Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:45 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 59
#KOTWEM59
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!

இந்த பக்கம் 6468 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ا ب ت ث ... அலிஃப், பே, தே, ஸே

இந்த எழுத்துகள் பள்ளிக்குப் போய் ஆலிம்சாவிடம் ஓதியதையும் காலை மாலை மக்தப் பள்ளியையும் ஞாபகமூட்டுகிறதா?

அட வாப்பா… எழும்பி சுபுவு தொழுவுமா… தொழுவீட்டு பள்ளிக்கிப் போமா என்ற உம்மாமார்களின் குரல் பிள்ளையை எழுப்பிவிடும். தேயிலை குடித்து, வாடா கடித்து பிள்ளைகளை பள்ளிவாசல்தோறும் இயங்கிய மக்தப் பள்ளிக்கு அனுப்பியதையும் குர்ஆன் கல்வியுடன் தொடங்கியதையும், மாலை நேரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் மீண்டும் குர்ஆன் ஓதுவதற்காக பள்ளிக்கு விரைவது. பின்னர் விளையாட்டு என அந்தக் காலத்தை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம்.



டேய் எழும்புடா… ஸ்கூலுக்கு டைமாகிவிட்டது… சீக்கிரம் கிளம்பு என்று ஏழு அல்லது எட்டு மணிக்கு பிள்ளைகள் எழுப்பப்பட்டு, அது சோம்பல் முறித்து அரைகுறையாக ஆயத்தமாகி சுப்ஹும், குர்ஆன் ஓதலும், காலை துஆ, திக்ருகள் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் சிறார்களின் இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்ப்போம்.

ஸ்கூல் விட்டு மாலை வீடு வந்தும் வராமல், சீக்கிரம் ரெடியாகு… ட்யூஷனுக்குக் கிளம்பு… என கொண்டுவந்த பொதிமூட்டையை மீண்டும் சுமந்துகொண்டு ட்யூஷனுக்கு செல்லும் பரிதாபமான சூழல். இத்தகைய சூழலில் உருவாகும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இப்படித்தான் இன்றைய இளம் பிஞ்சுகளின் காலைப்பொழுது அமைந்துள்ளது. இப்படித் தொடங்கும் காலைப் பொழுதில் எவ்வாறு ‘பரக்கத்’ எனும் அருள்வளம் இறங்கும்? இத்தகைய கல்வி முறையால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றிபெற இயலும்? இத்தகைய சூழலில் குடும்பங்களில் எவ்வாறு அமைதி தவழும்? நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு கிடைக்கும்? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

கோளாறு எங்கே? அதை சரி செய்வது எவ்வாறு? மாற்று வழி என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதைவிட சிறந்த வழிமுறைகளை உங்கள் கருத்துகளின் வாயிலாக பதிவு செய்யுங்கள். சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே இதன் தீர்வாக இருக்க வேண்டும்.

1980களில் எனது மக்தப் கல்வியை காட்டுத் தைக்கா தெரு அரூஸிய்யா பள்ளியில் தொடங்கினேன். அப்போது அரபி எழுத்துகளையும், குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சியையும் அளித்தவர் பேட்டை ஹஸ்ரத் என்ற பெரியவர். எளிய முறையில் அழகிய விதத்தில் எங்களைப் பயிற்றுவித்தார். குர்ஆன் ஓதித் தரும்போதே அதில் வரும் வினைச் சொற்களை ‘ஸர்ஃப்’ எனப்படும் ‘ஃபஅல’ ‘ஃபஅலா’ ‘ஃபஅலூ’ வாய்ப்பாட்டை போதித்தார். இப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்களில் குர்ஆன் மக்தப் மதரஸாக்கள் சிறப்பான முறையில் உயிரோட்டத்துடன் இயங்கிவந்தன.

விளைவு அதிகாலை (ஸுப்ஹ்) வேளையிலும் அந்தி சாயும் (மஃக்ரிப்) வேளையிலும் இல்லங்கள்தோறும் இறைமறையின் இனிய ஓசையை செவியுறலாம். வாழ்க்கை முறையில் ‘பரக்கத்’ எனும் வளமும் செழிப்பும் பொங்கிய பொற்காலமது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி தொலைக்காட்சி பெட்டிகள், இண்டர்நெட், மொபைல் போன் ஆதிக்கமும் உலகியல் கல்வியின் முன்னுரிமையும் அளவுக்கதிகமாக வழங்கப்பட்டு, பிள்ளைகளிடம் குர்ஆன் மக்தப் கல்வி இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப நிலை. இதனால் குடும்பங்களில் ஒரு விதமான மனஇறுக்கமும் அழுத்தமும் அதிகமாகி நோய்கள் பெருகியுள்ள காலமிது. வாழ்வியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்த ஒழுக்க விழுமியங்களின் மூலக்கூறு அல்லது அடிப்படை திருக்குர்ஆனிய வாழ்வியல் முறையே. அதனால் வார்த்தெடுக்கப்பட்ட சமூகம் காலமெல்லாம் வசந்தத்தையே சுவாசிக்கும். இன்று நம் பிள்ளைகளின் உலகியல் கல்வி குறித்து எதிர்காலத் திட்டத்துடனும் கனவுகளுடனும் பல திட்டங்களை வகுக்கிறோம். அதில் தவறேதும் இல்லை. அவ்வாறு கவனமாகத் திட்டமிடும் நாம், பிள்ளையின் வாழ்வியல் மற்றும் மார்க்க விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் சற்று கவனக்குறைவாக இருக்கிறோம்.

இதனால் பிள்ளைகளிடம் காணப்படும் சில தவறான பழக்கங்கள் குடும்பத்தின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதை அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் நம்மை கவலையடையச் செய்கிறது. இதில் குடும்பப் பாரம்பரியம் கவுரவம் என்ற நிலை கடந்து சமூக சீரழிவுகள் இளம் வயதினரிடம் தாக்கம் செலுத்திவருவதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

காரணம், அவர்களுக்கான அடிப்படைக் கல்வியான தீனிய்யாத்தை சரிவரக் கொடுப்பதில் நாம் காட்டிய அலட்சியம்தான். நவீன தொடர்பு சாதனங்கள் இன்று குடும்பங்களிடையே கலாசார சீரழிவை புற்றுநோய் போல் பாய்ச்சியுள்ளது. அலைபேசியால் (Mobile) அலைக்கழிக்கப்பட்டு, முகநூலால் (Facebook) முகம் காட்ட முடியாமல் ஆக்கப்படுகின்றோம்.

இந்தியாவில் இஸ்லாத்தின் வருகையை வரலாற்றில் நோக்கும்போது, அது நமதூருக்கு மிகவும் தொன்மையானது; மார்க்க அறிவு நிறைந்த ஊர் என்றெல்லாம் பேசிக்கொள்கின்ற நம்மிடையே இந்த அவலங்கள் அரங்கேறுவது ஏன்? என்பதை சற்று நிதானமாக சிந்தித்து வினா எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

அண்மைக்காலமாக மார்க்க அறிவைப் போதிக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் குறைந்துபோகும் நிலையை எண்ணும்போது வேதனையாக உள்ளது. சில அரபிக் கல்லூரிகள் சப்தமின்றி தம் பணிகளை நிறுத்திக்கொண்டன. சில அரபிக் கல்லூரிகளில் மாணவர்களைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இப்படியே போனால் பள்ளிவாசல்களில் தொழுவிப்பதற்கு இமாம்கள் கிடைப்பது கஷ்டமாகிவிடும் என்று பேசப்பட்டுவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வடமாநிலத்தவர்தான் பள்ளிவாசல்களில் பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

அதே வேளையில், நவீன காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டத்தை அமைத்துள்ள கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். நமதூரில் நவீன பாடத்திட்டத்துடன் கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் ஆர்வப்பட்டனர். ஆசிரியர் கிடைப்பதில் பிரச்சினையில்லை; தரமான பாடத்திட்டமும் தயார்; மாணவர்கள் கிடைப்பார்களா…? என்ற ஓராயிரம் கேள்விகளுடனும் மலைப்புகளுடனும் இத்திட்டம் தற்போது நிலுவையில் உள்ளது.

காயல்பட்டினத்தின் கடந்தகால சரித்திரத்தைச் சற்று திரும்பிப் பார்க்கிறோம். நமதூர் பாரம்பரியத்தை பேணிக் காத்ததில் பெரியவர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. காயல்வாசிகள் சர்வதேச வணிகச் சமூகமாக இருந்துவந்துள்ளனர். அவர்கள் வணிகத்திற்காக சென்ற இடங்களிலெல்லாம் மார்க்கப் பணிகளை பொதுநலத்துடன் செய்துவந்துள்ளனர் என்பது வரலாறு.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்றிருந்தோம். பயணத்தின்போது இலங்கையில் உள்ள இஸ்லாமியக் கலாசாலைகளைத் தரிசித்தோம். காயல்பட்டினத்திலிருந்து வந்துள்ளோம் என்றவுடன் அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு. தமிழகத்திலிருந்து அதிலும் குறிப்பாக காயல்பட்டினத்திலிருந்து அவர்களுக்குக் கிடைத்தவற்றை பெருமையுடன் நினைவுகூர்ந்தனர். இன்றைய சூழலில் மார்க்க அறிவு வறண்டுபோய் காணப்படுகிறது. அறிஞர்களிடையே நடைபெற வேண்டிய கலந்துரையாடல்கள் பாமர மக்களிடையே சகஜமாக விவாதிக்கப்படுகிறது. அறிஞர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் கருத்தை மற்றவர் சீரணிக்கத் தயாரில்லை.

மார்க்கச் சட்ட விவகாரங்களில் எப்போதும் மோதல் போக்கே தொடர்கிற நிலை. இதனால் ஒரு நற்செயலை செய்வதற்கு பதிலாக அவற்றை எவ்வாறு செய்வது என்ற கருத்துமோதல் முன்னே வந்து நிற்கிறது. அதனால் அது அடிபட்டுப்போய்விடுகிறது. அவரவர் மார்க்கத் தீர்ப்பு வழங்கி ‘முஃப்தி‘யாகும் கவலைக்கிடமான போக்கு. எந்தக் கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதில் அதி தீவிர நிலைப்பாடு. இதனால் நடுநிலை சிந்தனையாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போல நடுநிலை சிந்தனை, நடுநிலைப் போக்கு என்ற பார்வையே நம்மில் காணப்படாமல் உள்ளது. இவை அனைத்துக்கும் தீர்வாக நமது மஹல்லாக்காளில் குர்ஆன் மக்தப் மதரசாக்களை துரிதமாக தொடங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் மூலம் நம் சந்ததியினரை சரியான தீனுடைய வார்ப்பில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. காயல்பட்டினத்திலிருந்து இஸ்லாமிய அறிவுஜீவிகள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் மார்க்கச் சேவை ஆற்ற வேண்டும். சமூகக் கவலை கொண்ட ஒவ்வொருவரும் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் குர்ஆன் மக்தப் மதரசாக்களை உருவாக்கும் பணியை சென்னையைச் சார்ந்த ஓர் அறக்கட்டளை அழகிய முறையில் பணியாற்றிவருகிறது. அச்சிடப்பட்ட தெளிவான பாடத்திட்டத்துடன் திறம்பட பாடநூல்களை வெளியிட்டுள்ளது. மக்தப் + தீனிய்யாத் இணைந்த பாடத்திட்டத்தில் இளம் சிறார்களை ஈர்க்கும் வண்ணம் நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் சீருடையுடனும் சிறந்த சூழலுடனும் இம்மக்தப் மதரசாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. காண்க இணைப்பு: www.deeniyat.com

தொலைநோக்குப் பார்வையுடன் அமைத்துள்ள இதுபோன்ற மக்தப் மதரசாக்களை நமது மஹல்லாக்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அமல்படுத்திட உலமாப் பெருமக்களும் ஜமாஅத் பொறுப்பாளர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும். ஊருக்கு வெளியே வசிக்கும் காயல்வாசிகள் தம் பிள்ளைகளின் மார்க்கக் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த இதுபோன்ற செயல்களுக்கு ஊக்கமும் ஆலோசனைகளும் அளித்து தம் பிள்ளைகளை அனுப்பிவைக்க தாய்மார்களைத் தூண்ட வேண்டும். எதிர்காலத் தலைமுறையினர் கலிமாவுடனும் இஸ்லாத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கான அடித்தளம் இதுபோன்ற மக்தப் மதரஸாக்கள்தான். எனவே, இதில் நமது கவனத்தைக் கூடுதலாகக் குவிப்போம். பெற்றோர் தம் பிள்ளைகளை இஸ்லாமியச் சூழலில் வார்த்தெடுப்பதற்கான சிறந்ததோர் அமைப்பு இம்மக்தப்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
படைத்த உமதிறைவனின் பெயரால் நீ ஓதுவீராக! (அல்குர்ஆன், 96:1)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர். (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி); நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 5027)

எனவே, நம் தலைமுறையினரை மார்க்கத்தின் தூண்களாக்குவோம். ஒவ்வொரு மஹல்லாவிலும் குர்ஆன் மக்தப் – காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: s.i.ahamed (colombo) on 14 October 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22804

நல்ல முயற்சி. சிறிலங்காவில் இது நல்ல முறையெல் நடந்து வருகிறது ஜம்மியது ullama ஆலிம்கள் எல்லோரும் ஒன்று சேர்த்து நல்ல முறைஎல் நடத்து கிறார்கள் நாம் இதை நம் முகல்லாவில் நடத்தலாம் .insaallah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாஷா அல்லாஹ்
posted by: Ismail (Dammam) on 14 October 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22808

மாஷா அல்லாஹ் ஹாபிசா..
தரமான கருத்துக்கள்..

எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு நாளாக..?
தொடர்ந்து எழுதுங்கள்..
உங்களுக்கும், சமூகத்துக்கும் பிரயோசனம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இக்கட்டுரை காலத்தின் கட்டாயம்!
posted by: Firdous (Colombo) on 15 October 2012
IP: 223.*.*.* India | Comment Reference Number: 22815

சகோதர் புஹாரியின் கட்டுரை மிகவும் அருமை! இது காலத்தின் அவசியம். 20 வருடங்களுக்கு முன்பு மார்க்க கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் குறைவுதான்.

சிலோனில் ஒவொரு பள்ளியுள் அஸ்ர் தொழுகைக்கு பின் குரான் மக்தப் நடத்துகிறார்கள். தொழ வைக்கும் இமாம் நடத்துகிறார். சிறுவர்களும், சிறுமியர் (ஹிஜாபுடன்) வருகிறார்கள். சில பள்ளியில் அஸ்ர் முன் ஆரம்பித்து மாணவர்களை கொண்டு அஸ்ர் ஜமாஅத் வைகிறார்கள். பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. இது போன்று நமதூரிலும் காண ஆவலாக இருக்கிறது.

அகில இலங்கை ஜமாஅத் உலமாவின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது. எல்லா கொள்கை உலமாக்களும் உறுபினராக உள்ளார்கள். முசுலிம்களின் பொது பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். உணவு பதார்த்தங்கள் மற்றும் உணவகங்களில் இவர்களது ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் சாப்பிடுவது இல்லை.

இது போன்ற அமைப்பு தமிழகத்திற்கு வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காலத்திற்கேற்ற கருத்துள்ள கட்டுரை
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 15 October 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22823

மாஷா அல்லாஹ். அருமையான கட்டுரை. அனேகமாக எனதருமை நண்பர் ஹாஃபிழ் புகாரீயின் கன்னிக் கட்டுரை இது என்று எண்ணுகிறேன். அசத்தியிருக்கிறார். காயல் தமிழிலும், தூய தமிழிலும் எழுதியுள்ளது சிறப்பு.

கேரளாவில் இன்றளவும் இந்த மக்தப் அமைப்பு உறுதியாக உள்ளது. அதனால்தான் உலகெங்கும் பரவிக் கிடக்கும் மலையாளிகளில் பெரும்பாலோர் ஈமானிய பிடிப்போடு, குறைந்தபட்சம் தொழுகையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறவே தொழாத மலையாளி கூட அழகான உச்சரிப்புடன் குர்ஆன் ஓதுவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். சிறு வயதில் மக்தப் சென்று அவர்கள் குர்ஆனையும், மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களையும் கற்று விடுவதுதான் இதற்குக் காரணம். அது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.

மக்தபினால் ஏற்படும் இன்னொரு முக்கிய பலன் குர்ஆன் உச்சரிப்பு. சிறு வயதில் குர்ஆன் ஓதி முறையான உச்சரிப்புப் பயிற்சியை எடுப்பவர்களுக்கு மட்டுமே அரபி உச்சரிப்பு சரியாக வருவதைக் காண்கிறோம். அப்படியில்லாமல் வயதான பின் ஆர்வப்பட்டு குர்ஆனைக் கற்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த உச்சரிப்பு வருவதில்லை. வசம்பு இலையைப் போட்டு நாக்கில் தேய் தேய் என்று தேய்த்தாலும் அந்த அழகிய உச்சரிப்பு வராது.

ஆக, நமது மார்க்கம் நிலைபெற்றிட, திருக்குர்ஆன் உள்ளங்களில் உறுதிப்பட்டிட மக்தப் மிக அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மக்தப் காலத்தின்கட்டாயம்
posted by: samsudeen (kayalpatnam) on 16 October 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22828

சகோதரரின் கட்டுரை இத்தருனதிர்க்கு ஏற்றது வரவேற்க வேண்டிய அற்புதமான கட்டுரை.கடந்தகாலத்தை கண்முன்னே கொண்டு வந்தார். இன்ஷா அல்லாஹ் masjithuthouheed சார்பாக கூடிய விரைவில் மக்தப் வகுப்பு ஆரம்பம் செய்ய இருக்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அல்லாஹ் தான் நமதூரைப் பாதுகாக்க வேண்டும்......................
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 17 October 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22848

சிந்திக்கவேண்டிய, அறிவுப்பூர்வமான கட்டுரையை சகோதரர் புஹாரி வழங்கி இருக்கிறார்.

தேவை, வழங்கு (Demand, Supply) என்பது வியாபாரத்தில் காணப்படும் மூலக்கூருகலாகும். டிமாண்ட் இல்லை ஆனால் சப்லை அதிகமாக உண்டெனில் அந்த வியாபாரம் விரைவிலேயே அடிபட்டு போகும். டிமாண்ட் அதிகம் ஆனால் சப்லை இல்லையெனில் உற்பத்தியில் கோளாறுகள் இருக்கலாம். அல்லது பொருள் வருவதற்கு தடையேதும் இருக்கலாம். அதில்தான் பணவீக்கமும் உண்டாகிறது. பல பிரச்னைகளும் எழுகிறது.

இதையே மார்க்கக் கல்விக்கும் அப்லை செய்து பார்ப்போமானால் கற்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. ஆனால் கற்றுக் கொடுப்பவர்களுக்கு (சப்லை) பஞ்சமில்லை. இது இப்போதைக்கு உள்ள நிலவரம் மட்டும் தான். ஏனெனில் மக்தபைப் பற்றி விவாதிக்கும் இவ்வேளையில் மதரஸாக்களின் நிலையே மூடுவிழா நடைபெற்று வருவதாக நம் கட்டுரையாளர் ஒரு அபாயச்சங்கு ஊதி இருக்கிறார்.

ஒரு பழம்பெரும் மத்ரஸாவில் வருடத்திற்கு 500 பேர் படித்த நிலை மாறி இப்போது வெறும் 250 என்ற கணக்கில் படித்து வருவதாகவும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவாக இருப்பதாகவும் ஒரு சங்கைக்குரிய மார்க்க அறிஞர் தனது பேச்சுக்களில் தொடர்ந்து புலம்பி வருகிறார். அடுத்து தேவையைப் பற்றி பார்ப்போம். ஆன்மீக வறுமை நிலவி வரும் காலமிது.

இப்போதுள்ள பஞ்சத்திற்கும் வறுமைக்கும் அடிப்படையாக ஆன்மீக வறுமையைப் பிரதானமாகக் கொண்டால் அதில் பிழை இல்லை. உதாரணத்திற்கு நமதூரில் வெகுகாலமாக மழைப் பெய்யவில்லை என வைத்துக்கொள்வோம். அதுதானே உண்மையும் கூட. மழை வேண்டுமெனில் அதற்கான தொழுகையை நாம் தொழுது இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

இப்போது மதரசாக்களும் இல்லை மக்தபுகளும் இல்லை எனும் நிலையில் எப்படி யாரைக்கொண்டு இதைச்செய்ய முடியும். வெளியூர்களில் பல ஊராருக்கு மழைத் தொழுகை என்றால் என்னவென்றே தெரியவில்லை. இந்த நிலையில் ஆன்மீகத் தொடர்பு கிடைக்காது. அந்த அல்லாஹ்வும் காப்பாற்ற மாட்டான்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :
ஒரு சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் அதை மாற்ற (உதவ) மாட்டான். அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டால் பிறகு யாரால் நம்மைக் காப்பாற்ற முடியும்.

இன்று நிகழும் அனைத்து தீமைகளுக்கும் (என்னென்ன தீமைகள் என்று நான் சொல்லவா அல்லது நீங்களே எண்ணிக் கொள்கிறீர்களா???) மூல காரணமே மார்க்க அறிவு குறைந்து போனதுதான்.

உலகக் கல்வியின் மீதான மோகமும் வேகமும் மார்க்கக் கல்வியை அடியோடு புறந்தள்ளி விட்டது. சென்ற 15-20 ஆண்டுகளாய் கவனிக்கத் தவறிய மார்க்க அறிவு இப்போது ஆன்மீக வறுமைக்கு இழுத்துச் சென்றதால் தான் 15-20 வயதினர் (ஆண், பெண் இரு பாலரும்) ஒழுக்க வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று கொண்டிருக்கின்றனர்.

எனவே இப்போது குறைந்தது சில பேராவது இது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் நமதூறார் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் அந்த அல்லாஹ் தான் நமதூரைப் பாதுகாக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மேலும் இது போல் நல்ல பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்..
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) on 17 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22861

குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை பற்றிய தாங்களின் கட்டுரை மிக அருமை... இக்காலத்தின் மக்களின் (குடும்பங்களின்) இயல்பு வாழ்க்கை நடப்பை மிக தெளிவாக உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்...

ஹாஃபிழ் எம்.என். முஹம்மது புகாரீ அவர்களே... உங்களின் கட்டுரைகள் மூலம் பலரும் (நான் உட்பட) படிப்பினை பெற வேண்டும்.. மேலும் இது போல் நல்ல பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்..

எனது பள்ளி படிப்பு கால நண்பர் சமீமுல் இஸ்லாம் அவர்கள் உங்களின் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்து மேலும் நாம் அதிகம் சிந்திக்க கூடிய மிக முக்கியமான விசியம்...

வல்ல இறைவன் நம் அனைவர்களையும் நன்மைகள் செய்ய கூடிய பக்கம் நேர்வழி படுத்துவானாக ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மக்தப்
posted by: Salai. Mohamed Mohideen (USA) on 23 October 2012
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 23028

நல்லதொரு கட்டுரை !

பலமுறை நான் இதை நினைத்ததுண்டு. மக்தப் (அரூசியா பள்ளி) , மதரசா (MARO) & காயலின் இஸ்லாமிய பாரம்பரியம் மட்டும் இளம்பருவத்திலேயே கிடைக்காமல் போயிருந்தால்... நாமும் பத்தோடு பதினொன்றாக வசிக்கும் மேலைநாட்டின் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்திருப்போமோ என்று.

இங்கே உள்ள 'ப்ளேனோ' பள்ளியில் அஷர் தொழுகைக்கு பின்னர் நடைபெறும் மக்தப் வகுப்புகளுக்கு தினமும் ஐம்பது பிள்ளைகளும் & வாரந்தோறும் நடைபெறும் சண்டே ஸ்கூல்-க்கு (நம்மூர் மதரசா மாதிரி) நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் வருகின்றார்கள். இக்காலத்திலும் கூட உலக கல்வியை கற்றுக்கொண்டே ‘ஹிப்ழ்’ பயில்பவர்களை இங்கே காணமுடிகின்றது

ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இது சாத்தியம் என்றால்... நமதூரில் ?

கோளாறு எங்கே? –

1. மாறிவரும் நமதூர் மக்கள் & முஸ்லிம் சமுதாயம். மேலைநாட்டினரை போன்று உலக வாழ்வில் (Worldly & Materialistic life) முங்கி விட்ட கொடுமை.

2. உலகக் கல்வி, மார்க்கக் கல்வியை புறந்தள்ள தொடங்கிய போது இவ்விரண்டுமே தனிமனித முன்னேற்றத்துக்கு முக்கியம் என்று 'தொடர்ந்து' உணர்த்த தவறிய மக்தப், ஆலிம் பெருந்தகைகள், மதரஸா நிர்வாகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் /அமைப்புகள்

அதை சரி செய்வது எவ்வாறு? -

1. தெருவுக்கு தெரு கம்பீரமாக பள்ளிகளை கட்டி வைத்து அழகு பார்ப்பதோடு நில்லாமல் ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தனது முஹல்லாவாசிகளை தொழுகைக்கு ஆர்வப்படுத்தவும் & பள்ளி இமாம்களை கொண்டு மக்தப் வகுப்புகளை தினந்தோறும் நடத்த வேண்டும்.

2. பள்ளிநிர்வாகங்கள் தேர்ந்தெடுக்க பட்டு 'பெஸ்ட் ஸ்கூல்' விருதை போன்று 'பெஸ்ட் மக்தப் பள்ளிகள்' என்ற விருதகளை சமூக இயக்கங்கள் வழங்க வேண்டும்.

மாற்று வழி என்ன?

1. நவீனகால யுகங்களை மார்க்க விசயங்களுக்கு நாமும் பயன்படுத்தி பிள்ளைகளுக்கும் பயன்படுத்த வலியுறுத்துவது

2. மேலை நாடுகளில் உள்ளது போன்று 'இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள்'


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...good
posted by: mohideen (kayalpatnam) on 25 October 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23067

அஸ்ஸலாமு அழைக்கும், நல்ல முயற்சி அனால் குழந்தைகள் மட்டும் குர்ஹான் ஓது வது என்ற நிலை மாரி பெரியவர்கள் குர்ஹான் அர்த்தத்துடன் ஓது வது போன்ற பயிற்சிகள் ஏற்பாடுகள் பள்ளிகளில் நடந்தால் வருங்கால இளய சமுதாயம் இஸ்லாமியார்களாக வாழ வலிவுள்ளது .காரணம் வேர்கள் சரியாக இருந்தால் மறம் நன்றாக வளரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved