Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:30:32 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 8
#KOTWEM8
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 19, 2012
எல்லாமே இயற்கை தான்!

இந்த பக்கம் 2621 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வானம் அது எத்தனைக் கோடி ஆண்டுகளாயினும் தன் இயல்பை இழப்பதில்லையே.

பூமி அது சுற்றும் பாதையிலிருந்து விலகி என்றாவது பயனித்ததுண்டோ. ஒரு வேளை அது அப்படி நிகழ்ந்தால் பூமியில் உள்ளவர்களின் நிலை என்னவாகும்.

மல்லிகைப்பூக்கள், ஏன் என்றுமே அதே வெள்ளை நிரத்திலேயே பூக்கின்றன.
பறவைகள், அவற்றின் விதிக்கு மாற்றாய் யோசித்ததுண்டா.
கால் நடைகள் அவற்றின் வரம்பிலிருந்து ஏன் என்றுமே வெளியேறுவதில்லை.
பூமியில் நான்கில் மூன்று பங்கு உள்ள கடலில்தான் எத்தனை வினோதங்கள்.

அதில் வசிக்கும் திமிங்களங்கள் கூட எந்தக் கப்பலிலும் கடல் கொள்ளை செய்ததில்லையே.

காட்டில் வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகள் இனி நாட்டில் தான் நாம் வாழ வேண்டும் எனத் தீர்மானித்தால் நாட்டில் உள்ளோர் கதி அதோ கதிதான். புலி பசித்தாலும் புள்ளைத் தின்பதில்லையே ஏன்.

ஆயினும் எல்லாமே இயற்கைதான்.

இயற்கைகள் எல்லாமே இறைவன் உண்டென்பதைப் பறை சாற்றுகின்றன.

இறைவனை அச்சம் கொள்கின்றன. அவனைத் துதிக்கின்றன. பணிந்து நடந்து அவன் உண்டென்பதற்கு சான்று பகற்கின்றன. வானவர்கள் கூட அலாதியான ஆற்றலைப் பெற்றிருந்தும் அல்லாஹ்வின் விதிகளுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிய மறுப்பதில்லையே. மேலும் இடி அவன் புகழைக்கொண்டும், வானவர்கள் அவனை அஞ்சியும் துதிக்கின்றனர்……. (அல் குர்ஆன் 13:13)

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் விரும்பியோ, விரும்பாமலோ, அல்லாஹ்வுக்கே பணிகின்றன; அவற்றின் நிழல்களும்- காலையிலும் மாலையிலும் (அவ்வாறே பணிகின்றன). (அல் குர்ஆன் 13:15)

எல்லாம் இவ்வாறிருக்க மனிதன் மற்றும் ஏன் இயற்கையை எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். தன்னைப் படைத்தவனுக்கு அதிகம் மாறு செய்து அதையே சிறந்த கொள்கையென வாதிடுகிறான்.

அனைத்திலும் களப்படம் செய்கிறான்.

செயற்கையான சிந்தனை, செயற்கையான செயல்கள்.

உணவு, உடை, நடை, சுவாசம் என அனைத்திலும் செயற்கை.

இயற்கையான உணவிற்குப் பகரமாக செயற்கையையே மனிதன் விரும்பி உண்கிறான்.

உடனுக்குடன் தயாரிக்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு தனது உடல் ஆரோக்கியத்தையே வீணாக்குகிறான்.

மறைப்பதற்கென அணிய வேண்டிய ஆடைகளைக்கொண்டே உடல் முழுவதையும் திறந்து காட்டுகின்றான்.

தனக்கே உரிய நடையை நடக்காமல் பிறரது நடையை பிரதி எடுத்தாற்போல் பின்பற்றுகின்றான்.

இயற்கை என்னும் மணவாழ்வை மதியாது செயற்கையாய் இணைவதை உரிமை என்கிறான்.

சுயமாக எதையும் சிந்திப்பதை விடுத்து அடுத்தவர் சிந்தனையூடே முழு வாழ்க்கையையும் கழிக்கின்றான்.

அவனது சுற்றுச் சூழல்கள் மாசு படிந்து கிடப்பதைப்போல் உள்ளமும் மாசு படிந்து கிடக்கின்றது.

நிஜங்களிலுள்ள சோகங்களுக்கு விடை தேடாமல் நாடகங்களையும் நடிப்புகளையுமே சோகங்களாக என்னி பொழுது பூராவும் அதிலேயே கழிக்கின்றான். இறுதியில் செயற்கையால் விழையும் விபரீதங்களை எதிர்கொள்வதில் விழிபிதுங்கி நிற்கின்றான்.

பிறகு தீர்வைத்தேடி அழையும் போது முழு வாழ்க்கையையுமே இழந்து விடுகிறான்.

“ஒவ்வொரு குழுந்தையும் இயற்கையிலேயே பிறக்கின்றன. அவர்களின் பெற்றோரே அவர்களை யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெறுப்பை வணங்குபவர்(மஜூசி)களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்ற நபி மொழிக்கேற்ப,

மனிதனின் மனதில் இயற்கை என்னும் மென்பொருளையே இறைவன் வைத்துப் படைத்திருக்க அவனது செயற்கையான (வைரஸ்) செயல்களால் தடம் புரண்டு இறைவனால் கைவிடப்பட்டு இவ்வுலகையும் இழந்து ,மறுமை வாழ்விலும் தோல்வியுறுகிறான். பின்வரும் குர்ஆன் வசனமும் இக்கருத்தையே முன்வைக்கின்றது.

ஆகவே, நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கம் முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே, அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் எவ்வித மாற்றமும் இல்லை; அதுவே, நிலையான மார்க்கமாகும்; ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல் குர்ஆன் 30:30)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எல்லாமே இயற்கை தான்!...
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 19 February 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20531

புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புதிய கட்டுரை. அல்லாஹ்வை நினைவு கூரும் அருமையான கட்டுரை.

என் ஆருயிர் நண்பன் ஷமீமுல் இஸ்லாமுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

தொடர்ந்து அவனிடமிருந்து நல்ல பல கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்லாமே இயற்கை தான்!...
posted by: Zubair Rahman-AB. (Doha-Qatar) on 19 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20532

ஷமீம் அவர்களின் இயற்கை பதிப்பிற்கு வாழ்த்துக்கள், கட்டுரையில் எடுத்துரைத்த அனைத்து கருத்துக்களும் இன்றைய காலத்திற்கு உகந்ததே.

"மறைப்பதற்கென அணிய வேண்டிய ஆடைகளைக்கொண்டே உடல் முழுவதையும் திறந்து காட்டுகின்றான்".

இன்றைய இருபாலரின் நிலையும் சமமே !

ஆடைக்கலாச்சாரத்தில் மிக மலிவு . ஒரு சாராருக்கு வறுமையில் இடக்கூட ஆடை இல்லை மற்றுமொருவரோ அநீதியின் கலாச்சார போதை தலைக்கேறி நல்ல ஆடைகளை நாலாப்பக்கமும் கிழித்து உடுக்கிறார். இப்படி ஆடைக்கலாச்சார சீர்க்கேட்டினை அடையாளம் காட்டுபவருக்கு முதல் மரியாதை கிடைக்கும் இடமோ சபையின் உச்ச மண்டபம்.

இன்றைய கலாச்சார சீர்க்கேட்டில், மார்க்கத்தை அதிகம் நேசிப்பவர்கூட ஆடைக்கலாச்சாரத்தில் கொஞ்சம் கீழ்நிலைதான்- சொல்லப்போனால் அதற்கும் ஒரு விளக்கம் பெரியதாகக்கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எல்லாமே இயற்கை தான்!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 20 February 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 20533

இயற்கையை உணர்ந்து அதோடு இயைந்து வாழும் மனிதன் மட்டுமே சராசரி வாழ்வை அனுபவித்து வாழ்கிறான். இன்று மனித வாழ்கையில் அவன் பயன்படுத்தும் பொருட்களில் இயற்கையின் சதவீதம் என்ன../என்று யாரும் கேட்கலாம். ஏன்..எந்த ஒரு மனிதனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

நவீன வாழ்வின் நுகர்பொருள் கலாச்சாரம் மனிதனை மனிதாபிமானம் மறந்த வெறும் நுகர்வோனாய் மாற்றி அமைத்துவிட்டது. செயற்கை பொருட்களின் பளபளப்பும் கவர்ச்சியும் இயற்கைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதனை ஆசுவாசப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் இயற்கைதான்.

எனவேதான் வாழ்வின் அன்றாட கொடும் சுமைகளில் இருந்து தப்பிக்க ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் மைசூர் எண்டும் மனிதன் அலைந்து திரிகிறான்.

மனிதன் நினைத்தால் ஊட்டியை அவன் உள்ளத்தில் கொண்டுவரலாம். கொடைக்கானல் குளிர்ச்சியை அவன் குடும்பத்தில் காணலாம். மைசூராக வாழ்கையை மாற்றிப்பார்கலாம். இயற்கையின் வற்றாத ஜீவநதியை மனிதன் தன உள்ளத்தில் ஏந்தி பார்க்கட்டும் .ஒரு புதிய உலகை அவன் நிச்சயம் காண்பான்.

தம்பி ஷமீமுல் இஸ்லாமிற்கு நமது பாராட்டுக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:எல்லாமே இயற்கை தான்!...
posted by: Ahamed 48 (Chennai) on 20 February 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20534

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா...

அருமையான ஆக்கம் இது.இறை சிந்தனையோடு எழுதப்பட்ட ஒரு கட்டுரை. தொடரட்டும் உங்கள் கருத்தாக்கங்கள். எனது வாழ்த்துக்களும் துஆக்களும் என்றும் இன்ஷா அல்லாஹ். :-)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எல்லாமே இயற்கை தான்!...
posted by: Raiz (Sydney) on 21 February 2012
IP: 211.*.*.* Australia | Comment Reference Number: 20541

அருமையான , அனைத்து பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஆழமான கருத்துக்கள்... மாஷா அல்லாஹ்...
posted by: Koos Aboobacker (Riyadh) on 25 February 2012
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 20561

மாஷா அல்லாஹ்... ஆழமான கருத்துக்கள்.

எந்த விதத்தில் நாம் நமது வாழ்கையை அமைத்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை திரும்பிப்பார்க்க வைக்கும், உணர வைக்கும் அருமையான கட்டுரை.

கூஸ் அபூபக்கர்
ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved