Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:57:01 AM
வியாழன் | 9 மே 2024 | துல்ஹஜ் 1743, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:46
மறைவு18:28மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 76
#KOTWEM76
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 15, 2013
ஃபர்ஸ்ட் ஜாப்

இந்த பக்கம் 2886 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82 லட்சம் பேர் வேலைவாய்ப்பு எதிர்பார்த்துள்ளனர் என்ற செய்தியை படித்த போது, படித்து முடித்த கையோடு எம்ப்ளாய்மன்ட் எக்சேஞ்சில் பதிவு பண்ணி வேலைக்காக அலைந்த நாட்கள் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. இன்றைய KCGC யின் வழிகாட்டுதல்கள் இல்லாத காலம் அது.

கல்லூரி படிப்புக்கு பின்னர் எதாவது ஒரு பொழப்பை பார்த்துதான் பலர் செல்ல வேண்டியிருந்தது. தகுந்த படிப்பிருந்தும் ஒரு வழிகாட்டுதல்கள் இல்லாததினால் திசை மாறிய பறவைகளாய் சுற்றித்திரிந்து காலம்கடந்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் அல்லது இறுதிவரை வராமல் சென்றவர்களும் கூட உண்டு.

முந்தைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவுக்கு படித்தோ அல்லது பிள்ளைகளின் வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்க முடியாத சூழலும், படிச்சு முடிச்ச கையோட தங்கநகை கடைக்கோ அல்லது விசிட் விசா எடுத்து வாப்பா, மாமா என்று யாராவது அவங்க கம்பெனியில் வேலை வாங்கி தந்து விடுவார்கள் என்ற மனநிலையும் இதற்கு காரணம்.

கல்லூரி படிப்பு வரை தான் பெற்றோர்களின் பொறுப்பு. அதன் பின்னர் ‘இரையை தேடி அலையும் பறவைகள் போலத்தான்’ ஒவ்வொரு பட்டதாரியும் அலைய வேண்டும். ஃபர்ஸ்ட் ஜாப் (முதல்வேலை) கிடைக்கின்ற வரைக்கும், சிரமங்களை தாண்டித்தான் பலர் பயணிக்க வேண்டும். அதுவரை பெற்றோர்களும் பொறுமையுடன் தன் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டி நம்பிக்கையளித்து கொண்டிருக்க வேண்டும்.

கல்லூரி (கற்பனை) வாழ்க்கை கனவுகளோடும் அதே (ஊர்) நண்பர்கள் பட்டாளங்களுடன் கண்காணிக்க ஆளில்லை என்றெண்ணி சிலமாதங்கள் பொழுது போக்கிய பின்னர் வேலையை சீரியஸாக தேடுகின்றனர் சிலர். வேலை தேடுமிடத்தில் ரூமேட்ஸ் - நண்பர்கள் வட்டாரம் சரியானதாக, வேலைக்கு கடுமையாக முயற்சிப்பவர்களாக அல்லது அப்படி பட்டவர்களோடு நட்பை ஏற்படுத்தி கொண்டால், பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல நாமும் உந்துதல் பெற்று கரையேறி விடலாம்,

ஒரு காலத்தில் மென்பொருள் (சாப்ட்வேர்) துறையில் வேலை தேடவேண்டுமென்றால் கணினியுடன் கூடிய BE / MCA இருக்க வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான துறையினரும் அதில் வேலை தேடும் அளவுக்கு வேலைவாய்ப்புகளும் அதற்கு தகுந்தாற்போல் போட்டிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் இளம் பட்டதாரிகளை (Fresher’s) உளச்சார்புத் தேர்வு (Aptitude Test), குழு கலந்துரையாடல் (Group Discussion) மற்றும் உற்றறி பண்பாற்றல் (psychometric) டெஸ்ட் மூலம் கேம்பஸ் அல்லது ஆஃப் கேம்பஸில் தேர்ந்தெடுக்கின்றனர்.

மேற்படிப்புகளுக்காக (GMAT/ GATE / GRE ) முயற்சிப்பவர்கள், எப்படியாவது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலையே பெற்று விட வேண்டும் என்று எண்ணுபவர்கள், கல்லூரியின் இறுதி வருடத்திலேயே Aptitude Test மற்றும் Group Discussion களுக்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். ஆனால் நாமோ, வேலையே தேட ஆரம்பிக்கும் போதுதான் Aptitude Test - க்காக RS.Agarwal(?) புக்கையே தேட ஆரம்பிக்கின்றோம்... ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கின்றோம்.

பெங்களூரில் வேலைபார்க்கும் போது, காயலர் (இளம்பட்டதாரி) களின் சரணாலயமாகிய ‘அமீன் ஹௌசில்’ குழு கலந்துரையாடலுக்கான ஒத்திகைகள் இளம்பட்டதாரிகளுக்குள் நடக்கும். ஒரு சிலரை தவிர பலர் கூச்ச(அச்ச)த்துடன் கலந்து கொள்வதில்லை. என்னதான் பொறியியல் பட்டபடிப்பு & அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், ஆங்கிலம் என்பது வெறும் மதிப்பெண்களை பெறுவதற்காகவும் , ஆங்கிலத்தில் பேசினால் பீட்டர் -ன்னு சொல்லிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வும் கூச்சசுபாவமும் தான் இதற்கு காரணம்.

இன்றைய நவீனயுகத்தில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் நாளிதழ்களில் விளம்பரங்களாக வருவதில்லை. இணையதளங்களிலும், லிங்க் டின் போன்ற சமூக வலைதளங்களிலும், ஈமெயில் க்ரூப்ஸ் என்று தகவல் (Information) பரிமாற்றங்கள் மற்றும் நண்பர்கள் ‘நெட்வொர்க் ‘ மூலம் எம்ப்ளாய் ரெஃபரல், ஈமெயில் ஃபார்வட் - ளாகத்தான் இருக்கின்றது.

கணிசமான வேலை வாய்ப்புகள் கன்சல்டன்ஸி - கள் மூலமும் வருகின்றது. வேலைக்கு ஆள் எடுத்து தர உதவியதற்காக கன்சல்டன்ஸி - களுக்கு பல ஆயிரங்களை நிறுவனங்கள் வழங்குகின்றன. பெரிய நிறுவனங்களில் / வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக இளம் பட்டதாரிகளிடம் பணத்தை உறிஞ்சும் டுபாக்கூர் கன்சல்டன்ஸி - களும் உள்ளன.

மற்ற துறைகளில் (Exமெக்கானிக்கல் / எலெக்ட்ரிகல்) ஒரு சிலரே நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் ஓரிரு வருடங்கள் சிறிய நிறுவனங்களில் அனுபவம் பெற்று விட்டால் IT - க்கு இணையான நல்ல ஊதியம் வெளிநாடுகளில் கிடைக்கின்றது. அப்படி முன்னேறிய பலரும் நம்மில் இருக்கின்றார்கள்.

இளம் பட்டதாரிகள் வேலை அனுபவத்திற்காக Small Scale Industries அல்லது ஏதோ ஒரு சிறு/நடுத்தர நிறுவனங்களில் நுழையும்போது, பட்ட படிப்பு சான்றிதல்களை வாங்கி வைத்து விட்டு அடிமை சாசனம் (Bond) எழுதுவதிலும், ட்ரைனிங் என்ற பெயரில் காசை கறப்பதிலும் கில்லாடிகள் இவர்களில் சிலர்.

சரியான பயோ-டேட்டா (Resume) , நேர்முக தேர்வுக்கு தயார்படுத்துதல் மற்றும் அதற்கான சில முன்னேற்பாடுகள் மிக முக்கியம். வேலைக்கு ஆள் எடுக்கின்றோம் என்ற பெயரில் தலையே சுற்றிவிடும் அளவுக்கு பல சுற்றுகள் , அதிமேதாவித்தனத்தை (?) காட்டுவதற்காக கேள்விகளை கேட்டு கசக்கி பிழிவதில் நமது நாட்டினர் போன்று மேலை / பிற நாட்டினரிடத்தில் நாம் காணமுடியாது என்பது வேறு விடயம்.

வேலைக்கு அப்ளை பண்ணுவதில் நேர்முக தேர்வு அட்டெண்ட் பண்ணுவதில் அலட்சியமோ சடவோ எரிச்சலோ காட்டினால், அது கூட ஒருவரின் திருப்பு முனைக்கான (Turning Point) ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். இது போன்ற சம்பவங்கள் பலர் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. சுய முயற்சி தன்னம்பிக்கையுடன், சோர்வடையாமால் தன்னை தானே ‘தொடர்ந்து’ ஊக்கபடுத்தி கொண்டால்... தான் விரும்பும் நிறுவனத்தில் / வேலையில் அமர்ந்து விடலாம்.

மாமரத்தின் அடியில் (எம்ப்ளாய்மன்ட் எக்சேஞ்சில் பதிவு பண்ணியதோடு அல்லது குறிப்பிட்ட வேலை வாய்ப்பை நம்பி) படுத்துக் கொண்டு மாங்கனிகள் கீழே விழாதா என்று ஏங்குபவர்களை விட அல்லது கண்ணை மூடிக் கொண்டு கல்லெறிபவர்களை விட, குறி வைத்து தாக்குபவர்கள் வெற்றி பெறுகின்றார்கள்.

அரசாங்க வேலைகளில் நமதூரை/ சமூகத்தவரை பொறுத்தவரை ஒரு பெரிய ஆர்வமோ முயற்சியோ காண்பிப்பதில்லை. அரசாங்க உத்தியோகத்திலுள்ள நன்மைகள் (சொந்த ஊரிலே / தாய்நாட்டிலே வேலை, பீஎப், ஜாப் செக்யுரிட்டி, வாரிசுகளுக்கு வேலை*) பற்றிய போதிய விழிப்புணர்வு, தகவல் / அனுபவ பரிமாற்றங்கள், நுணுக்கங்கள், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாதது மிக முக்கிய காரணங்கள்.

ஒரு வேளை நம் முந்தைய தலைமுறையினரில் சில சதவிகிதத்தினர் அரசாங்க துறைகளில் உயர் பதவிகளில் இருந்து, அதுபற்றிய விழிப்புணர்வு - வழிகாட்டுதல்கள் கிடைத்திருந்தால், குடும்பத்தை பிரிந்து ஏதோ ஒரு பாலைவனத்தில், பிடிக்காத அல்லது தன் படிப்புக்கு தகுதியற்ற வேலையை பணிபுரிய வேண்டிய சூழல் தவிர்க்க பட்டிருக்கலாம்.

நமது இளைய தலைமுறையினருக்கு அவர்களுடைய ஒன்பது / பத்தாம் வகுப்பிலிருந்தே, என்னென்ன அரசாங்க தேர்வுகள் (TNPSC ரயில்வே, சிவில் சர்விசஸ்) , அதற்கான தகுதிகள், விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டால்... தனது கேரியரில் உள்ள மற்றதொரு வழியை அறிய / தேர்ந்தெடுத்து கொள்ள அவர்களுக்கு அது வழிவகுக்கும்.

படிப்புக்கு உதவுவதோடு ஒரு சமுதாயத்தின் கடமை முடிந்து விடுவதில்லை. அவ்விளம் பட்டதாரிகள் வேலையில் அமரும்போது தான் அதற்கான முழுபலன் கிடைக்கின்றது. அதற்காக நாம் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற அர்த்தம் இல்லை. அவர்கள் வேலையில் அமர்வதற்கான துறைசார்ந்த வழிகாட்டுதல்கள் , கவுன்சிலிங், அனுசரணைகள் என நம்மால் இயன்ற உதவிகள் (வேலை தேடுவதற்காக சென்னை / பெங்களூர் சென்று, உணவுக்கும் உறைவிடத்துக்கும் வசதியில்லாமல் ஊரிலே காலம் தள்ளுபவர்களும் இருக்கின்றார்கள்) நிச்சயம் அவர்களுக்கு தேவை.

நம் காயலர்கள் கால் படாத நாடும் துறையும் இல்லை. அளப்பரிய சக்தி நம்மிடையே கொட்டி கிடக்கின்றது. இது முறையாக முழுமையாக அறுவடை செய்ய படவேண்டும். வேலையில் நல்ல நிலையை / உயர் பதவியை அடைந்தவர்கள் என ஒவ்வொருவரும் (எங்கிருந்தாலும்) சமுதாயத்தை விட்டு விலகி நிற்காமல், தன் சமூக கடமையுணர்ந்து... தான் கடந்து வந்த பாதையை இளம் பட்டதாரிகளிடம் பகிர்ந்து ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழிநடத்துவதன் மூலம் நல்லதொரு சமூக முன்னேற்றத்தை நாம் அடைய முடியும் !

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தூய பார்வை தூரத்து பார்வை
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 15 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25521

ஆசிரியர் அவர்களின் கட்டுரை, படித்து முடித்து, "முகவரிகள் தொலைந்ததனால் முகிலினங்கள் அலைகின்றனவே" என்பது போல் திக்கு தெரியாமல் அலைபவர்களை கைதூக்கி விடவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறது.

KCGC இந்த வகையில் களம் இறங்கி செயல்படுவதை பார்க்கிறோம். இப்போது நம்மவர் நிறைந்த மண்ணடியில் அலுவலகம் அமைக்கும் செய்தியும் வந்திருக்கிறது

என்னதான் இருந்தாலும் படித்து முடித்த மாணவர்கள் மனதிலே தன்னம்பிக்கையும் நம்மால் முடியும் என்ற உணர்வும் சுயதைரியமும் வராமல் ஒன்றும் செய்ய முடியாது

இரண்டு நண்பர்கள் நேர்காணலுக்கு சென்றார்கள். ஒருவர் அழைக்கப்பட்டார், கேள்விகள் கேட்கப்பட்டன,கடைசி கேள்வி,"இந்த வேலை உங்களுக்கு கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள்?" பட்டதாரியின் பதில்,"எனக்கு கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்துக்கொள்வேன் வேறு இடத்தில முயற்சி செய்வேன்". சரி , ஒரு வாரத்தில் தகவல் சொல்கிறோம், சென்று வாருங்கள்...இப்போது மணி அடிக்கிறது.

அடுத்த நபர் உள்ளே வருகிறார். கேள்விகள் கேட்கப்படுகின்றன, பதில்கள் பரிமாறப்படுகின்றன, இறுதிக் கேள்வி, "இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் என்ன செய்வீர்கள். பட்டென்று பதில் வருகிறது, " உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று நினைப்பேன்" சொல்லிவிட்டு வெளியேற முயன்றவரை தடுத்து நிறுத்துகிறது நிர்வாகம். "ஏன் அப்படி சொன்னீர்கள்?" "வேறென்ன சார், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பதில் சொன்ன என்னை நீங்கள் தேர்ந்தெடுக்க தவறினால், அது உங்கள் தலை எழுத்து. உங்களுக்கு தெரியுமா கம்பர் என்ற புலவர் சோழமன்னனின் ஆஸ்தான கவிஞாக இருந்தார். ஒரு முறை மன்னனுக்கும் புலவருக்கும் இடையே கருத்து வேற்றுமை.மன்னர் கம்பரை வெளியே போக சொன்னார். வெளியேறும்போது கம்பர் பாடினார்."வல்லவனும் நீயோ வள நாடும் உன்னதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன், என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தன் உண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?" அடுத்த நிமிடம் மன்னர் கம்பரை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

சொல்லி முடித்த வேட்பாளரை தட்டிக் கொடுத்து,அட, ராமாயணம் வேறு தெரியுமா, சபாஷ் " You are appointed "என்று கூறி வழி அனுப்பியது அந்த நிர்வாகம். இது கதை அல்ல நிஜம். இப்படி நம்மில் எத்தனை பேருக்கு தைரியமாக நேர்காணலை அணுக முடிகிறது. எண்ணிப் பார்க்கிறேன்

"WE CANNOT COMMAND SUCCESS, SUCCESS COMES TO THOSE WHO DARE AND ACT. IT SELDOM GOES TO THE TIMID AND COWARD" சொன்னவர் ஜவஹர்லால் நேரு. இந்த கட்டுரையை படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கும் உதவும் புரவலர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். +2 தேர்வு நெருங்குகிறது, தெளிவான திட்டம். விடா முயற்சி, கடும் உழைப்பு, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கும் வெற்றிக்கும் வானமே எல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved