Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:23:30 AM
ஞாயிறு | 5 மே 2024 | துல்ஹஜ் 1739, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:30
மறைவு18:28மறைவு15:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 6
#KOTWEM6
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 3, 2012
இது தேர்வு காலம்!

இந்த பக்கம் 3138 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிளஸ் 2 மாணவ மணிகளுக்கு தேர்வு காலம் நெருங்கிவிட்டது. மாணவர்கள் அதிக மார்க்குகள் வாங்கி தேர்ச்சிப் பெற்று, தாங்கள் விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்து அதிலே சேர்ந்து , படித்து, தம் வாழ்வை வளமாக்கிக் கொள்ள களம் இறங்கி விட்டார்கள்.

இன்றைய மாணவர்கள் பலர் வருங்காலத்தை சிந்திப்பவர்களாக இருப்பதால் கல்வியை கற்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். அதனால் , அவர்கள் என்னதான் விளையாட்டும் , கேளியும், கூத்துமாக நேரத்தை கழித்தாலும் படிப்பிலே கவனமாக உள்ளனர்.

தேர்வு காலம் நெருங்கிவிட்டதால் இப்பொழுது அவர்கள் எல்லோரும் படிப்பதிலே கவனம் செலுத்துவதை காணமுடிகிறது. கடற்கரைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்து விட்டது , இரு சக்கர வாகனங்களின் அனாவசிய , ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை காணமுடியவில்லை. அதுமட்டுமல்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்வு முடியும்வரை ஃபேஸ்புக்' கையே பார்ப்பதில்லை என்று சபதம் ஏற்று இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறதல்லவா?.

மொத்தத்தில் மாணவர்கள் பலரும் உற்சாகமாக படித்து தேர்வுகளை சந்திக்க இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்திகள் ஒருபுறம் வந்தவண்ணமிருந்தாலும், மறுபுறம் சில மாணவர்களின் கவனக் குறைவையும் மறுப்பதற்கில்லை. அவர்களும் ஆர்வமாக, கவனமாக படித்து தேர்வை நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பதையே நன்மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

இருந்த போதிலும் சில மாணவர்கள் தேர்வு காலம் நெருங்கி வருவதை பற்றி கவலை கொள்ளாமல் தேர்வுக்கு இரண்டொரு நாளைக்கு முன்பு படித்து பாஸாகி விடலாம் என்று மெத்தனமாக இருக்கின்றனர். தேர்வு நேரத்தில் மட்டும் கஷ்ட்டப்பட்டு படித்து பாஸாகலாம் அது சிலருக்கு முடியும் - ஆனால் கடைசி நேரத்தில் மட்டும் பாடங்களை படித்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிக மார்க்குகளை பெற முடிவதில்லை - முடியாது என்பதை நினைவு கூற வேண்டும்.

மேலும் தேர்வு நெருக்கத்திலே யாராவது ஒரு மாணவருக்கு சுகவீனம் ஏற்பட்டால் (இறைவன் காப்பாற்ற வேண்டும்) அந்த மாணவரால் எங்ஙனம் பாடங்களை படிக்க முடியும்? ஆகையால் முன்னதாகவே பாடங்களை நன்கு படித்து , பயிற்சிகள் எடுத்து கொண்டால் தேர்வு நேரத்தில் சுகவீனம் ஏற்பட்டால்கூட , தைரியமாக சென்று தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் , ஓரளவு நல்ல மார்க்கும் வாங்கலாம்.

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தேர்ச்சி மட்டும் பெற்றால் போதாது நல்ல மார்க்குகள் வாங்க வேண்டும், அப்போதுதான் எதையும் நாம் சாதிக்க முடியும். அதனால் எல்லா மாணவர்களும் படிப்பிலே அக்கறை கொள்ள வேண்டும். மெத்தனமில்லாது நேரத்தை வீணாக்காமல் கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் படிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது , படித்தவைகள் மனதில் பதியும் , நினைவுக்கும் வரும் .

வீட்டில் அமைதி சூழ்ந்த , வெளிச்சமான , காற்றோட்டமுள்ள இடத்தில் இருந்து படியுங்கள். அளவுக்கு அதிகமான உணவை சாப்பிடாதீர்கள் அது உறக்கத்தை ஏற்படுத்தும். குடிப்பதற்கு தேவையான குடிநீரை அருகிலேயே வைத்துக் கொண்டால் இடையில் வெளியே போய் கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் பாடங்களை பலமுறை படித்தாலும் ஓரிருமுறை அவைகளை எழுதி பார்த்துக்கொள்வது சிறந்தது , ஞாபகமும் இருக்கும் பரீட்சையில் எழுதுவதற்கும் சுலபமாக வரும். ஒவ்வொரு பாடத்தையும் மிகவும் கவனமாக , ஆர்வத்துடன் படித்தால் அவை மறக்காது எனவே அமைதியான சூழலில் படியுங்கள் - அமைதியின்மையை தவிர்த்திடுங்கள்.

எந்தெந்த பாடங்களை படித்தால் சுலபமாக மார்க்குகளை பெற முடியும் , என்னென்ன வினாக்களுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் விளக்கமாக சொல்லித் தருகிறார்கள். அவைகளை கவனமாக கேட்டறிந்து அதன்படி நடந்தால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

நீங்கள் தேர்வை நன்றாக எழுதி அதிக மார்க்குகள் பெற்று, வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இக்ராஃ கல்விச்சங்கம் ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு வழிமுறைகளை ஊரில் உள்ள கேபிள் டிவி மூலமாக சொல்லித் தருகிறார்கள். இன்ஷா அல்லாஹ்! இவ்வருடமும் ஓளி பரப்ப இருக்கிறார்கள் , அவைகள் மூலமும் தாங்கள் அனைவரும் பயன் பெற்று , உங்கள் தேர்வுகளை சுலபமாக ஆக்கிக் கொள்ளலாம்.

இப்படியான சேவைகள் எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை, நம்ம ஊர் மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சிறந்த வாய்ப்பை நம் மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

மாணவர்களே! ஆர்வத்துடனும் , விருப்பத்துடனும் படியுங்கள் , பொருளாதார வசதி இல்லையே பிளஸ் 2 க்கு பிறகு எங்கே படிக்கப் போகிறோம் என்றோ ?, படிப்பு நம் மண்டையில் ஏறவில்லையே நாம் எங்கே மேற்கொண்டு படிக்க முடியும் என்றோ ? நினைத்து மன தைரியத்தை இழக்க வேண்டாம்.

பொருளாதார வசதியற்ற மிகவும் பின் தங்கிய மாணவர்கள், மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக இக்ராஃ கல்விச் சங்கம் பல உதவிகளை, உலக காயல்பட்டணம் நல மன்றங்கள் மற்றும் நம் ஊரைச்சார்ந்த நல்லுள்ளம் படைத்தவர்களின் அனுசரணையின் மூலமாக செய்து வருகிறது. அதனால் உற்சாகமாக படித்து கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள்.

மாணவர்கள் அவரவர்களுடைய படிப்புக்கு தகுந்தபடி என்ன துறையை தேர்ந்தெடுத்து படிப்பது மற்றும் எந்தெந்த வேலைகளில் சேர்ந்து பணி புரியலாம் என்பதற்கு வழிகாட்டுவதற்காக நமது ஊர் மக்களால் " காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் " (KCGC) என்ற ஓர் அமைப்பு சென்னையில் துவக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நமது மாணவர்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறார்கள் , பயிற்சிகளும் வழங்கி கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாணவர்கள் முழுமனதுடன் , நம்பிக்கையுடன் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுங்கள், இறைவனருளால் நல்ல எதிர் காலத்தை பெற்றுக்கொள்வீர்கள்.

மாணவ மணிகளே! பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதையை , கண்ணியத்தை குறைவின்றி கொடுங்கள் உங்கள் வாழ்வு சிறப்படையும். இன்றைய மாணவர்கள் - நாளைய ஆசிரியர்கள்! நாளைய பெற்றோர்களும் நீங்களே!! என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

தேர்வு காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான சத்தான உணவு கொடுப்பதுடன் , உடை விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக தொலைக் காட்சி பெட்டியின் இடையூறுகளில்லாமல் பார்த்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகள் தேர்வுகளை நன்றாக எழுதி தேர்ச்சிப் பெறுவார்கள் மறக்காதீர்கள் - இது தேர்வு காலம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இது தேர்வு காலம்!...
posted by: Vilack SMA (kayalpatnam) on 03 February 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20481

மாமாவின் அறிவுரைகளில் A to Z அனைத்தும் அடங்கி விட்டது . மாணவர்கள் , மாமாவின் அறிவுரைகளை பேணி நடந்தால் அதிக மதிப்பெண்கள் பெரும் வாய்ப்பு நிச்சயம் உண்டு .

சமூகம் ......., நாமும்தான் ஒத்துழைக்க வேண்டும். வீட்டில் நடக்கும் விழாக்கள் , பொது விழாக்களுக்கு , தெருவில் ஒலி பெருக்கி வைப்பதை தயவு செய்து தவிருங்கள் . என்னிடம் , என் உறவினர் ஒருவர் குறைபட்டுக்கொண்டார் , ஏனெனில் +2 படிக்கும் தன் மகன் , இரவில் அமைதியாக படிக்க முடியாமல் , ஒலி பெருக்கி சப்தம் மிகுந்த தொல்லையாக இருப்பதாக சொன்னார் . என் மனதிற்கு இது வேதனையை தந்தது. ஆகவே , ஒலிபெருக்கிகள் தெருவில் வைப்பதை தவிருங்கள் . என்னுடைய ஜமாத்திலும்கூட இது பற்றி சொல்லி இருக்கிறேன். ஒரு சிலரை தவிர பெரும்பாலானவர்கள் ஒலிபெருக்கி தடைக்கு ஆதரவாகவே உள்ளனர்.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இது தேர்வு காலம்!...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 04 February 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20482

மாணவர்களுக்கு அருமையான அறிவுரைகளை கூறியுள்ள மஹ்மூது மாமா அவர்கள், மற்றவர்களுக்கும் எந்த காரியத்திற்காகவும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு மாணவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலிருக்க அறிவுரை கூறி இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இது தேர்வு காலம்!...
posted by: Mohamed Salih (Kayalpatnam) on 04 February 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20483

மாஷா அல்லாஹ்..

மாமா அவரிகளின் கட்டுரை மிக அருமை .. எங்கள் காலத்தில் இது போன்ற அட்வைஸ் அதிகமா இல்லை என்ற சொல்ல வண்டும் ..

மாணவர்களுக்கு அருமையான அறிவுரைகளை கூறியுள்ள மஹ்மூது மாமா அவர்கள், என்றும் அவர்கள் இளைஞர் தான்..

பெங்களூர் ரில் இருந்து
முஹம்மத் ஸாலிஹ்
9845005093


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இது தேர்வு காலம்!...
posted by: M.N Seyed Ahmed Buhari (Chennai(mannady)) on 04 February 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20484

இன்ஷா அல்லாஹ் வரக்க்டிய மார்ச் மாதம் நடைபெறும் தேர்வில் நமது ஊரை சார்ந்த அணைத்து மாணவ மாணவியரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்....

மேலும் நமது ஊர் மின் வாரியத்திற்கு ஒரு வேண்டுகோள்.... இரவு நேரத்தில் மின் வெட்டைதயவுசெய்து தவிர்த்து இரவில் அவர்கள் படிக்க உறுதுணை புரியுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இது தேர்வு காலம்!.
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 04 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20485

N S E மச்சான் வீட்டிற்கு நானும்,மற்றும் ஒரு சிலரும் நல்ல காரியங்களுக்காக சென்று இருந்தோம்! உண்மையில் பல சரித்திர நாவல்களை அவர்தம் மாடியிலே அடுக்கி வைத்து இருப்பதை கண்டோம்! உண்மையில் இதுபோன்றோர்,நம் காயலுக்கு அவசியம் தேவை என்பதை முதலில் கண்டேன்!

பொதுச்சேவை என்பது விளம்பரத்துக்காக ஒருசிலருக்கு இருக்கும்! ஆனால்,விளம்பரம் என்பதை மனதிலும் நினைக்காத ஒருவர் இப்ப நம் ஊரில் இருக்கிறார் என்றால் அது நிச்சயம்,N S E மஹ்மூது மச்சான் அவர்களையேச் சேரும்!

அப்புறம் தம்பி விளக்கு SMA தங்களின் படிப்பு சம்பந்தமாக தாங்கள்,தங்களின் கருத்தினை பதிவு செய்தது அருமை! ஆனாலும் பிள்ளைகளின் படிப்பு நேரத்திற்கும்,நம் பெரியோர்களின் ஹதீஸ் நேரங்களுக்கும் மிகுந்த நேர வித்தியாசம் உண்டு! இதற்கும் அதற்கும் முடிச்சு போட வேண்டாம்!

உங்களுக்கு சொன்னவர் நேரத்தினை சொல்லாமல் விட்டது அவர் தவறு! அந்த நேரத்தினை கேட்க்காமல் விட்டது நம் தவறு! குறைந்தது இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ஹதீஸ் ஆரம்பம் ஆகிறது! நம் குழந்தைகள் பொதுவாக மக்ரிப் தொழுகைக்கு பின் படிக்க ஆரம்பிக்கிறார்கள்! இஷா தொழுகைக்குப்பின் கூடுமானவரை முடித்துக் கொள்கிறார்கள்! இதை நாம் யாவரும் அறிவோம்!

ஒரு சில குழப்ப வாதிகளின் கருத்தினை தம்பி நீயும் புரியாமல் பதிவு செய்திட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இது தேர்வு காலம்!...
posted by: Vilack SMA (kayalpatnam) on 04 February 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20486

Omar Anas அவர்களுக்கு ,

நான் எதையும் முடிச்சு போட்டு எழுதவில்லை. இது பரீட்சை நேரம் . மாணவர்கள் படிப்பதற்கு நேரம் காலமெல்லாம் கிடையாது . கூடியமட்டும் , அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரிதான் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இது தேர்வு காலம்!...
posted by: m.e.solukku.syed moosa (qatar) on 04 February 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20487

அஸ்ஸலாமுஅலைக்கும் .இன்னும் பல நல்ல கருத்துகளை மாணவர்களுக்கு எழுத என் வாழ்த்துகள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இது தேர்வு காலம்!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 05 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20488

இதில் விளக்கு எஸ். எம். எ சொன்னதில் தவறு ஏதும் இல்லை .சகோதரர் உமர் அனஸ்தான் எதையோ போட்டு குழப்பி கொள்கிறார் என நினைக்கிறேன்.

இங்கு நான் எதையும் மனதில் வைத்து சொல்லவில்லை நமது சதுக்கை தெரு பகுதியில் ஒரு வருடத்தின் அநேகமான நாட்கள் ஒலிபெருக்கி விடாமல் முழங்கி கொண்டேதான் இருக்கிறது. ஏதாவது கந்தூரி விழாக்கள்..அல்லது பொது நிகழ்ச்ச்கள் என இது ஒலிக்காத நாள் இல்லை. எங்கோ நடைபெறும் விழாக்களுக்கு இங்கு ஸ்பீக்கர் வைக்கிறார்கள். இதனால் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது ..மாத்திரமல்ல...நோயாளிகள் குழைந்தைகளின் தூக்கம் இவைகளுக்கு இந்த ஒலிபெருக்கிகள் செய்யும் துன்பம் ஓன்று இரண்டல்ல.

விழாக்கள் நிகழ்ச்சிகள் நடாத்துவோர் தயவு செய்து மூன்று மைல்களுக்கு அப்பால் ஸ்பீக்கர் வைக்காமல் விழாக்கள் நடைபெறும் இடத்தை ஒட்டி ஸ்பீக்கர்பாக்ஸ் மட்டும் வைத்து அவர்களின் நிகழ்வுகளை நடத்தினால் அவர்கள் எல்லோருக்கும் புண்ணியம் செய்தவர்களாவார்கள். தம்பி உமர் அனஸ் இதில் தவறு காண மாட்டார் என நம்புகிறேன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:இது தேர்வு காலம்!...
posted by: OMER ANAS (DQHA QATAR.) on 05 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20489

தம்பி விளக்கு தாம் இப்படித்தான் பதில் சொல்வீர் என்று எனக்கு முன்பே தெரியும்! ஆனாலும், நாமும் நம் மக்களும் படிக்க தேவையான நேரத்தினை கருத்தாளர் அவசியம் கருதிதான், இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது , நாமும் நம் தலைமுறையினரும் முறையாக பின்பற்றுவோம்! என்று கூறி உள்ளார்!

உண்மையில்,எங்களை (சுன்னத்வல் ஜமாஅத்) புரிந்து கொள்ளாதவரை நாங்கள் எப்பவும் எப்போதும் புரிந்து கொள்வதில்லை! அவர் யாராக இருப்பினும் சரியே! இதில் நான் நீ என்று பேதமில்லை! அதிகமான கருத்தை பதிய எனக்கு இதில் விருப்பமில்லை! விவாதம் என்று வந்தால் மட்டும் உண்மையினை நிச்சயம் பதிவோம்!

இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது , படித்தவைகள் மனதில் பதியும் , நினைவுக்கும் வரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இது தேர்வு காலம்!...
posted by: M.A.K.Jainul Abdeen, காயல்பட்டணம் சுன்னத்வல் ஜமாஅத் ஒருங்கிணைப்பு குழு (kayalpatnam) on 06 February 2012
IP: 49.*.*.* India | Comment Reference Number: 20490

அஸ்ஸலாமு அலைக்கும்.மஹ்மூது மாமா உடைய கருத்துக்கள் அருமையிலும் அருமை.இன்றைய சூழ்நிலையில் அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடிய அழகான அறிவுரை.பின்னே,அது என்ன கந்தூரி இன்று நேற்று கொண்டாடுவதைப்போலும்,ஏதோ இந்த வருடம் புதியதாக ஒலிபெருக்கி கெட்டியதைப் போலவும் அல்லவா இவர்கள் சொல்கிறார்கள்.பல வருடங்களாக நடைபெற்றுவரும் இந்த வைபவங்களில் எந்த மாணவரும் படித்து பாஸ் ஆகவில்லையா?எந்த எண்ணத்தில் சொல்கிறீர்கள் நீங்கள்.இப்பம் ஒலிபெருக்கி கெட்டக் கூடாது என்பீர்கள்.நாளைக்கு எதுக்கு கந்தூரி என்று உங்களுடைய கொள்கைகளை தினிப்பீர்கள்.இதுதானே உங்களுடைய நோக்கம்.ஏன் இந்த வீண் வேலை?ஏன் இந்த சூழ்ச்சிகள்?உங்களுடைய கொள்கை உங்களோடு இருந்து விட்டு போகட்டுமே?வீண் குழப்பம் வேண்டாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இது தேர்வு காலம்!...
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 06 February 2012
IP: 103.*.*.* India | Comment Reference Number: 20491

தயை கூர்ந்து அனுமானம் செய்யதீர்கள்:

மஹ்மூத் மாமா அவர்கள் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் இன்னலை பற்றி தான் எழுதி உள்ளார்கள். அவர்கள் கந்தூரியை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன பின் அதை பற்றி பேசலாம்

முன்பு இல்லையா என கேட்கும் முன், ஒலி பெருக்கியால் தீமைகள் இல்லையா என உங்களியே கேட்டு கொள்ளுங்கள். ஒலி பெருக்கி எனது மார்க்குகளை குறைத்துள்ளது. சுமாராய் படிக்கும் மாணவர்களை பெயில் ஆக்கியுள்ளது.

அது மட்டும் அல்ல, முன்பெல்லாம் சுமாரான மார்க்குகள் எடுத்தாலே போதும். இப்போது பயங்கர காம்பெடிஷன். தயை கூர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, ஊரில் சப்தத்தை (NOISE POLLUTION) குறையுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:இது தேர்வு காலம்!...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 06 February 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20492

NSE மஹ்மூது மச்சான் இது தேர்வுக்காலம்! அதில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும்,அதற்க்கான நேரம்,காலம் வழிமுறைகள் இதுபற்றித்தான் எழுதி உள்ளார்கள்! அதுபோல் மாணவர்களை பாராட்டும் முகமாக ஃபேஸ்புக்,பைக்கு ஓட்டம் இதுகளை மாணவர்கள் தவிர்த்து வருவது அவர்கள் படிப்பில் காட்டும் ஆர்வத்தினையே காட்டுகிறது என்று புகழ்ந்து உள்ளார்கள்!

இதைவிட்டு,எந்த இடத்திலும்,ஒலிபெருக்கி விசயமாக கூறவும் இல்லை.மார்க்க ஹதீஸ் சம்பந்தமான விசயங்களை இதற்கும் அதற்கும் முடிச்சுபோடுபவரும்,நிச்சயம் என் மச்சான் இல்லை! மஹ்மூத் மாமா அவர்கள் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் இன்னலை பற்றி தான் எழுதி உள்ளார்கள்!இது சகோ!M M S இப்ராஹீம் அவர்கள் கருத்து!

அடுத்து அருமை காக்கா சுஹைப் அவர்களே, தங்கள் கமண்டில், இங்கு நான் எதையும் மனதில் வைத்து சொல்லவில்லை நமது சதுக்கை தெரு பகுதியில் ஒரு வருடத்தின் அநேகமான நாட்கள் ஒலிபெருக்கி விடாமல் முழங்கி கொண்டேதான் இருக்கிறது. ஏதாவது கந்தூரி விழாக்கள்..அல்லது பொது நிகழ்ச்ச்கள் என இது ஒலிக்காத நாள் இல்லை. எங்கோ நடைபெறும் விழாக்களுக்கு இங்கு ஸ்பீக்கர் வைக்கிறார்கள். இதனால் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது ..மாத்திரமல்ல...நோயாளிகள் குழைந்தைகளின் தூக்கம் இவைகளுக்கு இந்த ஒலிபெருக்கிகள் செய்யும் துன்பம் ஒன்று இரண்டல்ல.

இது உங்கள் கருத்து! காக்கா நமது சதுக்கைத்தெரு என்று தாங்கள் சொன்னது எனக்கு என்றே எடுத்துக்கொள்கிறேன்! அதுபோல்,நான் இங்கு எதையும் மனதில் வைத்து சொல்லவில்லை என்பதையும் பாராட்டுகிறேன்! பின்பு ஏன் இதுவிசயமாக நாம் பேச வேண்டும்??? அன்று உள்ள பெரியோர்களை சிலர் இன்றும் இருக்கிறார்கள்!(அல்லாஹ் அவர்களின் ஹயாத்தை மென்மேலும் நீடிக்கசெய்வானாக!)நாமும் துஆச் செய்வோம்! இவர்கள் ஹதீஸ் உபன்யாசங்களைகேட்க்க அன்று தன வாலிப வயசில் சென்று வந்தார்கள்! இன்று அதே ஹதீஸ் தன வீட்டு வாசலில் ஒலிக்கும் போது அதை கேட்டு மகிழ்கிறார்கள்! அதுபோன்ற பெரியோர்களின் கடைசிக் கால ஆசைகளை இடையில் மார்க்கத்தை நான் அதிகம் கற்றுக் கொண்டேன் அது இது என்று பேசும் குழப்பவாதிகள், தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாமல் இருந்தால் சரி!

காலையில் எங்களுக்கு தினமும் கேட்க்கும் சில லவுட்டு ஸ்பீக்கர் ஒலிகளை விடவா மார்க்க ஹதீஸ் சிலருக்கு கசக்கிறது? எதையும் அவசியம் இன்றி யாரும் அதி மேதாவிகள் என்று கருத்து கூற வேண்டாம்! அன்று முதல் இன்று வரை ஏன் வருங்காலங்களிலும் இது ஒலிக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:இது தேர்வு காலம்!...
posted by: Amina Wardha (kayalpatnam) on 07 February 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20494

தேர்வுக்கு இன்னும் ஒரு மாதங்களே இருக்கின்றன மாணவர்களே உங்களுடைய கவனத்தை எங்கும் சிதற விடாமல் தேர்வில் அதுக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கிலே படியுங்கள் நிச்சயம் வல்ல இறைவன் துணை இருப்பான் ஊரில் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கி சப்தம்தான். ஒரு சில பள்ளி வாசல் விதி விளக்காக இருக்கலாம் அது மட்டும் அல்லாமல் எவ்வளவு நோயாளிகள் வயோதிகர்கள் குழந்தைகள் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இதை யாரும் சிந்திக்க வில்லை தயவு செய்து அனைத்து பள்ளி நிர்வாகமும் இதற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:இது தேர்வு காலம்!...
posted by: seyed mohamed (ksa) on 07 February 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20495

சதுக்கை தெரு பகுதியில் ஒரு வருடத்தின் அநேகமான நாட்கள் ஒலிபெருக்கி விடாமல் முழங்கி கொண்டேதான் இருக்கிறது என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

ஒலிபெருக்கி எதிர்பவர்கள் எல்லா நேரத்திலும் வேண்டாம் என்று சொல்லணும். இப்போது பரிச்சை நேரம் என்று மட்டும் பார்க்க கூடாது.

இப்போது பிள்ளைகள் எல்லா நேரத்திலும் தான் படிகிறார்கள், அப்போது தான் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பண்ண முடியும் என்று நினைக்கும் காலம். ஏதோ சில நேரம் ஹதீஸ் கேற்பத்தால் மட்டும் படிப்பு வெகுவாக பாதிக்கும் என்றால் அது சரி இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:இது தேர்வு காலம்!...
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 07 February 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20496

தற்போது பிளஸ் டூ செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதே போல மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கின்றன. தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாணவர்கள் இரவு பகல் பாராது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். இரவு நேர மின்தடை, அதிகாலை மாயமாகும் மின்சாரத்தால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்வை சரிவர எழுத முடியாமல் அவர்களது மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. திசை திரும்பும் கருத்துக்களம்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 07 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20497

கட்டுரையாளர் கவலைப்பட்டு எழுதியதென்னவோ மாணவர்களின் வளமான எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்வுக்காலம் குறித்து! ஆனால் இங்கு பதியப்படும் கருத்துக்களோ இன்னொரு தலைப்பை முன்னோக்கியுள்ளது.

கட்டுரையாளரின் நோக்கத்தை நன்கு கருத்திற்கொண்டு, அதற்கேற்ப கட்டுரைக்கான கருத்துக்களைத் தரலாமே...?

கட்டுரையாளர் ‘ஒலி மாசு‘ குறித்து எழுதியிருந்தால், இவ்வனைத்து கருத்துக்களும் இவ்விடத்தில் பொருத்தமானவையே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:இது தேர்வு காலம்!...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 08 February 2012
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20498

மஹ்மூத் காக்காவின் அறிவுரை அருமை. பெற்றோர்கள், மாணவர்கள் இதை படித்து பின்பற்றினாலே போதும் வெற்றி நிச்சயம்.

இதற்கு தொடர்பில்லாத வாசகர் கருத்துக்கள் தான் அதிகம் கேள்வியும் பதிலும் போல் உள்ளது. கட்டுரையாளர் "FACEBOOK " கை இந்த நேரத்தில் திறக்க கூடாது என அறிவுறுத்துகிறார். இங்குள்ள கருத்து சண்டையே "அடே மச்சான் kayalpatnam.com ல் இப்படி கருத்து போர் மஹ்மூத் மாமாவின் இது தேர்வு காலம் கட்டுரையில் நடக்குதாம் நீ படித்தாயா?" என " FACEBOOK" கிற்கு பதிலா இந்த கருத்து பகுதியை அதிகம் திறந்து படித்து இவருக்கு பதில் அவர் என்ன சொல்கிறார் என இதில் கவனம் செலுத்தி படிப்பை கெடுத்துவிட நாம் காரணமாக கூடாது.

வேண்டுமானால் அப்துல் கலாம் தெருவோர விளக்கடியில் படித்துதான் பிற்காலத்தில் உலக கல்வியில் உச்ச நிலையை அடைந்தார் என நல்ல புத்தி மதி சொல்லி எழுதுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 08 February 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20499

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல தமிழகத்தில் மின்வெட்டு நேரங்கள் 8 மணிநேரமாக அதிகரிப்பு:

காலை, 6 முதல், 9 மணி வரை - 3 மணி நேரமும்;
பகல், 12 முதல், மாலை - 3 மணி வரை, 3 மணி நேரமும்;
மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை
மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என,
மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved