Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:47:31 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 77
#KOTWEM77
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 25, 2013
குர்ஆனில் கூறப்படும் மிருகங்களும், இதர விலங்குகளின் இயல்பு வாழ்க்கையும்! (பாகம் - 1)

இந்த பக்கம் 9005 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணையதள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த இணையதளத்தில் பலரும் மனிதவர்கங்களின் வாழ்க்கை குறித்து கருத்துக் கோவைகளை எழுதுகிறார்கள். நானும் உங்களைப் போலவே தான் எழுதி வந்தேன். மாற்றி யோசித்து புதுமை புகுத்திட குர்ஆனில் கூறப்பட்ட மிருகங்களையும், இன்னும் பல விலங்குகளைப் பற்றி 11 நூல்களை படித்தேன். பல பழைய மாத இதழ்கள் மூலமும் தேடி ருசிகரமாக தருகின்றேன். இதற்காக நான் ஒருமாதக் காலம் நேரம் ஒதுக்கினேன். (உண்மையான தகவலாகவும், சுவையாக இருக்கி அப்படி செய்ய விரும்பினேன்.) மாணவ மாணவியர்கள் அறிந்துகொள்ள ஏராளமான தகவல் உள்ளன. பெரியவர்களும் படித்து சுவைக்கலாம். படித்துப் பாருங்களேன்.



சுவர்க்கம் (சுவனபதி) செல்லும் மிருகங்கள் :

1. இபுராஹீம் (அலை) அவர்களின் காளைக்கன்று
2.இஸ்மாயில் (அலை) அவர்களின் ஆட்டுக்கிடா
3. சாலிஹ் (அலை) அவர்களின் ஓட்டகம்
4. மூஸா (அலை) அவர்களின் மாடு
5. உஜைர் (அலை) அவர்களின் கழுதை
6. அஸ்ஹாபுல் கஹ்பு என்ற குகைவாசிகளின் நாய்

(ஆதாரம் நன்றி : மானாமக்கீன் எழுதிய முஸ்லீம் டைஜஸ்ட் 1996)

நபிமார்களின் தொழில்கள் :

1. இபுராஹீம் (அலை) அவர்கள் கால்நடைபண்ணை
2.இஸ்ஹாக் (அலை)அவர்கள் வேட்டையாடும் தொழில்
3. யாகூப் (அலை) அவர்கள் கால்நடைப்பண்ணை
4. அல்யாஸ் (அலை) அவர்கள் கால்நடைப்பண்ணை
5. ஷ_ஹைப் (அலை) அவர்கள் ஆட்டுப்பண்ணை
6. சாலிஹ் (அலை) அவர்கள் ஒட்டகப்பண்ணை.

(நன்றி ஆதாரம் : அஷ்ஷரி அத்துல் இஸ்லாமிய நவம்பர் 1999).

திருக்குர்ஆனில் காணப்படும் மிருகங்கள் :

1. ஆடு
2. ஓட்டகம்
3. ஓநாய்
4. கழுதை
5. கால்நடைகள்
6. குதிரை
7. கோவேறு கழுதை
8. யானைப்படை
9. பசுமாடு (அல்பகர(ஹ்) அத்தியாயம் 2-ல்

(நன்றி : திருக்குர்;ஆன் தமிழ் தர்ஜமா)

மாதவிடாய் (ஹைலு) ஏற்படும் மிருகங்கள் :

1. பெண் ஒட்டகம்
2. பெண்நாய்
3. பெண்குதிரை
4. பெண்முயல்
5. பெண்முள்ளம் பன்றி
6. பெண்அணில்

(நன்றி : மூலம் தஹ்தவீ- குர்ஆனின் குரல் ஜூலை 1971)



• ஹயாத்துல் ஹைவான் என்ற அரபிநூலில் மிருகங்கள் பறவைகள் பற்றி அறியலாம்.

• முதன்முதலில் குதிரையில் ஏறியவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்கள்

• முஹம்மது (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் பெயர் கஸ்வா

• இஸ்லாமிய வரலாற்றில் யானை ஆண்டு ஒன்று உள்ளது

• முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தவாறு சுவர்க்கத்திற்குள் அழைத்துச் செல்பவர் பிலால் (ரலி) அவர்கள் ஆவார்கள். (மிலாதுன்னபி மேடையில் கேட்டவை)

ஓட்டகம் :

இது பாலைவனக் கப்பல் என்று கூறுவார்கள். பாலைவன மணலில் வேகமாக ஓடும். பலநாள் தண்ணீர் சாப்பிடாமல் இருக்கும். தண்ணீரைக் கண்டால் ஒரே மூச்சில் அதிகமான நீரை உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும். பார்வைக்கு சாதுமிருகம், இதன் முகத்தைப் பார்க்கும் போது அப்பாவி போல இருக்கும். அரபுலகம் பூராவும் ஒட்டகம் காணப்படுகிறது. இதன் பாலில் ஒட்டகஹல்வா தயாரித்து அரபுலகில் விற்கிறார்கள். சுவையும், சத்தும் நிறைந்தது. அரபுலகில் ஒட்டகப் பந்தயம் நடக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவன பகுதியில் ஒட்டகம் காணப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். பிரசவக் காலம் 406 நாட்கள். (திருக்குர்ஆனில் 91:13-ல் ஒட்டகம் பற்றி காணலாம்). ஓட்டகம் மூலம் முற்காலத்தில் தகவல் சேவை நடந்தது. இதற்காக இந்திய அரசு தபால்தலை வெளியிட்டது.



யானை :

இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா, இலங்கை காடுகளிலும் யானை வாழ்கிறது. ஆப்பிரிக்க யானை உயரமாகவும் அதன் கொம்பு என்ற தந்தம் வளைந்தும் காணப்படும். சில ஆப்பிரிக்க யானைகளுக்கு கருப்புதந்தம் இருக்கிறது. வெள்ளை யானை நாடு என்பது தாய்லாந்து நாட்டை கூறுவார்கள். இன்று தமிழக வனப்பகுதிகளிலிருந்து அருகாமையிலுள்ள கிராமங்களில் யானை வந்து தோட்டப்பயிர், விவசாய பூமிகளை அழித்து நாசப்படுத்தி விடுகிறது. மரங்களை வேறோடு பிடுங்கிவீசுகிறது. காடுகளில்; கடும் வறட்சி நீர்பற்றாக்குறையாலும், மரங்கள் வெட்டப்படுவதாகும். காட்டை விட்டு யானை அடிக்கடி வெளியாகிறது. யானை வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே பழமொழியாகும். யானை மக்களிடம் நன்றாக பழகும். அன்பு செலுத்தும். அதே சமயம் தன்னை துன்புறுத்துவோரை பழிவாங்காமல் விடாது. யானை தோல்தந்தம் இவற்றிற்காக வேட்டையாடப்படுகிறது. யானையின் ஒருநாள் உணவு இலைதழை காய்கறி 65கிலோ. யானையின் உள்பற்கள் வெட்டும் தன்மையில் கடினமாக இருக்கும். யானை பல் பருக்களுக்கு தேய்த்து போட சுகம் கிடைக்கும். யானை தந்தத்தில் தங்கத்தாலும், பல்வேறு நவரத்தினங்களால் பொம்மை செய்து ஒரு லட்சம் முதல் 30லட்சம் வரை வெளிநாட்டில் விற்கப்படுகிறது.

யானையை ஒரே இடத்தில் கட்டிப்போட்டால் மதம் என்ற வெறிப்பிடித்து பிளிரி ஓடும். அதனால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி யானைகள் 36 புத்துணர்வு முகாம் கோவை மாவட்ட நல்லி மலைச்சாரல் ஆற்றங்கரையில் 48நாள் தங்கவைத்து மீண்டும் கொண்டு வரப்பட்டு கோவில் தர்ஹா இடங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழக பத்திரிக்கை செய்தியை தந்தது. ஆசிய யானை 60மதல் 80 ஆண்டுகள் வாழும். ஆப்பிரிக்க யானை 100 ஆண்டுகள் வாழும். பிரசவ நாள் 645நாட்கள். யானை தும்பிக்கையில் எலும்புகள் கிடையாது. யானைத் தும்பிக்கை மூலமே சுவாசிக்கும். (மனிதன் நம்பிக்கையில் வாழுகின்றான்) இறைவன் உதவியோடு. யானையை அடக்கும் கருவி அக்குசம் என்றும், யானை பாகனை மாவுத்தன் என்றும் கூறுவார்கள். யானைக்கு வெள்ளைநிறம் பிடிக்காது. யானை இருந்தாலும், ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. கேரளா ஓணம் பண்டிகை, மைசூர் தசரா பண்டிகை, இலங்கை கண்டி பெரகரா பண்டிகையில் அதிகமான யானை பவனி வரும். முற்கால அரசர்கள் யானை படை வைத்திருந்தார்கள். யானையின் மீது இருந்து விளையாடும் பில்லியாட் பந்து விளையாட்டு என்பார்கள். ஆப்பிரிக்க காடுகளில் யானையை மூன்றுநாளில் சாப்பிட்டு விடும் விஷஎறும்புக் கூட்டம் உள்ளதாம். யானை சிறியக் குட்டியாக இருக்கும்போதே பாகன் சங்கிலியை காலில் கட்டிவிடுவான். அதை அறுக்க யானை முயற்சி செய்து தோல்வியடையும். பெரிதாக வளர்ந்த யானை –சங்கிலியை அறுக்க முடியாது என்று தவறாக கருதி பாகனுக்கு கட்டுப்படும். இது வழக்கமாகும். (திருக்குர்ஆனில் யானை படையினர் 105:1-5 பற்றி விளக்கம் உள்ளது)



குதிரை :

குதிரைக்கு கருப்புநிறம் தெரியாது. குதிரையின் பார்வை பலபக்கம் பார்க்கும் சுவாபம். அதனால்தான் குதிரையின் கண்ணை மறைத்து ஒருபக்கமாக பார்க்க ஒருமூடி அணிகிறார்கள். எல்லா நாடுகளிலும் பந்தயத்திற்கும், பயணத்திற்கும் குதிரையை பயன்படுத்துகிறார்கள். போலீஸ், ராணுவத்தில் குதிரை படை வைத்திருக்கிறார்கள். நம் நாட்டிலும் உலகிலும் குதிரை மூலம் தபால் சேவை இருந்தது. இன்று நம் நாட்டில் இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் வண்டி போக்குவரத்தில் பம்பாய் டெல்லியில் உள்ளது. நம்மூரில் முன்பு குதிரைவண்டி சேவையிருந்தது. உடல் முழுவதும் வெண்மையாக இருக்கும். குதிரையை பஞ்சகல்யாண் குதிரை என்பார்கள். ஆப்பிரிக்க ரஷ்ய குதிரை நம் நாட்டு குதிரையை விட உயரம் அதிகம் ரோமங்கள் அதிகம் உடலில் காணப்படும். 200 ஆண்டுகளாக குதிரையின் பயன் அறிந்திருக்கிறார்கள். 20 ஆண்டுகள் உயிர் வாழும். 330 நாட்களில் குட்டிபோடும். டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர் குத்புதீன் ஐபெக் குதிரை போலோ விளையாட்டின் போது கீழே விழுந்து இறந்தார். காயல் நகரில் குதிரை வியாபாரம் நடந்த முதல்தெரு பரி (குதிரை) மார் தெருவாகும். முற்காலத்தில் குதிரையை வாங்க அரபியர்களும், யவனர்களும் நம்மூருக்கு வந்ததாக நமதூர் சரித்திரம் கூறுகிறது. குதிரை இனத்தில் அழகு குதிரை வரிக்குதிரையாகும். (திருக்குர்ஆனில் குதிரையைப் பற்றி சொல்லப்பட்ட இடம் : 3:14, 16:8, 17:64, 59:6 கோவேறு கழுதை 16:8 கழுதை : 62:5)

ஆடு :

செம்மறிஆடு, வெள்ளாடு இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. ஆட்டுப்பண்ணை வைப்பது சிறந்த தொழிற்வளர்ச்சியாகும். முஸ்லீம்கள் குர்பான் கொடுப்பதற்கு கிடா, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களை பயன்படுத்துகிறார்கள். குளோனிங் முறையில் ஆட்டுக்குட்டி முதன்முதலில் உருவாக்கிய நாடு ஸ்காட்லாந்து. காஷ்மீரிலுள்ள சாமா என்ற ஆட்டுக்குட்டியின் தோலைப் பதப்படுத்தி தங்கநைக துடைத்து பாலீஸ் செய்வதற்கு நகை வியாபாரிகள் உபயோப்படுத்துவார்கள். ரஷ்ய செம்மற் ஆடு அதிக ரோமம் உள்ளது. 64கிலோ முதல் 190 கிலோ எடை கொண்டது. 8ஆண்டுகள் வாழும் 151 நாட்களில் குட்டிபோடும். வெள்ளாடு சற்று மாற்றம் உண்டு. வெள்ளாடு 15ஆண்டுகள் வாழும். (குர்ஆனில் ஆடு பற்றி 37:107 வருகிறது)

பசுமாடு :

குர்ஆனில் இரண்டாம் அத்தியாயம் பசுமாடு ஆகும். பசுமாட்டப் பண்ணை சிறந்த தொழிலாக கருதப்படுகிறது. வருவாயும் சுலபமாக ஈட்டலாம். பசுவிலிருந்து பால் எடுத்து சிறந்த தொழிலாக செய்யப்படுகிறது. மோர், தயிர், வெண்ணெய், நெய் என்று பலவும் கிடைக்கிறது. நெய் உயர்ந்த வஸ்தாக கருதப்படுகிறது. சமையல் கமகமவெனவாக்க உதவுகிறது. கல்யாண வீட்டு சாப்பாட்டில் நெய் முக்கியம் பெறுகிறது. ஹாசனூர் பகுதியில் தொழிலதிபர் கிருஷ்ணன் 30ஆயிரம் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். ஐந்து ஆண்டுகளில் 350 மாடுகளை அருகிலுள்ள காட்டுப் பகுதி புலி வந்து கொன்று தின்றதாக சொல்கிறார். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் காட்டுமாடு, பசுவின் மூதாதை குடும்பத்தைச் சார்ந்தவையே காட்டெருமை ஒருகாட்டு எருமை ஐந்து ஆயிரம் முதல 10 ஆயிரம் எடையுள்ளவை. 400கிலோ சுமையைத் தாங்கும் சாதாரண மாட்டைவிட 2பங்கு பெரிதாக உயரமாக காட்சித் தரும். ரஷ்யாவில் காட்டெருமை ரகம் 50 உள்ளது. காட்டெருமையை சிங்கம் புலி கூட்டம் வேட்டையாடும். காட்டுவாசிகள் அதன் மாமிசத்தை புசிப்பதில்லை. காட்டுவாசிகளுக்கு காட்டுஆடு, மான் இவைகளை எளிதில் பிடித்து சாப்பிடுவார்கள்.

இதர விலங்குளின் இயல்பு வாழ்க்கை:

சிங்கம், புலி, சிறுத்தை, மான், குரங்கு, கீரி, ஓநாய், நாய், காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி மற்றும் நீர்யானை குறித்து சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. படித்துப் பாருங்களேன்…..! மொகலாய மன்னர்கள் வடநாட்டில் வேட்டை ஆடும் இடம் பத்தேபூர் காடாகும்.

புலி:

சோழர்களின் சின்னம் புலி, புலியின் எடை 150 முதல் 200 கிலோ எடையாகும். காட்டுப் புதர்களில் மறைந்து நின்று வரும். மிருகங்களை பதுங்கி பாய்ந்து பிடித்து வேட்டையாடும். மலையாடு, ஓநாய், நரி சாம்பல் மான் இனங்களையும் பசு, குதிரைகளையும் வேட்டையாடி தின்னும். பெரிய புலி 8அடி வரை தாண்டிச்செல்லும். 30கிலோ இறைச்சி ஒரு நாள் உணவு. (பூனைக் குடம்பத்தைச் சேர்ந்த இனமே புலி, சிறுத்தை, சிவிங்கி சிறுத்தை இது முற்றிலும் அழிந்துபோய் விட்டது) புலியின் இந்தியாவின் தேசியவிலங்காக 1972-ல் தேர்வு செய்யப்பட்டது.

சிங்கம் :

குஜராத்திலுள்ள கிர் காடுகளில் சிங்கம் உள்ளது. ஆப்பிரிக்க காடுகளில் சிங்கம் நிறைய உள்ளது. சதா காட்டில் அலைந்து திரியும். காட்டின் அரசன். கர்சித்தால் (சப்தம்) எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கும் மூன்று நான்கு சிங்கங்களாக வாழும். 15ஆண்டுகள் வாழும் 113நாட்களில் குட்டி போடும். இதன் எடை 180 கிலோ முதல் 250 கிலோ வரையாகும். மூன்று அல்லது நான்கு குட்டி போடும். சிங்கஇனம் அழிந்துவருவதால் வேட்டையாட தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசு சார்பில் தபால்தலை சிங்கத்திற்காக வெளியிட்டுள்ளனர்.



சிறுத்தை :

நம்நாட்டு காடுகளில் சிறுத்தை உள்ளது. சர்க்கஸ் கூடாரத்தில் இதை எளிதில் பழக்க முடியாது. மூன்று மீட்டர் உயரம் வரை தாவிச்செல்லும். அதிக வேகமாக ஓடும் இதன் எடை 91கிலோ மூன்று அல்லது 4குட்டிகள் போடும். 12 ஆண்டுகள் வாழும் 98 நாட்களில் குட்டிபோடும். பூனையின் முகம்போல சிறுத்தை முகம் இருக்கும். தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தை என்ற அரசியல் கட்சியுள்ளது. பனிசிறுத்தை 41கிலோ எடை கொண்டது. இமயமலை பிரதேசத்தில் உள்ளது. பனிமான் கரடிகளை துரத்திச் சாப்பிடும்.

மான் :

மான்கறி ருசியானவை என்பதால் இறைச்சிக்காகவும், தோல் கொம்புக்காகவும் வேட்டையாடுகிறார்கள். இப்போது மானை வேட்டையாட தடையுள்ளது. எட்டு ஆண்டுகள் வாழும். 151-நாளில் குட்டிபோடும். பனிபிரதேசத்தில் பனிமான் சக்கரமில்லாத ஸ்கிளச் வண்டியை பனிமலைவாசிகளான எஸ்கி மோக்கள் பயணத்திற்கு உபயோகிக்கிறார்கள். இந்திய அரசும், இலங்கை அரசும், கலைமான் படத்தை தபால் தலையில் வெளியிட்டுள்ளது.

பூனை :

பூனையின் தந்தை என்ற பெயர் பெற்றவர்கள். அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் ஆவார்கள். பூனைச் செல்லபிராணி வீட்டில் வளர்க்கிறார்கள். பூனையின் முடி ஆஸ்துமா நோயைத் தரும் என்பதால் அதை தொட்டால் கையை நன்றாக கழுவிக் கொள்வது நலம். கரும்பூனையின் மூளையில் மாந்திரீக்கள் விஷமருந்து தயாரிக்கிறார்கள். குருவிக்காரர்கள் என்ற குறவர்கள் வீட்டுக்கல்யாணத்தில் பூனைக்கறி பிரியாணி நடக்குமாம். உலகில் 25 வகையான பூனை உள்ளதாம். புள்ளிகோடு போட்ட பெர்சியன், சியாம்பூனை, புகழ்பெற்றது. ஆண் பூனை 4கிலோ எடை பெண் பூனை 8 கிலோ எடை 4 அல்லது 5குட்டிகள் போடும். காட்டுப்பூனை உயரமானது. ஆபத்தானது. குப்பமேனி என்ற மூலிகை பூனை வணங்கி என்பார்கள். பூனை இனத்தில் புணுகுபூனை மருத்துவம் மிகுந்த திரவத்தை தருகிறது. விலை அதிகம்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. படித்து – பயனடைவோமாக.
posted by: N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) on 26 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25743

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் A.L.S. மாமா ( இப்னு அப்பாஸ் ) அவர்கள் மிருகங்களின் வாழ்க்கை குறித்து நல்ல பல தகவல்களை அவர்களுக்கே உரிய பாணியில் இணையதள வாசகர்களுக்காக தந்து இருக்கிறார்கள் – பயனுள்ள தகவல்களை படித்து எல்லோரும் – பயனடைவோமாக.
----------------------------------
திருத்தம்:
முற்காலத்தில் குதிரையை வாங்க அரபியர்களும், யவனர்களும் நம்மூருக்கு வந்ததாக – எழுதி இருக்கிறீர்கள்.

அரேபியர்கள் குதிரையை விற்கத்தான் வந்தார்கள் – வாங்க அல்ல. குதிரைகள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதே வரலாறு.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved