்கு ஏற்ற கட்டுரைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) on 18 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22270

பணம் பத்தும் செய்யுமா? பணம் பத்தும் செய்யும் .ஏன் என்றால் பிணமே பணத்தைக் கண்டால் வாயை பிளக்கிறதே!

ஆனால் இன்ரோ பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு ரூஹு இல்லா சடலமாக ,கஞ்சனாக உலாவரும் மனிதன் என்னவோ வாழ்கையில் மேடு பள்ளம் ! பள்ளம் மேடு ! என்பதை மறந்து அற்ப துன்யாவின் மாய் கை இலே மெய் மறந்து மதிமயங்கி தெநாவெட்டாக துல்லித் திரிகிறான் .இறைவன் நாடினால் ஒரு சகண்டுதான் , வம்பன் காரூனுக்கு இல்லாத பணமா ?! ஷத்தாதுக்கு இல்லாத சொத்தா ?! இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ???

கொடையாளி பாவியாக இருப்பினும் சரியே! அல்லாஹ்வின் நேசன் . உலோபி இபாதத்தாளியாக இருப்பினும் சரியே ! அவன் இறைவனின் விரோதி ,என்பது நபிமொழி ....

பணத்தை உரியமுறையில் உரியவருக்கு உரிய நே ரத்தில் செலவு செய்யாமல் பதுக்கி வைத்தால் அவைகள் எல்லாம் நாளை கியாமத்தில் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்பட்டு அவனுடைய நெற்றி இலும் ,விலாபக்கத்திலும் ,முதுகண் தண்டிலும் சூடு போடப்படும் . என்பது அருள்மறை வசனம் அல்லவா...........!

அற்ப பணத்துக்காக வேண்டி விலை மதிப்பற்ற மனிதனின் மானமும் அல்லவா விலை பேசப்படுகிறது . ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் முழு மூச்சோடு சில ஏவலாளிகளால் இரவும் பகலுமாக எதிர்க்கப்படுகின்றது. ஆனால் ஊழலே தன் உதிரமாக , லஞ்சமே தனது உய்றாக முயற்சிகள் முழு மூச்சோடு நடைப்பெற்று வருவதும் யாராலும் மறுக்க ,மறைக்க முடியாத உண்மை!

கண்ணீரும் மன உளைச்சலும் உடல் அலைச்சலும் எத்தனை கனமானது என்பதை உணர்ந்து இல்லாதோர், இயலாதோர், கல்லாதோர் களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் . பணத்தை பணமாக செலவலித்து பயன் பெருங்கள் . இறைக்கும் கிணறுதான் ஊரும்...

ஆக,,,எழுத்தாளர் / சமூக பார்வையாளர் ஆசிரியர்: சாளை பஷீர் ஆரிஃப் காக்கா அவர்கள் பணம் பத்தும் செய்யுமா?! என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை யை அனைவரும் படிப்பதோடு படிப்பினையும் பெர வேண்டும் .பயனும் பெற வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: K S Muhamed shuaib (chennai) on 20 September 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22300

தம்பி பஷீர் தனக்கே உரிய பாணியில் "பணம் படுத்தும் பாடு "குறித்து எழுதியுள்ளார். அந்தக்காலத்தில் "பணக்காரர்கள் "என்று ஒரு வர்க்கம் நமதூரில் இருந்ததில்லை. சற்று வசதியானவர்களை நாம் "பணக்கார்கள் "என்று பெயரிட்டு அழைத்திருப்போம். அப்போது நமதூரில் இருந்தவர்கள் எல்லாம் பெரும்கொண்ட தனவந்தர்கள்தாம். தங்களது வியாபாரத்தில் கிடைத்த உபரி லாபத்தை பொதுப்பணிகளுக்கு தாராளமாக அள்ளி வழங்கினார்கள். மரியாதைக்குரிய எல்.கே அவர்கள் தனது நகைக்கடையில் வந்த உபரி லாபத்தைதான் பள்ளி கட்டிடம் கட்ட உபயோகித்தார். அன்றைய தினம் அவர் சுயநல நோக்கோடு சிந்தித்து இருந்தால் இன்றைய எல்.கே பள்ளிகள் எனபது இல்லை.

ஒரு அ.கா இல்லை எனில் இன்றைய நமதூர் போஸ்ட் ஆபீஸ் இல்லை. ஒரு கம்பனியார் குடும்பம் இல்லை எனில் இன்றைய நமதூர் விரிந்து பரந்த (எ..அப்பா...எவ்வளவு பெரிய இடம்..) நகராட்சி அலுவலகம் இல்லை. இப்படி நிறைய உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.

வியாபாரத்தில் எவ்வாறு தர்ம, நியாங்களை பின்பற்றி ஒழுகினார்களோ, அதையே தங்களது பொதுக்காரியங்களிலும் பின்பற்றினார்கள்.

ஆனால் இன்றைகிருக்கும் "பணக்கார வர்க்கம் "அவ்வாறில்லை. இவர்களுக்கு வியாபாரத்தில் மட்டுமே பணம் குவிகிறது என்று சொல்ல முடியாது. பல தீய வழிகளிலும் இவர்களிடம் பணம் குவிகிறது. அதை இவர்கள் தீய காரியங்களுக்கும், தங்களின் "துதி பாடி"களுக்கும் அள்ளி வீசுகிறார்கள். தங்களது பணத்தால் தங்களையே "விற்பனை "செய்து கொள்கிறார்கள்.

இவர்களிடம் தன்மானமும் இல்லை. இறையச்சமும் இல்லை. இது போன்ற "நவீன பணக்கார வர்க்கம்" மற்ற பல சமுதாயங்களுக்கு பழகிப்போன ஓன்று. நமது சமூகத்திற்கு, குறிப்பாக நமதூருக்கு "புதிய அனுபவம்". எனவேதான் தம்பி பஷீர் பொங்கி எழுந்திருக்கிறார்.

இத்தகைய தீய சக்திகளை அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு கொண்டு அவைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இதன் உந்து சக்தியாக ஒரு இளையோர் பட்டாளம் இன்று எழுந்து வருவது மனதிற்கு பெரும் ஆசுவாசம் அளிக்கிறது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) on 20 September 2012
IP: 37.*.*.* | Comment Reference Number: 22309

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை சகோதரர் ஹாஜி .சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின்.இக் கட்டுரை மிகவும் அருமையானது & மக்களுக்கு நல்ல பயன் உள்ளதாகவும் இருக்கிறது.

நம்முடைய முன் காலத்தையும் & இன்றைய காலத்தையும் நம் கண் முன் அப்படியே கொண்டு வந்து விட்டார். எம் பாரட்டுக்கள் தமக்கு உரித்தகுக.....

தம்முடைய இந்த சிறப்பான நல்ல கட்டுரைகள் தொடர்த்து வரவும் + நம் மக்களின் விழிப்புணர்வுகாகவும்....... தங்களின் சீரிய நல்ல பயன் உள்ள கட்டுரைகளை எதிர் பார்த்து காத்துள்ள தங்களின் வாசகர்களின் நானும் ஒருவனாக உள்ளேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: mohamed faiz (chennai) on 23 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22391

அஸ்ஸலாமு அழைக்கும்.

பணம் பத்தும் செய்யுமா? அல்லது பதினாலும் செய்யுமா? அல்லது பதினெட்டும் செய்யுமா? அல்லது பத்தொன்பதும் செய்யுமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவன் முன் நிற்கும் அந்த நாளில் பணம் எத்தனை செய்ததோ,அத்துனைக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த உலகில் மட்டும் தான் காட்சிகள் மாறும். ஆனால் மறுமையின் காட்சிகள் நிரந்தரமானவை. அங்கே பணத்தை வைத்து பத்தோ அல்லது பதினாலோ எதுவுமே செய்ய முடியாது. அதற்கு பயந்து அல்லாஹ் தந்திருக்கின்ற பணத்தை, மறுமையில் நன்மையாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

சகோ சாளை பஷீர் ஆரிப் அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. மென்மேலும் பல அறிய கட்டுரைகளை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இந்த கட்டுரை கண்டிப்பாக நிகழ்காலம் பத்திரிக்கையில் வெளிவர வேண்டும்...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) on 28 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22500

மிகவும் அருமையான ஓர் கட்டுரை...!!

இந்த கட்டுரையை ஜும்மாவில் நோட்டீசாக விளியோகம் செய்தால் மிக்க நன்று... காரணம்...? இணையதளம் இல்லாத... காண முடியாத மக்களில் பல பேர் இந்த கட்டுரையை நோட்டீசு மூலம் படித்து விளங்கி கொள்வார்கள்...

அல்லது இந்த கட்டுரையை நிகழ்காலம் பத்திரிக்கை மூலமாக மக்கள் கைகளில் கிடைக்க செய்தால் அனைவரும் படிப்பார்கள்... விழிப்புணர்ச்சி கொள்வார்கள்... உழைக்கும் பணத்தை நல்வகையில் செலவு செய்வார்கள்... ஆணவம் இறங்கும்.. அமைதி திரும்பும்... மக்கள் சந்தோசம் கொள்வார்கள்... தனது பணத்தை வைத்து தானும் நல்வழியில் நடப்பார்கள்....

இந்த கட்டுரை கண்டிப்பாக நிகழ்காலம் பத்திரிக்கையில் வெளிவர வேண்டும்... எனது கருத்து...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பணம்
posted by: hylee (colombo) on 11 October 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22753

ஈட்டி எட்டியமட்டும் பாயும்,பணம் பாதாளம் வரைக்கும் பாயும்.வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved