Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:53:14 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 70
#KOTWEM70
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 27, 2012
அமைதி அழிந்தால், பாதுகாப்பு குறைந்தால் என்ன நடக்கும்?

இந்த பக்கம் 2505 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாம் எல்லோரும் அமைதியாகவே வாழ விரும்புகிறோம். அதற்கான எல்லா வழிகளையும் தேடி வைக்க விரும்புகிறோம். அமைதியை பாழ்படுத்துவது நாமே தான் முதல் காரணம். அதிலும் காமம், குரோதம், கோபம் அதிகமானாலும் குடும்பத்தையோ, ஓர்ஸ்தாபனத்தையோ, தனி மனிதரையோ, பழிவாங்க துடிப்பதினாலும் அமைதி அழிகிறது. நமது நேரங்கள் அனைத்தும் அமைதிக்காக வாழ வேண்டும், அல்லது பிறர் அமைதி பெற வாழ வழிவிட வேண்டும். அதற்கு மாற்றமான முறையில் - அமைதியை அழிப்பதிலும் ஓழிப்பதிலும் நமது நேரத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இப்படி செய்வதினால் மூளைக்கும் வேலை அதிகம். இதயமும் அமைதி பெறாமல் துடிதுடித்து –படபடப்பு ஏற்பட்டு அதிக இரத்த அழுத்தம் ஏற்பட வழி பிறக்கிறது. விரைவில் ஹை. B.P.ஏற்பட்டு ஹார்ட்அட்டாக் திடீரென ஏற்பட்டு உயிரையே போக்கிக் கொள்ள செய்கிறது. இது ஒருபுறம் இருக்க, மனஅமைதி வேண்டும் என்று உடற்பயிற்சி, நடைபயிற்சியை கூட பலர் செய்கிறார்கள். பொதுவாக நாம் யாருக்கும் எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல் இருந்தாலே அதுவே நம்மையும் நம்மைச் சார்ந்த வரையும் அமைதியாக வாழச் செய்யும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி அடுத்த வீட்டாருக்கு எந்தவித தொந்தரவு இன்றி வாழுங்கள் என்றார்கள். எல்லா ஊரில் அமைதி ஏற்படவே அப்படி கூறினார்கள்.

மனிதர்கள் சிலரால் அமைதி கெடுகிறது :

ஆத்திச்சூடியில் “சேரிடம் அறிந்து சேர்” என்ற சொற்றொடரை பிரித்துப் பார்த்தால் விளக்கம் புரியும். பிறரிடம் நட்புக் கொள்ளும்போது அல்லது உறவு ஏற்படுத்தி கொள்ளும்போது நல்லவராகப் பார்த்து சேர வேண்டும் என்று ஆத்திச்சூடி கூறுகிறது. நல்லவராக தெரியாமல் நட்புக் கொண்டால் பருக பருக பாலும் புளிக்கும் என்பது போல, கெட்ட நட்பை விரைவிலே புரிந்து கொள்ள முடியாமல் போகும். ஆனால் நட்பின் காரணத்தால் புரியாமல் மாட்டிக் கொள்வோர் பலர். கவலை துக்கத்தில் இருக்கும் மனிதனை, அவன் வேதனை நிறைந்த வாழ்வின்போது தவறான நண்பர் மூலம் சிகரெட், பீடி (புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்று) என்ற தவறான சொல்லைப் பயன்படுத்தி தீயவழிக்கு அழைத்துச் செல்கிறான் கெட்ட நண்பர்கள் சிலர் நாம் போகும் பாதை தவறு என்பதை கொஞ்சங்கூட சிந்திக்காமல் மேலும் மேலும் தவறில் விழுவது வயதின் அறிவு முதிர்ச்சி இல்லாத காரணமாகக் கூட இருக்கலாம். மேலும் மேலும் கெட்டசகவாச நண்பர்களால் மனஅமைதிக்குப் பதிலாக உடலில் புதிய வலி, நோய் சிறுகசிறுக ஓட்டிக்கொள்கிறது. சிகரெட்டையோ, மதுவையோ ஓட்டிய ரகசிய வாழ்க்கையாக அது அமைகிறது. ஒருநாள் பகிரங்கமாக குடித்துவிட்டு வீதியில் விழுந்து கிடக்கும் போதுதான். பிறர் காரித் துப்படும் போதும், கடும்சொல் மூலம் ஏசிடும்போதும் சில நல்ல பிள்ளைக்கு பின்னர் (அதாவது குடி மயக்கம் தெளிந்த பின்). பலர் மூலம் கேள்விப்பட்ட பின் திருந்த முயற்சிக்கின்றான். நல்ல குடும்பத்து பிள்ளை தப்பித்து வந்து விடுவான். மற்றவர் தவறிலே மூழ்கியே இருப்பான். திருந்த கெட்டநட்பு இடம் தராது.

அமைதியாக வாழ :

மேலே கவலை துக்கத்தால் அதன் வேதனையால் மனிதர்களில் சிலர் கெட்ட சகவாசத்தின் மூலம் சீரழிக்கப்படுவதாக சிறு உதாரணம் கூறி விவரித்து இருந்தோம். கவலையில்லாத மனிதர்கள் உலகத்தில் இல்லை. பல்வேறு கவலைகள் பீடிக்கப்பட்டிருப்பார்கள். அதை மாற்றி அமைக்க அறிவு ஞானம், ஆன்மீக ஞானமான இறைப்பக்தி மூலம் மாற்றி வாழ முடியும்.

நிம்மதி வந்தாலே அமைதி வந்துவிடும். அதை நாம் வரவழைக்க எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக நாட்களை கடத்த வேண்டும். பிறரை மகிழ வையுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சிவந்து சேரும். டிஸ்கவரி- நேஷனல் ஜேக்ரபி சேனலை அமைதிக்காக பார்த்து மகி;ழ்பவர்களும் உண்டு.

மகிழ்ச்சியை அடைய பல குணங்கள் இருந்தாலும் சிலவற்றை மட்டும் காண்போம். வணக்கசாலியாக தவறாது ஐந்து வக்து தொழுபவராக முதலில் இருக்க வேண்டும். இறைவனை பயந்தாலே அமைதி. நற்குணம் வந்துவிடும். எந்த அரசியலிலும் முழுமையாக தலையிடக் கூடாது. உங்களுக்கு பிடித்த நல்ல நபருக்கு ஓட்டுபோட வேண்டும். அத்துடன் உங்கள் தொழில், குடும்ப வளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அரசியல் என்பது இக்காலத்தில் சாக்கடையை ஒப்பிடுவதால் அசுத்தம் நிறைந்த அரசியல் வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள். அமைதிக்கு குந்தகமாகி விடுகிறது. போட்டி, பொறாமை, குத்துவெட்டு, கொவை நான்தான் பெரியவன் என்ற குதர்க்க வாதிகள் கூட்டம் அதிகமாகி போவதை காண்கிறோம். எங்கு குழப்பம் அதிகம் உள்ளதோ அங்கு அமைதி அழிந்துவிடும். அமைதி அழியும்போது, மகிழ்ச்சி சந்தோஷம் மறைந்து மீண்டும் கவலை நம்மைச் சூழ்ந்துவிடுகிறது. இதனால் நாம் அரசியலில் அதிக நேரம் மூழ்கி இருப்பதைக் காட்டிலும் ஆன்மீகத்தில் மூழ்கி இருந்தால் இறையச்சம், இறையன்பு, பிரார்த்தனையின் மேன்மை, வெற்றி தெரிய வரும். இதுபற்றி கீழே குர்ஆன் கூறுவதை கவனியுங்கள்.

அமைதி என்ற நிம்மதிக்கு வழியைப் பாருங்கள்……….அல்லது தேடுங்கள்!

“அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

-ஆயத்து 27: சூரா. அர்ரஃத், பகுதி -12

(தமிழ்நூல் : நிம்மதிக்கு வழி இதுதான். அல்லாமா அஷ்ரஃப் அலீதானவீ எழுதியவை. தீவுத்தெரு என்.எஸ்.இ. மஹ்மூது அவர்கள் வீட்டு நூலகத்தில் போய் படித்து சேகரித்தவை).

பாதுகாப்பது யாருடைய கடமை?

ஓவ்வொரு குடும்பமும் அமைதியாக வாழ பணம் மட்டும் போதாது. பாதுகாப்பு அவசியம். வீட்டில் நகை, பணத்தை பாதுகாப்பாக வைக்க முடியலே என்று பேங்கின் லாக்கரில் பாதுகாப்பாக வைத்து வந்துவிடுகிறோம். நமது பாதுகாப்புக்கு அங்கு கொடுக்கப்பட்டாலும், அரசு அந்த பாதுகாப்புப் பெட்டகத்தை வழுவான பூட்டு, போட்டு தக்க செக்ய+ரிட்டி என்ற பாதுகாவலைப் போட்டு அவனையும் பாதுகாக்க, ரகசிய காமிரா பொருத்தப்பட்டு பாதுகாத்து வருகிறது. இது பாதுகாப்பு பெட்டகமான பேங்கின் நிலை.

பணம் பெரிதா? பெண்ணின் மானம் என்ற கற்பு பெரிதா?

பணத்தை எப்படியும் சம்பாதித்து கொள்ள முடியும். ஒரு காசுக்கு போன மானம் ஓராயிரம் காசு கொடுத்தாலும் திரும்ப வராது என்பது பழமொழி.

நமது குடும்பத்து பெண் மக்களின் கற்பு என்னும் மானம் தான் பெரிது. அப்படியானால் நமது வீட்டை பாதுகாப்பான முறையில் அமைத்திருக்கோமா என்று ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நமது ஊரின் வீட்டு அமைப்பில் பாதுகாப்பு முறைகள் குறைவுதான் என்பதை எண்ணிப் பாருங்கள்.

சோக நிறைந்த செப்டம்பர் 1993-ல்:

நமதூரில் சாதாரண மீன்கடைத் தகராரை மதக்கலவரம் ஆக்கி ஊர்பூராவும் ஊரடங்கு சட்டம் போட்டிருந்த 1993 செப்டம்பர் 14-15-16 தேதிகளுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். எங்கிருந்தோ வந்திருந்த அடக்குமுறை போலீஸ்காரல் நமதூரின் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு பிடித்து சென்றனர். செப்டம்பர் மூன்று தினங்களில் பள்ளிவாசலுக்கு சென்ற அனைத்து ஆண்களை கைது செய்யப்பட்டனர். சில பள்ளிகளில் ஐந்து வக்து தொழுகை மூன்று நாள் கூட நடைபெற முடியவில்லை. மெயின் ரோட்டை ஓட்டிய பள்ளிகள் அனைத்திலும் போலீசாரின் ஆதிக்கத்தில் இருந்தது. பள்ளிவாசல் ஹவ்சுகளில் ஓளு செய்வதற்கு பதிலாக போலீஸார்கள் குளிக்கும் தடாகமாக ஆக்கிய நாட்களை நினைத்து பார்க்க வேண்டும். செப்டம்பர் 14-15-16 மூன்ற தினத்திலும் காயல் நகர வீடுகளில் மக்களை போலீசார் சிறைவைத்த மாதிரி அடைத்து வைத்தனர். கடைகள் மூடப்பட்டிருந்தது. எந்த தேவைக்கும் மக்கள் வெளியே வந்தாலும் போலீசரால் கைது செய்யப்பட்டனர். (எந்த தீவிரவாத செயலும் நடைபெறவில்லை- மீன்கடைத் தகராறில் இத்தனை பெரிய அடுக்குமுறையைக் கண்டோம்.) அனுபவித்தோம். கடைகள் சூரையாடப்பட்டது. பெண்கள் தைக்கா தீ வைக்கப்பட்டது. இவையெல்லாம் அன்றைய பத்திரிக்கைச் செய்தி தான்.

அமைதி திரும்பியது எப்போது?

சென்னையிலிருந்து கமிஷ்னர் தேவாராம் உயர் போலீஸ் அதிகாரி வந்து ஊரைப் பார்வையிட்டு (அரஜக போலீஸ் படைமாற்றப்பட்ட பின்னர் தான் அமைதி திரும்பியது) இதற்கு முக்கிய காரணம் சரியான பாதுகாப்பு இல்லை. ஏதோ ஒரு சூழ்ச்சி. அது எந்த அரசியல் அமைப்பு செய்தது என்று மக்கள் அன்று புரிந்து கொண்டனர். புரிந்த மக்கள் இன்றுவரை வாழ்கிறார்கள். இதுபற்றிய பத்திரிக்கை ஜெராக்ஸ் நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.)

வீட்டைப் பாதுகாப்பது எப்படி?

நமது ஊரைப் பொறுத்தவரை தெருவாசல் ஆண்கள் நுழையும் பாதை- பெண்கள் வரும் திட்டுவாசல் அடுத்து தலைவாசல் கடைசியாக தோட்டவாசல் ஆக ஒரு வீட்டுக்கு ஐந்து வாசல்கள் உட்பட மாடி வெளிவாசல் இருக்கும் காலசூழ்நிலை பாதுகாப்பு முறையில் இனி கட்டப்படும் வீடுகளுக்கும் இப்போது இருக்கும் வீடுகளுக்கும் படிப்படியாக பாதுகாப்பு கனத்த கிரில் கம்பி கதவு- மரக் கதவுக்கு முன் கண்டிப்பாக போட வேண்டும்.

நாம் அனைவரும் வெளிநாடு, வெளியூர்களில் வியாபாரம் தொழில் செய்ய செல்வதால் நமது வீட்டில் பெண் மக்கள்கள் இருப்பதால் - மரக்கதவுக்கு முன் இரும்பு கதவு போட்டால் மிகுந்த பாதுகாப்பு. அன்று கதவுகளுக்கு மேல் ஜன்னல் இருக்கும். வெளியிலிருந்து யாரும் கதவைத் தட்டினால் ஜன்னல் வழியாகப் பார்க்கும் பழக்கம் மாறி வருகிறது. இதனால் ஆபத்தும் கூடி வருகிறது. இன்று நவீன வீடு கட்டுவோர் மேல் ஜன்னல் வைத்த கதவை செய்வதற்கு பதிலாக ஜன்னலில்லாத கதவைச் செய்வதால், வெளிப்புற பாதுகாப்பு இரும்பு கிரில் கதவு அவசியம் தேவைப்படுவதை எண்ணிப் பாருங்கள். செலவைப் பார்க்கும் போது ஆபத்து தொடர்ந்து வருவதை உணர்ந்து கொள்வீர்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களிலுள்ள வீடுகளில் இரும்பு கிரில் சங்கிலிவாசலுக்குப் பின் மரக்கதவு இருப்பதை அறிந்து இருப்பீர்கள். அதுபோல் காயல் நகர வீடுகளையும் மாற்றி பாதுகாப்பு கதவு ஆக்க வேண்டும்.

முடுக்கு முன் பகுதி கதவு :

ஓவ்வொரு சொந்த முடுக்குக்கும் முன் பகுதி இரும்பு கதவு அவசியம் தேவை. இது இரவில் வரும் திருடர்கள் முடுக்கு பக்கம் நுழைவதைத் தடுத்து பாதுகாத்து கொள்ள முடியும். சொந்த முடுக்காக இருக்காவிட்டாலும் பாதுகாப்பை எண்ணி இரு வீட்டார்களும் கலந்து முன்பக்கம் முடுக்கில் ஆளுக்கு அரைக் கதவு போட்டு பாதுகாத்துக் கொள்ளலாம். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் முன் முடுக்கு பகுதி இரும்பு கதவு போடும் காலம் விரைவில் வரத் தான் போகிறது. பாதுகாப்பை எண்ணி இதை செய்யலாம். எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்க தோட்டத்தின் இறுதி பக்க முடுக்கிலும் பாதுகாப்பு இரும்பு கதவு போடப்பட வேண்டும்.

இரவில் முடுக்கின் நிலை இருட்டு?

இரவில் முடுக்கு பக்கம் “கும்-இருட்டாக” வைத்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில் சொன்னாலும் கூட கேட்பதில்லை. இருட்டில் யார் முடுக்கு பக்கம் வந்தாலும் போனாலும் தெளிவாக இருட்டில் தெரியும் அளவு உட்பகுதி முடுக்கில் “சிரோ வால்ட் பல்பு” போட்டு வைப்பது நல்லது. நகைக் கடை முன் இரவில் டியூப்லைட் போட்டு வைப்பதை பார்த்திருக்கலாம். இது நகைக் கடைக்கு ஓர் பாதுகாப்பு கூடவே காமிரா செட் பண்ணியிருப்பார்கள். பூட்டைத் திறக்க முயற்சி செய்தால் அலாரம் அடிக்கும் அளவு நகைக் கடையில் பாதுகாப்பு செய்திருப்பார்கள். பாதுகாக்காமல் தவறும் நகைக் கடைகள் திருடனால் நஷ்டம் உண்டாகிறது. சரியான பாதுகாப்பு நமது பொருட்களை பாதுகாத்து நம்மை நிம்மதியாக இருக்கச் செய்யும். பாதுகாப்பை புரிந்து செயல்பட்டு வளமாய் வாழ்வோம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...repeat
posted by: Abu Jawahir (Chennai) on 29 December 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24809

ஓவ்வொரு சொந்த முடுக்குக்கும் முன் பகுதி இரும்பு கதவு அவசியம் தேவை. இது இரவில் வரும் திருடர்கள் முடுக்கு பக்கம் நுழைவதைத் தடுத்து பாதுகாத்து கொள்ள முடியும். சொந்த முடுக்காக இருக்காவிட்டாலும் பாதுகாப்பை எண்ணி இரு வீட்டார்களும் கலந்து முன்பக்கம் முடுக்கில் ஆளுக்கு அரைக் கதவு போட்டு பாதுகாத்துக் கொள்ளலாம்.

இன்ஷாஅல்லாஹ் இதுபோல் முன் முடுக்கு பகுதி இரும்பு கதவு போடும் காலம் விரைவில் வரத்தான் போகிறது. பாதுகாப்பை எண்ணி இதை செய்யலாம். எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்க தோட்டத்தின் இறுதி பக்க முடுக்கிலும் பாதுகாப்பு இரும்பு கதவு போடப்பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நாம் அனைவர்களும் பின்பற்ற வேண்டும்
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) on 31 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24840

காலத்திற்கு ஏற்ற அறிவுரை (கட்டுரை) நாம் அனைவர்களும் பின்பற்ற வேண்டும் - ஆசிரியர் - A.L.S. இப்னு அப்பாஸ் அவர்களின் கட்டுரைகள் இன்னும் அதிகம் வெளிவர வேண்டும்... வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved