Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:56 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 80
#KOTWEM80
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 4, 2013
கண் உறங்கும் வேளையில்...

இந்த பக்கம் 2856 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சற்று அயர்ந்தால்
தூக்கம்
மரணமாகி விடும் ---- கவிஞர் இன்குலாப்



நீல வண்ணத்தையும் மரகதப்பச்சை நிறத்தையும் கலந்து உருக்கி ஒரு வாயகன்ற சட்டியில் கொதிக்க விட்டது போன்ற அரபிக்கடலின் நீர் பரப்பு. அந்த வண்ண மய அரபிக்கடலில் ஏகாந்த வாசம் செய்யும் வட்டபவளத்திட்டுகள். இந்த திட்டுகள் திரண்டு தீவுக்கூட்டமாக லட்சத்தீவு என்ற பெயருடன் நிலை நிற்கின்றன. இது கேரள கரையிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மீனவர் ஒருவரை கைரளி என்ற மலையாள தொலைக்காட்சியினர் சந்தித்தனர். அவர்தான் அந்த தீவிலேயே முதன்முதலாக படகு வாங்கியவர்.

அவர் பெயர் பெற்ற கை மருத்துவரும் கூட. சுருக்கமாக சொன்னால் பிரபலமானவர்.

அவரின் வாழ்க்கையை பதிவு செய்த தொலைக்காட்சியினர் இறுதியாக அவரிடம் ஒரு கேள்வியைகேட்கின்றனர். உங்கள் வாழ்வின் ஆசீர்வாதமாக எதை கருதுகின்றீர்கள் ?

எட்டு திசைகளிலும் கடல் நீர் சுற்றி வளைத்திருக்கின்றது. இருளானது கடலின் மேலும் அடியிலும் கரைந்து அமர்ந்திருக்கின்றது. தீவின் தனிமை தரும் ஆழ்ந்த அமைதி .இவை அனைத்தும் தீவு முழுக்க பாதுகாப்பு உணர்வை அள்ளி நிறைத்துள்ளது. அந்த அமைதியின் மடியில் இரவில் நிம்மதியாக எங்களால் உறங்க முடிகின்றதே ! இதை விட இறைவன் தந்த நிஃமத் (அருள் வளம்) வேறு என்ன இருக்க முடியும் ? என அவர் திருப்பிக்கேட்டார்.

மனிதன் மட்டும் நிம்மதியாக உறங்கவில்லை இரவின் இதமான அணைப்பில் மரமும் ,விலங்குகளும் கூட நிம்மதியாக தூங்குகின்றன. ஒரு முஸ்லிமுக்கு மட்டுமே ஓய்வையும் தூக்கத்தையும் அருட்கொடையாக கருதும் மன நிலை வாய்த்திருக்கின்றது. மற்றவர்கள் உறக்கத்தை உடல் உயிரியின் இயல்பான செயல்பாடாக மட்டுமே கருதுகின்றனர்.

பூமி சுழல்வதின் விளைவாக ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இரவு என்பதாக மட்டுமே அறிவியலாளர்களால் கருத முடிகின்றது. பூமி உட்பட எண்ணற்ற கோள்களையும் விண்மீன்களையும் படைத்து இயக்கும் ஒரு மகத்தான ஆற்றலின் பரிசளிப்பாக பகலையும் இரவையும் பார்க்க அவர்களால் முடிவதில்லை.

அத்துடன் அந்த மனிதன் அமைதி நிறைந்த இரவுடன் மோதுகின்றான், தேவைக்கதிகமாக ஆற்றல் வாய்ந்த மின் விளக்குகள் மூலம் இரவை பகலாக்கி இயற்கையின் சம நிலையை குலைக்கின்றான்.

என்னதான் இரவை செயற்கையாக வெளிச்சமாக்கி காட்டினாலும் அந்த வெளிச்சம் தற்காலிகமானதே. அந்த வெளிச்ச துளிகள் கூட மிகுந்த முயற்சியின் விளைவாக கிடைத்தவை. அந்த துளிகளால் இருளை சற்று விலக்க மட்டுமே முடியும். மின் விளக்குகளின் வெளிச்ச பரவல் முடியும் எல்லையில் இருள் ஆழ அகலங்களுடன் கம்பீரமாக நம்மை விழுங்க காத்துக்கொண்டிருக்கின்றது. இருளின் பிரம்மாண்டத்தையும் அதனுள் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் புதைந்திருக்கும் கமுக்கங்களையும் மின்சார விளக்குகளால் நெருங்க்கூட இயலாது.

கதிரவன் மயங்கி சரியும் மாலைப்பொழுதில் கிழக்கிலிருந்து இளம் இருளானது சாம்பல் நிறத்தில் பூமியின் மீது படியத் தொடங்குகின்றது. இருளைக்கொண்டாடும் ஷைத்தான்களும் காற்றில் மிதந்து பரவுகின்றனர். இந்த இராக்கால ஷைத்தான்களிடமிருந்து குழந்தைகளையும் கால் நடைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படி நபி (ஸல்) நம்மை எச்சரிக்கின்றனர்.

இரவு தொடங்கியதிலிருந்து சில மணி நேரம் கழிந்த பிறகு உடல் களைத்து படுக்கையில் சாய்கின்றோம்.உடல் ஒரு பக்கம் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றது. அதன் ஆன்மாவை இருளானது தனக்கே உரித்தான மர்மங்களோடும் கமுக்கங்களோடு ம் ஆபத்துக்களோடும் சூழ்கின்றது.

மை போன்ற கரிய திரவமான இரவையும் அதனுள் நீந்தும் ஆன்மாவின் நுட்பங்களையும் முழுமையாக புரிந்து கொள்ள நம்மால் முடிவதில்லை.

மனித மனதின் அடுக்குகளுக்குள் புகுந்து ஆன்மாவை ஆராய புறப்பட்ட ஸிக்மண்ட் ஃப்ராய்ட் உள்ளிட்ட நவீன உளவியலாளர்களால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல இயலவில்லை. அவர்களின் ஆய்வுகள் மனிதனின் தசை , நரம்பு , எழும்பு ,குருதியைத்தாண்டி உயரே எழும்ப முடியவில்லை. மனிதனையும் அவனை இயக்கும் மனத்தையும் வெறும் இச்சைகளின் குவியலாக மட்டுமே பார்க்க அவரால் முடிந்திருக்கின்றது. ஆன்மாவின் உன்னதங்களையும் படைத்தவனோடு தொடர்பு படும்போது அந்த ஆன்மா அடையும் மேன்மைகளையும் நாத்திக மனதால் ஒருபோதும் அறிய இயலாது.

இரவிலும் பகலிலும் ஆன்மாவை சூழ்ந்திருக்கும் மறைவானவற்றைப் பற்றி அவற்றை படைத்த இறைவனால் மட்டுமே நமக்கு அறிவித்து தர முடியும். அதனால்தான் மறைவானவற்றின் தீங்கிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் வாயிலாக அல்லாஹ் கற்றுத்தருகின்றான்.

இரவின் தாலாட்டில் நாம் உறங்கி விடுகின்றோம். அந்த உறக்கத்தில் பலவிதமான கனவுகளை காண்கின்றோம். அந்த கனவுகளில் பல காட்சிகள் நிறைந்துள்ளன... அந்த காட்சிகளில் சில நேரடியாக உள்ளன. சில படிமங்களாகவும் குறியீடுகளாகவும் தென்படுகின்றன அவற்றில் சில பல பிற்காலங்களில் நடைமுறை வாழ்வில் பலிப்பதையும் நாம் உணருகின்றோம்.

யூஸுஃப் நபியின் கனவு விளக்கங்களே இதற்கு சான்றாக உள்ளது.

இரவு தூக்கத்தில் மனித ஆன்மா ஓய்ந்து கிடப்பதில்லை. இவ்வுலக செயல்கள் , நிகழ்வுகள் தீர்மானிக்கப்படும் மேல் உலகிலும் ஏழு வானங்களிலும் அது நடமாடுகின்றது, சில மர்மங்களை அது தரிசிக்கின்றது . வீட்டு படுக்கையில் உறங்கும் மனிதனின் ஆன்மாவானது இறந்த ஆன்மாக்கள் குடியிருக்கும் மேல் வானங்களுக்கும் சென்று வருகின்றது என்பதை ஒரு சராசரி மனிதனுக்கும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் இரவு உலாவில் இறந்த ஆன்மாக்களுடன் இந்த ஆன்மாவும் நிரந்தரமாக சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றதே ! எனவேதான் நமது இரவு நித்திரையை அரை மரணம் எனவும் வர்ணிக்க முடியும்.

அதனால்தான் இரவு தூங்க போகும் முன்னர்

“ இறைவா உன் பெயராலேயே மரணிக்கின்றேன் .உயிர்த்தெழவும் செய்கின்றேன் “ .

“ உனது பெயரால் எனது விலாவை கிடத்துகின்றேன். உன்னாலேயே நான் எழுவேன். என் உயிரை நீ தடுத்து வைத்துக்கொண்டால் அதற்கு நீ அருள் புரிவாயாக ! “ (ஹிஸ்னுல் முஸ்லிம்)

என இறைவனிடம் விண்ணப்பிக்கின்றோம்.

நமது மேல் வான உலாவில் இன்னும் சில விஷயங்களும் இருப்பதாக படுகின்றது. நமது ஆன்மா அங்கு செல்லும்போது நம்மை போலவே தற்காலிக வருகையாக ஏனைய மனிதர்களின் ஆன்மாக்களும் ஏற்கனவே அங்கு வந்திருக்கும். அந்த ஆன்ம ஒன்று கூடல்களிலும் நாம் நமக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும் வாய்ப்பு உள்ளது.

“ என்னால் விளையும் தீமையிலிருந்தும் , ஷைத்தானின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகின்றேன்.எனக்கு நானே தீங்கிழைத்துகொள்வதிலிருந்தும் அல்லது அதை வேறொரு முஸ்லிமுக்கு நான் இழைத்து விடுவதிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன். “ ( ஹிஸ்னுல் முஸ்லிம்)

பகலில் பிற மனிதர்களைப்பற்றிய தப்பெண்ணங்களை சுமக்கின்றோம். அந்த சுமைகளினால் இரவிலும் கூட நமது ஆன்மாவை கனக்கச் செய்கின்றோம்.அந்த கனமானது உறக்கத்திலும் கூட நமக்கும் பிறருக்கும் தீங்காக அமைய முடியும் என்பதைத்தான் இந்த துஆ சுட்டிக்காட்டுகின்றதோ?

இரவு உறங்கும் முன்னர் சக மனிதர்களின் மீதான தப்பெண்ணம் எதுவுமின்றி தன் மனதை போர்வையை உதறுவது போல் உதறி விட்டு உறங்கச்சென்றார் ஒரு நபித்தோழர். அவரை சுவன வாசி என நபியவர்கள் உத்திரவாதமளித்தார்கள்.

ஆன்மாக்களின் பரஸ்பர தீங்குகளிலிருந்து பாதுகாப்பு என்பதற்கு அடுத்தபடியாக மூன்றாமவன் ஒருவனைப்பற்றியும் இந்த துஆ நம்மோடு உரையாடுகின்றது. ஷைத்தான் எனப்படும் அந்த மூன்றாவது ஆளின் தீங்கை அது ஒற்றை வரியில் கூறி விட்டு கடந்து செல்கின்றது. பூமிக்கு நெருக்கமாக உள்ள வானத்தின் கடைக்கோடியில் சில ஷைத்தான்கள் இரவின் உடைக்குள் ஒளித்து நிற்கின்றனர். அவர்கள் விண்ணுலக கமுக்கங்களை சுரண்டி எடுத்து செல்ல எதிர் பார்த்திருக்கும் ஷைத்தானிய எல்லை கவர்தல் படையினை சேர்ந்தவர்கள். அவர்களின் தீங்குகளும் கூட இங்கு உணர்த்தப்பட்டிருக்கலாம்.

நமது ஆன்மாவானது இரவில் விண்ணுக்கு ஏறும்போதும் இறங்கும்போதும் இந்த எல்லை கவர்தல் படையினரைத்தாண்டித்தானே செல்ல வேண்டியுள்ளது. மனித ஆன்மாவிற்கு வானுலகம் செல்ல கிடைத்திருக்கும் அனுமதியினால் ஷைத்தான்களுக்கு பொறாமை ஏற்படுவது இயல்பு. அதன் விளைவாக கூட அந்த ஷைத்தான்கள் நமக்கு தீங்கு இழைக்க முடியும்தானே ?

இறைவா ! ஏழு வானங்களின் அதிபதியே ! மகத்தான அரியாசனத்தின் அதிபதியே ! அனைத்து பொருட்களின் தீமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகின்றேன்.அவற்றின் முன் நெற்றி ரோமத்தை நீயே பிடித்திருக்கின்றாய் ! { உனக்கும் உன் அடியார்களுக்கும் நாங்கள் செலுத்த வேண்டிய } கடனை எங்கள் சார்பில் நிறைவேற்றுவாயாக !

எங்கள் இறைவா ! நாங்கள் மறந்து விட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களை நீ தண்டித்து விடாதே. எங்கள் இறைவா ! எங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது சுமத்தியதைப்போன்று எங்கள் மீது பளுவை சுமத்தி விடாதே.

எங்கள் இறைவா ! எங்களால் இயலாததை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களை பொறுத்தருள்வாயாக . நீயே எங்கள் பாதுகாவலன். எனவே மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக !

மேற்கண்ட துஆக்களின் வரிகளில் அண்ட சராசரங்களின் இண்டு இடுக்குகளிலும் மூலை முடுக்குகளிலும் கண்ணுக்கு புலப்படாமல் பதுங்கி கிடக்கும் எண்ணற்ற இடர்ப்பாடுகளின் தீங்குகளிலிருந்தும் இறைப்பாதுகாப்பு தேடப்படுகின்றது.

தொடர்ந்து அந்த துஆ வரிகள் மனிதன் மீது இறைவன் சுமத்திய அடைக்கலப் பொறுப்புகளை சுட்டிக்காட்டுகின்றது. பகலில் அது தொடர்பாக அம்மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நினைவூட்டுகின்றது.

இந்த நிலவுலகில் வாழும் மனிதன் அனைத்து விதமான வசதிகளையும் வளங்களையும் துய்த்து வாழுகின்றான். இந்த இன்பங்களையும் வசதிகளையும் வல்லோன் அல்லாஹ் நேரடியாகவும் பிற மனிதர்கள் வாயிலாகவும் நமக்கு வழங்குகின்றான்.சுருக்கமாகச்சொல்வதானால் நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைக்காக நாம் இறைவனுக்கும் மனித குலத்திற்கும் கடன்பட்டுள்ளோம்.

பொதுவாகவே கடன் என்றாலே பொருளாதார ரீதியான கடன் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி கடன் என்பதைப்பற்றி விசாலமாக இந்த துஆ அர்த்தப்படுத்துவதாகவே படுகின்றது.

அதை பெருங்கடன் எனவும் அடைக்கலபொறுப்பு எனவும் விவரிக்கலாம். அந்த பெருங்கடனை திரும்ப செலுத்துவது என்பது இறை நெறியை இம்மண்ணில் நிலை பெறச்செய்வதன் வழியாகவும் மனித குலத்திற்கு தொண்டு செய்வதின் மூலமாகவுமே நடக்க வேண்டும் . கடந்து போன பகலில் மனிதன் தனது அடைக்கல பொறுப்பில் விட்ட பிழைகள் ,தவறுகளையும் நினைவுபடுத்திக்கொண்டு மன்னிப்பு கோரியாக வேண்டும் என்பதனையும் இந்த துஆக்கள் சொல்லுகின்றன. தனது வலிமைக் குறைவையும் இயலாமையையும் நிரந்தர வலிமையாளனான இறைவனிடமே முறையிட கற்றுத்தருகின்றன.

இறைச்செய்தியை மண்ணில் நிறைவேற்ற முனைவது என்பது பஞ்சின் மீது நடப்பது போன்ற சுகமான எளிய விஷயமல்ல. அந்த சமயம் நிராகரிப்பாளர்களும் நீதிக்கும் உண்மைக்கும் எதிரானவர்களும் நமக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவார்கள். எல்லாவித ஆள் அம்புகளின் துணையுடன் நம்மை ஒழித்துக்கட்டவும் துணிவார்கள்.

அவர்களின் இந்த கலக முயற்சியை துஆக்களின் மூலம் இறைவன் நமக்கு நினைவூட்டுகின்றான். இந்த தீங்கிலிருந்து பாதுகாவல் தர தன்னையே சார்ந்திருக்கும்படி வல்ல அல்லாஹ் நமக்கு வழிகாட்டுவதுடன் ஆறுதலும் அளிக்கின்றான்.

இறைவா ! நான் என்னை உனக்கே கட்டுப்பட செய்தேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னை நோக்கியே திருப்பினேன். என் விவகாரங்கள் அனைத்திலும் நான் உன்னையே சார்ந்துள்ளேன்.உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத்தவிர வேறு போக்கிடம் ஏதும் கிடையாது (ஹிஸ்னுல் முஸ்லிம்).

நம் தூக்கம் என்பதே இறப்பிற்கான தினசரி ஒத்திகைதானே . எப்போது வேண்டுமானாலும் அந்த ஒத்திகையானது மெய்ப்பட முடியும்.

எனவே நித்தம் அந்த இறுதி தருணங்களை மனதில் அழுத்தமாக பதிக்கும் வண்ணமாக அகிலங்களின் எஜமானனிடம் சரணடையக்கோருகின்றது இந்த துஆ.

நமது உடலுக்கும் ஆன்மாவிற்கும் உடமைகளுக்கும் அவன் தான் முதலும் முடிவுமான அதிபதியும் பாதுகாவலனும் ஆவான். இவ்வாறாக ஒவ்வொரு நாளின் இறுதியிலும் முழு முதலவனிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு மனிதன் தூய்மைப்படுத்தப் படுவது உறுதி. அவன் தனக்கும் பிறருக்கும் இப்பூவுலகுக்கும் பயனுள்ள மனிதனாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிறப்பை அடைவான். நாம் அன்றாடம் கண் விழித்ததிலிருந்து உறங்கும் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை ஓதக்கூடிய பல்வகையான சந்தர்ப்ப துஆக்கள் இருக்கின்றன.அவை நாக்கின் நுனியிலிருந்து உதிர்க்கப்படும் வெறும் மந்திரச்சொற்கள் இல்லை.

அவைகள் ஆன்மாவின் கடமைகள் , உரிமைகள் , பிரபஞ்சத்தின் கமுக்கங்கள் , இரவு பகலின் நுட்பங்கள் , படைத்தவனின் எதிர்பார்ப்புகள் , சன்மானங்கள் , தண்டனைகள் , ஆறுதல் , அபயம், எச்சரிக்கை , மன அமைதி , வீரம் , வாழ்வின் ஆபத்துக்கள் , இம்மை மறுமை இலக்குகள் போன்ற அனைத்தையும் தனக்குள் பொதிந்து வைத்துள்ளன. இவற்றை பொருள் அறிந்து ஓதும்போது மட்டுமே அதிலிருந்து நாம் பலனடைய முடியும், துஆக்களின் மூலம் என் ஆன்ம அனுபவமாக உணர்ந்தவைகளை இக் கட்டுரையில் பதிக்க முயன்றிருக்கின்றேன். இந்த அனுபவம் என்பது ஒரு திவலையின் கால் பகுதியே . எனது எல்லை அவ்வளவுதான்.

இந்த துஆக்களிலும் குர் ஆன் வசனங்களிலும் எண்ணற்ற பொருள்கள் ,வியப்புகள் , அற்புதங்களின் தொகுதிகள் புதைந்து கிடக்கின்றன. அவை கோடுகளையும் புள்ளிகளையும் போன்றவை. கோடுகளும் புள்ளிகளும் ஒவ்வொரு முறையும் புதுப்புது ஓவியங்களை படைத்தளிப்பது போல ஒவ்வொரு மனிதனுக்கும் விதம் விதமான அனுபவத்தை சந்தர்ப்ப துஆக்கள் தரக்கூடியவை.

[மேற்கண்ட துஆக்கள் , திருமறை வசனம் ஆகியவற்றின் தமிழ் பொருள் தாருஸ்ஸலாஹ் பதிப்பகத்தாரின் ஹிஸ்னுல் முஸ்லிம் தமிழ் மொழியாக்கத்திலிருந்து கையாளப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !]

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கட்டுரையின் வரி என்னை என் மனதில் உணர வைத்தது...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 04 March 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25985

ஆசிரியர் - சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின் கட்டுரையில்.. கண் உறங்கும் வேளையில்... இரவில் மனிதன் மட்டும் நிம்மதியாக உறங்கவில்லை இரவின் இதமான (அமைதி) அணைப்பில் மரமும், விலங்குகளும், பறவைகளும் கூட நிம்மதியாக தூங்குகின்றன. என்ற கட்டுரையின் வரி மிக தெளிவான உண்மை.. இந்த கட்டுரை முழுதையும் படித்து முடித்த பின் மனம் ஒரு அமைதி பெற்றது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இரவின் மடியில்!
posted by: kavimagan (qatar) on 05 March 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26004

சாளை பஷீர்! நான் பிரமிப்புடன் பார்க்கும் எழுத்தாளர்களில் ஒருவர்.இவரது இந்தப் படைப்பின் வலிமை வெகு நாட்களுக்கு மனதில் தங்கியிருக்கும்.

இறைவன் படைத்த மொழிகளில் உன்னதமானது மௌனமும், நிசப்தமும்தான்.இதனைத் தாங்கி நிற்கும் இரவின் மடியில் உறங்கும் படைப்பினங்களும்,அவர்களது ஆன்மாவில் உண்டாகும் சலனங்களும், சஞ்சலங்களும், பஷீரின் எழுத்துக்களில் பவனி வருகிறது. பிரச்னையை பிரதிபலிக்க இலகுதான். அத்தோடு விடாமல்,அதன் தீர்வாகிய துஆக்களையும் அழகுற எடுத்துக் காட்டியிருப்பது,கட்டுரைக்கு அணி சேர்க்கிறது.

சாளை பஷீர் பாய்! பாராட்டுக்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Kader K.M (Dubai) on 05 March 2013
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26008

அல்லாஹ் உங்கள் அறிவு திறனை மேன்மை அடைய செய்து, மார்க்கத்திற்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்களுக்கும் உதவியாக்கி வைப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 05 March 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26027

தம்பி சாளை பஷீர் அவர்களின் கட்டுரை சிந்தனைக்குரியது.

இன்று சரியான தூக்கம் இன்றி வாடுபவர்கள் நம்மில் பலர். தூக்கமும், அமைதியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தூக்கமில்லதாவனுக்குஅமைதியிராது. அமைதியை இழந்தவன் தூங்கமாட்டான். இது நிதர்சன உண்மை. வாழ்வின் அன்றாட பகல் பொழுதுகளில் ஒரு மனிதன் எதிர்கொள்ளக்கூடிய அத்துணை மனம் சார்ந்த, உடல் சார்ந்த களைப்புக்கும் இரவின் நிம்மதியான தூக்கமே அருமருந்தாகிறது.

நிறையத்தூங்குபவர்களின் மீது நமது சமூகம் ஒரு மரியாதையற்ற கணிப்பையே வைத்திருக்கிறது.

வெற்றியாளர்கள் பலர் குறைவாக தூங்குகிறார்கள் .அதனால்தான் அவர்களால் சாதிக்கமுடிகிறது எனபது போன்ற உடல்நலம் சார்ந்த அக்கறையில்லாத கருத்துக்கள் இன்று மேன்மை சார்ந்து பேசப்படுகின்றன.

இது தவறு. ஒருவன் திடகாத்திரமாகவும், வருவதை எதிர்கொள்ளவும் அவனுக்கு நிம்மதியான தூக்கம் தேவை.

இன்னும் சிலரோ "தூக்க வியாதியால் "பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கேயும் எப்போதும் தூங்கி வழிவார்கள் இத்தகைய தூக்கம் தவிர்க்கப்பட வேண்டியதே....

எனவே உறக்கம் எனபது எப்போதும் வேண்டுவது. சரியான உறக்கமின்மையே இதயநோய், சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களுக்கு தோற்றுவாயாகவும் இருக்கிறது.

எனவே....உறக்கம் எப்போதும் அவசியமானது. உங்களை ஒருவர் சோம்பேறி என்று சொன்னாலும் கூட உங்களின் தூக்கத்தை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இக்கட்டுரை கண்ணுறக்கத்தை கண் திறந்து பார்க்க வைக்கிறது...........
posted by: SK Shameemul Islam (Chennai) on 18 March 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26340

தூக்கத்தைப் பற்றி ஒரு தூக்கலான கற்றுரையை சகோதரர் பஷீர் வழங்கியிருக்கிறார்.

தீவில் உள்ள அந்த பெருமகன் தாம் அனுபவிக்கும் ஆனந்தத் தூக்கத்தைப் பற்றிய வரிகள் நமக்குள்ளும் ஓர் ஆனந்தத்தை வரவழைக்கிறது.

ஆயினும் தீவில் சென்று அமைதியாய் உறங்கும் உறக்கம் நிலப்பரப்புகளிலும் மாநகரங்களிலும் கூட சாத்தியமானதே. அதற்குத் தேவை பிறர் மேல் நல்லெண்ணம் கொள்வதும், பிறர் நலன் நாடுவதும், விருப்பத்துடன் இறைவனைத் துதிப்பதும், அவ்வாறு துதிக்கையில் உறுதியுடன் தேவைகளனைத்தையும் வேண்டுவதும் ஆகும் என கட்டுரையினூடே அறிய முடிகிறது.

மேலும் அண்டை வீட்டாருடன் அழகிய உறவுகளை வைத்திருப்பதும், சம்பாதிக்கும் விஷயத்தில் பேரவா கொள்ளாது ஹலால் ஹராம் பேணி, சம்பாதிப்பது எதுவானாலும் அதில் இறைவனின் அபிவிருத்தியை நாடுவதும், சிக்கனமாக வாழ்வதும்,விரயம் செய்யாதிருப்பதும்கூட நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது கட்டுரையைப் படிக்கும் போது புலனாகிறது.

குர்ஆனும் நபிவழியும் கற்றுத்தரும் செம்மையான வாழ்க்கை முறைகள் தாம் இவை என அடுக்கடுக்காக துஆக்களைப் பதித்து ஒருபுதிய கோணத்தில் இக்கட்டுரையை ஆசிரியர் அமைத்திருக்கிறார். இனிவரும் ஆக்கங்களும் இதே கோணத்தில்தான் வருமென்பதை இனி ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

சில காலம் முன்பு நஃப்ஸுக்கும் ரூஹுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசமென்னவென்பதை பலவிஷயங்களைப் படித்தேன். கைமண்ணளவு கூட கற்காத நாம் நம் அன்றாட வாழ்க்கையை எதைப்பற்றியும் கவலையில்லாமல் எவ்வளவு வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது. இக்கட்டுரை கண்ணுறக்கத்தை கண் திறந்து பார்க்க வைக்கிறது. ஆசிரியருக்கு நன்றிகள் பல.ஜஸாகல்லாஹு ஃகைரா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved