Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:12 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 65
#KOTWEM65
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 9, 2012
மூமாவிர்க்கான முத்தங்கள் ...

இந்த பக்கம் 2764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புனித ஹஜ் முடித்து தாயகம் திரும்பும் தன் பாச மூமாவை வரவேற்கும் காயல் பேத்தியின் வாழ்த்துக் கவிதை - முஸ்தாக் அஹ்மத்

மனிதன் படைக்கப் படுவதற்கு- முன்பே
மலக்குகளால் கட்டப்பட்ட
மகத்தான கட்டிடம்...

பூமியின் மத்திய ரேகை..........

உலகமெல்லாம் இருண்ட பின்பும்
ஒளி படர்ந்த உன்னத இல்லம்.

பூமியினரின் வணக்கதிற்காய்
வல்லவன் வகுத்த
புனித ஸ்தலம்

உலக முஸ்லிம்களின் - முதன்மை
வணக்கஸ்தலம்.............

மலக்குகளின் நிரந்தர
வாசஸ்தலம்...................

பூமியின் சுவர்க்கம்……….

உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஒரு உன்னத ஆசை
நிரந்தரமாய் நெஞ்சினில் உண்டு.

வாழ்வின் ஒருமுறையேனும் அல்லாஹ்வின் அழகிய வீட்டையும்
அஹ்மது நபியின் அருள் நிறைந்த கோட்டையையும்
தரிசிக்க வேண்டும் ...... என்ற தணியாத தாகம்

வாழும்போதே வரம் வாங்கி வந்த என் ஆருயிர் கம்மா.........
அல்லாஹ் விரும்பிய அற்புத ஹாஜிம்மா............

வாழ்ந்தவர்களே வாழ்த்துச்சொல்லி வரவேற்பர்.....
ஆனால் நானோ .........

வாழ்த்துச்சொல்லி வாழ ஆசைபடுகிறேன்.

மார்க்கத்தின் தந்தை.........
மகத்துவம் நிறை இப்ராஹீம் நபியின்
சரித்திர சான்றுகளை சந்தித்து

அஹமத் நபியின் ஆகிர் சொர்பொளிவினால்
மன்னிக்கும் மலை என்று
அறியப்பட்ட அரபா மலையில் தவம் இருந்து
பிழைகள் எல்லாம் பொருக்கப்பட்டவளே........

முஜ்தலிபாவில் கைகளால் கல்பொறுக்கி
முதன்மை சைத்தானை
இதயம் கொண்டு விரட்டி அடித்தவளே..............

தவாபுல் சியாராஹ்வில் தொடங்கி
தவாபுல் விதாவில் -
எல்லா பாவங்களுக்கும் விடைகொடுத்தவளே.............

பாவங்கள் மன்னிக்கப்பட்டு
இரண்டாம் முறை பிறந்தவளே....

ரஹ்மானின் ரபீக்
ரவ்ழா ஷரீபின் ரஹ்மத்
மக்களின் மன்னர்
மன்னர்களில் மனிதர்...
மஹ்மூது நபியை மதினாவில் தரிசித்தவளே...........
இதயம் நிறைந்த இறுதி தூதரின்
இல்லத்தரசிகளை இதயம் கொண்டு கண்டவளே.............

ஜன்னத்துல் பகீயில் வாழும்
சுவனத்த்துப்பூக்களான
சுந்தர ஷஹபாக்களை
சலாம் சொல்லி சந்தித்தவளே..............
ஹாஜிம்மாவே.............எங்கள்
அழகிய கம்மாவே...................

அத்தனை வரத்திற்க்கும்.................
என்
ஒற்றை முத்தத்தை............
வாழ்த்தாய் வழங்குகிறேன்..............

நீ தழுவிய - இஸ்லாத்தின்
ஐந்தாம் தூணை
நானும் தழுவ
அல்லாஹ்விடம் வரம் வாங்கித்தா..............

உனக்கான ஈர முத்தம்.........

பரிசுகளாகவும்......... பாசங்களாகவும்
என்னுள்..............எப்போதும்...............
காத்திருக்கும்................

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஈர முத்தம்
posted by: NIZAR AL (kayalpatnam) on 09 November 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23661

முஸ்தாக் கவிதையில் பிழையா? ஒருபோதும் இல்லை எனலாம்.

இவர் ஹாமிதிய்யா முதல்வர் நூருல்ஹக் அவர்களுக்கு பாராட்டி எழுதிய கவிதை பிரமாதம், பிரமாதம்,

இந்த கவிதையில் முமாவை மலக்குகள் கட்டின புனித இடத்தில ஆரம்பித்து ஒரு மாதிரி எல்லா எடத்துக்கும் கூட்டுட்டு போய் வந்துடீங்க, இடையில எங்காவது நிக்கவச்சி ஜம்ஜம் தண்ணீர் கொடுத்திருக்கலாம் அதை மட்டும் மறந்துட்டீங்க.

இந்த மனுசிக்கு எழுதின கவிதை பொதுவாக எல்லா மூமாக்கும் பொருந்தும் என என்னுகிரேன். புதிய மனுசியான இந்த மூமா மற்றும் அனைவருடைய ஹஜ்ஜும் அல்லாஹ் ஏற்றுகொள்வானாக.

இறுதியில் ஆசிரியர் மூமாவிட்கு ஈர முத்தம் என்று சொன்னது சற்று தவிர்திர்க்கலமோ எண்டு தோன்றுது. பேத்திதான் கொடுக்கிறாங்க இருந்தாலும் அதில்லென்ன ஈரம், வெறுமன முத்தம்ன்னு சொல்லலாமே?

ஒரு வேலை கவிக்கு மெருகூட்டலோ தெரியல, கவிஞ்சர பார்த்த நேர கேற்றிடுவேன், மனுஷன் எங்க இருக்காரோ? தெரியல.

மொத்தத்தில் கவிதை பக்திமயமா இருந்ததுங்க ,ரொம்ப சூப்பர்,

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Ismail (Dammam) on 10 November 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23672

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

கட்டுரையாளர்களின் இ-மெயில் ID -யை குறிப்பிட்டால் மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்வதற்கு வசதியாக இருக்கும். சில சமயங்களில் கட்டுரையாளருடன் தனிப்பட்ட முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டிய தேவைகள் வருகிறது. ஆலோசித்து ஆவண செய்யவும்..

ஜசாகுமுல்லாஹ் கைர்..

Moderator: musthak68@yahoo.co.in


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஈர முத்தங்கள்!
posted by: kavimagan (qatar) on 13 November 2012
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 23806

அருமை நண்பர் முஸ்தாக் அவர்களது எழுத்தாளுமை, கவிதை வடிவிலும் தொடர்வது கண்டு, உள்ளம் உவகை அடைகிறது.

மூமா தழுவிய ஐந்தாவது தூணை, நாமும் தழுவிட வரம் வாங்கித் தருமாறு மூமாவை வேண்டுவதும், அதற்கான பரிசாக ஈர முத்தங்களைத் தருவதும் கவிஞரின் அற்புதமான சிந்தனை. சிறப்பான இந்தக் கவிதையை வடிவமைத்த தோழருக்கு நான் அளிக்கும் பரிசும் ஈர முத்தமேயன்றி வேறேது? வாழ்த்துக்கள் முஸ்தாக் அஹமத்.

சகோதரர் நிஜார் A.L. அவர்களே! ஈர முத்தம் என்பதனை,இந்த இடத்தில், உலர்ந்து போகாத அன்பின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.அ ப்படித்தான் கவிஞரும் எண்ணி இருப்பார் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: ALS. Ibnu Appas (Kayalpatnam) on 17 December 2012
IP: 112.*.*.* India | Comment Reference Number: 24546

மூமாவிர்க்கான முத்தங்கள் 60வரி கவிதைகள் அழகாகப் படித்து ரசித்தேன். இனி கவிதைகள் எழுதுவதை விட கருத்துரைகள் எழுதுங்கள். இக்காலம் கருத்துரைகளே எல்லோரும் படிக்க விரும்புகிறார்கள். நானும் தான். கவிதைகளுக்கென்று கவிஞர்கள் கூட்டம் நமது இணையதளத்தில் வரும்போது அப்போது கவிதைகளை எழுதி குவியுங்கள். கவிதையுடன் கதையும் தொடர்பு இருக்கும். க(வி)தை கோவாவில் இருந்து அங்குள்ள நாட்டு நடப்புகள் எழுதி அனுப்பினால் இன்னும் பிரயோஜ்னமாக இருக்கும். புரிகிறதா தம்பி.

ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ்
(இணையதள எழுத்தாளர்)- காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved